அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

May 29, 2012

ஈசா(அலை) அவர்களின் மரணத்தை உறுதி செய்யும் திருக்குர்ஆன் வசனங்கள்.


ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களை நேரடியாக சுட்டிக்காட்டி மரணித்துவிட்டார் என்று காட்டும் திருக்குர்ஆன் வசனத்தைப் பார்ப்போம்.

" மரியமின் மகன் ஈஸாவே, அல்லாஹ்வைத் தவிர என்னையும் எனது தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று மக்களிடம் நீர் கூறினீரா என்று அல்லாஹ் கேட்பான். அவர் கூறுவார். நீ தூய்மையானவன், எனக்குத் தகாததை நான். கூறியதில்லை. அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் உள்ளதை நீ அறிவாய். உன் உள்ளத்தில் உள்ளதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக மறைவானவற்றை நீயே நன்கு அறிந்தவனாவாய் என்று கூறுவார். (மேலும்) நீ எனக்கு கட்டளை இட்டபடி என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் என்பதையே நான் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களோடு இருந்த காலம் அவரை அவர்களுக்கு நான் சாட்சியாக இருந்தேன். ஆனால், நீ என்னை மரணிக்க செய்த பின் நீயே அவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய். மேலும் நீயே எல்லாவற்றிக்கும் சாட்சியாளனாக இருந்தாய்." (திருக்குர்ஆன் 5:117,118)

இந்த வசனத்தைப் படித்து சிந்தித்துப் பாருங்கள். நியாயத் தீர்ப்பு நாளில் அல்லாஹ் ஈசா(அலை) அவர்களிடம் அவரையும், அவரது தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளும்படி மனிதர்களுக்கு கூறினீரா எனக் கேட்பான் என்றும், அவர் பதிலளிக்கையில் அவ்வாறு நான் கூறவில்லை என்றும் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டுமென்றே கூறினேன் என்றும் அவர்கள் மத்தியில் வழ்ந்திருந்தவரையில் தம்மையும், தனது தாயாரையும் கடவுள்களாக தமது மக்கள் வணங்கவில்லை என்றும் அதற்க்கு அவரே சாட்சியாளன் என்றும், அவரை மரணிக்கச் செய்த பின் அவர்களின் நம்பிக்கைக்கு என்ன மாற்றம் ஏற்பட்டதென அவர் அறியமாட்டாரென்றும், அவர்களை கவனிப்பவனும் அவர்களின் செயல்களுக்கு சாட்சியாக இருப்பவனும் இறைவனே என்று அவர் பதில் சொல்லுவார் என்றும் இந்த இறைவசனத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதிலிருந்து நாம், தெரிந்து கொள்வது யாதெனின், ஈசா நபி மனிதர்கள் மத்தியில் இருந்தவரை, அவரை மக்கள் கடவுளாகவோ, கடவுளின் குமாரனாகவோ வணங்கவில்லை என்றும், மக்கள் ஈசா நபியை கடவுளாக வணங்கியது, அவர்களின் மரணத்திற்கு பிறகே என்றும் மிகத் தெளிவாக தெரிகிறது. ஆகவே, ஈசா நபியின் மரணம் முன்பும், மனிதர்கள் அவரை கடவுளாக வணங்க ஆரம்பித்தது பின்பும் என மேற்படி இறைவசனம் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

இப்னுமரியம், அதாவது மரியமின் மகன் ஈசா வருவார் என்ற சில நபி மொழியின்படி, சென்ற காலத்தில் யூதர்களுக்காக அனுப்பப்பட்ட ஈசா நபி மரணிக்காமல் வானத்தில் வாழ்ந்து வருகிறார் என்ற தவறான நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஆலிம்கள் நீண்ட காலமாக போதித்து வந்ததன் காரணமாக குரானுக்கு எதிரான இந்த நம்பிக்கையை உம்மத்தே முஹம்மதியாவாகிய முஸ்லிம்களின் உள்ளத்தில் நன்றாகப் பதிந்துவிட்டது. அந்த நம்பிக்கை பரிசுத்த குரானுக்கு எதிரானது என நிரூபிக்கும் பொறுப்பில் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் இருக்கிறது எனக் கூறிக் கொள்கிறேன். திருக்குரானுக்கு விளக்கம் கூறுவதற்கு முதல் தகுதி ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உண்டு என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும். மேற்படி இறை வசனத்திற்கு விளக்கம் கூறுவதைப் போன்று ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தங்களுக்கு மறுமையில் நடக்கும் ஒரு சம்பவத்தை கூறுகிறார்கள். ஹஸ்ரத் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள், மேற்படி இறை வசனத்திற்கு விளக்கமாக இந்த ஹதீஸை தங்கள் கிரந்தத்தில் எழுதியிருக்கிறார்கள்.

ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:- நியாயத் தீர்ப்பு நாளில் என் உம்மத்தாரிலிருந்து சிலர் நரகத்தின்பால் இழுத்துச் செல்லப்படுவார்கள். அப்போது நான் என் இறைவனே இவர்கள் என் அருமைத் தோழர்கள் எனக் கூறுவேன். இதரிக்கு என்னிடம் உமக்குப் பிறகு இவர்கள் புதுமையாக என்ன செய்தார்கள் என்று நீர் அறிய மாட்டீர். என்று கூறப்படும். அப்பொழுது நான் அந்த நல்லடியார் (ஈசா நபி) கூறியது போல் நான் அவர்களோடு இருந்த காலம் வரை அவர்களுக்கு சாட்சியாக இருந்தேன். ஆனால் நீ என்னை மரணிக்கச் செய்த பிறகு நீயே அவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய் என்று கூறுவேன். அப்பொழுது நீர் இவர்களை விட்டு பிரிந்ததிலிருந்து இவர்கள் மார்க்கத்தை விட்டு திரும்பி போனார்கள் என்று கூறப்படும்." ( புகாரி கிதாபுத் தப்ஸீர்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இத்திருமொழியில் அந்த நல்லடியார் கூறியது போன்று என்று ஈசா நபியை சுட்டிக்காட்டி, அவர்கள் குர் ஆனின் எந்த சொற்களை உபயோகித்திருக்கிறார்களோ அதே சொல்லான 'வகுன்து அலைஹிம் ஷஹீதன் மாதும் துஃபீஹிம் பலம்ம தவஃப்பைத்தனீகுன்த அன்தர்ரகீப அலைஹிம், அதாவது அவர்களோடு இருந்த காலம் வரை அவர்களுக்கு சாட்சியாக இருந்தேன் ஆனால் நீ என்னை மரணிக்க செய்தபின் நீயே அவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய் என்று கூறியிருக்கிறார்கள். திருக்குரானில் ஈசா நபி (அலை) அவர்கள் கூறிய இந்த சொற்களில் ஒரு எழுத்துக் கூட மாற்றம் இல்லாத சொல்லாக ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மறுமையில் கூறுகிறார்கள். ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பலம்ம தவஃபைத்தனீ என்று உபயோகித்த சொல்லிற்கு நீ என்னை மரணிக்க செய்தபின் என்று சரியான பொருள் கொடுத்திருக்கும் போது, ஈசா (அலை) அவர்கள் கூறும் அதே சொல்லான பலம்ம தவஃபைத்தனீ என்ற சொல்லுக்கு 'நீ என்னை ( உடலோடு வானத்திற்கு) கைப்பற்றிய பின்.' என்று விளக்கம் கொடுப்பது என்ன நியாயத்தில் இருக்கிறது. நீங்களே நன்கு சிந்தனை செய்துபாருங்கள்.

நபி (ஸல்) அவர்களுக்காக கொடுக்கப்பட்ட சரியான பொருளாகிய 'நீ என்னை மரணிக்க செய்தபின்' என்ற பொருளையே ஈசா(அலை) அவர்களுக்கும் கொடுத்து இந்த பூமியில் ஈசா நபி இறந்துவிட்டார்கள் என்றும், அவர்கள் இறந்த பின் அவர்களைப் பின்பற்றிய மக்கள் அவர்களை இறைவனாகவும், இறைவனின் குமாரனாகவும் வணங்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றும் உறுதியான நம்பிக்கைக் கொண்டு திருக்குரானுக்கு எதிரான நம்பிக்கையினால் ஏற்படும் குற்றத்திலிருந்து விலகிக் கொள்ளவேண்டும் என்று முஸ்லிம் சகோதரர்களுக்கு நினைவுறுத்துகிறேன்.

இஸ்லாமின் ஆரம்ப காலத்தில் லட்சக்கணக்கான கிருஸ்தவர்கள் முஸ்லிம்கலாகிவிட்டார்கள். அவர்களிடம் உள்ள பழைய நம்பிக்கையாகிய ஈசா நபி வானத்தில் உயிரோடு பூத உடலுடன் இருக்கிறார் என்ற கொள்கை, இஸ்லாம் மார்க்கத்தில் படிப்படியாக புகுந்து ஆக்கிரமித்துக் கொண்டது. அதற்க்கு காரணம் முல்லாக்களான ஆலிம்களே. இறுதி காலத்தில் மரியமின் மகன் ஈசா வருவார் என்று சில ஹதீதுகளை காட்டி திருக்குர்ஆன் வசனங்களுக்கு மாற்றமான பொருள் கொடுத்து முஸ்லிம்கள் அனைவரையும் திருக்குரானுக்கு எதிரான நம்பிக்கைக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். அதைத்தான் மறுமையில் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) என் இறைவனே எனது சமுதாயத்தினர் இந்த குரானை முதுகுக்கு பின்னால் எறிந்து விட்டனர் என்று கூறுவார், என்ற வசனம் தெளிவாக தெரிவிக்கிறது
Read more »

May 28, 2012

ஈசா நபி (அலை) அவர்களின் மரணம் - P.J யின் அறியாமை


திருக்குர்ஆன் விளக்கம் - ஈசா (அலை) வருகை என்னும் தலைப்பில் பி. ஜைனுலாப்தீன், (16-11-2001) ஒற்றுமை இதழில் 45 ஆம் பக்கத்தில் எழுதப்பட்ட திருக்குரானின் தவறான விளக்கத்திற்கு இங்கு விளக்கம் தரப்படுகிறது.

