அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Aug 18, 2011

அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் கொள்கையினை குறித்து சிராஜ் அப்துல்லாஹ்வின் அறியாமை


இக்காலத்தில் எல்லா இஸ்லாமிய பிரிவுகளும் பிற இஸ்லாமிய பிரிவுகளை குறைக் கூறிக் கொண்டு அவர்கள் இஸ்லாத்திற்கு முரணாக செயல்படுகிறார்கள், எனவே நாங்களே சரியான பிரிவு என்று ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு பிரிவை ஏற்படுத்திக் கொண்டனர். ஆனால் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் ஏனைய இஸ்லாமிய பிரிவுகளை போல் சுயமாக ஒரு பிரிவை ஏற்ப்படுத்தவில்லை. அல்லாஹ்தான் இக்கால மக்களை சரி செய்வதற்காக தன் புறமிருந்து ஒருவரை அனுப்பியுள்ளான். அவர் அல்லாஹ் மற்றும் ரசூலால் முன்னறிவிக்கப்பட்ட இமாம் மஹ்தியும் மஸீஹும் ஆவார். அவரை பின்பற்றுவதன் மூலமே குழப்பங்களுக்கு தெளிவும் வழிகேட்டிலிருந்து நேர் வழியும் கிடைக்கும்.எனவே இறைவனால் ஏற்ப்படுத்தப்பட்ட அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தே இக்காலத்தில் உண்மையானதாகும்.கடந்த காலத்தில் மக்கள் வழி தவறிய போது அல்லாஹ் தன் புறமிருந்து நபிமார்களை அனுப்பியுள்ளான். இதனை அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்: 

நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள், தீயவர்களை விட்டு விலகுங்கள் என்ற கட்டளையுடன் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நிச்சயமாக நாம் தூதர்களை அனுப்பினோம்.(16:36) 

முஸ்லிம்கள் திருக்குர்ஆனையும், ஹதீஸயும் புரியாமல் தாமும் குழம்பி பிறரையும் குழப்பி பொய் படுத்தும்போது அவர்களுக்கு உண்மையை விளக்கி காட்டுவதற்காக அல்லாஹ் தன் புறமிருந்து தூதர்களை அனுப்புவதாக நபி (ஸல்) அவர்களிடம் உடன்படிக்கை செய்துள்ளான். இறைவன் குர்ஆனில் இதனை இவ்வாறு கூறுகின்றான்: 

அல்லாஹ் எல்லா நபிமார்களின் மூலம் உறுதிமொழி வாங்கிய நேரத்தை (நினைத்து பாருங்கள்) வேதம், ஞானம் ஆகியவற்றிலிருந்து நான் உங்களுக்கு கொடுத்திவிட்டு பின்னர் உங்களிடம் உள்ளதை மெய்ப்பிக்க கூடிய ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவரிடம் நீங்கள் நம்பிக்கை கொண்டே ஆகவேண்டும். இன்னும் அவருக்கு உதவியும் செய்ய வேண்டும்............நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என்று அவர்கள் கூறினார். இப்போது நீங்கள் சாட்சியாக இருங்கள். நானும் உங்களுடன் சாட்சியாக இருக்கிறேன். (3:81) 

இன்று அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தின் கொள்கையினை குறித்தும் அதனுடைய இமாமினைக் குறித்தும் அவதூறாக அறியாமையினால் பேசி வரும் சகோதரர் சிராஜ் அப்துல்லாஹ் தான் எந்த அமைப்பினையும் சாராதவர் என்று தன்னை அறிமுகம் படுத்தியுள்ளார். இது போன்ற அவல நிலைகளுக்கு காரணம் அல்லாஹ் இக்காலத்தில் அனுப்பியுள்ள இமாமை அடையாளம் கண்டு கொள்ளாததே ஆகும். மற்ற எல்லா பிரிவுகளின் அவல நிலையை கண்டு அதில் தன்னை இணைத்துக் கொள்வதை அசிங்கமாக கருதுவதனால்தான் தான் எந்த பிரிவினையும் சாராதவர் என்று தன்னை பற்றிக் கூறியுள்ளார். இவர் நபி(ஸல்) அவர்களின் போதனை படி ஏன் நடக்க வில்லை என்பது நமக்கு ஆச்சரியமாக உள்ளது. ஒரு சமயம் அவருக்கு அந்த போதனை தெரியாமல் இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன். ஹஸ்ரத்  நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள கூறுகின்றார்கள்: 

ஹுதைபா பின் அல் யமான் (ரலி) அவர்கள் வினவ ........ ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) பதிலளித்தார்கள்...... நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தையும் அவர்களுடைய இமாமையும் பற்றிக் கொள். என்று பதிலளித்தார்கள். அதற்க்கு நான் அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு இமாமோ இல்லை(பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால்(என்ன செய்வது) என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் அந்த பிரிவுகள் அனைத்தையும் விட்டு (விலகி) ஒதுங்கி விடு, ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்வி பிடித்திருக்க நேர்ந்து அதே நிலையில் மரணம் உன்னை தழுவி கொண்டாலும் சரி (எந்த பிரிவோடும் சேர்ந்துவிடாதே) என்று பதிலளித்தார்கள். (புகாரி :ஹதீஸ்:3606 ,7084 ) 

இந்த நபி மொழியை பார்த்த பின்பாவது இமாமுடன் செயல்படும் ஒரே ஜமாஅத் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் என்பதை அறிந்து, புரிந்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் கட்டளைப்படி அதில் இணைந்து செயல்பட முன்வருவீர்கள் என்று நம்புகின்றேன். இல்லையெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது போன்று "இமாம் (ஐ ஈமான் கொள்ளாமல்) மரணிக்கிறாரோ அவரின் மரணம் ஜாஹிலான மரணமாகும்" (முஸ்னத் அஹ்மத் பின் ஹம்பல்: பாகம் 4 : பக்கம்: 96 ) 

இந்த ஹதீஸிற்கு ஏற்ப நீங்கள் ஜாஹிலானா மரணத்தை அடைய நேரிடும்.அல்லாஹ் உங்களுக்கு நேர்வழியினை வழங்குவானாக. ஆமீன்….. 

சிராஜ் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதில்

அவரின் கேள்வி:

1) அல்லாஹ் தன்னை வல்லமை மிக்கவன் என்றும், ஞானமிக்கவன் என்றும், ஈஸா நபியை தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்றும் கூறுவதை நிராகரிப்பதனால் காதியானியாகிய நீங்கள் அல்லாஹ்வுக்கே அந்த வல்லமை ஞானம் இல்லை என்று நீங்கள் கூறுகின்றீர்களா? 

நமது பதில்: 

ஈஸா நபியை இறைவன் தன்னளவில் உயர்த்தவில்லை என்று நாங்கள் கூறவில்லை. அல்லாஹ்வுடைய வல்லமையும், ஞானத்தையும் நாங்கள் மறுக்கவில்லை. அவ்வசனத்தில் எங்காவது அல்லாஹ் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களை பூத உடலோடு உயர்த்தினான் என்று வந்துள்ளதா? அல்லாஹ் சொல்லாத ஒன்றை தாமாக கூறுவது இட்டுக் கட்டுவதாகும். இவ்வாறு இட்டுக்கட்டி கொண்டு அல்லாஹ்வுடைய வல்லமை, மற்றும் ஞானத்தை புரியாமல் இழிவுபடுத்தியுள்ளீர்கள். 

மனிதனை அல்லாஹ் உயர்த்தியதாக வரும் இடங்களிலெல்லாம் பதவி, அந்தஸ்த்து உயர்வையை குறித்துதான் திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகளில் வந்துள்ளது. திருகுர்ஆனில் இவ்வாறு வருகின்றது: 

"உங்களுள் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் ஞானம் வழங்கப் பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான்" (58:11) 

ஹதீஸில் இவ்வாறு வருகின்றது: ஹஸ்ரத் ரசூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

"அடியான் பணிவினை மேற்கொள்ளும்போது அல்லாஹ் அவனை ஏழாவது வானத்திற்கு உயர்த்துகின்றான்" (கன்சுல் உம்மால், பாடம் அல் அவ்வலு பில் இக்லாக், தவாலுஉ என்ற தலைப்பின் கீழ், பாகம்:3, பக்கம்:110) 

மேலும் ஒரு ஹதீஸினை உங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேன். மீராஜில் நபி (ஸல்) அவர்கள் ஏழு வானத்தை கடந்து உயர்ந்த போது மூஸா(அலை) கூறியதாக வந்துள்ளது: 

.......என் இறைவா! எனக்கு மேலே வேறு ஒருவர் உயர்த்தப் படுவார்என்று நான் எண்ணி இருக்கவில்லை. பிறகு நபி(ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அதற்க்கு மேலேயும் ஏறினார்,.......(புகாரி பாகம் 7, ஹதீஸ் 7517 பக்கம் :881) 

மேலும் ஹஸ்ரத் இத்ரீஸ் (அலை) அவர்களை அல்லாஹ் உயர்ந்த இடத்திற்கு உயர்த்தினான் என அதிகாரம் 19:57 ல் கூறியிருக்கிறான். இதை குறித்து நபி (ஸல்) அவர்கள் இத்ரீஸ் (அலை) அவர்கள் நான்காவது வானத்திற்கு உயர்த்தப்பட்டதையே குறிக்கும் என மீராஜின் நிகழ்ச்சியின் போது கூறினார்கள். (ஆதாரம் முஸ்லிம்: ஹதீஸ்: 259) 

மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து அல்லாஹ் ஒருவரை உயர்த்தினான் என்று வந்தால் அதற்க்கு பொருள் பதவி, அந்தஸ்த்து உயர்வுதான் என்பது தெளிவாகியுள்ளது. மீராஜ் நிகழ்ச்சி நபிமார்களுடைய அந்தஸ்து உயர்வை ஏழு படித்தரங்களாக நம்முன் படம் பிடித்துக் காட்டியுள்ளது. ஈசா(அலை) அவர்களும் இரண்டாவது வானத்தில் இருப்பதால் அதுவும் அவர்களின் பதவி உயர்வையே குறிக்கும். 

ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களின் உயர்வை குறித்து திருக்குர்ஆனில் மற்றொரு இடத்தில் இவ்வாறு வருகின்றது: 

"ஈஸாவே நாம் உமது உயிரை கைப்பற்றுவோம், இன்னும் எம்மளவில் உம்மை உயர்த்திக் கொள்வோம். (3:55) 

இவ்வசனத்தில் உயர்வுக்கு முன் அல்லாஹ் உயிரை கைப்பற்றுவதாக கூறியுள்ளான். ஈஸா (அலை) அவர்கள் உயர்த்தப் பட்டு விட்டார்கள் என்றால் அவர்கள் இறந்த பிறகே உயர்த்தப்பட்டுள்ளார். அல்லாஹ் கூறிய வரிசையில் நாம் மாற்றத்தை ஏற்ப்படுத்த முடியாது. இங்கு உயிரை கைப்பற்றுதல் என்பதற்கு வந்துள்ள அரபி வாசகம்,"முதவப்பீக" என்பதாகும். "முதவப்பீக" என்பதற்கு ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்: 

"உம்மை இறக்கச் செய்வேன்"(புகாரி:பாகம் 5, பக்கம்:253) 

என்ற பொருளையே வழங்கியுள்ளார்கள். எனவே ஈசா(அலை) அவர்களை குறித்து வந்துள்ள உயர்வு என்பது அவரின் மரணத்திற்குப் பின்பு வந்த உயர்வையே குறிக்கும். 

அடுத்து வல்லமை மற்றும் ஞானம் குறித்து நாங்கள் ஒன்றும் மறுக்க வில்லை. ஆனால் அல்லாஹ்வின் வல்லமை மற்றும் ஞானம் குறித்து அறியாத நீங்கள், நாங்கள் அல்லாஹ்வின் வல்லமை, ஞானத்தை மறுப்பதாக கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. 

அல்லாஹ்வின் வல்லமை, ஞானம் குறித்து வரும் திருக்குர்ஆனில் பிற இடங்களை நீங்கள் படித்து பாருங்கள் அல்லாஹ்வின் வல்லமை,ஞானம் உங்களுக்கு புரியும். இன்ஷா அல்லாஹ். ஈசாவை அல்லாஹ் உடலோடு உயர்த்தாமல் இருக்கும்போது அல்லாஹ் செய்யாத ஒன்றை அவன் மீதே திணித்து அது அல்லாஹ்வுடைய வல்லமை என்று சொல்வது வேடிக்கையாக இருக்கின்றது. அல்லாஹ்வுக்கு வல்லமை இருக்கிறது என்பது வேறு, அவன் செய்ய மாட்டான் என்பது வேறு. இவ்விரண்டையும் குழப்பக் கூடாது. இறைவன் திருமறையில் கூறுகின்றான்: 

"நீர் வானத்திற்கு ஏறிச் செல்ல வேண்டும். நாங்கள் படிக்கத்தக்க நூலை எங்களுக்கு கொண்டு வராத வரை நீர் வானத்திற்கு சென்றதையும் நாங்கள் நம்ப மாட்டோம். நீர் கூறுக என் இறைவன் சுப்ஹான் (தூயவன்) ஆக இருக்கின்றான். நான் ஒரு மனிதனாகிய தூதரே அன்றி வேறில்லை."(17:93) 

வல்லமை, ஞானம் பற்றி பிதற்றிய நீங்கள் இவ்வசனத்தில் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் வானத்திற்கு உயர்த்துவதற்கு வல்லமை இல்லை என்று கூறப் போகின்றீர்களா? இறைவன் தன்னுடைய நடைமுறைக்கு மாறாக விண்ணிற்கு ஒருவரை உயர்த்துவதை தன் தூய்மைக்கு கலங்கமாக மேற்கண்ட வசனத்தில் தெளிவுபடுத்தியுள்ளான். 

அவரின் கேள்வி:

காதியானி அமைப்பை சார்ந்த சபர் அவர்களே உங்கள் கருத்துப்படி ஈஸா (அலை) அவர்கள் கொல்லப் பட்டார் என்றால் அவரை கொன்றது யார்? 

நமது பதில்: 

ஈஸா(அலை) அவரகளை யாரும் கொல்லவும் இல்லை.அல்லாஹ் உடலோடு வானத்திற்கு உயர்த்தவும் இல்லை. மாறாக அவர்கள் தன்னுடைய 120 ஆவது வயதில் இயற்கையாக மரணமடைந்தார்கள்.(ஆதாரம்: கன்சுல் உம்மால்: பாகம் 11,பக்கம் 479,பதகுல் பயான்:பாகம்2,பக்கம் 247) இது திருக்குர்ஆன் மற்றும் நபி மொழியின் அடிப்படையில் எங்களின் உறுதியான நம்பிக்கையாகும். இவ்வாறு இருக்க ஈஸா (அலை) கொல்லப்பட்டதாக நாங்கள் நம்புவது போல் அரைகுறையாக நீங்கள் ஏன் எழுதியுள்ளீர்கள். ஒன்றை குறித்து தெளிவாக தெரியவில்லை என்றால் மனையிச்சையினபடி எல்லாம் யூகம் செய்யக் கூடாது. சம்பந்தம் பட்டவர்களிடம் அது குறித்து கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். சரி போகட்டும் இனியாவது இவ்வாறு எழுதி வருவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். 

சிராஜின் கருத்து:

ஈஸா (அலை) அவர்கள் கொல்லப்படவுமில்லை,சிலுவையில்அறையப் படவுமில்லை. மேலும் இயற்கையாக இன்னும் மரணிக்கவுமில்லை. என்று அல்லாஹ் அருள்மறைக் குர்ஆனில் சாட்சி கூறுகின்றான். 

விளக்கம்: 

அல்லாஹ் திருமறையில் இவ்வாறுக் கூறுகின்றான்: 

"நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதர் மர்யமின் மகன் ஈஸா மசீஹை கொன்று விட்டோம், என்ற அவர்களின் கூற்றினாலும் (இத்தண்டனை அவர்களுக்கு கிடைத்தது) ஆனால் அவர்கள் அவரை கொலை செய்யவுமில்லை, அவர்கள் அவரை சிலுவையில் அறைந்து கொல்லவுமில்லை.மாறாக அவர்களுக்கு அது சந்தேகத்திற்குரியாதாக ஆக்கப்பட்டது."(4:157) 

மேற்க கண்ட வசனத்திலிருந்து ஈஸா (அலை) அவர்கள் கொல்லப் படவில்லை என்று தெளிவாக தெரிகிறது ஆனால் சிராஜ் அவர்கள் கூறியது போல் இயற்கையாக இன்னும் மரணிக்கவில்லை என்று எங்கும் வர வில்லை. நீங்கள் கூறும் வசனம் திருக்குர்ஆனில் எங்கே இருக்கிறது?குர்ஆனின் மீது இட்டுக் கட்டுவதற்கு எவ்வாறு உங்களுக்கு துணிச்சல் வந்தது? யூதர்கள் ஈஸா(அலை) அவர்களை கொன்று விட்டோம் என்றும்,சிலுவையில் அறைந்து கொன்றுவிட்டோம் என்றும் கருதி வந்தனர். அதற்க்கு அல்லாஹ் அவரை கொல்லவுமில்லை, சிலுவையில் அறைந்து கொல்லவுமில்லை, என பதில் அளித்துள்ளான். அதனால் அவர் இறக்கவே இல்லை என்று பொருள் கொள்ள முடியாது. ஒருவரை குறித்து அவர் விபத்திலும் இறக்கவில்லை, யாரும் அடித்தும் கொல்லவில்லை, குத்தியும் கொல்லவில்லை என்று கூறினால் அவர் இறக்கவே இல்லை என்று பொருள்படாது. மேற்கண்ட வகையில்தான் கொல்லப்படவில்லை என்றுதான் பொருள்படும். 

