மாற்றிய வசனம் 5:90,91; மாற்றப்பட்ட வசனம் 2:219;4:43)
திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 116 இல் போதையாக இருக்கும் போது என்னும் தலைப்ப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:
முதலில் அரபு மக்களுக்கு குடி தடுக்கப்படாமல் இருந்தது. (திருக்குர்ஆன் : 16:67) பின்னர் படிப்படியாக இது குறித்து தடைகள் இறங்கின.
போதையாக இருக்கும் போது தொழக்கூடாது என்ற கட்டளை வந்தது. (திருக்குர்ஆன்:4:43) பிறகு குடிக்காமல் இருப்பதே நல்லது என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது...
May 30, 2014
May 29, 2014
அஹ்மதிய்யா ஜமாத்தும், கவிஞர் இக்பாலும்
தமிழ் நாடு வக்பு வாரியத்தின் மாத ஏடான ‘இஸ்மியில்’ மௌலான என்பவர் அஹ்மதிய்யா ஜமாஅத் பற்றிய தமது கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்,
“மகாகவி இக்பால், காதியானிகளை முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து மாற்றிவிடவேண்டுமென வெகுகாலத்திற்கு முன்பே கூறினார். அவருடைய கூற்று அப்பொழுது முக்கியத்துவம் இல்லாமல் ஆக்கப்பட்டிருந்தது”
அஹ்மதிய்யா ஜமாத்தை எதிர்ப்பவர்கள், ‘அஹ்மதிகள் முஸ்லிம் அல்லாதவர்கள் என்று கூறுவதற்கு, கவிஞர் இக்பாலின் வாலைப்பிடித்துக்...
Labels:
அஹ்மதியா,
கலப்பட மார்க்கம்
May 27, 2014
கரைபடியாத மறைநூல் – திருக்குர்ஆன்
“இன்னா நஹ்னு நஸ்ஸல்னாத் திக்ர வ இன்னா லஹு ல ஹாபிலூன்.”
நிச்சயமாக நாமே இந்த திக்ரை (திருக்குர்ஆனை) இறக்கினோம். மேலும் நாமே இதன் பாதுகாவலனாக இருப்போம்” (திருக்குர்ஆன் 15:10)
திருக்குர்ஆன் இறைவனால் அருளப்பட்ட மறைநூல் மட்டுமன்று அவனால் எல்லாக் காலத்திலும் பாதுகாக்கப்படுகின்ற அற்புத நூலும் கூட என இத் திருவசனம் அறிவுறுத்துகின்றது.
வேத நூற்களாகட்டும, வேதாகமமாகட்டும் அவற்றில் இறை வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்று கூறலாமேயொழிய...
Labels:
அஹ்லே குர்ஆன்
May 26, 2014
சுவர்கதிற்குரிய 73 வது பிரிவு அஹ்மதிய்யா ஜமாஅத்தே - முல்லாக்களின் ஏகோபித்த கருத்து.
மௌலவி ஸபர் அலி என்பவர் கீழ்வருமாறு ஒரு அறிக்கையை விடுத்திருந்தார்; அவர் கூறுகிறார்:
"இந்த செயற்குழு (அதாவது 1974 செப்டம்பர் 6 ஆம் நாள் அன்று பாகிஸ்தான் அரசு ஒரு குழுவை அமைத்து அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தை காஃபிராக்கியது அந்த செயற்குழு) கடந்த 1400 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக "இஜ்மாயே உம்மதிற்கான" (சமுதாயத்தில் ஏகோபித்த கருத்தை அறிகின்ற) வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று காதியானிகளுக்கு எதிராக 72 பிரிவுகள் (இங்கு கவனிக்க வேண்டியது)...
Labels:
72 பிரிவினர்
ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு அவர்கள் அளித்த பதிலும்.
கேள்வி: கலிமா கூறுபவரையும், கிப்லாவை முன்னோக்கித் தொழுபவரையும் காபிர் என்று கூறுவது சரியானதல்ல” எனத் தாங்கள் ஆயிரக்கணக்கான இடங்களில் எழுதியுள்ளீர்கள். இதிலிருந்து நம்பிக்கையாளர்களில் எவர்கள் தங்களை நிராகரித்தால் “காபிர்” ஆகி விட்டார்களோ அவர்களைத் தவிர தங்களை ஏற்றுக் கொள்ளாததால் மட்டும் எவரும் காபிர் ஆகமாட்டார் என்று தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அப்துல் ஹகீம் கான் என்பவருக்கு “எனது தூதுச் செய்தி எட்டியபின்னர் என் மீது நம்பிக்கை கொள்ளாத ஒவ்வொருவரும்...