மௌலவி பி.ஜைனுலாப்தீன்: "மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயையும் இரண்டு கடவுளர்களாக ஆக்கிக் கூளுங்கள் என்று நீர்தான் மக்களுக்கு கூறினீரா? என்று அல்லாஹ் கூறும்போது, நீ தூயவன். எனக்கு உரிமை இல்லாததை நான் கூறுவது எனக்குத் தகாது. நான் அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக நீ அறிவாய். என் மனதில் உள்ளதை நீ அறிவாய். உன் மனதில் உள்ளதை நான் அறியமாட்டேன் நீயே மறைவானவற்றை எல்லாம் நன்கு அறிபவன்! எனது இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் என நீ எனக்கு ஆணையிட்டதைத் தவிர (வேறு) எதனையும் அவர்களிடம் நான் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்தபோதெல்லாம் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன் என்னை நீ கைப்பற்றிய போது நீயே அவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய். நீ ஒவ்வொரு பொருளையும் பார்க்கக்கூடியவனாக இருக்கின்றாய் ......... என்று திருக்குர் ஆனின் (5:116,117,118) வசனங்களுக்குப் பொருள் எழுதியுள்ளார். மேலும், மரணிக்க செய்தல் என்பது எவ்வாறு தவஃபா வின் பொருளாக இருக்கிறதோ அதுபோலவே கைப்பற்றுதல் என்பதும் அச்சொல்லுக்குரிய பொருள் தான்.

"உயிர்கள் மரணிக்கும்போதும், மரணிக்காதவைகளை அவற்றின் உறக்கத்தின்போதும் கைப்பற்றுகிறான்." (39:42) இந்த இடத்தில் கைப்பற்றுகிறான் என்றுதான் அதே சொல்லுக்கு பொருள் கொள்கிறோம். மரணிக்கச் செய்தல் என்று பொருள் கொள்வதில்லை. (பக்கம் 47) அவன்தான் உங்களை இரவில் கைப்பற்றுகிறான். (6:60)

இவ்வசனத்தில் அதே சொல் இடம் பெற்றாலும் மரணிக்கச் செய்தல் என்று பொருள் இல்லை தூக்கத்தில் ஒருவரைக் கைப்பற்றுதல் என்பதே இதன் பொருளாக உள்ளது. (பக்கம்,47) என்றும் எழுதியுள்ளார்.

என் விளக்கம்: திருக்குரானின் வசனத்தைப் பாருங்கள்,

"அல்லாஹ் மக்களின் உயிர்களை அவர்களின் மரணத்தின் போதும், மரணமடையாதவர்களின் உயிர்களை அவர்களின் தூக்கத்தின் போதும் கைப்பற்றுகிறான்."

மக்களின் உயிர்கள் இரண்டு வகைகளில் கைப்பற்றப்படுகிறது. என்று இவ்வசனம் கூறுகிறது.

மரணத்தின்போது


தூக்கத்தின்போது

உயிர்களை நிரந்தரமாக கைப்பற்றுதலுக்கு மரணம் என்றும், ரூஹை தற்காலிகமாக கைப்பற்றுதலுக்கு உறக்கம் என்றும் இவ்வசனம் கூறுகிறது.

எனவேதான் இவ்வசனத்தில் தொடர்ந்து "பின்னர் மரணம் முடிவாகிவிட்டவற்றை தன்னிடம் நிறுத்திக் கொள்கிறான். மற்றவற்றை (அதாவது தூக்கத்தில் கைப்பற்றப் பட்டவற்றை) குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு திருப்பி அனுப்பிவிடுகின்றான். சிந்தனை செய்யும் மக்களுக்கு நிச்சயமாக இதில் அடையாளங்கள் உள்ளன" என்று கூறியுள்ளான்.

இவ்வாறு அல்லாஹ் ஒருவனை தவப்பா செய்தான் என்றால் அதற்க்கு ரூஹை(உயிரை) கைப்பற்றிக் கொண்டான். - அவனை மரணமடையச் செய்தான் என்றுதான் பொருள். இவ்வாறே அல்லாஹ் ஒரு மனிதனை தூக்கத்தில் - இரவில் தவப்பா செய்தான் என்றால், அவனுடைய ரூஹை - உயிரை தற்காலிகமாக கைப்பற்றிக் கொண்டான் என்றுதான் பொருள்.

இவ்விரு பொருள்களைத் தவிர வேறு பொருள் இல்லை. அதாவது பி.ஜே தவறாக எழுதியிருப்பது போல் உடலோடு உயிரைக் கைப்பற்றுதல் என்ற ஒரு வினோதமான பொருள் இல்லவே இல்லை என்பதை இவ்வசனம் தெளிவாக விளக்குகிறது.

ஒரு வசனத்தில் தூக்கம், இரவு, என்ற சொற்கள் வராமல் ஒருவரை இறைவன் தவப்பா செய்தான் என்றால் அதற்க்கு அவரை மரணிக்க செய்தான் என்ற பொருளைத் தவிர வேறு எந்த பொருளும் கொடுக்கவே முடியாது. இதை நாங்கள் சவாலாகவே விடுகிறோம்.

பி.ஜே போன்றவர்கள் இவ்வாறு கூறுவார்கள் என்று தெரிந்துதான் எல்லாம் அறிந்த அல்லாஹ் அதற்கு இடம் வைக்காமல் நபி (ஸல்) அவர்கள் மூலம் 5:117,118 வது வசனத்திற்கு ஒரு விளக்கத்தையும் கொடுத்துள்ளான் போலும். அந்த நபி மொழியின் படி ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தன் மக்கள் மத்தியில் வாழ்ந்தகாலம், பின்னர் அங்கிருந்து ரூஹ் மட்டும் கைப்பற்றபடுதல், பின்னர் தன் மரணத்திற்குப் பிறகு தன் தோழர்கள் என்ன செய்தார்கள் என்பது தெரியாத மறுமை வாழ்வு ஆகியவை தனக்கு நடந்தது போன்று ஈஸா நபிக்கும் நடந்தது என்று நபி (ஸல்) அவர்கள் உறுதியாகக் கூறியுள்ளார்கள்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ ، أَخْبَرَنَا سُفْيَانُ ، حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ النُّعْمَانِ ، قَالَ : حَدَّثَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ ، عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ :
إِنَّكُمْ مَحْشُورُونَ حُفَاةً عُرَاةً غُرْلًا ، ثُمَّ قَرَأَ كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ سورة الأنبياء آية 104 وَأَوَّلُ مَنْ يُكْسَى يَوْمَ الْقِيَامَةِ إِبْرَاهِيمُ ، وَإِنَّ أُنَاسًا مِنْ أَصْحَابِي يُؤْخَذُ بِهِمْ ذَاتَ الشِّمَالِ فَأَقُولُ : أَصْحَابِي ، أَصْحَابِي ، فَيَقُولُ : إِنَّهُمْ لَمْ يَزَالُوا مُرْتَدِّينَ عَلَى أَعْقَابِهِمْ مُنْذُ فَارَقْتَهُمْ فَأَقُولُ كَمَا ، قَالَ : الْعَبْدُ الصَّالِحُ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِيإِلَى قَوْلِهِ الْعَزِيزُ الْحَكِيمُ سورة المائدة آية 117 - 118

ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:- நியாயத் தீர்ப்பு நாளில் என் உம்மத்தாரிலிருந்து சிலர் நரகத்தின்பால் இழுத்துச் செல்லப்படுவார்கள். அப்போது நான் என் இறைவனே இவர்கள் என் அருமைத் தோழர்கள் எனக் கூறுவேன். இதரிக்கு என்னிடம் உமக்குப் பிறகு இவர்கள் புதுமையாக என்ன செய்தார்கள் என்று நீர் அறிய மாட்டீர்.என்று கூறப்படும். அப்பொழுது நான் அந்த நல்லடியார் (ஈசா நபி)கூறியது போல் நான் அவர்களோடு இருந்த காலம் வரை அவர்களுக்குசாட்சியாக இருந்தேன். ஆனால் நீ என்னை மரணிக்கச் செய்த பிறகு நீயேஅவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய் என்று கூறுவேன்.அப்பொழுது நீர் இவர்களை விட்டு பிரிந்ததிலிருந்து இவர்கள்மார்க்கத்தை விட்டு திரும்பி போனார்கள் என்று கூறப்படும்." ( புகாரிகிதாபுத் தப்ஸீர் 3349)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இத்திருமொழியில் அந்த நல்லடியார் கூறியது போன்று என்று ஈசா நபியை சுட்டிக்காட்டி, அவர்கள் குர் ஆனின் எந்த சொற்களை உபயோகித்திருக்கிறார்களோ அதே சொல்லான'வகுன்து அலைஹிம் ஷஹீதன் மாதும் துஃபீஹிம் பலம்ம தவஃப்பைத்தனீகுன்த அன்தர்ரகீப அலைஹிம், அதாவது அவர்களோடு இருந்த காலம் வரை அவர்களுக்கு சாட்சியாக இருந்தேன் ஆனால் நீ என்னை மரணிக்க செய்தபின் நீயே அவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய் என்று கூறியிருக்கிறார்கள். திருக்குரானில் ஈசா நபி (அலை) அவர்கள் கூறிய இந்த சொற்களில் ஒரு எழுத்துக் கூட மாற்றம் இல்லாத சொல்லாக ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மறுமையில் கூறுகிறார்கள். ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பலம்ம தவஃபைத்தனீ என்று உபயோகித்த சொல்லிற்கு நீ என்னை மரணிக்க செய்தபின் என்று சரியான பொருள் கொடுத்திருக்கும் போது, ஈசா (அலை) அவர்கள் கூறும் அதே சொல்லான பலம்ம தவஃபைத்தனீ என்ற சொல்லுக்கு 'நீ என்னை ( உடலோடு வானத்திற்கு) கைப்பற்றிய பின்.'என்று விளக்கம் கொடுப்பது என்ன நியாயத்தில் இருக்கிறது.

நபி (ஸல்) அவர்களுக்காக கொடுக்கப்பட்ட சரியான பொருளாகிய 'நீ என்னை மரணிக்க செய்தபின்' என்ற பொருளையே ஈசா(அலை) அவர்களுக்கும் கொடுத்து இந்த பூமியில் ஈசா நபி இறந்துவிட்டார்கள் என்றும், அவர்கள் இறந்த பின் அவர்களைப் பின்பற்றிய மக்கள் அவர்களை இறைவனாகவும், இறைவனின் குமாரனாகவும் வணங்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றும் உறுதியான நம்பிக்கைக் கொண்டு திருக்குரானுக்கு எதிரான நம்பிக்கையினால் ஏற்படும் குற்றத்திலிருந்து விலகிக் கொள்ளவேண்டும்

பி.ஜே கொடுக்கும் பொருளை நாம் கொடுத்தால் (பலம்ம தவபைத்தனி என்ற சொல்லுக்கு உடலோடு உயிரைக் கைப்பற்றுதல்) நபி (ஸல்) அவர்களும் வானத்தில் உயிரோடு இருக்கிறார்கள் என்று நம்ப வேண்டி வரும். இவர் நம்ப தயாரா?