சிலுவையில் அறையப்படவுமில்லை என நீங்கள் "மா ஸலபுஹு"என்ற வார்த்தைக்கு தவறான பொருளை கொடுத்துள்ளீர்கள். "ஸலபு"என்றால் ஒருவரை சிலுவையில் ஏற்றி எலும்புகளை முறித்து கொல்வதை குறிக்கும்.(ஸலபு) இத்துடன் "மா"(இல்லை) என்ற சொல் வரும்போது சிலுவையில் அறைந்து கொல்லவில்லை என்றுதான் பொருள்படும். மாறாக சிலுவையில் அறையவில்லை என்று பொருள்படாது. திருக்குர்ஆன் அகராதியிலும் இதே பொருள்தான் வழங்கப்பட்டுள்ளது. திருக்குர்ஆனில் கீழ்க் கண்ட இடங்களில் "ஸலபு"என்ற சொல் காணப்படுகின்றது. 
(5:33,7:124,12:41,20:71,26:49,86:7) 

இவ்வசனங்களில் சிலுவையில் அறைவேன் என்றும், சிலுவையில் அறைந்து எலும்புகளை முறித்தல் என்றும் வந்துள்ளதால் கொல்லப்படுவதாக எங்கே வந்துள்ளது என வீணாக எண்ணி விட வேண்டாம். சிலுவையில் அறைவதன் நோக்கமே அவரை கொல்வதுதான். சிலுவையில் அறைந்து அழகு பார்ப்பதற்கு அல்ல. 

தமிழில் சிலுவையில் அறைந்து கொல்லுதல் + இல்லை இவற்றை சேர்த்து படித்தால் சிலுவையில் அறைந்து கொல்லவில்லை என்பதுதான் பொருள். மாறாக சிலுவையில் அறையவில்லை என்பதல்ல. இதே இலக்கணம்தான் அரபியிலும் கையாளப்படுகின்றது. "சலபு" என்ற சொல்லுடன் "மா" சேரும்போது சிலுவையில் அறைந்து கொல்லவில்லை என்றே வருமே தவிர சிலுவையில் அறையவில்லை என்று பொருள் வராது. சிலுவையில் அறையவில்லை என்பதுதான் பொருள் என நீங்கள் பிடிவாதம் பிடித்தால் சிலுவையில் அறைந்து கொல்லவில்லை என்பதற்கு அரபியில் என்ன வார்த்தை வரும் என்பதை தெரிவிக்கவும். 

உலகில் தோன்றிய நபிமார்களுக்கெல்லாம் கஷ்டங்களும்,சோதனைகளும் வந்துள்ளன. அவர்கள் ஏச்சு பேச்சு அடி உதை வெட்டு குத்து போன்ற துன்பங்களுக்கும் இலக்காகியுள்ளார்கள். ஏன், முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வீட்டினை எதிரிகள் சுற்றி வளைத்து அவர்களின் தலைக்கு வெகுமதி வைத்த போது அல்லாஹ் அவர்களை உடலோடு விண்ணிற்கு உயர்த்தவில்லை, ஏன், மக்காவிலிருந்து மதீனா வரைக் கூட தூக்கிச் சென்று விடவில்லை. இன்னும் சொல்லப் போனால், நபி(ஸல்) அவர்கள் உஹது போரில் காயங்கள் பலமாக ஏற்ப்பட்டு மயக்கமுற்று கீழே விழுந்தார்கள். அப்போது கூட அல்லாஹ் அவர்களை உயிரோடு வானத்திற்கு உயர்த்தவில்லை. இவ்வாறான கஷ்டங்களையும்,துன்பத்தினையும் அனுபவித்தப் பிறகே அல்லாஹ் அவர்களுக்கு உதவியையும், வெற்றியையும் வழங்கினான். அல்ஹம்துலில்லாஹ்...இதுவே எல்லா நபி மார்களோடு அல்லாஹ்வின் நடைமுறையாகும். 

அவரின் கேள்வி:

ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் இயற்கையாக மரணமடைந்தார்கள் என்றால், அதற்க்கான குர்ஆன் ஆதாரம் எங்குள்ளது?காட்டவும். 

நமது பதில்: 

உலகில் தோன்றிய அனைத்து மக்களும் ஏன், நபிமார்கள் கூட மரணித்து வருவதே இயற்க்கை. இதை உணராமல் இயற்க்கைக்கு முரணாக ஈஸா நபி உயிரோடு இருப்பதாக கூறிக் கொண்டு மரணித்ததற்கு ஆதாரம் கேட்டிருப்பது வியப்பாக உள்ளது. இருந்த போதிலும் குர் ஆனின் தெளிவுகளை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்ற அடிப்படையில் சில ஆதாரங்களை கீழே தருகிறோம்: 

ஆதாரம்:1 

"மர்யமின் மகன் ஈஸாவே! நீர் மக்களிடம் அல்லாஹ்வை அன்றி என்னையும் என் தாயாரையும் இரண்டு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று கூறினீரா? என அல்லாஹ் கேட்ட பொழுது அவர் நீ தூயவன், எனக்கு தகாததை நான் கூறியதில்லை. நான் அவ்வாறு கூறியிருப்பின் நிச்சயமாக நீ அதனை தெரிந்திருப்பாய். என் உள்ளத்திலுள்ளதை நீ அறிவாய் உன் உள்ளத்திலுள்ளதை நான் அறியேன். நிச்சயமாக நீயே மறைவானவற்றை நன்கு அறிந்தவனாவாய். நீ எனக்கு கட்டளையிட்டப்படி என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வே வணங்குங்கள் என்பதையே நான் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களுடன் இருந்த காலம் வரை அவர்களுக்கு நான் சாட்ச்சியாக இருந்தேன், ஆனால் நீ என் உயிரை கைப்பற்றிய பின் நீயே அவர்களை கண்காணித்தவனாக இருந்தாய். மேலும் நீயே எல்லாவற்றிற்கும் சாட்சியாளனாக இருக்கிறாய் என்று கூறினார்.(5:116,117) 

மேற்க்கனட வசனத்தில் ஈஸா (அலை) உயிருடன் இருந்த காலம் அவரின் உயிர் கைப்பற்றப்பட்டக் காலம், ஆகிய இரண்டு காலம் குறித்து வந்துள்ளது. அவர் உயிருடன் இருந்த காலம் வரை அவரை யாரும் வணங்கவில்லை. அதற்கு அவர் சாட்சியாக இருப்பது தெரிகிறது. உங்களின் நம்பிக்கை படி அவர் இன்னும் உயிரோடு இருப்பதாக இருந்தால் அவர் மீண்டும் இவ்வுலகிற்கு வரும்போது மக்கள் தன்னை வணங்குவதை கண்டிருப்பார். அதை கண்டித்து அறிவுறுத்தியிருப்பார். இதை குறித்து அல்லாஹ்விடம் நான் மீண்டும் உலகிற்கு செல்லும்போது மக்கள் என்னை வணங்கி கொண்டிருப்பதை கண்டேன். அவர்களை கண்டித்து உண்மையை கூறினேன். என அவர் கூறியிருப்பது குர்ஆனில் இடம்பெற்றிருக்கும். அவர் உயிருடன் இருந்தால் அவர் மீண்டும் உலகிற்கு வருவது குறித்தும் , தன்னை யாரும் வணங்க வேண்டாம் என அறிவுறுத்தியது ஏன் இடம்பெறவில்லை. மேற்கண்ட வசனத்தில், நான் உலகில் இருந்த காலம் வரை மக்கள் அல்லாஹ்வைத்தான் வணங்கினார்கள். என்னை யாரும் வணங்கவில்லை அதற்க்கு தானும் சாட்சி, அல்லாஹ்வும் சாட்சி என கூறியுள்ளார். தனது உயிரை கைப்பற்றிய பின் என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது அல்லாஹ்வே நன்கு அறிவான் என்பதை விளக்கியுள்ளார். இவ்வசனத்தில் இடம்பெற்றுள்ள"தவப்பைத்தனி" என்பதற்கு " நீ என் உயிரை கைப்பற்றிய பின்"என்று பொருளாகும். 

"தவப்பா" என்ற சொல் திருக்குர்ஆனில் அனைத்து இடங்களிலும்உயிரை கை பற்றுதல் என்ற பொருளில்தான் கையாளப்பட்டுள்ளது. அல்லாஹ் ஒரு மனிதனை கை பற்றியதாக வந்தால் அதற்க்கு மரணம் என்பது மட்டுமே பொருளாகும். நீங்கள் கூறுவது போல் உடலோடு கை பற்றுதல் என்ற ஒரு பொருள் இருக்குமேயானால் அதற்கு ஏதேனும் ஒரே ஒரு ஆதாரம் திருகுர்ஆன் நபி மொழிகளிலிருந்து காட்ட முடியுமா? இந்த சொல் வந்துள்ள அதே வசனத்தை (5:117) நபி (ஸல்) தனக்காகவும் பயன்படுத்தியுள்ளார்கள்: 

"என் தோழர்களில் சிலர் வலப் பக்கமும் இடப் பக்கமும் கொண்டு செல்லப் படுவார்கள். நான் இவர்கள் என் தோழர்கள் என்று கூறுவேன். இவர்களை விட்டு நீங்கள் பிரிந்ததிலிருந்து இவர்கள் தன் கால் சுவடுகளின் வழியே திரும்பி சென்று கொண்டிருந்தார்கள்." என்று சொல்லப்படும் அதற்கு நான் நல்லடியாரான மர்யமின் மகன் ஈசா (அலை) அவர்கள் சொன்னது போன்றே நான் இவர்களிடையே வாழ்ந்து வந்த வரை நான் இவர்களை கண்காணித்து கொண்டிருந்தேன். நீ என் உயிரை கைப்பற்றிய போது நீயே இவர்களை கண்காணிப்பாளனாக இருந்தாய் ............(புஹாரி 3447,4625) 

மேற்கண்ட நபிமொழியில் நபி (ஸல்) அவர்கள் ஈசா நபி தனக்காக என் உயிரை கைப்பற்றிய பின் என்று பயன்படுத்திய "தவப்பைதனி"என்ற சொல்லையே பயன்படுத்தயுள்ளர்கள். இச்சொல்லுக்கு இரு வேறு பொருள் கொடுக்க முடியாது. 

இச்சொல் திருக்குர்ஆனில் (3:55) ஈசா நபி (அலை) அவர்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. அச்சொல்லிற்கு ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இறப்பு என்ற பொருளையே கொடுத்துள்ளார்கள். (புஹாரி பாகம் 5 பக்கம் 273 ) 

மேற்கண்ட ஆதாரங்களில் இருந்து ஈசா (அலை) அவர்களின் மரணம் உங்களுக்கு தெளிவாகி இருக்கும் என்று நினைக்கிறோம். 

ஆதாரம்:2 

முஹம்மது ஒரு தூதர் மட்டுமே ஆவார். அவருக்கு முன் தோன்றிய தூதர்கள் மரணமடைந்து விட்டனர். (3:144) 

மேற்கண்ட வசனத்தில் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன் தோன்றிய தூதர்கள் அனைவரும் இறந்து விட்டனர். உயிருடன் ஒருவரும் இல்லை என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. 

நபி (ஸல்) அவர்கள் உஹது போரில் மயக்கமடைந்து விழுந்த போது முஹம்மது (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்ற வதந்தி பரவியது. இதனால் பலர் நபி எப்படி இறப்பார் எனக்கருதி இஸ்லாத்தை விட்டு வெளியேறினர். அதற்கு பதில் அளிக்கும் வகையில் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன்னுள்ள தூதர்கள் அனைவரும் இறந்து விட்டனர் என்று அல்லாஹ் உறுதி செய்துள்ளான். ஈசா (அலை) அவர்கள் உயிருடன் இருந்தால் அல்லாஹ் முன்னுள்ள தூதர்கள் அனைவரும் இறந்து விட்டனர் என எவ்வாறு கூறுவான். ஈசா (அலை) அவர்கள் உயிருடன் இருந்தால் அங்கு இருந்த நபித்தோழர்கள் ஈசா (அலை) இன்னும் உயிருடன் இருக்கும் போது நபி (ஸல்) எப்படி இறப்பார்கள் என கேள்வி எழுப்பி இருப்பார்கள். எனவே இச்சம்பவத்திலிருந்து ஈசா (அலை) உட்பட எல்லா நபிமார்களும் இறந்து விட்டது தெளிவாகிறது. 

முஹம்மது (ஸல்) அவர்கள் இறந்த போது ஹஸ்ரத் உமர் அவர்கள் நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை உயிருடன் உள்ளார்கள் என வாளேந்தி  நின்ற போது ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்தை ஒதி நபி (ஸல்) உட்பட அவருக்கு முன்தோன்றிய எல்லா நபிமார்களும் இறந்து விட்டதை உறுதி செய்தார்கள் அந்த நபிமொழி: 

"அபூபக்கர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வை புகழ்ந்து விட்டு எவர் முஹம்மது(ஸல்) அவர்களை வணங்கிக்கொண்டிருந்தாரோ அவர் முஹம்மது(ஸல்) இறந்து விட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். எவர் அல்லாஹ்வை வணங்கிக்கொண்டிருந்தாரோ அவர் அல்லாஹ் உயிருடன் இருப்பவன் இறக்கமாட்டான் என்பதை புரிந்து கொள்ளட்டும். மேலும் நபியே நீங்கள் இறக்க இருப்பவர்தாம். அவர்களும் இறக்கக்கூடியவர்களே.(39:30) எனும் வசனத்தையும் முஹம்மது ஒரு இறை தூதரே அன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் இறை தூதர்கள் காலம் சென்று விட்டார்கள். எனவே அவர் இறந்து விட்டாலோ அல்லது கொல்லப்பட்டுவிட்டாலோ நீங்கள் உங்கள் குதி கால்களில் திரும்பி சென்று விடுவீர்களா?.........(3:144) வசனத்தை ஓதினார்கள். ( புகாரி ஹதீஸ்: 3667,3668 ) 

மேற்கண்ட நபி மொழியிலிருந்தும் நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் போது முஹம்மது(ஸல்) அவர்களுக்கு முன்னுள்ள தூதர்கள் இறந்து விட்டனர். அது போல் முஹம்மத்(ஸல்) அவர்களும் இறந்து விட்டார்கள் என்று ஆதாரத்தை எடுத்து வைத்தார்கள். அங்கிருந்த சஹாபாக்களில் ஒருவர் கூட ஈஸா (அலை) உயிரோடு இருக்கும்போது முஹம்மது(ஸல்) அவர்கள் எப்படி இறப்பார்கள் என்ற கேள்வியை எழுப்பவில்லை.

இந்நிகழ்ச்சிகளிலிருந்து சஹாபாக்களின் ஏகோபித்த கருத்து (இஜ்மா) ஈஸா(அலை) உட்பட அனைத்து தூதர்களும் இறந்து விட்டனர் என்பதாகும். 

இந்நபி மொழியில் கவனிக்கவேண்டிய முக்கியமான் குறிப்பு ஒன்று உள்ளது. அக்காலத்தில் நபி (ஸல்) அவர்களை யாரும் வணங்கவில்லை. ஆனால் ஹஸ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்கள் முகம்மதை (ஸல்) யார் வணங்கினாரோ அறிக! முஹம்மது(ஸல்) இறந்து விட்டார். என்ற அறிவிப்பு நமக்கு புரிய வைப்பது என்னவென்றால், இறந்து விட்ட ஒருவரை உயிருடன் இருப்பதாக கருதுவது அவரை வணங்குவது போன்ற செயலாகும். ஆம், அது இணை வைத்தலே ஆகும். இறந்து விட்ட ஈசா(அலை) அவர்களை உயிருடன் இருப்பதாக இன்றும் நீங்கள் நம்பி வருவது அவரை வணங்குகின்ற இணைவைக்கின்ற செயலாகும். 

நபி(ஸல்) அவர்களுடன் விவாதம் செய்ய நஜ்ரானிலிருந்து கிறிஸ்தவ குழு வந்திருந்தபோது நபி(ஸல்) அவர்கள் அம்மக்களை நோக்கி இவ்வாறு கூறினார்கள்: எங்களின் இறைவன் உயிருள்ளவன், மரணிப்பவன் அல்ல. ஆனால் ஈஸா(அலை) இறந்து விட்டார்கள். (அஸ்பாப் அன்னுசூல்: பக்கம் 68) 

மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து ஈஸா(அலை) அவர்கள் இறந்து விட்டார்கள் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. இன்னும் ஏராளமான ஆதாரங்கள் திருக்குர்ஆன் நபி மொழிகளில் இருந்த போதும் உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைத்து இத்துடன் முடிக்கிறோம். 

அவரின் கேள்வி: 

அட காதியானி எனும் அடி முட்டாள்களே விண்ணுலகில் மரணித்த நபிமார்கள் இருந்தார்கள். உயிருள்ள ஈஸா(அலை) நபியும் இருந்திருக்கிறார்கள். என்பதை நபிகளார் (ஸல்) அவர்கள் தாம் உயிருடன் இருக்கும்போது பார்த்துள்ளார்கள். இதை மறுப்பீர்களா? புரியவில்லையா? 

நமது பதில்: 

காதியானிகள் எனும் அடி முட்டாள்களே என்ற வார்த்தைகளை போன்று இன்னும் பல வார்த்தைகளால் வசைபாடி உள்ளீர்கள். நாங்கள் பின்பற்றும் திருக்குர்ஆனும், நபி மொழியும் எங்களுக்கு உங்களை போன்ற வசைபாட அனுமதி வழங்கவில்லை. இக்காலத்தில் நேர்வழி காட்ட அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இமாம் மஹ்தி மஸிஹ் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களும் அவர்களை தொடர்ந்து வரும் கலீபாக்களும் எங்களுக்கு இவ்வாறு பேசுவதற்கு எவ்விதத்திலும் அனுமதி வழங்கவில்லை. எனவே நாங்கள் உங்களை போன்று பேச முடியாது. அல்லாஹ் கூறுகின்றான்: 

"நீர் என் அடியாரிடம் கூறுக: அவர்கள் மிகச்சிறந்ததையே பேச வேண்டும்" (17:33) 

மேலும் 

நபி (ஸல்) அவர்களை நோக்கி ஒரு யூதர் அஸ்ஸாமு அழைக்கும் உங்களுக்கு நாசம் உண்டாகட்டும், வ அலைக்கு உங்கள் மீதும் என்று மட்டுமே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஹழ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த யூதரை ஏசியபோது, ஆயிஷா (ரலி) அவ்வாறு ஏசாதே. நான்தான் அவருக்கு பதில் கூறிவிட்டேனே"(புகாரி) என்ற ஒரு அழகிய முன்மாதிரியை அன்றும், இன்றும் எங்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் கற்று தந்துள்ளார்கள். படிப்பினை பெறுவோருக்கு இது போதுமானது.

