அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Showing posts with label அஹ்மதியா. Show all posts
Showing posts with label அஹ்மதியா. Show all posts

May 29, 2014

அஹ்மதிய்யா ஜமாத்தும், கவிஞர் இக்பாலும்


தமிழ் நாடு வக்பு வாரியத்தின் மாத ஏடான ‘இஸ்மியில்’ மௌலான என்பவர் அஹ்மதிய்யா ஜமாஅத் பற்றிய தமது கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார், 

“மகாகவி இக்பால், காதியானிகளை முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து மாற்றிவிடவேண்டுமென வெகுகாலத்திற்கு முன்பே கூறினார். அவருடைய கூற்று அப்பொழுது முக்கியத்துவம் இல்லாமல் ஆக்கப்பட்டிருந்தது”

அஹ்மதிய்யா ஜமாத்தை எதிர்ப்பவர்கள், ‘அஹ்மதிகள் முஸ்லிம் அல்லாதவர்கள் என்று கூறுவதற்கு, கவிஞர் இக்பாலின் வாலைப்பிடித்துக் கொண்டு, அந்த ஒரு சான்றே போதுமானது எனப் பேசுவது வழக்கம். ஆனால், அல்லாமா இக்பால், பாக்கிஸ்தானில் உள்ள ஸியால் கோட்டில் படித்துக் கொண்டிருந்த பொழுதே அவர் அஹ்மதிய்யா ஜமாஅத்தின் மீது பற்றும் பாசமும் கொண்டிருந்தார். கவி இக்பாலின் வரலாற்றை முறையாகப் படித்திருந்தால் விளங்கிக் கொள்ளமுடியும். அவர் வாலிபராக இருந்த காலத்தில், லூதியானாவில் உள்ள ஒரு புகழ் பெற்ற மௌலானாவும், கவிஞருமான ஸ அதுல்லாஹ் ஸஅதி என்பவர், ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களைத் தாக்கித் தரக்குறைவான வார்த்தைகளைக் கொண்ட ஒரு கவிதை எழுதியிருந்தார். அச்சமயம் கல்லூரி மாணவரான கவி இக்பால் ஒரு கவிதையின் மூலமே பதிலடி கொடுத்து ஒரு கவிதை எழுதினார்கள் அது பின்வருமாறு: 

நாற்றமெடுக்கும் உமது நாவு கண்டோம் – அதை

போற்றுவோர் தோட்டிகளே!

மலர் கொழிக்கும் பூங்காவல்ல உமது கவிதை 

மலஜல கூடமே காண்பீர்!

முத்துகளல்ல உமது கவிதைகள் – மாறாக

மௌத்துக்கள், இழவுகள் இன்னாத சொற்கள்,

தூரிகையால் வரைந்த ஓவியமன்று உமது கவிதை – அன்றி 

துடப்பக்கட்டை குச்சிகளின் கீரல்கள்

உண்மையெனும் வெயிலில் நின்று தவிக்கின்றவரே – உமக்கு 

உலகியற்றியான் நிழல் தரட்டும்.

யூதராக மாறிவிட்ட உமக்கு – இனி 

வேதியர் வேஷமெதற்கு – அதிலிருந்து வில 

காத தூரம் சென்றுவிட்டீரே ஐயோ! போதும் போதும் 

கழற்றிடுவீர் உமது தலைப்பாகையை!

(ஆயினாயே ஹக் நுமா பக்கம் 107) 

இப்போதைய இந்த மௌலானக்களுக்கும் இக்கவிதை ஒரு அறிவுறையாக இருக்கின்ற படியால், இதைத் தேர்ந்தெடுத்து வெளியிடுகிறோம். 

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களைப் பற்றி, இக்பால் ஒரு கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார். 

“தற்போது இந்தியாவிலுள்ள முஸ்லிம்களில் மிர்ஸா குலாம் அஹ்மத் மிகப் பெரிய சிந்தனையாளராக இருக்கிறார். (இந்தியன் என்குயரி 1900 A D)

மேலும் அஹ்மதிகளைப் பற்றி அவர் ஒரு நூலில் கூறியுள்ளதாவது: 

“என்னுடைய கருத்து என்னவென்றால் உண்மையான இஸ்லாமிய ஒழுங்கு முறையை, ஹஸ்ரத் நபிகரீம் (ஸல்) அவர்கள் தங்கள் செயல் முறை மூலம் முன் மாதிரியை கட்டித்தந்துள்ளார்கள். இம் முன்மாதிரியை கடைப்பிடிக்க வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். 

பஞ்சாபிலுள்ள காதியானி ஜமாத்தின் இஸ்லாமிய ஒழுங்கு முறை பரிபூரண மாதிரி வெளிப்பட்டிருக்கின்றது. (மில்லத் தே பைலபார் ஏக் இம்றானி நஸர் 1919) 

கவி இக்பாலும் ஈஸா நபி (அலை) மரணமும்: 

இவ்விஷயம் பற்றி இக்பால் கூறுவதாவது, ‘நான் இந்த (அஹ்மதிய்யா) இயக்கம் பற்றிப்படித்ததன் காரணமாக, நான் அறிந்து கொண்ட உண்மை என்னவென்றால், ஈஸா நபி அவர்களின் மரணம், ஒரு சாதாரணம் மனிதனின் மரணத்திற்கொப்பானதுதான் என்பதும், அவருடைய இரண்டாவது வருகையாகக் கூறப்படுவது, அவருடைய குண இயல்புகளைக் கொண்டவரும், அவருக்கொப்பானவருமான ஒருவர் வருகையைப் பற்றியதே என்பதாகும். (அல்லாமா இக்பால்கா பைகாம் மில்லத்தே இஸ்லாமியாகே நாம்: பக்கம்: 32) 

இக்பாலும், ஜிஹாதும்: 

‘வன்முறையை ஆதரிக்கின்றவன் முஸ்லிம் அல்ல. ஷரியத்தின் அடிப்படையில் வன்முறையை ‘ஜிஹாத்’ எனக் கூறுவதற்கில்லை. மார்க்கப் பிரச்சாரத்தினிமித்தம் வாளேந்துவது தடுக்கப்பட்டிருக்கிறது. (மகாதீபே இக்பால் பாகம் 1. பக்கம் 203) 

இக்பாலும் ‘இறுதி நபி’ கொள்கையும்:

இன்றைய முஸ்லிம்களையும், அவர்களுடைய நிலை கெட்ட மௌலானாக்களையும் கண்டு, அவர்களை சீர்திருத்த, ஒரு நபி வரவேண்டியது அவசியமென, இக்பால் கீழ்வரும் வசனங்களில் எழுதுகிறார். 19-07-1916 இல் மௌலானா ஹசன் நிசாமி என்பவருக்கு எழுதிய கடிதத்தில் கூறுகின்றார். 

“..........உங்கள் பிராத்தனை இக்காலத்தில் நிறைவேறினால் எவ்வளவு நலமாக இருக்கும்! அல்லது நபி பெருமானார் (ஸல்) அவர்கள் மீண்டும் ஒரு முறை இங்கு வந்து, இந்தியாவிலுள்ள முஸ்லிம்களுக்கு உண்மையான இஸ்லாத்தைப் பற்றி விளக்கிக் கூறுவார்களேயாயின், அது எவ்வளவு நல்லதாக இருக்கும். (மகாதிபே இக்பால் பாகம் 1, பக்கம் 41) 

இது மட்டுமின்றி, இன்னொரு கடிதத்தில் கீழ்வருமாறு எழுதுகிறார். அதாவது, ‘நான் நபிகள் நாயகத்தின் பிரதிபலிப்பு – நிழல் என்று வாதிக்கும் இயக்கத்தின் ஸ்தாபகரின் வாதத்தை, நாம் வரலாற்று அடிப்படையில் ஆராய வேண்டும்.” (மகாதிபே இக்பால் பக்கம் 1, பக்கம் 419) 

இக்பாலும் அஹ்மதிய்யா ஜமாத்தும்: 

“அஹ்மதிய்யா ஜமாஅத்தில் இஸ்லாத்தின் மீது பற்றுக் கொண்டோர் ஏராளமாகக் காணமுடியும். இஸ்லாமிய பிரச்சாரத்திற்காக அவர்கள் ஆற்றும் பணிகள் பாராட்டுக்குறியவை ஆகும். ஒரு இயக்கத்தில் சேருவதும், சேராமலிருப்பதும் வேறு விஷயம். ஆனால், உலகில் இஸ்லாத்தை வெற்றி பெறச்செய்வதற்காக அஹ்மதிய்யா ஜமாஅத்து காட்டிவருகின்ற ஆர்வமும், துடிப்பும், தீவிரமும் உளமாரப்பாராட்டப்பட வேண்டியதாகும்” (மகாதீபே இக்பால் பாகம் II: பக்கம் 232) 

மேற்கண்டவாறெல்லாம், அஹ்மதிய்யா இயக்கம் பற்றியும், அதன் ஸ்தாபகர் பற்றியும் பாராட்டியதுடன், அதன் கொள்கைகளையும் ஆதரித்து ஆமோதித்து வந்த இக்பால், பிற்காலத்தில் அஹ்மதிய்யா இயக்கத்தை எதிர்க்கத் துவங்கினார் என்பது சிந்திக்கவேண்டிய ஒரு விஷயமாகும். இந்த மனமாற்றத்திற்கு ஒரு வரலாற்று உண்மை மறைந்திருக்கிறது. 