நபி (ஸல்) அவர்களே இந்த வசனத்திற்கு தெளிவான விளக்கம் தந்த பிறகு. அந்த வசனத்திற்கு வேறொரு விளக்கத்தை இந்த இவர் கொடுக்கிறார் என்றால் இவரை நாம் எப்படி நபி(ஸல்) அவர்களை பின்பற்றுபவர் என்று சொல்லமுடியும். இவர் தன்னை திருத்திக்கொள்ளவேண்டும்.
இல்லையென்றால் இவர் மக்கள் மத்தியில் அவமானப்படப்போவது உறுதி.
Read more »

May 23, 2012

73 பிரிவுகளில் நேர்வழிபெற்ற பிரிவு எது?


நபி (ஸல்) அவர்கள் இறுதிகாலத்தில் தமது சமுதாயம் எவ்வாறு இருக்கும் என்பதைக் கீழ்வருமாறு முன்னறிவித்துள்ளார்கள்:-

"ஒரு ஜோடி காலனிகளுள் ஒன்றோடொன்று ஒத்திருப்பது போன்று இஸ்ரவேல் சமுதாயத்திற்கு நிகழ்ந்தது அனைத்தும் எனது சமுதாயத்திற்கும் நிகழும். இஸ்ரவேலர்கள் எழுபத்துஇரண்டு பிரிவுகளாகப் பிரிந்தனர். எனது சமுதாயமோ எழுபத்துமூன்று பிரிவுகளாகப் பிரியும் (அவற்றுள்) ஒரு பிரிவாரைதவிர ஏனைய பிரிவினர் அனைவரும் 'நரகை அடைவர்' இறை தூதரே! அந்த பிரிவு எது? என்று வினவப்பட்டபோது நானும் எனது சஹாபாக்களும் எவ்வாறிருப்பார்களோ அந்தப் பிரிவு என நபிபெருமானாரவர்கள் பதிலளித்தார்கள்"

இந்த நபிமொழியின் இறுதிப்பகுதியை அஹ்மத், அபூதாவூத் ஆகியோர் கீழ்வருமாறு அறிவித்துள்ளார்கள்:- 

'எழுபத்து இரண்டு கூட்டமும் நரகிலும், ஒரு கூட்டம் சுவர்க்கத்திலும் நுழைவார்கள். அந்த ஒரு பிரிவு ஜமாத்தாக இருக்கும்" (மிஷ்காத்)

இந்த நபிமொழி இப்போது சில முஸ்லிம் பத்திரிகைகளில் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. அனாச்சாரங்களிலிருந்தும், ஆலிம்சாக்களின் பிடியிலிருந்தும் தம்மை சிறிது விடுவித்துக் கொண்ட சிலர் தாமே இந்த வெற்றிக்குரிய பிரிவு என தம்பட்டம் அடித்துக்கொள்ளவும் மற்றவர்கள் அதற்க்கு அருகதையற்றவர்கள் என்பதற்கு 'ஆதாரங்கள்' காட்டவும் முயல்கின்றனர். இது இவர்களின் அறியாமையையே பறைசாற்றுகிறது. 

அந்-நஜாத் ஏடு, வெற்றிக்குரிய அந்தப் பிரிவு எது என்பதை ஆய்வு செய்வதற்க்குப் பகரமாக அந்தப் பிரிவைச் சாராதவர்கள் யார் என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது. அந்-நஜாத் இதழில் இவ்வாறு காணப்படுகிறது:-

"நபி (ஸல்) அவர்களிடம் மன்ஹும் யாரசூலுல்லாஹ் என்றே கேட்கப்பட்டது, அதாவது அவர்கள் யார் என்றே கேட்கப்பட்டது. அவர்களின் பெயர் என்ன என்றோ? அவர்கள் என்ன அகீதாவில் இருப்பார்கள் என்றோ கேட்கப்படவில்லை. எனவே இஷ்டப்பட்ட பெயரை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்பவர்கள் விதண்டா வாதம் செய்கிறார்கள் என்பதே உண்மையாகும்" 

மேற்கண்ட நபிமொழியில் "மன்ஹும்" (அவர்கள் யார்) என்று கேட்டதாக இல்லை. மாறாக மன்ஹிய (அது எது?) அதாவது அந்தப் பிரிவு எது என்றே கேட்கப்பட்டது. நஜாத் ஆசிரியர் தமது இஷ்டம்போல் ஹதீஸை மாற்றுகிறாரா? 

முஸ்லிம் சமதாயத்தில் நபி(ஸல்)அவர்களையும் சஹாபாப் பெருமக்களையும் பின்பற்றுபவர்கள் வெற்றிக்குரியவர்கள் என்று இங்கு குறிப்பிடப்படவில்லை. அவ்வாறென்றால் எழுபத்துமூன்று பிரிவுகளிலும் அவ்வாறு நடப்பவர்கள் இருக்கலாம். இங்கு 'மன்ஹிய' - அந்தப் பிரிவு எது? என்று கேட்கப்பட்டு தாமும் தமது சஹாபாக்களும் இருப்பது போன்று இருப்பவர்களே என்று நபி(ஸல்) அவர்களால் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது. எனவே அவ்வாறு இருக்கும் ஒரு பிரிவாறே வெற்றிக்குரிய பிரிவார் என்றும் அப்படி ஒரு பிரிவார் இருந்தால் அவர்கள் தம்மை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்ட தமக்கு ஒரு பெயரை வைத்துக் கொள்ளவே வேண்டும் என்பதும் தெளிவாகிறது. 

"நபி (ஸல்) அவர்களே எனது உம்மத்து எழுபத்துமூன்று பிரிவினர்களாகப் பிரிவார்கள் என்று சொல்லப்பட்டபின் அதை எப்படி நாம் மறுக்க முடியும்"(பக்கம் 13)

என்று கூறி முஸ்லிம் சமுதாயத்தில் பிரிவுகள் உண்டு என்பதை ஒப்புக் கொள்ளும் அந்-நஜாத் வெற்றிக்குரியவர்கள் ஒரு தனிப் பிரிவாறே என்பதை உணர்ந்துக் கொள்ளத் தவறுவது ஏன்? 

மேலே குறிப்பிட்ட படி இந்த நபிமொழியில் மற்றொரு அறிவிப்பில் 'அந்தப் பிரிவு ஜமாத்தாக இருக்கும்" என்று கூறப்பட்டிருக்கிறது. இதிலிருந்து வெற்றிக்குரியவர்கள் தனி நபர்கள் அல்ல மாறாக அது ஒரு ஜமாஅத் என்பது புலனாகவில்லையா? 

இஸ்லாம் தனிநபர் மார்க்கமன்று, அது கூட்டாகச் செயல் படுத்தப்படவேண்டிய மார்க்கம். இயக்கம் இல்லாமல் இஸ்லாம் இல்லை. இதனை 'நஜாத்' புரிந்துக் கொள்ளவேண்டும். 

இனி வெற்றிக்குரிய அந்தப் பிரிவு எது என்பதை ஆராய்வோம். அந்தப் பிரிவுக் குரிய இலக்கணம் இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலோரிடத்தில் காணப்பட வில்லை. என்பதை அவர்களின் தலைவர்களே கூறுகின்றனர். 

மௌலானா மௌதூதி சாகிப் இவ்வாறு கூறுகிறார்:- 

பெயரளவிலான இன்றைய முஸ்லிம் சமுதாயத்தை காணுகின்ற போது அதில் விதவிதமான முஸ்லிம்களைக் காணமுடியும். முஸ்லிம் சமுதாயம் இன்று ஒரு மிருகக் காட்சி சாலையாக காட்சி தருகின்றது. அதிலே பருந்து, காகம், கழுகு போன்ற ஆயிரக்கணக்கான பறவைகளையும் மிருகங்களையும் காணலாம். இன்று முஸ்லிம்களென்று சொல்லப்படும் மக்களின் நிலை எவ்வாறென்றால் அவர்களில் 1000 பேரில் 999 பேர் மார்க்க அறிவில்லாதவர்களாகவும் உண்மைக்கும் பொய்யிற்கும் உள்ள வேறுபாட்டினை உணராதவர்களாகவும் உள்ளனர். அவர்களின் எண்ணங்கள் இஸ்லாத்திற்கு முரண்பாடானவை. பரம்பரை பரம்பரையாக முஸ்லிம் என்ற பெயரை அவர்கள் பெற்றிருக்கிறார்களேயொழிய வேறொன்றும் அவர்களிடத்தில் இல்லை. (முஸல்மான் அவர் மௌஜூதா ஸியாசி கஷ்மகஷ் பக்கம் 44, 105-106)

மௌலானா அதாவுல்லா ஷாஹ் புகாரி இவ்வாறு கூறிறார் - 

நாம் இஸ்லாத்தின் பெயரால் செய்வதனைத்தும் வெளிப்படையான குப்ராகும். நமது இதயங்கள் மார்க்க அறிவு இல்லாதவையாகவும் கண்கள் அகப்பார்வை (ஆன்மீகப் பார்வை) அற்றவையாயும் காதுகள் உண்மையை கேட்க மறுப்பவையாகவும் இருக்கின்றன. சிலைகள் (கப்ருகள்) மீது உங்களுக்குள்ள நம்பிக்கையும் அல்லாஹ் மீதுள்ள அவ நம்பிக்கையும் குப்ர் அல்லாமல் வேறென்ன? நாம் ஏற்றிருப்பது நபி (ஸல்) அவர்கள் கொண்டுவந்த இஸ்லாமா? நமது அமைப்புகள் அனைத்தும் குப்ரியத் ஆகும்........ (ஆஸாத், லாகூர்) 

இப்படி ஒட்டு மொத்தமாக முஸ்லிம் சமுதாயம் - நபி பெருமானாரின் சீர்கெட்டு விட்டதென்றால் வெற்றிக்குரிய அந்தப் பிரிவுதான் எது? அதனை நபி(ஸல்) அவர்களே கோடிட்டுக் காட்டுகிறார்கள்:

"இந்தச் சமுதாயத்தின் சிறந்த காலக்கட்டங்கள் அதன் ஆரம்பத்திலும் இறுதியிலும் உள்ளவையாகும். ஆரம்பக் கட்டத்தில் நானும் இறுதி கட்டத்தில் வாக்களிக்கப்பட்ட மஸீஹும் இருப்பார்கள்." (கன்சுல் உம்மால்)

"நான் ஆரம்பத்திலும் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் இறுதியிலும் உள்ள ஒரு சமுதாயம் எவ்வாறு அழியும்" (இப்னு மாஜா) 

இவற்றிலிருந்து வாக்களிக்கப்பட்ட மஸீஹை ஏற்பவர்களே அந்தச் சீர்கேட்டிலிருந்து தப்பியவர்கள் என்பதும் அவர்களே அந்த வெற்றிக்குரிய பிரிவார் என்பதும் புலனாகும். 