இப்போது நாம் தங்களின் கேள்வி பக்கம் வருகின்றோம், ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில்தான் மீராஜில் அனைத்து நபிமார்களையும் இறந்த நிலையில் பார்த்தார்கள் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் அனைத்து நபிமார்களும் மரணித்தவராக இருக்க ஈஸா(அலை) மட்டும் உயிருடன் இருந்தார்கள் என்று நீங்கள் கூறியிருப்பது எங்களுக்கு புரியவில்லை. மீராஜில் ஹழ்ரத் ஈஸா(அலை) அவர்களை நீங்கள் உயிருடன் இருப்பதாக கருதினால் அதற்க்கு அந்நிகழ்ச்சிகளிலிருந்து சான்றுகள் தந்திருக்க வேண்டும். ஏன் தரவில்லை? 

மீராஜில் அனைத்து நபிமார்களும் இறந்திருக்க, ஒருவர் மட்டும் உயிருடன் இருந்தால் நபி(ஸல்) அவர்கள் அவரை ஈஸா நபிதான் இவர் என எளிதாக அடையாளம் கண்டிருப்பார்கள். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. மேலும் நீங்கள்தானே ஈசா, அல்லாஹ் உங்களை உயிரோடும் உடலோடும் வானத்திற்கு உயர்த்திவிட்டான். இது குறித்து அல்லாஹ் திருமறையில் கூறியிருக்கின்றான். நீங்கள் கியாமத் நாளில் வரவிருக்கின்றீர்கள். இது போன்ற உரையாடலை நபி(ஸல்) அங்கு செய்திருப்பார்கள். அவ்வாறு செய்யாததிலிருந்து ஒன்று ஈஸா நபி இறந்து விட்டார் என்றும் இரண்டாவது கியாமத்திற்கு முன்பு வரவிருப்பவர் வேறொருவர் என்பதும் உங்களுக்கு புரியவில்லையா? 

ஈஸா(அலை) அவர்களை பார்த்து நபி (ஸல்) அவர்கள் இவர் யார்? என வினவினார்கள். அதற்க்கு ஹஸ்ரத் ஜிப்ராயில் (அலை) அவர்கள் மறுமொழி கூறியபோதுதான் இவர் ஈஸா என நபி(ஸல்) அவர்கள் அறிந்து கொண்டார்கள். 

ஈஸா(அலை) அவர்களை அல்லாஹ் தன்னிடத்தில் பூத உடலுடன் உயர்த்தி இருப்பதாக (உங்களின் கருத்துப்படி) கூறியிருக்க, அதற்கு மாறாக அவர் இரண்டாவது வானத்திற்கு எவ்வாறு வந்தார்? 

இறைவன் தன்னிடத்தில் ஈஸா நபியை உயர்த்தியதாக கூறியிருப்பது வானத்தைதான் குறிக்கும் என நீங்கள் கருதினால், அனைத்து நபிமார்களும் வானத்திலிருப்பதுப்பதிலிருந்து அவர்களையும் அல்லாஹ் தன்னிடத்தில் உயர்த்தியுள்ளான் என்பதை உங்களால் ஏன் புரிய முடிவதில்லையா? 

மீராஜில் நபி (ஸல்) உடலோடு உயிருடன் விண்ணுக்கு சென்றதாக தாங்கள் கருதுவது எங்களுக்கு தெரிகிறது. நபி(ஸல்) அவர்கள் உடலுடன் விண்ணுக்கு செல்லவில்லை அவர்கள் தூக்கமும், விழிப்பும் அற்ற நிலையில் பூமியில் இருந்தவாறே அக்காட்சியை கண்டார்கள். அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்: 

"அந்த உள்ளம் தான் கண்டதை குறித்து பொய்யுரைக்கவில்லை" (53:11) 

நபி (ஸல்) அவர்கள் மீராஜை உள்ளத்தால் கண்டார்கள் என்பதை மேற்கண்ட திருமறை வசனம் தெளிவாக எடுத்து கூறியுள்ளது. 

இதற்கு ஆதாரமாக நபிமொழியில் இவ்வாறு வருகின்றது: 

".............அடுத்த இரவில் நபி(ஸல்) அவர்கள் தமது உள்ளம் பார்கின்ற நிலையில் (உரக்க நிலையில்) அம்மூவரும் வந்தபோதுதான் அவர்களை கண்டார்கள். நபி(ஸல்) அவர்களின் கண் மட்டுமே உறங்கும். அவர்களது உள்ளம் உறங்குவதில்லை. இறை தூதர்கள் நிலை இவ்வாறுதான். அவர்களின் கண்களின் மட்டுமே உறங்கும். அவர்களின் உள்ளங்கள் உறங்காது............"(புகாரி: பாகம்7,ஹதீஸ்:7517) 

இதே நபிமொழியின் இறுதி பகுதியில் பக்கம் 844 ல் இவ்வாறு வருகிறது:

".........அப்போது ஜிப்ராயில் (அலை) அவர்கள் (நபியே!) அல்லாஹ்வின் திருப் பெயரால் இறங்குங்கள் என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் விழித்தார்கள். மஸ்ஜிதுல் ஹராமில் இருந்தார்கள்......." 

மேற்கண்ட குர்ஆன் மற்றும் ஹதீஸின் ஒளியில் நபி(ஸல்) அவர்கள் உறக்கத்தின்போது உள்ளத்தால் மீராஜ் எனும் ஆன்மீக காட்ச்சியை கண்டார்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. 

அவரின் கேள்வி:

காதியானிகளே முத்திரை என்றால் உங்களுக்கு என்னவென்று தெரியுமா? 

நமது பதில்: 

சிராஜின் இக்கேள்விகளிலிருந்து முத்திரையை பற்றி அவருக்கே தெரியவில்லை என்பது எங்களுக்கு தெரிய வந்தது. 

திருக்குர்ஆனில் அல்லாஹ் உள்ளங்களில் முத்திரையிட்டுள்ளான் என்று வந்துள்ள "கதம" என்ற வார்த்தையையும் "காத்தம்" என்ற இரு வேறு சொற்களை பிரித்தாலத் தெரியாமல் சிராஜ் குழம்பி இருக்கின்றார். இவ்விரு சொற்களுக்கு தமிழில் விளக்குவதாக இருந்தால் தமிழ் தெரியாதா ஒருவருக்கு "மாணவி" "மனைவி" என்ற சொற்கள் ஒருபோல் தெரிவது போல் சிராஜ் அவர்களுக்கு "கதம்" "காத்தம்" ஒருபோல் தெரிகிறது. 

"காத்தம்" என்ற சொல் திருக்குர்ஆனில் ஒரு இடத்தில் மட்டுமே கையாளப்பட்டுள்ளது. "காத்தமுன் நபிய்யீன்" என்ற சொல்லுக்கு"நபிமார்களின் முத்திரை" தலைச் சிறந்தவர் என்பது பொருளாகும்."காத்தம்" என்ற சொல் பன்மை சொல்லுடன் கையாளப்படும்போது அதுசிறப்பை குறிக்கும் என்பது அரபி மொழியின் சொல்வழக்காகும். உதாரணமாக: நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களை நோக்கி கூறுகின்றார்கள்: 

"எனது சச்சாவே! நான் எவ்வாறு "நபிமார்களுக்கெல்லாம் காத்தமாக இருக்கின்றேனோ, அவ்வாறே தாங்கள் முஹாஜிர்களுக்கெல்லாம் காத்தமாக இருக்கின்றீர்கள்" ( கன்சுல் உம்மால்: பாகம் 13, பக்கம் 519) 

இதே போன்று ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களை குறித்து "காத்தமுல் அவுலியா" என கூறியுள்ளார்கள். (தப்சீர் ஷாபி: சூரா அஹ்சாப் எனும் அதிகாரம்,) 

"காத்தம்" என்ற சொல்லுக்கு "இறுதி" என்ற பொருள் கொண்டால் ஹஸ்ரத் அப்பாஸ் (ரலி) அவர்கள் "இறுதி முஹாஜிர்" என்றும், ஹழ்ரத் அலி (ரலி) அவர்கள் "இறுதி வலி" என்றும் நம்ப வேண்டியது வரும். இதனால் ஹழ்ரத் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு பின் எந்த முஹாஜிரும் இல்லை என்றும் இஸ்லாமிய சான்றோர்கள் செய்த அனைத்து ஹிஜ்ரத்துகளும் மறுக்கப்பட்டு வீண் செயலாகிவிடும். இதை போன்று ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களுக்குப் பின் எந்த இறைநேசரும் வர மாட்டார் என்றும் இஸ்லாமிய சமுதாயத்தில் ஒருவர் கூட இறை நேசராக வரவில்லை என்ற அவ சொல்லுக்கு ஆளாக வேண்டியதுவரும். 

நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஹழ்ரத் ஆயிஷா(ரலி) அவர்கள் "காத்தமுன் நபிய்யீன்" என்ற சொல்லுக்கு இவ்வாறு விளக்கம் அளிக்கின்றார்கள்: 

"நபி (ஸல்) அவர்களை காத்தமுன் நபிய்யீன் என்று சொல்லுங்கள், ஆனால் அவர்களுக்கு பிறகு எந்த நபியும் வர மாட்டார் என கூறாதீர்கள்.(துர்ரே மன்சூர் : பாகம் 5, பக்கம் 386) 

ஹழ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்றிலிருந்து "காத்தமுன் நபிய்யீன்" என்பதற்கு இறுதி நபி இனி எந்த நபியும் இல்லை என பொருள் கொள்வது தவறு எனத் தெரிகிறது. நபி (ஸல்) அவர்கள் எனக்குப்பின் ஹஸ்ரத்  ஆயிஷாவிடமிருந்து மார்க்கத்தை கற்றுக் கொள்ளுங்கள். என கூறியிருப்பது இவ்விடம் குறுப்பிடத்தக்கதாகும். 

முத்திரை நபி என்று சொன்னவுடன் நபித்துவம் முடிந்து விட்டது என தவறாக கணக்கு போட்டு விட்டீர்கள். முத்திரை என்றால் "சீல்"ஒன்றை மூடிவிடுவது என நினைப்பது தவறான பொருளாகும். ஒரு கடிதத்தில் அரசாங்கம் முத்திரை வைக்கிறது என்றால் அந்த கடிதம் சரியான முறையில் ஸ்டாம்ப் ஓட்டப் பட்டு தபால்முறை சட்டங்களுக்கு உட்பட்டு இருக்கிறது என அரசு அங்கிகாரம் சான்று வழங்குவதை குறிக்கும். இதுபோல் தான் உணவு பண்டங்களின் மீது ஐ.எஸ்.ஐ முத்திரை வைப்பது போன்ற முத்திரைகள் தரச்சான்றுகளுக்காக அரசு வைப்பதாகும்.இவைகளில் எங்குமே முடிந்து விட்டது என்ற பொருள் இல்லை. 

இது போன்று தான் நபிமார்களின் முத்திரை என்பது இனி நபி(ஸல்) அவர்களின் முத்திரை இல்லாமல் யாரும் முஸ்லிம் மற்றும் மூமினாக முடியாது. மேலும் முஹம்மது (ஸல்) அவர்களின் முத்திரை இல்லாமல் எந்த நபியும் எந்த ரசூலும் இனி வரமுடியாது. கடந்த காலத்தில் வந்த நபிமார்களும் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் முத்திரையினால் தான் நபிமார்கள் என்றும் பரிசுத்தவான்கள் என்றும் அடையாளம் காணப்பட்டார்கள். 

நபி(ஸல்) அவர்களுக்கு பின் இமாம் மஹ்தியும், மசிஹும் வர இருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் இறுதி நபி என்று எவ்வாறு சொல்ல முடிகிறது. இவ்வும்மத்தில் வரக்கூடிய ஈஸா(அலை) அவர்களை குறித்து நபி (ஸல்) அவர்கள் அவர் அல்லாஹ்வின் நபியாவார், அவருடன் சஹாபாக்களும் வருவார்கள். என்று ஒரே நபி மொழியில் நான்கு முறை கூறியுள்ளார்கள். (ஆதாரம்: முஸ்லிம்: பாகம் 4, ஹதீஸ்: 5629) 

அவ்விருவரையும் (இமாம் மஹ்தி, ஹழ்ரத் ஈஸா (அலை))வெவ்வேறாக கருதிவிடவேண்டாம். அவர்கள் இருவரும் ஒருவரே என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: இப்னு மாஜா: பாகம்:2பக்கம்:1341) 

வரக்கூடிய மஹ்தி மஸிஹ் அவர்கள் நபியாக இருப்பார்கள் என்பதை நாம் மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து தெளிவாக அறிந்தோம்.எனவே தனது உள்ளத்திலையே முத்திரையிடப்பட்டுள்ளதை அறியாது பிறரை பார்த்து முத்திரையிடப்பட்டதாக கனவு காணும் சிராஜ் அவர்களே! இனியாவது உங்கள் உள்ளத்தின் முத்திரையை துடைத்து விட்டு நபிகளார் (ஸல்) இட்ட முத்திரையை விளங்கி உங்கள் உள்ளத்தில் அதை சுமந்திடுவீர்கள் என நம்புகிறோம். இன்ஷா அல்லாஹ்..... 

அவரின் கருத்து:

காதியானிகளே அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். காபிர்களாக மரணித்துவிடாதீர்கள். 

நமது விளக்கம் : 

சிராஜ் செய்துள்ள தமாஷை பார்த்து சிரிப்பத அழுவாத என தெரியவில்லை. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என அவர் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. இன்று உலகில் காணப்படும் எந்த இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது. TNTJ வா? INTJ வா? JAQH வா? TMMK வா? MMK வா? இது போன்று இன்னும் ஏராளம் தாராளம். இவ்வாறு சிதறுண்டு கிடக்கும் ஆங்கில எழுத்துக்களில் எப்பிரிவை இஸ்லாம் என்று கூறுகின்றீர்கள். அவைகளில் உடன்பாடு இல்லாததால் தான் நான் எந்த பிரிவினையும் சார்ந்தவனல்ல, நான் தனி மரம் என்று கூறி தவியா தவிக்கின்றீர்கள். எங்களையும் அவ்வாறு தவிக்க அழைக்கின்றீர்களா?மேற்கண்ட எந்த எழுத்தில் சேர்ந்தாலும் அவர்களை பிற எழுத்துக்களை சார்ந்தவர்கள் இஸ்லாம் என ஒப்புக்கொள்வதில்லை. எனவே அவைகளில் எவற்றில் இணைந்தாலும் இஸ்லாம் இல்லை என்ற அவப்பெயரைத்தான் பெற வேண்டியது வரும். இன்று தமிழகத்தில் உள்ள பெயர்தாங்கி முஸ்லிம்களின் நிலை உங்களுக்கு பாடம் புகட்டவில்லையா? தொப்பியை கழற்றுவதும், விரலை உடைப்பதும் மட்டுமல்லாது ஒரே பள்ளிவாசலில் பத்து வேலை தொழுகை நடப்பதும் இரு ஜும்ஆக்கள் நடப்பதும் துப்பாக்கி ஏந்தும் கலாச்சாரமும் பில பிரிவுகளை காபிர், முர்த்தத் என பத்வாக்களை விழாக்கால சலுகையாக வழங்குவதும் உங்கள் சிந்தனையை தூண்டவில்லையா? எந்த சிந்தனையில் நீங்கள் இவ்வாறு எங்களை நோக்கி கூறினீர்கள்? 

முஸ்லிம்கள் என்றால் யார்? என்பதை பற்றி உங்களுக்கு தெளிவு படுத்தினால் எங்களை காபிர் என வசைபாடுவதிலிருந்து தௌபா செய்வீர்கள் என நினைக்கின்றேன். நபி(ஸல்) அவர்கள் கலிமா கூறியவரை முஸ்லிம் என அங்கீகரித்துள்ளார்கள். ஒரு முஸ்லிமை நோக்கி இவர் கொண்டுள்ள ஈமான் போலியானது என ஒருவர் கூறுவாரேயானால், நபி(ஸல்) அவர்கள் உசாமா பின் சைத் (ரலி) அவர்கள் ஏன் வாளுக்கு பயந்து இவர் கலிமா சொன்னார் என கூறியபோது, அவர் உள்ளத்தை பிளந்தா பார்த்தீர் என மிகவும் சிவந்த முகத்துடன் கேட்டது மட்டுமல்லாமல் இனி ஏன் முன் வராதே எனக் கூறியதுபோல் எங்கள் ஈமானை குறை கூறுபவர்களிடம் நபிகளாரின் வார்த்தைகளை முன்வைத்து கேட்க்கின்றோம்....சிராஜ் அவர்களே! எங்களை காபிர் என கூறுபவர்களே! நீங்கள் எங்கள் உள்ளத்தை பிளந்து பார்த்துவிட்டீர்களா?உள்ளத்திலுள்ளதை அறிபவன் அல்லாஹ் மட்டுமே..இவ்வாறு கூறுபவர்கள் எப்போது அல்லாஹ்வானார்கள்? 

ஓர் முஸ்லிமுக்கு இலக்கணமாக ஹஸ்ரத் எம்பெருமானார் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்: 

"யார் நாம் அறுப்பதை போல் அருப்பாரோ, கிப்லாவை முன்னோக்கி தொழுவாரோ அவர் முஸ்லிம் என்பதற்கு அல்லாஹ்வும் நானும் பொறுப்பேற்றுள்ளோம். அதற்க்கு நீங்கள் மாறு செய்யாதீர்கள்" (முஸ்லிம்) 

இவ்வாறு தெளிவான நபி மொழி இருந்தும் கூட இஸ்லாமிய சமுதாயம் பிறரை நோக்கி காபிர் என கூறுவது வேதனை அளிப்பதாக உள்ளது. 

