அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jan 8, 2014

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் மெய்ப்பிக்கும் ஒரு தூதராவார்.


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 95 இல் நபிமார்களிடம் எடுத்த உறுதிமொழி என்னும் தலைப்பில் பி.ஜே கூறியிருப்பதன் சுருக்கமாவது:
உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் நான் தந்த பின் இன்னொரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை ஏற்று உதவ வேண்டும் என்பதுதான் உடன்படிக்கை. (திருக்குர்ஆன்: 3:81)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட எல்லா நபிமார்களிடமும் எடுக்கப்பட்ட உடன்படிக்கையை இவ்வசனம் கூறுகிறது. இதில் உங்களிடம் ஒரு தூதர் வந்தால் என்று அல்லாஹ் கூறுகிறான். ஒரு நபிக்குப் பின் இன்னொரு நபி வருவதை இவ்வசனம் கூறவில்லை. ஒரு நபி வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவரிடம் இன்னொரு நபி வருவதையே இவ்வசனம் குறிக்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் துணைக்கு மேலும் சிலரை அல்லாஹ் நியமித்திருந்தால் அதை மனப்பூர்வமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.

இந்த இடத்தில் இவ்வசனத்திற்கு எதிராக முஸ்லிம்களில் பலரிடம் காணப்படும் தவறான நம்பிக்கையையும் சுட்டிக் காட்டும் கடமை நமக்கு இருக்கிறது.

கில்ரு நபி என்று ஒருவர் இருக்கிறார். அவர் ஹயாத் நபி: அவர் பூமியில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதுதான் அந்த நம்பிக்கை. அந்த நம்பிக்கை தவறானது என்பதை இவ்வசனம் சந்தேகமற அறிவிக்கிறது.

கில்ரு நபி உயிருடன் இருக்கும் போது முஹம்மது நபியவர்கள் தூதராக அனுப்பபடுகிறார்கள் என்றால் நபிமார்களிடம் எடுக்கப்பட்ட உறுதிமொழியின்படி அவர் என்ன செய்திருக்கவேண்டும்? நபிகள் நாயகத்தை தேடி அவர் ஓடி வந்திருக்க வேண்டும். அவர்கள் கஷ்டபட்ட நேரத்தில் உதவிகள் புரிந்திருக்க வேண்டும். பத்ரு, உஹதுப் போர்களில் பங்கெடுத்திருக்க வேண்டும்.

அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. நடந்ததாக எந்தச் சான்றும் இல்லை. உயிருடன் அவர் இருந்திருந்தால் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றியிருக்க வேண்டும். இவ்வசனத்திலிருந்து கில்ரு நபி உயிருடன் இல்லை என்பதையும் கூடுதலாக அறிந்து கொள்ளலாம்.

நம் விளக்கம்:

திருக்குர்ஆன் 3:82-83 வசனத்தில் கூறப்பட்டபடி

1. எல்லா நபிமார்களிடமும் உடன்படிக்கையை எடுக்கிறான் திருக்குர்ஆன் 33:8 வசனத்தின் படி நபி (ஸல்) அவர்களிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, ஈஸா ஆகிய நபிமார்களிடமும் இந்த உறுதிமொழி எடுக்கப்படுகிறது.

2. உறுதி மொழியாவது: வேதத்தையும் ஞானத்தையும் தந்த பின் அதை மெய்ப்பிக்கும் தூதர் (உண்மைப்படுத்தும் தூதர்) உங்களிடம் வருவார்.

3. அப்படி வந்தால், அவர் மீது ஈமான் கொண்டு, அவருக்கு உதவி செய்ய வேண்டும்.

4. இந்த உடன்படிக்கைப் புறக்கணிக்கின்றவர் வரம்பு மீறியவர்கள் ஆவர் என்று கூறுகிறது.

பி.ஜே ஒரு நபி வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவரிடம் இன்னொரு நபி வருவதையே இந்த வசனம் குறிக்கிறது என்கிறார். இது தவறு. எப்படி?

1. தூதரிடம் எடுக்கும் உறுதி மொழிகள் பொதுவாகவே அந்தத் தூதரை அனுப்பியவரிடத்தில் (அல்லாஹ்விடம்) எடுக்கின்ற உறுதிமொழி தான் என்று பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 334 இல் கூறுவதே அவர்க்கு பதிலாகும்.

2. உதாரணமாக் மூஸா நபிக்கு வேததையும் ஞானத்தையும் கொடுத்தபின், அவர் காலத்தில் உடன் இருந்த ஹாரூன் நபி வந்தார். அப்படி வந்தவர் அவற்றை மெய்ப்பிக்க வந்தார் என்று திருக்குரானோ நபிமொழிகளோ கூறவில்லை. வேதத்தையும் ஞானத்தையும் கொண்டு வந்தவர் வாழ்ந்துகொண்டிருக்கும் போது அதை உண்மைப்படுத்தும் தூதர் அவரிடம் ஏன் வர வேண்டும்?

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள், இறைத் தூதர்கள் மூஸா (அலை), ஈஸா (அலை) ஆகிய இருவரும் (தற்போது) உயிருடன் இருந்தாலும் என்னைப் பின்பற்றுவதைத் தவிர அவ்விருவருக்கும் வேறு வழியில்லை. (ஆதாரம்: தப்ஸீர் இப்னு கஸீர் 3:81 வசனத்தின் விளக்கம்) என்று கூறியுள்ளார்கள்.

3. வேதத்தையும் ஞானத்தையும் உண்மைப்படுத்த வேண்டிய ஒரு காலகட்டம் வரும்போது மெய்ப்பிக்கும் தூதர் வரவேண்டுமே தவிர வேதத்தையும் ஞானத்தையும் கொண்டு வந்தவர் வாழும் காலத்தில் வர வேண்டிய தேவையில்லை, ஏனென்றால் அவரே அவற்றைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும் அம்மக்களை அதன் வழியில் நடத்திக் கொண்டும் இருப்பார்.

4. திருக்குரானில் மெய்ப்பிக்கும் தூதர் என்று ஏறக்குறைய 3 இடங்களில் ஈஸா நபியைப் பற்றி கூறப்பட்டுள்ளது. (3:51,5:47,61:7) ஈஸா நபியோ தவ்ராத்தை மெய்ப்பிக்க மூஸா நபியின் காலத்தில் வரவில்லை. மாறாக 1400 ஆண்டுகள் கழிந்து தோன்றினார்.

பி.ஜே கூறுகிறார்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் துணைக்கு மேலும் சிலரை அல்லாஹ் நியமித்திருந்தால் அதை மனப்பூர்வமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.

இக்கருத்து முற்றிலும் தவறாகும். எப்படி? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே ஒருவர் நபியாக வருகிறார் என்றால்,

1. நபி (ஸல்) அவர்கள் அந்த நபி மீது ஈமான் கொண்டு அவர்க்கு நபி (ஸல்) உதவி புரிய வேண்டும்.

2. அந்த நபி, நபி (ஸல்) அவர்களின் வேதமாகிய திருக்குரானையும் அதன் ஞானத்தையும் (நபிமொழிகளையும்) உண்மைப் படுத்துவார். ஏனென்றால் உங்களிடம் வந்தால் என்றால் பி.ஜேயின் விளக்கத்தின்படி நபி (ஸல்) அவர்களிடம் வேறொரு தூதர் வந்தால் என்பதுதான் பொருள். இது சரியா?

முஸ்லிம்களும் கில்ரு நபியும்:

நபிமார்களிடம் எடுக்கப்பட்ட உறுதிமொழியின்படி கில்ரு நபி இறந்துவிட்டார். எனவே அவர் உயிருடன் இல்லை என்று பி.ஜே எழுதியுள்ளார் என்றால், ஈஸா நபி உயிருடன் இருக்கும் போது முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதராக அனுப்பபடுகிறார்கள். என்றால் நபிமார்களிடம் எடுக்கப்பட்ட உறுதிமொழியின்படி அவர் என்ன செய்திருக்க வேண்டும்?

நபிகள் நாயகத்தை தேடி ஈஸா நபி வந்திருக்க வேண்டும். அவர்கள் கஷ்டப்பட்ட நேரத்தில் உதவிகள் புரிந்திருக்க வேண்டும், அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. நடந்ததாக எந்தச் சான்றும் இல்லை. உயிருடன் ஈஸா நபி இருந்திருந்தால் அவர் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றி இருக்க வேண்டும்.

இவ்வசனத்திலிருந்து ஈஸா நபி உயிருடன் இல்லை என்பதையும் கூடுதலாக அறிந்து கொள்ளலாம்.

அல்லாஹ் திருக்குரானில் 33:8 வசனத்தில் உம்மிடத்தில் என்று நபி (ஸல்) அவர்களைக் குறித்தும் ஈஸா நபியிடத்தும் அந்த உடன்படிக்க வாங்கப்பட்டிருப்பதால் ஈஸா நபியின் உம்மத்தினர், ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மீது ஈமான் கொண்டு அவர்க்கு உதவி செய்ய வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினர் அவர்க்கு பிறகு வருபவரிடமும் ஈமான் கொண்டு அவர்க்கு உதவி செய்ய வேண்டும் என்றும் தெரிகிறது.

(61:7, 5:47, 3:51 ஆகிய வசனங்கள்) இதில் 61:7 வது வசனத்தைக் காண்போம்.

மர்யமின் மகன் ஈஸா தன சமுதாயத்தினரிடம், இஸ்ராயீல் மக்களே! நிச்சயமாக நான் எனக்கு முன்னர் தவ்ராத்தில் கூறப்பட்டதை உண்மைப்படுத்தக் கூடியவனாகவும் எனக்குப் பின்னர் வரப்போகின்ற அஹ்மது எனும் பெயரைக் கொண்ட ஒரு தூதரைப் பற்றி நற்செய்தி வழங்குபவனாகவும் உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன் என்று கூறினார்.

உண்மைப்படுத்தும் தூதரின் இலக்கணத்தில் இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

1. ஈஸா நபி, மூஸா நபி வாழும் போது அவரிடம் வரவில்லை.

2. மூஸா நபியின் மறைவுக்குப் பின் வேதத்தையும் ஞானத்தையும் உண்மைப்படுத்தக்கூடிய ஒரு காலகட்டத்தில் அதாவது 1400 ஆண்டுகள் கழித்து ஈஸா நபி வருகிறார்.

3. மூஸாவின் உம்மத்தில் தான் வருகிறார்.

4. இஸ்ரவேல் மக்களிடம் அவர்தான் இந்த வேதத்தை உண்மைப்படுத்த உங்களிடமிருந்து வந்த தூதர் என்று இறைவன் கூறுகிறான்.

5. தனக்குப் பிறகு – ஈஸாவின் மரணத்திற்குப் பிறகு உலகில் வரக்கூடிய ஒரு தூதரைப் பற்றி நற்செய்தியும் வழங்குகிறார். அதாவது அஹ்மது நபியைப் பற்றி.

திருக்குர்ஆன் 61:7 இல், ஈஸா நபி தனக்குப் பிறகு அஹ்மத் என்பவரைப் பற்றி நற்செய்தி கூறுகிறேன் என்று கூறுகிறாரே அவர் யார்?

