அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Showing posts with label ஈஸா நபி. Show all posts
Showing posts with label ஈஸா நபி. Show all posts

Aug 1, 2014

மவ்லான உபைதுல்லாஹ் சிந்தி அவர்களின் பார்வையில் ஈஸா (அலை) அவர்களின் மரணம்


உபைதுல்லாஹ் சிந்தி இவர் சியால்கோட்டில் உப்பல் கத்ரி என்ற குடும்பத்தில் 1872 மார்ச் 10 இல் பிறந்தவர். இவர் மாற்று மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறியவர். தாருல் உலூம் தேவ்பந்த் மத்ராஸாவில் படித்து இஸ்லாமிய கல்வியை பயின்று பிராச்சாரகராக மாறியவர். இவர் 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி அன்று காலமானார். இவர் தேவ்பந்த் பிரிவில் பிரசித்து பெற்றவர். இவர் குர்ஆனுக்கு விளக்கம் எழுதியவர். இவர் எழுதிய தஃப்சீரின் பெயர் "இல்ஹாமூர் ரஹ்மான் ஃபி தஃப்சீருல் குர்ஆன்" என்பதாகும். இந்த தஃப்சீரில் முஸ்லிம்கள் ஈஸா அலை அவர்கள் உயிரோடு இருக்கிறார் என்று வைத்துள்ள கொள்கையானது பொய்யானது இது யூதர்களிடமிருந்து வந்த கொள்கை, கட்டுக் கதை ஆகும் என்று கூறியுள்ளார். அது மட்டுமல்ல ஈஸா அலை உயிரோடு உள்ளார் என்பதற்கு குர்ஆனில் எந்த வசனமும் இல்லை என்பதையும் ஆணித்தரமாக கூறியுள்ளார். அவர்கள் இது சம்பந்தமாக கூறியுள்ள விஷயத்தை நாம் கோடிட்டு காட்டியுள்ளோம். அதன் பொருள்: 

"அதாவது "முமீதுக்க" நான் உன்னை மரணம் அடைய செய்வேன். மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருக்கக்கூடிய ஈஸா உயிரோடு இருக்கிறார் என்ற கொள்கையானது யூதர்களின் கட்டுக்கதையாகும். மேலும் சாபியின் சுய கருத்தைக் கொண்ட கதையாகும். முஸ்லிம்களில் உஸ்மான் (ரலி) காலத்தில் நடந்த குழப்பத்திற்கு பிறகு அன்சார் பனி ஹாஷிம் அவர்கள் மூலமாக இந்த விஷயம் பரப்பட்டுள்ளது. இவர் சாபியும், யூதராகவும் இருந்தவர்.........( கோடிட்டு காட்டியதிற்கான பொருள்:)

"குர்ஆனில் ஈஸா மரணிக்கவில்லை என்பதை நிரூபிக்கக்கூடிய எந்த வசனமும் இல்லை"

மூல ஆதாரத்தை மேலே பார்க்கவும் 
Read more »

Jul 25, 2014

அந்நஜாத்தின் புரோகிதப் புரட்டு. - 2


இறை தூதர்களில் ஒருவரான ஹஸ்ரத் ஈசா நபி (அலை) அவர்களை அந்-நஜாத் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் ஓய்வு பெற்ற ஒரு மாவட்ட ஆட்சியருக்கு ஒப்பிட்டு (நஜாத் மே 2011 பக்கம் 30) எழுதிய அவலத்தை கண்டித்து அப்துல் ஹமீது காதிர் என்பவர் எழுதிய விமர்சனத்தை அந்நஜாத் ஆகஸ்டு 2011 பக்கம் 20 இல் படித்திருப்பீர்கள். 

வழிகேடர்களின் கொள்கை என திருக்குர்ஆன் வருணித்துக் கூறும் இறுதி நபிக் கொள்கையை நிரூபித்துக் காட்ட திராணியற்ற நிலையில், அந்தப் புரோகிதக் கொள்கையை (40:35) நியாயப்படுத்துவதற்காக, வருகின்ற ஈஸா நபியும் நபிப்பதவியை இழந்து விட்டுதான் வந்து நிற்பார் என்று நாக்கூசாமல் கூறுகின்ற நஜாத் பிரிவினரின் கொள்கை எவ்வளவு வழி கேடானது என்பதை முஸ்லிம்களில் பலர் புரிந்து கொண்டே வருகின்றனர் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். மௌலவி புரோகிதர்களைப் புறக்கணிக்காதவரை முஸ்லிம்களுக்கு எழுச்சியில்லை என மார்தட்டிப் பேசும் நஜாத் பிரிவினரும் ஈஸா நபி (அலை) அவர்கள் விஷயத்தில் மௌலவி புரோகிதர்களைத் தான் பின் பற்றுகின்றார்கள் என்பதை பெரும்பான்மையான முஸ்லிம்கள் தற்போது உணர்ந்து வருகின்றனர். எனவே வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஆகவும், மஹ்தி ஆகவும் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் கூற்று நிறைவேறும் நாள் நெருங்கிவிட்டது. அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

“இன்றிலிருந்து 300 ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்னாலேயே ஈஸா நபியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்களாகட்டும், கிறிஸ்தவர்களாகட்டும் அவர்கள் தமது இந்தப் பொய்யான கொள்கையை கைவிட்டு விடுவார்கள்.” (ரூஹானி கஸாயீன் 20 தொகுதி பக்கம் 67) 

முஸ்லிம்களில் – அதுவும் அபூ அப்தில்லாஹ்வின் ஒப்புதல் வாக்கு மூலப்படி ஒரு காலத்தில் அந்நஜாத் பிரிவில் ஒருத்தராக இருந்த ஒருவராகிய ( நஜாத் ஆகஸ்டு 2011 பக்கம் 21 பார்க்க) அப்துல் ஹமீது காதிர் போன்றோரும். ‘இறை தூதர் ஈஸா நபி (அலை) உயிருடன் உயர்த்தப்படவில்லை: யுக முடிவில் அவர் மீண்டும் இவ்வுலகிற்கு வரமாட்டார். அதற்க்கு குர்ஆன் ஆதாரம் இல்லை..... கிறிஸ்தவர்கள் ஜீஸசை கடவுள் என உயத்துதவற்கு இந்த அபத்தமான கதையை சந்தைப் படுத்தினார்கள் (பார்க்க அந்நஜாத் ஆகஸ்டு 11 பக்கம் 20) என்ற அளவிற்கு புரிந்து கொண்டார்கள் என்றால் இது ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் அன்று சொன்ன வார்த்தை நிறைவேறிவிட்டது என்பதையே நிரூபித்துக் காட்டி விட்டது!

அது மட்டுமல்லாது, அப்துல் ஹமீது காதிர் என்பவர், இஸ்லாத்தில் மிக அதிகமாக போற்றத்தக்க இறை தூதர்களில் ஒருவரான ஈஸா நபி (அலை) அவர்களை, அபூ அப்தில்லாஹ் ஓய்வு பெற்ற ஒரு மாவட்ட ஆட்சியருக்கு ஒப்பிட்டது (பார்க்க அந்நஜாத் மே 2011 பக்கம் 30) அவரது பகுத்தறிவில்லாத சிந்தனைக்கு இன்னுமொரு ஆதாரமாகும் எனவும் அந்நஜாத்தில் விமர்சித்து எழுதியிருப்பது அபூ அப்தில்லாஹ் பாணியில் சொல்லப்போனால், நெற்றிப் பொட்டில் ஓங்கி அறைந்துவிட்டது போல் இருக்கிறதே என்பதையும் நடுநிலையில் சிந்திப்பவர்கள் உணர்ந்துகொண்டனர். அல்ஹ்மதுலில்லாஹ். 

இதற்குப் பதிலளிக்க திராணியற்ற அபூ அப்தில்லாஹ், தமது சுய விளக்கத்தில் ஒரு காலத்தில் ஒரு மாவட்டத்திற்கு கலெக்டர் ஆகப் பதவி வகித்தவர், ஓய்வு பெற்ற பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் அம்மாவட்டத்திற்கு வரும் போது கலெக்டர் என்று சொல்லலாம் எனச் சப்பைக் கட்டு கூறியிருக்கிறார். (அந்நஜாத் ஆகஸ்டு 2011 பக்கம் 32) 

பிற்காலத்தில் தோன்றும் ஈசா (அலை) அவர்களைப் பற்றி ஈசா நபியுல்லாஹ் (அல்லாஹ்வின் நபியாகிய ஈசா) என்று ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் நான்கு முறை கூறியதாக சஹீஹ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளதை நாம் எடுத்து வைத்திருக்கிறோம். 

ஆனால் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் இந்த பத்வாவை (மார்க்க தீர்ப்பை) ஏற்றுக் கொள்வதற்கு அபூ அப்தில்லாஹ் தயாரில்லை. மாறாக, அந்தப் பதவி ஒரு ஓய்வு பெற்ற முன்னாள் பதவியைப் போன்றதுதான் என்று ஒரு சுய விளக்கத்தைக் கூறினார். ஹதீஸில் இல்லாத இந்தச் சொந்தக் கைச் சரக்கை அபூ அப்தில்லாஹ் மற்றும் அவரை சார்ந்தோர் கைவிடாத வரை அவர்களும் புரோகித மௌலவிகளைச் சேர்ந்தவராகவே இருப்பார். இந்த வகையில் ‘மௌலவி புரோகிதர்கள் சட்ட விரோதமாக கொல்லைப் புற இடுக்கு வழியாக திருட்டுத்தனமாக புகுந்து கொண்ட திருடனினும் கேடு கெட்ட திருடர்கள்’ (பார்க்க: அந்நஜாத் ஆகஸ்டு 2011 பக்கம் 30) என்று கடுமையாக விமர்சித்து எழுதும் அதே கூட்டத்தில்தான் இவர்களும் இருக்கின்றனர் என்பதை மக்கள் புரிந்து கொள்ளும் காலம் நெருங்கிவிட்டது. 

‘சுய கருத்தை, சுய விளக்கத்தை நாம் கொடுத்தால், அது கால் காசும் பெறாது: அதை அப்பட்டமான குப்பை தொட்டியில் எறியவேண்டியதுதான். (அந்நஜாத் ஆகஸ்டு 2011 பக்கம் 29 பார்க்க) அன்று அபூ அப்தில்லாஹ்வின் கூற்றுப்படியே முன்னால் நபி, ரிடையர்டு நபி போன்ற சுயவிளக்கத்தை குப்பைத் தொட்டியில் எறிவதுதான் ஹஸ்ரத் காத்தமுன்னபியீன் (ஸல்) அவர்கள் மீது பற்று கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டிய வேலையாகும் என்பதை நஜாத் பிரிவினர்களுக்கு நாம் நினைவூட்டிக் கொள்கிறோம். 

அடுத்து தவப்பீ என்ற சொல் திருக்குர்ஆனில் ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களைப் பற்றி இரண்டு இடங்களிலும் (3:56, 5:118) இவை அல்லாத இடங்களிலும் வந்திருப்பதையும் அதில் எந்தவோர் இடத்திலும் உடலோடு தூக்குதல் என்ற பொருள் இருப்பதாக நிரூபிக்கவே முடியாது என்பதையும் நாம் ஜூன் 2011 இல் விளக்கியிருந்தோம். இதே சொல் நபிமார்களில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்காக 3 இடங்களில் (10:47, 13:41, 40:78) ஹஸ்ரத் யூசுப் நபி (அலை) அவர்களுக்காக ஓரிடத்திலும் (12:102) அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதையும் அங்கெல்லாம் எங்கேயுமே உடலோடு உயர்த்துதல் என்ற பொருள் வரவே இல்லை; அந்த இடங்களிலெல்லாம் நஜாத் பிரிவினர்கூட உடலுடன் உயர்த்துதல் என்ற பொருளைத் தரவில்லை. நபி மொழிகளிலும் தவப்பீ என்ற இந்தச் சொல் உடலுடன் உயர்த்துதல் என்ற நஜாத் பிரிவின் பொருளில் எங்கேயும் வரவில்லை என்பது மட்டுமல்லாது, நாம் கொடுக்கின்ற பொருளாகிய மரணத்தைக் கொடுத்தல் என்ற பொருளில்தான் வந்துள்ளது என்பதையும் நாம் எடுத்து வைத்திருந்தோம். 

3:56 இல் வந்துள்ள முதவப்பீக்க என்பதற்கு முமீத்துக (உமக்கு மௌத்தைத் தருவேன்) என்ற பொருளையே ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கொடுத்திருப்பதையும் (புகாரி தமிழாக்கம் பாகம் 5 பக்கம் 273 காண்க) ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களும் தவப்பைத்தனி (5:117) என்பதற்கு நீ எனக்கு மரணத்தைத் தந்தபோது என்ற பொருளிலேயே பயன்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். (புகாரி, கிதாபுத் தப்ஸீர் தப்சீரில் 5:118 காண்க) நாம் விளக்கி எழுதியிருந்தோம். அவையெல்லாம் நஜாத் பிரிவினரின் நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் உரைத்ததனால்தான் அவற்றிக்கு மறுப்பு ஏதும் எழுதத் துணிவில்லாது போயிற்று!

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களும், ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கொடுத்திருக்கும் பொருளை எந்த முஸ்லிமாலும் மறுத்துக் கூற முடியாது. அதிலும் நஜாத் பிரிவினர் மறுத்துக் கூறினால். அல்ஹதீஸ் உங்களுக்கு விளங்காது; நாங்களே விளக்குகிறோம் என்று கூறும் மௌலவிகள் நபி (ஸல்) அவர்களை விட நாங்களே விளக்கும் ஆற்றல் மிக்கவர்கள் என அகந்தை பேசுபவர்களே!’ என அந்நஜாத் எழுதிவரும் குற்றச்சாட்டின் கீழ், தாமே வந்துவிடுவார். 

தவப்பா என்பதற்கு மரணிக்கச் செய்தல் என காதியானிகள் பொருள் கொடுப்பது தவறானது என்று அபூ அப்தில்லாஹ் குறிப்பிட்டுள்ளார் என்றால் எவ்வளவு பேதமைத்தனமானது! நம் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியில் இது காதியானிகள் கொடுத்த பொருளா? அல்லது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கொடுத்த பொருளா என்பதைக் கூட பிரித்தறியும் பக்குவத்தை இழந்துவிட்டாரா அபூ அப்தில்லாஹ்? கபூரூர் ரஹீமாகிய அல்லாஹ்தான் இவரை மன்னிக்க வேண்டும்!

உண்மையைத் தேடுபவர்களுக்கு நாம் மேலும் பல சான்றுகளைத் தருகிறோம்: 

தவப்பீ என்ற சொல் பொதுவான சொல் வழக்கிலும் மரணத்தைக் கொடுத்தல் என்ற பொருளிலேயே பயன் படுத்தப்படுகிறது. உதாரணமாக, ஜனாஸா துஆவில், ‘வமன் தவப்பைத்தஹு மின்ன பதவப்பாஹு அலல் ஈமான்’ (எங்களில் எவருக்கு நீ மரணத்தைக் கொடுக்கின்றாயோ அவரை நீ ஈமானில் மரணிக்கச் செய்வாயாக) 

ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்; பலம்மா தவப்பிய ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். (பொருள்: ஹஸ்ரத் ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் மரணமடைந்த போது....... (முஹ்தா இமாம் மாலிக் தொகுதி 1 பக்கம் 121) 

ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் கேட்டார்கள்; யாபுனய்யத்து அய்யு யவ்மின் துவப்பியா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (பொருள்: என் அருமை மகளே! ஹஸ்ரத் ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் எந்த நாளில் மரணித்தார்கள்? (முஸ்னத் அஹ்மது பின் ஹம்பல் தொழுதி 6 பக்கம் 118) 

அல்லாமா ஸம்ஹஷ்ரீ கூறுகிறார்கள்: முதவப்பீக என்பதன் பொருள், இயற்கை மரணத்தை தருவேன் என்பதாகும்.” ( தப்ஸீர் கஷ்ஷாப் தொகுதி 1 பக்கம் 306) 

அல்லதீன யதவப்பாஹும் அய்யமூதூன வ யுக் பழு அர்வாஹுஹும். பொருள்: உங்களில் தவப்பா ஆகின்றவர்கள் – அதாவது மரணிக்கின்றவர்கள், அவர்களின் ரூஹ் கைப்பற்றப்படுகின்றது. (ரூஹுல் பயான் தொகுதி 1 பக்கம் 248) 

அல்லாஹ் எழுவாயாகவும் உயிருள்ள ஒன்று செயப்படுபொருளாகவும் இருக்கின்றபோது தவப்பி என்ற சொல் பயனிலையாக வந்தால் அதற்கு ரூஹை கைப்பற்றுதல் என்ற பொருளை தவிர உடலைக் கைப்பற்றுதல் என்றோ ஒரு போதும் பொருள் வராது. அவ்வாறு திருக்குர்ஆனிலிருந்தோ ஹதீஸிலிருந்தோ எந்தச் சான்றையும் காட்ட இயலாது என்ற சவாலை மீண்டும் நாம் நினைவு படுத்துகிறோம். 

வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் மஹ்தியாகத் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் இன்னும் அழுத்தமாக இவ்வாறு கூறுகிறார்கள்: 

“ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நபித்தோழர்களும், ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களும் தவப்பி என்ற இந்த சொல்லை உயிருள்ள ஒன்றிக்காக பயன்படுத்தும் போது எந்தெந்த பொருள்களில் பயன்படுத்தி வந்தனர்? இந்தச் சொல் அந்த நேரத்தில் அன்றாட பழக்க வழக்கங்களில் பல பொருள்களில் பயன்படுத்தப்பட்டு வந்ததா? அல்லது ஆன்மாவை கைப்பற்றுதல், மரணம் என்ற ஒரே பொருளில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்ததா என்பதை தெரிந்துகொள்வதற்காக இந்த எளியவன் நபிமொழிகளின் பக்கம் திரும்பினேன். இந்த ஆய்வுக்காக எனக்கு அதிகமாக உழைக்க வேண்டியது ஏற்பட்டது. சஹீஹ் புகாரி, சஹீஹ் முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா, அபூதாவூது, நஸாயீ, தாரமீ, முக்தா, ஷரகுஹுல் ஸுன்னா ஆகிய எல்லா ஹதீஸ் நூல்களையும் புரட்டிப் பார்த்தபோது எனக்கு தெரிய வந்தது என்னவென்றால், மிஷ்காத்தை சேர்த்து இந்த எல்லா ஹதீஸ் நூல்களிலும் 346 தடவை பல்வேறு இடங்களில் தவப்பி என்ற இந்தச் சொல் வந்துள்ளது. நான் கணக்கிட்டுப் பார்த்ததில் சில தவப்பி என்ற சொற்கள் விடுபட்டும் இருக்கலாம். ஆயினும் படிப்பதிலும், கண்ணில் படுவதிலும் என ஒரு சொல்லும் வெளியில் இல்லை. மேலும் தவப்பி என்ற அந்த சொற்கள் எந்த அளவுக்கு இந்த (ஹதீஸ்) நூல்களில் வந்துள்ளனவோ அவை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து வெளிப்பட்டவையாக இருந்தாலும் சரி, அல்லது எந்தவொரு நபித்தோழரின் வாயிலிருந்து வெளிப்பட்டவையாக இருந்தாலும் சரி அந்த எல்லா இடங்களிலும் அந்த சொற்கள் மௌத் (மரணம்) மற்றும் ரூஹைக் கைப்பற்றுதல் என்ற பொருளைத் தவிர வேறு எந்த பொருளிலும் வரவில்லை.......எனவே வழிவழியாகக் கையாளப்பட்டு வரும் இதனை மறுக்கின்றவர், மரணம் மற்றும் ரூஹைக் கைப்பற்றுதல் என்ற பொருள் அல்லாத வேறு ஒரு பொருளில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து வெளிவந்துள்ளதாக நிரூபித்துக் காட்டுவது அவர் மீது பொறுப்பு ஆகும்.” (இஸாலேயே அவ்ஹாம் ரூஹானி கஸாயின் தொகுதி 3 பக்கம் 584) 

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் இந்தச் சவாலை இன்று வரை எந்த அல்லாமாவும், முப்தியும், மௌலவியும் நிரூபித்துக் காட்ட முன் வரவில்லை. மழைக்காக மத்ரஸாவையும் நாம் நெருங்கியதில்லைதான் என ஒப்புதல்வாக்குமூலம் கொடுத்த அபூ அப்தில்லாஹ்வாலும் இந்த சவாலை ஏற்க இயலவில்லை என்பதை புரிந்து கொண்டனர். 

Read more »

Jul 22, 2014

இயேசு வந்துவிட்டார் -1


அசன் அபூபக்கர்

இதோ வருகிறார்; அதோ வருகிறார் என்று இயேசுவின் அன்பர்கள் இயேசுவின் இரண்டாம் வருகைக்குத் தொடர்ந்து கட்டியம் கூறிக் கொண்டிருப்பதை நாம் நன்கறிவோம். இன்று நேற்றல்ல; பல காலமாகவே இயேசு கிறிஸ்து வானத்திலிருந்து இறங்கி வருவதை காண கிறிஸ்தவ உலகு மிகுந்த ஆர்வத்தோடும் ஆரவாரத்தோடும் காத்துக்கிடப்பது நமக்குத் தெரியும். 

இதே போன்றுதான் இயேசுவின் காலத்தில் யூத சமுதாயம், வானத்திலிருந்து இறங்கி வருகின்ற ஒருவருக்காக ஆவலோடு காத்திருந்தது: அவர்தான் மெசியா, வானத்திலிருந்து இறங்கி வந்து. பூமியில் தோன்றும் இந்த மெசியாதான் தங்களை ரோமானிய அடிமைத் தளையிலிருந்து விடுவிப்பார் என்றும், தங்களுக்கு ஒரு சுதந்திர நல்வாழ்வை வழங்குவார் என்றும் அவர்கள், காலங்காலமாக நம்பி வந்தனர். மேசிய என்ற சொல்லின் கிரேக்க மொழி வடிவம்தான் கிறிஸ்து ஆகும். ஆகவே அன்றைய யூத சமுதாய மக்கள் கிறிஸ்து என்ற ஒருவர் வானத்திலிருந்து இறங்கி வரக் காத்திருந்தார்கள் எனச் சுருங்கக் கூறலாம். 

இப்போது நாம் அவர்களின் மற்றொரு நம்பிக்கையையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். முன்னொரு காலத்தில் எலியா தீர்க்கதரிசி என்பவர் உயிருடன் வானத்திற்கு ஏறிச் சென்றுள்ளார்கள் என்பதும் அவர் மீண்டும் அதே உடலோடும் உயிரோடும் இப்பூவுலகிற்குத் திரும்பி வருவார் என்பதும் அந்த யூத மக்களின் நம்பிக்கையாகும். மேசியா என்ற கிறிஸ்து வானத்திலிருந்து இறங்கி தங்களுக்கு மத்தியில் வந்து தோன்றுவதற்கு முன்னர், ஏற்கனவே வானத்திற்கு ஏறிச் சென்றிருந்த அதே எலியா தீர்க்கதரிசி அங்கிருந்து இறங்கி வந்து மேசியாவுக்காக அவரது வழியை ஆயத்தப் படுத்துவார் என்றும் யூத கோத்திரத்தினர் நம்பி வந்தனர். 

‘எலியா வருவார்’ என்ற தமது நீண்ட கால நம்பிக்கைக்கு ஆதாரமாக அவர்கள், பைபிள் பழைய ஏற்பாட்டில் உள்ள மல்கியா என்ற புத்தகத்தையே சுட்டிக்காட்டினார்கள். மல்கியாவில் எலியா தீர்க்கதரிசியின் இரண்டாம் வருகை குறித்து இவ்வாறு கூறப்பட்டுள்ளது: 

“இதோ கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.” (மல்கியா 4:5) 

இந்த எலியா, மேசியா தோன்றுவதற்கு முன்னர் வானத்திலிருந்து உயிருடன் இப்பூமிக்கு வந்து அதாவது பாலஸ்தீனத்துக்கு வந்து மேசியாவின் வருகைக்கான பாதையை ஆயத்தப் படுத்துவார் என்றும் அக்கால யூத மக்கள் நம்பி இருந்தனர். 

எனவே இயேசு பிரான் பாலஸ்தீனத்தில் அவதரித்து யூத மக்களுக்கு மத்தியில் போதித்து வந்த வேலையில் அவரை நோக்கி, நீர் கிறிஸ்து என்பது உண்மையானால் எலியா தீர்க்கதரிசி உமக்கு முன்னர் தோன்றியிருக்க வேண்டுமே..... அவர் எங்கே? என்று அவர்கள் தமது நியாயமான உண்மையான ஐயப்பாட்டை அவர் முன் எடுத்து வைத்தனர். 

அதற்கு மறுமொழியாக இயேசு கூறிய பதில் அறிய ஆவலாக உள்ளவர்களுக்கு மத்தேயு சுவிசேஷகர் என்ன கூறியுள்ளார் என்பதை இங்கு பார்ப்போம்: 

‘நீங்கள் ஏற்றுக் கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான் கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக் கடவன்.’ (மத்தேயு 11:14-15) என்று அவர்களுக்கு மத்தியில் யோர்தான் நதிக்கரையில் ஞானஸ்நானம் வழங்கி வந்த யோவானைச் சுட்டிக் காட்டி நீங்கள் எதிர்பார்த்திருக்கும் எலியா ‘இவன்தான்’ என அடையாளம் காட்டினார். 

மேலும். ‘........... அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வர வேண்டும் என்று வேதபாரகர் சொல்கிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள், இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்படுத்துவது மெய்தான் ஆனாலும் எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்கிறேன். அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள். இவ்விதமாய் மனுஷ குமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவானைக் குறித்து தங்களுக்குச் சொன்னார் என்று சீசர்கள் அப்பொழுது அறிந்து கொண்டனர்." (மத்தேயு 17:10) என்று இயேசு பிரான் சொல்லிக் காட்டியதன் மூலம் எலியா தமக்கு ‘முந்தி வந்து’ தோன்றிவிட்டார் என்பதையும் அவர் தமக்காகச் செய்ய வேண்டிய ‘எல்லாவற்றையும்’ சீர்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதையும் அப்பாமார யூதர்களுக்கு புரிய வைத்தார். இயேசு கிறிஸ்து தமது வாயால் தந்துள்ள இந்த விளக்கத்திலிருந்து ஒரு தீர்க்கதரிசியின் மறுஅவதாரம் அல்லது அவரது இரண்டாம் வருகை என்பது அவரைப் போன்ற இன்னொருவரின் வருகைதானே தவிர அவரே மீண்டும் வருவதல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது 

மற்றொரு நிகழ்வு மூலமும் ஒரு தீர்க்கதரிசியில் இரண்டாவது வருகை என்பதன் உண்மையான பொருள் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். சகரியா தீர்க்கதரிசிக்கு யோவான் என்ற ஒரு மகன் பிறப்பான் என்னும் அறிவிப்பு தேவதூதன் மூலம் அவருக்கு அருளப்பட்டிருந்தது அந்த அருள்வாக்கிலிருந்து எலியா தீர்க்கதரிசியின் இரண்டாவது வருகை என்பது அதே எலியா தோன்றுவார் என்பதல்ல மாறாக யோவான் (ஞானஸ்நானன்) தோன்றியதால் நிறைவேறிவிட்டது என்பதை கீழ்க்கண்ட திருவசனங்கள் தெரிவிக்கின்றன.

கர்த்தருடைய தூதன் சகரியாவை நோக்கி, ‘............உன் மனைவியாகிய எலிசபத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள். அவனுக்கு யோவான் என்று பெயரிடுவாயாக........’ அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான்..........’ என்று தீக்கதரிசனம் உரைத்தான். (லூக்கா 1:13-17) அதாவது சகரிய தீர்க்கதரிசிக்கு ஒரு மகன் பிறப்பான்; அந்த மகன் எலியா தீர்க்கதரிசியின் ஆவியும் பலமும் கொண்டவனாக இயேசுவுக்கு முன்னர் தோன்றுவான் என்பதையே இத்திரு வசனம் நமக்கு எடுத்துரைக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் எலியா தீர்க்க தரிசியின் இரண்டாம் வருகை என்பது அவரைப் போன்ற வேறொருவரால் அதாவது யோவான் (ஞானஸ்நானன்) இவ்வுலகில் தோன்றியதால் நிறைவேறிவிட்டது. 

மேற்கொண்ட பைபிள் திருவசனங்களிலிருந்து ஒரு தீர்க்கதரிசியின் இரண்டாம் வருகை என்றால் அதே பழைய தீர்க்கதரிசி இரண்டாவது தோன்றமாட்டார் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம். மாறாக முன்னர் சென்ற அதே தீர்க்கதரிசியின் பண்புகலோடும் தத்துவத்தோடும் புதிதாக வேறொரு தீக்கதரிசி தோன்றுவார் என்றுமே நம் பொருள் கொள்ள வேண்டும் என்பதை மேற்சொன்ன திருவசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன. எனவே யூத மக்களுக்கு மத்தியில் ஏற்கனவே தோன்றி நற்போதனை செய்து மறைந்த இயேசு பெருமானின் இரண்டாவது வருகையும் இப்படித்தான் நிகழ வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதாவது இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்றுவிட இயேசு பிரான் மீண்டும் இரண்டாவதாக இபூமிக்கு வருவாரென்றால், அதே பழைய இயேசு வரமாட்டார்; அவரது பண்புகளோடும், தத்துவத்தோடும் அவரைப் போன்ற வேறு ஒருவர் தோன்றுவார் என்பதுதான் அதற்குப் பொருளாகும். 

இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்ற ஒருவர் அல்லது இறந்து போன ஒரு மனிதன் மீண்டும் இவ்வுலகிற்கு வரமுடியாது என்பது இயற்கைச் சட்டமாகும். அதுவே இறைவன் வகுத்த விதியுமாகும். உண்மையிலேயே கிறிஸ்துவாகிய இயேசு சிலுவையில் உயிர் துறந்துவிட்டார் என்றால் அல்லது இவ்வுலகைத் துறந்து வானத்திற்கு ஏறிச் சென்றுவிட்டார் என்றால் அவர் மீண்டும் இவ்வுலகிற்கு உயிருடன் திரும்பி வர முடியாது என்பது எவராலும் மீற முடியாத ஒரு விதியாகும். அவ்வாறாயின் இயேசு பிரான் மீண்டும் இரண்டாவது இவ்வுலகிற்கு வருவார் என்று கூறும் பைபிள் தீர்க்கதரிசனங்களின் உண்மையான பொருள்தான் என்ன? என்ற கேள்வி இங்கு எழுகின்றது. அந்தக் கேள்விக்கும் விடை இருக்கிறது. 

இவ்வுலகைத் துறந்து வானத்திற்கு சென்ற தீர்க்கதரிசி ஒருவர், உயிரோடு வானத்திற்குச் சென்ற பின்னர், மீண்டும் இவ்வுலகிற்குத் திரும்ப வருவாரென்றால் இதைக் குறித்து பைபிளின் தீர்க்கதரிசனங்கள் என்ன கூறுகின்றன? என்பதை நாம் முதலில் கண்டறிய வேண்டும். அதன் பின்னர் அத்தீர்க்கதரிசனங்கள் எந்த வேதாகமத்தில் என்ன பொருள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும். அத்துடன் இவற்றைப் போன்ற முந்தைய தீர்க்கதரிசனங்கள் எவ்வாறு நிறைவேறி உள்ளன என்பதையும் நாம் கண்டறிய வேண்டியது அவசியமாகும். இதன் மூலம் இயேசுவின் இரண்டாவது வரோகையைப் பற்றி தீர்க்கதரிசனத்தின் பொருளையும், அது எவ்வாறு நிறைவேறும் என்பதையும், பைபிள் அடிப்படையில் நாம் அறிந்து கொள்ளலாம். 