அல்லாஹ்வின் அருளால் நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அறுத்ததை போல் அறுத்து புசிக்கின்றோம். கிப்லாவை முன்னோக்கி தொழுகின்றோம். நாங்கள் முஸ்லிம் என்பதற்கு அல்லாஹ்வும் ரசூலும் பொறுப்பேற்றுள்ளார்கள். இதற்கு பிறகும் எங்களை நோக்கி முஸ்லிம்களின் அனைத்து பிரிவுகளும் ஒன்று கூடி மக்காவில் ராபிததுல் ஆலமீன் சபை காபிர் என பத்வா வழங்கிவிட்டது என யார் கூச்சலிட்டாலும் நாங்கள் அதை பொருட்படுத்துவதில்லை. அந்த வீனர்கள் அல்லாஹ் மற்றும் ரசூல் (ஸல்) ஏற்றுக் கொண்ட பொறுப்பின் மீது கை வைக்கத் துணிந்துவிட்டார்கள் என்ற வேதனைதான் எங்களுக்கு எஞ்சியுள்ளது. 

நபி(ஸல்) அவர்களின் ஒரு எச்சரிக்கையை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்: 

"யார் ஒரு முஸ்லிமை காபிர் என கூறுவாரோ அவ்வாறு கூறியவர் காபிராகிவிடுவார்"(ஆதாரம்: முஸ்லிம் 6045) 

இந்த நபிமொழிக்கிணங்க இன்று எங்களை காபிர் என யார் கூக்குரல் இடுகின்றார்களோ, அவர்கள் தங்களின் முடிவினை குறித்து அல்லாஹ்வுக்கு அஞ்சி கொள்ளட்டும். 

இஸ்லாமிய பிரிவுகள் ஏனைய இஸ்லாமிய பிரிவுகளை நோக்கி காபிர், முர்த்தத் என்று வழங்கியுள்ள பத்வாக்கள் இஸ்லாமிய வரலாற்றை கரைபடிந்ததாக ஆக்கியுள்ளது. சிராஜ் அவர்களே! மற்றவர்கள் முஸ்லிம்கள் என்றால் அவர்களை காபிர் என கூறும் இஸ்லாமிய பிரிவுகள் எவ்வாறு முஸ்லிம்களாக இருக்க முடியும்? காபிர் பத்வாவிற்கு தப்பிய எந்த இஸ்லாமிய பிரிவும் உலகில் இல்லை. ஒன்று பத்வாவால் காபிர் ஆகிவிட்டார்கள். அல்லது பத்வா கொடுத்து காபிராகிவிட்டார்கள். நீங்கள் எங்களை கூறியதுபோல் காபிர்களாக மரணித்துவிடாமல் இருக்க வேண்டுமானால் இறைவன் அனுப்பிய இமாமை ஏற்றுக் கொள்வதுதான் ஒரே வழியாகும். 

நபி(ஸல்) அவர்கள் தனது உம்மத் 73 பிரிவுகளாக பிரிந்து விடும் என்றும் அதில் ஒன்றை தவிர ஏனைய பிரிவினர் நரகம் செல்வர் என்று கூறியுள்ளார்கள்(மிஷ்காத்) இன்று அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தை அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்று கூடி காபிர் என பத்வா வழங்கியதிலிருந்து சுவர்க்கம் செல்லும் ஒரு பிரிவை அவர்கள் அடையாளம் இட்டுக் காட்டியிருப்பது உங்களுக்கு புரியவில்லையா? சுவர்க்கமும், நரகமும் எவ்வாறு ஒன்று சேரும்? சுவர்க்கவாசிகளோடு ஒரு போதும் நரகவாசிகள் இணைந்திருக்க மாட்டார்கள் என்பது இன்றைய இஸ்லாமிய சமூகத்தின் செயல் உங்களுக்கு உணர்த்தவில்லையா? 

சுவர்க்கம் செல்லும் அந்த பிரிவு என்னையும் என் ஸஹாபாக்களையும் போல் இருப்பார்கள் என நபி(ஸல்) கூறியதிலிருந்து அந்த பிரிவு யார் என்று உங்களுக்கு தெரியவில்லையா?இன்று நபி(ஸல்) மற்றும் அவர்களின் ஸஹாபாக்கலைபோல் ஒரே தலைமையின் கீழ் ஒரு கிலாபத்தின் கீழ் செயல்படும் ஜமாஅத் உலகில் எங்களை தவிர வேறு எங்குமுண்டா? என்னையும் என் ஸஹாபாகளையும் என்ற வார்த்தைகளிலிருந்து நபியும் சஹாபாக்களும் (கலீபாக்களும்) கொண்ட ஒரு ஜமாஅத் உலகில் செயல்படும் அவர்களே சுவர்கவாசிகள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பது உங்கள் சிந்தனையை வருடவில்லையா? 

சொர்க்கம் செல்லும் பிரிவு குறித்து முல்லா அலியுல் காரி (ரஹ்) அவர்கள் அந்த பிரிவு தரீகத்துல் அஹ்மதிய்யா (அஹ்மதிய்யா இயக்கத்தை) சார்ந்தவர்கள் எனக் கூறியுள்ளார்கள்.(மிர்காத் ஷரஹ் மிஷ்காத்: பக்கம்:204) மேற்கண்ட ஆதாரங்களில் இருந்து உண்மையான முஸ்லிம்கள் யார்? காபிர்கள் யார்? என்பதை தாங்கள் அறிந்து இருப்பீர்கள். 

சிராஜ் அவர்களின் கருத்து:

காதியானிகள் இப்லீஸை ஏதோ உதாரணப்பொருள் என்றும் உவமை என்றும் தான் நம்புகின்றனர்.............. ஜின்களும் இப்லீஸின் இனம் தான் ஆதமை எவ்வாறு அல்லாஹ் படைத்தானோ அது போல் தான்............இப்லீஸையும் அல்லாஹ் படைத்தான். 

நமது விளக்கம் : 

அல்லாஹ் தன் திருமறையில் இப்லீஸை குறித்து அவன் ஜின்களை சார்ந்தவனாக இருந்தான். (18:50) என அல்லாஹ் கூறியிருக்க இறை வசனத்திற்கு எதிராக தலைகீழாக ஜின் இப்லீஸை சார்ந்தவனாக இருந்தான் என்று சிராஜ் அவர்கள் கூறியிருக்கிறார். இது அவரின் அறியாமை அல்லது குர்ஆனின் ஞானமின்மையை வெளிப்படுத்துகின்றது. அல்லாஹ் இப்லீஸை ஜின்னை சார்ந்தவனாவான் என கூறும்போது இல்லை இல்லை ஜின்கள் இப்லீஸை சார்ந்தவர்களாவர் என கூறுவது இறைவன் கூறிய வரிசையை மனோயிச்சைபடி மாற்றுவது தவறான விளக்கத்துக்கு வழி கோரும். 

இப்லீஸ் என்பது பெருமை அடித்தல், அகம்பாவம் கொள்ளுதல் போன்ற பண்புகளை உடையவர்களை குறிக்கும் என்று நாங்கள் கூறுவது உண்மைதான். அதற்க்கு மேற்கண்ட வசனமே விளக்கமளிக்க போதுமானது. இப்லீஸ் என்பவன் ஜின்னை சார்ந்தவன்தான். தனி படைப்பு ஒன்று மல்ல என்று அவ்வசனம் எடுத்து வைத்துள்ளது. அவன் ஜின்னை சார்ந்தவனாக இருக்கும்போது அவனை தனி படைப்பு என்றும் அல்லாஹ் அவனை படைத்தான் என்றும் உங்களுக்கு ஆதாரம் காட்ட வேண்டுமா? என்றெல்லாம் நீங்கள் வீர வசனம் எவ்வாறு கூறினீர்கள்.? 

நீங்களே ஓரிடத்தில் இவ்வாறு கூறியிருக்கின்றீர்கள், அதாவது இப்லீஸை நெருப்பால் படைக்கப் பட்டதன் பொருள் என்னவென்றால் நெருப்பு என்பது அகங்காரம் தற்பெருமை எனும் பண்பை குறிக்கும் என எழுதிவிட்டு, இப்லீஸை எவ்வாறு தனி படைப்பு என்றும், இப்லீஸை உவமையாக கூறுவதை எவ்வாறு கேலி செய்கின்றீர்கள்? இது உங்களையே நீங்கள் கேலி செய்வதை போல் உள்ளது. உங்கள் கேலிக்கு நீங்களே விடை தேடிக் கொள்ளுங்கள். அல்லாஹ் நபிமார்களை குறித்து திருக்குர்ஆனில் இவ்வாறு கூறியுள்ளான்: 

"பூமியில் வானவர்கள் அமைதியாக நடந்து திரிந்து வாழ்ந்திருந்தால் நாம் அவர்களுக்கு நிச்சயமாக வானத்திலிருந்து ஒரு வானவரையே தூதராக இறக்கியிருப்போம்" (17:95) 

இவ்வசனத்தில் அந்தந்த கூட்டத்தினரிடம் அவர்களிலிருந்தே அல்லாஹ் நபிமார்களை அனுப்புகிறான் என்பது தெளிவாகிறது. பூமியில் மனிதர்கள் வாழவே அல்லாஹ் மனிதராகிய ஆதமை நபியாக அனுப்பி வைத்தான். அல்லாஹ் தன்னுடைய வார்த்தைக்கு மாறாக எவ்வாறு செயல்படுவான். மனிதராகிய ஆதமை மலக்குகள் மற்றும் இப்லீசிடம் அனுப்பி வைத்து ஆதமுக்கு சஜ்தா செய்யுங்கள் என்று எவ்வாறு கட்டளையிடுவான்? இந்த கட்டளையானது மனிதர்களுக்கு இட்ட கட்டளையே ஆகும். அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிந்து ஆதமுக்கு கட்டுப் பட்டவர்களை மலக்குகள் என்றும் கட்டு படாமல் பெருமை அடித்தவர்களை இப்லீஸ் என்றும் அல்லாஹ் இங்கு இனம் பிரித்து காட்டியுள்ளான். இன்றைய மானிதர்களில் சிலர் சிலரை குரங்கு என்றும் பன்றி, நாய், சிங்கம் என்றும் தங்கமானவன் என்றெல்லாம் இகழ்ந்தும்,புகழ்ந்தும் பேசி வருகின்றனர் இதற்க்கு அவர்கள் அவ்வாறே ஆகி விட்டார்கள் என்பது பொருளல்ல. அவற்றின் பண்புகளை இவர்களிடம் பிரதிபலிக்கும்போது இவ்வாறு இகழவும், புகழவும் செய்கின்றனர். ஆக அல்லாஹ் தனது திருமறையில் இப்லிசை குறித்து கூறியிருப்பது உவமையே என்பதை தாங்கள் புறிந்திருப்பீர்கள் என நம்புகிறோம். 

சிராஜின் கருத்து:

சுவர்கத்தில் காதியானிகள் எருமை மாடுகள் இருப்பதாக கூறுகின்றார்கள். 

நமது விளக்கம்: 

ஒருவர் என்ன கூறுகின்றார் என்பதை புரியக் கூடிய அறிவு முதலில் வேண்டும் இல்லையெனில் வாயை மூடி இருக்க வேண்டும். வாய்க்கு வந்ததெல்லாம் பேசவும் எழுதவும் கூடாது. சுவர்கத்தில் பாலாறுகளும் , தேனாறுகளும் ஓடுகிறது என்று திருக்குர்ஆனில் வருகிறது, இதை வைத்து சுவர்கத்தில் எருமை மாடுகளின் கூட்டமும்,தேனீக்களின் கூட்டமும் இருக்கிறது என்று கூறுவார்களா? என்ற கேள்வியை எழுப்பி எருமை மாடுகளின் கூட்டம் சுவர்கத்தில் இல்லை என்பதை மறுத்துதான் இருக்கிறார். ஆனால் நீங்கள் எங்களின் மீது சிந்திக்காமல் அபாண்டத்தை சுமத்தியிருப்பது பரிதாபமாக உள்ளது. இனியாவது சொல்ல வந்த கருத்தை அறிந்து புரிந்து எழுதவும்.
Read more »

திருக்குர்ஆன் விரிவுரை என்ற பெயரில் ஆன்லைன் பொய்யனின் அட்டகாசம்

ஒரு நபிக்கு கொடுக்காத சிறப்பை வேறொரு நபிக்குக் கொடுத்திருப்பது உண்மைதான் மறுப்பதற்கில்லை. ஆனால் எல்லா நபிமார்களைவிடவும் காத்தமுன் நபியாகிய நபி(ஸல்) அவர்களுக்கு எல்லாவகையிலும் அந்தஸ்தையும் சிறப்பையும் கொடுத்திருப்பதை நீங்கள் மறுக்கிறீர்களா? மறைமுகமாக அல்லாமல் நேரடியாக பதில் கூறுங்கள். நாங்கள் குரானின் அடிப்படையிலேயே மறுத்து நபி(ஸல்) அவர்கள்தான் எல்லா நபிமார்களை விட எல்லாவகையிலும். சிறந்தவர்கள். அவர்களுக்குக் கொடுக்கப்படாத எந்த அந்தஸ்தையும் வேறொரு நபிக்குக் கொடுக்கவில்லை என்பதை ஆணித்தரமாக நிரூபித்துக் காட்டுகிறோம். நிரூபித்துக்காட்டி வருகிறோம்.

அடுத்து 4:157,158 வசனங்களைக் காட்டி அவர் மரணிக்கவில்லை அவரை தனன்ளவில் உயர்த்திக் கொண்டான். என்று கூறி இதில் அந்தஸ்து என்பது ஏற்புடையதாகாது. உடல் ரீதியாகத்தான் உயர்த்திக் கொண்டான் என்று விரிவுரை வழங்கியுள்ளீர்கள்.இதற்க்கு துணையாக 43;61 ஆயத்தையும் சேர்த்துக்கொண்டுள்ளீர்கள்.

இறைவன் ஜடபொருளாகவோ, அவனுக்கென்று ஒரு தனி இடத்தைஅமர்த்திக் கொண்டாலோதான்
உங்களின் உடல் ரீதியான உயர்வு, வாதம் எடுபடும். ஆனால் இங்கு அந்தஸ்துதான் என்பதற்கு இறைவனின் இருப்பிடம் சம்பந்தமான ஒரு கேள்விக்கு நபி(ஸல்) அவர்கள் கூறிய மறுமொழி ஒரு சான்றாக உள்ளது.

நீங்கள் அந்நஜாத்தில் ஆசிரியராக இருந்த போது 1986, செப்டம்பர் இதழில் பக்கம் 46 இல் சிறுவர் பகுதியில் அலாவுதீன் அவர்கள் கேள்வி-பதில் பகுதியில் 'அல்லாஹ் வானத்திலுள்ள அர்ஷின் மீதிருக்கிறான் அர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) அர்ஷின் மீது ஒழுங்குற அமைந்தான்' (20:5) என இறைவன் தன்னைப் பற்றி குறிப்பிடுகின்றான். அதாவது 'மதிப்பில் உயர்ந்திருக்கிறான். கண்ணியத்தால் உயர்வு பெற்றிருக்கிறான்' என்று அதற்குப் பொருள் கொள்ளவேண்டும் என நபி(ஸல்) கூறியதாக புகாரியில் ஒரு அறிவிப்பில் காணப்படுகிறது என எழுதியுள்ளீர்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? அல்லாஹ் தன்னளவில் உயர்த்திகொண்டான் என்றால் அந்தஸ்து அளவில் உயர்த்திக் கொண்டான் என்றே பொருள் கொள்ள வேண்டுமேயல்லாது உடல் ரீதியாக அப்படியே உயர்த்திக்கொண்டான் என்றால், அதனால் எழும் பல்வேறு கேள்விகளுக்குப் பகுத்தறிவு ரீதியிலான பதில் சொல்லமுடியாமல் போய்விடும். இறுதியில் அல்லாஹ்வின் வல்லமையில் பழியைப் போட்டு தப்பித்துக் கொள்ள வேண்டியதுதான்.

மேலும் (4:157,158) வசனங்களின் அடிப்படையில் யூதர்கள், மரியமின் குமாரரைக் கொன்றுவிட்டதாக கூறுகிறார்கள், ஏன் கொலை செய்ய எண்ணவேண்டும்? அவருடைய உடலைக் கொன்று விட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமா? பிரச்சனை அங்கு 'நபித்துவம்' என்ற அந்தஸ்து விஷயம்தானே அல்லாது உடல் சம்பந்தப்பட்டதல்ல,

ஈசா(அலை) தம்மை இறைவனிடமிருந்து வந்துள்ள தூதர் என்று வாதித்தார்கள் யூதர்கள் அவரை எப்படியும் பொய்ப்படுத்தியே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு எத்தனையோ வழிகளில் முயற்சி செய்து தோல்வியடைந்து, இறுதியில் அவரைத் தங்களின் வேதத்தில் கூறப்பட்டபடி சிலுவையில் அறைந்து கொன்றுவிட்டால் அவர் சபிக்கப்பட்ட மரணத்தையடைந்து விட்டார் என்று பிரபல்யப்படுத்தி, சபிக்கப்பட்ட மரணத்தை அடைந்தவர் எப்படி நபியாக அந்தஸ்தில் உயர்ந்தவராக இருக்கமுடியும் என்று கூறி அவரைப் பொய்ப்படுத்தி விடலாம் என்று எண்ணி அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லத் திட்டம் தீட்டி செயல் பட்டனர். நபி என்ற அந்தஸ்திலிருந்து சபிக்கப்பட்ட அந்தஸ்திற்கு கொண்டுவரவே அவர்கள் முனைந்தனர்.

