அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jun 4, 2014

படைபலம் பற்றிய வசனங்கள்! (நாசிக், மன்சூக் திருக்குர்ஆனில் இல்லை.)


(மாற்றிய வசனம் 8:66 ; மாற்றப்பட்ட வசனம் 9:41) 

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 203 இல் குறைவாக இருந்த போதும் போர் கடமையா? என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

எண்ணிக்கை, படைபலம் குறைவாக இருந்தாலும் போரிடுவது கடமை என்று இவ்வசனம் (திருக்குர்ஆன் 9:41) கூறுகிறது. 

8:66 வசனம் எதிரிகளின் பலத்தில் பாதியளவு இருந்தால்தான் போர் கடமை எனவும் அதை விடக் குறைவாக இருந்தால் போர் கடமையில்லை எனவும் கூறுகிறது. இவ்விரண்டும் முரண்பாடு என எண்ணக் கூடாது.

ஏனெனில் திருக்குர்ஆன் 8:66 வசனத்தில் இப்போது அல்லாஹ் உங்களுக்கு எளிதாக்கி விட்டான் என்ற சொற்றொடரைக் கூறி விட்டுத் தான் எதிரிகளின் பலத்தில் பாதி இருக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே ஆரம்பத்தில் இருந்த நிலை இதன் மூலம் மாற்றப்பட்டது என்பதை அறியலாம். 

எனவே படைபலம் எவ்வளவு குறைவாக இருந்தாலும் போர் செய்யவேண்டும் என்பது முன்னர் இருந்த சட்டமாகும். குறைவாக இருந்தாலும் போர் செய்ய வேண்டும் என இவ்வசனம் கூறுவதாக வைத்துக் கொண்டாலும் குறைவு என்பது எவ்வளவு என்பதைக் கூறவில்லை. அந்த அளவை திருக்குர்ஆனின் 8:66 வசனம் விளக்குகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம். 

நம் விளக்கம்: 

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இவ்வசனம் அவ்வசனத்தின் மூலம் மாற்றப்பட்டுவிட்டது என்று சொன்னதாக அனைத்து நபித் தோழர்களும் கூறிய சான்றைக் கொண்டுவராதவரை, மற்றவர்கள் இவ்வாறு கூறுவது தத்தம் சுயவிளக்கமேயாகும். திருக்குர்ஆன் 9:41வது வசனம் (நம்பிக்கை கொண்டவர்களே) நீங்கள் நலிவாகவோ, வலுவாகவோ இருப்பினும் (அறப்போருக்கு) புறப்படுங்கள். நீங்கள் உங்கள் பொருள்களையும் உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் வழியில் அறப்போர் செய்யுங்கள். நீங்கள் அறிந்திருந்தால் இது உங்களுக்கு மிக்க நன்மையாகும் என்று கூறுகிறது. இதில், 
  • ஈமானில் நலிவோ, வலுவோ இருப்பினும் போர் செய்க 
  • உங்கள் பொருள்கள், உயிர்கள் ஆகியவற்றை கொண்டு போர் செய்க 
  • அல்லாஹ்வின் வழியில் அறப்போர் செய்க 
  • இதுவே உங்களுக்கு நன்மை என்று பொத்தாம் பொதுவாக கூறுகிறது. 
8:66 இல், அதைவிடக் குறைவாக இருந்தால் போர் கடமை இல்லை. எனவும் இந்த வசனம் கூறுகிறது என்று பி.ஜே கூறுவது தவறாகும். அந்த வசனம் அப்படி எதுவும் கூறவில்லை. மேலும் வசனம் பாதியளவு இருந்தால் தான் போர் கடமை எனவும் கூறவில்லை. காரணம் முதற்போராம் பதர் யுத்தத்தில் தங்களை விட மூன்று மடங்கு எதிரிகளுடன் முஸ்லிம்கள் போரிட்டுள்ளனர். 

உறுதியான ஈமான் கொண்டவர்கள் 20 பேர் நிராகரிப்போர் 200 பேரையும், 100 பேர் ஓராயிரம் பேரையும் வென்று விடுவார்களே என்று வலுவான நிலைக்கு ஒரு அளவையும்,

8:67 இல், ஈமானில் பலவீனம் இருந்தால் உறுதியாக நிற்கக்கூடிய 100 பேர், காபிர்கள் 200 பேரையும், 200 பேர் இருந்தால் காபிர்கள் 1000 பேரையும் வென்று விடுவர் என்று நலிவான நிலைக்கு ஒரு அளவையும் அல்லாஹ் எடுத்துக் கூறுகிறான். 

அதாவது, நம்பிக்கையாளர்கள் நம்பிக்கையின் உயர் நிலையை அடைந்தால் ஒருவர் நிராகரிப்போரில் பத்து பேரை வெல்வர். ஆனால் இப்போது நம்பிக்கையின் உயர் நிலையை அடையாததால் நம்பிக்கையாளர்கள் காபிர்கள் இவரையே வெல்ல முடியும் என அடுத்த வசனம் கூறுகிறது. ஆக, நம்பிக்கையாளரின் குறைந்த பட்ச அளவையும் அதிகபட்ச அளவையும் இவ்விருவசனங்களும் வரையறை செய்துள்ளன என்பதே உண்மை. 

நம்பிக்கைக்கு ஏற்றவாறு ஆற்றலும் வளர்கிறது. 

ரோமானியர்கள் பாரசீகர் ஆகியோருடன் செய்த போர்களில் முஸ்லிம்கள் 10 மடங்கு என்ன 80 மடங்கு, 100 மடங்கு கொண்ட பகைவர்களைத் தோற்கடித்தனர். ஏனென்றல் அந்த முஸ்லிம்கள் நபித் தோழர்களின் காலத்தையும் நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் புதுப்புது அடையாளங்களையும் கண்டதனால் அவர்களின் நம்பிக்கை அவ்வளவுக்கு வளர்ந்திருந்தது. எனவே 9:41; 8:67 ஆகிய வசனங்கள் ரத்து, ரத்து செய்யப்பட்ட வசனங்கள் அல்ல என்பதை அறிகிறோம்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.