61 வது அதிகாரம் அவர் முஸ்லிம் உம்மத்தில் வரக்கூடிய உம்மத்தி நபி என்று வருகிறது.

1. வானங்களிலும் பூமியிலுமுள்ளவை எல்லாம் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்தன என்று கூறி, இஸ்லாத்தில் நின்றுவிட்ட இறைத்தூயமையை மீண்டும் எடுத்துரைக்க வரக்கூடியவர்.

2. நம்பிக்கை கொண்டவர்கள் என்று திருக்குர்ஆன் முஸ்லிம்களைப் பார்த்துதான் அழைக்கிறது. இச்சொல் (61:3, 61:11, 61:15) இந்த அதிகாரத்தில் மூன்று இடங்களில் இடம்பெற்று முஸ்லிம்களைப் பார்த்து அல்லாஹ் கூறும் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. எனவே இந்த அத்தியாயம் முஸ்லிம்களைப் பற்றி பேசும் அத்தியாயமாகும்.

3. நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களிடம் பிற்காலத்தில் காணப்படும் நிலையைப் பற்றி வது 61 அதிகாரம் கூறுவதாவது: 61:4-5

அ) செய்யாததை சொல்லுதல். (61:3)

ஆ) இவ்வாறு சொல்லி இறைவனின் வெறுப்புக்கு ஆளாகுதல். (61:4)

இ) உறுதிவாய்ந்த ஒரு சுவரைப் போல் ஒரு வரிசையில் நிற்காமல், 72 பிரிவுகளாக பிறிந்து தமக்குள் சண்டைப் போடுதல். (61:8)

4. அஹ்மது நபியை – அந்த 72 பிரிவுகளும் நீர் இஸ்லாத்தில் இல்லை. அதற்கு வாரும் என்று அழைப்பார்கள். (61:8)

5. அஹ்மது நபி கொண்டு வந்த இறையோளியை ஆலிம்கள் தங்கள் வாய்களால் பத்வா – மார்க்கத்தீர்ப்பு கூறி அணைக்க முயல்வார்கள். அல்லாஹ்வோ அந்த ஒளியை முழுமைப் படுத்துவான்.

இவ்வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இருவகையான தோற்றங்கள் பற்றிய முன்னறிவிப்பு இருக்கின்றது. பழைய ஏற்பாட்டில் முகம்மது நபி (ஸல்) அவர்களின் வருகையைப் பற்றி மூஸா(அலை) செய்துள்ள முன்னறிவிப்பு நிறைவேறும். (உபாகமம் 18:18-20) என்பதும்.

எனக்குப் பின்னர் அஹ்மது என்னும் பெயர் கொண்ட ஒரு தூதரைப் பற்றி நற்செய்தி வழங்குபவர் என்பது, 62:4 இல் குறிப்பிடப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரண்டாவது வருகையைக் குறிக்கும். இது அஹமதிய்யா ஜமாஅத்தை தோற்றுவித்த ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களின் வருகையின் மூலம் நிறைவேறிற்று.

6. இணை கற்பிப்போம் (இதனை) எந்த அளவு வெறுத்தாலும் சரியே. அவனே தனது தூதரை நேர்வழியுடனும் உண்மையான மார்க்கத்துடனும் – இதனை அவன் எல்லா மார்க்கத்தின் மீதும் வெற்றி பெற செய்வதற்காக அனுப்பினான். (61:10)

இந்த முன்னறிவிப்பு மஸீஹின் காலத்தில் நிறைவேறும் என்று தப்ஸீர்கள் கூறுகின்றன. இவ்வாறு ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் காலத்தில் இது நிறைவேறியது. அவர்கள் பிற மார்க்கங்களை விட இஸ்லாமே சிறந்தது என்பதை தம் பேச்சு, எழுத்து மூலம் நிரூபித்துள்ளார்கள்.

7. அக்காலத்தில் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கும். (61:11) எந்த அளவுக்கு என்றால் உலமாக்கள். மார்க்கத்தை வியாபாரம் எந்த அளவுக்கு என்றால் உலமாக்கள், மார்க்கத்தை வியாபாரம் ஆக்கி காசேதான் கடவுளடா என்று வாழ்வார்.

8. 72 பிரிவுகளும் அல்லாஹ்வையும், அந்த அஹமத் நபியையும் நம்பாமலும் இறைவழியில் அறப்போர் செய்யாமலும் வாழ்வார்கள். இக்காலத்தில் தான் ஈஸா நபி நற்செய்தி கூறிய அஹமது எனும் மெய்ப்பிக்கும் தூதர் வருவார். எப்படி?

1
மூஸா
முஹம்மது (ஸல்)
2
தவ்ராத்
திருக்குர்ஆன்
3
1400 ஆண்டுகளுக்குப் பின் ஈஸா நபி   
1400 ஆண்டுகளுக்குப் பின் அஹ்மது நபி
4
தவ்ராத்தை மெய்ப்பித்தல்
திருக்குரானை மெய்ப்பித்தல்


எனவே, முழு உலகமும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடம் எடுத்த உடன்படிக்கையின்படி. ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது அலை அவர்களை ஏற்று, அவர்க்கு உதவி புரிய வேண்டும்.

மேலும் திருக்குர்ஆன் 62:4 இல் அவர்களுடன் சேராத  மற்றவர்களுக்கிடையிலும் (அவரை எழுப்புவான்) என்று வருகிறது. இந்த வசனத்திற்கு ஹதீஸில் இவ்வாறு வருகிறது.

ஹஸ்ரத் முகம்மது நபி (ஸல்) அவர்களிடம் தோழர்கள், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இங்கு கூறியுள்ள மற்றவர்கள் என்பவர் யார் என்று கேட்டார்கள். அதற்கு, அவர்கள் ஹஸ்ரத் சல்மான் பார்ஸி(ரலி) அவர்களின் தோளில் கைவைத்து, நம்பிக்கை ஒரு காலத்தில் கார்த்திகை நட்சத்திரம் வரை சென்றுவிட்டாலும் பாரசீக இனத்தைச் சேர்ந்த இவரின் தொன்றல்களுள் ஒருவர அல்லது பலர் அதனைத் திரும்பக் கொண்டு வருவர் என்று பதிலளித்தார்கள். (புகாரி 4897)

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் சல்மானுள் பார்ஸி வம்சத்தில் தோன்றியவர்கள் ஆவார்கள்.

அப்துல் வஹ்ஹாப் அடிக்குறிப்பு எண் 262 இல்

12000 பேர் கொண்ட மக்கத்துப் படைக்கும் 3000 பேர் கொண்ட முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த போர் அகழ்ப் போர். 12000 பேரை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் தன் நாபிச் தோழரிடம் ஆலோசனை செய்தார்கள். அப்போரை சல்மான் பாரிஸ்(ரலி) அவர்கள், மதீனாவைச் சுற்றி ஒரு அகழ் வெட்டி எதிரிகளைத் தடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

10 முழம் ஆழமும், 40 முழம் அகலமும் கொண்ட ஒரு அகழியை வெட்டினார்கள் 25 நாட்கள் முற்றுகை நீடித்தது. இறுதியில் முற்றுகையை கைவிட்டு எதிரிகள் திரும்பினர். அப்போது அன்சார் தோழர்கள் சல்மானு மின்னா (சல்மான் பாரிஸ் எங்களை சேர்ந்தவர்) என்றும் முஹாஜிர்கள் (சல்மானு மின்னா) என்றும் கூறினார்.

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சல்மானு மின்னா அஹ்லுல் பைத் – சல்மான் எம்மைச் சேர்ந்தவர். எம் குடும்பத்தினர் என்று கூறினார்கள். 

Read more »

Jan 7, 2014

ஈஸா நபி (அலை) வானத்திற்குச் சென்றார்கள் என்று நம்புவது இறைதூய்மைக்கு களங்கமாகும்.


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை 10 இல் தூய்மையானவன் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதியுள்ளார்.

ஸுப்ஹான் என்பது கடவுள் தன்மைக்குப் பங்கம் விளைவிக்கும் எல்லாத் தன்மைகளை விட்டும் தூய்மையானவன் என்பதே பொருளாகும்.
நம் விளக்கம்:

1. திருக்குரானில் 3:192 வது வசனத்தில் “அவர்கள் நின்று கொண்டும், ஒரு பக்கமாக சாய்ந்து படுத்துக் கொண்டும் அல்லாஹ்வை (எப்போதும்) நினைத்துக் கொண்டிருப்பார். எங்கள் இறைவா! நீ இதனை வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன், எனவே நீ எங்களை நெருப்பின் தண்டனையிலிருந்து காப்பாற்றுவாயாக!” (எனக் கூறுவர்).

இதில் வானங்களையும் பூமியையும் அல்லாஹ் வீணாகப் படைத்துள்ளான் என்று எண்ணுவது அல்லாஹ்வின் பரிசுத்தத் தன்மைக்கு பங்கம் விளைவிப்பதால் நீ தூயவன் என்று கூறப்பட்டுள்ளது.

2. திருக்குரானில் 5:117 வது வசனத்தின், “ மர்யமின் மகன் ஈஸாவே! நீர் மக்களிடம் அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயையும் இரண்டு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று கூறினீரா? என அல்லா கேட்ட போது, அவர் நீ தூயவன் எனக் கூறினார்.

இதில் ஈஸா நபியையும் அவருடைய தாயையும் இரண்டு தெய்வங்களாக ஆக்கிக் கொள்வது இறைவனின் தூய்மைக்கு களங்கம் கற்பிப்பதாகும். ஆனால் இறைவனோ இந்தக் கலங்கத்தில் இருந்து தூயவன் ஆவான். என்ற கருத்து கூறப்பட்டுள்ளது.

3. திருக்குரானில் 7:144 வது வசனத்தில், “ அவர் (மூஸா) என் இறைவா! நான் உன்னைப் பார்க்கும் பொருட்டு நீ (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! என்று வேண்டினார். இதற்கு அவன் உம்மால் என்னை ஒருபோதும் காணவியலாது. ஆயினும் மலையின் பக்கம் பார்ப்பீராக! அது தனது இடத்தில் நிலைத்திருந்தால் நீர் என்னைக் காண்பீர் என பதிலளித்தான். பின்னர் அவருடைய இறைவன் மலையின் மீது தானே தோற்றமளித்த போது, அதனைத் தவிடு பொடியாக்கி விட்டான். மேலும் மூஸா மயங்கி விழுந்தார். பின்னர் அவருக்கு மயக்கம் தெளிந்த போது (என் இறைவா!) நீ எல்லாக் குறைகளிளிருந்தும் தூய்மையானவன்...” என்றார்.

இதில் ஒரு நபி இறைவனை தன் புறக்கண்ணால் காண்பது என்பது இறைவனின் தூய்மைக்குக் களங்கம் ஏற்படுத்தக் கூடியதாகும் என்ற கருத்தை இறைவன் கூறுகிறான்.

4. திருக்குரானின் வது 9:31 வசனத்தில், “அவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்கள் சமய அறிஞர்களையும் துறவிகளையும் இவ்வாறே மரியத்தின் மகன் மஸீஹயும் தங்கள் கடவுள்களாக ஆக்கிக் கொண்டனர்..... அவர்கள் வைக்கின்ற இணையை விட்டும் அவன் தூயவன்.”