யூதர்களுக்கும் ஈசா(அலை) அவர்களுக்கும் இடையிலுள்ள பிரச்சனை சொத்துத் தகராறோ, கொடுக்கல் வான்கள் தகராறோ அல்ல. அவர்களின் உடலை மட்டும் கொன்று அவர்களுக்கு அதனால் என்ன லாபம்? அந்த இடத்தில்தான் இறைவன் ஈசா(அலை) அவர்கள் உண்மையான நபி: அவர்கள் அந்தஸ்தில் குறைந்தவரல்ல என்று நிரூபிப்பதற்காக அவரை சிலுவை மரணத்திலிருந்து காப்பாற்றி அவருக்கு அந்தஸ்தில் உயர்வைக் கொடுத்தான். இதில் யாரும் திடீரென அந்தஸ்துக்குத் தாவவில்லை. பிரச்சனையே ஈசா(அலை) அவர்களின் நபித்துவம்(அந்தஸ்து) பற்றியதுதான். நீங்கள்தான் 'உடல்' என்று தாவி புதுவடிவம் கொடுத்து விரிவுரை என்ற பெயரில் விளையாடியுள்ளீர்கள்.

நிச்சயமாக அவர் இறுதிநாளின் அடையாளமாவார்(43:61) என்ற ஆயத்திற்கு நீங்களாகவே ஒரு விளக்கமளித்ததோடல்லாமல் நபி(ஸல்) அவர்கள் அந்த ஆயத்திற்கு விளக்கமளித்ததுபோன்று ஒரு தோற்றத்தை புகாரி,முஸ்லிம் ஹதீஸ் மூலம் காட்டியுள்ளீர்கள். அந்த ஹதீஸ், இப்னு மர்யமின் வருகையைப்பற்றி நபி(ஸல்) அவர்கள் அறிவித்த ஹதீஸ் அந்த வருகை எப்படி நிகழும் என்பதையும் சுன்னத்துல்லாவின் அடிப்படையில் ஏற்கனேவே விளக்கியுள்ளோம். அந்த நேரத்தின் அடையாளம் என்ற வசனத்திற்கு அந்த ஹதீஸ் விளக்கமாகாது.

விளக்கமில்லாத ஹதீஸை உங்களுக்குச் சாதகமாக விளக்கம் என்று எடுத்துக் காட்டி. உண்மையிலேயே ஈசா(அலை) அவர்களின் மரணத்திக்கு சான்றாக நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்துள்ளதாக உள்ள புகாரியில் தெளிவாக வந்துள்ள (பலம்மா தவபைத்தனி என்ற (5:118) ஆயத்திற்கு விளக்கம்) ஹதீஸை மறைத்துள்ள காரியம், நீங்கள் எவ்வளவு பெரிய மோசடிக்காரர் என்பதை தெளிவாக உணர்த்தக் கூடியதாக உள்ளது. ஒரு பிரச்சனை சம்பந்தமாக திருக்குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றிலிருந்து, எல்லா வசனங்களையும் இணைத்து முரண்படாத வகையில் விளக்கமளித்து, ஒரு முடிவுக்கு வரவேண்டுமேயல்லாமல், விரிவுரை எழுதுவதாகக் கூறிக்கொண்டு முரண்படக்கூடியவிதத்திலும் யுக்திக்கும், புத்திக்கும் பொருந்தாத விதத்திலும் ஒன்றைக் காட்டி மற்றொன்றை மறைத்து எழுதினால் இறைவனின் கோபத்திற்கும், சாபத்திற்கும்தான் ஆளாக நேரிடும். அறிவுடைய மக்கள் இதை தெளிவாக புரிந்துகொள்வார்கள், சிந்தித்து செயல்படக்கூடியவர்கள் மத்தியில் உங்களின் வாதம் எடுபடாது. விரைவில் உங்களின் தவ்ஹீது மூட்டையைக் கட்டிக் கொண்டு ஓட நேரிடும். உங்களின் தவறான கருத்துக் அடிகிடைக்கின்றபோது அந்த ஆயத்துகளையும், ஹதீஸ்களையும் கண்டுகொள்ளாமல் நழுவுவதும் உங்களுக்குக் கைவந்த கலையாக உள்ளது.

'இன்னஹுல இல்முஸாஅத' என்ற வசனத்தில் ஈசா(அலை) இறுதி நாளின் அத்தாட்சியாகும் (அடையாளம்) என்று எழுதியுள்ளீர்கள். 'இன்னஹு' என்பதில் 'ஹூ' என்பது குரானைக் குறிக்கும் என்று பல விரிவுரையாளர்கள் எழுதியுள்ளார்களே! அது எப்படி உங்களுக்கு உறுதியான சான்றாக முடியும். இறுதி நாள் என்று எங்கேஉள்ளது? அந்த வசனத்திலுள்ள 'ஸாஅத' என்பது அந்த நேரம் என்றல்லவா பொருள்படும்.

இதனால் அவர் விண்ணில் உள்ளார் என்பதற்கு என்ன சான்று? உயிருடன் விண்ணிலிருந்து இறங்குவார் என்று அதில் எழுதப்படவில்லையே, இனி ஹதீஸில் அவர் இறங்குவார் என்றிருக்கிறது என்றால் அதற்கு திருக்குரானின் அடிப்படையிலேயே பொருள் கொள்ளவேண்டும்.

இன்னும் 'இல் முஸ்ஸாஅத்' என்பது ஈசாதான் என்று அடம்பிடிப்பதானால். அந்த சூராவின் 86 வது வசனத்தில் 'வ இன்ஹு இல்முஸ்ஸாஅதி' என்று வந்துள்ளது. அதாவது உங்கள் கருத்துப்படி ஈசா(அலை) அவனிடம் இருக்கிறார் என்று பொருள் வைத்துக் கொண்டாலும் தொடர்ந்து அல்லாஹ்கூறுகின்றான் 'வ இலைஹி துர்ஜவூன்' என்று, அதாவது நீங்கள்தான் அவரிடம் செல்லவேண்டுமே அல்லாது ஈசா இங்கே வரமாட்டார், எனவே இனிமேலாவது 'இல்முஸ்ஸா அ' என்று கூறி ஏமாறவும் வேண்டாம் ஏமாற்றவும் வேண்டாம். அப்படியானால் நபி(ஸல்) அவர்கள் இப்னு மர்யம்வருவார்கள்., இறங்குவார்கள் என்று கூறியுல்லார்களே அதற்க்கு என்ன பொருள்? என்று வினவலாம். அதற்க்கு பதில் ஏற்கனேவே கூறியுள்ளேன்.

'பல் ரபவுல்லாஹு இலைஹி' என்பதற்கு முன்னாள் ஈசா(அலை) அவர்களின் உடலையும் சேர்த்துக் கூறப்பட்டதனால் (கொலை செய்தல், சிலுவையில் அறைதல்) 'ரபா ஆ' என்ற உயர்த்துதலும், உடலோடுதான் என்று எழுதியுள்ளீர்கள். 'ரபா ஆ' என்பதற்கு நீங்கள் சுயமாகக் கொடுத்துள்ள பொருள் தவறானதாகும் ஏனெனில் திருக்குரானில் 'ரபா ஆ' என்ற சொல் நீங்கள் கொடுக்கின்ற பொருளில் எங்கேயும் வரவில்லை. ஹதீஸ்களிலும் 'ரபா ஆ' என்ற சொல் உடலுடன் உயர்த்துவதாக எங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் காண முடியாது. உங்களைவிடப் பெரிய விரிவுரையாளர்கள் பலர் சென்றுள்ளனர். அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்காக 'ரபா ஆ' என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்கள். அரபு அகராதி 'லிஸானுல் அரபு' விலும் 'ரபா ஆ' என்ற சொல்லுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. எல்லாம் உங்களின் கூற்றை மறுக்கிறது. இவ்வாறிருக்க அல்லாஹ் நபி(ஸல்) அவர்கள், சென்றகாலப் பெரும்,பெரும் விரிவுரையாளர்கள், அகராதி ஆகியவற்றை எல்லாம் புறக்கணித்துவிட்டு, உங்கள் தவறான கற்பனைப் பொருளை என் ஏற்றுக் கொள்ளவேண்டும்? திருக்குரான், ஹதீஸ்களிலிருந்து 'ரபா ஆ' என்ற சொல்லுக்கு உடலோடு உயர்த்தப்பட்டதற்க்கான ஆதாரங்களைக் காட்டுங்கள் ஏற்கிறோம்.

மேலும் 'ரப அஹூ' எனபதில் ஹூ என்பது ஈசாவின் உடலையும் சேர்த்துதான் குறிக்கும் என்ற உங்களின் சுயசிந்தனையின் அடிப்படையிலான வாதத்தையும் திருக்குர்ஆன் மறுக்கிறது. (3:170) இல் இறை வழியில் கொலை செய்யப்பட்டவர்கள் அவர்களின் இறைவனிடத்தில் உயிருடன் இருக்கிறார்கள். உணவளிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு வழங்கியவற்றால் மகிழ்ச்ச்சி அடைகின்றார்கள் என்று வந்துள்ளது. கொலை செய்யப்பட்டவர்கள் உயிருடன்தான் இருக்கின்றார்களா? உடலுக்கும் சேர்த்துதான் உணவளிக்கபப்டுகின்றார்களா? உடலுடந்தான் மகிழ்ச்சியடைகின்றார்களா? ஏனெனில் இதில் வந்துள்ள சுட்டுப் பெயர்கள் 'குதிலூ' என்று கொலை செய்யப்பட்டவர்கலையே குறிக்கும்.

ஈசாவைக் கொல்லவில்லை. சிலுவையில் அறையவில்லை என்று சொல்வதானால் கொலைசெய்யப்படாதவரும், சிலுவையில் அறையப்படாதவரும் சாகக் கூடாது என்று எங்கே சொல்லப்பட்டுள்ளது? சிலுவையில் அறையப்படாமல், கொலை செய்யப்படாமல் இறந்த பின்னர் 'ரப அ' செய்யப்பட்டார் என்று சாதாரண அறிவுடையவர்கள் கூட எளிதில் புரிந்துக் கொள்ளமுடியும். ஏனெனில் (3:56) இல் அல்லாஹ். 'நான் உன்னை என்னளவில் உயர்த்துவேன்' என்று வாக்குறுதி அளிப்பதற்கு முன்னதாக நான் உன்னை மரணிக்கச் செய்வேன் என்று கூறியிருந்தான். என்னளவில் உயர்த்துவேன் என்ற வாக்குறுதியைப் பூர்த்தி செய்ததாக 'பல் ரபவுல்லாஹு இலைஹி' என்ற வசனத்தில் உறுதிப் படுத்திவிட்டான் என்றால் அதற்க்கு முன்னர் மரணமடையசெய்வேன் என்ற வாக்குறுதியையும் நிறைவேற்றியதாகத் திருக்குர்ஆன் ( 5:118 ) இல் (பலம்மா தவப்பைத்தனி) என்ற சொல்லால் இறைவன் உறுதிபடுத்தியுள்ளான்

ஈசா மீண்டும் உலகிற்கு வந்து, இறந்துபோன பின்னர்தான் மேற்கண்ட ஆயத்தில், குறிப்பிட்டவை நிகழும் என்று நினைப்பதாக இருந்தால், அது உங்களின் கற்பனையே தவிர உண்மையில்லை. ஏனெனில் அந்த உரையாடல் 'வ இத்காலல்லாஹூ' என்று இறந்த காலச் சொல்லில்தான் ஆரம்பிக்கிறது. மேலும் ஈசாவின் இந்த வார்த்தைகளை எடுத்தாளுகின்றபோது நபி (ஸல்) அவர்கள் ; ப அகூலு கமாகால அப்துஸ்ஸாலிஹ் - (புகாரி கிதாபுத் தப்சீர்) அதாவது அதாவது அல்லாஹ்வின் நல்லடியார் கூறியதுபோல் நானும் கூறுவேன்' என்றுதான் கூறியுள்ளார்களே தவிர 'கமா யகூலு' அவர்கள் கூறப்போவதுபோல் என்று கூறவில்லை. எனவே இதிலிருந்து தெரிவது என்னவென்றால் ஈசா உயர்த்தப்படுதளுக்கு முன்னதாகவே அவரது மரணமும் நிகழ்ந்துவிட்டது என்பதாகும். இதனை அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் உறுதிப்படக் கூறியிருக்கும்போது, நீங்கள் மட்டும் அதனை மறுக்கிறீர்கள் என்றால் நாங்கள் அதை ஏற்க்கவேண்டுமா? குரான் ஹதீஸ் அறிவுடைய நபி(ஸல்) அவர்களை மதித்து நடக்கக் கூடிய எந்த முஸ்லிமும் என்றுக் கொள்ள மாட்டான்.

மேலும் நீங்கள், ஈசா(அலை) உடலுடன் உயர்த்தப்பட்டு உயிருடன் இருக்கிறார் என்று கூறுகிறீர்கள். அப்படியானால் இறைவன் குர்ஆனில் கூரிவதைப் பாருங்கள். 'ஈசா தான் அல்லாஹ் என்று கூறிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகின்றான்: மஸீஹ் இப்னு மர்யம். ஒரு தூதர் மட்டுமே, அவருக்கு முன் வந்த தூதர்கள் மரணித்துவிட்டனர்', (5:73-76 ) என்று இங்கே ஈசாவுக்கு முன்தோன்றிய தூதர்கள் இறந்துவிட்டதைப் போல் ஈசாவும் இறக்காமல், அவர் மட்டும் விண்ணில் உயிருடனும், உடலுடனும் இருக்கிறார் என்றால், ஈசா மற்ற தூதர்களைப் போன்றல்லாததால் இறைவனாவார் என்ற கிறிஸ்தவர்களின் கூற்றுக்கு இவ்வசனம் எவ்வாறு மறுப்பாக முடியும்? அல்லாஹ் கிறிஸ்தவர்களின் தவறான கடவுள் கொள்கையை மறுத்து சான்றாகக் காட்டும் இந்த வசனம் பயனற்றதாகப் போய்விட்டதா?

உடலோடும் இருக்கிறதாகக் கூறுகிறீர்களே; அல்லாஹ் நாடினால் உணவளிக்க முடியும் என்கிறீர்களே; அவருடைய உடலும் இப்போது இல்லை. உணவு உண்பதுமில்லை என்று அல்லாஹ் கூறுவது உங்களுக்கு கேட்கவில்லையா? அல்லாஹ் ஈசாவைப் பற்றி உணவருந்திக் கொண்டிருந்தார் என்று (5:76) கூறுகிறான். அதாவது இப்போது அவர் உணவருந்தவில்லை: சென்ற காலத்தில் தான் உணவருந்தினார். இப்போது என் உணவருந்தவில்லை என்றால் அதற்குத் தேவையான உடல் இல்லை. ஏனெனில் அவர் இறந்துவிட்டார். என்று இறைவன் கூறுகிறான்.

(21:9) இல் ஈசா உட்பட உள்ள எந்தத் தூதருக்கும் உணவருந்தாதத் தேவையில்லாத உடலை வழங்கவில்லை என்கிறான். எனவே அவருக்கு உடல் இருந்தால் கட்டாயம் அவர் உணவருந்தியே ஆகவேண்டும். என்பது அல்லாஹ்வின் கூற்று எனேவேதான் அவர் இப்போது உணவருந்துவது எப்படி? என்று நாங்கள் கேட்கிறோம்.

அடுத்து ஈசாவும் அவருடைய தாயாரும் உணவருந்திக் கொண்டிருந்தார்கள் (5:76) என்று இறைவன் கூறி, இப்போது உணவருந்தவில்லை என உறுதிப்படுத்துகிறான். நீங்கள்தான் அல்லாஹ்வின் வல்லமையைக் கொண்டு உணவு ஊட்டுகிறீர்கள். ஆனால் அவர் இப்போது உணவு உண்ணவில்லை என்று இறைவன் அறிவிப்பதால் அவர் உடலுடன் இல்லை என்று உறுதியாகிறது. இன்னும் அவர் உணவு தேவை இல்லாத உடலுடன் விண்ணில் இருப்பதாக அடம்பிடிப்பதானால், அதன் பொருள் (21:9) இன் படி அவர் நபியாக முடியாது. ஏனெனில் நபியாக இருந்தால் இறைவாக்குப்படி உணவு உட்கொள்ளக்கூடிய உடல் தேவை (21:9)

ஆகவே அவர் கிறிஸ்தவர்கள் கூறுவது போல் இறைவனின் மகனோ, இறைவனோ ஆவார் என்று மறைமுகமாக ஏற்றுக்கொள்வதாகிவிடும். இதுதான் மறைமுகமான 'ஷிர்க்' இப்படிப்பட்டவர்கள்தான் 'முஷ்ரிக்'. முஸ்ரிக்குகளைப் பற்றி அவர் 'நஜீஸ்' ஆவார் என்று (9:28) அல்லாஹ் கூறுகிறான். அப்படிப்பட்ட நஜீஸ்களால் திருக்குரானின் உண்மையை உணரமுடியாது என்று அல்லாஹ் (56:80) கூறுகிறான். எனவே இப்படிப்பட்ட கொள்கையை உடையவராக இருந்தால் திருக்குரானை விளங்கவே முடியாது, அறிந்து திருந்திக் கொள்க. திருத்திக் கொள்க.


Read more »

தியாகத் திருநாளின் அடிப்படையும் கிறிஸ்தவர்களின் அறியாமையும்

கிருஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் ஹஜ்ஜுப் பெருநாள் அர்த்தமற்றது: உண்மையில் ஆபிரகாம் தீர்க்கதரிசியால் பலியிட அழைத்துச்செல்லப்பட்டது ஈசாக்கே தவிர இஸ்மவேல் அல்ல என்று கூறுகின்றனர்.

இவர்களின் இக்கூற்று வரலாற்றிக்கு அப்பாற்ப்பட்டதும் அவர்கள் போற்றும் பைபிளுக்கு முரண்பட்டதுமாகும்.

ஆபிரகாம் தீர்க்கதரிசியின் குமாரர்களான இஸ்மவேல் (இஸ்மாயீல் நபி) ஈசாக்கு (இஸ்ஹாக் நபி) ஆகியோரின் சந்ததியினரே இஸ்மாவேலர்களும்(அராபியர்கள்) இஸ்ரவேலர்களும் (யூதர்களும்) ஆவார்கள். இதில் ஈசாக்கின் சந்ததியில் மோசே, தாவீது, சாலமன், யோவான், இயேசு, ஆகிய தீர்க்கதரிசிகள் தோன்றினார்கள்.

