அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Showing posts with label ஜின்கள். Show all posts
Showing posts with label ஜின்கள். Show all posts

Jun 8, 2014

ஜின்கள் யார்?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 154 இல், மனிதராக மாற்றித்தான் அனுப்புவான் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்: 

தங்களைப் போலவே உண்டு பருகி குடும்பம் நடத்தும் ஒருவரை இறைவனின் தூதர் என்று நம்புவது மனிதர்களுக்குக் கஷ்டமாக இருந்தது. எனவே, வானவர்களைத் தூதராக அனுப்ப வேண்டியதுதானே? எனக் கேட்டனர். 

வேதத்தைக் கொண்டு வந்து மக்களிடம் ஒப்படைத்துச் செல்வதாக இருந்தால் வானவரை அனுப்பலாம். வேதத்திற்கு விளக்கம் கூறி நடைமுறைப்படுத்திக் காட்டத்தான் தூதர்கள் அனுப்பப்பட்டனர். 

எனவே, மனிதர்களுக்கு மனிதர்களைத் தான் தூதராக அனுப்ப முடியும். வானவரை அனுப்புவதாக வைத்துக் கொண்டாலும் அவரையும் மனிதராக மாற்றித்தான் அனுப்புவேன் என்ற இறைவாக்கிலிருந்து (திருக்குர்ஆன் 6:9, 17:95) இதை அறியலாம். 

நம் விளக்கம்: 

1) வானவர்கள் வேறு, மனிதர்கள் வேறு. வானவர்கள் ஒளியாலும், மனிதர்கள் மண்ணினாலும் படைக்கப்பட்டவர்கள். எனவே வேதத்துக்கு விளக்கம் கூறி நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும் என்றால் மனிதனுக்கு மனிதன்தான் தூதராக வர வேண்டும். வானவர்கள் வரமுடியாது. அப்படியே வானவர்கள் வருவதாக இருந்தாலும் அவ்வானவரையும் மனிதராக மாற்றித்தான் இறைவன் அனுப்புவான். இதை நன்கு நெஞ்சில் நிறுத்துங்கள். 

அப்படி என்றால் ஜின் என்பது நெருப்பினால் படைக்கப்பட்டது. மனிதனோ மண்ணால் படைக்கப்பட்டவன். ஜின்னுக்கு வேதத்தின் விளக்கம் கூறி நடைமுறைப்படுத்த மனிதன் வர முடியாது. அப்படியே மனிதன் ஜின் இனத்துக்குத் தூதராக அனுப்பபட்டாலும் அவனை ஜின்னாக மாற்றித்தான் அல்லாஹ் அனுப்புவான் என்பது உறுதியாகிறது. இதிலிருந்து ஜின்னுக்கு அவர் தூதராக அனுப்பப்பட்டார். இவர் நபியாக அனுப்பப்பட்டார் என்று மனித நபிமார்களைப் பற்றி நம்புவது தவறு என்று விளங்கவில்லையா? அப்படியே மனிதர்கள் தூதராக ஜின்னுக்கு அனுப்புவதாக இருந்தாலும் அந்தத் தூதர்கள் மனிதராக அனுப்பப்பட மாட்டார்கள் என்பதும், அவர்கள் ஜின்களாக மாற்றித்தான் அனுப்பப்படுவார்கள் என்பதும் தெளிவாகிறது. அவ்வாறு எனின், ஜின்னுக்குத் தூதராக அனுப்பப்பட்ட ஜின்தூதர் யார்? அவ்வாறு யாரும் இல்லை என்றால், திருக்குர்ஆனைக் கேட்பதற்கு வந்த ஜின்கள், மனிதர்கள் என்பதும், அந்த மனிதர்கள் ஜின் எனும் பெயரால் அழைக்கப்பட்டனர் என்பதும் தெளிவாகிறது. 

அதாவது, புறக்கண்ணுக்கு சாதாரணமாகத் தெரியாதவற்றை ஜின் என திருக்குர்ஆனும் நபிமொழியும் அழைக்கிறது. பாம்புகள் மறைந்து வாழ்வதால் (27:11) திருக்குர்ஆன் பாம்புகளை ஜான்னுன் எனக் கூறுகிறது. மரங்களின் நெருக்கத்தால் கண்ணால் பார்க்கமுடியாதபடி மறைக்கப்பட்டிருப்பதால் சொர்க்கம் தோட்டம் ஆகியவை ஜன்னத் என்று அழைக்கப்படுகிறது. (2:26) அறிவு மறைக்கபப்பட்டவன் அதாவது பைத்தியம் ஜின் என அழைக்கப்படுகிறான். அவர்களின் தோழருக்கு எந்தப் பைத்தியமும் இல்லை. ஜன்னதுன் (7:185) என்று திருக்குர்ஆன் கூறுகிறது. 

திருக்குர்ஆன் 63:3 இல், போர் ஆயுதங்களால் தாக்கப்படுவதைத் தடுக்கும் போர்க் கருவியாகிய கேடயம் ஜின் என்று அழைப்படுகிறது. இருள் மூடி பார்க்க முடியாதவற்றை ஜனன எனத் திருக்குர்ஆன் கூறுகிறது. (6:77) 

வயிற்றில் உள்ள கரு அஜின்னதுன் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது (53:33) எலும்புகளும், விலங்குகளின் விட்டைகளும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய கிருமிகளால் தின்னப்படுவதால் அவற்றை ஜின்களின் உணவு என நபிமொழி கூறுகிறது. 

பிறருடைய கண்களில் படாமல் மறைவாக வந்து சிலர் திருக்குர்ஆனைக் கேட்டுச் சென்றனர் என்று அறிகிறோம். அவர்கள் யூதர்கள் என்தால்தான், மூஸாவுக்குப் பின்னர் வந்த ஒரு வேதத்தை (திருக்குர்ஆனைக்) காது கொடுத்து மறைந்திருந்து கேட்டதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. (46:30, 72:2) 

திருக்குர்ஆன் மனிதர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அதனை மனிதத் தூதர் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களே வழிக்காட்டுவதற்குக் கொண்டு வந்தார்கள். எனவே அதனைக் கேட்டு தம் இனத்திடம் கொண்டு செல்லும் ஜின்களும் மனிதர்களே என்பது இதிலிருந்து தெளிவாகிறது. 