24-07-1931 ம் வருடம் சிம்லாவில் ஒரு அனைத்திந்திய முஸ்லிம் மாநாடு நடைபெற்றது. காஜா ஹஸன் நிஜாமி, அல்லாமா இக்பால் கலந்து கொண்ட அம்மாநாட்டிற்கு விஷேச அழைப்பின் பேரில் அப்போதைய அஹ்மதிய்யா ஜமாஅத்தின் இமாம், ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மத் அவர்களும் வருகைதந்திருந்தார்கள். அம்மாநாட்டில் காஷ்மீரில் வாழ்கின்ற முஸ்லிம்களின் மிகவும் பரிதாபகரமான அவலநிலை குறித்து ஆராய்ந்து அவ்வவலநிலை நீங்க திட்டம் தீட்டுவதற்காக, ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்கமிட்டியின் தலைவர் பதவிக்கு, அஹ்மதிய்யா ஜமாஅத்தின் கலீபா அவர்களின் பெயரை, அல்லாமா இக்பால்தான் முன் மொழிந்தார். அங்கு கூடியிருந்த மற்ற தலைவர்களும் அதை ஏகமனதாக ஆதரித்தனர். ஏகோபித்த அம்முடிவை ஏற்று, அஹ்மதிய்யா ஜமாஅத்தின் கலீபா ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் அஹ்மது அவர்கள், அக்குழுவின் தலைவராக, காஷ்மீர் மக்களின் துயர் நீக்க பல திட்டங்களை தீட்டி, செயலாற்றினார்கள். இத்திட்டங்களை நிறைவேற்றும்பொருட்டு அஹ்மதிய்யா ஜமாஅத்து ஏராளமான பொருள் தியாகங்கள் செய்தது. அதன் காரணமாக, அஹ்மதிய்யா ஜமாஅத்திற்கும், அதன் தலைவர் அவர்களுக்கும், காஷ்மீர் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு ஏற்பட்டது. 

அதே சமயத்தில் அதாவது 1934,35 ஆம் ஆண்டில், பஞ்சாபிலும், அதன் சுற்றுவட்டாரங்களிலும் அஹ்ராரி இயக்கம் தோன்றி, அஹ்மதிய்யா ஜமாத்திற்கெதிராக மக்கள் மத்தியில் மாபெரும் கிளர்ச்சியை தூண்டிவிட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெறும் வெற்றிகரமான பணியைக் கண்டு பொறாமை கொண்டு, அதன் காரணமாக அல்லாமா இக்பாலின் மனதைக் கலைக்க அஹ்ரார் இயக்கம் அவரைத்த லைவராக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டது. அதோடு, மேலும் பல பதவிகளை தருவதாக வாக்களித்தனர். இவ்வாறான காரணங்களால், உலகாசை, பதவி, புகழ் இவற்றிக்கு ஆசைப்பட்ட இக்பால், அச்சமயம் முதற் கொண்டு தமது எண்ணங்களைப் படிப்படியாக மாற்றிக்கொண்டு அஹ்மதிய்யா ஜமாஅத்தை எதிர்க்கும் வகையில் தமது அபிப்ராயங்களை வெளியிடத் துவங்கினார். 

இதுவே நடந்த உண்மை. பதவி ஆசையாலும், பண மோகத்தாலும் கண்கள் மறைக்கப்பட்டு, இன்றும்கூட, ஆலிம் சாஹிபுகள் அஹ்மதிகளை எதிர்த்துக்கொண்டிருப்பதை நாம் சாதாரணமாகக் காணமுடியும். அந்த வகையில் ‘இஸ்மியின்’ மௌலானாவும் ஒருவராக இடம்பெற்றுள்ளார் என்பதில் எமக்கு ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
Read more »

May 26, 2014

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு அவர்கள் அளித்த பதிலும்.


கேள்வி: கலிமா கூறுபவரையும், கிப்லாவை முன்னோக்கித் தொழுபவரையும் காபிர் என்று கூறுவது சரியானதல்ல” எனத் தாங்கள் ஆயிரக்கணக்கான இடங்களில் எழுதியுள்ளீர்கள். இதிலிருந்து நம்பிக்கையாளர்களில் எவர்கள் தங்களை நிராகரித்தால் “காபிர்” ஆகி விட்டார்களோ அவர்களைத் தவிர தங்களை ஏற்றுக் கொள்ளாததால் மட்டும் எவரும் காபிர் ஆகமாட்டார் என்று தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அப்துல் ஹகீம் கான் என்பவருக்கு “எனது தூதுச் செய்தி எட்டியபின்னர் என் மீது நம்பிக்கை கொள்ளாத ஒவ்வொருவரும் முஸ்லிம் ஆகமாட்டார்” என எழுதியுள்ளீர்கள். “திரியாகுல் குலூப்” என்ற புத்தகத்தில் என்னை ஏற்றுக் கொள்ளாததால் எவரும் காபிர் ஆக மாட்டார்” என்று எழுதியுள்ளீர்கள். இப்போது நீங்கள் எழுதியதற்கும் இதற்கு முன்னர் நீங்கள் எழுதியதற்கும் இடையில் முரண்பாடு உள்ளதே? விளக்கம் தருக. 

பதில்: நீங்கள் காபிர் என்று கூறுபவரையும், என்னை நம்பாதவரையும் தனித்தனியாகப் பிரிக்கின்றீர்கள். ஆனால் இறைவன் பார்வையில் இவர்கள் ஒருவரேயாவர். எவர் என்னை ஏற்றுக் கொள்வதில்லையோ அவர் என்னை குறித்து, நான் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவன் என்றே கருதுகின்றார். ஆல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவன் எல்லாக் காபிர்களையும் விடக் கொடிய காபிராக இருப்பதாக அல்லாஹ் கூறியுள்ளான். 

“அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுகின்றவனை விடவும் அல்லது அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப் படுத்துகின்றவனை விடவும் கொடியோன் எவன்? (திருக்குர்ஆன் 7:38 ) 

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்திலிருந்து முதலாவதாக அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுகின்றவர் கொடிய காபிராக இருக்கின்றார் என்றும் இரண்டாவதாக, அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்படுத்துகின்றவர் கொடிய காபிராக இருக்கின்றார் என்றும் தெரிகிறது. என்னைப் பொய்ப்படுத்துகின்ற ஒருவரது பார்வையில் நான் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனாக இருப்பதால் அது உண்மையென்றால் நான் காபிர் மட்டுமல்ல, மாறாக கொடிய காபிராக இருக்கின்றேன். ஆனால், நான் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனாக இல்லாமல் இருந்தால் என்னை நிராகரிப்பவரின் மீதே அவரது “குப்ர்” வீழ்கிறது. இதைத்தான் மேற்கண்ட வசனம் எடுத்துக் கூறியுள்ளது. 

எனவே எவர் என்னை ஏற்றுக் கொள்வதில்லையோ அவர் இறைவனையும் அவனுடைய தூதரையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் இறைவனும் அவனுடைய தூதரும் என்னைப் பற்றிச் செய்துள்ள முன்னறிவிப்புகள் இருக்கின்றன. அதாவது ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதிக்காலத்தில் என்னுடைய உம்மத்திலிருந்து வாக்களிக்கப்பட்ட மஸீஹ் தோன்றுவார் என முன்னறிவித்துள்ளார்கள். மேலும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “மிஹ்ராஜ்” சம்பவம் நடைபெற்ற இரவில் மஸீஹ் இப்னுமர்யம் இவ்வுலகிலிருந்து காலம் சென்றுபோன நபிமார்களோடு கண்டிருக்கின்றார்கள். மேலும் ஷஹீதாக விளங்கிய எஹ்யா (அலை) அவர்களுடன் அன்னாரை இரண்டாவது வானத்தில் கண்டார்கள். மஸீஹ் இப்னுமர்யம் மரணித்துவிட்டதாகத் திருக்குர்ஆனும் அறிவிக்கின்றது. இறைவன் எனது உண்மைக்கு சாட்சியாகத் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான இறை அடையாளங்களை வெளிப்படுத்தியுள்ளான். மேலும் விண்ணில் எனக்காகச் சூரிய, சந்திர கிரகணங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இப்போது எவர்கள், இறைவனும் அவனுடைய தூதரும் கூறியவற்றை ஏற்றுக் கொள்ளாமலும் திருக்குர்ஆனைப் பொய்ப்படுத்துகின்றவராகவும் இருக்கின்றார்களோ, மேலும் தெரிந்து கொண்டே இறைவனது அடையாளங்களை மறுத்து என்னை அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனாகக் கருதுகின்றார்களோ, அவர்கள் எவ்வாறு நம்பிக்கையாளர்களாக இருக்கமுடியும். 