"உன்னைப்போல் ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்களின் (இஸ்ரவேலர்களின்) சகோதரர்களிலிருந்து(இஸ்மவேல் வம்சத்திலிருந்து) எழுப்பப்பண்ணி என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்" (உபாகமம் 18:18)

என்ற மோசே தீர்க்கதரிசிக்கு இறைவன் அளித்த முன்னறிவிப்பின்படியும்,

ஆகையால் தேவனுடைய ராஜ்ஜியம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு அதற்க்கேற்றக் கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்(மத்தேயு 21:43)

என்ற இயேசுநாதரின் தீர்க்கதரிசனத்தின் படியும் இஸ்மவேல் சந்ததியில் நபி(ஸல்) அவர்கள் தோன்றினார்கள்.

ஆபிரகாம் தீர்க்கதரிசி செய்த மகத்தான தியாகத்திற்கு பரிசாக இறைவன் அன்னவருடன் செய்த உடன்படிக்கை மூலமாக தேவனின் ராஜ்யத்தை தாங்கள் பெற்றதை நினைவு கூறவே முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள்.இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்று திரண்டு ஆண்டுக்கொருமுறை புனித மக்காவில் மிருகங்களை பலியிட்டு ஹஜ்ஜுக் கடமைகளை நிறைவேற்றுவது இதன் அடிப்படியிலேயேயாகும்

இயேசு தோன்றிய பரம்பரையை சிறப்பித்துக் கூறவேண்டும் என்ற பேரவாக் காரணமாக கிருஸ்தவர்கள், வரலாற்று சிறப்பு மிக்க இவ்வுன்னத தியாகத்திற்கு ஆளானவராக ஈசாக்கை குறிப்பிட்டார்கள். இவர்களுக்கு ஆதரவாக பைபிளின் வாசகங்களை மாற்றி அமைத்துக் கொண்டார்கள். தற்கால பைபிளில் நாம் காண்பதெல்லாம்.

"தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்திற்கு வந்தார்கள். அங்கெ ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி கட்டைகள் அடுக்கி தன குமாரனாகிய ஈசாக்கை கட்டி அந்த பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான்" - என்ற வாசகங்களைத்தான்.

என்றாலும் பலியிடுவதற்கு அழைத்துச் செல்லப்பட்டது ஈசாக்கை அல்ல, இஸ்மாவேலே என்ற நமது வாதத்திற்கு சாதகமான பல ஆதாரங்களை பைபிள் தராமலில்லை.

"அப்போது அவர் (கர்த்தர்) பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே அவனுக்கு ஒன்றும் செய்யாதே. நீ அவனை உன் புத்திரன் என்றும் உன் ஏக சுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக் கொடுத்தபடியால் நீ தேவனுக்கு பயப்படுகிறவன் என்று இப்போது அறிந்திருக்கிறேன் என்றார்". (ஆதியாகமம் 22:12)

இந்த பைபிள் வாக்கியத்தில் காணப்படும் ஏக சுதன் என்ற சொல் ஆபிராம் தீர்க்கதரிசி தமக்கு அப்போதிருந்த ஒரே மகனை பலிகொடுக்க முனைந்தார் என்பதையே சுட்டிக்காட்டுகிறது. இந்த ஒரே மகன் யார்? ஈசாக் அபிரகாம் தீர்க்கதரிசிக்கு மகனாகப் பிறப்பதற்கு முன்னே பிறந்த இஸ்மாவேலைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?

இஸ்மவேலின் பிறப்பைப் பற்றி பைபிள் இவ்வாறு காணப்படுகிறது.

"ஆகார் ஆபிரகாமுக்கு இஸ்மவேலைப் பெற்றபோது ஆபிரகாம் எண்பத்தாறு வயதாயிருந்தான்" (ஆதியாகமம்16:16)

"நான் அவளை (சாராளை) ஆசிர்வதித்து அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன் அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும் அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசிர்வதிப்பேன் என்றார்.

அப்போது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறு வயதானவனுக்கு பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இதயத்தில் சொல்லிக் கொண்டு இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிறப்பானாக: - என்று ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணினார்ன். (ஆதியாகமம் 17;16-18)

எனவே ஈசாக்கு பிறப்பதற்கு கிட்ட தட்ட பதினாறு ஆண்டுகள் இஸ்மாவேலே ஆபிரகாமின் ஏக புத்திரராய் இருந்திருக்க வேண்டும்.

ஆகையால் ஆபிரகாம் தீர்க்கதரிசியால் பலியிட அழைத்துச் செல்லப்பட்டவர் இஸ்மவேல் தவிர ஈசாக்கல்ல. கிருஸ்தவர்கள் இதைப் புரிந்துகொள்வார்களாக.

Read more »

Aug 17, 2011

நஜாத் நிர்வாகிகளின் கூற்றுக்கு பதில்!

திருச்சியில் நடைபெற்ற அந்-நஜாத் மாநாட்டில் அதன் நிர்வாகி ஜனாப்K.M.H அபூ-அப்தில்லாஹ் அவர்கள் அஹ்மதிகள் முஸ்லிம்கள் அல்ல என்பதற்கு மிகப் பெரும் சான்று ஒன்றை கூறியுள்ளார். அதாவது மிர்ஸா குலாம் அஹ்மதை நபியென்று ஒப்புக்கொள்ளாதவர்களை முஸ்லிம்கள் என்று அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அப்படி ஏற்றுக்கொள்கிறோம் என்று அவர்கள் கூறினால், அதனை அவர்களது ஏடான சமாதான வழி இதழில் பிரசுரிக்கட்டும் ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்.

இதுபற்றி எங்கள் கொள்கை அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் கூறிய போதனைகளின் அடிப்படையாகும்.

அல்லாஹ் கூறுகிறான், நாட்டுப்புறத்தவர்கள் (அஹ்ராபிகள்) நாங்கள் விசுவாசித்தோம் என்று கூறுகின்றனர். நீங்கள் விசுவாசம் கொள்ளவில்லை. ஆனால் வழிப்பட்டோம் என்று கூறுவீராக (அதாவது முஸ்லிமாக உள்ளோம் என்று கூறலாம்) திருக்குர்ஆன் ( 49:15 )

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-

"நம்மைப்போல் தொழுபவனும், நமது கிப்லாவின் பக்கம் முகம் திருப்புபவனும், நாம் அறுத்ததைப் புசிப்பவனும், அல்லாஹ்வுடையவும்,அவனது தூதருடையவும் பாதுகாப்பு பற்றியுள்ள இந்த ஒப்பந்தத்தை முறிக்காதீர்கள்." (ஸஹேஹ் புகாரி, கிதாபு ஸலாத், பாப் இஸ்திக் பாலுல் கிப்லத்) மேலும் இதுபற்றி அனைத்துலக அஹ்மதிய்யா ஜமாத்தின் ஆத்மீகத் தலைவர் ஹஸ்ரத் மிர்ஸா தாஹிர் அஹ்மது அவர்களது கூற்றையே அந்நஜாத் நிர்வாகி அவர்களுக்கு பதிலாக தருகிறோம்.

14-7-1986 அன்று லண்டனிலுள்ள மஸ்ஜித் பஸலில் நடைபெற்ற மஜ்லிஸே இர்பானில் அஹ்மதி அல்லாத ஒருவர் கலிபா அவர்களிடம், "அஹ்மதிகள் ஷியா பிரிவினரை முஸ்லிம்களாக ஏற்றுக்கொள்கின்றனரா?" என்ற ஒரு வினாவைத் தொடுத்தார். அதற்கு கலீபத்துல் மஸீஹ் அவர்கள் கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்கள்:-

"வேறு எவரும் அவர்களை உண்மையான முஸ்லிம்கள் என்று என்று எண்ணினாலும், எண்ணாவிட்டாலும் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தைப் பொறுத்தவரை, தன்னை முஸ்லிம் என்று கூறுகின்ற அனைவரும் முஸ்லிம் என்று கூற தகுதி பெற்றவர்களே! இஸ்லாத்தின் சில விஷயங்களை மறுப்பவராக அவரை நீங்கள் கருதினால் அது வேறு விஷயம். ஆனால் ஒருவரை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றும் உரிமை எவருக்குமில்லை கலிமா கூறுபவனும், க அபா வின் பக்கம் முகம் திருப்பி தொழுபவனும், இஸ்லாத்தின் ஐந்து அடிப்படை கொள்கைகளில் நம்பிக்கை கொண்டுள்ள எவரும் தன்னை முஸ்லிம் என்று கூறுவதற்கு உரிமை பெற்றவர்கள் என்பதுதான் எங்கள் கொள்கை.

அஹ்மதியா நூல்களில் முஸ்லிம்களைப் பற்றி குறிப்பிட்டுள்ள இடங்களில் அஹ்மதி அல்லாத முஸ்லிம்கள் என்றும், பிற மதத்தவர்களைப் பற்றி இடங்களில் முஸ்லிம் அல்லாதார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எங்களது நூல்களில் முஸ்லிம்களை முஸ்லிம்கள் அல்லாதார் என்று எங்குமே குறிப்பிடப்படவில்லை. எனவே எங்களின் நிலை மிகவும் தெளிவானதும்,விளக்கமானதுமாகும். ( அந்- நஸர் 3-10-86)

Read more »

Jul 24, 2011

இறுதிநபி கொள்கையை கைவிட்ட இரு பெரும்(?) தௌஹீதுவாதிகள்(?)



கடந்த 1997 டிசம்பர் மாதத்தில் சென்னையில் பிரிவுப் பெயர்கள் கூடுமா?கூடாத? என்ற தலைப்பில் ஒரு விவாதக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தற்போது தங்களுக்குள் பிளவுபட்டு ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை தங்களுக்குள் மாறி மாறி அள்ளி வீசிக்கொண்டு சத்திய இஸ்லாத்தை மக்கள் மத்தியில் எத்திவைக்கப்பாடுபடுவதாக வரிந்துகட்டிக்கொண்டு பேசியும், எழுதியும் வரக்கூடிய இருபெரும் தௌஹீது(?) அறிஞர்களும், பல அறிஞர்களும் (ஆலிம்களும்) தௌஹீது(?) வாதிகளும் கலந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த விவாதத்தில் தாங்கள்தான் தௌஹீதை உண்மையிலேயே குர்ஆன்,ஹதீஸ் அடிப்படையில் தெளிவுபடுத்தி வருகிறோம் என்று பிரகடனப்படுத்தும், பல குட்டிப்பிரிவுகளில் ஒரு பிரிவினரை வழிநடத்தும் முன்னால் அந்நஜாத், அல்-ஜன்னத் பத்திரிகையின் ஆசிரியரும் உணர்வு பத்திரிகையின் ஆசிரியரும், மௌலவி p.j. என்று அறியப்படும் பி.ஜைனுலாப்தீன் உலவி அவர்கள் ஒரு ஹதீஸை எடுத்து வைக்கிறார். அந்த ஹதீஸை மற்றொரு பிரிவினரை வழி நடத்தும் சத்திய இஸ்லாத்தை உள்ளது உள்ளபடி எடுத்துரைப்பதாக வாதிடக் கூடிய அந்நஜாத் என்ற பத்திரிகையின் முன்னால் நிர்வாகியும் இன்றைய ஆசிரியருமாகிய அபூ அப்தில்லாஹ் அவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார். அந்த சபையில் உள்ள அனைவரும் அதற்கு சாட்சியாக இருந்துள்ளார்கள் அந்த பி.ஜே. கூறியது போன்றே அப்படியே கீழே தருகிறோம்.

م أما بعد: روى الإمام أحمد عن حذيفة بن اليمان -رضي الله عنه- أن رسول الله -صلى الله عليه وسلم- قال: "تَكُونُ النُّبُوَّةُ فِيكُمْ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ خِلَافَةٌ عَلَى مِنْهَاجِ النُّبُوَّةِ، فَتَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ مُلْكًا عَاضًّا، فَيَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ اللهُ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ مُلْكًا جَبْرِيّاً، فَتَكُونُ مَا شَاءَ اللَّهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ خِلَافَةٌ عَلَى مِنْهَاجِ النُّبُوَّةِ" ثم سكت. 

நுஃமான் பின் பஷீர் (ரலி) அறிவிக்கின்றார். பஷீர் பின் சஃது என்பவரிடம் நான் கேட்டேன், உமராக்களைப் பற்றி எதாவது ஒரு ஹதீஸை நீர் மனனம் செய்து வைத்திருக்கின்றீரா? என்று, அந்த இடத்தில் (நேரத்தில்) ஹுதைஃபா (ரலி) அவர்களும் இருந்தார்கள். அவர் வழிய வந்து சொன்னார்கள். அன அஹ்ஃபலு ஹுத்பதஹு நான் நபி (ஸல்) அவர்கள் கூறியதை மனனம் செய்து வைத்திருக்கின்றேன் என்று சொன்னார்கள். சொல்லிவிட்டு கூறினார்கள், தகூனு நுபுவ்வத்ஃபீகும் - உங்களிடத்தில் நுபுவாத் நிலைத்து நிற்கும், மாஷா அல்லாஹு அன் தகூன - எவ்வளவு நாளைக்கு நிலைத்து நிற்க வேண்டும் என்று அல்லாஹ் நாடியிருக்கின்றானோ அவ்வளவு நாட்களுக்கு நான் இருப்பேன் என்று கூறுகிறார்கள். ஃதும்ம யர்ஃபஉஹா இஃத ஷாஅ அன்ய் யர்ஃபஅஹா அதை எடுக்க நினைக்கும் போது அதை அல்லாஹ் எடுத்துக் கொள்வான். (நபி (ஸல்) அவர்களின் மரணம் பற்றி கூறப்படுகிறது) ஃதும்ம தகூனு கிலாஃபத்துன் அலா மின் ஹாஜின் நுபுவ்வத் - நுபுவ்வத்தின் அடிச்சுவட்டில் கிலாபத் நடக்கும். ஃபதகூனு மாஷா அல்லாஹு அன் தகூன - கிலாஃபத் எவ்வளவு நாட்களுக்கு என்று அல்லாஹ் நினைக்கின்றானோ அதுவரை இருக்கும் ஃதும்ம யர்ஃபவுஹா இஃத ஷாஅ அன்ய்யர் ஃபஅஹா - அல்லாஹ் எடுக்க நினைக்கும் போது அதையும் எடுத்துக் கொள்வான். ஃதும்ம தகூனு முல்கன் அழ்ழன் - பிறகு கொடூரமான ஆட்சி ஏற்படும் பயகூனு மாஷா அல்லாஹு அன்ய்யகூன - அது எவ்வளவு நாங்கள் இருக்க வேண்டுமோ அது வரை இருக்கும். ஃதும்ம யர்ஃபவுஹா இஃத ஷாஅ அன்ய் யர்ஃபஅஹா - பிறகு எடுக்க நினைக்கும் போது அதையும் அல்லாஹ் எடுத்துக் கொள்வான். ஃதும்ம தகூனு முல்கன் ஜப்ரிய்யதன் - பிறகு இன்னும் அடக்குமுறை செய்யக்கூடிய ஒரு ஆட்சி ஏற்படும், தகூனு மாஷா அல்லாஹு அன் தகூன -அல்லாஹ் எவ்வளவு நாட்களுக்கு இருக்கவேண்டும் என்று நினைக்கிறானோ அது கொஞ்சம் நாட்களுக்கு நீடிக்கும். ஃதும்ம யர்ஃபவுஹா இஃத ஷாஅ அன்ய் யர்ஃபஅஹா - எப்போது அதையும் எடுக்கவேண்டும் என்று நாடுகிறானோ அப்போது அதையும் எடுத்துவிடுவான். ஃதும்ம தகூனு கிலாஃபத்துன் அலா மின் ஹாஜின் நுபுவ்வத் - பிறகு மறுபடியும் நுபுவ்வத்தின் பாதையில் கிலாபத் ஏற்படும். என்றும் கூறுகிறார்கள்.

ஆதாரம் பி.ஜே ( vs ) அபூ அப்தில்லாஹ் 1997 டிசம்பர் 17 to 20 தேதிகளில் நடைபெற்ற விவாத கேசட்

இங்கு இறுதியில் கூறப்படும் வாசகத்தை கவனிக்க வேண்டும் 'பிறகு மறுபடியும் நுபுவ்வத்தின் பாதையில் கிலாபத்' ஏற்படும் என்று தெளிவாக கூறப்படுகிறது.

(மேற்கண்ட ஹதீஸ் மிஷ்காத் என்னும் ஹதீஸ் நூலில் இடம் பெற்றுள்ளது)

சுமார் 100 வருடங்களுக்கு மேலாக உலக மக்கள் மத்தியில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்குப் பின் அவர்களின் ஷரியத்தைப் பின் பற்றி அவர்களின் உம்மத்தில் நபி வர முடியும் என்பதற்கான பல சான்றுகளை திருக்குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அஹமதிய்யா முஸ்லிம் ஜமாஅத் எடுத்து வைத்துவருகிறது. மூடத்தனமாகவும், முரட்டுத்தனமாகவும் எவ்வித சரியான ஆதாரமுமில்லாமலும் வேண்டுமென்றே மறுத்து வந்து கொண்டிருந்த ஆலிம்கள் தற்போது தெரிந்தோ தெரியாமலோ அவர்களுக்குள் கருத்துவேறுபாடு வந்ததன் காரணமாக ஏற்பட்ட விவாத அரங்கில் நபி வர முடியும் என்பதற்கு அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் எடுத்து வைக்கும் அதே ஹதீஸை ஒப்புக் கொண்டு விட்டார்கள். (அல்ஹம்துலில்லாஹ்)

உண்மையை நாடும் சகோதரர்கள் குறிப்பாக தௌஹீது சகோதரர்கள் இதை ஒப்புக் கொண்டு தங்களின் பிடிவாதத்தை விட்டு விலகி உண்மையை ஏற்க முன்வருவார்களா? எது எப்படியாயினும் இந்த காலத்தின் இமாமாக மஹ்தி(அலை) அவர்கள் ஒரு முன்னறிவிப்பு செய்துள்ளதையும் மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம் அவர்கள் கூறுகிறார்கள்.

