அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Apr 29, 2014

ஆங்கிலத்தில் வஹி

எந்த நபிக்கும் அவரது தாய் மொழியிலேயே வஹி வந்திருக்கிறது. ஆனால் இமாம் மஹ்தி (அலை) அவர்களுக்கு ஆங்கிலத்தில் வஹிவந்திருக்கிறது. இது குறித்து ஒரு மௌலவி எள்ளி நகையாடியுள்ளார்.  நம் பதில்:  ஏளனம் செய்யப்படாத எந்த நபியும் மக்களிடத்தில் வரவில்லை. என்கிறது திருக்குர்ஆன். நிராகரிப்போர் எள்ளி நகையாடுவது இயல்பு அது அவர்களின் ஆணவத்தையும் அறியாமையையுமே காட்டுகிறது.  நபிமார்களுக்கு அவர்களுடைய தாய் மொழியில் ‘வஹி’ வந்ததாக திருக்குர்ஆனில்...
Read more »

ஈஸா நபி (அலை) அவர்களின் மரணமும் நஜாத் ஏட்டின் மூடநம்பிக்கையும் – 3

“ஈஸா (அலை) அவர்கள் மரணிக்கவில்லை ஆயினும் மரணிப்பவர்களே” என்ற நஜாத் ஆசிரியரின் மூட நம்பிக்கை அடிப்படையற்றது என்பதை கீழ்வரும் திருக்குர்ஆன் வசனம் தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டுகிறது:  “என்னையும் எனது தாயாரையும் அல்லாஹ்விற்குப் பகரமாக இரு தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்கள்” என மர்யமின் மகனான ஈஸாவே நீர் மக்களிடம் கூறினீரா? என்று அல்லாஹ் கேட்கும்போது அவர் இவ்வாறு பதிலளிப்பார். நீ தூயவன், எனக்கு உரிமையில்லாத என்னால் ஒருபோதும் கூற முடியாது....
Read more »

ஈஸா (அலை) அவர்களின் இரண்டாவது வருகை தொடர்பாக சிராஜுதீன் இப்ன் அல் வர்தி அவர்களின் கூற்று

சிராஜுதீன் இப்ன் அல் வர்தி  ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் சிராஜுதீன் இப்ன் அல் வர்தி அவர்கள் தன்னுடைய காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஈஸா (அலை) அவர்களின் இரண்டாவது வருகையை அவரின் பண்பை கொண்ட வேறொருவரின் வருகையாக நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என்பதை தன்னுடைய خريدة العجائب وفريدة الغرائب (ஹரீததுல் அஜாயிபு வ பரீததுல் ஹராயிப்) என்ற நூலில் 120 வது பக்கத்தில் கூறுகிறார்கள்.  وقالت فرقة: نزول عيسى خروج رجل يشبه عيسى في الفضل والشرف؛...
Read more »

Apr 22, 2014

சனிக்கிழமை மீன் பிடித்தவர்கள் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் உருமாறினார்களா?

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 23 இல் சனிக்கிழமை என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: சனிக்கிழமை முழுவதும் மீன் பிடிக்கும் தொழில் செய்யக்கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதை அவர்கள் மீறியதால்தான் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மாற்றப்பட்டனர்.  நம் விளக்கம்:  ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  எனது உம்மத்தில் சிதறுண்ட அமைதியிழந்த ஒரு காலம் வரும். அப்போது அவர்கள் தமது ஆலிம்களிடம் நேர்வழிக்கான நம்பிக்கையுடன்...
Read more »

Apr 20, 2014

தவறான அறிவியல் விளக்கம் - பூமியைப் போன்று பிற கோள்களில் உயிரினம் வாழ முடியுமா? முடியாதா?

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 175 இல் இதில்தான் வாழ்வீர்கள் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்;  இதில் தான் வாழ்வீர்கள் என்பது பூமியைத் தவிர வேறு எங்கும் மனிதர்கள் இயற்கையாக வாழ முடியாது என்று அடித்துக் கூறுகிறது... எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இதுவும் இறை வேதம் எனபதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது (பார்க்க திருக்குர்ஆன் 2:36, 7:10, 7:24-25, 30:25)  நம் விளக்கம்:  இவ்வசனங்களில்...
Read more »

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதா? இல்லையா?

பீ.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 357 இல் சூனியம் என்னும் தலைப்பில் கடைசி 5 வரிகளில் இவ்வாறு எழுதுகிறார்:  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்து அவர்களை யாரும் முடக்கவில்லை என்பதுதான் சரியான கருத்தாகும் என்றும் ஆனால் அவரே திருக்குர்ஆன் விளக்கம் எனும் நூலில் பக்கம் 88-90 இல், நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்றும் எழுதியுள்ளார்.  நம் கேள்வி;  இத்தகு சுய முரண்பாடு ஏன்? ஆண்டுக்கு ஆண்டு நூலுக்கு...
Read more »

Apr 19, 2014

இஞ்சீலும் சபூரும் வேதங்களா?

