பக்கம் 53 இல் அபூ அப்தில்லாஹ் எழுதுகிறார்:
ஈஸா (அலை) அவர்கள், அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு குஷ்டரோகிகளையும், கடும் வியாதியஸ்தர்களையும் சுகப்படுத்தியது, இறந்தவர்களை உயிர்பித்தது. இப்படிப்பட்ட தனிச்சிறப்புகளை உடையவர்களாக ஈஸா (அலை) இருந்தார்கள்.
நம் பதில்:
ஈஸா நபி (அலை) முதலில் வந்த போது செய்த அற்புதங்களை அபூஅப்தில்லாஹ் கூறியுள்ளார். ஈஸாநபியின் இரண்டாவது வருகையின் போது அவர் சிலுவையை முறிப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா வரியை நீக்குவார்; செல்வங்களை வாரி வாரி வழங்குவார்; நீதியை நிலைநாட்டுவார் தீர்ப்பு வழங்குவார்; தஜ்ஜாலைக் கொல்வார் என்று நபிமொழிகளில் கூறப்பட்டுள்ளது.
நம் கேள்வியாவது, முதலில் வந்த போது செய்த செயல்கள் அவர் இரண்டாவது வரும் போது செய்வார் என்று ஏன் கூறப்படவில்லை? இரண்டாவது வருகையில் செய்யும் செயல்கள் முதல் வருகையில் ஏன் சொல்லப்படவில்லை? இவ்விரண்டாம் தனித்தனியாகவும், வெவ்வேறானதாகவும் உள்ளனவே! ஏன்?
ஈஸா நபி (அலை) அவர்களுக்கு மட்டும் கொடுத்த அந்த அற்புதங்களை அவர் இரண்டாவது வரும் போதும் செய்வார் என்று ஏன் கூறவில்லை? அப்போது உலகில் யாரும் இறக்கமாட்டார்கள் என்பதாலா? அல்லது குருடர்கள், தொழுநோயாளிகள் யாரும் இருக்கமாட்டார்கள் என்பதாலா? அல்லது பறவைகளைப் படைப்பதற்கு களிமண் இருக்காது என்பதினாலா? அல்லது பறவைகள் போதிய அளவுக்கு இருந்ததினால் இனி பறவைகளைப் படைக்க வேண்டிய தேவை இல்லை என்பதனாலா? அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அவர் முன்பு படைத்தார். ஆனால் இரண்டாவது வருகையின் போது அல்லாஹ் அனுமதி கொடுக்க மறுத்து விட்டதனால் அவ்வாறு செய்யவில்லையா? ஈஸா நபி (அலை) அவர்கள் செய்த அற்புதங்கள் அனைத்தும் உவமை வடிவில் அமைந்தவை என்பதை அபூ அப்தில்லாஹ் உணரத் தவறி விட்டார்.
அடுத்து ஈஸா நபி (அலை) மீண்டும் வரும் பொது செய்வார் என்று கூறப்படும், பன்றியைக் கொல்வார் என்ற செயலை முதல் வருகையின் போது அவர் ஏன் செய்யவில்லை? பன்றிகள் அக்காலத்தில் இல்லை என்பதினாலா?
முதல் வருகையின் போது ஈஸா நபி (அலை) ஏன் செல்வங்களை வாரி வாரி வழங்கவில்லை? ஈஸா நபி (அலை) அவர்களிடம் செல்வம் இல்லை என்பதாலா? அல்லது எல்லோரும் செல்வர்களாக இருந்ததினால் வாரி வழங்க வேண்டிய தேவை இல்லை என்பதலா? இச்செயல்கள் எல்லாம் உவமை வடிவில் அமைந்தவை என்பதை அபூ அப்திலாஹ் உணரத் தவறிவிட்டார். அது மட்டும் இல்லை. முதல் வருகையில் நீதியை நிலைநாட்டித் தீர்ப்பு வழங்காதது ஏன்? அக்காலத்தில் அவை சரியாக இருந்தன என்பதினாலா? அல்லது ஈஸா நபியால் அப்போது செய்ய முடியாது என்பதாலா? நவூதுபில்லாஹ். முதலில் வந்த போது தஜ்ஜாலைக் கொல்லவில்லையே! ஏன்? அவன் அப்போது இல்லை என்பதினாலா? அல்லது ஈஸா நபியால் கொல்ல முடியாது என்பதினாலா? நவூதுபில்லாஹ்?
இருவேறு ஈஸா நபி என்பதால், இரு வேறு நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள்ளன என்பதை அபூஅப்தில்லாஹ் உணர்ந்து கொள்ளவேண்டும்.
மேலும், முதலில் வந்தவர் இஸ்ரவேலர் சமுதாயத்திற்கு மட்டும் வந்தவர். அவர் முழு உலகுக்கும் நபியாக வரமுடியாது.
இரண்டாவது வரக்கூடியவர் முழு உலகுக்கும், நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி வரும் உம்மத்தி நபி என்பதால் இருவேறு விதமாகக் கூறப்பட்டுள்ளன. இதுவே உண்மை.
Blog RSS Feed
Via E-mail
Twitter
Facebook
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.