ஹஸ்ரத் சுலைமான் நபியின் அவையில் வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்ற ஒரு ஜின் இருந்திருக்கிறது (27:41) ஜின்களுக்கு வந்த வேதம் எது? ஜின்களுக்கு வந்த தூதர் யார்? அவர்கள் மனிதர்களே ஆவர். மனித இனத்தில் ஜின்கள் ஆற்றல் பெற்றவர்களாக இருந்துள்ளனர். அந்த ஆற்றல் மிக்கவர்களைக் கொண்டு (27:39-40) சுலைமான் நபி தன் பணிகளை விரைவாகச் செய்தார். கண்மூடித் திறப்பதற்குள் இருந்த இடத்திலிருந்து எழுவதற்குள் என்று கூறும் அளவில் மிக விரைவாக தன் பணிகளைச் செய்யும் ஆற்றல் பெற்றவர்கள். அதாவது சுலைமான் நபி ஓரிடத்தில் பாசறை அமைத்திருந்தால் அங்கு படைகள் தங்கி ஓய்வு எடுத்தது. அதிலிருந்து புறப்பட்டுச் செல்வதற்கு முன் சபா ராணியின் சிம்மாசனத்தை (ப் போல் ஒன்றைச் செய்து) கொண்டு வருவேன் என்றும், கண் மூடித்திறப்பதற்குள் என்றால், சுலைமான் நபி தூங்கி ஓய்வு எடுத்து புறப்பட்டுக் செல்வதற்குள் சபா ராணியின் சிம்மாசனத்தை(ப் போல் ஒன்றைச் செய்து) கொண்டு வருவேன் என்றும் கூறின. ஒரு நபியாகிய பேரரசர் அடுத்த நாட்டு ராணியின் சிம்மாசனத்தைத் தூக்கிக் கொண்டு வரச்சொல்வார் என்று நம்புவது எவ்வளவு அறிவீனம்? ஒரு நபியைப் பற்றி தரக் குறைவாக எண்ணுவதிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக. 

சாதரணமாக வெளி உலகத்துக்குத் தெரியாத, மக்கள் கண் முன் காணப்படாத மாபெரும் அறிஞர்கள், விஞ்ஞானிகள் ஜின்கள் எனப்பட்டனர். அவர்கள் விண்ணில் சென்று வானில் தம் ஆராய்ச்சியைச் செய்யக் கூடியவர்கள். வான் மண்டலத்தின் பாதுகாப்பு, கோள்களின் தன்மை ஆகியவை பற்றிக் கூறக்கூடியவர்கள் அவர்களை ஜின்கள் என்று திருக்குர்ஆன் (72:9-10) வசனங்கள் கூறுகின்றன. 

இறைத்தூதர்களுக்கு தீய மனிதர்களே எதிரிகளாக இருந்தனர் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அவர்களுக்கு தீய ஜின்கள் இன்னார் இன்னார் பகைவர்களாக இருந்தனர். இந்த ஜின்கள் இப்படிப்பட்ட தீய செயல்களை நபிமார்களுக்கு எதிராகச் செய்தனர் என்று திருக்குர்ஆனும் நபிமொழியும் கூறவில்லை. மனிதர்களிலும் ஜின்களிலும் உள்ள செய்த்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம் என்று (6:113) வசனம் கூறுகிறது. எனவே இந்த ஜின் சைத்தான்கள் என்போர் மனிதர்களில் மறைந்திருந்து, பிற சாதாரண மனிதர்களைத் தூண்டி, நபிமார்களுக்கு எதிராக தீயவை செய்பவர்கள் ஆவர். அவர்கள் ஆற்றலும் அறிவும் மிக்கவர்கள் என்பதால் அவ்வாறு பிரித்துக் கூறப்படுகின்றனர். உதாரணமாக இன்று ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக ஒரு தீயவன் குறும் படம் எடுக்கிறான். ஒரு தீய சல்மான் ருஷ்டி தீய நூல் எழுதுகிறான் என்றால் இவர்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு இவர்களைத் தூண்டி இந்த இழி செயலைச் செய்யும் மறைவானவன் ஜின், சைத்தான் ஆவான். இவ்வாறு மனிதர்களும், ஜின்களும் என்று திருக்குர்ஆனில் வருமிடங்களில் மனிதர்கள் என்போர் சாதாரண மனிதர்கள் என்றும் ஜின்கள் என்போர் அசாதாரண மனிதர்கள் என்றும் அறிகிறோம். அதாவது தொழிலாளி முதலாளி, அஞ்ஞானி விஞ்ஞானி, ஆளப்படுபவன் ஆள்பவன், காட்சிக்கு எளியவன் (எளிதாகக் காணக் கூடியவன்) காட்சிக்கு அரியவன் (சாதாரணாமாக காண முடியாதவன்) ஆகியோர் ஆவர். 

இரண்டாவதாக, வேதத்துக்கு விளக்கம் கூறி நடைமுறைப்படுத்திக் காட்டத்தான் தூதர்கள் அனுப்பப்பட்டனர் என்பதாகும். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் முழுவதற்கும் விளக்கம் கூறிச் செல்லவில்லை. அன்னாரின் இறுதிப் பேருரையில் நான் கூறுபவற்றை எடுத்துச் சென்று பிறரிடம் கூறுங்கள். அவர்கள் உங்களை விட அதனை நன்கு அறிவார்கள் என்று கூறினார்கள். அதாவது அன்னார் கூறிய வேத வசனங்களுக்கும் நபி மொழிகளுக்கும் பிற்காலத்தில் உள்ளவர்கள் சிறந்த விளக்கத்தைக் கூறுவார்கள் என்பதாகும். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒட்டகம், குதிரை, கோவேறு கழுதை போன்றவைகளே வாகனங்கள் ஆகும். பிற்காலத்தில் நாம் வாழும் காலத்தில் நபித்தோழர்கள் எண்ணிப் பார்த்திராத வாகனங்களாகிய இரயில், விமானம், பேருந்து போன்றவை வந்துள்ளன. இதனைத்தான் திருக்குர்ஆன் நீங்கள் அறியாத வாகனங்கள் என்று கூறுகிறது. (16:9) இந்த வசனம் நமக்குப் பொருந்தும். எதிர் காலத்தில் நாம் அறியாத வாகனங்கள் வரும். எனவே திருக்குர்ஆனுக்கும் நபிமொழிக்கும் விளக்கம் கூறி அதனை விளக்க அவர்களுக்குப் பின்னரும் தூதர் வருவார் என்பது இதிலிருந்து விளங்குகிறது. 