அடுத்து வெற்றிக்குரிய அந்த பிரிவார் ஒரு "ஜமாஅத்" ஆக விளங்கும் என மேற்கண்ட ஹதீதிலிருந்து தெளிவாகிறது. இங்கு ஜமாஅத் என்பது வெறும் கூட்டத்தைக் குறிக்காது.

"லைசல் ஜமாஅது இல்லா பி இமாமின்" 

இமாம் இல்லாமல் ஜமாஅத் இல்லை. 

என்பது நபி(ஸல்) அவர்களின் வாக்காகும். ஜமாஅத் என்றால் அது ஒரு தலைமையின் கீழ் இயங்கக்கூடியதொன்றாகும். இஸ்லாமிய சமுதாயம் தலைமையின் கீழ் இயங்கக்கூடியதாகும். தலைமை இல்லாத எந்தக் கூட்டமும் இஸ்லாமிய சமுதாயமாக அழைக்கப்பட இயலாது. அந்த அளவுக்கு தலைமை முக்கியத்துவம் வாய்ந்தது. 

ஹஸ்ரத் இப்னு உமர் அவர்களின் ஓர் அறிவிப்பு இவ்வாறு காணப்படுகிறது:- யாராவது ஜமாத்திலிருந்து விலகி நிற்கிறார்கள் என்றால் அவர் இஸ்லாமிய வளையத்திலிருந்து வெளியேற்றப்படுவார். (திர்மிதி) ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் பையத் செய்தது எப்போது என ஹஸ்ரத் யாகூபிப்னு இப்ராஹிமிடம் வினவப்பட்டபோது, நபி(ஸல்) அவர்கள் மறைந்த அன்றே! ஹஸ்ரத் அபூபக்கர் அவர்களை இமாமாக ஏற்றார்கள். சஹாபாக்கள் ஒரு நாளில் ஒரு பகுதி கூட ஜமாத்தாக இல்லாமலிருக்க விரும்பவில்லை. என்றார்கள். (திப்ரி பாகம் 3 பக்கம் 301) 

இவற்றிலிருந்து "ஜமாஅத்" "இமாம்" ஆகியன எத்துனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணரலாம். 

இந்த 'ஜமாஅத்" தும் இமாமும் தம்மிடத்தில் இல்லை என்பதை இக்கால முஸ்லிம் அறிஞர்கள் உணர்ந்தே இருக்கின்றனர். 

அல்லாமா சித்திக் ஹசன் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்:-

"இன்றைய முஸ்லிம்களுக்கு ஒரு ஜமாத்தோ இமாமோ இல்லை. மாறாக இது இவர்கள் சின்னாபின்னமாயிருக்கும் காலகட்டமாக இருக்கிறது.(இக்திராபுஸஆ , பக்கம் 56) 

ஜம்மியத்துல் உலமாயே ஹிந்தின் ஏடான அல்ஜம்மியத் (டெல்லி) தில் இவ்வாறு காணப்படுகிறது:- 

"முஸ்லிம்சமுதாயமென்பது ஒரு சரடில் கோர்க்கப்பட்ட மாலை போன்ற கட்டுப்பாடுமிக்க ஓர் அமைப்பென்றால் இன்று முஸ்லிம் சமதாயம் என்ற ஒன்று இல்லவே இல்லை! சிதறிக் கிடக்கும் மணிகள் போலவும் இடையனில்லாத ஆடுகள் போலவும் முஸ்லிம்கள் இருக்கின்றனர்." (அல் - ஜம்மிய்யத் 14-4-31) 

லாஹூரிலிருந்து வெளிவரும் ஸம்ஸம் எனும் ஏட்டில் இவ்வாறு காணப்படுகிறது. 

அந்தோ பரிதாபம், உயிருள்ள ஓர் இமாம் இல்லாத சமுதாயம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதை காண்கிறோம். சொர்கத்திற்குரிய வழி என்று எதனை எண்ணிக்கொண்டிருக்கிரார்களோ அது நரகத்தின் பாதையே யாகும். தலைமையற்ற ஒரு சமூகத்தின் தலை மீது வீழ்ச்சியின் மேகங்களே காணப்படும். (ஸம்ஸம் 11-5-39)

நம்பிக்கையிலும் நடைமுறையிலும் திருமறையின் கட்டளை பேணியும் அண்ணல் நபிபெருமாநாரை முழுக்க முழுக்க பின்பற்றியும் ஒரு இமாமின் கீழ் ஒன்றுபட்டு அல் ஜமாத்தாக இயங்கி வருவது இன்றைய உலகில் அஹ்மதியா இயக்கம் மட்டுமே 

இத்தகைய ஒரு உன்னத ஜமாஅத் உருவாகுமென்றும் அதுவே நபிபெருமானார் முன்னறிவித்த அந்த வெற்றிக்குரிய பிரிவு என்றும் இஸ்லாமிய நல்லறிஞர்களும் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்துள்ளார்கள்.

மேற்கண்ட நபிமொழிக்கு விளக்கமாக ஹஸ்ரத் முஹிய்யுத்தீன் இப்னு அரபி (ரஹ்) அவர்கள் தமது மிர்காத் ஷரஹ் மிஷ்காத் எனும் ஹதீது விளக்கவுரை நூலில் இவ்வாறு வரைந்துள்ளார்கள்:

"எழுபத்திரண்டு பிரிவுகளும் நரகத்திற்காளாவார்கள். சுவர்க்கம் செல்லும் அந்த ஒரு ஜமாஅத் நபிபெருமானார் (ஸல்) அவர்களின் நடைமுறைகளைப் பேணும் 'அத்தரீத்துன் நக்கிய்யதுல் அஹ்மதிய்யது" புனித அஹ்மதிய்யா இயக்கத்தை சார்ந்தவர்களாக இருப்பார்கள். (மிர்காத் பாகம் 1 பக்கம் 201)

ஹஸ்ரத் முஜத்திது அல்பிஸானி (ரஹ்) அவர்கள் இவ்வாறு வரைந்துள்ளார்கள்: அக்காலத்தில் ஹக்கீகத்து முஹம்மதியாவின் பெயர் ஹக்கிகத்து அஹ்மதிய்யா என்றிருக்கும். அது (அஹமதிய்யத்) அல்லாஹ்வின் அஹத் (ஏகத்துவம்) எனும் குணயியல்பை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும். (ரிஸாலா மப்தக்மா ஆத் பக்கம் 58) 

அஹ்மதியா இயக்கம் தோன்றுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னே அதன் பெயரை இந்த இஸ்லாமிய அறிஞர்கள் தெரிவித்திருப்பது அற்புதமும் இறைசெயலும் ஆகும். தனிப் பெயர் கொண்டவர்கள் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற கருத்தை கூறி மறைமுகமாக அஹ்மதிய்யா இயக்கத்தை தாக்க விழைகின்றவர்கள் இதனை தெரிந்துகொள்ளவேண்டும். இவர்களின் 'நஜாத்'திற்க்காகவும் இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காகவும் முஸ்லிம் சமுதாயத்தின் எழுச்சிக்காகவும் திறக்கப்பட்ட ஒரே வழி அஹமதிய்யா இயக்கமே என்பதையும் இவர்கள் உணரவேண்டும்.
Read more »

May 12, 2012

ஈசா நபி (அலை) அவர்களின் மரணமும் 'நஜாத்' ஏட்டின் மூடநம்பிக்கையும் - 2


திருக்குர் ஆனின் பல்வேறு சிறப்பம்சங்களில் ஒன்று, அதன் வசனங்கள் ஒன்றை ஒன்று தெளிவுபடுத்தும் வண்ணம் அமைந்திருப்பதுதான். விவாதத்துக்குரிய திருமறை வசனமான "அல்லாஹ் அவரை (ஈசா நபியை) தன்னளவில் உயர்த்திக் கொண்டான்." என 4:159 இல் காணப்படுவதை 3:56 ஆம் வசனம் தெளிவு படுத்துகிறது. இந்த வசனம் இவ்வாறு அமைந்துள்ளது.

"ஈசா நான் உம்மை மரணிக்கச் செய்வேன் மேலும் என்னளவில் உயர்த்திக் கொள்வேன் என அல்லாஹ் கூறிய பொது ........"

இந்தத் திருக்குர் ஆன் வசனம் ஈசா நபி இறைவனளவில் உயர்த்தப்படுவதற்கு முன் அவருக்கு மரணம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்திவிடுகிறது. ஏனெனில் இங்கு மரணம் முதலிலும் உயர்த்துதல் அடுத்தும் இடம்பெற்றிருக்கிறது.

ஆனால் நஜாத் ஆசிரியரோ முதலில் உயர்த்துதல் நிகழ்ந்துவிட்டது மரணம் பின்னால் நிகழும் என்கிறார். இந்த தலை கீழ் பாடத்தை அறிவுள்ள எவரும் ஏற்க்கமாட்டார். இப்படி திருமறை வசனத்தை புரட்டுவதோடு நின்றுவிடாது அதன் சொற்களுக்கு தவறான அர்த்தமும் நஜாத் ஆசிரியர் தருகிறார். மேற்கண்ட வசனத்திற்கு இவர் தரும் அர்த்தத்தை பாருங்கள். "ஈஸாவே நான் உம்மைக் கைப்பற்றுவேன் இன்னும் என்னளவில் உயர்த்திக் கொள்வேன்" என அவ் வசனத்தை இவர் மொழிபெயர்த்துள்ளார். இவர் மட்டுமல்ல இப்போதுள்ள திருக்குர் ஆன் மொழிபெயர்ப்பாளர்களும் இவ்வாறே மொழிபெயர்த்துள்ளனர். ஆனால் கடந்த காலத்தில் உள்ள இமாம்களும் இஸ்லாமிய நல்லறிஞ்சர்களும் நாம் மொழி பெயர்த்துள்ள வண்ணமே மொழி பெயர்த்துள்ளனர்.

இந்த திருவசனத்தில் இடம் பெற்றுள்ள 'முதவபீக' என்ற சொல்லுக்கு 'நான் உம்மை மரணிக்க செய்வேன்' என்பதே சரியான பொருளாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்தச் சொல்லுக்கு 'முமீதுக' அதாவது, நான் உம்மை மரணிக்க செய்வேன் என்ற பொருள் தந்துள்ளதாக ஸஹீஹுல் புகாரியில் காணப்படுகிறது. எல்லா அறபி மொழி வல்லுனர்களும் இந்தச் சொல் மேற்கண்ட வசனத்தில் கையாளப்பட்டிருப்பது போல் கையாளப்பட்டிருந்தால் அதன் பொருள் 'மரணிக்கச் செய்தல்' என்பதல்லாமல் அதற்க்கு வேறு எந்த அர்த்தமும்கொள்ளயியலாது என தெளிவு படுத்துயுள்ளனர். எடுத்துக்காட்டாக அல்லாமா அபுல் பகா அவர்கள் தமது 'குல்லிய்யாத்' எனும் அகராதியில் கீழ் வருமாறு குறிப்பிட்டுள்ளதை கூறலாம்.