இவ்விடத்தில் நம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான மற்றொரு கருத்து உள்ளது அதாவது இயேசு பிரான் தம்மை எதிர்த்துக் கொடுமைகளுக்குள்ளாக்கிய யூதர்களை நோக்கி ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதன்படி தேவனின் இராஜ்ஜியம் கொடிய உள்ளங்கொண்ட அந்த யூத சமுதாயாத்தை விட்டு நீக்கப்பட்டு வேறொரு சமுதாய மக்களிடம் வழங்கப்படும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இறைவனின் திட்டப்படி யூத மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்த ‘தீர்க்கதரிசி’ என்ற இறையருள் (நபித்துவம்) இனி அந்த யூத கோத்திரத்தார்களிடமிருந்து பிடுங்கப்பட்டு அதற்குத் தகுதியான வேறொரு சமுதாயத்தாருக்கு வழங்கப்பட்டுவிடும். ஆகவே இயேசுவுக்குப் பிறகு யூத சமுதாயத்தில் தீர்க்கதரிசிகள் (நபிமார்கள்) தோன்றமாட்டார்கள். இதுவே இயேசு பிரான் விடுத்த எச்சரிக்கையின் நுட்பமான கருத்தாகும்.
Read more »

இந்த உம்மத்தில் ஈசா நபியின் வருகை நிகழ்ந்து விட்டது!


O.M முஸம்மில் அஹ்மது  

“ஈஸா நபியின் வருகை” எனும் தலைப்பில் மௌலவி P. ஜைனுல் ஆப்தீன் எழுதிய ஒரு கட்டுரை ஏகத்துவம் மார்ச் 2012 இதழில் வெளிவந்துள்ளது. அதில் “தஜ்ஜாலின் கொடுமை தலைவிரித்தாடும் போது ஈஸா நபியவர்கள் வானிலிருந்து இவ்வுலகிற்கு இறங்கி வருவார் என்பது பத்து அடையாளங்களில் ஒன்றாகும் என எழுதியுள்ளார். ஆனால் அதற்கு எவ்விதச் சான்றையும் அவர் எடுத்து வைக்கவில்லை. 

இதை விட வேடிக்கையானது என்னவெனில். 1994-ஆம் ஆண்டு கோவையில் P.J யுடன் விவாதம் நடத்தியபோது பிற முஸ்லிம்களைப் போன்றே அப்போது JAQH எனும் பெயரில் இயங்கிய இவர்களும் ஈஸா (அலை) அவர்கள் வானத்திலிருந்து இறங்குவதாகத்தானே நம்புகிறார்கள் என நாம் கருதி, ஈஸா (அலை) அவர்கள் வானத்திற்கே செல்லவில்லை என்ற கருத்தை எடுத்துக் கூறியபோது அதை P.J மறுத்தவாறு, வானம், வானம் என நீங்கள் கூறுகிறீர்கள் நாங்கள் அந்த வார்த்தையைக் கூறவே இல்லை என பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். 

1994-ஆம் ஆண்டு விவாதத்தில் வானம் என்ற வார்த்தையை பகிரங்கமாக மறுத்த P.J ஏகத்துவம் மார்ச் 2012 பக்கம் 53 இல் ‘ஈஸா நபி வானிலிருந்து இவ்வுலகிற்கு இறங்கி வருவார் என முரண்பட்டு எழுதியிருக்கிறார். இவ்வாறு முரண்படுவது அவரது வாடிக்கையும் அதைக் கண்டு நாம் வேடிக்கை காண்பதும் புதுமையானது ஒன்றல்ல. ஆயினும் நடுநிலையுடன் சிந்திப்பவர்களுக்கு நாம் ஒன்றை கூறிக்கொள்வோம்: ஈஸா (அலை) அவர்கள் வானத்திற்கு சென்றதாக எந்த ஒரு ஹதீஸிலும் வராதபோது, அவர் வானத்திலிருந்து இறங்குவார் என நேரடிப் பொருளில் எப்படிக் கூறுகின்றீர்கள் என நாம் ஆலிம்களிடம் வினா கொடுத்த பிறகுதான் அவர்கள் தம் அறியாமையை ஒப்புக் கொள்ளும் கட்டாயத்திற்கு உள்ளாயினர். இதில் P.J யும் அடங்குவார். எனவேதான், கோவை விவாதத்தில் கூட ஈஸா நபி வானில் உயிருடன் இருக்கிறார் என்பதை அவரால் நிரூபிக்க முடியாமற்போனது மட்டுமின்றி, ‘வானம்’ என்ற வார்த்தையை பகிரங்கமாக வாபஸ் வாங்கும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டார். 

ஆனால் இப்போது அதே P.J ஈஸா நபி வானிலிருந்து இவ்வுலகிற்கு இறங்கி வருவார் என்ற முரண்பட்ட ஒரு செய்தியை ஏகத்துவ இதழில் எவ்வித ஆதாரமுமின்றி எழுதியுள்ளார். 

எந்த ஒரு சஹீஹான ஹதீஸிலும் ஈஸா(அலை) அவர்கள் வானத்திலிருந்து இறங்கி வருவார் என வரவில்லை! ஒரு வாதத்திற்காக நேரடியாக வானத்திலிருந்து இறங்கி வருதல் என பொருள் கொள்ளமுடியாது. ஏனெனில், இறங்குதல், இறக்குதல் என்ற இதே சொல்லை இறைவன் திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் பயன்படுத்தி இருக்கிறான். அங்கே P.J உட்பட எவரும் நேரடியாக, வானிலிருந்து இறங்குதல், இறக்குதல் என்ற பொருளைக் கொடுக்கவில்லை. உதாரணமாக, 

கத் அன்ஸலல்லாஹு இலைக்கும் திக்ரன் ரஸுலன். நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு நினைவூட்டக் கூடிய இறைத்தூதரை இறக்கியுள்ளான். (65:11) 

இங்கு அல்லாஹ் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பற்றி ‘அல்லாஹ் இறக்கியுள்ளான்’ என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளான். ஆனால் அன்னார் (ஸல்) அவர்கள் வானத்திலிருந்து இறங்கி வந்தார்களா? இல்லையே! மாறாக, P.J உட்பட இந்த வசனத்திற்கு ‘அல்லாஹ்வின் வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதரை அனுப்பியுள்ளான் என்றே மொழி பெயர்த்துள்ளார். (P.J மொழியாக்கம் வசனம் 65:11 பக்கம்,826 காண்க ) 

2. வ அன்ஸல லக்கும் மினல் அன் ஆமி ஸமானியத்த அஸ்வாஜ். அவன் கால்நடைகளுள் எட்டு இணைகளை உங்களுக்கு இறக்கியுள்ளான். (39:7) இந்த வசனத்தில் அன்ஸல (இறக்கினான்) என்ற சொல் வந்தபோதிலும் கால்நடைகளை வானத்திலிருந்து இறங்கியதாக யாரும் பொருள் கொடுப்பதில்லை!

3. வ அன்ஸல்னல் ஹதீத. நாம் இரும்பை இறக்கியுள்ளோம். (57:26) 

இங்கேயும் P.J இரும்பு வானத்திலிருந்து இறங்குவதில்லை என்பதை அறிந்து ‘இரும்பையும் அருளினோம்’ என உஷாராக மொழிபெயர்த்துள்ளார். (P.J. மொழியாக்கம் பக்கம் 799 காண்க). இங்கு உஷாராக இருக்கும் அவர் இதே சொல் ஈஸா (அலை) அவர்களுக்காக வரும்போது மட்டும் நேரடிப்பொருளைத்தான் கொடுக்க வேண்டும் என கராராக இருக்கிறார்!

4. கத் அன்ஸல்னா அலைக்கும் லிபாஸன் என அல்லாஹ் கூறுகிறான். அதாவது நாம் உங்களுக்கு ஆடையை இறக்கினோம் என்பது இதன் நேரடிப் பொருளாகும். ஆனால் ஆடையை உங்களுக்கு ‘அருளினோம்’ என P.J தமிழாக்கம் செய்துள்ளார். (வசனம் 7:26 பக்கம் 242) 

ஆக, திருக்குர்ஆனில் அல்லாஹ் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் கால்நடைகளைப் பற்றியும், இரும்பைப் பற்றியும், ஆடையைப் பற்றியும் ‘இறக்கினோம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளான். அவ்வனைத்து இடங்களிலும் எல்லா முஸ்லிம்களும் அஹ்மதி முஸ்லிம்களைப் போன்றே வழங்குதல், அனுப்புதல், அருளுதல் என்ற பொருளையே கொடுத்துள்ளனர். இதில் நமக்கும் பிற முஸ்லிம்களுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அப்படியிருக்கும்போது, இதே சொல் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களுக்காக வரும்போது மட்டும் வானத்திலிருந்து இறங்குவார் என்று நேரடியான பொருளைத்தான் கொடுக்க வேண்டும் என அடம்பிடிக்கின்றனர். இதிலிருந்து இவர்கள் நுஸுல் (இறங்குதல்) என்பதன் உண்மையான பொருளைப் புரிந்து கொண்டே ஈஸா நபி விஷயத்தில் மட்டும் சொந்த கைச்சரக்கைத் திணிக்கப் பார்க்கின்றனர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். 

ஹதீஸில் ஈஸாவைப் பற்றி நஸல (இறங்குவார்) என்ற சொல் தானே வருகிறது என்ற ஐயத்திற்கு மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்களிலேயே நமக்கு தெளிவு கிடைத்துவிட்டது. எனினும் ஹதீஸிலும் இதே சொல் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கான இரு உதாரணங்களை கீழே தருகின்றோம்: 

1. அன்னன் நபிய்ய ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம நஸல தஹ்த்த ஷஜரத்தன். அதாவது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் ஒரு மரத்தடியில் இறங்கினார்கள். (கன்ஸுல் உம்மால் தொகுதி 7 பக்கம் 59) 

2. கான இஸா நஸல மன்ஸிலன் பீ ஸபரின் லம் யர்த்தஹில் ஹத்தா யுஸல்லீ பீஹீ ரக்அதைனி, அதாவது, ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் தங்கிய பிறகு இரண்டு ரக்ஆத் தொழுதுவிட்டு பயணம் மேற்கொள்வார்கள். (கன்ஸுல் உம்மால் தொகுதி 4 பக்கம் 19) 

ஹதீஸில் ஈஸாவுக்கு வந்துள்ள நுஸுல் என்ற சொல்தான் இந்த ஹதீஸுகளில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்காகவும் வந்துள்ளது. இங்கெல்லாம் முஸ்லிம்களில் எந்தப் பிரிவினரும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் வானிலிருந்து இறங்கினார்கள் எனப் பொருள் கொடுப்பதில்லை. இதே சொல் வழக்கு ஈஸா நபிக்காக வரும்போது மட்டும் அதற்கு நேரடிப் பொருள்தான் கொடுக்க ஆலிம்கள் துடிப்பதைக் காணும்போதுதான் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது அதிக நேசம் கொண்டுள்ள நாம் துடிதுடித்துப் போகிறோம். 

‘இப்னு மர்யம் உங்களிடத்தில் இறங்கும்போது’ என ஹதீஸில் வந்துள்ளதென்றால் அதே மாதிரிதான் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைப் பற்றி இறக்கினோம் என அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான். ஈசாவுக்கு நேரடிப் பொருள் கொடுக்க வேண்டும் என அடம்பிடிப்பவர்கள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கும் அதே பொருளைத் தர வேண்டும். தருவார்களா? தந்ததில்லை: தருவதுமில்லை: தரவும் மாட்டார்கள். அப்படியானால் ஈஸாவுக்கு வரும்போது மட்டும் நேரடிப் பருளைத் தர முற்படுவது நியாயமானதல்ல என்பதை ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் மீது அன்பு கொண்டவர்களால் புரிந்து கொள்வது ஒன்றும் கடினமானதல்ல. இவர்களின் இச்செயல் ‘உண்மையிலேயே இது முறையற்ற பங்கீடாகும்’ (53:23) என்ற இறை வசனத்தையே நமக்கு நினைவூட்டுகிறது!

அடுத்து, ஈஸா நபியவர்கள் இறுதிக் காலத்தில் வரும்போது இறை தூதராக வர மாட்டார். எனவும் P.J குறிப்பிட்டுள்ளார். (ஏகத்துவம் மார்ச் 2012 பக்கம் 64) 

இதுவும் அப்பட்டமான பொய்யும், இட்டுக்கட்டும் ஆகும், இறை தூதராக வர மாட்டார் எனப் பொருள்படும் ஹதீஸின் அரபிச் சொல்லை இதுவரை எந்த ஆலிமும் எடுத்துக் காட்டவில்லை. P.J க்கும் நாம் சவாலாக விடுக்கிறோம். ‘இறை தூதராக வரமாட்டார்’ என நீங்கள் குறிப்பிட்டுள்ள ஹதீஸ் எதில் இடம் பெற்றிருக்கிறது? அதன் அரபி வாசகம் என்ன? என்பதைக் காட்டத் தயாரா? இவர்களால் காட்டமுடியாது என்பதற்கு கடந்த காலமே சான்று. 

ஆனால் நடுநிலையாக சிந்திக்கும் வாசகர்களுக்கு நாம் ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்கிறோம்: இந்த ஆலிம்கள் கூறுவதற்கு நேர்மாறாக ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தோன்றவிருக்கும் ஈஸா (அலை) அவர்களைப் பற்றி, நபியுல்லாஹி ஈஸா (அல்லாஹ்வின் நபியாகிய ஈஸா) என ஒரு முறை அல்ல: நான்கு முறை குறிப்பிட்டுள்ளார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் பாகம் 4 பக்கம் 878-882 ஹதீஸ் எண்: 5629காண்க) இந்த ஹதீஸை P.J யும் ஸஹீஹானது என ஒப்புக்கொண்டவாறு தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். (ஏகத்துவம் மார்ச் 2012 பக்கம்55) 

ஆனால் அதற்கு முரண்பட்டவாறு ‘நபியாக வர மாட்டார்’ என ஏகத்துவம் பக்கம் 54 இல் எழுதியிருக்கிறார். இதிலிருந்து அவர் குழம்பிப் போயிருக்கிறார்: ஒரு நிலைப்பாட்டில் இல்லை. அல்லது தெரிந்து கொண்ட மக்களைக் குழப்ப முயற்சிக்கிறார் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம். அதே சமயத்தில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் நபியாகிய ஈஸா எனக் கூறிவிட்ட பிறகு இதில் இரண்டாம் கருத்து கொள்வதற்கோ, இரண்டாம் கருத்து கொடுப்பதற்கோ இங்கு இடமேயில்லை. 

அது மட்டுமின்றி, ஈஸா நபிக்கு அல்லாஹ் வஹி அறிவிப்பான் என்ற ஸஹீஹ் முஸ்லிமில் வருகின்ற நபிமொழியையும் P.J குறிப்பிட்டுள்ளார். (ஏகத்துவம் பக்கம் 55) 

வஹி அறிவிப்பான் என்ற அரபிச் சொல்லைத்தான் P.J ‘அல்லாஹ் செய்தி அனுப்புவான்’ என மொழிபெயர்த்துள்ளார். ஆக, இந்த நபிமொழியிலிருந்து வஹி வருவது நின்று விட்டது என்ற முஸ்லிம்களின் தவறான நம்பிக்கையும் அடிபட்டுப் போகின்றது. இந்த உம்மத்தில் தோன்றும் ஈஸாவுக்கு அல்லாஹ் வஹி அறிவிப்பான் என மேற்கண்ட ஹதீஸின் மூலம் விளங்கிக் கொள்கிறோம். 

அடுத்து, ஈஸப்னு மர்யம் முஸ்லிம் உம்மத்தில் தோன்றுவார் எனும் பொருள் பட ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் நமக்கு இவ்வாறு கூறியிருக்கிறார்கள்: 

கய்ப அன்த்தும் இஸா நஸலப்னு மர்யம் பீக்கும் வ இமாமுக்கும் மின்க்கும். அதாவது (முஸ்லிம்களே!) இப்னு மர்யம் உங்கள் மத்தியில் தோன்றும் போது உங்கள் நிலை எவ்வாறு இருக்கும்? மேலும் அவர் உங்களிலிருந்து தோன்றி உங்களுக்கு இமாமாக இருப்பார். (புகாரி பாகம் 4 பக்கம் 145 ஹதீஸ் எண்: 3449) 

இந்த நபிமொழிக்கு P.J. இவ்வாறு தவறான பொருள் கொடுக்க முனைந்துள்ளார்: 

“உங்கள் இமாம் உங்களைச் சேர்ந்தவராக இருக்கும்போது, ஈஸா நபியவர்கள் இறங்குவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஏகத்துவம் பக்கம் 54) 

இந்த நபிமொழியில் இரண்டு வாக்கியங்கள் அமைந்துள்ளன. ஒன்று கய்ப அன்த்தும் இஸா நஸலப்னு மர்யம் பீக்கும் என்பது. அடுத்து வாவு (மேலும்) வந்துள்ளது. பிறகும் இமாமுக்கும் மின்கும் என வந்துள்ளது. 