"உண்மை நிச்சயமாக சிறிது சிறிதாக வெளிவந்தே தீரும் பொய் ஓடி ஒளிந்து கொள்ளும் இதை வரக்கூடிய காலம் கண்டு உணரும்"

இந்த முன்னறிவிப்பு அழகிய முறையில் நிறைவேறி அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தின் உண்மை ஒளி வீசிக்கொண்டிருப்பதை நல் உள்ளம் கொண்ட உண்மையை நாடுபவர்கள் அறிந்து இந்த ஜமாத்தில் இணைந்துகொண்டிருக்கிரார்கள். கடின உள்ளம், வெறுப்பு, துவேஷம்,கர்வம், அகம்பாவம் மற்றும் இறைவனால் உள்ளத்தில் முத்திரை குத்தப்பட்டவர்களும் இதனை மறுப்பதில் எவ்வித ஆச்சர்யத்திற்கும் இடமில்லை. அல்லாஹ் நேர்வழியை, சத்தியத்தை நாடுபவர்களுக்கு வழங்கியருள்வானாக, ஆமீன்.
Read more »

Jul 23, 2011

நஜாத் நிர்வாகிகளின் கூற்றுக்கு பதில்!


Read more »

Jul 19, 2011

விஜயபாரதம் ஏட்டிற்கு பதில்



நபிபெருமானார் (ஸல்) அவர்களின் திருமணம். 

நபி(ஸல்) அவர்கள் மீது குற்றம் சாற்ற முயன்றவர்கள் எல்லோருமே அம்மாநபி உலகுக்கு தந்த உயரிய போதனைகளிலோ குற்றம் காண முடியாத நிலையில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை, குறிப்பாக, அவர்கள் பல திருமணங்கள் செய்ததை குறை கூறுகின்றனர். 'விஜயபாரதம் ஏட்டின் ஆசிரியரும் இதற்க்கு விதிவிலக்காக இல்லை. நபி பெருமானார் அவர்கள் பல திருமணங்கள் செய்திருந்ததை இவர் எள்ளி நகையாடுகிறார். 

பூகோள ரீதியில் மட்டுமல்லாது பண்பாட்டிலும் நாகரீகத்திலும் கூட பாலைவனமாக இருந்த அந்த அரபு நாட்டு மண்ணில் அண்ணல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் செய்திருந்த பெரும் புரட்சியை சமுதாயச் சீரமைப்பு, அவர்கள் உலகுக்கு சொன்ன உயரிய நன்னெறிகள், அரசியலமைப்பு தத்துவங்கள், உலகுக்கே வழிகாட்டக்கூடிய ஓர் உன்னத சமுதாயத்தை ஒரு குறுகிய காலத்தில் உருவாக்கியிருந்த அவர்களின் சாதனை இவையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு அந்த மாநபி செய்திருந்த திருமணங்களை அவற்றுக்கான காரணங்களை கூட தெரிந்து கொள்ளாத நிலையில் குறை சொல்லும் இததகையோரின் குறுகிய மனப்பான்மையை, எதிலும் குற்றம் காணும் மனப்போக்கை என்னவென்று சொல்வது. 

நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் அந்த அரபு சமுதாயத்திலே தரங்கெட்ட வாழ்க்கை புரையோடிருந்தது. தந்தையின் மனைவி அவரின் மறைவுக்கு பின் தனயனின் மனைவியாவது அங்கு சர்வ சாதாரணமாக நடை முறையில் இருந்தது. தாய்க்கும் தாரத்திற்கும் வேறுபாடு தெரியாதிருந்தது. வைப்பாட்டிகள் வைத்திருப்பது பெருமைக்குரியதாக கருதப்பட்டது. முறையான திருமணங்கள் அங்கு குறைவாகவே இருந்தது. இத்தகைய

காட்டு மிராண்டித்தனமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த அந்த அரபுச் சமுதாயத்திலே தான் நபிபெருமாநாறும் வாழ்ந்திருந்தார்கள்.

ஆயினும் நபிபெருமானாரின் வாழ்க்கை இளமைப்பருவம் முதல் அப்பழுக்கற்ற வாழ்க்கையாக இருந்திருந்தது. அவர்கள் தம்மை இறைவனின் தூதுவராக பிரகடனப் படுத்திக் கொண்டபோது அங்கிருந்த மக்கள் அவர்களைப் பொய்யன் என்று தூற்றினார்கள். அப்போது அந்த மாநபி "நான் உங்கள் மத்தியிலே ஒரு நீண்ட காலம் வாழ்ந்திருந்தேன் என்னிடத்தில் ஏதேனும் குறையினை நீங்கள் கண்டதுண்டா?" என்று கேட்டார்கள். அன்றைய தினம் அங்கு மௌனம் நிலவியது. அதுவே நபிபெருமானாரின் அப்பழுக்கற்ற வாழ்க்கைக்கு அத்தாட்சியாக விளங்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் தமது இருபத்தைந்தாவது வயதில் நாற்பது வயதான கதீஜா அவர்களை மணம்முடித்தது மட்டுமல்லாது ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் அவர்களுதேனேயே இல்வாழ்க்கை நடத்தி வந்தார்கள். கதீஜா அவர்களின் மறைவுக்கு பின்னரே நபி(ஸல்) அவர்கள் வேறு மனங்களை செய்திருந்தார்கள். அவைகளும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும் இஸ்லாத்தின் உயரிய இலட்சியங்களை உலகறியச் செய்வதர்க்காக்கவுமேயாகும்.

பல திருமணங்கள் செய்ததினால் நபி பெருமானார்(ஸல்) அவர்கள் உலக இன்பங்களில் ஆர்வம் உள்ளவர்களாய் இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் தமது கொள்கைகளை விட்டுவிடுவார்கலேயானால் அவர்களுக்கு பொன்னும் பொருளும் மட்டுமல்ல அழகிய பெண்களையும் தருவதாக அன்று அக்குரைசித் தலைவர்கள் சொன்னார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்களோ அவற்றை ஏற்க்\கவில்லை இத்தகைய ஒரு மனிதப் புனிதரை உலக ஆசை மிகுந்தவர் என்று எவ்வாறு கூற இயலும்.

அண்ணல் நபிபெருமானார் அவர்கள் தமது ஐம்பதாவது வயதிற்கு பிறகு பல திருமணங்கள் செய்திருந்தார்கள். அவை பற்றிய விவரங்களை இங்கு தருவது தப்பெண்ணம் கொண்டிருப்பவர்கள் தம்மைத்திருத்திக் கொள்ள வழியாக அமையும் .

நபி(ஸல்) அவர்களால் திருமணம் முடிக்கப்பட்டவர்களில் ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர மற்றவர்களெல்லாம் விதவைகளும் விவாக விலக்கு பெற்றவர்களுமே ஆவார்கள்.

கதீஜா நாயகியின் மறைவிற்கு பிறகு நபி பெருமானார் சவ்த நாயகியை மணமுடித்தார்கள். இவர்கள் சக்கறான் பின் அம்ர் என்பவரின் மனைவியாக இருந்தவர். சக்கறான் பின் அம்ர் அவர்கள் ஆரம்பகாலத்தில் இஸ்லாத்தை தழுவியவர்களில் ஒருவர். இவருடைய திடீர் மரணத்தால் சவ்தா நாயகி விதவையானது மட்டுமல்லாமல். அவர் முஸ்லிம் ஆனதால் உறவினர்களாலும், நண்பர்களாலும் கைவிடப்பட்டு நிற்கதியாக நின்றிருந்தார்கள். மனிதத்துவத்திற்கு இலக்கணமாக திகழ்ந்திருந்த நபிபெருமானார்(ஸல்) அவர்கள் சவ்தா நாயகியை மணமுடித்து அவர்களுக்கு ஆதரவு தந்தார்கள்.

அடுத்து நபித்தோழர்களில் முதன்மையானவரும் நபிபெருமானாருக்கு மிக நெருங்கியவருமான அபூபக்கர்(ரலி) அவர்கள் தமது மகளான ஆயிஷா நாயகி அவர்களை மிகவும் கட்டாயப்படுத்தி நபி(ஸல்) அவர்களுக்கு மணமுடித்து தந்தார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு பதிமூன்று அல்லது பதினான்கு வயதிருக்கும். இதன் காரணமாக இஸ்லாத்தின் எதிரிகள் பலர் இத்திருமணத்தை விமர்சித்து வருகின்றனர். ஆனால் நபிபெருமானார் செய்திருந்த திருமணத்தால் இஸ்லாமிய சமுதாயம் பெரும்பலனைப்பெற்றது .
அறிவாற்றலும், புத்திசாலித்தனமும் மிகுந்த ஆயிஷா நாயகி அவர்களுடன் ஏறத்தாள எட்டு வருடங்கள் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்திருந்தார்கள் ஒரு சமூக சீர்திருத்தவாதி என்ற நிலையிலே சமூகத்தில் சரிபாதியான பெண்ணினத்திற்கு இஸ்லாத்தின் கொள்கை கோட்பாட்டை எடுத்துச் சொல்லவும் அவர்களை சீர்திருத்தவும் வேண்டிய பொறுப்பு நபிகள் நாயகத்திற்கு இருந்தது. இதனை திறம்பட நிறைவேற்றுவதில் அண்ணல் நபிபெருமானாருக்கு ஆயிஷா நாயகி பெரிதும் உதவி இருந்தார்கள். அதுமட்டுமல்ல, நபி(ஸல்) அவர்களின் உயரிய நடைமுறைகள் பல அன்னை ஆயிஷா நாயகியின் மூலமாக இஸ்லாமிய சமுதாயத்திற்கு தெரிய வந்தது. ஹதீஸ்களில், நபிமொழிகள் சரிபாதிக்கு மேல் ஆயிஷா நாயகியே அறிவித்துள்ளார்கள். "நீங்கள் மார்கத்தை ஆயிஷாவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்." என நபி(ஸல்) அறிவித்திருப்பது அன்னை ஆயிஷா நாயகியின் சிறப்பியல்பை எடுத்துக்காட்டுகிறது. இவற்றிலிருந்து வெறும் குடும்ப வாழ்க்கைக்காக மட்டும் நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா நாயகியை திருமணமுடிக்கவில்லை. மாறாக அதற்க்கு மேற்சொன்ன உயரிய நோக்கம் இருந்தது என்பது புலனாகும்.

ஹஸ்ரத் குனைஸ் (ரலி) அவர்கள் ஆரம்ப கால் முஸ்லிம்களில் ஒருவர். இவர் பதர் யுத்தத்தின் போது படுகாயமுற்று சஹீது ஆனார்கள். இதனால் விதவையான ஹப்ஸா நாயகியை அவருடைய தந்தையான உமர்(ரலி) அவர்கள் நபிபெருமானாருக்கு மணமுடித்து தந்தார்கள்.

அடுத்து நபிபெருமானாரால் மனமுடிக்கப்பட்ட உம்முசல்மா நாயகியும் ஒரு விதவையே. இவருடைய கணவர் உஹத் போரில் இறைவனடி சேர்ந்தார்கள். அதன் காரணமாக உம்முசல்மா அனாதையானார்கள். இவரை திருமணம் செய்ததன் காரணமாக நபிபெருமானார் அவர்கள் விதவை விவாகத்திற்கு ஊக்கமளித்தார்கள்.

நபி(ஸல்) அவர்களின் திருமணங்களில் அதிக விமர்சனத்திற்கு உள்ளானது அவர்கள் அவர்களின் வளர்ப்பு மகனாக இருந்த செய்து அவர்களால் விவாக விலக்கு அளிக்கப்பட ஜைனப் நாயகியை திருமணம் முடித்திருந்ததுதான். ஹஸ்ரத் செய்து அவர்கள் அடிமையாக விற்கப்பட்டவர். நபிபெருமானார் கதீஜா நாயகியை மணமுடித்தபோது சைத அவர்களுக்கு விடுதலை தந்தார்கள். ஆனால் சைத அவர்களோ நபிபெருமானார் அவர்களை பிரிய சம்மதிக்கவில்லை. அவருடைய பெற்றோர் அவரை அழைத்தபோது கூட அவர்களுடன் செல்லாது அவர் நபி பெருமானாருடனேயே இருந்து விட்டார். நபி(ஸல்) அவர்களும் அன்னவரை தமது வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார்கள்.

அதுமட்டுமல்ல இஸ்லாத்தில் இனவேறுபாடு ஏற்றத்தாழ்வு இவைகளுக்கு இடமே இல்லை என்பதை உணர்த்தும் வகையிலே உயர் குலத்தை சார்ந்தவரும் தமது தாயாரின் சகோதரி மகளுமான ஜைனப் அவர்களை அடிமையாய் இருந்த சைதிற்கு நபி(ஸல்) அவர்கள் மணமுடித்து வைத்தார்கள், சைய்து  சிறுவயது முதலே அடிமையாய் இருந்த காரணத்தால் அவரிடத்திலே தாழ்வு மனப்பான்மை வேரூன்றி இருந்தது. இதனால் உயர் குலப்பெண்ணான ஜைனப் அவர்களுடன் அவருக்கு ஈடுபாடு இல்லாதிருந்தது. இந்தத் திருமணம் ஒரு உன்னதமான நோக்கத்தின் அடிப்படையில் செய்து வைக்கப்பட்ட திருமணம் எனினும் அவர்கள் இருவருக்கும் இடையில் மனப்பொருத்தம் ஏற்படாத காரணத்தினால் விவாக விலக்கு ஏற்பட்டது . இந்தத் திருமணத்தை நபி(ஸல்) அவர்களே முன்னின்று நடத்தியதால் அது முறிந்து விட்டதில் அவர்களுக்கு பெரும் சங்கடம் ஏற்பட்டது. இந்தப் பிரச்சனைக்கு முடிவு கட்டவே நபி பெருமானார் அவர்கள் ஜைனப் நாயகியை திருமணம் செய்தார்கள்.

ஓர் அடிமையால் விவாக விலக்கு அளிக்கப்பட்ட ஒரு பெண்ணை திருமணம் செய்வதென்பது சிறுமையான ஒரு காரியமாக அரபுமக்களால் கருதப்பட்டிருந்தது நபிபெருமானார் ஜைனபை மணந்தது ஆண்டான் அடிமை என்ற பேதம் இஸ்லாத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்தியது.

நபிபெருமானாருடைய மற்றொரு மனைவி ஜுவைரியா ஆகும். இவர் ஒரு யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவர். மேலும் இவர் ஒரு விதவை இவரை நபிபெருமானார் திருமணம் முடித்த காரணத்தால் இவருடைய தந்தையும் உறவினர்களும் இஸ்லாத்தில் இணைந்தனர்.

உம்மு ஹபீபா நாயகி அக்காலத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு பெரும் எதிரியாக இருந்த அபூசுப்யானின் மகளும் ஆரம்பகால முஸ்லிம்களில் ஒருவராயிருந்த உபைதுல்லாஹ் என்பவரின் மனைவியாகவும் இருந்தார். உபைதுல்லாஹ் இஸ்லாத்தை விட்டு வழிதவறி கிறிஸ்தவராக மாறினார். கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி அகால மரணமடைந்தார். ஆனால் உம்மு ஹபீபா நாயகி இஸ்லாத்தை விட்டுவிடாமல் உறுதியான நம்பிக்கையோடு இருந்தார். இவர்களுக்கு ஆதரவு தர இவர்களை நபிபெருமானார் அவர்கள் மணமுடித்தார்கள். இதன் பயனாக இஸ்லாத்தை எதிர்த்திருந்த அபூசுப்யானின் மனம் மாறி அதனை ஏற்று முஸ்லிமானார்கள்.

நபி(ஸல்) அவர்கள் செய்திருந்த திருமணங்கள் உயரிய நோக்கங்களின் அடிப்படையில் அமைந்தவை ஆகும். மனித இனத்திற்கு ஒரு அழகிய முன்மாதிரி என்ற வகையிலே நபி(ஸல்) அவர்கள் செய்திருந்த திருமணங்கள் பெரும் படிப்பினைகல் அடங்கியுள்ளன. சமுதாயத்திலே பெண்களுக்கு உயர்ந்த இடம் அளிக்கும் வகையிலும் விதவைகளுக்கும், விவாக விலக்கு பெற்றவர்களுக்கும் மறு வாழ்வு அளிக்கும் வகையிலும் அத்திருமணங்கள் முமாதிரிகளாக அமைந்துள்ளன.

நபி(ஸல்) அவர்கள் செய்த திருமணங்கள் பற்றி பாஸ்வொர்த் ஸ்மித் என்ற ஐரோப்பிய வரலாற்றாசிரியர் இவ்வாறு எழுதுகின்றார்.