"தவப்பீ' யின் பொருள் மரணிக்கச் செய்வதும் உயிரை வாங்குவதுமாகும். இவ்வினைப் பெயர் 'வபாத்' எனும் மூலச் சொல்லிலிருந்து உருவானதாகும்"

மேலும் 'தவப்பீ' என்ற சொல்லுக்கு மரணிக்கச் செய்தல் என்ற பொருளைத் தவிர வேறு பொருளில்லை என்பதை இமாம் மாலிக் (ரஹ்) , இமாம் புகாரி (ரஹ்) போன்றோர் உறுதி செய்துள்ளனர். (ஸஹீஹுல் புகாரி - அத்தியாயங்கள் 'தப்ஸீர்' மற்றும் 'பதல் கல்க்' )

திருக்குரானில் இந்த தவப்பா என்ற சொல் இருபத்தைந்து இடங்களில் காணப்படுகிறது. (3"194. 4:16, 7:127, 8:51, 10:47, ஆகியன காண்க) இதில் இருபத்து மூன்று இடங்களில் இச் சொல் மரணத்தைக் குறிப்பதற்காக பயன்படுத்தப் பட்டுள்ளது. எஞ்சிய இரண்டு இடங்களில் கூட "ரூஹை (உயிரைக்) கைப்பற்றுதல் " என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறிருக்க இந்தச் சொல்லுக்கு உடலோடு உயிரைக் கைப்பற்றுதல் என்றதொரு வினோதமான அர்த்தத்தை இவர்கள் எதன் அடிப்படையில் கூறுகின்றார்கள்?

பதஹுல் பயான் எனும் விரிவுரை நூலில் காணப்படுவது போன்று உண்மையில் இது, ஈஸா நபி வானத்தில் உயிருடன் இருக்கிறார் என்ற மூட நம்பிக்கையை தமது உள்ளத்தில் வளர்த்துக் கொண்ட கிறிஸ்தவ வழி வந்த முல்லாக்கள் உருவாக்கிய அனர்த்தமேயொழிய அந்தச் சொல்லுக்கு இவர்கள் தரும் அர்த்தம் இல்லவேயில்லை!

'ரஃப அ' என்ற சொல்லுக்கு உடலுடன் உயர்த்துதல் என்ற பொருள் உண்டு என்பதற்கோ 'தவஃப்பி' eன்ற சொல்லுக்கு 'உடலைக் கைப்பற்றுதல்' என்ற பொருள் உள்ளது என்பதற்கோ அரபி மொழி இலக்கியங்களிலிருந்து எடுத்துக்காட்டையோ அகராதியிலிருந்து ஆதாரத்தையோ தராது வெறும் குதர்க்க வாதங்களால் குட்டையை குழப்புகிறார் நஜாத் ஆசிரியர்.

'ரஃப அ' என்ற அரபிச் சொல் குரானிலும் ஹதீதிலும் வேறு பல இடங்களிலும் பதவி உயர்வு குறித்து பிரயோகப் படுத்தப்பட்டுள்ளது என்பதை நாம் மறுக்கவில்லை " என (பக்கம் 16 இல்) கூறும் அவர், ஈசா (அலை) வர்களைப் பொறுத்தவரை அச் சொல் "உடல் உயர்வு" என்று பொருள் படும் என்று கூறுகிறார். இதை யார்தான் ஏற்க்க முடியும்? ஏனையோரைப் பற்றி ஏன், எம்பெருமானார் (ஸல்) வர்களைப் பற்றி கூட குறிப்பிடப்படும் போது அந்தச் சொல்லுக்கு ஒரு அர்த்தமாம். ஈசா நபியைப் பற்றி வரும் போது மட்டும் அதற்க்கு தனி அர்த்தமாம். இது போன்ற வாதத்தை படிப்பற்றவன் கூட நம்பமாட்டானே !

ஈசா நபி உடலுடன் உயர்த்தப்பட்டார்கள் என்பதை நிரூபிக்க வழியில்லாத காரணத்தால் ஈசா நபி அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்பதற்கு நாம் காட்டிவரும் ஆதாரங்களை நஜாத் ஆசிரியர் மறுக்க முயல்கிறார். முதலில் இவர் தமது நம்பிக்கைக்கு தெளிவான ஆதாரங்களால் நிரூபிக்க வேண்டும். அதன் பிறகே நம்மால் காட்டப்படும் ஆதாரங்களை மறுக்க முயல வேண்டும். ஆனால் அவரோ ஆதாரம் 2,3 என தலைப்பிட்டு நம்முடைய ஆதாரங்களை தன் மனம் போல் மறுக்கின்றார். இது விவாத முறையன்று.

என்றாலும் இல்லாத சான்றை இவரிடம் கேட்பதில் என்ன பயன்? எனவே இவரின் மறுப்புகளை இனி பார்ப்போம்.

ஈசா நபி (அலை) அவர்களின் இயற்க்கை மரணம் குறித்து திருக்குரானில் காணப்படும் வசனங்களில் ஒன்று இவ்வாறு அமையப்பற்றுள்ளது :-

மர்யமின் மைந்தர் மஸீஹ் ஒரு தூதரே அன்றி வேறில்லை நிச்சயமாக (அவரைப் போன்ற) தூதர்கள் அவருக்கு முன்னால் காலஞ்சென்று போனார்கள். மேலும் அவருடைய தாயார் ஓர் உண்மைமிக்கப் பெண்ணாவார். அவர்கள் இருவரும் உணவருந்திக் கொண்டிருந்தார்கள். (இவற்றிலிருந்து) அவர்கள் (ஈசா நபியை இறைவனாகக் கருதுபவர்கள்) எவ்வளவு தூரம் விலகி இருக்கிறார்கள் என்பதை காண்பீராக. (5:76)

நஜாத் ஆசிரியர் மறுப்பதற்காக எடுத்துக் கொண்டுள்ள நூலான "ஈசா நபி (அலை) அவர்களின் மரணம்" என்ற நூலில் இத் திருக்குர்ஆன் வசனத்திற்கு இவ்வாறு விளக்கம் தரப்பட்டுள்ளது. :-

இந்த ஆயத்தில் ஈசா நபியின் இறப்பு பற்றி மிகத் தெளிவாக கூறப்பட்டிருப்பதை பாருங்கள். இங்கு முதலாவதாக ஈசா நபி ஓர் இறைத்தூதறேயன்றி வேறில்லை என்று கூறியதற்குப் பிறகு அவருக்கு முன் தோன்றிய எல்லா நபி மார்களும் காலஞ்ச சென்று போனார்கள் என்று கூறப்படுகிறது. இது ஈசா நபியின் மரணத்தை உறுதி செய்யும் மறுக்கயியலாத ஒரு சான்றாகும். திருக்குரானின் இந்த நடைக்கு ஓர் உதாரணம் கூறுகின்றேன். ஸைத் ஒரு மனிதனேயன்றி வேறில்லை. எல்லா மனிதர்களும் மண்ணினால் படைக்கப்பட்டவர்கள் என்று கூறினால் ஸைத்தும் மண்ணினால் படைக்கப்பட்டவர் என்பதே அதற்குப் பொருள். அது போன்று ஈசா நபியின் மரணம் மேற்கண்ட ஆயத்தில் விளக்கப்பட்டுள்ளது. அவ்வாறில்லை என்றால் ஈசா நபியை ஏனைய இறைத் தூதர்களிலிருந்து வேறுபட்டவராக இங்கு காட்ட வேண்டும்.

திருக்குர்ஆன் தொடர்ந்து, ஈசா நபியின் தாயார் புனிதவதியாக இருந்தார். எனவும் அவர்களிருவரும் உணவருந்தி கொண்டிருந்தார்கள் எனவும் விளக்குகின்றது.

இங்கு சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஈசா நபி மரணிக்காது உயிருடன் இருக்கிறார் என்பது உண்மையானால் அவரைப் பற்றி அவர் உணவருந்திக்கொண்டிருந்தார் என இறந்த காலத்தில் ஏன் கூறப்பட்டிருக்கிறது? அவ்வாறில்லாமல் அவரையும் அவரது தாயாரையும் இவ் விஷயத்தில் வேறு படுத்தியல்லவா கூற வேண்டும். அதாவது மர்யம் (அலை) அவர்கள் உணவருந்தியிருந்தார்கள் என்றும் ஈசா நபி உணவருந்திக் கொண்டிருக்கிறார் என்றுமல்லவா கூறப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு கூறப்படவில்லை. அவர்கள் இருவரும் உணவருந்தியதை கடந்த கால நிகழ்ச்சியாகவே இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த தெளிவான விளக்கத்திற்கு நஜாத் ஆசிரியரின் விமர்சனத்தைப் பாருங்கள்.

"காதியானிகளின் இந்த வினோதமான விளக்கத்திற்கு காரணம் ஒன்று அவகளின் விவேகமின்மையாக இருக்கவேண்டும்: அன்றி அறிந்தும் மக்களை மடையர்களாக்கி தங்களின் சுய நலத்தைப் பேணிக்கொள்ளும் வேடமாக இருக்க வேண்டும். ஈசா (அலை) இறந்தது விட்டார்கள் என்றால் அல்லாஹ் அதை தெளிவாக சந்தேகத்திற்கிடமின்றி அறிவித்திருக்கலாமே! இப்படி சுற்றி வளைத்துச் சொல்லி காதியானிகளை திண்டாட விட்டிருக்க்வேண்டியதில்லையே!"

நஜாத் ஆசிரியர் இறைவனுக்கே கட்டளையிடுவார் போலிருக்கிறது. யூத இனமான இஸ்ரவேலருக்குத் தூதராக வந்த ஒருவர் இறக்காமல் இருக்கிறார் என இவர் முட்டாள்தனமாக நம்புவாராம். அவ்வாறு இல்லையென்று தெளிவாக, சந்தேகத்திற்கு இடமின்றி சுற்றி வளைக்காமல் இறைவன் அறிவிக்க வேண்டுமாம். மனிதானாகப் பிறந்த எவனுக்கும் ஒரு குறுகிய வாழ்விற்குப் பிறகு இறப்பு ஏற்ப்படும் என்பது மடையனுக்கு கூட சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. ஈசா நபி ஓர் இறைத்தூதர் என்றாலும் அவரும் ஒரு மனிதரே எனவே அவர் இறந்துவிட்டார் எனக் கூறவேண்டிய அவசியமில்லை. நஜாத் ஆசிரியர் பேதமைத்தனமாக நம்புவது போன்று ஈசா நபி உயிருடன் இருந்தால்தான் 'அந்த அற்புதமான விஷயம் பற்றி அல்லாஹ் திருக்குரானிலே தெளிவாக அறிவித்திருக்க வேண்டும்.