அரபி மொழியில் வாவு மூன்று வகையில் பயன்படுத்தப்படுகின்றது: 1. வாவு அத்ப் (மேலும் என்ற பொருளில்) 2. வாவு கஸ்மிய்யா (சத்தியமாக என்ற பொருளில்) 3. வாவு ஹாலிய்யா (நிலையை விளக்குவதற்கு வருவது.) 

இங்கே P.J நிலையை விளக்குவதற்காக வந்த ‘வாவு’ என தவறான பொருளைக் கொடுக்க முனைத்துள்ளார். எனவே. ஈஸா நபி வேறு; இமாம் வேறு என்று அவர் தவறாக புரிந்து வைத்துள்ளதற்கேற்ப, உங்கள் இமாம் உங்களை சார்ந்தவராக இருக்கும்போது (இருக்கும் நிலையில்) ஈஸா மேலிருந்து இறங்கி வருவார் என தவறாகப் பொருள் கொடுத்துள்ளார். அதாவது இமாம் மஹ்தி உங்கள் மத்தியில் இருக்கும்போது, ஈஸா வானிலிருந்து இறங்குவார் என்ற தவறான பொருளைக் கொடுத்துள்ளார். ஆனால் இங்கு வந்துள்ள ‘வாவு’ அத்ப் எனும் வாவாகத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி (முஸ்லிம்களே!) இப்னு மர்யம் உங்கள் மத்தியில் தோன்றும் போது உங்களின் நிலை எவ்வாறு இருக்கும்? மேலும் அவர் உங்களிலிருந்து தோன்றி உங்களுக்கு இமாமாக இருப்பார் என்றே பொருள்படும். அதாவது இந்த உம்மத்தில் தோன்றும் இப்னு மர்யமும், இமாமும் ஒருவர்தான்; இரு வேறுபட்டவர்கள் அல்ல என்பதை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தியிருக்கிறார்கள். 

இதனை நாம் அனுமானமாகக் கூறவில்லை. ஸஹீஹ் முஸ்லிமில் வரும் ஹதீஸ் நமது கருத்துக்கு வலுவூட்டுவதாக இருக்கிறது. அதில் இவ்வாறு வருகின்றது:

கய்ப அன்த்தும் இஸா நஸல பீக்குமுப்னு மர்யம் பஅம்மக்கும் மின்க்கும். பொருள்: (முஸ்லிம்களே!) உங்களுக்கு மத்தியில் ஈசப்னு மர்யம் தோன்றும் போது உங்களின் நிலை எப்படி இருக்கும்? அவர் உங்களிலிருந்து தோன்றி உங்களுக்கு இமாமத் செய்வார் என ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம் பாகம் 1 பக்கம்:185 ஹதீஸ் எண்:246) 

இங்கு நஸல (தோன்றும்போது) என்ற வினைச் சொல்லையும், அம்ம (இமாமத் செய்வார்) என்ற வினைச்சொல்லையும் ஒரே எழுவாயுடன் சேர்த்து ஹசரத் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அது ஈஸப்னு மர்யம் என்பதுதான், எனவே முஸ்லிம்களே! உங்களிலிருந்து தோன்றும் ஈஸப்னு மர்யம்தான் இமாமாக இருப்பார் என்ற கருத்து நமது சுய கருத்து அல்ல. மாறாக, இது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் நமக்கு விளக்கித் தந்த கருத்தாகும்!

இந்தக் கருத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் கீழ் வரும் நபிமொழியும் இருக்கின்றது: 

“உங்களில் எவர் உயிருடன் இருப்பாரோ அவர் ஈசப்னு மர்யமை இமாம் மஹ்தியாகவும், தீர்ப்பளிப்பவராகவும், நீதி வழங்குபவராகவும் சந்திப்பார்.” (முஸ்னத் அஹ்மதிப்னு ஹம்பல் தொகுதி 2 பக்கம் 411) 

இந்த ஹதீஸில் இன்பு மர்யம்தான் இமாம் மஹ்தி (நேர்வழி காட்டப்பட்ட மஹ்தி) ஆகவும், ஹகம் (தீர்ப்பளிப்பவர்) ஆகவும், அத்ல்(நீதி வழங்குபவர்) ஆகவும் இருப்பார் என்பதை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கி விட்டார்கள். 

ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள இதே கருத்தை தெளிவு படுத்தியவாறு வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஆகவும், இமாம் மஹ்தி ஆகவும் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் கீழ் வருமாறு கூறுகின்றார்கள்: 

“வரக் கூடிய இந்த (ஈஸா) மஸீஹ் என்பது உண்மையிலேயே முன்னர் வந்த அதே மஸீஹ் ஆகவே இருப்பார் என இமாம் முஹம்மது இஸ்மாயீல் புகாரி அவர்கள் சைகையாகக் கூட கூறவில்லை! இன்னும் சொல்லப்போனால் அவர்கள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இரண்டு ஹதீஸுகளை எடுத்து எழுதியுள்ளார்கள். அவை முதல் மஸீஹ் வேறு: இரண்டாவது மஸீஹ் வேறு எனத் தீர்ப்பளித்து விட்டன. ஏனெனில், ஒரு ஹதீஸின் கருத்து, இப்னு மர்யம் உங்களிலிருந்து தோன்றுவார் என்பதாகும். மேலும் தெளிவுபடுத்தியவாறு, ‘அவர் உங்களிலிருந்து தோன்றும் உங்களின் ஓர் இமாம் ஆக இருப்பார்’ என விளக்கிக் கூறியவாறு தெளிவு படுத்திவிட்டார்கள்........

ஆக, மர்யமின் மகன் என்ற சொல்லினால் மனதில் தோன்றுவதற்கு சாத்தியமாக இருந்த கருத்தை நீக்குவதற்காக இந்த சொற்களுக்குப் பிறகு, ‘உண்மையிலேயே மர்யமின் மகன் எனக் கருதிக் கொள்ளாதீர்கள்; பல் ஹுவ இமாமுக்கும் மின்க்கும் (மாறாக, அவர் உங்களிலிருந்து தோன்றி உங்களுக்கு இமாமாக இருப்பார்)’ என விளக்கவுரையாகக் குறிப்பிட்டுவிட்டார்கள்.” (இஸாலே அவ்ஹாம், ரூஹானி கஸாயின் தொகுதி 3பக்கம்: 124) 

தொடர்ந்து கூறுகிறார்கள்: 

“மேலும் இரண்டு ஈசாவும் வெவ்வேறானவர்கள் எனபதைத் தீர்மானிக்கும் இன்னொரு ஹதீஸ், முதல் மஸீஹின் உருவ அடையாளங்களை வேறு வகையிலும், இரண்டாம் மஸீஹின் உருவ அடையாளங்களை வேறு வகையிலும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.” (இஸாலே அவ்ஹாம் ரூஹானி கஸாயின் தொகுதி 3 பக்கம் 124) 

ஆம்! ஹதீஸில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இரு வேறுபட்ட ஈசாவைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். இதை ஆலிம்கள் மறைத்து விடுகின்றனர். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மூஸா(அலை) அவர்களின் சமுதாயத்தில் தோன்றிய ஈசா (அலை) அவர்களைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்: 

“நான் ஈஸா (அலை), மூஸா (அலை), இப்ராஹீம் (அலை) ஆகியோரைக் கண்டேன். ஈஸா (அலை) அவர்கள் சிவந்த நிறமுடையவர்களாகவும், சுருண்ட முடியுடையவர்களாகவும், அகன்ற நெஞ்சுடையவர்களாகவும் இருந்தார்கள். மூஸா(அலை) அவர்களோ கோதுமை நிறமும், பருமனான உடலும், நீளமான தலை முடியுடையவர்களாகவும் இருந்தார்கள்.” (புகாரி பாகம் 2 பக்கம் 1375-புதிய பதிப்பு ஹதீஸ் எண்:3438) 

இந்த ஹதீஸில் மூஸா (அலை) அவர்களுடன் ஈசா (அலை) அவர்களைப் பற்றி ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இணைத்துக் கூறியதிலிருந்து அது இஸ்ரவேல் மக்கள் மத்தியில் தோன்றிய ஈஸா(அலை) அவர்களின் அங்க அடையாளங்கள் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம். அதே சமயத்தில் பிற்காலத்தில் இந்த உம்மத்தில் தொன்றவிருந்த ஈஸப்னு மர்யமின் அங்க அடையாளங்களைப் பற்றிக் கூறும்போது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு வேறுபடுத்திக் கூறியிருக்கிறார்கள். 

ஒருமுறை நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது கனவில் காபாவை வளம் வருவதாகக் கண்டேன். அப்போது ஒருவர் தோன்றினார். அவர் கோதுமை நிறமும், நீளமான தலை முடியுடையவராகவும் இருந்தார்...........இவர் யார்? என நான் கேட்டபோது, இவர் இப்னு மர்யம் எனக் கூறப்பட்டது. (புஹாரி கிதாபுல் பிதன் பாகம் 2 பக்கம் 1376 புதிய பதிப்பு ஹதீஸ் எண் 3440 மற்றும் முஸ்லிம் பாகம் 1 பக்கம் 210 ஹதீஸ் எண்:277) 

இரண்டு மஸீஹுகளை வெவ்வேறான உருவத்திலேயே ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கண்டிருக்கிறார்கள். ஆக, பெயர் ஒன்றாக இருந்தாலும் அவ்விருவரும் வெவ்வேறானவர்கள் என்பதை இதன் மூலம் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் நமக்கு உணர்த்தி விட்டார்கள். 

முதலில் கூறப்பட்ட ஹதீஸில் ஈஸா நபியை மூஸா நபியுடன் சேர்த்துக் கூறப்பட்டுள்ளதிலிருந்து அவர் மூஸா வின் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தியிருக்கிறார்கள். இரண்டாவதாகக் கூறப்பட்ட ஹதீஸில் தஜ்ஜாலின் குழப்பம் மிகுந்த காலத்தில் தோன்றுவதாகக் கூறப்பட்டதிலிருந்து அவர் பிற்காலத்தில் இந்த உம்மத்தில் தோன்றும் மஸீஹ் என்பதையும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் குறிப்பால் உணர்த்திவிட்டார்கள். 

அடுத்து ஈஸா(அலை) அவர்களின் பணிகளைப் பற்றி புகாரி 2476, 3448, 3449 ஆகிய நபிமொழிகளில் வருகின்ற முன்னறிவிப்புகளுக்கும் வழக்கம் போல் எல்லா மௌலவிகளும் பொருள் கொடுப்பதைப் போன்றே பி.ஜே யும் பொருள் கொடுத்து தமது அறியாமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.! உதாரணமாக, அவர் சிலுவையை முறிப்பார்: பன்றியைக் கொள்வார்: ஜிஸ்யா வரியை நீக்குவார்: வாங்குவதற்கு யாரும் இல்லாத அளவுக்கு செல்வம் கொழிக்கும் என்ற ஹதீஸைக் குறிப்பிட்டு இவற்றிற்கெல்லாம் நேரடியான பொருளை கொடுத்துள்ளார். 

இவ்வாறு நேரடி பொருள் கொடுத்தல் இந்த ஹதீஸுகள் அனைத்தும் அனர்த்தமாகிவிடும். மார்க்கத்தில் எவ்வித பலவந்தமும் இல்லை என்ற வசனம் திருக்குர்ஆனில் இருக்கும்போது அவர் எப்படி சிலுவையை முறிப்பர்? அது பலவந்தமாகாதா? அப்படியே அவர் சிலுவைகளை முறிக்கும் பணியில் அவர் ஈடுபட்டாலும் கிறிஸ்தவர்களால் மீண்டும் சிலுவைகளை உருவாக்கிக் கொள்ள முடியாதா என்ன? அவ்வாறே பன்றிகளைக் கொல்லுதல் என்பது ஒரு நபியின் கண்ணியத்திற்கு இணக்கமான செயலா என்ன? உலகத்திலுள்ள பன்றிகளை கொல்வதற்கே அவருக்கு நேரம் போதாத போது பிற மார்க்கப் பணிகளை செய்ய அவருக்கு எங்கிருந்து நேரம் இருக்கும்? ஆதமின் மகனின் பேராசையைப் பற்றிக் குறிப்பிட்ட நபி (ஸல்) அவர்கள், மனிதனின் பேராசையை மண்ணறையின் மண்தான் நிறைவேற்ற முடியும் எனக் கூறியிருக்கும் போது ‘வரவிருக்கும் மஸீஹ் செல்வத்தை வாரி வழங்குவார்; அதனை எவரும் வாங்க மாட்டார்’ என்ற இந்த ஹதீஸ் அதற்கு முரண்படுகிறதே? இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது இதற்கு நேரடியானப் பொருள் கொள்ள முடியாது; இவை உவமையாகக் கூறப்பட்டவை என்பதை சாதாரண முஸ்லிமாலும் புரிந்து கொள்ள முடியும். இதற்கு விளக்கமளித்தவாறு ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் கூறுகிறார்கள்: 

“இரண்டாவது சிறப்பு அடையாளம் என்னவெனில், வாக்களிக்கப்பட்ட மஸீஹ் வரும் போது சிலுவையை முறிப்பார்: பன்றியைக் கொல்வார். ஒற்றைக் கண் தஜ்ஜாலைக் கொல்வார்; எந்த காபிர் வரை அவருடைய மூச்சுக் காற்று சென்றடையுமோ அவர் உடனே மரணித்துவிடுவார் என்பதாகும். எனவே இந்த அடையாளத்திற்கு ஆன்மீகமாகக் கொள்ளப்பட்ட உண்மையான கருத்து என்னவென்றால், மஸீஹ் உலகில் வந்து சிலுவை மதத்தின் மதிப்பையும், கண்ணியத்தையும் தமது கால்களில் கீழ் போட்டு நசுக்கிவிடுவர். மேலும் எவர்களிடம் பன்றியின் வெட்கம்கெட்ட தன்மையும், அசுத்தத்தைத் தின்னும் பழக்கமும் இருக்கிறதோ அவர்களின் மீது மிகக் கூர்மையான சான்றுகள் எனும் வாள்களை பயன்படுத்தி அவர்கள் அனைவரின் வேலைகளையும் முடிவுக்குக் கொண்டு வந்துவிடுவார்.”(இஸாலே அவ்ஹாம் ரூஹானி கஸாயின் தொகுதி 3 பக்கம் 142)
Read more »

May 5, 2014

ஈஸா நபி (அலை) செய்த அற்புதங்களும் பிறர் செய்த அற்புதங்களும்.


அபூ அப்தில்லாஹ் எழுதுகிறார் 

உலகில் நபி (ஸல்) அவர்கள் முதல் வேறு எந்த நபிக்கும், வேறு எந்த மனிதனுக்கும் கொடுக்கப்படாத சில தனிச்சிறப்புகள் ஈஸா(அலை) அவர்கள் பெற்றுள்ளார்கள் என்று திருக்குர்ஆன் சான்று பகருகிறது. ஈஸா(அலை) அவர்கள் தகப்பனின்றி பிறந்தது, பிறந்த உடனே மக்களுடன் பேசியது, அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு குஷ்டரோகிகளையும் கடும் வியாதியஸ்தர்களையும் சுகப்படுத்தியது, இறந்தவர்களை உயிர்பித்தது, இப்படிப்பட்ட தனிச்சிறப்புகளை உடையவர்களாக ஈஸா(அலை) அவர்கள் இருந்தார்கள். (பக்கம் 53) 

நம் பதில்: 

அபூ அப்தில்லாஹ்வுக்கு திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் ஆழிய ஞானம் இல்லை என்பதற்கு இக்கூற்று சிறந்த எடுத்துக்காட்டாகும்.