ஜின்கள் தனி படைப்பு என்றால், அவர்களுக்கு மனிதனைப் போல எல்லா உறுப்புகளும் இருக்கின்றன என்றால், அவர்கள் எங்கு வாழ்கின்றனர்? எவற்றை உண்ணுகின்றனர்? எவற்றை உடுக்கின்றனர்? இல்லற வாழ்க்கையை எவ்வாறு நடத்துகின்றனர்? அவர்கள் எந்த வேதத்தை படிக்கின்றனர்? அது என்ன மொழியில் உள்ளது? அதைக் கற்றுக் கொடுத்தது, விளக்கி தூய்மைப்படுத்தி, நல்வழிப்படுத்த வந்த ஜின் நபிமார்கள் யார் யார்? அவர்கள் எப்படி மரணிக்கிறார்கள்? மரணிக்கின்றவர்களை எரிக்கின்றார்களா? புதைக்கின்றார்களா? அப்படியே ஒரு குறிப்பிட்ட இடத்தில் விட்டு விடுகின்றார்களா? அவர்கள் மனித இனத்துடன் எப்படி வணிகம் போன்ற உறவுகளைக் கொண்டுள்ளனர்? இவ்வாறு எழும் எல்லாக் கேள்விகளுக்கும் ஆதார பூர்வமான பதில் உண்டா? 

எனவே புறக்கண்ணுக்குத் தெரியாத உயிர்களை ஜின்கள் என்று திருக்குர்ஆனும் நபிமொழியும் கூறுகின்றன. திருக்குர்ஆன் மனிதர்களும் ஜின்களும் என்று கூறுமிடங்களில் வரும் ஜின்கள், மனித இனத்தின் ஒரு பிரிவாகும். மக்களின் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து வாழ்ந்த மனிதர்களும் ஜின்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
Read more »

Jul 28, 2012

ஜின்னும் மனிதர்களே - சிராஜ் அப்துல்லாவுக்கு பதில்


ஜின் இனத்தைப் பற்றி முஸ்லிம்களிடையே யுகங்களின் அடிப்படையில் தவறான கருத்துகள் நிலவி வருகின்றன. இதற்க்கு திருக்குரானில் எவ்வித சான்றும் இல்லை. திருக்குர்ஆன் இவர்களின் தவறான கருத்துக்கு நேர் மாற்றமான வகையில் ஜின் இனத்தைப் பற்றி கூறுகிறது. திருக்குரானில் கூறப்படும் ஜின் எனப்படுவோர் யார்? என்பதை திருக்குர்ஆன் அடிப்படையில் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம். ஜின் என்பதற்குப் பல அர்த்தங்கள் இருந்தாலும் திருக்குரானில் இந்தச் சொல் 'இன்ஸ்' என்ற சொல்லுடன் சேர்த்துக் கூறப்பட்ட இடங்களில் எல்லாம் மனிதரில் ஒரு பிரிவினர் என்ற நிலையிலேயே கூறப்பட்டுள்ளது என்பதும் அற்புதச் சக்தியுடைய கண்களுக்குப் புலப்படாத தனிப்பட்ட ஒரு படைப்பினத்தைக் குறித்துக் கூறப்பட்டதல்ல என்பதும் திருக்குரானை ஆழ்ந்து சிந்திக்கக் கூடியவர்களுக்கு விளங்கும்.
 

ஜின்களில்நபிமார்கள்:-
 

மறுமையில் இறைவன் "ஜின் இன்ஸ் கூட்டத்தாரே! உங்களுக்கு எனது வசனங்களை ஓதிக்காட்டவும், இறுதி நாளின் சந்திப்பைப் பற்றி எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே தூதர்கள் உங்களிடம் வரவில்லையா?" (6:131) என்று கேட்பான்.
இந்த வசனத்தில் ஜின், இன்ஸ் கூட்டத்திலிருந்து தூதர்கள் அவர்களிடம் வந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இங்கு ஜின் என்று கூறப்பட்டிருப்பது, கண்ணுக்கு புலப்படாத தனிப் படைப்பு என்றிருந்தால், அந்தப் படைப்புகளிலிருந்து தனியாகத் தூதர்கள் வந்திருக்க வேண்டியது பற்றியும், அவர்களின் செயல் முறைகள் பற்றியும் அவசியம் திருக்குரானில் ஓரிடத்திலாவது கூறப்பட்டிருக்கவேண்டும். ஆனால் மனிதர்களாகிய தூதர்களைப் பற்றிய விஷயங்களே திருமறையில் காணப்படுகிறது. எனவே ஜின் என்று கூறப்பட்டிருப்பது, மனிதர்களில் ஒரு பிரிவினரைக் குறித்தே கூறப்பட்டிருக்கிறது என்பதற்கு இதுவே போதுமான சான்றாகும்.
'இன்ஸ்' என்றால் சாதாரண நிலையில் வாழ்க்கை நடத்தும் மனிதர்களாவர். இன்ஸ் என்பதற்கு அன்பு, நேசம் எனபது பொருளாகும். ஜின் என்பது, சாதாரண மக்களிலிருந்து விலகி வாழைக் கூடிய, மற்ற மனிதர்களுக்கு இலேகுவாகக் காண்பதற்கும், கண்டு பழகுவதற்கும் முடியாத பெரியவர்களை, தலைவர்களைக் குறித்தே கூறப்பட்டிருக்கிறது. ஏனெனில் 'ஜின்' என்பதன் பொருள் 'மறைந்திருக்கக்கூடியது என்பது பொருளாகும்.
இவ்விதம் ஜின், இன்ஸ் என்று கூறப்பட்டிருப்பது அரசனும், குடிமக்களும், எஜமானும், வேலையாளும், முதலாளியும், தொழிலாளியும், சர்வாதிகாரியும், சாதாரண மக்களும், ஆகிய பிரிவினர்களையே குறிக்கும் இரண்டு குணப்பெயர்களாகும் மேற்படி திருக்குர்ஆன் வசனங்களை தொடர்ந்து 'தூதர்களை அனுப்பாதவரை எந்த ஓர் ஊரையும் நாம் அழிப்பதில்லை. (6:131) என்று இறைவன் கூறியுள்ளதும் இதற்க்குச் சான்றாகும். இங்குக் கூறப்பட்டுள்ள ஜின்னும் இன்சும் ஓர் ஊரில் வாழக்கூடியவர்கள் என்பதனால் ஜின் என்று கூறப்பட்டவர்கள் அந்த ஊர்களில் உள்ள மனிதர்களில் ஒரு பிரிவினரையே குறிக்கும் என்பதும், தெளிவாகிறது.