நம்மிடம் வந்து ஈசா நபி அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதற்கு ஆதாரம் கேட்பவர்களிடம் நாம் இவ்வாறு கூறுவது வழக்கம். மனிதன் இறப்பதென்பது இயற்க்கை நியதி அதற்க்கு ஆதாரம் காட்டவேண்டியதில்லை. ஆனால் மனிதராகிய ஈசா நபி ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இறக்காது இருக்கிறார் என்று நீங்கள் கூறுவதென்றால் அதுவே வினோதம். அதற்க்கு நீங்கள்தான் ஆதாரம் காட்டவேண்டும்.

எனவே நஜாத் ஆசிரியரிடம் கேட்போம் ஈசா நபி உயிருடன் உள்ளார்கள் என்பதற்கு சந்தேகத்திற்கிடமில்லாத சுற்றிவளைக்காத தெளிவான ஆதாரத்தைத் தாருங்கள். இவ்வாறு அவரைக் கேட்க நஜாத் ஏட்டின் ஒவ்வொரு வாசகரும் கடமைப் பட்டவராவார்.

ஏனெனில், ஈசா நபி உயிருடன் உள்ளார்கள் என்ற கொள்கை தவ்ஹீதிற்கு எதிரானது. எவ்வாறெனில் மேற்கண்ட இறைவசனத்திலும் இன்னும் பல வசனங்களிலும் இறைவன் தனக்கு இணையாக வணங்கப்படுபவர்கள் எல்லாம் மரணித்துப் போனவர்கள் என்பதை விளக்கி தனது "தவ்ஹீத்" நிலையை எடுத்துக் காட்டுகின்றான். மேற்கண்ட வசனத்தில் இறைவன் ஈசா நபியை ஒரு தீர்க்கதரிசியாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்த ஒரு மனிதராக - உணவு உண்டு வாழ்ந்த ஒருவராக தெளிவாக எடுத்துக் காட்டுகின்றான். மேலும் அவர்ட் சாதாரண மனிதரைப் போன்று "உணவருந்திக் கொண்டிருந்தார்"என்று கூறி அவர் இறந்து போனார் என்பதை மீண்டும் உறுதி செய்து அவர் கடவுள் இல்லை என்பதை தெளிவு படுத்தியிருக்கின்றான்.

திருக்குரானில் இறைவன் இவ்வாறும் அறிவித்துள்ளான் :-

அல்லாஹ்வைத் தவிர்த்து யாரை அவர்கள் (இணைவைப்பவர்கள்) அழைக்கின்றார்களோ அவர்கள் எதையும் படைக்கவில்லை ஆனால் அவர்கள் தாம் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் மரணித்துப் போனவர்கள்: உயிருள்ளவர்கள் அல்ல மேலும் அவர்கள் எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதைக் கூட அவர்கள் அறிய மாட்டார்கள். (16:21,22)

இந்த வசனத்தில் இறைவன் தனது ஏகத்துவ நிலைக்குச் சான்றாக கடவுளாக அழைக்கப்படுகின்றவர்களின் மரணத்தையே கூறுகின்றான். இன்று பெரும் பான்மை மக்களால் கடவுளாக அழைக்கப்படுகின்றவர் ஈசா நபி ஆவார், அப்படி அழைக்கப்படுகின்றவர், மரணித்துப் போனவர் என்றும் மரமண்டைகளில் ஏறும் வண்ணம் உயிருள்ளவர்கள் அல்ல என்றும் இறைவன் கூறுகின்றான். ஆனால் நஜாத் ஆசிரியரைப் போன்றவர்கள், இல்லை இல்லை ஈசா நபி உயிருடன் இருக்கிறார்கள் என்று கூறி இறைவனின் இந்த வார்த்தைகளை மறுக்கின்றனர். இது தவ்ஹீதிற்கு இறைவன் தரும் சான்றை மறுப்பது மட்டுமல்ல தவ்ஹீதையே மறுப்பதாகும். எனவே ஈசா நபி உயிருடன் இருக்கிறான் என்று கூறுவது இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கின்ற ஒன்றாகும். ஈசா நபி பிரச்சனை அவசியமற்றது என்று கூறுபவர்கள் இதனை எண்ணிப்பார்க்கவேண்டும். நஜாத் ஆசிரியர்கள் இந்த விஷயத்தில் முடிவு காண நஜாத் ஆசிரியரை வற்புறுத்த வேண்டும். இல்லையெனில் அவர்கள் தம்மை தவ்ஹீது வாதிகள் என்று வாதிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லாமல் போய்விடும்.

அடுத்து நஜாத் ஆசிரியர் இவ்வாறு வரைகிறார்:- "இந்த இறை வசனம் மூலம் ஈசா (அலை) அவர்கள் மரணிக்காமல் தூய உடலுடன் அல்லாஹ்வின் அளவில் உயர்த்தப்பட்டுள்ளதால் அவர்கள் மரணமற்றவர்களா? மரணமற்றவர்களாயின் அல்லாஹ்விற்கு இணையாகுமே என காதியானிகள் கூறுவது போலவே அன்றும் சிலர் வினவி இருக்கலாம்." இவ்வினாவிற்கு விளக்கமாகவே, "ஈசா (அலை) அல்லாஹ்வின் அளவில் உயர்த்தப்பட்டுள்ளதால் அவருக்கு மரணமில்லை என்று எண்ணுகிறீர்களா? மற்ற நபிமார்கள் இறந்ததுபோல் ஈசா(அலை) அவர்களும் மரணிப்பவர்களே."

நாம் தந்துள்ள தெளிவான சான்றை இவர் எப்படியெல்லாம் குதர்க்கவாதம் செய்து மறுக்கிறார் பாருங்கள். ஈசா நபி உடலுடன் உயர்த்தப்பட்டார்கள் என ஆரம்பகால முஸ்லிம்கள் நம்பியிருந்தால்தானே அவர் மரணித்துப் போவாரா மாட்டாரா? என்ற சந்தேகம் அவர்களுக்கு இருக்க முடியும்? எனவே ஈசா நபி உடலுடன் உயர்த்தப்பட்டார்கள் என்ற நம்பிக்கை ஆரம்பகால முஸ்லிம்களிடம் இருந்தது என்பதற்கு முதலில் இவர் ஆதாரம் காட்ட வேண்டும் அதன் பிறகே இதுபோன்று வாதிக்கவேண்டும்.

மேற்கண்டவாறு கூறுவதன் மூலம் ஆம் திருவசனம் ஈசா நபியின் மரணம் பற்றியது என்பதை நஜாத் ஆசிரியர் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அந்த மரணம் நிகழ்ந்துவிட்டது என்று நாம் கூறுகின்றோம் அவரோ இன்மேல் தான் நிகழும் என்கிறார். இந்த கருத்து வேறுபாட்டிற்கு திருக்குர்ஆன் என்ன தீர்ப்பளிக்கிறது பார்ப்போம்.

முஹம்மது ஒரு தூதரேயன்றி வேறில்லை அவருக்கு முன்னுள்ள தூதர்கள் காலஞ்சென்று போனார்கள் (3:145)

ஈசா நபி நபி(ஸல்) அவர்களுக்கு முன் தோன்றிய ஒரு நபி, அத்தகு நபிமார்கலேல்லாம் காலஞ்சென்று போனார்கள் என தெளிவுபடுத்துகிறது இந்தத் திருவசனம். இந்த வசனத்தைப் படித்த, அறிவுள்ள எவரும் ஈசா நபி மரணித்துவிட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், நஜாத் ஆசிரியரைப் போன்ற குழப்பவாதிகளோ திருக்குர்ஆன் ஆயத்தை திரித்துக் கூறி மக்களை ஏமாற்றவே செய்வர். ....."தூதர்கள் காலஞ்சென்று போனார்கள்." என்று இருப்பதை "தூதர்கள் பலர் சென்று போனார்கள்" என்று இல்லாததை இட்டுக் கட்டி நஜாத் ஆசிரியர் (பக்கம் 24 இல்) கூறுகிறார். இந்த ஆயத்தில் 'பலர்' என்று பொருள்படும் பஃள என்ற சொல் இல்லவே இல்லை. இதிலிருந்து யார் மக்களை ஏமாற்ற நினைக்கிறார் என்பதை வாசகர்கள் தெளிவாகவே புரிந்துகொள்ளலாம்.

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்திலிருந்து ஈசா நபி அவர்கள் இறந்து போனது சந்தேகத்திற்க்கிடமின்றி தெளிவாகியிருக்கையில் அதனை ஏற்காது, இந்த 3:144 வசனம் இறங்கும் போது நபிபெருமானார் (ஸல்) அவர்கள் உயிர் வாழ்ந்திருந்தது போலவே 5:75 வசனம் இறங்கும் போது ஈசா நபி உயிரோடு இருந்தார் என்ற ஒரு அபத்தமான ஒரு வாதத்தை நஜாத் ஆசிரியர் எடுத்து வைக்கிறார். ஈசா நபிக்கு முன்னால் உள்ள தூதர்கள் காலஞ்சென்று போனார்கள் என்ற திருவசனத்தை படித்த பிறகும் ஈசா நபி இறந்தார்களா என்ற சந்தேகம் எழுமானால், முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னாலுள்ள தூதர்கள் காலஞ்சென்று போனார்கள் என்ற திருவசனம் அந்தச் சந்தேகத்தை அடியோடு போக்கிவிடுகிறது.

இது குறித்து அல்லாஹ் மீண்டும் தெளிவு படுத்தியிருப்பதை பாருங்கள்.

மனிதர்களேயன்றி வேறெவரையும் நாம் உமக்கு முன்னர் (தூதர்களாக) அனுப்ப வில்லை, அவர்களுக்கே வஹீ அனுப்பியிருந்தோம் .......... ......... மேலும் உணவருந்தாததும் நிலைத்து வாழக்கூடியதுமான உடலை நாம் அவர்களுக்கு தரவில்லை. (21:8,9)

இதிலிருந்து ஈசா நபி உணவருந்தாது ஒரு நீண்ட காலம் உயிர் வாழ்கிறார் என்ற நஜாத் ஆசிரியரின் வாதம் முழுக்க முழுக்க தவறானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்த வசனத்தையும் இதற்க்கு முன்னால் குறிப்பிட்டுள்ள இரண்டு வசனங்களையும் படித்தறிந்த பிறகும் ஒருவர் ஈசா நபி மரணிக்கவில்லைஎன வாதிப்பாரேயானால் அவர் ஈசா நபியை இறைதூதர் என்ற நிலைக்குமேல் உயர்த்துகிறார் என்பதே அதற்குப் பொருள். அவ்வாறு செய்கின்றவர் அல்லாஹ்வின் வார்த்தைகளை மறுப்பவரும் அண்ணல் மாநபி (ஸல்) அவர்களை அவமதிப்பவருமேயாவார். அத்தகைய ஒருவராகவே நஜாத் ஆசிரியர் காணப்படுகிறார்.