அவர் ‘முஹ்மின்’ ஆக இருந்தால், நான் இறைவன் மீது பொய்யைப் புனைந்து கூறுவதன் காரணமாக காபிராகி விடுகின்றேன். ஏனெனில் நான் அவரது பார்வையில் நான் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனாக இருக்கின்றேன். அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: 

“நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம் என்று காட்டரபிகள் கூறுகின்றனர். நீர் கூறுவீராக! நீங்கள் (உண்மையிலேயே) நம்பிக்கை கொள்ளவில்லை. நாங்கள் (வெளிப்படையாகக்) கட்டுப்பட்டோம் என்று நீங்கள் கூறுங்கள். ஏனெனில் (உண்மையான) நம்பிக்கை இதுவரை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. (திருக்குர்ஆன் 49:15) 

இதிலிருந்து கட்டுப்பட்டு நடப்பவர்களையே அல்லாஹ் ‘முஹ்மின்’ என்று பெயரிடாத போது, இறைவனது வசனங்களை பகிரங்கமாக பொய்ப்படுத்துவதிலிருந்து விலகாதவர்கள், நான் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறாதவனாகவும் “முஹ்மின்” ஆகவும் இருக்கும் நிலையில் என்னைப் பொய்ப்படுத்தி நிராகரித்ததன் பிறகு அவர்கள் “காபிர்கள்” ஆகி விட்டதைத் தாமாகவே ஏற்றுக் கொள்கின்றனர். என்னைக் “காபிர்” என்று கூறியதன் காரணமாக அவர்கள் தங்கள் “குப்ரி”ன் மீது சாட்சி முத்திரை இடுகின்றனர். (ஹகீகதுல் வஹி, ரூஹானி கஸாயின், தொகுதி 22, பக்கம் 167)
Read more »

Jan 10, 2014

அஹ்மது எனும் பெயரைக் கொண்ட தூதர்


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 25 இல் முகம்மது நபியைப் பற்றிய முன்னறிவிப்பு என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

தவ்ராத், இன்ஜீல் வேதங்களில் முஹம்மது நபியைப் பற்றி முன்னறிவிப்பு இருந்தது. (பார்க்க திருக்குர்ஆன் (7:157, 48:29, 61:6) என்று எழுதியுள்ளார்.

நம் விளக்கம்:

திருக்குர்ஆன்  61:7 வசனத்தில் மர்யமின் மகன் ஈஸா தன் தமுதாயத்திடம் இஸ்ராயீலின் மக்களே! நிச்சயமாக நான் எனக்கு முன்னர் தவ்ராத்தில் கூறப்பட்டதை நிறைவேற்றக் கூடியவனாகவும் எனக்குப் பின்னர் அஹ்மது எனும் பெயரைக் கொண்ட ஒரு தூதரைப் பற்றி நற்செய்தி வழங்குபவனாகவும் உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன் என்று கூறிய நேரத்தை (நினைத்துப் பாருங்கள்). பின்னர் அ(த்தூது)வர் தெளிவான சான்றுகளுடன் வந்த பொது இது மிகத் தெளிவான சூனியம் என்று அவர்கள் கூறினார்.

இவ்வசனத்தில் அஹமத் எனும் பெயர் கொண்ட ஒரு தூதர் என்பது முஹம்மது நபியைப் பற்றிய முன்னறிவிப்பு என்று பி.ஜே கருதுகிறார். நபி (ஸல்) அவர்களின் பெயர் முஹம்மது என்றிருக்க அஹ்மத் எனும் பண்புப் பெயரைக் குறிப்பிட்டு ஈஸா நபி முன்னறிவித்ததாக எண்ணுகிறார். இதனால், ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் இந்த அஹ்மது என்பது தன்னைக் குறித்து கூறப்பட்ட முன்னறிவிப்பு என்று கூறியபோது பி.ஜே போன்றோர் அன்னாரை மறுத்தனர். இச்செயல், ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைக் குறித்து தவ்ராத்தில் வந்த முன்னறிவிப்பை யூதர்கள் அது முஹம்மது நபிக்குப் பொருந்தாது என்று கூறியதைப் போன்றதாகும். அதாவது உபகாமம் 18:18-20 இல்,

இந்த வசனத்தில் கர்த்தர் மூஸா நபியிடம், உன்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன், நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.

என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.

சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்க தரிசியும் சாகக்கடவன் என்று வருகிறது. இதில்,

1) ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைக் குறித்து கூறப்பட்டுள்ளது. அவர் மூஸா நபியைப் போன்ற ரஸுல் என்று (திருக்குர்ஆன் 73:16 வசனம்) கூறுகிறது.

2) அவர் இஸ்ரவேலர்களின் சகோதரர் இஸ்மவேலர்களிலிருந்து அதாவது இஸ்மாயீல் நபி (அலை) அவர்களின் சந்ததியில் இருந்து வருவார்.

3) அவர்க்கு திருக்குர்ஆன் எனும் வேத வஹி வரும்.

4) அவ்வேதத்தில் பிஸ்மில்லாஹ் என்று அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு அதன் அத்தியாயங்கள் காணப்படும்.

5) அவர் எந்தச் செயலையும் அல்லாஹ்வின் பெயரைக் கூறியே செய்வார்.

இவ்வாறு தெளிவாகக் காணப்பட்டும் யூதர்கள், அந்தத் தீர்க்கதரிசி, மூஸா நபியின் சகோதரர்களாகிய இஸ்ரவேலர்களிலிருந்து வரவேண்டும். முஹம்மதோ, இஸ்மவேலர்களிலிருந்து வந்துள்ளார் என்று கூறி மறுத்து விட்டனர்.

இதைப் போன்றே முஸ்லிம்களும் அஹ்மத் என்பது முஹம்மது நபியைத் தான் குறிக்கும் என்று கூறி, இஸ்லாத்தின் பின்னாளில் முஹம்மது நபியைப் பின்பற்றி வரும் அன்னாருடைய அஹ்மத் என்னும் பண்பைக் கொண்ட உம்மத்தி நபியாகிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களை மறுத்து வருகின்றனர்.

61:7 வசனத்தில் வரும் அஹ்மத் என்பவர், முஹம்மது நபியின் உம்மத்தில் பிற்காலத்தில் வரக்கூடியவர் என்பதைக் கான்போம்.

1) நம்பிக்கை கொண்டோர் என்பது திருக்குரானில் முஸ்லிம்களை மட்டுமே குறிக்க வருகிறது. இச்சொல், அந்த அத்தியாயத்தில் 3 இடங்களில் வந்து முஸ்லிம் சமுதாயத்தில் பிற்காலத்தில் வருபவரைப் பற்றியும் முஸ்லிம்கள் செய்யாததைச் சொல்லக் கூடாது என்றும் துன்பத்திலிருந்து காப்பாற்றும் ஒரு வியாபாரம் பற்றியும் முஸ்லிம்களிடம் எடுத்துச் சொல்கிறது.

2) மூஸா நபி முதல் ஈஸா நபி காலம் வரை யூதர்கள் அந்தந்த கால நபிமார்களிடம் நடந்து கொண்டது போல் உங்களிடம் வந்துள்ள அஹ்மத் எனும் தூதரிடம் நடக்கக் கூடாது என்று முஸ்லிம்களிடம் வசனத்தில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

3) 61:8 வசனத்தில் அஹ்மத் என்னும்  தூதரை நீங்கள் இஸ்லாத்திற்கு வருமாறு அழைப்பீர்கள் என்றும்: அவர்க்கு அநீதியிழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான் என்றும் முஸ்லிம்களிடம் 61:6-7 அல்லாஹ் கூறுகிறான்.

4) 61:9 இல் அஹ்மத் நபி கொண்டு வரும் அந்த இறையொளியை தம் வாய்களால் பத்வா கூறி அணைக்க முயல்வார்கள். ராபிதத்துல் ஆலமீன், பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் போன்ற அமைப்புகள் பத்வாக்களை கூறி அஹ்மதின் இறை ஒளியை அணைக்க முயல்பவர்களை காபிர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

5) அன்னார் அனைத்து மார்க்கங்களையும் வெற்றி கொள்வதற்காக வந்து, நேர்வழியையும், உண்மை மார்க்கத்தையும் நிலை நாட்டுவார் என்று 61:10 வசனம் கூறுகிறது. இது எதிர்காலத்தில் வரும் மஹ்தியின் காலத்தில் நடக்கும் என்று திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகின்றனர். (தப்ஸீர் இப்னு ஜரீர், தப்ஸீர் ஜாமிஉல் பயான் தொகுதி 29)

6) 61:11-12 வசனம், பிற்காலத்தில் வியாபாரம் கொடி கட்டிப்பறக்கும் என்றும் அச்சமயத்தில் முஸ்லிம்கள் செய்ய வேண்டிய வியாபாரம் பற்றியும் அதனால் கிடைக்கும் கூலி பற்றியும் கூறுகிறான்.