 

ஜின்கள் வலிமைவாய்ந்தவர்கள்:-
 

மறுமையில் அல்லாஹ் ஜின்களை நோக்கி, ஜின்கள் கூட்டத்தினரே! நீங்கள் மனிதர்களில் அநேகரை வசப்படுத்தி உங்களுடன் சேர்த்துக் கொண்டீர்கள் அல்லவா? என்று கேட்பான். அதற்க்கு 'இன்ஸ்' கூட்டத்தினர் கூறுவர். 'எங்கள் இறைவா! எங்களில் சிலர் சிலரைக் கொண்டு பலன் அடைந்திருக்கின்றோம்' என்று கூறுவர். (6:129)
இந்த வசனத்திலிருந்து ஜின், இன்சை விட வலிமையுடையவர்கள் என்றும் இன்ஸ்களை வசப்படுத்துபவர்கள் என்றும் இருவரும் ஒருவருக்கொருவர் பலனடைந்துள்ளனர் என்றும் விளங்குகிறது. எனவே ஜின் எனப்படுபவர் மனிதர்கள் அல்லாமல் வேறொரு படைப்பினமாக இருக்க வாய்ப்பில்லை என்றும் இந்த வசனத்திலிருந்து தெளிவாகிறது. எவ்வாறெனில் சாதாரண மக்களை வசப்படுத்தி அவர்களைக்கொண்டு காரியங்களைச் சாதிக்கக் கூடியவர்கள் அரசர்களும், பெரிய முதலாளிகளும், தலைவர்களுமாகவே இருக்கிறார்கள். கண்ணுக்குப் புலப்படாத வேறொரு தனிப் படைப்பினர் அல்ல என்பது தெளிவு. மனிதர்களைவிட உயர்ந்தவர்களும், மனிதர்களை தனது வலையில் விழவைத்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது வேறொரு படைப்பைச் சேர்ந்தவர்களல்ல என்பதும் தெளிவு. இங்கு ஜின் என்றும் இன்ஸ் என்றும் இரு பெயர்கள் கூறப்பட்டிருந்தாலும், அவர்களின் செயல், நடை முறைகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாக உள்ளது என்பதை எளிதில் விளங்கிக் கொள்ளமுடியும்.

ஜின்களில் நபிமார்களின் விரோதிகள்:-
 

திருக்குரானில் பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்: "இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும் மனிதர்களிலும் (இன்சிலும்), ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை விரோதிகளாக நாம் ஆக்கி இருந்தோம். அவர்களில் சிலர் மற்றவர்களை ஏமாற்றும் பொருட்டு அலங்காரமான வார்த்தைகளை இரகசியமாகக் கூறிக்கொண்டிருந்தனர்." (6:113) இந்த வசனத்தில் நபிமார்களின் எதிரிகள் இன்ஸ்களிலும், ஜின்களிலும் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மனிதர்களே நபிமார்களுக்கு விரோதிகளாக இருந்தார்கள்: அவர்களே பலவித அக்கிரமங்களும் அநியாயங்களும் துன்பங்களும் நபிமார்களுக்குக் கொடுத்து வந்துள்ளார்கள் என்றுமே திருக்குரானும் மற்ற கிரந்தங்களும் கூறுகின்றன. ஆனால் ஜின் என்றுக் கூறப்படக்கூடிய மறைவானப் படைப்பினங்கள் நபிமார்களுக்கு எதிராக யாதொரு தீங்கும் செய்ததாக எங்கும் கூறப்பட்டுள்ளதாகக் காண முடியவில்லை. ஜின்களும், இன்ஸ்களும் நபிமார்களுக் கெதிராக ஒருவருக்கொருவர் உதவி செய்து சதித் திட்டங்கள் தீட்டியதாகவும் ஏமாற்றும்பொருட்டு அலங்கார வார்த்தைகளை இரகசியமாகக் கூறிக்கொண்டிருந்ததாகவும் மேற்படி திருக்குர்ஆன் வசனத்தில் கூறப்பட்டுள்ளது. நபிமார்களின் எதிரிகளாகிய மனிதர்கள், ஜின்கள் என்ற கண்ணுக்குப் புலப்படாத ஒரு தனிப் படைப்போடு கூட்டு சேர்ந்து கொண்டு சதியாலோசனை செய்ததாகவோ அவர்களுடன் ஆலோசனை நடத்தி நபிமார்களுக்கு எதிராக வேலை செய்ததாகவோ எங்கும் கூறப்படவில்லை.
ஆதலால், நபிமார்களுக்கெதிராக சதி திட்டங்கள் தீட்டிய ஷைத்தான்கள் ஜின்னிலும் இன்சிலும் உட்பட்டவர்களாகிய மனிதர்கள் என்றே இவ்வசனத்திலிருந்தும் விளங்க முடிகிறது.
ஜின்களுக்கு உடலுண்டு:-
 