இதில் அல்லாஹ் அல்லாத சமய அறிஞர்களையும் துறவிகளையும் இவ்வாறே மரியத்தின் மகன் மஸீஹையும் தங்கள் கடவுள்களாக ஆக்குவது இனைவைத்தில் ஆகும். இது இறைவனின் ஸுப்ஹான் என்ற பண்புக்கு மாற்றமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

5. திருக்குரானில் 21:23 வது வசனத்தில், “(வானங்கள், பூமி) ஆகிய அவ்விரண்டிலும் அல்லாஹ்வையன்றி வேறு கடவுளர்கள் இருந்திருப்பின் அவை இரண்டும் பெருங் குழப்பத்திற்கு இரையாகி அழிந்திருக்கும். எனவே அரியணைக்குரிய இறைவனாகிய அல்லாஹ் எல்லாக் குரிபாடுகளிலிருந்தும் அவர்கள் கூற்றிலிருந்தும் தூய்மையானவன்.”

இதில் வானங்கள் பூமி ஆகியவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருக்கின்றனர். என்று கூறும் குறைகளிலிருந்து அல்லாஹ் தூயவன் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலே கூறப்பட்டுள்ள வசனங்களிலிருந்து நாம் விளங்குவது, அல்லாஹ்வுக்குப் பங்கம் விளைவிக்கும் – களங்கம் கற்பிக்கும் – ஒரு செயல் கூறப்பட்டால், அல்லா (அதனையே) ஸுப்ஹான் என்று கூறுவதன் மூலம் மறுப்பதைக் காணலாம். அதாவது அல்லாஹ் ஸுப்ஹான் என்று ஒரு வசனத்தில் கூறப்பட்டிருந்தால் அதற்கு மேலே அல்லாஹ்வுக்கு மாற்றமான, அல்லாஹ்வின் கண்ணியத்திற்கு பங்கம் உண்டாக்கும், களங்கமோ, கரையோ உண்டாக்கும் ஒரு செயல் கூறப்பட்டிருக்கிறது என்று விளங்குகிறோம். இந்த அளவுகோலின் அடிப்படையில் நாம் குரான் 17:94 ஆம் வசனத்தைக் காண்போம். 17:94 ஆம் வசனத்தில், மக்கத்து மக்கள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடம், நீர் வானத்திற்கு ஏறிச் செல்ல வேண்டும். நாங்கள் படிக்கத்தக்க ஒரு நூலை எங்களுக்குக் கொண்டு வராத வரை நீர் வானத்திற்கு ஏறிச் சென்றதையும் நாங்கள் நம்பமாட்டோம் என்று கூறுகின்றனர். அதற்கு அல்லாஹ் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடம், என் இறைவன் தூயவன். நான் ஒரு மனிதனாகிய தூதரேயன்றி வேறு அல்லன் என்று பதில் கூறுமாறு கூறுகின்றான்.

இதில் இறைவன் தூயவன் என்ற சொல் ஒரு நபி உடலுடன் வாநிற்குச் சென்று மீண்டும் வருவது என்பது அல்லாஹ்வின் ஸுப்ஹான் என்ற பண்புக்கு மாற்றமானது என்றும், ஒரு மனிதத் தூதரால் அவ்வாறு உடலுடன் வானுக்கு ஏறிச் சென்று மீண்டும் திரும்பி வர முடியாது என்ற கருத்தும் கூறப்பட்டுள்ளது.

பி.ஜே போன்ற மௌலவிகள், ஈஸா நபி தன் உடலுடன் வானுக்குச் சென்றுள்ளார். அவரே மீண்டும் வருவார் என்று நம்புவது, அல்லாஹ்வின் ஸுப்ஹான் என்ற இறை பண்புக்கு பங்கமும் களங்கமும் கற்பிக்கும் நம்பிக்கையாகும் என்றும் அப்படி நம்புவது ஈஸா நபியை ஒரு மனிதத் தூதர் இல்லை என்று மறுக்கும் செயலாகும் என்பதி நெஞ்சில் நிறுத்த வேண்டும். இல்லை என்றால் அவர்கள் தானும் வழ்கேட்டு, மக்கள் சமுதாயத்தையும் வழிகெடுத்து பாவத்திற்கு ஆளாக நேரும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அது மட்டும் இல்லை. ஈஸா நபி (அலை) அவர்கள் உடலுடன் உயர்த்தப்பட்டுள்ளார். அவரே மீண்டும் வருவார் என்று நம்பினால், ஸுப்ஹான் தரும் கருத்தின் அடிப்படையில் கீழே வருபவற்றையும் நம்ப வேண்டியது வரும்.

1. அல்லாஹ் வானங்களையும் பூமியையும் வீணாகப் படைத்துள்ளான் என்று நம்புவதாக பொருள். (3:192)

2. ஈஸா நபியையும் அவருடைய தாயையும் இரு தெய்வங்களாக நம்புகிறார் என்று பொருள் (5:117)

3. மூஸா நபி (அலை) அவர்கள் அல்லாஹ்வை தம் புறக்கண்ணால் கண்டார் என்று நம்புவதாக பொருள். (7:144)

4. சமய அறிஞர்களையும் துறவிகளையும் ஈஸா நபி (அலை) அவர்களையும் ரப்புகளாக ஏற்றுக் கொள்கின்றனர் என்று பொருள். (9:31)

5. வானம், பூமி ஆகியவற்றுள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள் இருப்பதாக நம்புகிறார் என்று அர்த்தம். (21:23)

6. அல்லாஹ் தனக்கென ஒரு மகனை உருவாக்கிக் கொண்டான் என்று நம்புகிறார் என்று பொருள். (21:27)

7. அல்லாஹ்வைத் தவிர பிறருக்கு படைத்தல், உணவு கொடுத்தல் மரணத்தைக் கொடுத்தல், உயிர் கொடுத்தல் ஆகிய ஆற்றல்கள் இருக்கின்றன என்று நம்புகிறார் என்று பொருள். (30:41)

அல்லாஹ் உங்களையும் என்னையும் ஈஸா (நபி) உடலுடன் வானுக்கு உயர்த்தபப்ட்டுள்ளார் என்று நம்பி ஸுப்ஹான் என்ற பண்புக்கு களங்கள் கற்பிப்பதிலிருந்தும் மேலே காட்டியுள்ள ஷிர்க்கான நம்பிக்கையிலிருந்தும் காத்தருள்வானாக! ஆமீன்.



Read more »

தவப்பா என்ற சொல்லுக்குத் பி.ஜே யின் தவறான விளக்கம்

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை 93 இல் கைப்பற்றி உயர்த்துதல் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

திருக்குரானில் 3:55 வசனத்தில் முதவப்பீக என்ற சொல் மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு கைப்பற்றுதல் என்றும் மரணிக்கச் செய்தல் என்றும் பொருள் உள்ளது. இதில் எது சரி என்பது பற்றி முழுமையான விபரம் 151 வது குறிப்பில் காண்க.

நம் விளக்கம்:

I 93 மற்றும் 151 ஆகிய இரு குறிப்புகளையும் காண்போம். அவற்றில் தவபைத்தனி எனும் சொல்லைப்பற்றி விளக்கப்பட்டுள்ளது. இச் சொல் திருக்குரானில் 25 இடங்களில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு ரூஹை கைப்பற்றுதல் என்று தான் பொருளே தவிர கைப்பற்றுதல் என்று பொருள் இல்லை 3:55 இவ்வாறே வசனமும் பொருள் தரும்.

உதாரணமாக திருக்குர்ஆன் 39:42 வது வசனத்தில், உயிர்களை மரணத்தின்போதும், மரணிக்காதவற்றை தூக்கத்தின் போதும் அல்லாஹ் கைப்பற்றுகிறான் என்று வருகிறது. 1) 39:42 2) 6:60 ஆகிய இரு வசனங்களுக்கு பி.ஜே கூறுவது போல், இரவில் காப்பாற்றுகிறான். தூக்கத்தில் கைப்பற்றுகிறான் என்று பொருள் இல்லை. தூக்கத்தின் போது ரூஹைக் கைப்பற்றுகிறான் என்றே பொருள் 3) எதன் மீது அல்லாஹ் மரணத்தை விதித்து விட்டானோ அந்த உயிர் அல்லாஹ்வின் கைவசத்தில் உள்ளது. 4) தூக்கத்தின் போது கைப்பற்றபட்ட உயிரை, குறிப்பிட்ட காலம் வரை வாழ விட்டு விடுகிறான்.

இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் தவப்பி எனும் சொல் வரும் 25 இடங்களில், மரணத்தின் போது ரூஹைக் கைப்பற்றுதல் 23 இடங்களிலும், தூக்கத்தின் போது ரூஹைக் கைப்பற்றுதல் 2 இடங்களிலும் வருகிறது. இதில் கைப்பற்றுகிறான் என்றுதான் வருகிறது. மரணிக்கச் செய்தல் என்று பொருள் கொள்வதில்லை என்று பி.ஜே எழுதியுள்ளார். இது தவறாகும்.

1) எதை கைப்பற்றுகிறான்? உயிர்களைக் கைப்பற்றுகிறான் என்றுதான் வருகிறதே தவிர, கைப்பற்றுகிறான் என்று மட்டும் வரவில்லை.

2) உயிர்களைக் கைப்பற்றுதல் என்பது மரணத்தின் போதும் தூக்கத்தின் போதும் ஆகிய இரு இடங்களில் மட்டுமே நடைபெறுகிறது. மூன்றாவது இடம் இல்லை.

பி.ஜே தவப்பா என்ற சொல்லுக்கு முழுமையாக எடுத்துக் கொள்ளுதல் என்ற எனக் கூறியிருப்பதும் தவறாகும்.

மரணத்தின் மூலம் நிரந்தரமாகவும் தூக்கத்தில் கைப்பற்றப்படுவதின் மூலம் தற்காலிகமாகவும் ஒரு மனிதனின் உயிர் கைப்பற்றப்படுகிறது. அவ்வளவுதான்.

திருக்குர்ஆன் வசனத்திற்கு அவர்களை மரணம் கைப்பற்றும் வரை வீட்டில் தடுத்து வையுங்கள். அதாவது மரணம் மரணிக்கச் செய்யும் வரை என்று இவ்வசனதிற்குப் பொருள் கொள்ள முடியாது என்று பி.ஜே எழுதியுள்ளார்.
அவர்களை மரணத்தின் போது ரூஹைக் கைப்பற்றும் வரை வீட்டில் தடுத்து வையுங்கள் என்று பொருள் கொடுக்க வேண்டும்.

II. திருக்குரானில் 2:281; 3:161; 3:185; 16:111 ஆகிய வசனங்களிலும் இதே சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாக கூலி தரப்படும் என்றுதான் பொருள் கொள்ளவேண்டும். மறுமையில் சாகடிக்கப்படுவார்கள் என்று பொருள் கொள்ள முடியாது என்று பி.ஜே எழுதுகிறார்.