7) 61:15 வசனத்தில் மூஸா நபியைப் போன்ற முஹம்மத் நபியின் உம்மத்தில், ஈஸா நபியின் சமுதாயத்தைப் போன்று ஒரு சமுதாயம் உருவாகும் என்றும் அவர்கள் ஈஸா நபியைப் போன்ற அஹ்மத் நபியைப் பின்பற்றுவோர் என்றும் மற்றொரு பிரிவினர் அவரை மறுத்து விடுவர் என்றும் கூறுகிறது.

8) 61:7 வசனம் ,

அ) ஈஸா நபி இஸ்ரவேல் சமுதாயத்திற்கு மட்டும் அனுப்பப்பட்ட ஒரு தூதர், அன்னார் முழு உலகுக்கோ, முஸ்லிம் சமுதாயத்திற்கோ வர முடியாது.

ஆ) ஈஸா நபி தவ்ராத்தை மெய்ப்பிக்க வந்த ஒரு தூதர், அவர் திருக்குரானை மெய்ப்பிக்க வந்த  தூதறல்ல.

இ) எனக்குப் பின்னர் என்று ஈஸா நபி கூறுவதினால், ஈஸா நபியின் மரணத்திற்குப் பிறகுதான் அஹ்மத் நபி தோன்றுவார்.

ஈ) மூஸா நபியும் முஹம்மது நபியும் வேதம் கொண்டுவந்த நபிமார்கள் என்றும் ஈஸா நபி தவ்ராத்தை அஹ்மது நபி திருக்குரானையும் மெய்ப்பிக்க வந்த தூதர்கள் என்றும் இவ்வசனம் கூறுகிறது.

61:1 வசனம், வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வைத் துதித்தன என்று வருகிறது. அல்லாஹ்வின் துதி இல்லாத காலத்தில் அத்துதியை மீண்டும் உண்டாக்கி அஹ்மத் – புகழக் கூடியவர், துதிக்கக் கூடியவர் வருவார் என்று கூறுகிறது.

தான் முழுக்க முழுக்க திருக்குரானையும், ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் பின்பற்றியதால்தான் இறைவன் எனக்கு இந்த உம்மத்தி நபி என்ற பதவியைத் தந்தான், அதனை விட்டு விட்டு மலையளவு நல்ல அமல்களைச் செய்திருந்தாலும் இப்பதவி எனக்குக் கிடைத்திருக்காது. என்று ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் கூறியுள்ளார்கள். அன்னார் தன் வாழ்நாள் முழுவதும் அல்லாஹ்வின் புகழையும், நபி (ஸல்) அவர்களின் புகழையும் போற்றிப் புகழ்வதில் செலவிட்டார்கள்.

எனவே, பிற்காலத்தில் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களே இங்கு இஸ்முஹு அஹ்மத் என்று கூறப்பட்டவராவார்.

காரணம் 61 வது சூரா மூமின்களாகிய முஸ்லிம்களைக் குறித்து மட்டுமே பேசுகிறது. எனவே அஹ்மத் எனும் பெயர் முஸ்லிம்களில் தோன்றும் ஒரு தூதரைக் குறிக்குமே தவிர, முஸ்லிம்களுக்காகத் தோன்றும் தூதரைக் குறிக்காது. முஸ்லிம்களுக்காகத் தோன்றிய தூதர் முஹம்மது என்று திருக்குர்ஆன் நான்கு இடங்களில் கூறப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர் இல்லை என்று கூறுவதற்காகத்தான் அவர் பெயர் என்று கூறி அஹ்மது என்று அழைத்துள்ளான். அவர் பெயர் என்று யஹ்யா நபியுடனும் (3:45) ஈஸா நபியுடனும் (19;8) வந்து, நற்செய்தி என்றும் கூறப்பட்டுள்ளது. இதர் நற்செய்தியைத் தான் ஈஸா நபி பிற்காலத்தில் இஸ்லாத்தில் தோன்றும் ஒருவராகிய அஹ்மது நபிக்கும் கூறுகிறார். எனக்குப் பின்னர் என்பது ஈஸாநபியின் மரணத்திற்குப் பிறகு என்பதைக் குறிப்பதால், அன்னார் மரணித்து விட்டார் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லை என்றால், ஈஸா மீண்டும் வந்து மரணித்த பிறகு ஒருவர் வருவார். அவர்தான் அஹ்மத் என்று எண்ணி ஏமாற வேண்டும்.

இந்த அதிகாரத்தின் இறுதியில் அல்லாஹ் ஒரு கட்டளையிட்டுள்ளான். ஈஸா நபி, தமது சீடர்களிடம் அல்லாஹ்வுக்காக எனது உதவியாளர்கள் யார் என்று கேட்ட போது நாங்கள் அல்லாஹ்வுக்காக உதவி செய்பவர்களாக இருக்கிறோம் என்று அந்த சீடர்கள் பதிலளித்தது போன்று நம்பிக்கை கொண்டவர்களே நீங்களும் பதிலளிக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது. அதே வேளையில் இந்த கருத்து திருக்குர்ஆனில் 3:53 இல் செய்தியாக மட்டுமே வருகிறது. ஆனால் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹமத் (அலை) அவர்களின் வருகையைக் குறிப்பிடும் போது நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு கட்டளையாகவே இடப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது

Read more »

Jan 8, 2014

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் மெய்ப்பிக்கும் ஒரு தூதராவார்.


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 95 இல் நபிமார்களிடம் எடுத்த உறுதிமொழி என்னும் தலைப்பில் பி.ஜே கூறியிருப்பதன் சுருக்கமாவது:
உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் நான் தந்த பின் இன்னொரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை ஏற்று உதவ வேண்டும் என்பதுதான் உடன்படிக்கை. (திருக்குர்ஆன்: 3:81)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட எல்லா நபிமார்களிடமும் எடுக்கப்பட்ட உடன்படிக்கையை இவ்வசனம் கூறுகிறது. இதில் உங்களிடம் ஒரு தூதர் வந்தால் என்று அல்லாஹ் கூறுகிறான். ஒரு நபிக்குப் பின் இன்னொரு நபி வருவதை இவ்வசனம் கூறவில்லை. ஒரு நபி வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவரிடம் இன்னொரு நபி வருவதையே இவ்வசனம் குறிக்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் துணைக்கு மேலும் சிலரை அல்லாஹ் நியமித்திருந்தால் அதை மனப்பூர்வமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.

இந்த இடத்தில் இவ்வசனத்திற்கு எதிராக முஸ்லிம்களில் பலரிடம் காணப்படும் தவறான நம்பிக்கையையும் சுட்டிக் காட்டும் கடமை நமக்கு இருக்கிறது.

கில்ரு நபி என்று ஒருவர் இருக்கிறார். அவர் ஹயாத் நபி: அவர் பூமியில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதுதான் அந்த நம்பிக்கை. அந்த நம்பிக்கை தவறானது என்பதை இவ்வசனம் சந்தேகமற அறிவிக்கிறது.

கில்ரு நபி உயிருடன் இருக்கும் போது முஹம்மது நபியவர்கள் தூதராக அனுப்பபடுகிறார்கள் என்றால் நபிமார்களிடம் எடுக்கப்பட்ட உறுதிமொழியின்படி அவர் என்ன செய்திருக்கவேண்டும்? நபிகள் நாயகத்தை தேடி அவர் ஓடி வந்திருக்க வேண்டும். அவர்கள் கஷ்டபட்ட நேரத்தில் உதவிகள் புரிந்திருக்க வேண்டும். பத்ரு, உஹதுப் போர்களில் பங்கெடுத்திருக்க வேண்டும்.

அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. நடந்ததாக எந்தச் சான்றும் இல்லை. உயிருடன் அவர் இருந்திருந்தால் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றியிருக்க வேண்டும். இவ்வசனத்திலிருந்து கில்ரு நபி உயிருடன் இல்லை என்பதையும் கூடுதலாக அறிந்து கொள்ளலாம்.

நம் விளக்கம்:

திருக்குர்ஆன் 3:82-83 வசனத்தில் கூறப்பட்டபடி

1. எல்லா நபிமார்களிடமும் உடன்படிக்கையை எடுக்கிறான் திருக்குர்ஆன் 33:8 வசனத்தின் படி நபி (ஸல்) அவர்களிடமும், நூஹ், இப்ராஹீம், மூஸா, ஈஸா ஆகிய நபிமார்களிடமும் இந்த உறுதிமொழி எடுக்கப்படுகிறது.

