அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jun 29, 2014

இறைவன் பேசும் தெய்வமா? பேசாத சிலையா?

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 19 இல் காளைக் கன்று என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்:  மூஸா நபியின் காலடி மண்ணை எடுத்து அதில் போட்டவுடன் அந்தச் சிற்பத்திலிருந்து ஒரு சப்தம் வந்தது. இதுதான் கடவுள் மூஸா வழி மாறிச் சென்று விட்டார் எனக் கூறி அம்மக்களை நம்ப வைத்து அதற்கு வழிபாடு நடத்தச் செய்து விட்டான். (திருக்குர்ஆன் 20:96)  நம் விளக்கம்:  திருக்குர்ஆன் 20:95-96 வசனத்துக்கு பி.ஜே யின் மொழியாக்கம்:  சாமிரியே!...
Read more »

எழுதுகோலே இன்றைய ஆயுதம்! - ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள்

இக்காலத்தின் தேவை வாளல்ல; பயன்படவேண்டியது பேனாவே என்பதை நன்குணர்ந்து கொள்ள வேண்டும். நமது எதிரிகள் இஸ்லாத்திற்கெதிராக எழுப்பியுள்ள சந்தேகங்களும், பல்வேறு அறிவியல் தத்துவங்களினால், இறைவனின் உண்மையான மார்க்கத்தைத் தாக்க முயன்றதும், பேனா என்னும் ஆயுதம்தாங்கி, அறிவியல் மற்றும் அறிவின் முன்னேற்றப் போர்களத்தில் இறங்கி, இஸ்லாத்தின் ஆன்மீகக் கம்பீரத்தையும், அதன் அந்தரங்க ஆற்றலின் அற்புதத்தையும் உலகுக்குக் காட்ட வேண்டிய அவசியத்தை எனக்கு உணர்த்தியது.  இறைவனின்...
Read more »

Jun 28, 2014

நோன்பு பற்றி தவறான விளக்கம். (நாஸிக், மன்சூக் திருக்குரானில் இல்லை)

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 47 இல் நோன்பை விட்டு விடுவதற்குப் பரிகாரம் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்:  ஆரம்பத்தில் நோன்பு கடமையாக்கப்பட்ட போது நோன்பு நோற்கச் சக்தி உடையோர் நோன்பு நோற்கலாம்: அல்லது ஒரு நோன்புக்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவு அளிக்கலாம் என்ற சலுகை இருந்தது அதுதான் இவ்வசனத்தில் (திருக்குர்ஆன் 2:184) கூறப்பட்டுள்ளது.  ரமலான் மாதத்தை அடைபவர் நோன்பு நோற்க வேண்டும் என்ற கட்டளை வந்த பின், சக்தி பெற்றவர்...
Read more »

அரபி மொழி உலக மொழிகளின் தாய்

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 244 இல் அவரவர் மொழியில் வேதங்கள் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:  இதன் காரணமாக ஒரு சமுதாயத்திற்கு தூதராக அனுப்பப்படுபவர் அச்சமுதாயத்தின் மொழியை அறிந்தவராகவே இருக்கிறார் என்று இந்த வசனம் (திருக்குர்ஆன் 14:4) கூறுகிறது.  நம் விளக்கம்:  அவரவர் மொழியில் வேதங்கள் என்று பி.ஜே கொடுத்துள்ள தலைப்பு தவறாகும். சமுதாய மொழியில் தூதர்கள் என்றுதான் மொழியாக்கம் செய்திருக்க வேண்டும். திருக்குர்ஆன்...
Read more »

Jun 27, 2014

ஸாபியீன்கள் யார்?

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை 443 இல் ஸாபியீன்கள் யார்? எனும் தலைப்பில் பி.ஜே., (11-வது பதிப்பு)  இவ்வசனங்களில் (2:62; 5:69; 22:17) ஸாபியீன்கள் என்ற பிரிவினர் பற்றி கூறப்பட்டுள்ளது.  ஹதீஸ்களை ஆராயும்போது ஸாபியீன்கள் என்போர் இறைத் தூதர்கள் அனுப்பப்படாத போதும் தங்களின் சிந்தனையைப் பயன்படுத்தி ஒரே கடவுள் கொள்கையை விளங்கிக் கொண்டவர்கள் என்பது தெரிய வருகிறது. ஏக இறைவனை விளங்கிக் கொண்டவர்கள் என்பது தெரிய வருகிறது. ஏக இறைவனை விளங்கி அவனுக்கு...
Read more »

Jun 24, 2014

ஈஸப்னு மர்யம் என்பதன் விளக்கம்.