திருக்குர்ஆன் யஹ்யா நபி அவர்களின் பிறப்பினைப் பற்றி அவரின் தாய் மலடி என்றும், தந்தை வயது முதிர்ந்த, நரை, திரை விழுந்த எலும்புகள் பலவீனமானவர் என்றும் கூறிய பின்னரே தந்தையின்றி ஈஸா நபியின் பிறப்பு பற்றிக் கூறுகிறது. இவ்விரு சம்பவங்களையும் இரு சூராக்களில் (3:41,48; 19:9,21) கூறுகிறது. அபூ அப்தில்லாஹ்வின் கூற்றின்படி, ஈஸா நபி (அலை) அவர்களின் பிறப்பு அற்புதம் எனில், யஹ்யா நபி (அலை) அவர்களின் பிறப்பு அதனினும் அற்புதமாக தெரியவில்லையா? இவ்வாறே இஸ்ஹாக் நபி (அலை) அவர்களின் பிறப்பு பற்றியும் திருக்குர்ஆன் (11:73 ) கூறுகிறது. இவை அபூ அப்தில்லாஹ்வுக்கு தெரியவில்லை போலும். 

ஆதம் நபி (அலை) அவர்கள் தாயும் தந்தையும் இன்றியும், ஹவ்வா (அலை) அவர்கள் ஆதம் நபி (அலை) அவர்களின் விலா எலும்பிலிருந்து பிறந்ததாகவும் அபூ அப்தில்லாஹ் கருதுகிறார். இப்பிறப்புகள் அதிசயமாக இவருக்கு தெரியவில்லையா? பிறந்த உடனே மக்களுடன் பேசியது அதிசயம் என்று எழுதுகிறார். திருக்குர்ஆன் தொட்டிலிலும் நடுப்பருவத்திலும் பேசினார் என்று கூறுகிறது. நடுப்பருவத்தில் ஒருவர் பேசுவது எப்படி அதிசயம் இல்லையோ அப்படியே தொட்டிலிலும் பேசியது அற்புதம் இல்லை என்பது திருக்குர்ஆனின் கருத்து ஆகும். 

புகாரியில் வந்த நபிமொழியிலும் தொட்டிலில் பேசிய மூன்று குழந்தைகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அதில் ஈஸா நபி (அலை) நீங்கலாக மற்ற இரு குழந்தைகளின் பேச்சினை அபூ அப்தில்லாஹ் படித்திருந்தால் இப்படி எழுதியிருக்கமாட்டார் என்பது உறுதி. இன்றைய நாளில் உலகில் பல குழந்தைகளின் பேச்சும், செயலும் இவரது கூற்றைக் பொய்யாக்குகிறதை உலக ஞானம் உள்ளவர் அறிவர்.

அவ்வளவு ஏன் ஈஸா நபி (அலை) பேசுவது இருக்கட்டும். அன்றும் இன்றும் என்றும் பேச இயலாதது பறவையாகும். ஆனால் ஹூத் ஹூத் என்னும் பறவை அக்காலத்து நபியாகிய சுலைமான் நபி (அலை) அவர்கள் அறியாத அரசியல், தவ்ஹீது விஷயங்களை கூறியதாக அபூஅப்தில்லாஹ் நம்போகிறாரே! இதைவிடவா ஈஸா நபி (அலை) பேசியது அதிசயம்? 

ஏன் நபியின் இராணுவம் வருவதை அறிந்து, என்றும் பேசாத எறும்புகள் பேசியதாக திருக்குர்ஆன் கூறுகிறதே அது சரி, சுலைமான் நபிக்கு பறவையின் மொழிதான் தெரியும், எறும்புகள் மொழி எப்படி தெரிந்தது? பறவையும், எறும்பும் ஓரினம் என்று அபூ அப்தில்லாஹ் கூறுவாரா? தஜ்ஜால் ஒருவனைக் கொன்று, பின்னர் அவனை உயிர் பெறச் செய்ததாக அபூ அப்தில்லாஹ் நம்புகிறாரே! 

திருக்குரானில் ஈஸா நபி (அலை) அவர்களின் அற்புதம் பற்றித் தெரிந்து கொள்ள திருக்குரானின் அடிப்படைச் சட்டம் தெரிந்திருக்க வேண்டும். 

எந்த நபியின் அற்புதமும் இயற்கையின் அடிப்படைச் சட்டத்திற்கு உட்பட்டதே. அவ்வாறு செய்வதே இறைவனின் வல்லமைக்கும் ஞானத்திற்கும் எடுத்துக்காட்டாகும். 

திருக்குர்ஆனின் பிற கருத்துக்களுக்கு முரண்படாதபடி நாம் திருக்குர்ஆனின் சான்றுகளுக்கு பொருள் கொடுக்கவேண்டும். 

நபிமார்களின் அற்புதங்கள் அந்தந்த நபிமார்களின் தனித்தன்மைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும். 

எடுத்துக்காட்டாக: 

நபி (ஸல்) அவர்களின் அற்புதம் திருக்குர்ஆன் ஆகும். இது ஒரு நூல் – புத்தகம் ஆகும். உலகில் அன்று முதல் இன்று வரை கோடிக்கணக்கான் நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. பல்வேறு துறைகளுக்கு ஏற்ப பரிசுகளும் அந்த நூல்களுக்கு வழங்கபடுகிறது. எனவே ஒரு நூல் என்பது அற்புதம் இல்லை. உலகில் பலரால் எழுதக்கூடியதே நூல் ஆகும். இவ்வாறு மனிதரால் செய்யக்கூடிய ஒரு செயல் ஒரு நபிக்குரிய அற்புதம் ஆகும் போது, அந்த நூலைப் போல் ஒரு நூலை எவரும் எழுத முடியாது. இந்த நூலில் காணப்படுவதைப் போன்று ஒரு வசனத்தையோ, அல்லது ஒரு அதிகாரத்தையோ, 10 அதிகாரங்களையோ அல்லது இதுபோன்ற ஒரு நூலையோ எழுதி வருமாறு திருக்குர்ஆன் நிராகரிப்பாளர்களிடம் அறைகூவல் விடுகிறது. கடந்த 1500 ஆண்டுகாலமாக எவராலும் இயலவில்லை. இனிமேலும் முடியாது. 

இவ்வாறே இப்ராஹீம் நபி (ஸல்) அவர்களின் தனித்தன்மை, தர்க்க அடிப்படையில் தன் போதனைகளை மக்களுக்கு கூறியது ஆகும். இறைவன் என்றால் பேச வேண்டும்; பேச முடியாதவை இறைவன் இல்லை. அவனை ஏன் வணங்கவேண்டும்? என்ற தர்க்க வாதத்தின் மூலமே சிலை (வணக்கத்தை) உடைத்தார்கள். இதன் அடிப்படையில் பார்க்கும் போது, இன்றைய முஸ்லிம்கள் அல்லாஹ் வஹியை நிறுத்தி விட்டான். அதாவது அவன் இனிமேல் யாருடனும் பேசமாட்டான் என்று நம்புவது, அல்லாஹ்வை சிலையாக பொய்த்தெய்வமாக நம்புவதாகும். 

ஈஸா(அலை) அவர்களின் தனித்தன்மையாவது. அன்னார் உவமை வடிவில் தன் கருத்துக்களைப் போதித்தார்கள். எனவே, அன்னாரின் அற்புதங்களை உவமை வடிவில் கூறியுள்ளான். நோய்களைக் குணப்படுத்தியது, பறவையைப் படைத்தது, குருடர்களைப் பார்க்கச் செய்தது, இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தது அத்தனையும் உவமை வசனங்களாகும். 

சொற்பொருள்தான் கொள்ளவேண்டும் என்று அபூ அப்தில்லாஹ் கூறுவார் என்றால் முஸ்லிம் ஹதீஸில் 57:35 ஐப் படித்துப் பார்த்தால், ஒரு சாதாரண சிறுவன், பிறவிக் குருடனையும், தொழு நோயாளியையும், பிற நோய்களையும் குணப்படுத்தவான் என்றும் அச்சிறுவனைக் கொன்றால் அவன் மீண்டும் உயிர்பெற்று வருவான் என்றும் கூறப்பட்டுள்ளதை அபூ அப்தில்லாஹ் எப்படி நம்புகிறார்? 

ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களைப் பற்றி, உஹ்யில் மௌத்தா பி இஸ்நிஹி (அவன் கட்டளையினால் நான் இறந்தவர்களை உயிர்பிக்கின்றேன் எனவும் (3:50),நீர் உயிரற்றவர்களை என் கட்டளையினால் எழுப்பிய நேரத்தையும் எனவும் (5:11) திருக்குரானில் உள்ள வசனத்திற்கு நேரடியான வெளிப்படையான பொருளைக் கொடுக்கின்றனர். பௌதீகமாக, உடல் அளவில் உயிரூட்டினார் என்று நம்பி இறைவனுக்கு இணை வைக்கின்றனர். ஏனெனில் படைத்தல், மரணிக்கசெய்தல், உயிரூட்டுதல் ஆகிய பண்புகள் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்றும், இணையாக்கப்பட்டவர்களுள் எவராலும் இதனை செய்ய முடியாது என்று இறைவன் திருக்குரானில் திட்டவட்டமாக குறிப்பிடுகின்றான். 

"அல்லாஹ்வே உங்களைப் படைத்தான் அவனே உங்களுக்கு உணவளித்தான். பின்னர் அவன் உங்களை மரணிக்கச் செய்வான். பின்னர் அவன் உங்களை உயிரூட்டுவான் உங்களால் (இறைவனுக்கு) இணையாக்கப்பட்டவர்களில் எவரேனும் இச்செயல்களில் எதையாவது செய்கின்றனரா? அவன் தூய்மையானவன். மேலும் அவர்கள் (இறைவனுக்கு) ஏற்படுத்தும் இணைகளை விட்டும் அவன் மிக்க மேலானவன்." (30:41) 

மக்களால் இறைவனுக்கு இணையாக்கப்பட்டவர்களில் முதல் இடத்தில் இருப்பவர் ஈஸா (அலை) அவர்கள்தான். இணையாக்கப்பட்டவர்களில் எவருமே உயிரூட்டுவதில்லை என்று அல்லாஹ் குறிப்பிடும்போது அது மிக அதிகமாக ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களுக்குதான் பொருந்துகிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ளமுடியும். 

எனவே திருக்குர்ஆன் 3:50 ல் நான் இறந்தவர்களை உயிர்பிக்கின்றேன் என்று ஈஸா (அலை) அவர்கள் கூறியதாக வந்திருப்பது அவர் பௌதீகமாக இறந்தவர்களை உயிர்பித்தான் என்று பொருள் கொள்ள முடியாது. அது மேற்கண்ட 30:41 வசனத்திற்கு முரணானது. ஈசாவுக்கு இறைத்தன்மையைக் கொடுப்பதாகிவிடும். இந்த வகையில் ஜமாஅத் அல் முஸ்லிமீன் என தம்பட்டம் அடிக்கும் பிரிவினருக்கு கிடைக்கும் பட்டம் முஷ்ரிக் என்றே ஆகிவிடும்! 

இதே சொல்லை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்காகவும் அல்லாஹ் திருக்குரானில் இவ்வாறு கூறியிருக்கிறான். 

"நம்பிக்கை கொண்டவர்களே! இறைதூதர் உங்களை உயிர்பிப்பதற்க்காக உங்களை அழைத்தால் நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவருக்கும் பதில் அளியுங்கள்." (8:25) 

இவ்வசனத்தில் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களுக்காகவும் உயிர்பித்தல் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வசனத்திற்கு எவருமே ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் பௌதீகமான முறையில் இறந்தவர்களை உயிரூட்டி எழுப்பினார்கள் என்று பொருள் கொள்வதில்லை. மாறாக ஆன்மீகமான முறையில் உயிரற்றோருக்குதான் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் உயிர் கொடுத்தார்கள் என்றே விரிவுரையாளர்கள் எழுதியுள்ளனர். 'உங்களுக்கு வாழ்வளிக்கும் காரியத்திற்கு இத்தூதர் உங்களை அலைக்கும் போது அவருக்கு பதிலளியுங்கள்' என P.J யும் மொழியாக்கம் செய்துள்ளார். ஆனால் இதே சொல் ஈஸா(அலை) அவர்களுக்காக வரும் போது மட்டும் உண்மையிலேயே இறந்தவர்களுக்கு உயிரூட்டினார் எனக் கூறி ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களுக்கு இறைத்தன்மையை கொடுத்து கிறிஸ்தவர்களின் தவறான கடவுள் கொள்கைக்கு ஆதரவளிக்கின்றனர். 

இவர்களுக்கு கடைசியாக ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறிய எச்சரிக்கையைக் கூறிக் கொள்கிறேன். 

நஸாராக்கள் ஈஸா நபி (அலை) அவர்களை அளவுக்குமீறிப் புகழ்ந்து வழி கெட்டது போல் அபூ அப்தில்லாஹ் கூட்டமும் அன்னாரை வரம்பு கடந்து புகழ்ந்து வழிகெடவேண்டாம். 

அவர் எம்முடைய அடியாராகவே விளங்கினார். அவருக்கு நாம் அருள் செய்து அவரை இஸ்ராயீலின் மக்களுக்கு ஒரே எடுத்துக்காட்டாக ஆக்கினோம் (43:60) 

எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த வசனத்தில் ஈஸா(அலை) அவர்களை அப்து – அடியார் என்று கூறி அன்னார் இறைவனோ இறைப் பண்புகளாகிய உயிர் கொடுத்தால், படைத்தல் போன்றவற்றை செய்யவோ இல்லை என்று மறுக்கின்றான். இறைவன் அப்து – அடியார் என்ற சொல்லை பல நபிமார்களுக்கும் நல்லடியார்களுக்கும் திருக்குர்ஆனில் பயன்படுத்தியுள்ளான். ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் மனிதனாகிய நல்லடியார் – நபியாவார். அவரிடம் அம்மனிதப் நபிகளைப் போன்ற மனிதப் பண்புகளே இருந்தன. படைத்தல், உயிர் கொடுத்தல் போன்ற பண்புகள் உவமை வடிவில் ஏனைய நபிமார்களுக்கு இருந்தது (8:25) போல் அவரிடமும் இருந்தன என்று பதில் தருகின்றான். 

இந்த வசனத்தில் அவர் என் அடியாராக விளங்கினார். அவருக்கு நாம் அருள் செய்து அவரை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு ஓர் உவமையாக (எடுத்துக்காட்டாக) ஆக்கினோம் என்று கூறுகிறான். அதாவது ஈஸா (அலை) அவர்கள் தந்தை இன்றி பிறந்தது, ஒரு நபிக்கு தந்தையாகும் தகுதியை இறைவன் இஸ்ரவேல் மக்களிடம் இருந்து பறித்து விட்டதனைச் சுட்டிக் காட்டுகிறது. 

பின்னர் யூதர்களின் தீய செயல்களால் ஈஸா நபி (அலை) அவர்களுக்குப் பிறகு நுபுவ்வத்தின் அருட்கொடையும் அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டு அது இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு ஈஸா(அலை) அவர்கள் தந்தையின்றிப் பிறந்தது இஸ்ராயீல் சமுதாயம் நுபுவ்வத்தின் அருளை முற்றாக இழக்கப் போகிறது என்பதை எடுத்துக்காட்டவே இந்த வசனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Read more »

Apr 29, 2014

ஈஸா நபி (அலை) அவர்களின் மரணமும் நஜாத் ஏட்டின் மூடநம்பிக்கையும் – 3


“ஈஸா (அலை) அவர்கள் மரணிக்கவில்லை ஆயினும் மரணிப்பவர்களே” என்ற நஜாத் ஆசிரியரின் மூட நம்பிக்கை அடிப்படையற்றது என்பதை கீழ்வரும் திருக்குர்ஆன் வசனம் தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டுகிறது: 

“என்னையும் எனது தாயாரையும் அல்லாஹ்விற்குப் பகரமாக இரு தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்கள்” என மர்யமின் மகனான ஈஸாவே நீர் மக்களிடம் கூறினீரா? என்று அல்லாஹ் கேட்கும்போது அவர் இவ்வாறு பதிலளிப்பார். நீ தூயவன், எனக்கு உரிமையில்லாத என்னால் ஒருபோதும் கூற முடியாது. நான் அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக நீ அதனை அறிந்திருப்பாய் எனது உள்ளத்தில் உள்ளதை நீ அறிவாய். மேலும் உனது உள்ளத்தில் உள்ளதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக மறைவானவற்றை அறிகின்ற்றவன் நீ ஒருவனே. 