இந்த வசனங்களில் தவப்பா எனும் சொல் வந்தாலும் மறுமை எனும் சொல்லும், செயல் எனும் சொல்லும், கூலி எனும் சொல்லும் வருவதால் ஒருவரின் செயலுக்குரிய கூலி மறுமையில் முழுமையாகக் கொடுக்கப்படும் என்று பொருள் கொள்ளவேண்டும். இடத்திற்கேற்ப பொருள் கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு தனக்கு கேன்ஸர் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் குணப்படுத்தி விடலாம் என்கின்றனர். எனக்காக நீங்கள் துஆ செய்யுங்கள் என்று வேண்டினால், அறிவுள்ளவன் எவனும் கேன்ஸர் என்பதை நோய் என்று பொருள் கொள்வானே தவிர, கேன்ஸர் என்றால் கடகராசி என்றும், அதன் வல்லுநர்களான ஜோதிட விற்பன்னர்கள் கடகராசியின் தீங்கிலிருந்து காப்பாற்றி விடலாம் என்று கூறுகிறார்கள். அதற்க்கா துஆ செய்வோம் என்று எண்ணமாட்டான். மரணம் என்பது இம்மையில் நடக்கக்கூடியது. ஒருவரின் செயலுக்குரிய கூலி மறுமையில் தான் முழுமையாக கிடைக்கக் கூடியது. அல்லாஹ்வுக்கும் ரஸுலுக்கும் பகைவனாக விளங்கக் கூடிய ஒருவனுக்கு இம்மையில் ஒரு கூலி கிடைக்கும். ஆனால் அவனுக்குரிய முழுமையான கூலி மறுமையில்தான் கிடைக்கும். எனவே இவ்விரண்டின் பொருளையும் பி.ஜே தன் சிந்தனையில் வைத்து சரியான பொருளை மக்களுக்கு கூற வேண்டும்.

III. என்னை மரணிக்கச் செய்த போது என்று இந்த இடத்தில் நாம் பொருள் கொண்டால் ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளமாக உள்ளார். (திருக்குர்ஆன் 43:61) என்ற வசனத்துடன் ஈஸா நபி மரணிப்பதற்கு முன் வேதமுடையோர் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்கமாட்டார்கள். (திருக்குர்ஆன் 4:149) என்ற வசனத்துடன் மோதுகின்றது. கைப்பற்றுதல் என்று பொருள் கொண்டால் அவ்விரு வசனங்களுடன் ஒத்துப் போகின்றது என்று பி.ஜே எழுதியுள்ளார்.

நம் விளக்கம்:

1) தவப்பி எனும் சொல் ரூஹைக் கைப்பற்றுதல் அதாவது மரணம் என்றால், ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்றால், திருக்குர்ஆன் 43:61 ; 4:149 ஆகிய வசனத்தின்படி அவர் உயிருடன் உள்ளார் என்று தெரிகிறதே! என்று பி.ஜே கருதுகிறார். ரூஹைக் கைப்பற்றுதல் என்ற பொருளின்படி ஈஸா(அலை) மரணித்து விட்டார் என்றால், அவ்விரு வசனங்களுக்கும் பி.ஜே தவறான பொருளைத் தந்து தானும் குழம்பி மக்களையும் குழப்புகிறார். அல்லாஹ்வின் வசனத்துடன் விளையாடுகிறார் அதனை விரிவாகக் காண்போம்.

தவப்பா எனும் சொல் வரும் 25 இடங்களில், இரவிலோ, தூக்கத்திலோ ரூஹ் கைப்பற்றப்படுவதற்கு தூக்கம் என்ற தற்காலிக மரணம் என்னும் பொருளில் இரு இடங்களில் வருகிறது (6:61; 39:43) ஏனைய 23 இடங்களில், இரு இடங்களில் ஈஸா நபியுடனும் – 3:55; 5:116-118, ஓரிடத்தில் யூசுப் நபியுடனும் – 12:102 , மூன்று இடங்களில் நபி (ஸல்) அவர்களுடனும் வருகிறது. நபிமார்களுடன் ஆறு இடங்களில் ஏனைய பதினேழு இடங்களில் மனிதர்களுடனும் வருகிறது.

ஈஸா நபியுடன் வருகிற 2 இடங்கள் நீங்கலாக ஏனையவர்களுடன் (4+17 ) 21 இடங்களில் வருகிறது. அந்த 21 இடங்களிலும் உயிரைக் கைப்பற்றுதல் எனும் பொருளில்தான் வருகிறது என்பதை ஏற்றுக் கொள்ளும் இவர்கள் ஈஸா நபியுடன் வரும் 2 இடங்களுக்கு மட்டும் கைப்பற்றுதல் எனும் பொருள் தந்து உடலோடு கைப்பற்றப்பட்டார். என்று வாதிக்கின்றனர். எனவே 21 இடங்களில் மரணத்தின் போது உயிரைக் கைப்பற்றுதல் எனும் பொருளில் வருவதைப் போலவே ஈஸா நபியுடன் வரும் இரண்டு இடங்களிலும் மரணத்தின் போது ரூஹைக் கைப்பற்றுதல் என்பதே பொருளாகும்.

2) திருக்குர்ஆன் 39:42 வசனத்தில், தவப்பா எனும் சொல்லுக்கு உயிரைக் கைப்பற்றுதல் எனும் பொருளைத் தான் அல்லாஹ் தந்துள்ளான். 1) மரணத்தின் போது ரூஹைக் கைப்பற்றுதல் 2) தூக்கத்தின் போது ரூஹைக் கைப்பற்றுதல் மூன்றவதாக கைப்பற்றப்படுவத்தாக்கு எதையும் அல்லாஹ் கூறவில்லை. எனவே ஈஸா நபி மரணித்திருக்க வேண்டும் அல்லது தூங்கிக் கொண்டிருக்கவேண்டும். ஈஸா நபியுடன் 2 இடத்திலும் இரவு என்றோ, தூக்கம் என்றோ கூறப்படாததினால் அவரது ரூஹ், மரணத்தின்போது கைப்பற்றப்பட்டு விட்டது என்பதே பொருளாகும்.

3. திருக்குர்ஆன் வசனத்தில், 39:42 அல்லாஹ் உயிர்களைத்தான் கைப்பற்றுவதாக கூறுகிறான். உடல் என்று அதில் கூறவில்லை. மேலும் மரணத்தின் போது கைப்பற்றிய உயிரைத் தன்வசம் வைத்திருப்பதாகவும் தூக்கத்தின் போது கைப்பற்றிய உயிரை உயிர் வாழ்வதற்கு சில காலம் விட்டு விடுவதாகவ்ம் கூறுகிறான். எது கைப்பற்றப்பட்டதோ, அதுதான் இறைவன் அளவில் உயர்த்தப்பட்டு அவன்வசம் இருக்கும், ஈஸா நபியின் உய்ரிதான் கைப்பற்றப்பட்டது. எனவே அவரது உடல் உயர்த்தப்பட்டது. என்பது முற்றிலும் தவறாகும்.

4) ஈஸா நபியுடன் வரும் 2 இடங்களில், ஓரிடத்திற்கு அதாவது 5:116-118 வசனத்தில் நபி (ஸல்) அவர்கள் தன்னோடு ஒப்பிட்டுக் காட்டி, தன்னுடைய உயிர் கைப்பற்றப்பட்டபிறகு தன் தோழர்களுள் சிலர் வழிகேட்டில் சென்று நரகிற்கு இழுத்துச் செல்லப்படுவதைக் கூறுகிறார்கள். இதுபோல் அவ்வசனத்திற்கு ஈஸா நபியின் உயிரும் கைப்பற்றப்பட்ட பிறகே, அவரது சமுதாயம் அவரையும் அவரது தாயையும் இரு தெய்வங்களாக ஆக்கிக் கொண்டனர். என்று நபி (ஸல்) அவர்கள் பொருள் தந்துள்ளார்கள். (புகாரி 4625)

இரண்டாவது வசனமாகிய வசனத்திற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும், அதில் வரும் முதவப்பீக்க எனும் சொல்லுக்கு முமீத்துக்க (மரணம்) என்று பொருள் தந்துள்ளார்கள். (புகாரி 4623 க்கும் 4625 க்கும் இடையில் காண்க)
எனவே ஈஸா நபி, முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் போன்றும், யூசுப் நபியைப் போன்றும், 17 இடங்களில் வரும் மனிதர்களைப் போன்றும் மவ்த் ஆகி விட்டார் என்பது தெளிவு. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். திருக்குரானில் 17+4=21 இடங்களில் ஈஸா நபியின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

5) நபி மொழிகளில் பல்லாயிரம் இடங்களில் தவப்பா எனும் சொல் மூலம் அவரது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, அல்லாஹ் தவப்பா செய்தான் என்று வந்து, அதில் இரவு, உறக்கம் எனும் சொற்கள் வரவில்லை என்றால் அல்லா அவரது உயிரைக் கைப்பற்றி விட்டான் என்று பொருள் இவ்வாறு தவப்பா எண்டும் சொல் நபிமொழிகளில் பலருடன் பல்லாயிரம் முறை வந்துள்ளது. இப்படி வந்தால் அதற்கு ரூஹைக் கைப்பற்றுதல் என்ற பொருளைத் தவிர வேறு பொருள் இல்லவே இல்லை. இருந்தால் ஒரே ஒரு சான்றைக் கொண்டு வாருங்கள். போகட்டும்! அரபி இலக்கியங்களிலிருந்தாவது ஒரே ஒரு சான்றைக் கொண்டு வர முடியுமா? ஆக 21+ பல்லாயிரம் தடவைகள் தவப்பா எண்டும் சொல் ஈஸா நபியின் மரணத்தை உறுதி செய்கிறது. திட்டவட்டமான பொருளைத் தராத 43:61; 4:159 ஆகிய வசனங்களைக் காட்டி, ஈஸா நபி இறந்து விட்டார் என்றால் அவ்விரு வசனத்துடன் மோதுகிறது என்று திசை திருப்பும் பி.ஜே தெளிவாகவும், திட்டவட்டமாகவும் ரூஹைக் கைப்பற்றுதல் என்று பொருளைத் தரும் தவப்பி எனும் சொல்லுடன் ஈஸா நபி உயிருடன் இருக்கிறார் என்பது பல்லாயிரம் தடவை மோதுவதை சிந்திக்க வேண்டும்.

பி.ஜே கூறுகிறார்:

நான் அவர்களுடன் இருக்கும் போது பார்த்துக் கொண்டிருந்தேன். என்னை நீ கைப்பற்றிய போது நீயே அவர்களுக்குப் பொறுப்பாளன் என்று தான் ஈஸா நபி கூறுவார்கள்.

நான் உயிருடன் இருந்த போது எனக் கூறாமல் நான் அவர்களுடன் இருந்த போது என்று ஈஸா நபி கூறுவார்கள். இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் சிந்திக்க வேண்டும். நாம் உயிருடன் இருந்த போது என்று கூறி விட்டு பலம்மா தவபைத்தனி என்று அவர்களில் கூறினால், அந்த இடத்தில் என்னை மரணிக்கச் செய்த போது என்றுதான் பொருள் கொள்ள முடியும். அல்லாஹ் அந்த வார்த்தைகளைத் தவிர்த்து விட்டு நான் அவர்களுடன் இருந்த போது என்ற முற்றிலும் வித்தியாசமாக வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளான்.