திருக்குரானில் இறைவன் ஓரிடத்தில் இவ்வாறு கூறுகிறான் : " இந்தக் குரானைப் போன்ற ஒன்றைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும்(இன்ஸ்) ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று) அவர்களில் சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும் இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வர முடியாது' என்று (நபியே!) நீர் கூறும். நிச்சயமாக இந்தக் குர்ஆனில் மனிதர்களுக்காக சகலவிதமான உதாரணங்களையும் (மிகவும் தெளிவாக) விவரித்துள்ளோம். எனினும் மனிதர்களில் பெரும்பாலானவர்கள். (இதை) நிராகரித்திருக்கவில்லை". ( 17:88,89)
இங்கு ஜின்னும் இன்சும் ஒன்று சேர்ந்து திருக்குரானைப் போன்ற ஒரு தெளிவான வேதத்தைக் கொண்டு வருவதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு முயற்சி செய்து பார்க்கட்டும் என்று இறைவன் சவால் விட்டுள்ளான். அது மட்டுமல்ல அப்படி ஒன்றை உண்டாக்குவதற்கு எதிரிகளில் ஒருவருக்கொருவர் உதவி செய்ய முடியுமேயல்லாமல் கண்ணுக்குப் புலப்படாத தனிப் படைப்பாகிய ஜின்களிலிருந்து அவர்களுக்கு உதவி செய்ய முடியாது. மேற்படி வசனத்தின் மூலம் ஜின்களும், இன்ஸ்களும் ஒருவருக்கொருவர் உதவி செய்யக் கூடியவர்களாகவே இருக்கின்றனர் என்றே விளங்குகிறது. இந்த உதவி மனிதர்கள் ஒருவருக்கொருவர் செய்வதல்லாமல், கண்ணுக்குப் புலப்படாத வேறொரு படைப்பினத்திற்கும் மனிதர்களுக்கும் இடையில் நடக்க வாய்ப்பில்லை. ஆதலால் இங்கு ஜின், இன்ஸ் என்று கூறப்பட்டது மனிதர்களில் உள்ள இரண்டு பிரிவினரைக் குறித்தே கூறப்பட்டுள்ளது என்றே விளங்க்கிக் கொள்ள முடியும். அதாவது திருக்குரானை நேரடியாக எதிர்க்கக் கூடியவர்களும், மறைந்திருந்து அந்த எதிர்ப்புக்கு தலைமை தாங்குபவர்களுமாவார்கள் அந்த இரு பிரிவினர். திருக்குரானில் இந்த வசனத்தைத் தொடர்ந்து, மனிதர்களுக்குத் தேவையான அனைத்துப் போதனைகளும் இதில் அடங்கியுள்ளதென்றும் ஆனால் பெரும்பாலானவர்கள் அதனை நிராகரிக்கக் கூடியவர்களாகவே உள்ளனர் என்றும் கூறப்பட்டது இதற்க்குச் சான்றாகும். அந்தப் போதனைகள் மனிதர்களுக்கே உரியதென்றும் அதை நிராகரிப்பவர்களும் மனிதர்களே என்றும் கூறப்பட்டுள்ளது. திருக்குரானை இறைவசனமில்லை என்று நிராகரிப்பவர்களும் , அதனால் அந்த நிராகரிப்பவர்களை நோக்கி இதைப் போன்ற ஒரு வேதத்தைக் கொண்டு வாருங்கள் என்று சவால் விடப்பட்டவர்க்களுமாகிய ஜின், இன்ஸ் இருவரும் மனிதர்களேயல்லாமல் வேறொரு படைப்பினமாக இருக்க வாய்ப்பில்லை என்பதும் இந்த 17:88,89 வசனங்களிலிருந்து சிந்திப்பவர்களால் விளங்கிக் கொள்ள முடியும்.
திருக்குரானில் ஓரிடத்தில் இறைவன் கூறுகிறான்: ' நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும் மனிதர்கள் (இன்ஸ்) களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம். அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெறமாட்டார்கள். அவர்களுக்குக் கண்கள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளை ) பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நர்போதனைகளைக்) கேட்க மாட்டார்கள். இத்தகையோர் கால் நடைகளைப் போன்றவர்கள். இல்லை. அவற்றை விடவும் வழிக்டர்கள் இவர்கள் தாம் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள். (7:179)
இந்த வசனத்தில் ஜின்கள் அநேகர் கண்கள் இருந்தும் காணாதவர்கள், காதுகள் இருந்தும், கேட்காதவர்கள், புத்தி இருந்தும் சிந்திக்காதவர்கள். என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இங்கு ஜின்களுக்கும், இன்ஸ் களுக்கும் உள்ளதாகப் பொதுவாகக் கூறப்பட்டுள்ள குணங்கள் மனிதர்களுக்கு மட்டுமே உள்ள குணங்களாகும். ஆகவே ஜின்கள் என்று இங்கு கூறப்பட்டது வலிமைவாய்ந்த பெரியமனிதர்கள் என்று எண்ணப்படக் கூடியவர்களே இங்குக் கூறப்பட்டுள்ளது என்றே விளங்கிக்கொள்ளலாம். இந்த வசனத்தில் ஜின்களையும், இன்ச்களையும் மிருகங்களுடன் ஒப்பிட்டு உவமானமாகக் கூறப்பட்டுள்ளது. பகுத்தறிவும் சிந்தனை செய்யக்கூடிய சக்தியும் வழங்கப்பட்ட மனிதர்கள் அவற்றைப் பயன்படுத்தாமல் ஒதுக்கிவிட்டு பௌதீக இச்சைகளுக்கு ஆளாகி மிருகத்திற்கு நிகராக வாழும் போதுதான் அவர்களை மிருகங்களுக்கு உவமானமாகக் கூறப்படுவதுண்டு. ஜின்கள் மனிதர்களில்லாமல் மறைவான உடலைக் கொண்டவர்களும் இந்த பௌதீகத்துடன் தொடர்பில்லாதவர்க்களுமாக இருந்தார்களென்றால் அந்த தனிப் படைப்பினரைக் குறித்து மிருகத்துடன் உவமானப்படுத்திக் கூறப்பட்டது அறிவுக்குப் பொருந்தாத ஒன்றாகும். அல்லாஹ் ஆதமிலிருந்து அவர்களின் சந்ததிகளை வெளியாக்கி அவர்களை நோக்கிக் "நான் உங்களின் இறைவனல்லவா" (7:172) என்று கேட்ட வசனத்தைத் தொடர்ந்தே (7:179) வசனத்தில் இவ்விதம் கூறியுள்ளான். 