“எனது இறைவனும் உங்களின் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என எனக்குக் கூற நீ கட்டளையிட்டதையல்லாமல் வேறெதனையும் நான் கூறவில்லை. மேலும் நான் அவர்களோடு இருந்தவரை அவர்களுக்கு நான் ஒரு சாட்சியாவேன். ஆனால் நீ என்னை மரணிக்கச் செய்த பிறகு நீயே அவர்களைக் கண்காணிப்பவனாவாய். மேலும் நீயே அனைத்தையும் கவனிப்பவனாவாய்! (5:117,118) 

‘ஒட்டக் கூத்தருக்கு இரட்டைத் தாழ்பாள் என்று கூறப்படுவது போன்று இந்த வசனம் நஜாத் ஆசிரியரின் இரண்டு கூற்றுகளையும் அடியோடு தகர்த்து விடுகிறது. இந்த வசனம் ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்பதையும் அவர்கள் திரும்ப வரபோவதில்லை என்பதையும் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாக்கிவிடுகின்றது. “நீ என்னை மரணிக்கச் செய்தபின்” என்ற சொற்றொடர், ஈஸா நபியின் சமுதாயம் இறைவனுக்கு இணைவைப்பதற்கு முன்பே அதாவது ஈஸா நபியையும் அவர்களுடைய தாயாரையும் இரு தெய்வங்களாக எடுத்துக் கொளவதற்கு முன்பே ஈஸா நபி மரணித்துவிட்டார்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. 

நபி பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பே ஈஸா நபியின் சமுதாயம் இணை வைத்தலில் இறங்கிவிட்டது என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. எனவே நபி பெருமானார் (ஸல்) அவர்கள் தோன்றுவதற்கு முன்னரே ஈஸா(அலை) அவர்கள் மரணித்துப் போனார்கள் என்றே சொல்லவேண்டும். 

அடுத்து ஈஸா (அலை) அவர்கள் மீண்டும் இவ்வுலகிற்கு வருவார்கள் என்ற கருத்தும் மிகத் தவறானது என்பதும் மேற்கண்ட வசனத்திலிருந்து புலனாகிறது. அவர்கள் அவ்வாறு வருவதாயிருந்தால் அவர்களுடைய சமுதாயம் இறைவனுக்கு இணை வைப்பதையும், அவர்களையும் அவர்களுடைய தாயாரையும் கத்தோலிக்கர்களும் மற்றவர்களும் வணங்கிவருவதையும் அவர்கள் காண்பார்கள். அதன் பிறகு அவர்களால் அது குறித்து தனக்குத் தெரியாது என்று இறைவனிடம் எவ்வாறு கூறமுடியும்? மேற்கண்ட இறைவசனத்திலோ அவர்கள் அந்தச் சமுதாயத்தினரோடு இருந்தவரை அவர்கள் இணைவைத்தலில் ஈடுபடவில்லை என்று கூறுவதாக வருகிறது. எனவே, ஈஸா நபியின் சமுதாயம் இணைவைத்தலில் ஈடுபடுவதற்கு முன்பே ஈஸா நபி மரணித்துபோனார்கள் அவர்கள் திரும்பி வரப்போவதில்லை என்பதை உணரலாம். 

ஈஸா நபி உயிருடன் இருக்கிறார்கள் என எப்படியாவது எடுத்துக் காட்டவேண்டும் எண்ணமுள்ளவர்கள் இந்தத் திருமறை வசனத்திலுள்ள ‘பலம்மா தவபைத்தனி’ என்ற சொற்றொடருக்கு நீ என்னை மரணிக்கச் செய்த பின் எனப் பொருள் தருவதற்குப் பகரமாக வெகு தந்திரமாக, நீ என்னை (உடலுடன்) கைப்பற்றியபின்’ என்று பொருள் கூறுவார்கள். இந்த தவப்பி என்ற சொல்லுக்கு மரணிக்க செய்தல் அல்லது ரூஹை அதாவது உயிரைக் கைப்பற்றுதல் என்ற பொருளைத் தவிர வேறு பொருள் இல்லை என்பதை நாம் ஏற்கனவே எடுத்துக் காட்டியுள்ளோம். 

இது தொடர்பாக ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள். 

உலகில் அரபு நாடு உருவாகி அங்கு அரபி மொழி வழக்கில் வந்த நாள் முதல் இதுவரை வந்த எந்த உரையிலிருந்து அது புதிதாக இருந்தாலும் பழையதாக இருந்தாலும் ‘தவப்பி’ என்ற சொல்லுக்கு உடலைக் கவர்தல் என்ற பொருள் தரப்பட்டிருந்த ஓர் உதாரணத்தை யாராலும் காட்டமுடியாது. மாறாக, தவப்பி என்பது இறைவன் மனிதனுக்கு இழைக்கின்ற செயலாக கூறப்பட்ட இடங்களிலெல்லாம் அதற்கு மரணிக்கச் செய்தல் உயிரைக் கவர்கள் என்ற அர்த்தங்களே தரப்படுகின்றன. உடலைக் கவர்தல் என்ற அர்த்தம் எங்கும் காணப்படவில்லை. எந்த அகராதியிலும் நாம் தரும் அர்த்தத்திற்கு மாற்றமான அர்த்தம் தரப்படவில்லை. 

எவராவது, திருக்குரானிலிருந்தோ அல்லது நபி மொழிகளிலிருந்தோ அல்லது அரபி மொழிக் கவிதை மற்றும் இலக்கியம் ஆகியவற்றிலிருந்தோ மேற்கண்ட சொல்லுக்கு மரணிக்கச் செய்தல், உயிரைக் கவர்தல் என்பதைத் தவிர வேறு பொருள் உண்டு என்பதற்கு உதாரணம் காட்டினால் அவருக்கு எனது சொத்தில் ஒரு பகுதியை விற்று ஆயிரம் ரூபாய் தருவேன் என இறைவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். (இஸாலே ஔஹாம் – பக்கம் 603) 

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் இந்த சவாலை அவர்களின் காலத்திலோ அல்லது அதன் பிறகோ யாரும் ஏற்கவில்லை. இதிலிருந்து இந்த ஆலிம்சாக்கள் உண்மையை மறைத்து இட்டுக்கட்டிப் பொருள் கூறுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். 

இந்த “பலம்மா தவபைத்தனி’ – நீ என்னை மரணிக்கச் செய்தபின்” என்ற சொல்லை அண்ணல் நபிபெருமானார் (ஸல்) அவர்கள் நாம் கூறும் அர்த்தத்திலேயே பயன்படுத்தியுள்ளார்கள். அதுவும் மேற்கண்ட ஆயத்தைக் குறிப்பிட்டே கூறியுள்ளார்கள். புஹாரி ஷரீபில் இவ்வாறு காணப்படுகிறது:-

இறுதி நாளில் நான் (நபி பெருமானார் (ஸல்) அவர்கள்) ஹவ்ல் கவ்ஸரில் நிற்கும்போது சிலர் என் முன் காணப்படுவார்கள் அவர்களை மலக்குகள் நரகத்தின் பக்கம் இழுத்துச் செல்லப்படுவார்கள். அவர்களைப் பார்த்து நான் உஸைஹாபி, உஸைஹாபி (இவர்கள் என் தோழர்கள்) என்று உரத்த குரலில் கூறுவேன். அப்போது, இவர்கள் உங்களுடைய காலத்திற்குப் பிறகு என்ன செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. இவர்கள் இஸ்லாத்தைக் கைவிட்டுவிட்டார்கள் என்று என்னிடம் கூறப்படும். அதற்கு நான் இறைவனின் அந்த நல்லடியாரான ஈஸா நபி கூறியிருந்ததைப் போல, நான் அவர்களுடன் இருந்த காலம் வரை அவர்களுக்கு சாட்சியாக இருந்தேன், ஆனால் (பலம்மா தவப்பைத்தனி) நீ என்னை மரணிக்கச் செய்தபின் நீயே அவர்களைக் கண்காணிக்கின்றவனாக இருந்தாய் என்று கூறுவேன். (புஹாரி, கிதாபுத் தப்ஸீர்) 

“பலம்மா தவபைத்தனி” என்ற சொற்றொடருக்கு நீ என்னை மரணிக்கச் செய்தபின் என்ற பொருளைத் தவிர வேறு பொருள் இல்லை. இதை நபி பெருமானார் (ஸல்) அவர்களே தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். இதனைப் படித்தப்பிறகும் ஒருவர் அந்த சொற்றொடருக்கு வேறு அர்த்தம் இருப்பதாகக் கூறுவாரேயானால் அவர் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் தந்துள்ள விளக்கத்தை மறுக்கின்றவர் ஆகிறார். எனவே அவருடன் தொடர்ந்து விவாதம் செய்வதில் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. 

இப்படி, பல்வேறு கோணங்களில் ஈஸா நபியின் மரணம் திருக்குரானால் உறுதி செய்யப்படுகிறது. இந் நிலையில் ‘நஜாத்’ ஆசிரியரைப் போன்றவர்களுக்கு குட்டையைக் குழப்புவதை தவிர வேறு வழியில்லை! ஈஸா நபி உயிருடன் உள்ளார் எனபதற்கு திருக்குர்ஆனிலிருந்து ஆதாரம் தருவதற்குப் பகரமாக அர்த்தமற்ற சில கேள்விகளை எழுப்புவதன் மூலம் வாசகர்களைத் திசை திருப்பவே அவர் முயன்றிருக்கிறார். “ஹஸரத் ஈஸா நபி (அலை) சிலுவைச் சம்பவத்திற்குப் பிறகு காஷ்மீருக்கு ஓட வேண்டிய அவசியமென்ன? நபி கோழையாவார்களா? என்று அவர் கேட்கிறார். 

திருக்குர்ஆன் கூறும் நபிமார்களின் வரலாற்றினை படித்திருந்தால் அல்லது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றையாவது படித்திருந்தால் அதுபோன்ற அபத்தமான கேள்வியை நஜாத் ஆசிரியர் கேட்டிருக்கவேமாட்டார். பொதுவாக சொந்த நாட்டை துறந்து வேறு இடத்திற்கு ஹிஜ்ரத் செய்வது நபிமார்களின் நடைமுறையாகவே இருந்திருக்கிறது. எதிரிகள், அவர்களின் அநியாயச் செயல்களில் எல்லை மீறிப் போகும்போது அல்லது நபிமார்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகும்போது அந்த நபிமார்கள் இடம் பெயர்ந்து சென்றிருக்கின்றனர். இது அறிவுடமையே தவிர கோழைத்தனம் அன்று ஏனெனில் அந்த நபிமார்கள் உயிர்வாழ்ந்திருந்தால் தான் இறைவன் அவர்கள் மீது சுமத்திய பொறுப்புகளை நிறைவேற்றிடமுடியும். 

இந்தப் பொது விதிக்கு நபிபெருமானார் (ஸல்) அவர்கள் கூட உட்பட்டவர்களாகவே இருந்தார்கள். மக்காவின் ‘காபிர்’கள் நபி பெருமானார் (ஸல்) அவர்களைக் கொலை செய்துவிட திட்டமிட்டு அவர்களுடைய வீட்டைச் சுற்றி வளைத்துக் கொண்ட போது அவர்கள் இரவோடிரவாக மதீனாவுக்கு ‘ஹிஜ்ரத்’ செய்யவில்லையா? 

நஜாத் ஆசிரியரைக் கேட்க்கிறோம், இஸ்ரவேலர்களுக்கு இறை தூதராக வந்த ஈஸா நபியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போது இறைவன் அவர்களை வானத்திற்கு உயர்த்திக் காப்பாற்றியதாகக் கூறுகின்றீர்களே. அதே நிலை, அகில உலகிற்கும் அருட் கொடையாக வந்த அண்ணல் நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டபோது இறைவன் அவர்களை வானத்திற்கு உயர்த்தவில்லையே ஏன்? ஈஸா நபியை நேசித்த அளவுக்கு இறைவன் நபி பெருமானாரை நேசிக்கவில்லையா? அல்லது கிருஸ்தவர்கள் கூறுவது போன்று ஈஸா நபி (நவூதுபில்லாஹ்) இறைவனின் நேச குமாரன் என்பதுவும் உங்களின் எண்ணமா? 

ஏனைய நபிமார்களுக்கு ஆபத்து வந்த நேரத்தில் அவர்களை இந்த பூமியிலேயே காப்பாற்றிய இறைவன் ஈஸா நபியை மட்டும் வானத்திற்கு உயர்த்திக் காப்பாற்ற வேண்டிய அவசியமென்ன? வானத்திற்கு உயர்த்த இறைவனுக்கு வல்லமையில்லையா? என்று கேட்பவர்களிடம் கேட்கிறோம், ஏன், பூமியிலேயே அவர்களைக் காப்பாற்றக்கூடிய வல்லமை இறைவனுக்கு இல்லையா? தவ்ர் குகையில் மறைந்திருந்த நபி பெருமானார் (ஸல்) அவர்களையும் ஹஸரத் அபூபக்கர் (ரலி) அவர்களையும் ஓர் அற்பப் பிராணியான சிலந்தியைக் கொண்டு எதிரிகளிடம் பிடிபடாது இறைவன் காப்பாற்றினான். இத்தகைய வல்லமை மிகுந்த இறைவன் ஈஸா(அலை) அவர்களைக் காப்பாற்ற அவன் வகுத்துள்ள நியதிகளை தவிடு பொடியாக்கி வானத்திற்கு உயர்த்தியிருப்பானா? நிச்சயமாக அவன் அவ்வாறு செய்யவில்லை! மாறாக, ஏனைய நபிமார்களைப் போல் ஈஸா நபியையும் இப்பூமியிலே காப்பாற்றினான். இது குறித்து இறைவனே கூறுவதைப் பாருங்கள்:- 

“மேலும் நாம் மரியமின் மகனையும் அவரது தாயாரையும் ஓர் அடையாளமாக்கினோம். நீரூற்றுகளுள்ள மலைப்பாங்கான ஒரு இடத்தில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தோம்” (23:51) 

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்தில் ஈஸா(அலை) அவர்களுக்கு அடைக்கலம் தரப்பட்ட இடம் பற்றி, 

ரப்வ – மலைப் பிரதேசம் 

மயீன் – நீரருவி நீரூற்று நிரம்பிய இடம். 

தாது ‘கரார்’ – மக்கள் வசிக்குமிடம் என்றெல்லாம் கூறப்பட்டிருக்கிறது. இந்த வர்ணனைகள் காஷ்மீருக்குப் பொருந்துமா? வானத்திற்கு பொருந்துமா? 

அடுத்து, ஈஸா நபி (அலை) அவர்கள் ‘ஹிஜ்ரத்’ சென்றதாக அதாவது தமது சொந்த நாட்டைத் துறந்து சென்றதாக நபிபெருமானார் (ஸல்) அவர்களே அறிவித்துள்ளார்கள். அவர்கள் கூறியிருப்பதை பாருங்கள். 

அல்லாஹ் ஹஸ்ரத் ஈஸா நபி அவர்களுக்கு (இவ்வாறு) வஹி அறிவித்தான், “ஈஸாவே நீர் மற்றவர்களால் அறிந்து கொள்ளப்படாமலும் துன்புருத்துதளுக்கு இலக்காகாமலும் இருக்க இந்த இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு ‘ஹிஜ்ரத்’ செய்வீராக” (கன்ஸுல் உம்மால்) 

இவற்றிலிருந்து ஈஸா நபி (அலை) அவர்கள் சிலுவை சம்பவத்திற்குப் பிறகு தமது நாட்டைத் துறந்து சென்றார்கள் என்ற முடிவிற்கே நாம் வரவேண்டும். 