"உமக்கு முன்னர் நாம் எந்த மனிதருக்கும் நீண்ட கால வாழ்வு அளிக்கவில்லை. (முஹம்மது நபியே) நீர் மரணித்து இவர்கள் நெடுங்காலம் வாழ்வதா?" (21:25)

என இறைவன் கேட்கிறான். ஆனால் நஜாத் ஆசிரியரோ மானமும், வெட்கமும் இல்லாமல் நபி (ஸல்) அவர்கள் மரணித்திருக்க ஈசா நபி இன்னும் உயிரோடு இருப்பதாக வாதிடுகிறார். இப்படி வாதிடுபவர்கள் ஒரு வேளை கிறிஸ்தவத்திலிருந்து மதம் மாறி இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க வேண்டும் அல்லது கிறிஸ்தவர்களின் கைக்கூலியாக இருக்கவேண்டும்.

நாம் இதனை மிகைப்படுத்திக் கூறவில்லை. நமக்கு எழுந்துள்ள சந்தேகம் நியாயமானதுதான். நஜாத் ஆசிரியர் இது குறித்து எழுதியிருப்பதை நீங்கள் படித்தல் உங்களுக்கும் அந்த சந்தேகம் எழும். அவர் கூறியிருப்பதைப் பாருங்கள்:-

"தூதர்களில் சிலரைச் சிலரைவிட மேன்மையாக்கியிருக்கிறோம்." என்று தான் அல்லாஹ் நவின்றுள்ளானே அல்லாமல் நபி (ஸல்) அவர்களை மற்றெல்லா நபி மார்களையும் விட எல்லா விஷயங்களிலும் உயர்த்தியிருப்பதாகச் சொல்லவில்லை. "

இதிலிருந்து நஜாத் ஆசிரியரின் ஈமானில் கோளாறு உள்ளதை உணரலாம். அண்ணல் மாநபி (ஸல்) அவர்கள் எல்லா நபிமார்களையும் விட எல்லாவகையிலும் உயர்ந்தவர்கள் மட்டுமல்ல அந்த மானபியை முழுமையாகப் பின்பற்றிய மக்கள் எல்லா மக்களையும் விட உயர்ந்தவர்கள் என்பதையும் திருக்குர்ஆன் தெளிவு படுத்தியிருக்கிறது. கீழ்வருவன அதற்க்கு சான்றுகளாகும்.

காத்தமுன் முன்னபிய்யீன் - எல்லா நபிமார்களையும் விடச் சிறந்தவர்கள்- (சூரா அஹ்சாப்)

யாசீன் - தலைவரே -(சூரா யாசீன்)

புகழக்கூடிய இடத்துக்கு உரியவர் (மக்காமே மஹ்மூத்) - (சூரா பனி இஸ்ராயீல்)

உலக முழுவதிற்கும் ஒரு அருட்கொடை (சூரா அன்பியா)

உலக மக்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்ட ஒரே இறைத்தூதர். (சூரா அக்ராப்)

இவ்வாறெல்லாம் நபி(ஸல்) அவர்களை மேன்மைப் படுத்திக் கூறியுள்ளபோது இந்த மேதாவி அதிலும் சந்தேகத்தைக் கிளப்புகிறார். இவர்கள் தான் மக்களை ஆலிம்களாக்குகிறவர்களா?
Read more »

May 11, 2012

ஈசா (அலை) அவர்களின் மரணமும் அந்-நஜாத் ஏட்டின் மூடநம்பிக்கையும்-1


தமிழக முஸ்லிம்களிடையே சிலர், தம்மை தௌஹீது வாதிகள் என்றும், திருக்குர்ஆன், ஹதீஸ் இவற்றின் அடிப்படையில் மட்டுமே மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்களென்றும் பறை சாற்றி சிறிது மதிப்பு பெற்றிருந்தனர். இப்போது அவர்கள் தாமும் அதே குழப்பக்கார குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதைத் திட்டவட்டமாக தெளிவுபடுத்திவிட்டார்கள்.

அது மட்டுமன்று, இவர்களை, ஏனைய ஆலிம்சாக்களிலிருந்து மாறுபட்டவர்களாக, மார்க்க மேதைகளாக கருதிவந்த மார்க்கப்பற்றுள்ள இளைஞர்களுக்கும், படித்தவர்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் இவர்கள் தமது பத்தாம் பசலித்தனத்தைக் காட்டியுள்ளனர்.

அந்-நஜாத் நவம்பர் இதழில் வெளியான 'ஈசா (அலை) மரணிக்கவில்லை, ஆயினும் மரணிப்பவர்களே' என்ற கட்டுரை இதனை தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

ஈசா (அலை) அவர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் உயிருடன் உள்ளார்கள் என்ற மூடநம்பிக்கை மட்டுமல்லாது, கற்பாறைக்குள்லிருந்து நிறை சூல் ஒட்டகம் வெளிவந்து குட்டி ஈன்றது. மூசா நபி காலத்தில் இறந்தவன் உயிர்பெற்றான், அதுவும் மாட்டின் அங்கத்தினால் அடிபட்டதும் உயிர்பெற்றான். (மாட்டையே அக்கால மக்கள் வழிபட்டனர். அந்த மாடு ஒருவனை உயிர்பித்தது என்கிறார்களோ என்னவோ). குகைவாசிகளின் உயிர் கைப்பற்றப்பட்டு முன்னூறு ஆண்டுகள் தூங்கினர் என்பன போன்ற 'கஸ்ஷுல் அன்பியா' கட்டுக் கதைகளை ஏற்பதில் இவர்கள் ஏனைய முல்லாக்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் மேற்கண்ட கட்டுரையில் தெளிவுபடுத்திவிட்டார்கள்.

இவற்றிக்கெல்லாம் மேலாக, இவர்கள் இஸ்லாமிய வட்டத்திற்குள் தான் உள்ளனரா என்ற சந்தேகத்தை இவர்களின் வாசகர்களின் உள்ளத்தில் ஏற்படுத்தக்கூடிய வாசகங்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, "உலகத்தில் நபி(ஸல்) அவர்கள் முதல் வேறு எந்த நபிக்கும், வேறு எந்த மனிதருக்கும், கொடுக்கப்படாத சில தனிச் சிறப்புகளை ஈசா நபி (அலை) அவர்கள் பெற்றுள்ளார்கள். என்று திருக்குரானே சான்று பகர்கின்றது" என்று இவர்கள் வரைந்துள்ளதைக் கூறலாம். இன்னும் கொஞ்ச நாள் சென்றால், "திருக்குரானை விட ஏனைய நூற்களை விட பைபிள் தனிச் சிறப்புகளை உடையது" (நவூதுபில்லாஹ்) எனக்கூசாமல் இந்த "மாமேதைகள்" கூறினாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை.

இஸ்லாத்தின் அடிப்படைக்கே குழிப்பறிக்கும் இத்தகைய அக்கிரமக்காரர்களுக்கு ஒரு வாசகர்வட்டமும் ஒரு புரவலர் கூட்டமும் முஸ்லிம்களிடையே இருப்பது எத்துனை வேதனைக்குரியது!

இவற்றுக்கெல்லாம் அடிப்படைக்காரணம் திருக்குரானை ஓதி அதன் வசனங்களைச் சிந்தித்து உணராததேயாகும். அல்லாஹ்வின் அந்த அருள்மறை

அபலா தஹ்கிலூன்

அபலா ததபக்கரூன்

அபலா ததப்பரூன்

என்றெல்லாம் கூறி அதன் வசனங்களை சிந்தித்து அது கூறும் உண்மைகளை உணரவேண்டுமென எடுத்துரைக்கிறது.

ஆனால், 'சுன்னத்வல் ஜமாஅத்' எனத் தங்களைக் கூறிக் கொள்ளுபவர்களைச் சார்ந்த ஆலிம்சாக்களாகட்டும், நஜாத், ஜன்னத் இவற்றின் மெத்த படித்த ஆலிம்சாக்களாகட்டும் இதனை உணர்ந்தவர்களாகத் தெரியவில்லை! இத்தகையவர்களை குறித்தே திருக்குர்ஆன்,

'அவர்களின் பெரும்பாலானவர்கள் ஊகங்களையே பின்பற்றுகின்றனர். நிச்சயமாக ஊகங்கள் உண்மைகெதிராக எந்தப் பயனும் அளிப்பதில்லை . நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கின்றான். (10:37)

அதுமட்டுமன்று, திருக்குரானை புரிந்து கொள்வதற்கு அரபி மொழியறிவு மட்டும் இருந்தால் போதாது. 'தக்வா' என்னும் இறையச்சம் இன்றியமையாதது. இதனையும் திருக்குரானே எடுத்துரைக்கிறது. (2:3)

நஜாத் ஆசிரியரோ படு சுத்தம்! இவரிடம் 'தக்குவாவும்' இல்லை அரபி மொழியறிவும் இல்லை. இவருக்கு இறையச்சமிருந்தால் மேற்கண்ட கட்டுரையில் நம்மை ஏளனம் செய்து எள்ளி நகையாடி இருக்கமாட்டார். நயவஞ்சகர்கள் என்றும் வழிகேடர் என்றும் நம்மீது வசைபாடி இருக்கமாட்டார்.

இவருடைய ஏளனத்திற்கும், ஏச்சுகளுக்கும், அவதூறுகளுக்கும் நீண்ட மறுப்புகள் எழுதப்போவதில்லை. மாறாக இவருடைய ஏளனத்திற்கு,

"அவர்களுடைய ஏளனம் அவர்களையே சூழ்ந்துகொள்ளும்" (6:11)

என்ற திருக்குர்ஆன் வசனத்தையே பதிலாகாக் கூறுகின்றோம். இவருடைய வசைமொழிகளை,

"எனது துக்கத்தையும், வேதனையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன்". (12:87)

என்ற திருமறை வசனத்திற்கேற்ப இறைவனிடமே விட்டுவிடுகிறோம். அவதூறுகளுக்கு,

"லஹ்னத்துல்லாஹி அலல் காதிபீன்"

"பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!

என்ற ஒரே பதிலை கூறுகின்றோம்.