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 4-இல் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:  தவ்ராத், ஸபூர், இஞ்சீல், திருக்குர்ஆன் இந்த நான்கு வேதங்களின் பெயர்கள்தான் குர்ஆனில் கூறப்பட்டுள்ளன.  நம் பதில்: ஸபூரும் இஞ்சீலும் வேதங்கள் என திருக்குர்ஆன் கூறுகிறதா? திருக்குர்ஆன் இக் கருத்தை மறுக்கிறது. 73:15; 46:13; 46:30; 45:16-18; 6:92; 28:48-49; 61:7 ஆகிய வசனங்கள் அக்கருத்தை மறுப்பதை கீழே காண்போம். 46:13 இதற்க்கு முன்னர் மூஸாவின் வேதம் வழிகாட்டியாகவும்...
Read more »

Apr 16, 2014

திருக்குரானின் 5:75, 3:145 வசனங்களுக்கு அபூ அப்தில்லாஹ் தரும் தவறான விளக்கம்

அபூ அப்தில்லாஹ் ஆதாரம் எண் 3, 4 அபூ அப்தில்லாஹ் தன் நூலின் பக்கம் 22 முதல் 25 வரை, ஈஸா(அலை) அவர்கள் மரணிக்கவில்லை; இனிமேல் மரணிப்பார் என்பதற்கு ஆதாரமாக 5:75, 3:144 வசனங்களை விளக்கியுள்ளார்.  “முஹம்மது தூதரேயன்றி (வேறு) அல்லர். இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் சென்று விட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவீர்களா?” (திருக்குர்ஆன் 3:144) மேலும் மர்யம் உடைய...
Read more »

Apr 14, 2014

முஹம்மது அஸத் திருக்குர்ஆன் ஆங்கில மொழியாக்கத்தில் ஈஸா நபியின் மரணம்

Asad - Sura 5, Al-Maida Ayah 117 Nothing did I tell them beyond what Thou didst bid me [to say]: 'Worship God, [who is] my Sustainer as well as your Sustainer.' And I bore witness to what they did as long as I dwelt in their midst; but since Thou hast caused me to die, Thou alone hast been their keeper: for Thou art witness unto everything. Surah 5 - Al-Maida , Ayah 116 Commentary - 139 Sc., "after Jesus' death": this is fully evident...
Read more »

தவப்பா - திருக்குர்ஆன் வசனத்திற்கு நபி (ஸல்) அவர்களின் விளக்கம்.

திருக்குர்ஆன்  116.وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب 117. ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد  "மர்யமின் மகன் ஈஸாவே! நீர் மக்களிடம் அல்லாஹ்வை அன்றி என்னையும் ஏன் தாயாரையும்...
Read more »

Apr 12, 2014

நபி கோழையாவார்களா? - அபூ அப்தில்லாஹ்விற்கு பதில்

அபூ அப்தில்லாஹ் 14 வது பக்கத்தில் எழுதுகிறார் காதியானிகள் சொல்வதுபோல் உண்மையான ஈஸா(அலை) அவர்கள் சிலுவையில் அறையப்பட்டிருந்து இறக்கப்பட்டிருந்தால், அந்நிலையில் அவர்களை விட்டுவிட்டு அவர்களின் சீடர்கள் பிரிந்து சென்றிப்பார்களா? ஈன்றெடுத்த தாயும், தன் உண்மை சீடர்களும் அறியாமல் ஈஸா(அலை) காஷ்மீருக்கு ஓடி ஒளிந்துகொண்டார்களா? பெற்ற தாயையும், உற்ற சீடர்களையும் மறந்து தனக்குற்ற நபித்துவப் பணியையும் புறக்கணித்து ஒன்றல்ல, இரண்டல்ல நூற்றியிருபது வயது...
Read more »

Apr 11, 2014

தவப்பா - மரணம்

நபி (ஸல்) அவர்களால் நீதி தீர்ப்பவராக முன்னறிவிக்கப்பட்டவராகவும் வாக்களிக்கப்பட்ட மஸீஹாகவும் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் இதனை கீழ்வருமாறு தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள். "திருக்குரானில் எல்லா இடங்களிலும் தவப்பீ என்பதன் பொருள்,மரணம் மற்றும் ரூஹை கைப்பற்றுதல் என்பதேயாகும். கடைசியாக குறிப்பிட்ட இரு வசனங்கள் வெளிப்படையில் தூக்கம் பற்றியதாக இருக்கின்றன என்றாலும், இந்த இரு வசனங்களிலும் தூக்கம் என்ற கருத்துதான் சொல்லப்பட்டுள்ளது....
Read more »