இவ்விதம் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளவேண்டும் என்ற போதனை மனிதர்களுக்கே வழங்கப்பட்டதென்றாலும் அவர்களில் பலர் அந்தப் போதனைகளுக்க் மேர்மாற்றமாக நடக்கிறார்கள், நடப்பார்கள் என்ற விஷயத்தையும் கூறியதைத் தொடர்ந்தே, ஜின்களிலிருந்தும், இன்ஸ்களிலிருந்தும் பலர் நரகத்திற்குரியவர்களாவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே இந்த ஜின்னும், இன்சும் ஆதமின் சந்ததிகளைச் சார்ந்தவர்களாக இருந்தால்தான் இறைக்கட்டளைகைப் புறக்கணித்தவர்கள் என்ற வசனத்திற்கு ஆளாகமுடியும். ஆகவே ஜின்கள் ஆதமின் சந்ததிகளே என்பதால் அவர்களும் மனிதர்களில் ஒரு பிரிவினர் என்பதையே இவ்வசனமும் நமக்குத் தெளிவு படுத்துகிறது. 

Read more »

Oct 3, 2011

கு. குரல் கூறுமா பதில்?

"அவர்கள் குரானை சிந்தித்துப் பார்ப்பதில்லையா? அவர்களின் இதயங்களில் பூட்டுகளா போடப்பட்டிருக்கின்றன? (47:25) இப்படி கேட்கிறது திருக்குர்ஆன். ஆம்! தங்களுக்கு மட்டுமே மார்க்கம் தெரியும், தாங்களே மார்க்க அறிஞ்சர்கள் என்று கூறும் இக்கால முல்லாக்களின் இதயங்களில் அகங்காரம் என்ற பூட்டுப் போடப்பட்டிருக்கிறது அதனால் அவர்கள் ஆழமாக சிந்திப்பதில்லை எடுத்துக் கூறினாலும் தெரிந்துகொள்வதுமில்லை. "கு. கு" ஏடு "ஜின்னும் மனிதர்களே" என்ற நமது கருத்துக்கு தரப்பட்டிருக்கும் மறுப்பு!

"ஜின்" என்று திருக்குரானில் கூறுவது மக்களின் ஒரு வகுப்பினரை குறித்தேயாகும் என்ற எமது கருத்திருக்கு திருக்குரானிலிருந்து ஆதாரங்களை தந்திருந்தோம். அவைகளை அலட்சியமாக ஒதுக்கிவிட்டு ஏதோ நாம் திருக்குரானையே மறுப்பதாகக் கூக்குரலிடுகிறது கு.கு ஏடு.

இக் கு.கு ஏடு குர்ஆனை குற்றமில்லாது தெரிந்திருந்தால் நாம் அதிலிருந்து காட்டிய அத்தனை ஆதாரங்களுக்கும் மறுப்புரை தரவேண்டும்.

மாறாக,

மனிதன் மண்ணால் படைக்கப்பட்டிருக்கிறான். ஜின் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கின்றது என்று கூறும் குரான் வாக்கியத்தை எடுத்துக் காட்டி மனிதும் ஜின்னும் இரு வெவ்வேறு படைப்பினமே என்று வாதிக்கிறது,

மனிதன் அவசரத்தால் படைக்கப்பட்டிருக்கின்றான். (21:38)

உங்களைப் பலகீனத்தைக் கொண்டு படைத்தவன் இறைவனேயாகும்.(30:56)

இப்படியும் திருகுரானில் காணப்படுகிறது. மனிதன் மண்ணால் படைக்கப்பட்டான். ஜின் நெருப்பால் படைக்கப்பட்டான் அதனால் அவை இரண்டும் வெவ்வேறு படைப்பினங்கள் என்றால் அவசரத்தால் படைக்கப்பட்ட மனிதனும், பலகீனத்தால் படைக்கப்பட்ட மனிதனும் வெவ்வேறு படைப்பினமாகக் காணப்படவேண்டுமே.

மனிதன் புழுதியினாலும், தண்ணீராலும், இரத்தக்கட்டியினாலும், தசைப் பிண்டத்தினாலும் படைக்கப்பட்டிருக்கிறான் என்றும் குர்ஆன் கூறுகிறதே! அவைகளுக்கும் கு. குரல் கூறும் பதில் என்ன?

நெருப்பைப் போன்ற குணங்களான கோபம், கீழ்ப்படியாமை, கர்வம் ஆகிய குணங்கள் ஜின் என்று குறிப்பிடப்பட்ட மனிதர்களிடத்தில் அமைந்துள்ளன. என்று கூறுவதற்கே ஜின் நெருப்பினால் படைக்கப்பட்டான் என்று குரான் கூறுகிறது.

ஜின் என்ற சொல்லிற்கு பொதுப்பார்வையிலிருந்து மறைவானது என்ற பொருளை தந்திருந்தோம். அது கீழ்க்கண்ட அரபிச் சொற்களை அடிப்படையாகக் கொண்டது.

ஜனன அலைஹில் லைலு (6:77) - இரவு அவன் மேல் மறைப்பைப் போட்டது.

அஜன்ன - மறைத்தல்


  • ஜூன்னதுன் - மறைப்பு, தடை, கேடயம்
  • ஜனின் - வயிற்றிலிருக்கும் குழந்தை (மறைவிலிருக்கிறது)
  • ஜின்னுன்னாஷி - மனிதர்களில் பெரியவன்
  • அஜன்ன - மறைத்தல்


இவைகளிலிருந்து ஜின் என்ற சொல் பொதுப்பார்வையில் இருந்து மறைந்து வாழும் மனிதர்களைக் குறிக்கும் என்பது புலனாகிறது.

திருக்குரானிலுள்ள 'ஜின்' என்ற அத்தியாயம் ஜின்கள் நபி (ஸல்) அவர்களை சந்தித்து ஈமான் கொண்ட வரலாற்றை கூறுவதாக கு.குரல் சாற்றுகின்றது. மறுப்புரையாளர், அவர் குறிப்பிடும் அத்தியாயத்தையே சரியாகப் படிக்கவில்லை போலும்.