Labels:
அஹ்மதியா
May 21, 2014
தென்காசியாரின் குற்றச்சாட்டு - அவருக்கு அற்புதங்கள் மூவாயிரம் எனக்கோ மூன்று இலட்சம்
ஆரம்ப காலம் முதலாகவே உண்மையின் எதிரிகள், பொய்யின் நண்பர்கள், இறைவன் புறமிருந்து தோன்றும் எல்லா இறைதூதர்களுக்கும், மார்க்க சீர்திருத்தவாதிகளான முஜத்திதுமார்களுக்கும் எதிராகப் பொய், வஞ்சகம், முதலியவைகளின் அடிப்படையில் அவர்களை எதிர்த்தும், துன்புறுத்தியும் வந்துள்ளனர். அவர்களுக்கு எதிராக மக்களிடையே தப்பெண்ணங்களையும் பொய்ப் பிரச்சாரங்களையும் கட்டவிழ்த்துவிட்டு மக்கள் அவர்களை ஒப்புக்கொள்வதிலிருந்தும் தடை செய்து கொண்டிருந்தார்கள் என்றும் திருக்குர்ஆன்...
May 17, 2014
அந் நஜாத் ஏட்டின் சிந்தனைக்கு - எம். பஷாரத் அஹ்மது.
அந்நஜாத் ஏட்டின் டிசம்பர் மாத இதழில் 18 ஆம் பக்கத்தில் கீழ்வருமாறு எழுதப்பட்டுள்ளது: “அல் குர்ஆனின் எந்த வசனத்தில் எந்த சமூகம் செய்த தவறு சுட்டிக் காட்டப்பட்டிருந்தாலும் அந்த தவறை முஸ்லிம்களும் கண்டிப்பாகச் செய்யக்கூடாது; மீறிச் செய்தால் அந்த சமூகத்தினர் அடைந்த தண்டனையை இவர்களும் அடைய வேண்டிவரும் என்பதே சரியாகும். உதாரணமாக அல்குர்ஆன் 7:81 இல் “மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள். நீங்கள்...
May 11, 2014
இஸ்லாமிய குற்றயியல் சட்டம் (மௌலவி முஹம்மது உமர் H.A)
இவ்வுலக வாழ்வில் மனிதன் இரண்டு விதமான தீமைகளிலும், பாவச் செயல்களிலும் ஈடுபடுகின்றான். ஒன்று ஆன்மீகரீதியான பாவச் செயல்கள். வெளிப்படையான விதத்தில் நிரூபிக்கப்படும் குற்றங்களுக்கு இவ்வுலகத்திலேயே தண்டனை கிடைக்கிறது. ஆனால் யாருக்குமே தெரியாமல் செய்யப்படும் பாவங்களுக்கும், ஷரியத்தின் கட்டளைகளுக்கு எதிராக செய்யப்படும் தீமைகளுக்கும் இறைவனே தண்டனை கொடுக்கிறான்.
இவ்வுலகில் இதுவரை தோன்றியுள்ள எல்லா அரசாங்கங்களிலும், அவற்றின் சட்டங்களிலும் பல்வேறு...
May 10, 2014
நோபல் பரிசு பெற்ற முதல் முஸ்லிம் டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்களின் வாழ்க்கை.

நோபல் பரிசு பெற்ற முதல் முஸ்லிம் என்றப் பெருமையைப் பெற்றுத்தந்த அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தின் ஒப்பற்ற தொண்டர் டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் வாழ்க்கையின் சில குறிப்புகளை இங்கு காண்போம்.
பிறப்பு:
டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் பாகிஸ்தானில் சாஹிவால் (Sahiwal) என்னும் இடத்திலுள்ள சன்டோக்டாஸ் (Santokdas) என்னும் ஊரில் சௌதிரி முஹம்மது ஹுஸைன் அவர்களுக்கும் ஹாஜிரா பேகம் அவர்களுக்கும்...
Labels:
அப்துஸ் ஸலாம்
Subscribe to:
Posts (Atom)