2. உறுதி மொழியாவது: வேதத்தையும் ஞானத்தையும் தந்த பின் அதை மெய்ப்பிக்கும் தூதர் (உண்மைப்படுத்தும் தூதர்) உங்களிடம் வருவார்.

3. அப்படி வந்தால், அவர் மீது ஈமான் கொண்டு, அவருக்கு உதவி செய்ய வேண்டும்.

4. இந்த உடன்படிக்கைப் புறக்கணிக்கின்றவர் வரம்பு மீறியவர்கள் ஆவர் என்று கூறுகிறது.

பி.ஜே ஒரு நபி வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவரிடம் இன்னொரு நபி வருவதையே இந்த வசனம் குறிக்கிறது என்கிறார். இது தவறு. எப்படி?

1. தூதரிடம் எடுக்கும் உறுதி மொழிகள் பொதுவாகவே அந்தத் தூதரை அனுப்பியவரிடத்தில் (அல்லாஹ்விடம்) எடுக்கின்ற உறுதிமொழி தான் என்று பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 334 இல் கூறுவதே அவர்க்கு பதிலாகும்.

2. உதாரணமாக் மூஸா நபிக்கு வேததையும் ஞானத்தையும் கொடுத்தபின், அவர் காலத்தில் உடன் இருந்த ஹாரூன் நபி வந்தார். அப்படி வந்தவர் அவற்றை மெய்ப்பிக்க வந்தார் என்று திருக்குரானோ நபிமொழிகளோ கூறவில்லை. வேதத்தையும் ஞானத்தையும் கொண்டு வந்தவர் வாழ்ந்துகொண்டிருக்கும் போது அதை உண்மைப்படுத்தும் தூதர் அவரிடம் ஏன் வர வேண்டும்?

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள், இறைத் தூதர்கள் மூஸா (அலை), ஈஸா (அலை) ஆகிய இருவரும் (தற்போது) உயிருடன் இருந்தாலும் என்னைப் பின்பற்றுவதைத் தவிர அவ்விருவருக்கும் வேறு வழியில்லை. (ஆதாரம்: தப்ஸீர் இப்னு கஸீர் 3:81 வசனத்தின் விளக்கம்) என்று கூறியுள்ளார்கள்.

3. வேதத்தையும் ஞானத்தையும் உண்மைப்படுத்த வேண்டிய ஒரு காலகட்டம் வரும்போது மெய்ப்பிக்கும் தூதர் வரவேண்டுமே தவிர வேதத்தையும் ஞானத்தையும் கொண்டு வந்தவர் வாழும் காலத்தில் வர வேண்டிய தேவையில்லை, ஏனென்றால் அவரே அவற்றைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும் அம்மக்களை அதன் வழியில் நடத்திக் கொண்டும் இருப்பார்.

4. திருக்குரானில் மெய்ப்பிக்கும் தூதர் என்று ஏறக்குறைய 3 இடங்களில் ஈஸா நபியைப் பற்றி கூறப்பட்டுள்ளது. (3:51,5:47,61:7) ஈஸா நபியோ தவ்ராத்தை மெய்ப்பிக்க மூஸா நபியின் காலத்தில் வரவில்லை. மாறாக 1400 ஆண்டுகள் கழிந்து தோன்றினார்.

பி.ஜே கூறுகிறார்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் துணைக்கு மேலும் சிலரை அல்லாஹ் நியமித்திருந்தால் அதை மனப்பூர்வமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.

இக்கருத்து முற்றிலும் தவறாகும். எப்படி? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே ஒருவர் நபியாக வருகிறார் என்றால்,

1. நபி (ஸல்) அவர்கள் அந்த நபி மீது ஈமான் கொண்டு அவர்க்கு நபி (ஸல்) உதவி புரிய வேண்டும்.

2. அந்த நபி, நபி (ஸல்) அவர்களின் வேதமாகிய திருக்குரானையும் அதன் ஞானத்தையும் (நபிமொழிகளையும்) உண்மைப் படுத்துவார். ஏனென்றால் உங்களிடம் வந்தால் என்றால் பி.ஜேயின் விளக்கத்தின்படி நபி (ஸல்) அவர்களிடம் வேறொரு தூதர் வந்தால் என்பதுதான் பொருள். இது சரியா?

முஸ்லிம்களும் கில்ரு நபியும்:

நபிமார்களிடம் எடுக்கப்பட்ட உறுதிமொழியின்படி கில்ரு நபி இறந்துவிட்டார். எனவே அவர் உயிருடன் இல்லை என்று பி.ஜே எழுதியுள்ளார் என்றால், ஈஸா நபி உயிருடன் இருக்கும் போது முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதராக அனுப்பபடுகிறார்கள். என்றால் நபிமார்களிடம் எடுக்கப்பட்ட உறுதிமொழியின்படி அவர் என்ன செய்திருக்க வேண்டும்?

நபிகள் நாயகத்தை தேடி ஈஸா நபி வந்திருக்க வேண்டும். அவர்கள் கஷ்டப்பட்ட நேரத்தில் உதவிகள் புரிந்திருக்க வேண்டும், அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. நடந்ததாக எந்தச் சான்றும் இல்லை. உயிருடன் ஈஸா நபி இருந்திருந்தால் அவர் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றி இருக்க வேண்டும்.

இவ்வசனத்திலிருந்து ஈஸா நபி உயிருடன் இல்லை என்பதையும் கூடுதலாக அறிந்து கொள்ளலாம்.

அல்லாஹ் திருக்குரானில் 33:8 வசனத்தில் உம்மிடத்தில் என்று நபி (ஸல்) அவர்களைக் குறித்தும் ஈஸா நபியிடத்தும் அந்த உடன்படிக்க வாங்கப்பட்டிருப்பதால் ஈஸா நபியின் உம்மத்தினர், ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மீது ஈமான் கொண்டு அவர்க்கு உதவி செய்ய வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினர் அவர்க்கு பிறகு வருபவரிடமும் ஈமான் கொண்டு அவர்க்கு உதவி செய்ய வேண்டும் என்றும் தெரிகிறது.

(61:7, 5:47, 3:51 ஆகிய வசனங்கள்) இதில் 61:7 வது வசனத்தைக் காண்போம்.

மர்யமின் மகன் ஈஸா தன சமுதாயத்தினரிடம், இஸ்ராயீல் மக்களே! நிச்சயமாக நான் எனக்கு முன்னர் தவ்ராத்தில் கூறப்பட்டதை உண்மைப்படுத்தக் கூடியவனாகவும் எனக்குப் பின்னர் வரப்போகின்ற அஹ்மது எனும் பெயரைக் கொண்ட ஒரு தூதரைப் பற்றி நற்செய்தி வழங்குபவனாகவும் உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன் என்று கூறினார்.

உண்மைப்படுத்தும் தூதரின் இலக்கணத்தில் இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

1. ஈஸா நபி, மூஸா நபி வாழும் போது அவரிடம் வரவில்லை.

2. மூஸா நபியின் மறைவுக்குப் பின் வேதத்தையும் ஞானத்தையும் உண்மைப்படுத்தக்கூடிய ஒரு காலகட்டத்தில் அதாவது 1400 ஆண்டுகள் கழித்து ஈஸா நபி வருகிறார்.

3. மூஸாவின் உம்மத்தில் தான் வருகிறார்.

4. இஸ்ரவேல் மக்களிடம் அவர்தான் இந்த வேதத்தை உண்மைப்படுத்த உங்களிடமிருந்து வந்த தூதர் என்று இறைவன் கூறுகிறான்.

5. தனக்குப் பிறகு – ஈஸாவின் மரணத்திற்குப் பிறகு உலகில் வரக்கூடிய ஒரு தூதரைப் பற்றி நற்செய்தியும் வழங்குகிறார். அதாவது அஹ்மது நபியைப் பற்றி.

திருக்குர்ஆன் 61:7 இல், ஈஸா நபி தனக்குப் பிறகு அஹ்மத் என்பவரைப் பற்றி நற்செய்தி கூறுகிறேன் என்று கூறுகிறாரே அவர் யார்?

61 வது அதிகாரம் அவர் முஸ்லிம் உம்மத்தில் வரக்கூடிய உம்மத்தி நபி என்று வருகிறது.

1. வானங்களிலும் பூமியிலுமுள்ளவை எல்லாம் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்தன என்று கூறி, இஸ்லாத்தில் நின்றுவிட்ட இறைத்தூயமையை மீண்டும் எடுத்துரைக்க வரக்கூடியவர்.