அதாவது ஈஸா நபியவர்கள் அவர்களுடன் இருந்து கண்காணிக்கும் நிலையையும் அடைவார்கள். உயிருடன் இருந்தும் அவர்களுடன் இல்லாமல் இருக்கும் நிலையையும் அடைவார்கள் என்பதுதான் இதன் கருத்தாகும்.

நம் பதில்:

1) நபி மொழிகளில் திருக்குரானுக்கு விளக்கமாகும் என்பது 5:116-118 வசனத்திற்கு பொருந்துகிறது. வசனத்திற்கு பி.ஜே தந்த அதி அற்புதமான விளக்கத்தைக் காண்போம். நபி (ஸல்) அவர்கள் நான் இறைவனின் நல்லடியாரான அந்த ஈஸா நபி (அலை) அவர்கள் கூறியதைப் போல, நான் அவர்களுடன் இருந்த காலம் வரை அவர்களுக்குச் சாட்சியாக இருந்தேன். ஆனால் நீ என்னை மரணிக்கச் செய்த பின் நீயே அவர்களைக் கண்காணித்தவனாக இருந்தாய் என்று கூறுவேன் என்று கூறியதாக புகாரியில் காணப்படுகிறது. பி.ஜே சொல்வது போல் என்றால். நபி (ஸல்) அவர்கள், அவர்களுடன் (நபித்தோழர்களுடன்) இருந்து கண்காணிக்கும் நிலையையும் அடைவார்கள், உயிருடன் இருந்தும் அவர்களுடன் இல்லாமல் இருக்கும் நிலையையும் அடைவார்கள் என்று பி.ஜே நம்பத் தயாரா? அதாவது நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள். நபித்தோழர்களுடன் இல்லாமல் இருக்கும் நிலையையும் அடைந்துள்ளார்கள் என்று நம்புகிறாரா?
நீங்கள் எத்தனை ஆண்டுகள் நபி (ஸல்) அவர்களுக்கு இந்த அநீதியை, அவமானத்தை, களங்கத்தை செய்யப் போகிறீர்கள்?

2) நான் அவர்களுடன் இருந்த போது என்றுதான் பொருளே தவிர, நான் உயிர் இல்லாமல் அவர்களுடன் இருந்த போது என்று பொருள் இல்லை. எனவே, நான் அவர்களுடன் இருந்த போது நான் பார்த்துக் கொண்டிருந்தேன். என் ரூஹை கைப்பற்றிய பிறகு நீயே அவர்களை கண்காணித்தவனாக இருந்தாய் என்று பொருள் கூறி இருப்பதுதான் முற்றிலும் சரியாகும். ஏனென்றால் உயிருடன் இருப்பவர் மட்டுமே சாட்சியாக இருக்க முடியும்.

அவர் மரணமடைந்ததினால் தான் மீண்டும் பூமிக்கு வருவது பற்றியோ அவரது சாட்சி பற்றியோ திருக்குர்ஆன் எதுவும் கூறவில்லை.

3) ஈஸா நபி, நான் அவர்களுடன் இருந்த போது என்றுதான் கூறியுள்ளார். நான் உயிருடன் இருந்த போது என்று கூறவில்லை. இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் சிந்திக்க வேண்டும் என்று பி.ஜே சிந்தித்ததினால் சிந்திய முத்துகளை மேலே கண்டோம். நான் அவர்களுடன் இருந்தபோது கண்காணித்தவனாக இருந்தேன் என்றால், நான் உயிருடன் அவர்கள் மத்தியில் இருந்த போது அவர்களை கண்காணித்தவனாக இருந்தேன் என்பதுதான் பொருள் என்பதை சிந்தித்து உணர தவறிவிட்டார் பி.ஜே.

43:62 வசனத்தின் படி கியாமத் நாளின் அடையாளமாக ஈஸா இருப்பார் என்றால் இஸ்ரவேலர்க்கு மட்டும் வந்த அந்த ஈஸா நபி இறந்து விட்டதானால், அதே ஈஸா என்ற பெயரில் முழு உலகுக்கும் முஸ்லிம் உம்மத்தில் ஒருவர் வருவார் என்றே பொருள் – 43:62 இல் கியாமத் நாளின் அடையாளம் என்ற பொருளைக் காட்டிலும் அந்த நேரத்தின் அடையாளம் என்பதே சரியானதாகும். ஏனென்றால் அவ்வசனத்தில் இடம்பெறும் சொல் சாஅ என்பதாகும். இச்சொல் திருக்குரானில் இரு நபிமார்களின் தோற்றத்தையும் அவர்கள் மூலம் ஏற்படும் ஆத்மீகப் புரட்சியையும் இஸ்லாத்தின் வளர்ச்சியையும் குறிக்க வருகிறது. அவற்றுள் 1) திருக்குர்ஆன் 54:2– அந்த நேரம் வைத்துவிட்டது. சந்திரனும் பிளந்து விட்டது. இதன்படி ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களது காலத்தில் சொல்லபப்ட்ட கியாமத் இன்று வரை நடக்கவில்லையே! என்ற கேள்வி எழும். எனவே, இங்கு சாஅ என்னும் சொல் ஒரு நபியின் தோற்றத்தைக் குறிக்கும் நேரத்தைக் குறிக்கிறது. அடுத்து சந்திரன் பிளந்துவிட்டது. இதன்படி சந்திரனாகிய அரபு உலகம் பிளந்து அங்கு இஸ்லாமிய உலகம் தோன்றியது. இஸ்லாம் முழு உலகிலும் பரவி ஆத்மீகப் புரட்சி ஏற்பட்டது. இரண்டாவதாக, 43:62 இன்படி கியாமத் நாள் என்று வரும் இடத்தில் சாஅ எனும் சொல் வருவதால் அந்த நேரத்தின் அடையாளமாக ஈஸா நபியின் இரண்டாவது வருகை நிகழும். இஸ்லாம் அனைத்து மார்க்கங்களையும் வெல்லும் என்று திருக்குர்ஆன் கூறும் அடையாளம் இதுதான் இந்த வசனங்களுக்கு (9:33; 48:29; 61:10) திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள், இது ஈஸா நபியின் வருகையின் போது நிகழும் என்று எழுதியுள்ளார்கள். (1. தப்ஸீர் ஜாமிஉல் பயான் தொகுதி 29, 2.தப்ஸீர் இப்னு ஜரீர் பாகம் 15; பக்கம் 72)

இவ்வாறு ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களே ஈசப்னு மர்யமாக தோன்றினார்கள். அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் மூலம் அனைத்து மார்க்கங்களும் வெற்றி கொள்ளப்பட்டன.

அந்த நேரத்தின் அடையாளம் என்ற வசனத்தின் முன் உள்ள வசனம் மர்யத்தின் மகன் உவமையாக எடுத்துரைக்கப்படும் போது உமது சமுதாயத்தினர் அதனை குறித்து கூச்சலிடுகின்றனர்.

இந்த வசனத்தில் ஈஸா நபி உவமையாகக் கூறப்படுவார் அதுவும் நபி (ஸல்) அவர்கள் உம்மத்திடம் கூறப்படும். அவ்வாறு கூறப்படும்போது அவர்கள் அதனை ஏற்காது கூச்சலிடுவார்கள் என மிகத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈஸா நபிதான்  இமாம் மஹ்தி என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகிறது.

ஈசாவை தவிர மஹ்தி இல்லை. (இப்னு மாஜா ஷித்ததுஸ் ஸமான்)

ஈஸா நபியின் இருவேறு உருவ அடையாளங்களை நபி(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி உள்ளார்கள்.

நான் ஈஸாவையும்மூஸாவையும் கண்டேன். ஈசா சிவந்த நிறமும் சுருண்ட கேசமும்விரிவடைந்த நெஞ்சமும் உடையவராக இருந்தார். (புகாரி பாகம் 2, கிதாபு பத் உல்கல்க்) 

நான் ஒரு தரிசனத்தில் கஹ்பாவை வலம் வருவது போல் கண்டேன். அப்போது திடீர் என்று ஒருவர் என் முன் தோன்றினார். அவர் கோதுமை நிறமும்நீளமான கேசமும் கொண்டிருந்தார். இவர் யார் என கேட்ட போது இவர் இப்னு மர்யம் என்று கூறப்பட்டது. (புகாரி கிதாபுல் பிதன்)

அப்படிஎன்றால் அவர் மரணிக்கும் முன் வேதமுடையவர்கள் அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்க மாட்டார்கள் (4:159) என்ற வசனத்திற்கு என்ன பொருள்?

ஈஸா நபி (அலை) உயிருடன் இருக்கிறார் என்றால், அவர் மீது நம்பிக்கை கொள்ளாமல் கடந்த 2000 ஆண்டுகளாக இஸ்ரவேல் சமுதாயத்தினர் இறந்து கொண்டே இருக்கின்றனரே! அந்த இஸ்ரவேல் சமுதாயத்தில் யாரும் இறக்காமல் அவரது இரண்டாவது வருகைக்காக கடந்த 2000 ஆண்டுகளாக உயிருடன் காத்துக் கொண்டு இருக்கின்றனரா? இல்லையே!


இமாம் மஹ்தி (அலை) அவர்களிடம் இந்த கேள்வி கேட்கப்பட்ட போது அவர்கள் கொடுத்த விளக்கத்தை கப்லா மௌதிகி என்ற தலைப்பில் விளக்கம் கொடுத்துள்ளோம். 
Read more »

Jan 6, 2014

ஈஸா நபி உயிருடன் இருந்தால்?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 333 இல் இறங்குமுகம் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

மனிதன் பிறந்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே செல்கிறான். ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குப் பின் திரும்பவும் தேய்ந்து கொண்டே வந்து பற்களை இழந்து நடையை இழந்து படுக்கையில் கிடக்கிறான். குழந்தை போன்ற நிலைக்கே வந்து நடக்க முடியாமல், பேச முடியாமல், சிறு குழந்தையைப் போன்று ஆகி விடுகிறான். இது தன இவ்வசனத்தின் (திருக்குர்ஆன் 36:68) கூறப்படுகிறது.

நம் விளக்கம்.

ஈஸா நபி (அலை) கடந்த 2000 ஆண்டுகளாக இறைவன் தன்னளவில் உயர்த்தி உடலோடு அங்கு இருக்கிறார் எனில்,

அவர் குறிப்பிட்ட கட்டத்திற்குப் பின் திரும்பவும் தேய்ந்து கொண்டே வந்து பற்களை இழந்து, நடையை இழந்து, படுக்கையில் இருக்கிறாரா? குழந்தை போன்ற நிலைக்கே வந்து நடக்க முடியாமல், பேச முடியாமல் ஒரு குழந்தை போன்று ஆகிவிடுவாரா?