ஈஸா நபி (அலை) அவர்கள் தமது சொந்த நாட்டைத் துறந்து நெடும்பயணம் ஒன்றை மேற்கொண்டு அக்காலத்தில் கீழத்தேய நாடுகளில் பரவலாக வசித்துவந்த இஸ்ரவேல் இன மக்களுக்கு இறைத்தூதை எட்டவைத்து, இறுதியாக காஷ்மீர் வந்தடைந்தார்கள், அங்கெ தமது 120 ஆவது வயதில் இறையடி சேர்ந்தார்கள் என்பதையெல்லாம் இறையறிவிப்பின் அடிப்படையிலும் ஹஸரத் அஹ்மத் (அலை) அவர்கள் தமது மஸீஹ் ஹிந்துஸ்தான் மேய்ன் (தமிழில் இந்தியாவில் இயேசு) என்ற நூலில் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக்கூறியுள்ளார்கள். அதுமட்டுமல்ல, ஈஸா (அலை) அவர்கள் இந்தியா வந்தார்கள் என்பதற்கான சான்றுகள் உள்ளன என முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் மற்றும் நல்லரிஞர்களும்கூட கூறியுள்ளார்கள். 

இவற்றை மறுக்க இயலாத நிலையில் நஜாத் ஆசிரியர், சிலுவையில் அடிக்கப்பட்டவர் வேறொருவர். அவரே “காஷ்மீருக்கும் ஓடிப் போயிருக்கலாம். பின்னர் மாண்டிருக்கலாம். அவர்களின் கல்லறை காஷ்மீரில் இருப்பதாக எழுதியிருக்கலாம்” என்று வரைந்துள்ளார். இவற்றிலிருந்து இந்தச் சம்பவங்களலெல்லாம் உண்மை, ஆனால் ஆள்தான் வேறு என நஜாத் ஆசிரியர் கூறுவதாகவே நாம் கொள்ளவேண்டும். அதாவது ஈஸா நபியை கொல்ல முயற்சித்த யூதர்கள் மட்டுமல்ல கிருஸ்தவர்களும் பல்வேறு இனங்களைச் சார்ந்த வரலாற்றாசிரியர்களும் முஸ்லிம் நல்லரிஞர்களும் கூட ஏமாந்து போனார்கள் தாம் மட்டும்தான் அது உண்மையான ஈஸா அல்ல அது வேறொரு நபர் என்று கண்டு பிடித்துள்ளதாக நஜாத் ஆசிரியர் கூற விழைகிறார். அப்படியானால் அதற்க்கான ஆதாரத்தை தரட்டும்! ஓர் “அற்புதகரமான ஆராய்ச்சியாளரை” உலகம் கண்டுகொள்ளட்டும். 

ஆனால் இறைவசனங்களுக்கெதிராக, நபிமொழிக்கெதிராக யாராலும் எந்த சான்றையும் காட்ட இயலாது! ஏனெனில் அது உண்மையே உருவானவை. “உண்மைக்கு எதிராக யூகங்கள் எந்தப் பயனும் அளிக்காது” (10:37) என்பதற்கேற்ப உண்மையின் முன்னால் எந்தப் பொய்யும், யூகமும், கற்பனையும் நிற்கயியலாது.
Read more »

Jan 27, 2014

ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களை இறைவன் உடலோடு உயர்த்தவில்லை என்று கூறுகிறான்.


அபூ அப்தில்லாஹ் தன் நூலில் திருக்குர்ஆனில் 4:159 வசனத்தைக் குறிப்பிட்டு பல் ரபஅ ஹுல்லாஹு இலைஹி என்பதற்கு அபூ அப்தில்லாஹ் கூறும் விளக்கத்தைப் பாருங்கள்.

1. ஈஸா நபி (அலை) அவர்களின் உடலைத்தான் உயர்த்தியுள்ளான்.

2. அதனால் தான் அல்லாஹ் வல்லமை மிக்கவனும் ஞானம் மிக்கவனுமாக இருக்கின்றான். (4:158) என்று திருக்குர்ஆனில் கூறுகிறான்.

3. உடல் உயர்த்தப்படவில்லை, பதவி உயர்வையே குறிக்கும் என்பது அல்லாஹ்வின் வல்லமையைக் குறைத்து மதிப்பதாகும்.

4. வானத்தளவில் மனிதர்கள் உயர்த்தப்படுவதை அவர்களின் பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளவில்லையா? ஆகாய விமானத்தில், விண்கலங்களில், ராக்கெட்டில் மனிதன் விண்ணில் பறப்பதை தெரிந்துள்ள காதியானிகள், மனிதன் பூத உடலுடன் அல்லாஹ் அளவில் உயர்த்தப்படுவது பகுத்தறிவுக்கு எட்டாது என்று சொல்வது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

5. அல்லாஹ் கையாளாகாதவனாக இந்த காதியானிகள் கருதுகிறார்கள் போலும், குறிப்பாக மனிதனால் சாதித்துக் காட்ட முடிந்ததை அல்லாஹ்வினால் சாதிக்க முடியாது என்று காதியானிகள் விதண்டாவாதம் செய்வது விந்தையாக உள்ளது. (பக்கம் 44)

என்றெல்லாம் எழுதிக் கொண்டு போகிறார்.

நம் பதில்:

மிர்ஸா தாஹிர் அஹ்மது (ரஹி) அவர்கள் எழுதிய ஈஸா நபி (அலை) அவர்களின் மரணம் என்னும் நூலில் ரபஅ என்பதன் பொருள் என்ற தலைப்பில் கூறிய கருத்துக்களுக்கும், எழுப்பிய கேள்விகளுக்கும், திருக்குர்ஆன், ஹதீஸில் இருந்து காட்டிய சான்றுகளுக்கும் அபூ அப்தில்லாஹ் தனது நூலில் பதில் தரவேயில்லை. மாறாக ரபஅ என்ற அரபிச் சொல் திருக்குர்ஆனிலும் ஹதீஸிலும் வேறு பல இடங்களிலும் பதவி உயர்வு குறித்துப் பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது. என்பதை நான் மறுக்கவில்லை என்று மட்டும் கூறி நழுவி இருக்கிறார். திருக்குர்ஆனில் ரபஅ எனும் சொல் மனிதர்களுடன் தொடர்புடையதாக ஏறக்குறைய 9 இடங்களில் (40:16, 2:254, 43:33, 6:84, 56:4, 58:12, 19:58, 12:101) வருகிறது. அந்த எல்லா இடங்களிலும் பதவி உயர்வு எனும் பொருளைத்தான் கொண்டுள்ளது. உடல் உயர்வு பற்றி எங்கும் வரவில்லை.

மிர்ஸா தாஹிர் (ரஹ்) அவர்கள் தமது நூலில் திருக்குர்ஆனின் ஏனைய இடங்களிலும் ஹதீஸ்களிலும் ரபஅ என்ற சொல் ஆன்மீக உயர்வு என்று பொருள்படும் வண்ணமே கையாளப்பட்டு இருக்கிறது. ஆலிம்கள் கூறுவது போன்று வானத்திற்கு உயர்த்துதல் என்ற அர்த்தத்தில் இச்சொல் எங்குமே பயன்படுத்தப்படவில்லை. (ஆதாரம்: ஈஸா நபி (அலை) அவர்களின் மரணம் பக்கம் 34) என்று குறிப்பிட்டுள்ளார்கள். எனவே ரபஆ என்ற சொல்லுக்கு உடலோடு உயர்த்துதல் என்ற பொருள் தரக்கூடிய ஒரேயொரு சான்றையாவது அபூ அப்தில்லாஹ் திருக்குர்ஆன், ஹதீஸ், அரபி மொழி இலக்கியச் சான்றுகளிலிருந்து காட்டாதவரை (தனது நூலில் அபூ அப்தில்லாஹ் இதற்க்கு பதில் தரவில்லை) ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் உடலோடு உயர்த்தப்பட்டார் என்று கூறும் உரிமையோ, தகுதியோ, அவருக்கு இல்லை.

திருக்குர்ஆனில் ஹஸ்ரத் இத்ரீஸ் (அலை) அவர்களைக் குறிப்பிட்டு அவரை மிக மேலான இடத்திற்கு உயர்த்தினோம் (19:58) என்று அல்லாஹ் கூறியுள்ளான். இவ்வசனத்திலும் ஈஸா (அலை) அவர்களுக்குப் பயன்படுத்தப்பட்ட அதே ரபஅ என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அபூ அப்தில்லாஹ் இத்ரீஸ் (அலை) அவர்களுடன் உடலுடன் உயர்த்தப்பட்டுள்ளார்கள் என்று ஒப்புக் கொள்வாரா?

ஹஸ்ரத் இத்ரீஸ் (அலை) அவர்கள் உடலோடு உயர்த்தப்படவில்லை என்றால், அபூ அப்தில்லாஹ் கருத்துப்படி அல்லாஹ்வின் வல்லமையை குறைத்துக் கணிப்பது ஆகாதா? இருவருக்கும் ஒரே சொல் பயன்படுத்தப்பட்டிருக்க ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் மட்டும் உடலோடு உயர்த்தப்பட்டதாக பொருள் கூற முடியுமா? (4:158) வது வசனத்தில் ரபஅ என்பதற்கு ஈஸாவை உடலோடு உயர்த்தி உள்ளான். எனவேதான் அல்லாஹ் வல்லமைமிக்கவனும் ஞானமிக்கவனுமாக இருக்கிறான் என்று அபூ அப்தில்லாஹ் எழுதியுள்ளார்.

திருக்குர்ஆன் வல்லமைமிக்கவன் என்று மட்டும் கூறவில்லை. ஞானமிக்கவன் என்றும் சேர்த்துக் கூறியுள்ளது. இவ்வாறு எங்கெல்லாம் ஆழ்ந்து சிந்திக்கின்ற போது அபூ அப்தில்லாஹ்வின் கருத்து பொருத்தமற்றதாகவே தெரியவரும். திருக்குர்ஆன் 39:43 இல் அல்லாஹ் உயிர்களை மரணத்தின் போதும் தூக்கத்தின் போதும் கைப்பற்றுகிறான் என்று கூறுகிறான். இதில் உயிர்கள்தான் கைப்பற்றப்படுவதாக இறைவன் கூறுகிறான். உடல்கள் அன்று. எனவே எது கைப்பற்றப்படுகிறதோ அதுதான் உயர்த்தப்படும்.

மேலும் ரபஅ என்ற சொல் திருக்குர்ஆனிலும் ஹதீஸிலும் அல்லாஹ் ஒரு மனிதருடன் தொடர்புப்படுத்திக் கூறும் இடங்களில் எல்லாம் ஆன்மீக உயர்வு பதவி உயர்வு என்னும் பொருளில் வந்துள்ளதே தவிர உடலை உயர்த்துதல் என்று எங்கும் வரவில்லை. அப்படி வந்திருந்தால் ஒரே ஒரு சான்றையாவது அபூ அப்தில்லாஹ் காட்டட்டும். எனவே திருக்குர்ஆனுக்கும் ஹதீதுக்கும் மாற்றமாக உடலோடு உயர்த்துதல் என்ற பொருள் கொடுப்பது அல்லாஹ்வுக்கும் ரஸுலுக்கும் செய்கின்ற அவமதிப்பாகும்.

ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் உடலோடு உயர்த்தப்பட்டார் எனபதற்கு அபூ அப்தில்லாஹ் கூறும் மற்றொரு காரணம் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களை சிலுவையில் அறையவுமில்லை; கொல்லவுமில்லை என்றால் அவர்கள் என்ன ஆனார்கள் என்ற வினா எழும்? அப்படியாயின், ரபஅஹுல்லாஹ் இலைஹி(4:158). ஆனால், அல்லாஹ் அவரை தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்று குறிப்பிடுவது ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களின் உடலைப் பற்றியதாகத்தான் அல்லாமல் நிச்சயமாக அவரது ஆன்மாவைப் பற்றியதாகவோ ஆன்மீகப் பதவியைப் பற்றியதாகவோ இருக்க முடியாது என்று அபூ அப்தில்லாஹ் எழுதியுள்ளார். (பக்கம் 15,16)

ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களைச் சிலுவையில் அறையவும் இல்லை; கொல்லவுமில்லை என்று அல்லாஹ் கூறுவதனால் அவர் இறக்கவே இல்லை என்று அபூ அப்தில்லாஹ் கருதுகிறார் போலும். அதனால்தான் இப்படிப்பட்ட ஒரு முடிவுக்கு வந்து விட்டார் என்று தெரிகிறது. உலகில் எல்லா மனிதர்களுக்கும் இறப்பு என்பது சிலுவையில் அறையப்படுவதன் மூலமோ அல்லது கொல்லப்படுவதன் மூலமோ மட்டும் ஏற்படுவது என்றால் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் இந்த இரண்டு  வழிகளில் இறக்காததினால், அவர் மரணமடையவில்லை என்று கருதலாம். அப்படியில்லாமல் இறப்பது என்பது இயற்கையாகவும் வேறு வழிகளிலும் வருகிறது. எனவே ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் கொல்லப்பட்டோ சிலுவையில் அறையப்பட்டோ இறக்கவில்லையே தவிர பிற வழிகளில் அதாவது இயற்கையாகவோ அல்லது வேறு வழிகளிலோ மரணித்திருக்கலாம் அல்லாவா?

அப்படியென்றால் அல்லாஹ் ஏன் அவ்வாறு சிலுவையில் அறையப்பட்டோ கொல்லப்பட்டோ இறக்கவில்லை (வமா கத்தலூஹு வமா சலபூஹு) என்று கூறினான். திருக்குர்ஆனில் வசனங்களை விளங்குவதற்கு சில அடிப்படை கருத்துக்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது திருக்குர்ஆன் தன் காலத்திற்கு முன்னர் உலகில் நிலவி வந்த தவறான கருத்துகளில் அல்லாஹ், நபிமார்கள் போன்றவர்களோடு சம்பந்தப்பட்ட அவசியமான கருத்துகளை மறுத்துரைக்கிறது. எடுத்துக்காட்டாக திருக்குர்ஆன் 5:73-76இல் நிச்சயமாக மர்யமின் மகன் மஸீஹ் அல்லாஹ்தான் என்று கூறுபவர்கள் திட்டமாக நிராகரிப்பவர்களாவர்..... அல்லாஹ் மூவருள்  ஒருவன் என்று கூறியவர்கள் நிராகரித்துவிட்டனர்.....

மர்யமின் மகன் மஸீஹ் ஒரு தூதரேயன்றி வேறில்லை. அவருடைய தாயார் நேர்மையான பெண்ணாக இருந்தார்.

இந்த வசனங்கள் இறைவனைப் பற்றியும் ஒரு நபியைப் பற்றியும் நபியின் தாயாரைப் பற்றியும் யூத, கிறிஸ்தவ மக்கள் கொண்டிருந்த தவறான கருத்துகளை எடுத்துக்காட்டி அதனை மறுக்கக்கூடிய வசனங்களாகும். அதாவது ஹஸ்ரத் மர்யம் (அலை) அவர்கள் ஆண் தொடர்பின்றி ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களைப் பெற்றதால் மக்கள் அவர்களை (நவூதுபில்லாஹ்) விபச்சாரி என்றும், ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களை (நவூத்பில்லாஹ்) விபச்சார புத்திரன் என்றும் கடுமையான அவதூறு கூறினார். எனவே அல்லாஹ் மக்களின் அவதூறை மறுக்கும் விதமாகத்தான் ஹஸ்ரத் ஈஸா(அலை) மற்றும் அவரது தாயாரைப் பற்றி மேற்சொன்ன வசனத்தில் குறிப்பிடுகிறான்.