முஹம்மத் செய்திருந்த திருமணன்களுக்கு தகுந்த காரணங்கள் இருந்தன. அவர் மணமுடித்திருந்த பெண்களின் பரிதாப நிலை அதில் ஒன்ரூ. அதில் பெரும்பாலானோர் விதவைகள், அனாதைகள் ஆவார்கள். அழகும் செல்வமும் அவர்களிடத்தில் இருக்கவில்லை. மாறாக அதற்க்கு நேர் எதிராக அவர்கள் நிலை இருந்தது. கதீஜாவுடன் அவருடைய இறப்பு வரை முஹம்மத் நம்பிக்கை மிக்க கணவராக இருந்தும் ஐம்பது வயது வரை ஒரே மனைவியோடு வாழ்ந்திருந்ததும் அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை பொருளற்றதாக்கிவிடுகின்றது. (முஹம்மத் அண்ட் முஹம்மதிசம், பக்கம் ௧௩௬)

நபிபெருமானார்(ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்திருந்ததை ஆட்சேபிக்கின்ற விஜயபாரதம் ஆசிரியர் திரு இராமகோபாலன் போன்றோர் இந்து மத இதிகாசங்களை திரும்பி பார்க்க வேண்டும். அங்கு அவதார புருஷர்களும் ரிஷிகளும் முனிவர்களும் கூட ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரைக் கொண்டிருந்தனர் என்பதற்கான சான்றுகள் காணக்கிடக்கின்றன. அவர்களெல்லாம் அந்தந்த காலத்திலிருந்த சூழ்நிலைகளுக்கேற்ப தமது மணவாழ்க்கையை அமைத்திருந்தனர். அவற்றை, அந்த சூழ்நிலைகளை உணராத நிலையில் ஆட்சேபிப்பது அறிவுடமையாகாது. அப்பழுக்கற்ற அவர்கள் மீது அவதூறு சொல்வது இறையோனின் கோபத்திற்கு நம்மை ஆளாக்கிவிடும்.
Read more »

இரண்டாவது இயேசு வந்து விட்டார்


இயேசுவின் இரண்டாவது வருகையை பற்றி வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கிற அடையாளங்களுக்கு முற்றிலும் முரணானவற்றில் நம்பிக்கை வைத்து கொண்டிருக்கிற கிருஸ்தவகள், மனுஷ குமாரன் (கிருஸ்தவகளின் கருத்துப்படி, இயேசு கிறிஸ்து) வல்லமையோடும், மிகுந்த மகிமையோடும் வானத்திலுள்ள மேகங்களின் மேல் வந்திறங்குவார் என்றும், அப்போது பூமியிலுள்ளோர் யாவரும்அவரைக் கண்டு புலம்புவார்கள் என்றும், வேதாகமத்திலுள்ள சொற்களுக்கு மேலெழுந்தவாரியாக பொருள் கொண்டு பெரிய தவறிழைத்து வருகிறார்கள்.

கிருஸ்தவ சகோதரர்கள் பிரச்சாரம் செய்வதுபோல் மிகுந்த எக்காளத்தோடும், மிகுந்த வல்லமையோடும், மிகுந்த மகிமையோடும் மனுஷ குமாரன் வானத்திலுருந்து எல்லோருடைய கண்களும் காணும்படி வெளிப்படையாக தோன்றுவதாக இருந்தால், அவர் எக்காளச் சத்தத்தோடு தமது தூதுவர்களை அனுப்புவதாக இருந்தால், இவ்வுலகில் உள்ள எந்த மனிதனும் அவர் மீது நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொள்ளாதிருக்க முடியாது. வானத்திலிருந்து மேகங்கள் சூழ மனுஷ குமாரன் இறங்கி வருவது யாருடைய கண்களுக்குத்தான் தெரியாமல் போகும்? அப்படி எவனாகிலும் ஒருவன் மனுஷ குமாரன் மீது நம்பிக்கை கொள்ளாதிருந்தால் அவனை மானிடப்பிறவி என்று நாம் எவ்வாறு கூறமுடியும். 

இறைவன் கையாளும் வழிகள் இப்படிப்பட்டவை அல்ல, நல்லவர்களையும், தீயவர்களையும் பிரித்தறிவதற்காக இறைவன் சில ஒழுங்குமுறைகளை செய்திருக்கின்றான். அவற்றின்படி நல்லவர்கள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கெட்டவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள், நேர்மையாளர்களையும், நெறிதவறியவர்களையும் இவ்விதம் பிரிதரிந்தால் தான் (எல்லா வேத நூற்களிலும் சொல்லப்பட்டபடி) அவர்களுக்கு வெகுமதியோ, தண்டனையோ கொடுக்கமுடியும். இவ்விதம் பிரித்தறியாவிட்டால், தண்டனை பெறுவோரும், வெகுமதியடைவோரும் ஒன்றாக அல்லவா கருதப்படவேண்டும்? அப்படியானால், ஒருவன் எத்தனையோ சங்கடங்களுக்கும், கஷ்டங்களுக்கும் உட்பட்டு தேடிய நற்கருமங்களுக்கு இறைவன் ஒரு பலனையும் தரமாட்டன் என்றும், ஒருவன் எப்படிப்பட்ட தீய வழியை பின்பற்றியிருந்தாலும், எத்தகைய கொடுமை இழைத்திருந்தாலும் அவனுக்கு எவ்வித தண்டனையும் கிடையாதென்றும் , மனுஷ குமாரன் வானத்திலிருந்து எக்காளமிட்டுக்கொண்டே தோன்றும் காலத்தில் இவ்விருசாராரையும் இறைவன் ஒன்றாகவே பாவிப்பான் என்றும் நாம் கூறவேண்டியதிருக்கும்.

மனுஷ குமாரன் இவ்விதம் பகிரங்கமாக எக்காளச் சப்தமிட்டு உலகத்தில் இருப்போர் அத்தனைபேரையும் தட்டி எழுப்பச் செய்வாரென்றும், அவர் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திவிட்டு மேகங்களிலிருந்து கீழே இறங்கி வருவார் என்றும் பிரசாரம் செய்யும் கிருஸ்தவர்கள் கீழ்க் கண்ட வேதாகம வாக்கியங்களை ஏன் மறந்துவிடுகிறார்கள்? என்பது நமக்கு விளங்கவில்லை.

"மனுஷ குமாரன் வரும் நாளையும், நாழிகையையும் நீங்கள் அறியாதிருக்கிற படியால் விழித்திருங்கள். (மத்தேயு 25:13)

"உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள். திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டு எஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டை கண்காணிப்பான் என்று அறிவீர்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷ குமாரன் வருவார்: ஆதலால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் ." (மத்தேயு 24:42-44)

"அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும் அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து..." (மத்தேயு 24:60)

இவ்வாக்கியங்களிளிருந்து ஒரு திருடனைப்போல் சப்தம் செய்யாமல் அமைதியாக வந்து சென்று விடுவாரென்றும், அவர் வருகின்ற நாளும் நாழிகையும் மக்களுக்கு தெரியாதென்றும் புலப்படுகின்றது.

"அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும், மிகிந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள் மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்." (மத்தேயு 24:30) 

என்று வேதாகமத்தில் எழுதப்பட்டிருப்பது உண்மையே, நாம் முன்னர் கூறியபடி இந்த வாக்கியத்திலுள்ள ஆழிய கருத்தை ஆராய்ந்து உணராமல் ஆதிகால யூதர்கள் செய்தது போன்றே மேலெழுந்த வாரியான அர்த்தம் கற்பித்து உண்மையான கருத்தை கைநழுவ விட்டுவிட்டார்கள், நமது மதிப்பிற்குரிய சகோதரர்கள்.

யூதர்கள் ஒரு கிறிஸ்துவின் வருகையில் நம்பிக்கை வைப்பதற்காக, முந்தைய வேதத்தில் சொல்லப்பட்ட படி ஒரு எலியாவை (இலியாஸ்) வானத்திலிருந்து எதிர்பார்த்திருந்தார்கள் அவர்கள் எதிர்பார்த்தப்படி எலியா வானத்திலிருந்து இறங்கி வராமல் அவர்களுக்கு மத்தியிலேயே ஒரு சாதாரண மனிதனாக ஒரு யோவானாக தோன்றியதால், யூதர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை, கிறிஸ்து யூதர்களின் ராஜா வாகத் தோன்றுவார் என்று யூதர்கள் நம்பியிருந்தார்கள். ஆகவே ஒரு ஏழை நாசரேயனாகிய ஏசுவைக் கிறிஸ்துவாக அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை .

இயேசு தம்மைக் 'கிறிஸ்து' வாக வாதிடும் காலத்தில் யூதர்கள் அவரை நோக்கி: "கிறிஸ்து தோன்றுவதற்கு முன்னால் எலியா வானத்திலிருந்து இறங்கி வர வேண்டுமே, அவர் இன்னும் வரவில்லையே என்று கேட்டதற்கு இயேசு கூறிய பதில் என்ன?

கிறிஸ்து தோன்றுவதற்கு முன்னால் எலியா தோன்றுவார் என்பது உண்மையே. ஆனால் எலியா தோன்றிவிட்டார். யோவான் தான் நீங்கள் எதிர்பார்த்திருக்கும் எலியா என்று இயேசு கிறிஸ்து அவர்களிடம் கூறிவிடவில்லையா?

இதன்படி, யூதர்கள் எண்ணி இருந்ததைப்போல, எலியா வானத்திலிருந்து ஒருபோதும் தோன்றமாட்டார் என்பதும் எலியாவின் ஆவியிலும் பலத்திலும் மற்றொருவரே தோன்றுவார் என்பதும், அந்த மற்றொருவர் யோவானே என்பதும் நிரூபணம் ஆகிவிடவில்லையா? இயேசு கிறிஸ்து இப்படி கூறியதால் முந்திய வேதங்களிலுள்ள வாக்கியங்கள் பொய்யாகி போய்விட்டனவா? இல்லையே! பின்னர் யூதர்கள் ஏன் இயேசுவின் சொற்களை ஏற்றுக்கொள்ளாமல், எலியா இன்னும் வானத்திலிருந்து தோன்றவில்லை, ஆகவே கிறிஸ்து என்று வாதிடும் இந்த இயேசு ஒரு கள்ள தீர்க்கதரிசி தான் என்று முடிவு செய்து அவரை சபிக்கப்பட்ட மரணத்திற்கு ஆளாக்க விரும்பி, சிலுவையில் அறைந்து கொடுமை செய்தார்கள்?

"இவ்வளவு பெரிய கொடுமையையும், தவற்றையும் யூதர்கள் செய்ததற்கு காரணம் என்ன ஒரேஒரு காரணம்தானே!

வேத வாக்கியங்களை அப்படியப்படியே மேலெழுந்த வாரியாக அவற்றின் சொற்பொருள்படி யூதர்கள் பின்பற்றினார்கள்; அவ்வாகியங்களில் பொதிந்துள்ள கருத்தை அவற்றில் சொல்லப்பட்ட விசயங்களை பின்பற்றவில்லை. யூதர்கள் எலியா மற்றும் இயேசு கிறிஸ்துவுக்கும் இளைத்த துண்பம்களுக்கெல்லாம் இதுதான் மூல காரணம். வேத வாக்கியங்களில் நிறைந்துள்ள வார்த்தைகளை யூதர்கள் பின்பற்றினார்கள்: அவற்றின் அடியிலுள்ள விஷயத்தை விட்டுவிட்டார்கள். கிருஸ்தவர்கள் பின்பற்றுவதாக சொல்லிக்கொள்ளும் வேதாகமத்திலேயே இப்படித்தான் கூறப்பட்டிருக்கிறது. பிறகு எவ்வாறு கிறிஸ்தவர்களால் இதனை மறுத்துக் கூறமுடியும்?

எப்படியிருப்பினும், அப்பலங்கால யூதர்கள் செய்த தவற்றையே அறிவியல் அறிவு மிகுந்த இக்காலத்தில்- கல்வி அறிவு நிறையப்பெற்ற கிருஸ்தவ சகோதரர்களும் செய்து வருவது விந்தயில்லையா? மனுஷ குமாரன் மேகங்களிலிருந்து பூமியில் வந்திறங்குவார் என்று வேதாகமத்தில் சொல்லப்பட்டிருப்பதால், வானத்திலிருந்து இறங்கிவரக்கூடிய ஒரு மனுஷ குமாரனையே இவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

கிறிஸ்து தோன்றும் முன்னர், எலியா, தோன்றுவார் என்று முந்தய வேத நூற்களில் சொல்லப்பட்டிருந்தும் மரணித்துப்போன அதே பழைய எலியாதான் உயிரோடு மீண்டும் யூதர்களுக்கிடையில் தோன்றினாரா? அல்லது இயேசு கிறிஸ்துதான் அந்த மூடக் கருத்தை ஆதரித்தாரா? இரண்டும் இல்லை. மரணித்துப்போன எலியா மீண்டும் தோன்றுவாரென்றால், எலியாவின் வல்லமையிலும், கருத்திலும் அவரையொத்த மற்றொருவர் தோன்றுவார் என்றுதான் பொருள் என இயேசு கிருஸ்துவே விளக்கிக் கூறி யூதர்களின் அறிவிற்கு புறம்பான நம்பிக்கையை இடித்துரைக்கவில்லையா?

அப்படியானால், இயேசு இரண்டாம் முறையாகத் தோன்றுவாரென்று கிருஸ்தவர்களுக்கு மத்தியில் ஒரு நம்பிக்கை இருந்தால், அவர்கள் வானத்தை ஏன் ஏறிட்டு பார்த்து கொண்டிருக்கவேண்டும்? இயேசு மீண்டும் வருவார் என்பதன் பொருள் இயேசுவின் வல்லமையையும் இயேசுவின் கருத்தையும் கொண்ட அவரையொத்த மற்றொருவர் தோன்றுவார் என்பதுதானே பொருள்?

இயேசுவின் வல்லமையிலும், கருத்திலும் அவரையொத்த மற்றொருவர் ஏற்கனவே தோன்றிவிட்டார். அவரே பஞ்சாப் மாநிலத்தை சார்ந்த காதியான் என்னும் கிராமத்தில் பிறந்த ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மத்(அலை) அவர்கள்! இவருடைய வருகையால் இயேசுவின் இரண்டாவது வருகைபற்றிய தீர்க்க தரிசனம் நிறைவேறிவிட்டது.

வேதாகமத்தில் இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகையைப்பற்றி, அதாவது மனுஷ குமாரனுடைய வருகையைப்பற்றி சொல்லப்பட்ட அடையாளங்கள் யாவும் ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்களின் வருகையின் போது தவறாமல் நிறைவேறிவிட்டன. சில ஆதாரங்களை கீழே காண்போம்.

"அந்நாட்களில் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்த காரப்படும், சந்திரன் ஒளியை கொடாதிருக்கும். நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும். வானத்தின் தத்துவங்கள் அசைக்கப்படும்." (மத்தேயு 24:29)

இயேசுவின் இரண்டாவது வருகைக்குரிய காலம் கி.பி 1873-ல் தொடங்குகிறது என்று கிருஸ்தவ வல்லுனர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர். தமது வருகையால் இயேசுவின் இரண்டாவது வருகை நிறைவேறிவிட்டது என்று வாதிடும் வாக்களிக்கப்பட்ட மெசாயா ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு, இறைவனிடமிருந்து (revelation) வெளிப்பாடு கிடைத்தது. இந்த ஆண்டிலேயே என்பது குறிப்பிட தக்கது.

மனித குமாரன் தோன்றும் போது சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியை தராது, நட்சத்திரங்கள் வானத்திலிருந்து உதிரும் என்று வேதாகமத்தில் கூறப்பட்டபடி, சூரிய சந்திர கிரகணங்கள் இவ்வுலகே பிரமிக்கத்தக்க அளவில் நடந்தேறின, நட்சத்திரங்கள் வானத்திலிருந்து உதிர்ந்தன. கி.பி. 1894 ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் நாள் வெள்ளிகிழமை அன்று சூரிய கிரகணமும், கி.பி. 1894-ம ஆண்டு மார்ச்சு மாதம் இருபத்து ஒன்னாம் நாள் வியாழக்கிழமை அன்று சந்திர கிரகணம் உண்டாயின. வாக்களிக்கப்பட்ட மெசாயா தோன்றும் காலத்திற்கு அடையாளமாக ஒரு ரமலான் மாதத்தில் சூரிய சந்திர கிரகணங்கள் தோன்றும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஒரு தீர்க்க தரிசனத்தின் மூலமாக முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். அதற்கேற்பவே, நாம் மேலே குறிப்பிட்ட சூரிய சந்திர கிரகணங்கள் ஒரு ரமலான் மாதத்திற்குள்ளேயே நிகழ்ந்தேறின. உலகம் தோன்றிய நாள் முதலாக இப்படிப்பட்ட சூரிய சந்திர கிரகண நிகழ்ச்சிகள். ஒரு மாத காலத்திற்குள் நடைபெற்றதே இல்லை என வானவியல் ஆராட்சியாளர்கள் அத்தாட்சி பகருகின்றனர். வாகளிக்கப்பட்ட மெசாயாவாகிய ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்களின் உண்மையை வலியுறுத்த இறைவன் எத்தகைய பலமிக்க அத்தாட்சிகளை அருளியிருக்கின்றான்.

ஹாம்ஸ்வொர்த் சர்வதேச கலைக்களஞ்சியத்தில் கி.பி. 1872, 1885, 1892 ஆகிய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் நட்சத்திரங்கள் வானத்திலிருந்து உதிர்ந்தன என்ற உண்மை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சூரிய, சந்திர கிரகணங்கள் நடைபெற்றதைப் போன்றே, மனுஷ குமாரன் வரும் காலத்தில் மற்றொரு அடையாளமாகிய நட்சத்திரங்கள் உதிர்வதும் பிசகாமல் நடந்தேறிவிட்டது. உண்மையை உணர்ந்து, அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இவற்றைப்போன்ற இவற்றைப் போன்ற அத்தாட்சிகள் எத்தனை எத்தனையோ!

வலுவாய் தொனிக்கும் எக்காளச் சத்தத்தோடு அவர் தமது தூதர்களை அனுப்புவார். அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தில் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனை மட்டும் நாலு திசைகளிலிருந்தும் கூட்டி சேர்ப்பார்கள். (மத்தேயு 24:31)

ஹஸ்ரத் அஹ்மத் அவர்களுடையா தூதர்கள் உலகத்தின் ஒவ்வொரு பாகத்திற்கும் சென்று பலம் பொருந்திய இஸ்லாத்தின் போதனைகளை பிரச்சாரம் செய்து, இறைவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை நான்கு திசைகளிலிருந்தும் ஒன்று திரட்டினார்கள் என்ற உண்மையை உணர்வோர் எவரும் மேற்கண்ட தீர்க்கதரிசனம் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களிடத்தில் முழுமையாக நிறைவேறி விட்டதைகண்டு கொள்வர். இவ்வுலகில் இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் அஹ்மதியா பிரச்சார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
Read more »