அப்படி என்றால் மீண்டும் பூமிக்கு வந்து எப்படி சிலுவையை முறிக்கப்போகிறார்? உலகிலுள்ள பன்றிகளைக் கொல்லப் போகிறார்? தஜ்ஜாலைக் கொல்லப் போகிறார்? யாஜுஜ், மாஜுஜ் கூட்டத்தை ஒழிக்கப் போகிறார்? அவர்க்கு இறங்குமுகம் இல்லை, ஏறுமுகம் என்றால் கடந்த 2000 ஆண்டுகளில் எவ்வளவு உயரம், எவ்வளவு பருமன், எவ்வளவு எடை, எவ்வளவு ஆற்றல் கொண்டுள்ளார்! என்று கூற முடியுமா? அவ்வளவு உயரமாக, பருமனாக அவர் கீழே இறங்கி வரும் போது டமாஸ்கஸின் கிழக்கே உள்ள வெள்ளை மினாரா அவரைத் தாங்குமா? என்று கணித்து அதைப் புதுப்பித்துக் கட்டவேண்டும். அவர் எப்படி ஊரிலும், கடைவீதியிலும் நடப்பார் என்று ஒரு தனிப்பாதையை ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்க்குரிய உணவு, உடை போன்றவைகளை அளவிட்டு, ஏற்பாடு செய்ய வேண்டும். இறங்கு முகமும் இல்லை. ஏறுமுகம் இல்லை அவர் பழைய முகம்தான் என்றால் அது எப்படி? என்று தக்க ஆதாரத்துடன் விளக்க வேண்டும். போகட்டும். அல்லாஹ் எதற்காக இத்தனை ஆண்டுகளாக அவரை இப்படி ஓரிடத்தில் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்! இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அந்நிலையிலேயே வைக்கப் போகிறான்? பி.ஜே யின் முன்னோர்கள் போய் விட்டார்கள். பி.ஜே யும் போகப் போகிறார். அவருடைய பேரன் பேத்தியாவது ஈஸா நபியைக் காண்பார்களா? கொள்ளுப் பேரன்களோ, எள்ளுப் பேரன்களோ காண்பார்களா?


இஸ்லாத்தில் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி, திருக்குரானைப் பின்பற்றி, முஸ்லிம் உம்மத்தில் பிறந்து வளர்ந்த ஒருவர் அல்லாஹ்வுக்கு கிடைக்கவில்லையா? அந்த ஈஸா நபி வந்து சிலுவையை முறிப்பார் என்றால், இஸ்லாம் மத நல்லிணக்கத்தை உருவாக்கும் மார்க்கமாகுமா? இஸ்லாம் ஒரு இனிய மார்க்கமாகுமா? அவர் கோடானு கோடி பன்றிகளைக் கொன்று குவிப்பார் என்றால், இஸ்லாம் ஜீவ காருன்யத்தைப் போதிக்கும் மார்க்கமாகுமா? பன்றிகளைக் கொல்வதற்கு ஒரு நபி வரவேண்டுமா? பன்றி இனத்தைப் படைத்து இத்தனை ஆண்டுகள் வாழவிட்ட இறைவன் மொத்தமாக அவற்றை ஏன் அழிக்க வேண்டும்? இஸ்லாம் கொலை வெறி கொண்டது என்ற தப்பான எண்ணம் பிறருக்கு ஏற்படாதா? 
Read more »

ஈஸா நபி இறந்துவிட்டார் - பி.ஜே யின் இணைவைப்பு


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 278 இல் தாயாருக்கு நன்மை செய்யும் காலமெல்லாம் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:
திருக்குர்ஆன் 19:30-32 வசனங்களுக்கு எல்லா தமிழ் மொழிபெயர்ப்புகளும், எல்லா ஆங்கில மொழிபெயர்ப்புகளும் தவறான பொருள் தந்துள்ளன. எனவே 29:32 வசனத்தின் பொருள் என்னவென்று பார்ப்போம் என்று எழுதியுள்ளார்.

பிறருடைய மொழிபெயர்ப்பு:

ஈஸா கூறினார்: நான் அல்லாஹ்வின் அடியான். அவன் எனக்கு வேதத்தை வழங்கி, என்னை நபியாக ஆக்கியுள்ளான். நான் எங்கிருந்தாலும் அவன் என்னை அருள் நிறைந்த (ஒரு)வனாக ஆக்கியுள்ளான். நான் உயிருடன் இருக்கும் வரை தொழுகையையும், ஸக்காத்தையும் அவன் எனக்கு கட்டாயக் கடமையாக்கியுள்ளான்.

மேலும் என் தாயாருடன் மிக்க நல்ல முறையில் நடந்து கொள்பவனாகவும் என்னை ஆக்கியுள்ளான். என்னை ஆணவம் கொண்டவனாகவும் இறக்கமற்றவனாகவும் ஆக்கவில்லை. (19:31-33)

பி.ஜே யின் மொழிபெயர்ப்பு.

நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன்  வேதத்தை அளித்தான். என்னை நபியாக்கினான். நான் எங்கே இருந்த போதும் பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும் இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். என்னை துர்பாக்கிய சாலியாகவும் அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை. (19:30-32)

நம் கேள்வி:

பி.ஜே எல்லாருடைய மொழிபெயர்ப்புக்கும் மாற்றமாக ஒரு புதிய மொழிபெயர்ப்பை ஏன் செய்துள்ளார்? பிறருடைய மொழிபெயர்ப்புகளின்படி ஈஸா நபி அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பது தெரிந்துவிடும் என்பதினால் இறந்துபோனவரை உயிருள்ளவராக காட்டும் அவரது தில்லுமுல்லுகளைப் காண்போம்

ஈஸா நபி (அலை) உயிருடன் இருக்கும் வரை தொழ வேண்டும். ஸக்காத்து கொடுக்க வேண்டும் என்பது இறை கட்டளை. அவர் என்ன தொழுகிறார்? எப்படி தொழுகிறார்? என்ற கேள்விகளுக்கும், அவர் ஸக்காத்து கொடுக்கிறார் என்றால், என்ன ஸக்காத்து கொடுக்கிறார்? எப்படி ஸகாத்து கொடுக்கிறார்? யாருக்கு ஸக்காத்து கொடுக்கிறார்? என்ற கேள்விகளுக்கும் பி.ஜே யால் பதில் சொல்ல முடியவில்லை. எனவே அவர் உயிருடன் இல்லை என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளவேண்டும்.

எனவே இறந்து போன ஈஸா நபியை உயிருடன் இருப்பதாகக் காட்டுவதற்கு வலிந்து ஆயத்துகளை வளைத்து ஒரு புதுப் பொருளை கொடுத்துள்ளார். எப்படி?

ஈஸா நபி உயிருடன் இருந்து அவர் தாயாருக்கு நன்மை செய்பவராக இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும் ஸக்காத்து கொடுக்குமாறும் இறைவன் கட்டளையிட்டுள்ளான்.

இதில் ஈஸா நபி தொழுவதற்கும் ஸக்காத்து கொடுப்பதற்கும் உயிருடன் இருப்பது மட்டும் போதாது. அவர் தாயாருக்கும் நன்மை செய்பவராகவும் இருக்க வேண்டும் என்று 2 நிபந்தனைகளை அல்லாஹ் விதித்துள்ளான் என்று பி.ஜே கண்டுபிடித்துள்ளார்.

இந்த புதிய கண்டுபிடிப்பின்படி ஈஸா நபி தொழவோ ஸக்காத்து கொடுக்கவோ வேண்டியதில்லை. ஏனென்றால் தாயாருக்கு நன்மை செய்யவில்லை. எனவே ஈஸா நபி உயிருடன் இருக்கிறார் என்பது அவரின் நிலைப்பாடு.

நம் விளக்கம்:

1.       ஈஸா நபி மீண்டும் உலகுக்கு வருவதாக பி.ஜே நம்புகிறாரே! அப்படியானால் அவர் தொழமாட்டார். ஸகாத்து கொடுக்க மாட்டார் என்றால் அவர் எப்படி ஒரு நபியாக மூமினாக இருக்க முடியும்? என்று கேட்டால், அவர் இஸ்ரவேலர்களுக்குரிய தொழுகையை, ஸகாத்தை செய்ய மாட்டார் என்று பதில் கூறுகிறார்கள். இவர்கள் கூறும் இந்த சுய விளக்கத்திற்கு நபி மொழி சான்றுகளை தருமாறு வேண்டுகிறோம்.

2.       இஸ்லாத்தின்படி திருக்குர்ஆன், நபிவழியை, தொழுகையை, ஸக்காத்து விதிகளை ஜிப்ரீல் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்குத்தானே கற்றுக் கொடுத்தார்? ஈஸா நபிக்கும் சேர்த்துக் கற்றுக் கொடுத்தார் என்பதற்கும் அவர் இஸ்ரவேல் அல்லாதவர்க்கும் குறிப்பாக முஸ்லிம்களுக்கும் நபியாக வருவார் என்பதற்கும் திருக்குர்ஆன் ஹதீது சான்றுகள் தருமாறு வேண்டுகிறோம்.

3.       தொழுகை என்பது இபாதத் அதாவது வணக்க வழிபாடு இதனை அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டும். அல்லாஹ்வைத் தவிர வேறு எவர்க்குச் செய்தாலும், எவருக்காகச் செய்தாலும் அது ஷிர்க் ஆகும். அதாவது தொழுகையை அல்லாஹ்வுக்காக, அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டும். இதனை தன் தாயாருக்காக செய்யாமல் இருப்பதோ, செய்வதோ என்றால் அவர் அல்லாஹ்வுடன் மர்யம் (அலை) அவர்களை சேர்த்து ஷிர்க் செய்து விட்டார். பச்சையாக சொல்வதென்றால் மர்யம் (அலை) அவர்களை ஒரு கடவுளாக ஆக்கிவிட்டார்.

இதனை வேறுவிதாமாகக் கூறுகிறேன். அறுத்துப் பலியிடுவது அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டும். இதனை ஒருவர் அல்லாஹ்வுக்காகவும் வேறு ஒருவருக்காகவும் செய்தால் அது எப்படி ஷிர்க்கோ அவ்வாறு தான் தொழுகையை ஒருவர் தன் தாயாருக்காகவும் செய்தார் என்றால் அதுவும் ஷிர்க் ஆகிவிடும். பி.ஜே திருக்குர்ஆன் வசனத்திற்கு புதிய மொழிபெயர்ப்பைக் கொடுத்து தானும் ஷிர்க்கான நம்பிக்கையை நம்பி, பிறரையும் நம்பும்படித் தூண்டுகிறார்.

4.       மர்யம் (அலை) ஈஸா நபியின் தாயாராக இருக்கும் காலம் எல்லாம் ஈஸா நபியை தொழுகையும், ஸக்காத்தும் கட்டுப்படுத்தும், அவருக்கு நன்மை செய்பவராக இருக்கும் காலமெல்லாம் அவ்விரண்டையும் கட்டுப்படுத்தும் என்றால் ஈஸா நபி பூமிக்கு மீண்டும் வரும் போது, அவர் தொழவோ, ஸக்காத்து கொடுக்கவோ வேண்டிய தேவையில்லை என்பதை வலிந்து நிரூபிக்க விரும்பினால், பழைய தொழுகை (இஸ்ரவேலர் தொழுகை) புதிய தொழுகை (முஸ்லிமகள் தொழுகை) என்று கூற முடியாது. காரணம் அல்லாஹ் அப்படி எதுவும் கூறவில்லை. ஒன்று கூறலாம் மர்யம்(அலை) அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று ஒரு புதிய பொய்யைக் கூறலாம். இதைத்தவிர பி.ஜே க்கு வேறு வழியில்லை. சொல்லிப்பாருங்கள்.