2. நம்பிக்கை கொண்டவர்கள் என்று திருக்குர்ஆன் முஸ்லிம்களைப் பார்த்துதான் அழைக்கிறது. இச்சொல் (61:3, 61:11, 61:15) இந்த அதிகாரத்தில் மூன்று இடங்களில் இடம்பெற்று முஸ்லிம்களைப் பார்த்து அல்லாஹ் கூறும் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. எனவே இந்த அத்தியாயம் முஸ்லிம்களைப் பற்றி பேசும் அத்தியாயமாகும்.

3. நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களிடம் பிற்காலத்தில் காணப்படும் நிலையைப் பற்றி வது 61 அதிகாரம் கூறுவதாவது: 61:4-5

அ) செய்யாததை சொல்லுதல். (61:3)

ஆ) இவ்வாறு சொல்லி இறைவனின் வெறுப்புக்கு ஆளாகுதல். (61:4)

இ) உறுதிவாய்ந்த ஒரு சுவரைப் போல் ஒரு வரிசையில் நிற்காமல், 72 பிரிவுகளாக பிறிந்து தமக்குள் சண்டைப் போடுதல். (61:8)

4. அஹ்மது நபியை – அந்த 72 பிரிவுகளும் நீர் இஸ்லாத்தில் இல்லை. அதற்கு வாரும் என்று அழைப்பார்கள். (61:8)

5. அஹ்மது நபி கொண்டு வந்த இறையோளியை ஆலிம்கள் தங்கள் வாய்களால் பத்வா – மார்க்கத்தீர்ப்பு கூறி அணைக்க முயல்வார்கள். அல்லாஹ்வோ அந்த ஒளியை முழுமைப் படுத்துவான்.

இவ்வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இருவகையான தோற்றங்கள் பற்றிய முன்னறிவிப்பு இருக்கின்றது. பழைய ஏற்பாட்டில் முகம்மது நபி (ஸல்) அவர்களின் வருகையைப் பற்றி மூஸா(அலை) செய்துள்ள முன்னறிவிப்பு நிறைவேறும். (உபாகமம் 18:18-20) என்பதும்.

எனக்குப் பின்னர் அஹ்மது என்னும் பெயர் கொண்ட ஒரு தூதரைப் பற்றி நற்செய்தி வழங்குபவர் என்பது, 62:4 இல் குறிப்பிடப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இரண்டாவது வருகையைக் குறிக்கும். இது அஹமதிய்யா ஜமாஅத்தை தோற்றுவித்த ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களின் வருகையின் மூலம் நிறைவேறிற்று.

6. இணை கற்பிப்போம் (இதனை) எந்த அளவு வெறுத்தாலும் சரியே. அவனே தனது தூதரை நேர்வழியுடனும் உண்மையான மார்க்கத்துடனும் – இதனை அவன் எல்லா மார்க்கத்தின் மீதும் வெற்றி பெற செய்வதற்காக அனுப்பினான். (61:10)

இந்த முன்னறிவிப்பு மஸீஹின் காலத்தில் நிறைவேறும் என்று தப்ஸீர்கள் கூறுகின்றன. இவ்வாறு ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் காலத்தில் இது நிறைவேறியது. அவர்கள் பிற மார்க்கங்களை விட இஸ்லாமே சிறந்தது என்பதை தம் பேச்சு, எழுத்து மூலம் நிரூபித்துள்ளார்கள்.

7. அக்காலத்தில் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கும். (61:11) எந்த அளவுக்கு என்றால் உலமாக்கள். மார்க்கத்தை வியாபாரம் எந்த அளவுக்கு என்றால் உலமாக்கள், மார்க்கத்தை வியாபாரம் ஆக்கி காசேதான் கடவுளடா என்று வாழ்வார்.

8. 72 பிரிவுகளும் அல்லாஹ்வையும், அந்த அஹமத் நபியையும் நம்பாமலும் இறைவழியில் அறப்போர் செய்யாமலும் வாழ்வார்கள். இக்காலத்தில் தான் ஈஸா நபி நற்செய்தி கூறிய அஹமது எனும் மெய்ப்பிக்கும் தூதர் வருவார். எப்படி?

1
மூஸா
முஹம்மது (ஸல்)
2
தவ்ராத்
திருக்குர்ஆன்
3
1400 ஆண்டுகளுக்குப் பின் ஈஸா நபி   
1400 ஆண்டுகளுக்குப் பின் அஹ்மது நபி
4
தவ்ராத்தை மெய்ப்பித்தல்
திருக்குரானை மெய்ப்பித்தல்


எனவே, முழு உலகமும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடம் எடுத்த உடன்படிக்கையின்படி. ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது அலை அவர்களை ஏற்று, அவர்க்கு உதவி புரிய வேண்டும்.

மேலும் திருக்குர்ஆன் 62:4 இல் அவர்களுடன் சேராத  மற்றவர்களுக்கிடையிலும் (அவரை எழுப்புவான்) என்று வருகிறது. இந்த வசனத்திற்கு ஹதீஸில் இவ்வாறு வருகிறது.

ஹஸ்ரத் முகம்மது நபி (ஸல்) அவர்களிடம் தோழர்கள், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இங்கு கூறியுள்ள மற்றவர்கள் என்பவர் யார் என்று கேட்டார்கள். அதற்கு, அவர்கள் ஹஸ்ரத் சல்மான் பார்ஸி(ரலி) அவர்களின் தோளில் கைவைத்து, நம்பிக்கை ஒரு காலத்தில் கார்த்திகை நட்சத்திரம் வரை சென்றுவிட்டாலும் பாரசீக இனத்தைச் சேர்ந்த இவரின் தொன்றல்களுள் ஒருவர அல்லது பலர் அதனைத் திரும்பக் கொண்டு வருவர் என்று பதிலளித்தார்கள். (புகாரி 4897)

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் சல்மானுள் பார்ஸி வம்சத்தில் தோன்றியவர்கள் ஆவார்கள்.

அப்துல் வஹ்ஹாப் அடிக்குறிப்பு எண் 262 இல்

12000 பேர் கொண்ட மக்கத்துப் படைக்கும் 3000 பேர் கொண்ட முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த போர் அகழ்ப் போர். 12000 பேரை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் தன் நாபிச் தோழரிடம் ஆலோசனை செய்தார்கள். அப்போரை சல்மான் பாரிஸ்(ரலி) அவர்கள், மதீனாவைச் சுற்றி ஒரு அகழ் வெட்டி எதிரிகளைத் தடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

10 முழம் ஆழமும், 40 முழம் அகலமும் கொண்ட ஒரு அகழியை வெட்டினார்கள் 25 நாட்கள் முற்றுகை நீடித்தது. இறுதியில் முற்றுகையை கைவிட்டு எதிரிகள் திரும்பினர். அப்போது அன்சார் தோழர்கள் சல்மானு மின்னா (சல்மான் பாரிஸ் எங்களை சேர்ந்தவர்) என்றும் முஹாஜிர்கள் (சல்மானு மின்னா) என்றும் கூறினார்.

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சல்மானு மின்னா அஹ்லுல் பைத் – சல்மான் எம்மைச் சேர்ந்தவர். எம் குடும்பத்தினர் என்று கூறினார்கள். 

Read more »

Apr 1, 2012

அஹ்மதியா கருத்துக்களை ஆமோதிக்கும் ஆலிம்கள்


திருக்குர்ஆன், நபிமொழி ஆகியவற்றின் அடிப்படையில் அமையப்பற்ற அஹ்மதியா ஜமாத்தின் கொள்கைகளை சில அரைகுறை ஆலிம்சாக்கள் தான் மறுக்கின்றார்களேயொழிய கற்றரிந்த மேதைகளான ஆலிம்கள் அவற்றை ஆமோதிக்கவே செய்கின்றனர்.

சவுதி அரேபியாவைச் சார்ந்த "ராபிதத்துள் ஆலமில் இஸ்லாம்" என்ற அமைப்பு வெளியிட்டுள்ள திருக்குர்ஆன் ஆங்கில மொழியாக்கம் மற்றும் விரிவுரையில் அல்லாமா முஹம்மத் அஸத் அவர்கள ஈசா நபி (அலை) அவர்கள் உடலுடன் உயர்த்தப்பட்டார்கள், என்ற கதையை மறுத்து இவ்வாறு கூறியுள்ளார்கள்.

