இறுதி நபிக் கொள்கை இன்று அல்ல, பழங்காலந்தொட்டே மக்களிடம் ஒரு நோயாக இருந்து வந்திருக்கிறது. இறைவன் இதனை வழிகேடு என்றும் எச்சரித்திருக்கின்றான். அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:
"இதற்க்கு முன்னர் யூசுப் தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். ஆனால் அவர் உங்களிடம் கொண்டு வந்தது குறித்து நீங்கள் சந்தேகத்தில் இருந்தீர்கள். அவர் மரணமடைந்தபோது, அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒருபோதும் அனுப்பமாட்டான் என்று நீங்கள் கூறினீர்கள். இவ்வாறே அல்லாஹ் வரம்புமீறுபவர்களையும், (இறை அடையாளங்களில்) சந்தேகம் கொள்பவர்களையும் வழிகேடர்கள் என்று தீர்மானித்து விடுகின்றான்". ( 40:35 )
"(வழி கேடர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் வசனங்கள் தொடர்பாக (அல்லாஹ்விடமிருந்து) தங்களிடம் வந்த எந்தச் சான்றுமின்றி வாக்குவாதம் செய்கின்றனர். இது அல்லாஹ்விடமும் நம்பிக்கை கொண்டவர்களிடமும் மிக வெறுக்கத்தக்கதாகும். இவ்வாறே ஆணவமும், அகங்காரமும் கொண்ட ஒவ்வொரு உள்ளத்திலும் அல்லாஹ் முத்திரைடுகின்றான்". (40:36 )
யூசுப் நபியின் காலத்திலும், அல்லாஹ் அவருக்குப் பிறகு எந்த ரசூலையும் அனுப்பமாட்டான் என்றே கூறி வந்தனர். இதை அல்லாஹ் திருக்குரானில் பதிவு செய்திருப்பதன் காரணம் இதே மாதிரி பிற்காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தில் கூறப்போகின்றார்கள். அவ்வாறு கூறி வழி கெட்டு விடாதீர்கள் என்று எச்சரிப்பதர்க்காகத்தானே தவிர வெறும் சென்ற கால கதையாக சொல்வதற்கு மட்டுமல். இதனை வசனத்தின் பிற்பகுதியும் உறுதிப்படுத்துகிறது.
"இவ்வாறே அல்லாஹ் வரம்புமீறுபவர்களையும், (இறை அடையாளங்களில்) சந்தேகம் கொள்பவர்களையும் வழிகேடர்கள் என்று தீர்மானித்து விடுகின்றான்". ( 40:35 )
அல்லாஹ் தன் தூதை எங்கு வைக்க வேண்டுமென்பதை அவர் நன்கு அறிகின்றான் என இறைவன் கூறுகிறான் (6:125) அதாவது எங்கு, எப்பொழுது, எவரை தூதராக ஆக்க வேண்டுமென்பதை இறைவன்தான் அறிகிறான். அவ்வாறிருக்கையில் இவர் இறுதியானவர் என்று அல்லாஹ்வோ, ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களோ கூறாத நிலையில் இன்னும் அப்படிக் கூறுபவர்களை வழி கேடர்கள் என்றே அல்லாஹ் மேற்கண்ட (40:35) வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.
சென்ற கால நபியின் சமுதாயத்தினர் சொன்ன இறுதி நபிக் கொள்கை தவறு, வழி கேடு என்பதை இறைவன் வெறும் கதையாகக் கூறவில்லை; படிப்பினைக்காகக் கூறுகின்றான். இல்லைஎன்றால் யூசுப் நபியின் சமுதாயத்தினர் கொண்டிருந்த தவறான இறுதி நபிக் கொள்கையை நமக்கு எடுத்துரைப்பதில் என்ன பயன் இருக்கிறது? அது மட்டுமல்ல அந்த எச்சரிக்கை நிகழ்காலத்திற்க்கும் பொருந்துகிறது என்பதை அடுத்தவசனம் தெளிவுபடுத்துகிறது.
"(வழி கேடர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் வசனங்கள் தொடர்பாக (அல்லாஹ்விடமிருந்து) தங்களிடம் வந்த எந்தச் சான்றுமின்றி வாக்குவாதம் செய்கின்றனர். இது அல்லாஹ்விடமும் நம்பிக்கை கொண்டவர்களிடமும் மிக வெறுக்கத்தக்கதாகும். இவ்வாறே ஆணவமும், அகங்காரமும் கொண்ட ஒவ்வொரு உள்ளத்திலும் அல்லாஹ் முத்திரைடுகின்றான்". (40:36 )
இறுதி நபிக் கொள்கை கொண்ட வழிகேடர்கள் எவ்வித இறைசான்றுமின்ற்றியே வாதம் செய்கின்றனர். இவர்கள் அகங்காரம் கொண்டவர்கள் என்று அல்லாஹ் எச்சரித்துள்ளான். இத்தகைய வழிகேட்டிலிருந்து அல்லாஹ் முஸ்லிம்களை காப்பாற்றுவானாக.
Blog RSS Feed
Via E-mail
Twitter
Facebook
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.