ஜின்கள் கூறுவதாகவே கீழ்வரும் வாக்கியங்கள் அவ்வத்தியாயத்தில் காணப்படுகின்றன.

'மேலும் நிச்சயமாக பாமரர்களிலிருந்து சில மனிதர்கள் ஜின்களை சார்ந்த சில மனிதர்களுக்கு பாதுகாப்புத்தேடும் வழக்கமுடையவர்கள் அதன் மூலம் அவர்களின் (ஜின்களின்) கர்வத்தை அதிகப்படுத்தினார்கள்.' (72:8)

ஜின்களையும் மனிதர்களையும் இணைத்துக் கூறும் இந்த வாக்கியங்கள் அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கலென்று பறைசாற்றுகிறது. மேலும் இந்தத் திருமறை வசனத்தில் காணப்படும் 'ரிஜாலுன்' என்ற பதம் மனிதர்களைக் குறிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் சொல்லாகும்.

மேற்குறிப்பிட்ட திருமறைவாக்கியத்திற்கு அடுத்துவரும் வாக்கியம் இவ்வாறு அமைந்துள்ளது.

மேலும் நீங்கள் நினைப்பதுபோல் இறைவன் யாரையும் (தூதராக) எழுப்ப மாட்டான் என்றே அவர்களும் (ஜின்களும்) எண்ணினார்கள். (72:7)

இதிலிருந்து ஜின்கள் மனிதர்களே என்பது சந்தேகத்திற்கிடமின்றி புலனாகிறது.

கு.குரல் குறிப்பிடும் 'ஈமான் கொண்ட ஜின்களைப் பற்றி 'அஹ்சாப்' என்ற அத்தியாயத்தில் கீழ்வருமாறு காணப்படுகிறது.

'திருக்குரானை வாசித்துக் கேட்க விரும்பிய ஜின்களின் ஒரு கூட்டத்தினரை உங்கள் பக்கம் நாம் திருப்பியதை (நினைவு கூறுவீராக) அவர்கள் அங்கு ஆஜரானபோது அவர்கள் (ஒருவருக்கொருவர்) 'அமைதியாக இருங்கள்' (கேளுங்கள்)' என்று கூறினார்கள். அது முடிந்ததும் எச்சரிப்பவர்களாக அவர்கள் அவர்களின் மக்களிடம் திரும்பிப் போனார்கள்:

"ஓ எங்களின் மக்களே மூஸாவிற்குப் பிறகு அனுப்பப்பட்ட ஒரு கிரந்தத்தை முன்னுள்ளவற்றை நிறைவேற்றும் (ஒரு கிரந்தத்தை) நாம் செவியுற்றோம். அது உண்மைக்கும் நேர்வழிக்கும் வழிகாட்டுகிறது. என்று கூறினார்கள்.(46:30-31)

இந்த வாக்கியங்கள் கு. குரலுக்கு ஆதாரமாக அமையவில்லை. 'நாசிபைன்' என்னுமிடத்திலிருந்து சில யூத தலைவர்கள் மக்காவாசிகளின் எதிர்ப்புகளுக்கு அஞ்சி இரவோடு இரவாக நபி(ஸல்) அவர்களை ச்நதித்து குரானை ஓதக்கேட்டு நம்பிக்கைக் கொண்டதையும் பின்னர் அவர்களின் இடத்திக்கு திரும்பி தமது மக்களுக்கு நடந்ததை எடுத்துக் கூரியதையுமே மேற்கூறப்பட்ட திருமறை வசனங்களும் 'ஜின்' என்ற அத்தியாயத்தின் ஆரம்ப வாக்கியங்களும் அறிவுறுத்துகின்றன.(ஆதாரம் பத்ஹுள் பயான் வால்யும் 8 பக்கம் 355 )

மேலெழுந்தவாரியாக குரானைப் பார்த்துவிட்டு அதனை ஆராய்ந்து பார்க்காமல், தான் என்ற அகம்பாவத்தால் பிறரை ஏளனம் செய்வது இந்த முல்லாக்களுக்கு கைவந்த கலைபோலும், அதுமட்டுமல்லாமல் இவர்கள் 'அரபி மதரஸாக்களில்' கதைக்கு உதவாத அரபிக் கல்வியையே பெற்றிருக்கின்றனர் என்பதை அவர்கள் தரும் விளக்கங்கள் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன.

திருக்குரானின் (6:128) ஆம் வசனத்திற்கு நாம் கொடுத்திருந்த கருத்தை கீழ்வருமாறு விமர்சனம் செய்கிறது, கு.குரல்

'குரான் ஷரீபில் (6:128) ஆம் வசனத்தில் 'இஸ்தக்தாதும்' என்று வருகின்றது, சாதரணமாக அரபியில் அஜ்நாஸ் ஓதும் ஆரம்பமாணவர்கள் இதற்க்கு அதிகப்படுத்தினீர்கள் என்று கூறிவிடுவான். அதாவது 'கதுர' அதிகமானான். இஸ்தக்தர அதிகமாக்கிவிட்டான். அதாவது முந்தியது லாஜிம் எனும் தன்வினைச் சொல் பிந்தியது பிறர்பால் கடக்கும் முதஅத்தி எனப்படும் செயற்பால் இந்த இஸ்தக்தர என்னும் அரபிச் சொல் மின் என்பதுடன் சேர்ந்துவரும்போது அரபி அகராதிப்படி அதற்க்கு தனது செயலை பின்னால் வரும் அந்தப் பொருளில் அதிகமாக்கினான். என்பதுதான் பொருள்'

இப்படியெல்லாம் கூறி அரபிமொழி அறியாத பாமரர்களை எமாற்றலாமே தவிர அரபி மொழி தெரிந்தவர்களை ஒருக்காலும் ஏமாற்ற முடியாது.

'லாஜிம்' என்னும் தன்வினைச் சொல் 'முத அத்தியாக' மாற்றுவதற்கு இஸ்திக்பால் எனும் வழியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பது கு.குரலின் புதுக் கண்டுபிடிப்பு! ஆனால் அரபிமொழி இலக்கணத்திற்கு அது அப்பாற்ப்பட்டது.