The verb RAFA' AHU -he raised him or elevated him has always, when ever the act of RAFA'A of human being is attributed to God the meaning is honouring or exalting. No where in the Quran is there any warrant for popular belief of man muslim that Gog has taken up Jesus bodily to heaven. PP 177

ரஃபாஅஹு - aவான் அவரை உயர்த்தினான் எனும் வினைச்சொல் மனிதனைப்பற்றி இறைவன் கூறியதாக குறிப்பிடப்படும் இடங்களில் அதன் கருத்து 'கௌரவித்தல்' - பதவி கொடுத்தல் என்பதாகும். இறைவன் ஈசா நபி அவர்களை உடலுடன் வானத்திற்கு உயர்த்தினான் என்ற பெரும்பான்மை முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு எந்த ஆதாரமும் திருக்குரானில் இல்லை. பக்கம் 177


சிலுவை சம்பவம் தொடர்பாக மேற்கண்ட விரிவுரையாளர் கூறுவதைப் பாருங்கள்:-

"There exist among muslims many fanciful legends telling us that at the last moment God substituted for Jesus a person closely resembling him who was subsequently crucified in his who was subsequently crucified in his place. However none of these legends finds the slightest support in the quran or authontic Traditions and the stories produced in this Connection by the classical commentators of the Quran must be summarily rejected".

"ஈசா நபியோடு உருவ ஒப்புமையுள்ள வேறு ஒருவரை இறைவன் அவருடைய இடத்தில் கடைசி நேரத்தில் ஆள்மாறாட்டம் செய்துவிட்டான் என்றும் அந்நபர் ஈசா நபிக்கு பகரமாக சிலுவையில் அறையப்பட்டார் என்ற ஒரு கட்டுக்கதை முஸ்லிம்களிடையே நிலவிவருகிறது ஆனால் இதற்க்கு திருக்குராநிலோ நம்பகமான ஹதீதுகளிலோ ஆதாரமில்லை. எனவே இது தொடர்பாக சில விரிவுரையாளர்களால் உருவாக்கப்பட்ட கதைகள் அனைத்தும் நிராகரிக்கப்படவேண்டும்.

இதைப்போன்று எகிப்து அல்-அசர் பல்கலைகழகத்தின் அதிபராகவும் உலமாக்களின் பேரவைத் தலைவராகவுமிருந்த அறிஞ்சர் அல்லாமா செய்ஹு மஹ்மூத் ஷல்தூத் அவர்களும் ஈசா நபி அவர்கள் ஏனைய நபிமார்களைப் போன்று மரணமடைந்து விட்டார்கள் என்றே தீர்ப்பளித்துள்ளார்கள். இந்தத் தீர்ப்பு 11-5-1942 அர்ரிசாலாவில் வெளியாகி இருந்தது. சென்னை தாருல் இஸ்லாம் ஏட்டில் 1956 ஆம் ஆண்டு ஜனவரி இதழிலும் 'முஸ்லிம் முரசு' ஏட்டின் 1964 டிசம்பர் இதழிலும் இது பற்றிய செய்திகள் இடம்பெற்றிருந்தன.
Read more »

Mar 26, 2012

அஹ்மதிய்யா ஜமாஅத்தின் கலிமா - பொய்யர்களின் அட்டூழியம் தொடர்கிறது.


ஆன்லைன் பொய்யனின் ஆதரவு தளமான ABUMUZAIN என்ற தளத்தில் அஹ்மதிய்யா ஜமாத்தின் கலிமா 'லா இலாஹா இல்லல்லாஹ் அஹ்மதூர் ரசூலுல்லாஹ்' என்பதுதான் என்ற அப்பட்டமான ஒரு பொய்யை வெளியிட்டிருக்கிறது. மக்கள் மத்தியில் அஹ்மதிய்யா ஜமாத்தை பற்றி தவறான எண்ணத்தைப் பரப்பும் ஆன்லைன் பொய்யனின் ஆதரவு தளங்கள் ஏராளம் இருக்கிறது. இந்தப் பொய்யர்களுக்கு இறைவனைப்பற்றியோ, மறுமையைப் பற்றியோ எந்த அச்சமும் இல்லை என்பதற்கு இவர்களின் எழுத்துக்களே சான்றாக இருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் நயவஞ்சகனின் செயலாக கூறுகிறார்கள் ஒரு செய்தியை கேட்டவுடன் அதைப் பற்றி விசாரிக்காமல் பரப்புவது. இதை இந்தப் பொய்யர்கள் தங்களுடைய தொழிலாகவே செய்துவருகின்றனர். இதற்கு ஆதாரமாக இவர் வெளியிட்டிருக்கும் படத்தைப் பாருங்கள். அஹ்மதியா ஜமாஅத்திற்கெதிராக மக்களை தூண்டுவதுதான் இவர்களின் முக்கிய பணியாகும். இந்தப் பொய்யர்கள் alhafeez.org என்ற இணைய தளத்திலிருந்து இதை திருடி வெளியிட்டிருக்கிறார்கள். அஹ்மதியா ஜமாஅத்தின் சார்பாக alislam.org என்ற இணைய தளத்தில் இதற்க்கு விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Abdul Hafeez also accuses the Ahmadiyya Muslim Community of altering Islamic fundamentals and the first allegation he makes is in relation to the Islamic credo, the Kalimah:
    Laa 'ilaaha 'il-lal-laah Muhammadur-Rasuu-lullaah', i.e., There is none worthy of worship but God, and Muhammad is His Messenger.
He asserts that Ahmadi Muslims have changed the Kalimah1 by substituting the name of the Holy Prophet of Islam, Hadhrat Muhammadsa with that of Hadhrat Ahmadas, the Founder of the Ahmadiyya Muslim Community.2 Hence he alleges that, God forbid:
    'The kalimah of Qadianis is There is no God but Allah and Ahmad is His messenger. Note: Ahmad has been substituted for Muhammad. The illustrated booklet AFRIKA SPEAKS issued on the occasion of the tour of Africa by Mirza Nasir Ahmad Qadiani contains a photograph of Ahmadiyya central mosque, Nigeria, which has this Kalima written on it.'3




The author of Two in One also includes an alleged photo of the mosque at Ijebuode in Nigeria on which this altered Kalimah is stated by him to have been written.
Now, any intelligent man who studies this photograph with honesty would agree that the disputed word in the context of this Kalimah is Muhammadsa and not Ahmadas. It is an established fact that Arabic calligraphy has adopted numerous forms throughout the length and breadth of the Islamic world and the Islamic credo at the entrance of the Ahmadiyya Central Mosque at Ijebuode, Nigeria has been written in a traditional style of calligraphy adopted by the people of the local area which requires the first alphabet mim, the equivalent of the alphabet to be lengthened. This system of lengthening alphabets is a perfectly normal practice in the system of Arabic calligraphy adopted by Muslims of this region, as for instance, one also observes the taller than normal lines to teeth of the alphabet sn in the letter Rasul.
In this particular instance, the first alphabet mim or has thus been first lengthened upwards and then brought down to join the second alphabet ha or to make and when these two are joined to the third and fourth alphabets  mim and dal, it reads , i.e., Muhammadsa.
A honest person with even a meager knowledge of Arabic writing would never express an opinion that the disputed word in the above credo does not represent Muhammadsa on account of the fact that in Ahmad, the first two alphabets  Alif or and ha or are not joined together but stand separately and hence, the name Ahmad is written thus . This is evident from Abdul Hafeez's own book where he states that the Kalimah of the Ahmadi Muslims is, God forbid:




PHOTOCOPY OF ALLEGED KALIMAH OF AHMADI MUSLIMS WRITTEN IN ARABIC BY ABDUL HAFEEZ. VIDE. TWO IN ONE, P.22
One would observe that in this Arabic version of the alleged Kalimah of Ahmadi Muslims, the first alphabet of the name Ahmad, i.e.,  Alif is separated from the second alphabet, ha. Now, if the first two alphabets, i.e., mim and ha in the picture of the Kalimah written on the Ahmadiyya Central Mosque at Ijebuode, Nigeria were to be separated and, for the sake of an argument, it was accepted that the first alphabet in the picture is not  mim for Muhammad but  Alif for Ahmad, then the word would read  i.e., Al Hamd and not Ahmad. This credo would then, God forbid, read:




SLIGHTLY ENLARGED COPY OF THE PICTURE IN ABDUL HAFEEZ'S PUBLICATION TWO IN ONE, P.23 WITH THE FIRST TWO ALPHABETS OF THE DISPUTED WORDS SEPARATED

In English Transliteration, this would read as, God forbid: Laa 'ilaaha 'il-lal-laah al Hamd-Rasuu-lullaah. A Kalimah of this nature would not make any sense at all since the Arabic word at Hamd means all praise and Hamd, praise of God.
Other evidence contained within this photograph establishes that the name here is Muhammad and not Ahmad, as for instance, the placing of the diacritical marks and also the existence of above min of Muhammad. If the name in the above photograph was Ahmad, then this particular diacritical mark would have been absent because it is not used in writing Ahmad. It is, therefore, thoroughly dishonest of Abdul Hafeez to attempt to manipulate this perfectly Islamic credo written on the entrance of the Ahmadiyya Muslim mosque in question to allege that it reads.
If Ahmadi Muslims had changed their Kalimah and substituted Ahmad for Muhammad, then they would not have the Kalimah with Muhammad written on their mosques throughout the world. Nor would the Pakistan Government have to employ its police to erase the Kalimah ,with Muhammad an integral part of it, from the fascia of numerous Ahmadiyya Muslim mosques in Pakistan in the wake of Ordinance XX of 1984 after Ahmadi Muslims had refused to erase it with their own hands. An evidence of one such desecration of the Islamic Kalimah by the Pakistan Police under instructions of Zia ul Haq's junta is presented below.