அதேபோன்று ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களை சிலுவையில் அறைந்ததாகவும் மற்றும் பிற வகையில் கொன்று விட்டதாகவும் யூதர்கள் நம்பியிருந்ததால் அவர்களுடைய அந்த தவறான நம்பிக்கையை மறுக்கும் விதமாக ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் சிலுவையில் அறையப்பட்டதனாலோ பிற வகையிலோ கொல்லப்படவில்லை என்று அல்லாஹ் வசனம் 4:158 இல் குறிப்பிடுகின்றான். சிலுவையில் அறைந்து கொல்லுதலை தவ்ராத் வேதம் சபிக்கப்பட்டமரணமாகக் கூறுவதனால் ஈஸா நபி (அலை) அவர்கள் அப்படிப்பட்ட சபிக்கப்பட்ட மரணத்திற்கு ஆளாகவில்லை என்றும், அன்னாரது ருஹ் இறைவனளவில் உயர்த்தப்படும் அளவுக்கு புனிதமானது என்றும் காட்டுவதற்குத்தான். ரபஅ என்று அல்லாஹ் கூறுகிறான்.

அவ்வாறு அவர் கொல்லப்படவில்லை என்று கூறுவதனால் அவர் இறக்கவே இல்லை. உயிரோடு இருக்கிறார் என்று கருதுவது தவறாகும். எப்படியென்றால் ஹஸ்ரத் மர்யம் (அலை) அவர்கள் ஒரு நேர்மையான பெண்ணாக இருந்தார் என்று திருக்குர்ஆன் கூறியிருப்பதனால், மற்ற நபிமார்களின் தாய்மார்கள் அவ்வாறு நேர்மையான பெண்களாக இருக்கவில்லை என்று கருதலாமா? இந்த இடத்தில் நான் முன்பு கூறியபடி யூதர்கள் ஹஸ்ரத் மர்யம் (அலை) அவர்களை விபச்சாரி (நவூதுபில்லாஹ்) என்று கூறியதனால் அதை மறுக்கும் விதத்தில் திருக்குர்ஆன் அவரை ஒரு நேர்மையான பெண் என்று கூறுகிறது. இவ்விடத்தில் யூதர்களின் குற்றச்சாட்டை மறுக்கும் விதத்தில் அவருடைய நேர்மையை எடுத்துக் காட்டப்படுகிறதே தவிர அதனால் மற்ற நபிமார்களின் தாய்மார்கள் நேர்மையான பெண்கள் இல்லை என்று குறைத்து மதிப்பிடுவதாக பொருளாகாது. அதுபோன்று ஒரு அவதூறு பிற நபிமார்களின் தாய்மார்கள் மீது சுமத்தப்படவில்லை என்பதாலும், ஹஸ்ரத் மர்யம் (அலை) அவர்கள் மீது சுமத்தப்பட்டிருப்பதாலும் அவ்வாறு கூறப்பட்டிருக்கிறது என்ற உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறே யூதர்கள் ஈஸா (அலை) அவர்களுடைய மரணம் பற்றி தவறாகக் கூறிய கருத்துகளை மறுக்கும் விதத்தில் தான் சிலுவையில் அறையப்பட்டோ கொல்லப்பட்டோ அவர் இறக்கவில்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறதே தவிர அவர் இறக்கவில்லை என்ற பொருளில் அல்ல.

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் உட்பட எந்த நபியும் சிலுவையில் அறையப்படவில்லை; கொல்லப்படவில்லை என்பதனால் அவர்கள் இறக்கவில்லை என்றோ உடலோடு உயர்த்தப்பட்டார்கள் என்றோ சொல்ல முடியாது. ஏன் ஹஸ்ரத் இத்ரீஸ் (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்படவில்லை; கொல்லப்படவில்லை. அப்படியிருக்க அவரை மிக மேலான இடத்திற்கு உயர்த்தினோம் என்று இறைவன் கூறியதனால் அவர் உடலோடு உயர்த்தப்பட்டு உயிரோடு இருக்கிறார் என்று அபூ அப்தில்லாஹ் ஒப்புக் கொள்வாரா?

எல்லாவற்றிற்கும் மேலாக ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடம் மக்கத்துக் காபிர்கள் சில செயல்களைச் செய்து காட்டுமாறு கேட்டார்கள். அவற்றுள் ஒன்று நீர் இந்த உடலோடு வானத்திற்கு ஏறிச் செல்ல வேண்டும். திரும்பி வரும்போது நாங்கள் வாசிக்கத்தக்க ஒரு நூலைக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டதற்கு அல்லாஹ் தன் தூதரிடம் பதில் கூறுமாறு கூறிய வசனங்கள் சிந்தனைக்குரியவையாகும்

என் இறைவன் தூயவன்; நான் ஒரு மனித ரேஸுலேயன்றி வேறில்லை.(17:94)

திருக்குர்ஆன் இந்த வசனத்திலிருந்து உடலோடு ஒரு மனித ரெஸுல் வானத்திற்கு ஏறிச் செல்வது அல்லாஹ்வின் தூய்மைக்கு மாறானதும், ஒரு மனித ரெஸுல் அவ்வாறு வானத்திற்கு ஏறிச் செல்லமுடியாது என்பதும் தெளிவாக விளங்குகிறது. இந்த வசனத்திற்கு மாற்றமாக ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் உடலோடு உயர்த்தப்பட்டார் என்று நம்புவது அல்லாஹ்வின் பரிசுத்த தன்மைக்கு களங்கம் கற்பிப்பதாகும். ஏனெனில் ஹஸ்ரத் ஈஸா நபி (அலை) அவர்கள் வானத்திற்கு உடலுடன் சென்று விட்டார் என நம்பினால் இந்த வசனத்தின்படி அவர் மனிதனோ, ரஸுலோ இல்லை. மாறாக கிருஸ்தவர்கள் நம்புவது போல் அவர் கடவுளோ, கடவுளின் குமாரரோ ஆவார் என நம்புவதாகிவிடும். மாறாக, வசனம் 17:94 இல் தர்கா என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. உடலோடு வானத்திற்கு ஏறிச் செல்வதற்கு பயன்படுத்தப்படும் தர்கா என்ற சொல் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களைக் குறித்து திருக்குரானில் பயன்படுத்தப்படவில்லை. எனவே ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களுடன் பயன்படுத்தப்பட்ட ரபஅ என்ற சொல் உடலோடு உயர்த்தப்படுதல் எனும் பொருளை தராது. எனவே அவர் உடலோடு உயர்த்தப்படவில்லை என்று விளங்கிக் கொள்ளலாம்.

அபூ அப்தில்லாஹ் ஈஸா நபி (அலை) அவர்கள் உடலோடு உயர்த்தப்படவில்லை என்று நாம் கூறுவது அல்லாஹ்வின் வல்லமையை மறுப்பது எனவும் அல்லாஹ்வை கையாளாகாதவன் என்று கருதுவதாகவும் தம் நூலில் எழுதியுள்ளார்.

அல்லாஹ், எல்லாம் வல்லவன் என்ற பண்பின் மீதும் அவனுடைய பிற பண்புகள் எல்லாவற்றின் மீதும், அஹ்மதி முஸ்லிம்களாகிய நாங்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டுள்ளோம் என்பதை அல்லாஹ்வின் படைப்பினங்கள் எத்தனை உண்டோ அத்தனை முறை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகிறேன்.

அல்லாஹ்வுக்கு எல்லாம் வல்லவன் என்ற ஒரு பண்பு இருப்பது போல் அவர் பரிசுத்தமானவன் என்ற பண்பும் உள்ளது. எனவே ஒன்றை தவறாகப் புரிந்து கொண்டு இன்னொன்றை மறுப்பது ஒரு வகை குப்ர் ஆகும். அதாவது ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உடலோடு உயர்த்துவதற்கு சர்வ வல்லமையுள்ள இறைவனால் முடியுமென்றாலும் அவ்வாறு செய்வது அல்லாஹ்வுடைய பரிசுத்தத் தன்மைக்கு மாற்றம் என்று (17:94) இறைவன் கூறியுள்ளான்.

எப்படியென்றால் ஹஸ்ரத் யூசுப் (அலை) அவர்களை அவருடைய எஜமானி என்னருகே வா என்று தவறான செயலுக்கு அழைத்த போது அவர் பயந்து ஓடுகிறார். அந்தப் பெண் அவரை விரட்டுகிறார் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இச்சம்பவத்தை வைத்துக் கொண்டு யூசுப் (அலை) அவர்கள் ஆண்மை இல்லாதவர் என்று கருத முடியுமா? அந்த இடத்தில் இறை அச்சமும் பாவத்தைப் பற்றிய அருவருப்பும் அவருடைய நேர்மையும் அச்செயலில் ஈடுபடாதவாறு அவரை தடுத்தது. ஒரு நபி அத்தகைய செயலைச் செய்யமாட்டார். எனவே ஒருவரால் செய்ய முடியும் என்பது வேறு. செய்யமாட்டார் என்பது வேறு என்பதை அபூ அப்தில்லாஹ் போன்றோர் புரிந்து கொள்ளவேண்டும். ஒருவரை உடலோடு உயர்த்த அல்லாஹ்வால் முடியும். ஆனால் அவனுடைய பரிசுத்தத் தன்மைக்கு மாற்றம், களங்கம்  என்பதால் இறைவன் அவ்வாறு செய்யமாட்டான்; செய்யவில்லை.

இவ்வாறு அஹ்மதி முஸ்லிம்களாகிய நாங்கள் நம்புவதால் அல்லாஹ்வின் வல்லமையை நாங்கள் மறுத்ததாகி விடும் என்று கூறுவதாக இருந்தால் அபூ அப்தில்லாஹ் அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்கிறோம்.

1. ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களையும் அவரது தாயாரையும் இரு கடவுள்களாகப் படைக்க அல்லாஹ்வுக்கு வல்லமை உண்டா? இல்லையா?

2. இறைவன் தனக்கென சந்ததிகளை உருவாக்க  வல்லமை உண்டா? இல்லையா?

3. அல்லாஹ் மலக்குகளை பெண் மக்களாக படைக்க வல்லமை உண்டா? இல்லையா?

இதற்கு அபூ அப்தில்லாஹ் என்ன பதில் கூறுவார்?

இவை போன்ற இடங்களில் திருக்குர்ஆன் கூறுவது போல் அவ்வாறு செய்வது அல்லாஹ்வின் பரிசுத்தத் தன்மைக்கும் தவ்ஹீதுக்கும் மாற்றம் என்பதால் இறைவன் செய்யவில்லை என்று விளங்குகிறது. அல்லாஹ்வால் எதையும் செய்ய முடியும் என்பது வேறு; செய்யமாட்டான் என்பது வேறு. இரண்டையும் குழப்பக் கூடாது. ஒன்று, அல்லாஹ்வுடைய வல்லமை. மற்றொன்று அல்லாஹ்வுடைய பரிசுத்தத் தன்மை.

மேலும் ஹஸ்ரத் மிர்ஸா தாஹிர் அஹ்மது (ரஹ்) அவர்கள் தம் நூலில் (இரண்டாம் பதிப்பில்) பக்கம் 27 இல் கேட்டுள்ள வினாக்களுக்கு அபூ அப்தில்லாஹ் அவர்கள் பதில் தரவில்லை. எனவே அவ்வினாக்களை சுருக்கமாக இங்கே மீண்டும் எழுப்புகிறோம்.

“ஓர் அடியான் இறைவனுக்காக தாழ்மைக் குணத்தை மேற்கொண்டால் இறைவன் அவரை 7 ஆம் வானத்திற்கு உயர்த்திவிடுவான்.” (கன்ஸுல் உம்மால்)

இந்த நபிமொழியில் வரும் ரபஅ என்னும் சொல்லைக் காரணம் காட்டி தழ்மைக்குணம் உள்ளவனை இறைவன் உடலோடு வானத்திற்கு உயர்த்துவான் என்று பொருள் கூறுவாரா? அவ்வாறு யாரும் கூற மாட்டார்கள். இப்படி பொருள் கூறுவது என்றால் ஹஸ்ரத் ஈஸா நபி (அலை) அவர்கள் மட்டும் என்ன? எல்லா நபிமார்களும், வலிமார்களும், தழ்மைக்குணம் கொண்ட அத்தனை நல்லடியார்களும் உடலோடு வானிற்கு உயர்த்தப்பட்டு அங்கு வாசம் செய்வதாக நம்ப வேண்டும்.

ஐவேளைத் தொழுகையை கடைபிடிக்கிறவர்கள் தொழுகையின் போது ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டு சஜ்தாக்களுக்கிடையில் வர்பஹ்னி (இறைவா) என்னை உயர்த்துவாயாக என்று பிரார்த்தனை செய்கிறார்கள். உடலுடன் வானிற்கு உயர்த்துவது இதற்குப் பொருள் என்றால் வாழ்நாள் எல்லாம் தொழுது வந்த ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சஹாபா பெருமக்களும் இவ்வாறு செய்து வந்த பிராத்தனையை இறைவன் ஏற்றுக் கொள்ளவில்லை என்றல்லவா கூற வேண்டி வரும்? ஏனென்றால் இவ்வாறு பிராத்தனை செய்த எவரும் உடலுடன் வானிற்கு உயர்த்தப்படவில்லையே. எனவே இந்தப் பிராத்தனையின் பொருள் என்னுடைய நிலையை உயர்த்துவாயாக என்பதே தவிர வேறொன்றும் இல்லை.

இந்த வினாக்களுக்கு அபூ அப்தில்லாஹ் எங்கும் பதில் தரவில்லை. ஒருவேளை ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களுக்கு வந்தது போன்ற ஒரு சூழ்நிலை வேறு யாருக்கும் வரவில்லை. வந்திருந்தால் அவர்களும் இறைவன் அளவில் உடலோடு உயர்த்தப்பட்டிருக்கலாம் என்று எண்ணி பதில் தரவில்லையோ அல்லது பதில் தர முடியாத நிலையோ? அல்லாஹ் அறிவான்.

அப்படி ஒரு காரணமும் அவர் காட்ட முடியாது. ஏனென்றால் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கோ அவர்களின் தலைக்கு 100 ஒட்டகம் விலை வைக்கப்பட்ட நேரத்திலும் அல்லாஹ் அவர்களை உடலோடு உயர்த்தி தன்னளவிலோ, ஏழாவது வானத்திலோ, குறைந்தபட்சம் மதீனாவிலோ கொண்டு வைக்கவில்லையே! அல்லாஹ் கையாளாகாதவன் (நவூதுபில்லாஹ்) என்று அபூ அப்தில்லாஹ் கூறுவாரா? அல்லது அல்லாஹ் பாரபட்சமாக ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களுக்கு ஒருவிதமாகவும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு ஒருவிதமாகவும் செய்துவிட்டான் என்று அபூ அப்தில்லாஹ் கூறுவாரா?

அல்லாஹ்வின் நடைமுரையில் ஒருபோதும் மாற்றமில்லை (குர்ஆன் 33:63) மேலும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் சூரா பாத்திகாவில் செய்த “ இறைவா நீ அருள் புரிந்தவர்களின் வழியில் (நீ எங்களை) நடத்துவாயாக” என்ற துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களை ஹிஜ்ரத் செய்த வேளையில் எதிரிகளிடமிருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான் என்றால் அதுதான் அல்லாஹ்வின் வல்லமையாகும்; நடைமுறையுமாகும். அதாவது தவ்ர் குகையில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களும், ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களும் ஒளிந்திருந்த போது அல்லாஹ் அவர்களை காப்பாற்றி மதீனா கொண்டு சேர்த்தான். அவர்கள் குகையில் இருக்கும் போது, எதிரிகள் பலர் குகைக்கு வெளியே நின்று கொண்டிருக்க ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! நாம் இருவர் தானே இருக்கிறோம். எதிரிகள் பலர் இருக்கின்றனரே! என்று கேட்க அதற்கு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் அபூபக்கரே! அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான். என்று பதில் கூறினார்கள்.

அந்தக் குகையில் அல்லாஹ் அவர்களுடன் இருந்தான். அல்லாஹ் அவர்களை உடலுடன் தன்னளவில் உயர்த்திக் கொள்ள வில்லை. மாறாக அவன் அந்த மாநபி (ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வும் இருந்தான். இதுவே அல்லாஹ்வின் நடைமுறையாகும்.

இவ்வாறுதான் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களும் காப்பாற்றப்பட்டார்கள் என்று நாங்கள் ஈமான் கொண்டுள்ளோம். இதிலிருந்து திருக்குர்ஆன் நபி மொழிகளின் அடிப்படையில் அல்லாஹ்வின் வல்லமையை சரியாக மதிப்பிட்டு யார் நம்பிக்கை கொள்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்.  

Read more »