மொத்தத்தில் ஏனையோரின் மொழி பெயர்ப்பே சரியானதும் பொருத்தமானதுமாகும். 

Read more »

Jan 5, 2014

சிலுவையில் அறையப்பட்டவர் ஈஸா நபியே ஆள் மாறாட்டம் இல்லை


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 265- இல் ஒருவர் இன்னொருவரின் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

திருக்குர்ஆன் பல வசனங்களில் ஒருவர் மற்றவரின் பாவத்தை சுமக்க முடியாது என்று கூறுகிறது. இது இஸ்லாத்தின் மிகப் பெரிய அடிப்படைக் கொள்கை. குறிப்பாக இந்த அடிப்படையில்தான் கிறிஸ்தவ மார்க்கத்தில் இருந்து முற்றாக இஸ்லாம் மாறுபடுகிறது. எல்லோரும் பாவிகளாகப் பிறந்து அந்தப் பாவத்தை ஏசு சுமந்து கொண்டார் எனக் கூறப்படும் சித்தாந்தத்தை இஸ்லாம் மறுக்கிறது.

ஒருவர் பாவம் செய்தால் அந்தப் பாவம் அவரைத்தான் சாரும். ஆதாம் பாவம் செய்தால் ஆதமுடைய பிள்ளைகள் யாரும் அந்தப் பாவத்தில் பங்காளிகள் இல்லை. எனவே பிறக்கும் போதே யாரும் பாவியாகப் பிறக்க மாட்டார்கள்.
அப்படியே பாவம் செய்தாலும் இன்னொருவரது பாவத்தைச் சுமக்க முடியுமா? அனைவரது பாவங்களையும் சுமப்பதற்காக ஏசு பலி கொசுக்கப்படுவாரா? என்றால் அதையும் இஸ்லாம் மறுக்கிறது.

மற்றவர்கள் செய்த பாவங்களுக்காக அந்தப் பாவத்தில் சம்பந்தமில்லாத ஒருவரைப் பலி கொடுப்பது என்பது இஸ்லாமிய அடிப்படைக்கு எதிரானது.

நம் விளக்கம்:

1.       ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களைப் பிடிப்பதற்காகச் சென்ற போது, அல்லாஹ் ஆள்மாறாட்டம் செய்து ஈஸா நபியைக் காப்பாற்றி தன்னளவில் உயர்த்திக் கொண்டான். கைது செய்ய வந்தவர்களுள் ஒருவன் ஆள்மாராட்டத்தினால் ஈஸா நபி எனப்பிடிக்கப்பட்டு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டான் என்று கற்பனைக் கதையை பி.ஜே நம்புகிறார். (ஆதாரம்: 4:157 பி.ஜே மொழியாக்கம்) மேலே அவர் கூறிய படி ஈஸா நபிக்குப் பதிலாக சிலுவையில் அறையப்பட்டவன், அந்தச் சம்பவத்தில் எக்குற்றமும் செய்யாதவன். இவ்வாறு அக்குற்றத்தில் சம்பந்தமில்லாத ஒருவனைப் பலி கொடுப்பது என்பது இஸ்லாமிய அடிப்படைக்கு எதிரானது ஆகாத?

2.       திருக்குர்ஆன் 18:80 வது வசனத்தில், “ அவர் கூறினார்; நாங்கள் எவரிடத்தில் எங்கள் பொருள்களைக் கண்டு பிடித்தோமோ அவரைத் தவிர வேறொருவரை நாங்கள் பிடிப்பதிலிருந்து இறைவனிடம் அடைக்கலம் தேடுகிறோம். நாங்கள் அவ்வாறு செய்தால் அநீதி இழைத்தவர்களைச் சேர்ந்தவர்கள் ஆவோம். என்று வருகிறது. அதாவது குற்றவாளியை விட்டுவிட்டு அதில் சம்பந்தமில்லாத ஒருவரைப் பிடிப்பதைப் அநீதி இழைத்தல் என்றும் அவ்வாறு செய்யாதிருக்க அல்லாஹ்விடம் அடைக்கலம் தேடுவதாகவும் இந்த வசனம் கூறுகிறது”. ஆள் மாறாட்டத்தால் வேறு ஒருவர் சிலுவையில் அறையப்பட்டார் என்றால் அது அநீதி ஆகாதா?

3.       அல்லாஹ் ஆள்மாறாட்டம் செய்துதான் யூதர்களிடமிருந்து தன் நபியை காப்பாற்ற வேண்டுமா?

4.       ஆள்மாறாட்டம் செய்து அப்பாவி ஒருவனைச் சிலுவையில் அறைந்து கொள்ளாமல் தன் நபியைக் காப்பாற்ற அல்லாஹ்வால் முடியாதா?

5.       ஷுப்பிஹலஹும் எனும் சொற்றொடருக்கு ஆள் மாறாட்டம்தான் பொருள் என்பதை பி.ஜே திருக்குரானிலிருந்தும் நபிமொழிகளிலிருந்தும் அகராதியிலிருந்தும் தக்க சான்றுகள் தந்து நிரூபிக்க முடியுமா? எனவே இதை பி.ஜே யின் பொருள் மாறாட்டம் என்று கூறலாமா?

6.       தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ள ஏறக்குறைய தர்ஜுமாக்களில் ஆள்மாறாட்டம் எனும் பொருளைக் காண முடியவில்லையே என்?
7.       ஆள்மாறாட்டம் போன்ற இழி செயல்களை அல்லாஹ் செய்வானா?

8.       ஒரு தூய நபியின் தோற்றத்தைச் இன்னொரு மனிதனுக்கு அல்லாஹ் கொடுப்பானா?

9.       ஆள் மாறாட்டத்தில், சிலுவையில் அறையப்பட்டவனின் மனைவி, மக்கள், நண்பர்கள், உற்றார் உறவினர்கள் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா? பி.ஜே இப்படித்தான் இருப்பார் போலும்.

10.   ஈஸா நபியின் உருவம் கொடுக்கப்பட்டவர், தோற்றத்தில் மட்டும்தான் மாறினாரா? உள்ளத்தாலும் மாறினாரா?

ஆதாம் பாவம் செய்தால், ஆதமுடைய பிள்ளைகள் யாவும் அந்தப் பாவத்தில் பங்காளிகள் இல்லை என்று கூறுகிறார். (திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 265) இதில் பரம்பரை பாவம் இல்லை என்கிறார்.

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 15-இல் அனைவரும் வெளியேறுங்கள் எனும் தலைப்பில் உலகம் அழியும் வரை தோன்றும் அனைவரையும் அவ்விருவரும் தமக்குள் சுமந்திருந்தார்கள். அவர்களிலிருந்து தோன்ற இருப்பவர்களையும் கருத்தில் கொண்டு இவ்வாறு கூரபட்டுள்ளது என்று பி.ஜே எழுதியுள்ளார்.

ஆதம் நபி செய்த தவறு அவரது சந்ததியில் அனைவரையும் பங்காளியாக்கிவிட்டது. இவ்வாறு கடைசி மனிதன் வரை பரம்பரைப் பாவம் பாதித்து விட்டது என்கிறார்.

இந்த சுய முரண்பாடு ஏன்? இவ்விரண்டில் எது சரி?


முன்னது சரி என்றால், பின்னது தவறாகு. எந்த அளவுக்கு என்றால், ஆதம் நபியும், அன்னை ஹவ்வாவும் செய்த பாவங்களுக்காகப் உஅலக மனித இனம் முழுமையும் சொர்க்கத்தை இழந்து, மண்ணில் பிறந்து வளர்ந்து, மண்ணைத் தின்று மண்ணோடு மண்ணாக மடிகிறோம். இவ்வாறு பரம்பரை பாவத்திற்கு ஆளாகி விட்டோம் என்று 100% கிறிஸ்தவக் கொள்கையை பி.ஜே நம்புகிறார் என்று பொருள். இவ்வாறு இஸ்லாத்தின் மிகப் பெரிய அடிப்படைக் கொள்கையை பி.ஜே தவிடுபொடியாக்கி விட்டார். 
Read more »

பி.ஜே யின் கேள்வி


என்னை நபி என்று ஏற்றுக் கொள்ளாதவன் காபிர் ஆக மாட்டான் என்று திர்யாகுல் குலூப், பக்கம் 423 இல் கூறியவர், என்னை நபி என்று ஏற்றுக் கொள்ளாதவன் முஸ்லிம் அல்ல என்று ஹகீகதுல் வஹி பக்கம் 167 இல் கூறுகிறார். இப்படி முரண்பட்டுப் பேசியவர் எப்படி நபியாக இருக்க முடியும்? என்று கேட்டதற்கும் பதில் இல்லை. 

நம் விளக்கம்: 

திரியாகுல் குலூப் பக்கம் 432 இல் பி.ஜே கூறும் செய்தியை பக்கம் 431-433 வரைப் படித்தால் பி.ஜே யின் கூற்று முழுக்க முழுக்க பொய் என்றம், இவர் அந்த நூலைப் படிக்காமல் எவரோ எழுதி வைத்திருப்பதை அப்படியே எடுத்துக் கூறியுள்ளார் அல்லது வேண்டுமென்றே பொய்யைக் கூறுகிறார் என்பது தெரியவரும். காரணம். 

அஹ்மதிய்யா ஜமாத்தின் எதிரியும், அஹ்லே ஹதீஸின் தலைவருமான முகம்மது உசேன் பட்டாலவி என்பவர் குர்தாஸ்பூர் நீதிமன்றத்தில் அதன் நீதிபதியும் டிப்டி கமிஷனருமாகிய M.J. டூயி முன்னிலையில் 24-2-1899 இல் நடந்த சம்பவம் குறித்து ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் மேற்கண்ட நூலில் இவ்வாறு கூறுகின்றார்கள்: 

(முஹம்மது உசேன் பட்டலவி நானுறு மௌலவிகளிடம் கையெழுத்து பெற்று மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களுக்கு எதிராக காபிர் பத்வா கொடுத்தார்.)

இனிமேல் ஒருவருக்கொருவர் காபிர் என்றோ தஜ்ஜால் என்றோ பொய்யர் என்றோ கூறமாட்டோம் என்று கொடுத்த ஒப்புதல் வாக்குமூலப் பத்திரத்தில் நானும் கையெழுத்திட்டேன். இதனைப் பற்றி நீதிமன்றத்தில் மிர்ஸா குலாம் அஹ்மத் நீதிபதிக்குப் பயந்து கூறிவிட்டார் என்று பி.ஜே உளறிக் கொட்டி உள்ளார். மேலும் அதே நூலில் பக்கம் 433 மிர்ஸா குலாம் அஹமது (அலை) அவர்கள், கலிமா கூறுகின்ற எவரையும் நான் காபிர் என்று கூற மாட்டேன் என்றும் இறைவனால் மஹ்தி மஸீஹ் என்று கூறப்படுகின்ற என்னை அவர் காபிர் என்று கூறி ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் கூற்றின்படி, ஒரு முஸ்லிமை காபிர் என்பவன் தன்னைத்தனே காபிர் ஆக்கி விடுகிறான் என்பதற்கு ஏற்ப அவன் தன்னைத்தானே காபிர் ஆக்கிக் கொள்கிறான் என்றும் எழுதியுள்ளார்கள். 