A PAKISTANI POLICE CONSTABLE ERASING THE NAME OF HADHRAT MUHAMMADsa FROM THE KALIMAH ON THE FASCIA OF THE AHMADIYYA MOSQUE AT SIR SHAMSHEER ROAD, FAISALABAD IN PAKISTAN
The fact that Ahmadi Muslims have never ever recited any other Kalimah except 'Laa 'ilaaha 'il-lal-laah Muhammadur-Rasuulullaah' is also evident from the number of cases registered against them in Pakistan, the charge sheet of every one of which specifies the alleged offense as recitation of or wearing the badge of the Kalimah 'Laa 'ilaahaa 'il-lal-laah Muhammadur-Rasuulullaah.' If the Kalimah of the Ahmadiyya Muslim Community had, God forbid, substituted Muhammad with Ahmad then there would be absolutely no reason for these Ahmadi Muslims to be charged under Ordinance XX of 1984 enacted by the military regime of the Zia ul Haq. Nor any reason for them to be punished under Amendment of the Pakistan Penal Code [Act XLV of 1860], Additions of New Section 298C. One states that because the Ordinance requires that any member of the Ahmadiyya Muslim Community
    'who, directly or indirectly, poses himself as a Muslim, or calls, or refers to his faith as Islam' and who 'by words, either spoken or written, or by visible representation, or any manner whatsoever outrages the religious feelings of Muslims, shall be punished.'
There would, however, be absolutely no reason for these Muslims to feel outraged if Ahmadi Muslims so charged in Pakistan did not recite the Kalimah of which 'Muhammadur-Rasuu-lullaah' is an integral part since in reciting any other Kalimah except that of 'Muhammadur-Rasuu-lullaah,' they cannot be deemed to pose as Muslims.
In view of these facts which are a part of Pakistani history, one would ask Abdul Hafeez as to why should Ahmadi Muslims substitute their Kalimah and demonstrate it outside their mosque in Nigeria where the government does not penalize it for its beliefs and yet, in a country like Pakistan where they are threatened with severe penalization, they insist on proclaiming the Islamic Kalimah to which the government takes exception? The Kalimah written at the Ahmadiyya Central Mosque, Ijebuode in Nigeria is positively 'Laa 'ilaaha 'il-lal-laah Muhammadur-Rasuu-lullaah.' and irrespective of how Abdul Hafeez proposes to beguile his readers into believing otherwise, the fact will remain that Ahmadi Muslims know and recite the only Kalimah taught to them by Hadhrat Muhammadsa which is: 'Laa 'ilaaha 'il-lal-laah Muhammadur-Rasuu-lullaah.' Any reasonable man who considers this false charge against them to the effect that they have substituted the name of Hadhrat Muhammadsa with that of Hadhrat Ahmadas, would - in the light of the persecution being suffered by them in Pakistan for reciting and wearing the Islamic Kalimah badges - seriously think about the wisdom of them publicizing such a substituted Kalimah in a country where they command extraordinary respect as Muslims of the first order. In fact, people like Abdul Hafeez have often demanded that 'Ahmadis stop calling themselves Muslims and others would begin to be tolerant towards them.'5 In view of such offers of tolerance in Pakistan, if Ahmadi Muslims can, as falsely alleged, publicize any other Kalimah other than 'Laa 'ilaaha 'il-lal-laah Muhammadur-Rasuulullaah' in a country where they are not persecuted for reciting their credo of faith, then what possible reluctance could they have in not declaring the same in Pakistan and rid themselves of the severe hardship to which they are being subjected?
The irony of this entire controversy is that while Ahmadi Muslims have, do and will continue to recite the Kalimat: 'Laa 'ilaaha 'il-lal-laah Muhammadur-Rasuu-lullaah,' there exists ample evidence within Islamic literature to suggest that many a Muslim saints have substituted the name of Hadhrat Muhammadsa with that of other saints of Islam in the Kalimah. For instance, it is reported that such a Kalimah was pronounced with the name of Hadhrat Abu Bakr Shiblirh which read:
    'Laa 'ilaaha 'il-lal-laah Shibli-Rasuu-lullaah,' i.e., 'There is no god but Allah, and Shibli is His Messenger.'6
A Kalimah with the name of Hadhrat Muhammadsa substituted with that of Hadhrat Mu’in ud Din Chishtirh has also been pronounced to read as:
    'Laa 'ilaaha 'il-lal-laah Chishti-Rasuu-lullaah,' i.e., 'There is no god but Allah, and Chishti is His Messenger.'7
This Kalimah has been recorded in a different manner in another instance where it has been substituted to read:
    'Laa 'ilaaha 'il-lal-laah Mu'in ud Din-Rasuu-lullaah' i.e., 'There is no god but Allah, and Mu'in ud Din is His Messenger. '8
It is also recorded that once a man came to enter into the discipleship of Hadhrat Khawaja Mu'in ud Din Chishtira and Hadhrat Khawaja Ajmerira asked him to recite the Kalimah but when the man recited the Islamic Kalimat:
    'The Khawaja said to him: Say it like this, There is no god but Allah and Chishti is the Messenger of Allah. The man did so, and the Khawaja accepted the pledge from him and invested him with the robe of honor.'9
Such substitution has also been made in relation to Hadhrat Khawaja Habib Ullah Attarra who instructed a disciple:
    'Lengthen your saying of Ia ilaha, and efface the thought of all others, other than God from the heart. After that, ill-Allah should be stressed, and you should consider me the messenger of Allah.'10
Abdul Hafeez's own spiritual predecessor Maulvi Ashraf Ali Thanvi of the Deoband fame had a Kalimah concocted in his name by one of his disciples which read:
    'Laa 'ilaaha 'il-lal-laah Ashraf Al-Rasuu-lullaah,' i.e., There is no go but Allah, and Ashraf Ali is His Messenger.'11
Similarly, an Indian saint Sheikh Sadiq Gangohi told a disciple to pronounce his name in the Kalimah as a messenger of Allah.
He commanded his disciple to say:
    'There is no go but Allah and Sadiq is the messenger of Allah.'12
One would now leave it to Abdul Hafeez to either deny that any such Kalimah with the names of Hadhrat Abu Bakr Shiblirh; Hadhrat Mu'in ud Din Chishtirh and Hadhrat Khawaja Habib Ullah Attarra as well as the Indian saint Sheikh Sadiq Gangohi and the Deoband leader Maulvi Ashraf Ali Thanvi exist in literature published by the non Ahmadiyya Muslim publication houses or else pass his judgement on the people who substituted the name of Hadhrat Muhammadsa in these versions of their Kalimah.
Finally, the author of Two in One begs a question of the Ahmadi Muslims as to whether they recite Ahmad instead of Muhammad in the Kalimah.13 If, as it behove a Muslim, he is prepared to accept the sworn statement of every Ahmadi Muslim, then one can assure him that the official Kalimah of the Ahmadiyya Muslim Community is:
    'Laa 'ilaaha 'il-lal-laah Muhammadur-Rasuu-lullaah.'
Therefore, there is absolutely no reason for Ahmadi Muslims to recite Ahmad instead of Muhammad in their Kalimah. They have never, in their entire history, recited Ahmad instead of Muhammad in the Kalimah nor do they now recite Ahmad instead of Muhammad and Inshallah, they shall never recite Ahmad instead of Muhammad in the Kalimah. It is now up to Abdul Hafeez to believe what he chooses to believe. But if he rather not accept this assurance as a statement of truth, then one suggest that he stop taking exception to the appellation of the title of a disbeliever and an enemy being applied to him.




REFERENCE

  1. Shah, Syed Abdul Hafeez. Two in One, p.5
  2. Ibid., p.22
  3. Ibid.
  4. Ibid., 23
  5. Shah, Syed Abdul Hafeez. Two in One, p.89
  6. Hasan, Maulana Shah Gul, Tadhkira Ghausiyya, p.315
  7. Attar, [Hadhrat] Farid ud Din, Fawa’id e Faridiyya, p.83
  8. Haft Aktalab, p.167. vide. Kitab e Mahfooz, p.22
  9. vide. Fawa'id as Salikeen, p.18
  10. Attar, [Hadhrat] Khawaja Habib Ullah. vide. Masnavi Bahr al Irfan, vol.1, p.179
  11. Al Imdad, Safar, 1336 AH, circa. 1918, p.35
  12. Gangohi, Shaikh Sadiq. vide. Al Takashaf an Mahmat al Tasawwuf, p.594
  13. Shah, Syed Abdul Hafeez. Two in One, p.36
Read more »