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 206 இல் நாடோடிகள் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்.  நாடோடிகள் என்று தமிழாக்கம் செய்த இடத்தில் இப்னு ஸபீல் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல்லின் நேரடிப் பொருள் பாதையின் மகன் என்பதாகும்.  ஒருவனிடம் ஒரு செயல் அதிக அளவில் காணப்படும் போது அச்செயலுடன் மகன் என்பதைச் சேர்த்துக் கூறுவது அரபியர்களின் வழக்கம்.  எப்போது பார்த்தாலும் போரில் பங்கெடுப்பவன் போரின் மகன் என்று குறிப்பிடுவது...
Read more »

Jun 23, 2014

மஸீஹ் என்றால் மிக நீண்ட பயணி என்றே பொருள்

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 92 இல் மஸீஹ் என்னும் தலைப்பில் 2 ஆம் பதிப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:  ஈஸா நபியின் இன்னொரு பெயர் மஸீஹ் யுக முடிவு நாளின் கடைசியில் வரவிருக்கிற தஜ்ஜாலையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஸீஹ் எனக் கூறியுள்ளார்கள். ஈஸா நபியைப் போலவே தாஜ்ஜாலும் நீண்ட காலமாக உயிருடன் இருந்து வருகிறான்... எனவே மஸீஹ் என்பது இங்கு அரபி மொழிச் சொல்லின் பொருளில் பயன்படுத்தப்படவில்லை. நீண்ட காலம் வாழ்பவரை மெஸாயா என வேதமுடையோர்...
Read more »

Jun 14, 2014

அவரவர் தம் மார்க்கத்தை சுதந்திரமாக பின்பற்றும் நிலை ஏற்படும் வரை போரிடுங்கள்.

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 54 இல் கலகம் இல்லாதொழிந்து என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:  திருக்குர்ஆனின் 2:193, 8:39 ஆகிய இரு வசனங்களில் கலகம் இல்லாதொழிந்து தீன் அல்லாஹ்வுக்கு ஆகும் வரை போரிடுங்கள் என்று கூறப்படுகிறது. இவ்விரு இடங்களிலும் தீன் என்ற சொல்லுக்கு மார்க்கம் என்று பலரும் விளக்கம் கொடுத்துள்ளனர்.  இந்த விளக்கத்தின்படி மற்றவர்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற கருத்து ஏற்படுகின்றது. ஆனால்...
Read more »

Jun 10, 2014

ஹஜ்

பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண்களான 56, 57, 58, 59, 60 ஆகியவற்றின் நபி (ஸல்) அவர்கள் செய்து காட்டிய ஹஜ் குறித்து பி.ஜே இவ்வாறு எழுதுகிறார். அவை ஹஜ்ஜின் 3 வகைகள் பற்றிய விளக்கமாகும்.  இதில் ஹஜ்ஜின் மாதங்கள், ஹஜ்ஜின் போது வியாபாரம், தீண்டாமை, இரண்டு நாட்களில் புறப்படுதல் பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. மொத்தத்தில் இவை ஹஜ்ஜைப் பற்றிய விளக்கங்களாகும்.  நம் விளக்கம்:  1) நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் ஹஜ்ஜிற்குச்...
Read more »

Jun 9, 2014

ஆதம் நபி பற்றிய தவறான விளக்கம்

திருக்குர்ஆனுக்கு தவறான விளக்கம் வசனம் எண் 2:38)  திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 15 இல் அனைவரும் வெளியேறுங்கள் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:  ஆதம் (அலை) அவரது மனைவி ஆகிய இவரைத்தான் அல்லாஹ் வெளியேற்றினான். அனைவரும் வெளியேறுங்கள் என்று ஏன் திருக்குர்ஆன் 2:38 வசனத்தில் குறிப்பிட வேண்டும்? என்று சிலர் நினைக்கலாம்.  உலகில் அழியும் வரை தோன்றும் அனைவரையும் அவ்விருவரும் தமக்குள் சுமந்திருந்தார்கள். அவர்களிடமிருந்து...
Read more »

Jun 8, 2014

ஜின்கள் யார்?

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 154 இல், மனிதராக மாற்றித்தான் அனுப்புவான் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்:  தங்களைப் போலவே உண்டு பருகி குடும்பம் நடத்தும் ஒருவரை இறைவனின் தூதர் என்று நம்புவது மனிதர்களுக்குக் கஷ்டமாக இருந்தது. எனவே, வானவர்களைத் தூதராக அனுப்ப வேண்டியதுதானே? எனக் கேட்டனர்.  வேதத்தைக் கொண்டு வந்து மக்களிடம் ஒப்படைத்துச் செல்வதாக இருந்தால் வானவரை அனுப்பலாம். வேதத்திற்கு விளக்கம் கூறி நடைமுறைப்படுத்திக் காட்டத்தான்...
Read more »

பூமி அசையாதிருக்க நிறுவப்பட்டது மலைகளா? முளைகளா?

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 248 இல் முளைகளை நாட்டினோம் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:  பூமியில் அமைக்கப்பட்டுள்ள மலைகளைப் பற்றி அல்லாஹ் கூறும் போது அதை முளைகளாக நாட்டியிருக்கிறோம் என்று கூறுகிறான். (திருக்குர்ஆன் 15:19, 16:15, 21:31, 27:61, 31:10, 41:10, 50:7, 77:27, 78:7, 79:32)  நம் விளக்கம்:  மலை எனும் பொருளைத் தரும் ரவாஸிய எனும் சொல் வருமிடங்களாகிய 15:20, 16:15, 21:31, 27:61, 31:11, 41:11, 50:8,...
Read more »