ஹகீகதுல் வஹி பக்கம் 167 இல் என்னை நபி என்று ஏற்றுக் கொள்ளாதவன் முஸ்லிம் அல்ல என்று கூறுகிறார் இப்படி முரண்பட்டு பேசியவர் எப்படி நபியாக இருக்க முடியும்? என்று பி.ஜே கேட்கிறார். 

நமது விளக்கம். 

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹமது (அலை) அவர்கள் அதே, நூல் அதே பக்கத்தில் அல்லாஹ் என்னை மஹ்தி என்று கூறியிருக்கும் போது என்னை இட்டுக் கட்டிக் கூறியவன் என்று ஒருவர் கூறினால் அவர் எப்படி முமினாக இருக்க முடியும் என்றும் அதே நூல் பக்கம் 165 இல் கிப்லாவை நோக்கியவர்களை நான் காபிர் என்று கூறமாட்டேன் ஆனால் அவர்கள் என்னைக் காபிர் என்று கூறி, தன்னைத் தானே காபிராக்கிக் கொள்கிறார்கள் என்று எழுதியுள்ளார்கள். 

மொத்தத்தில், அல்லாஹ் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களை, அல்லாஹ்வின் மஹ்தி என்று கூறும்போது, அதை மறுப்பவர்கள் நபி (ஸல்) அவர்களின் கூற்றுப்படி தன்னைத்தானே காபிர் ஆக்கிக் கொள்கிறார்கள் என்பதால் இதில் முரண்பாடு இல்லை.
Read more »

இறந்தவர்கள் உயிருள்ளவர்களை சந்திக்க முடியாது


மூஸா நபி மரணிக்கவில்லை. அவர் வானத்தில் உயிருடன் உள்ளார். அவர் இறந்தவர்களில் ஒருவர் இல்லை என்று ஈமான் கொள்வதை அல்லாஹ் நமக்கு கடமையாக்கி இருக்கிறான். என்று மிர்ஸா குலாம், நூருல் ஹக் என்ற நூலில் 68, 69 பக்கம் இல் கூறியுள்ளார் அல்லாஹ் எந்த வசனத்தில் இவ்வாறு கூறியுள்ளான்? என்று எடுத்துக் காட்டுங்கள் எனக் கேட்டோம். கடைசிவரை பதில் அவர்கள் சொல்லவில்லை. அல்லாஹ்வின் மீது பொய் சொன்னவர் எப்படி நபியாக இருக்க முடியும் என்ற கேள்விக்கும் பதில் இல்லை.

நம் விளக்கம்: 

கோவை விவாதத்தில் இந்த வசனத்தைக் காட்டி பதில் கூறினோம். ஆனால் எந்த பதிலும் சொல்லவில்லை என்று பி.ஜே பகிரங்கமாக பொய் சொல்கிறார். எனவே லஹ்னதுல்லாஹி அலல் காதிபீன் என்பதே பதில்.

திருக்குர்ஆன் 32:23 மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம் (முஹம்மதே) அவரைச் சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ளாதீர். அவரை இஸ்ராயீல் மக்களுக்கு வழிகாட்டியாகினோம். (பி.ஜே மொழியாக்கம்) 

இவ்சனத்தில் பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை என் 315 இல் மிஹ்ராஜ் என்ற விண்வெளிப் பயணம் எனும் தலைப்பில், 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் மரணித்து விட்ட மூஸா நபியவர்களை நபிகள் நாயகம் (ஸல்) எப்படி பார்த்திருப்பார்கள்? என்ற கேள்வி இவ்வசனத்தை (32:23) வாசிப்பவர்களுக்கு எழலாம். 

இறந்து போனவரை உயிரோடு இருப்பவர்கள் ஒருக்காலும் பார்க்க முடியாது. ஆயினும் இறைவன் தனது ஆற்றலைக் காட்டுவதக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மிஹ்ராஜ் என்ற விண்வெளிப் பயணம் அழைத்துச் சென்றான். 

அங்கே அவர்கள் மூஸா நபியை சந்தித்தார்கள். மற்றவர்களை விட அவர்களிடம் அதிகமான நேரம் உரையாடினார்கள். அந்த சந்திப்பத் தான் அல்லாஹ் இங்கே குறிப்பிடுகிறான். 

மூஸாவைச் சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ள வேண்டாம்: நீர் உண்மையாகவே சந்தித்தீர்: நீர் சந்தித்தது அவரைத்தான் என்று கருத்துப் பட அல்லாஹ் இந்த வசனத்தில் குறிப்பிடுகிறான். என்று பி.ஜே எழுதி கோவை விவாதத்தில் தன் கேள்வி தவறு என்றும் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் (அலை) அவர்களின் கருத்தே சரி என்றும் ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார். 

இதிலிருந்து தௌஹீது வாதிகளாகிய நீங்கள், பி.ஜே உண்மை என்று தெரிந்தும் அதை மறைத்து, அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தின் உண்மையை எதையாவது சொல்லி மறுக்கவும் மறைக்கவும் செய்கிறார் என்று விளங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு நேர்வழிகாட்டுவானாக. 

இது மிஹ்ராஜ் என்ற நிகழ்ச்சி நேரடியாகவே நடந்ததது என்பதற்குரிய தெளிவான சான்றுகளில் ஒன்றாகும் என்று எழுதுகிறார்.

நூருல் ஹக் என்ற புத்தகத்தில் 69 பக்கத்தில் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் கூறியதை இவர் எடுத்துவைத்திருக்கிறார். இதற்க்கு அடுத்தபக்கத்தில் எழுபதாம் பக்கத்தில். கூறுகின்றார்கள். மரணத்தை கொடுப்பது நிரூபிக்கப்பட்ட ஒரு விசயமாகும் என்பதையும். நிரந்தரமாக நடைபெற்று வரும் ஒன்று என்பதையும் இறைவனின் பழமையான சுன்னத்துகளை சார்ந்தது என்பதையும் நீர் அறிவீர். மரணமடையாத எந்த ஒரு ரசூலும் இல்லை. ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களுக்கு முன் வந்த தூதர்கள் மரணமடைந்து விட்டார்கள்.

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் இமாமத்துல் புஷ்ரா என்ற நூலில் குறிப்பிடுகின்றார்கள். ஈசா (அலை)வர்கள் உயிரோடு இருக்கின்றார்கள். முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்களா? இது ஒரு அநியாயமான பங்கீடாகும். எனவே நேர்மையோடு பேசுங்கள். நீதியோடு பேசுங்கள் அதுதான் தக்குவாக்கு மிகவும் நெருக்கமாகும். மேலும் எல்லா நபிமார்களும் வானத்தில் உயிரோடு இருக்கின்றார்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. அப்படி இருக்கும்போது ஈசா (அலை) அவர்களுடைய ஹயாத்தில் மட்டும் என்ன சிறப்புத்தன்மை இருக்கிறது. அந்த ஈசா (அலை) குடிக்கின்றார்கள், உண்கின்றார்கள். மற்ற நபிமார்கள் குடிக்கவில்லை, உண்ணவில்லையா? நபிமார்கள் அனைவருமே உயிருடன் இருக்கின்றார்கள். அவர்களில் யாருமே இறந்தவர்கள் இல்லை. மிஹ்ராஜ் இரவின் போது நபி (ஸல்) அவர்களுக்கு எந்த நபியினுடைய சடலமும் தென்படவில்லை. எல்லா நபிமார்களுமே உயிருடன் இருந்தார்கள். அப்படி இருக்கும் போது ஈசா (அலை) அவர்களின் வாழ்க்கையில் மட்டும் என்ன வினோதமான விஷயம் இருக்கிறது. மற்ற நபிமார்களிடம் இல்லாதது.

நபி (ஸல்) அவர்கள் மூஸா நபி (அலை) அவர்களை சந்தித்த நிகழ்ச்சி இதுவேயாகும். ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹமத் (அலை) அவர்கள் நூருல் ஹக் என்ற நூலில் 70 ம் பக்கத்திலும் பிற நூல்களிலும் அவர்கள் கூறியதாவது. 

1) நபி (ஸல்) அவர்களுக்கு முன்னர் தோன்றிய எல்லாத் தூதர்களும் இறந்து விட்டார்கள். ஈஸா நபி (அலை) அவர்கள் உட்பட எந்தத் தூதரும் உயிருடன் இல்லை. ஆனால். 

2) நபி (ஸல்) அவர்கள் உட்பட எல்லாத் தூதர்களும் ஆத்மீக முறையில் இன்றும் உயிருடன் உள்ளனர். 

3) மிஹ்ராஜின் பொது நபி (ஸல்) அவர்கள் எல்லாத் தூதர்களைப் போல் மூஸா நபியையும் சந்தித்தார்கள். 

4) ஈஸா நபி (அலை) அவர்களும் எல்லாத் தூதர்களைப் போன்றே காணப்பட்டார்கள்.அவர் இறக்காமல் உயிருடன் இருக்கிறார் என்று அவரிடம் எந்தச் சிறப்பைக் கொண்டு நீங்கள் கருதுகிறீர்கள். அப்படி கருதுவதற்கு திருக்குரானில் எந்த சான்றும் இல்லை என்றாலும் மூஸா உயிருடன் (ஆத்மீகமாக) வானில் இருப்பதக்கக் கருதுவதற்கு திருக்குரானில் (32:23) வசனத்தில் சான்று உள்ளது. 

5) ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்து ஈஸா நபி (அலை) அவர்கள் இறக்காமல் இருக்கிறார் என்று கருதுவது ஒரு அநியாயமான பங்கீடாகும். எல்லாத் தூதர்களும் இறந்து ஆத்மீகமான முறையில் அவர்கள் எல்லோரும் உயிருடன் உள்ளனர் என்று கூறியுள்ளார்கள். 
நபி (ஸல்) அவர்கள் மூஸா நபி (அலை) அவர்களை சந்தித்தது ஆத்மீக சந்திப்பாகும் என்பதே அவரின் கருத்தாகும். எனவே அவ்வாறு இல்லை என்று எவரும் கூறுவதற்கு உரிமை இல்லை. ஒருவர் கூறும் கருத்துக் அவர் இதுதான் விளக்கம் என்று கூறினால் அதனை மறுத்து எவர் எந்த விளக்கத்தைக் கூறினாலும் ஏற்பதற்கில்லை. 

மௌலவி அப்துல் ஹக் முகத்தஸ் தஹ்லவி ஒரு முகத்தஸின் கூற்றை எடுத்துக் கூறுகிறார்கள். 

நபி (ஸல்) அவர்களை விட இன்னொரு நபி உயிருடன் இருக்கிறார் என்று ஒரு முஸ்லிம் கூறினால், அவர் இஸ்லாத்தின் வட்டத்தை விட்டே வெளியேறி விடவோ, காபிராகி விடவோக் கூடும்.
Read more »

Jan 1, 2014

65 கேள்விகள்

Read more »

இஸ்லாத்தின் மறு பெயர் அஹ்மதியத்

Read more »