அதாவது ஒரு வினைச்சொல்லை இஸ்திப்ஆலாக மாற்றினால் அதுவே உதவிதேடும் பொருளாக மாறிவிடும். இதை 'பாகவி' படித்திராதது வியப்பாகவுள்ளது. அவர் அறிந்துகொள்வதர்க்காக சில உதாரணங்களை கீழே தருகிறோம்.

நஸர - உதவி செய்தான்: இஸ்தன்ஸற - உதவி தேடினான். ஸகா - தண்ணீர் கொடுத்தான். இஸ்தஸ்கா - தண்ணீர் கேட்டான். கபர - மன்னித்தான். இஸ்தக்பர - பிழை பொறுக்கக் கேட்டான்.

இதைப்போல் 'கதுர' என்றால் அதிகமானான், இஸ்தக்தர - அதிகமானோரை தேடிக்கொண்டீர்கள் என்பதே பொருள்

. "இஸ்தக்தர" என்னும் அரபிச் சொல் 'மின்' என்னும் சொல்லுடன் இணைந்து வரும்போது அதற்க்கு தனது செயலை பின்னால் வரும் பொருளில் அதிகமாக்கினான் என்று அர்த்தமாம். கு. குரலின் ஆதாரமற்ற தவறான கூற்று இது!

'வ லவ் குந்து அஹ்லமுள் கைப லஸ் தக்தர்து மினால் கைரி'

"மறைவானவற்றின் மீது எனக்கு அறிவிருந்தால் அதிகமான நன்மைகளை எனக்காகத் தேடிக்கொண்டிருப்பேன். (7:189)

இக் குரான் வாக்கியத்திலும் இஸ்தக்தர என்னும் சொல் காணப்படுகிறது. அதுவும் மின் என்பதுடன் இணைந்து காணப்படுகிறது. கு. குரல் கொடுக்கும் பொருளை இவ்வாக்கியத்தில் காணப்படும் 'இஸ்தக்தர' என்ற சொல்லிற்கு நிச்சயமாகத் தரமுடியாது என்பது தெளிவு.

திருக்குரானில் (6:128) ஆம் வசனத்திற்கு கு. குரல் தரும் பொருள்கூட, ஜின்களை சில மனிதர்கள் வசப்படுத்துகிறார்கள் என்ற அதன் கூற்றுக்கு ஆதரவாக இல்லை. எவ்வாறெனில் 'மனிதர்களில் உங்களது ( தீச் செயல்களை) அதிகமாக்கிவிட்டீர்கள். என்று மேற்படி (9:128) ஆம் வசனத்திற்கு கு.குரல் கூறும் அர்த்தம். மனிதர்கள் மீது ஜின்களுக்குள்ள ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறதே தவிர ஜின்கள் மீது மனிதர்களுக்குள்ள சக்தியை அறிவுறுத்தவில்லை.

கு. குரலின் விளக்கம் அதன் கருத்துகளுக்கே ஆதரவாக இல்லை.

ஜின்கள் ஈமான் கொண்டன என்று கூறுகிறது கு.குரல். ஈமான் கொண்டால் மட்டும் போதுமா? குர்ஆன் கூறும் நற்செயல்களை 'அவை செய்திடவேன்டாமா?' குர்ஆன் 'ருக்வு' செய்யுங்கள், பின் ஸுஜூது செய்யுங்கள் என்று கூறுகிறது. உண்ணுங்கள், குடியுங்கள் என்றும் அது உரைக்கிறது. இன்னும் மனிதனால் மட்டுமே நிறைவேற்றக்கூடிய பல கட்டளைகளை திருக்குர்ஆன் கூறுகிறது. உருவமற்றதாக கு.குரலால் கருதப்படும் ஜின்களால் இக் கட்டளைகளை எவ்வாறு நிறைவேற்ற இயலும்? கு. குரல் கூறுமா பதில்!

நபி(ஸல்) அவர்கள் மனிதகுலத்திற்கே நபியாகத் தோன்றினார்கள். அவ்வாறிருக்க ஜின்கள் வேறு ஒரு படைப்பினமாக இருந்தால் 'அவை' நபிபெருமானார் மூலமாக 'ஈமான்' கொள்ளவேண்டிய அவசியமென்ன? அந்நிகழ்ச்சியை திருக்குரானில் இரு அத்தியாயங்களில் விவரிக்கப்படவேண்டிய அவசியமென்ன? கு. குரல் குருமா பதில்.

நபி(ஸல்) அவர்கள் மனிதகுலத்திற்கு ஓர் முன்மாதிரி எனவும் அதனால் அவர்களின் நடைமுறைகளையும், சுன்னத்துகளையும் பின்பற்றவேண்டும் என்று கற்பிக்கப்படுகின்றோம். மனித தன்மைக்கு அப்பாற்பட்டதாகக் கருதப்படும் ஜின்களால் எவ்வாறு நபி(ஸல்) அவர்களை முன்மாதிரியாகக் கொள்ள இயலும் கு.குரல் கூறுமா பதில்?

"மனிதனையா தனது தூதராக இறைவன் அனுப்பினான்?" என்ற கேள்விக்குப் பதில் பூமியில் மலக்குகள் வாழ்ந்திருந்தால் ஒரு மலக்கையே தொஊதராக அனுப்பியிருப்போம். என்று திருமறையில் இறைவன் கூறுகிறான். (17:93)

இவ்வ்வாறு கூறம் இறைவன் ஜின் என்று கூறப்பட்டது மனிதனல்லாமல் வேறு ஒரு படைப்பினமாக இருக்குமானால் அவைகளுக்காக ஒரு ஜின்னை நபியாக அனுப்பியிருக்கமாட்டானா? நபிபெருமானரையே "அவை" களுக்கும் நபியாக ஏன் அனுப்பினான்?

கூறு பதில் கூறு பதில் என்று எங்களைப் பார்த்து கூறும் கு.குரல் ஏடு இக்கேள்விகளுக்கு கூறுமா பதில்?

Read more »