நஜாத் ஆசிரியருக்கு அரபி மொழியறிவு இருந்தால் மேற்கண்ட கட்டுரையில், அர்த்த மற்ற உளறல்களை நிச்சயமாக தவிர்த்திருப்பார். அவருக்கு அரபி மொழியறிவு இல்லை என்பது ஊரறிந்த விஷயம், ஏன் அதனை அவரே ஒப்புக்கொள்ளவும் செய்திருக்கிறார் நஜாத் அக்டோபர் இதழில்! ஆனால் அவருக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்கும் அந்த ஆலிம்சா பெருந்தகையினருக்கும் அறபி மொழியறிவு இல்லை போலிருக்கிறது. அந்த மண்குதிரையை நம்பி இவர் ஆற்றில் இறங்கியிருக்க வேண்டாம், ஆழம் தெரியாது காலை விட்டு அவதிப்பட்டிருக்கவும் வேண்டாம்.

இவர்களின் அறபி மொழியறிவு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். "சதிகாரர்களுகெல்லாம் சதிகாரன் என்று அல்லாஹ் தன்னையே குறிப்பிடுகின்றான். (பக்கம் 20) திருக்குரானில் அல்லாஹ் தன்னைக்குறித்து பெரிய சதிகாரன் என்று கூறுகின்றானாம். ஆலு இம்ரான் அதிகாரத்தின் 55 ஆம் வசனத்திற்கு இவர் கொடுத்துள்ள பொருள் இது. இந்த ஆயத்தின் அர்த்தத்தையே அனர்த்தமாக்கியிருக்கிறார்.

'வ மகரு வமகரல்லாஹு வல்லாஹு ஹைருல் மாஹிரீன்'

என்பதன் பொருள், " அவர்கள் (சதித்) திட்டம் போடுகிறார்கள். அல்லாஹ்வும் (அதனை முறியடிக்க) திட்டம் போடுகிறான். ஆனால் திட்டமிடுபவர்களில் மிகச் சிறந்தவன் அல்லாஹ்வே ஆகும் "என்பதே!

இது போன்ற ஆயத்துகளுக்கு பொருள் தருவதில் பல திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்கள் கூட தவறே செய்திருக்கின்றனர். அல்-பக்கரா அதிகாரத்தின் 15,16 திருவசனங்களில் காணப்படும் "இன்னமா நஹ்னு முஸ்தஹ்சிவூன், அல்லாஹு யஸ்தஹ்சிவூபிஹீம்" என்றிருப்பதற்கு, 'நாங்கள் பரிகாசம் பண்ணுகிறோம் அல்லாஹ்வும் அவர்களை பரிகாசம் பண்ணுகிறான் என்று மொழி பெயர்த்துள்ளனர். அதாவது நயவஞ்சகர்கள், நம்பிக்கையாளர்களை பரிகாசம் பண்ணுகிறார்களாம் அதற்காக அல்லாஹ் அந்த நயவஞ்சகர்களை பரிகாசம் செய்கிறானாம். எப்படி இருக்கிறது கதை! யாரேனும் பரிகாசம் செய்தால் அவர்களைத் திருப்பி பரிகாசம் செய்வதற்கு அல்லாஹ் என்ன சிறுபிள்ளையா? (நவூதுபில்லாஹ்) ஒரு செயலுக்குரிய தண்டனையாக அந்த செயலையே குறிப்பிடுவது அரபி மொழி வழக்காகும். 2:195, 42:41 ஆகிய ஆயத்துகளில் இவ்வாறே வந்துள்ளது. அதனால் மேற்கண்ட திருவசனத்திலுள்ள, "அல்லாஹு யஸ்தஹ்சிவூ பிஹிம்" என்பதற்கு அல்லாஹ் அவர்களின் பரிகாசத்திற்கு தண்டனை வழங்குவான் என்றே பொருள் தரவேண்டும்.

இப்படி அறபி மொழியின் மொழி வழக்குகளை அறியாத இந்த ஆலிம்சாக்கள் சில ஆயத்துகளுக்குத் தவறான அர்த்தம் செய்துவிடுவதுண்டு. அதன் காரணமாக விபரீதமான கருத்துக்கள் உருவானால் அதை சமாளிக்க தங்களின் கற்பனை வளத்தைப் பயன் படுத்தி கதைகளைப் புனைந்து விடுவர்.

இப்படி புனையப்பட்ட கதையே "ஈசா நபியின் வானுலகப் பயணம்." நஜாத் ஆசிரியர் அதே கதைக்கு "ஈசா நபி அல்லாஹ் அளவில் உயர்த்தப்பட்டார்கள்" என்று வேறு தலைப்பு தருகிறார். மிகக் கெட்டிக்காரத்தனமாக எழுதிவிட்டதாக எண்ணம் அவருக்கு

ஈசா நபியைப் பற்றி அவர்கள் அல்லாஹ்வால் கைப்பற்றப்பட்டார்கள் (ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்வார்கள்) மீண்டும் இவ்வுலகிற்கு வருவார்கள் (மீண்டும் பூமியில்) வாழ்வார்கள் என்றெல்லாம் நஜாத் ஆசிரியர் வரைந்துள்ளார். (பக்கம் 8)

ஆனால் இவையெல்லாம் அவருடைய ஊகங்களே. அவருடைய கட்டுரை நெடுகிலும் அப்படி இருக்கலாம், இப்படி இருக்கலாம் என்று அவருடைய ஊஹங்களை எடுத்துவிடுகிறார். இந்த லட்சணத்தில் இவர், "காதியானிகள் நம்மவர்களின் ஊகங்களையும் சுய கருத்துக்களையும் எளிதாக முறியடித்து வெற்றிவாகை சூடிக்கொள்கின்றனர்." (பக்கம் 5) என ஏனைய ஆலிம்சாக்களை சாடுகின்றார்.

திருக்குர்ஆன் நபி மொழி இவற்றை அறிந்து திட்டவட்டமாகக் கூறுவதை விட்டு வெறும் ஊகங்களையும் கற்பனைகளையும் அவிழ்த்து விடுபவர்களைப்பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

"வெறும் ஊகங்களையே அன்றி உண்மையை அவர்கள் பின்பற்றுவதில்லை. கற்பனையிலேயே அவர்கள் மூழ்கி இருக்கின்றனர்." (6:117)

"வீண் சந்தேகத்தையன்றி அவர்கள் பின் பற்றுவதில்லை. அவர்கள் வெறும் கற்பனை செய்பவர்களே." (10:67)

"அவர்களுக்கு இதைப்பற்றிய எவ்வித அறிவுமில்லை. அவர்கள் வீண் கற்பனை செய்பவர்களேயன்றி வேறில்லை.(43:21)

"ஈசா நபி உயிருடன் வானத்தில் உள்ளார்" என்பதற்கு ஒரே ஒரு ஆதாரம் திருக்குரானில் இருந்து காட்டுங்கள் என்று சமாதான வழி இதழ் மூலமாக கேட்கப்பட்டது. பல ஆதாரங்கள் தந்துள்ளதாக நஜாத் ஆசிரியர் பீற்றிக் கொண்டுள்ளாரே தவிர ஈசா நபி உயிருடன் இருப்பதைத் தெரிவிக்கும் ஒரு ஆதாரத்தையும் அவர் தரவில்லை.

இந்த விஷயம் பற்றி இதுவரை அஹ்மதியா ஜமாத்துடன் வாதம் செய்த ஆலிம்சாக்கள் பாடிய அதே பல்லவியைத் தான் நஜாத் ஆசிரியரும் பாடி இருக்கிறார். ராகம் தான் சற்று வித்தியாசப்படுகிறது. இப்பிரச்சனை தோன்றிய நாள் முதல் இந்த ஆலிம்சாக்கள் எந்த ஆயத்தை தமது கட்டுக்கதைக்கு ஆதாரமாகக் கூறி இருந்தார்களோ அந்த ஆயத்தையே நஜாத் ஆசிரியரும் தமது ஆதாரமாக் முதலில் எடுத்து வைக்கிறார். (பக்கம் 8) இந்த ஆயத்தில் அவர் கூறும் அர்த்தப்படிப் பார்த்தால் கூட ஈசா நபி இயற்கையாக மரணித்துப் போகவில்லை என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. ஈசாவைக் கொன்றுவிட்டோம் என்ற யூதர்களின் வாதத்தை மறுத்து இறைவன் அவர்கள் அவரை கொல்லவில்லை என்று கூறியுள்ளானே தவிர அவர் இயற்கையாக இறந்தே போக வில்லை என்று கூறவில்லையே! அவரை தன்னளவில் உயர்த்திக்கொண்டதாக இறைவன் கூறியிருப்பது எந்த வகையில் அவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கு ஆதாரம் ஆகும்? இறைவனளவில் போகின்றவர்களெல்லாம் உயிருடனா போகிறார்கள்?

நஜாத் ஆசிரியர் எடுத்துக்காட்டியுள்ள திருக்குர்ஆன் வசனத்தின் சரியான பொருளை கீழே தருகின்றோம்.

"அல்லாஹ்வின் தூதர், மர்யமின் மகனான ஈசா மஸீஹை கொன்று விட்டோம் என்று அவர்கள்(யூதர்கள்) கூறுகின்றனர். அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, சிலுவையில் அறைந்து கொல்லவில்லை. ஆயினும் அவர் அவ்வாறு (சிலுவையிலிடப்பட்டவர் போன்று) தோற்றமளிக்குமாறு செய்யப்பட்டது. இதில் கருத்து வேடுபாடு உள்ளவர்கள் சந்தேகத்தில் உள்ளனர். அவர்கள் ஒரு ஊகத்தைக் கைக்கொண்டிருக்கிறார்களேயொழிய அது பற்றிய திட்டவட்டமான அறிவு அவர்களுக்கில்லை. அவர்கள் அவரை உறுதியாக கொலை செய்யவேயில்லை.

இதற்க்கு மாற்றமாக அல்லாஹ் அவரை தன்னளவில் உயர்த்திக்கொண்டான். மேலும் அல்லாஹ் வல்லமையுள்ளவனும், அறிவுள்ளவனுமாவான். (4:158,159)

ஈசா நபி மரணிக்காது உயிருடன் உள்ளார்கள் என்பதற்கு இந்தத் திருவசனத்தில் என்ன சான்று உள்ளது என்பதை நஜாத் ஆசிரியர் கூறவேயில்லை. அதைவிடுத்து ஈசா நபி சிலுவையில் அறையப்பட்டார்களா இல்லையா, அடிக்கப்பட்டது ஈசா நபியா வேறொரு நபரா? என்பன போன்ற வாதத்திற்கு வாசகர்களைத் திசைத் திருப்புகிறார்.

இதற்காக ஆறு பக்கங்களை (பக்கம் 9 முதல் 14 வரை) செலவிட்டுள்ள இவர், இவருடைய கூற்றுக்கு உருப்படியான எந்த ஆதாரத்தையும் தராது சிலுவை சம்பவம் பற்றிய நமது கருத்துக்களை மறுக்கவும் நையாண்டி செய்யவும் முற்படுகிறார்.

முதலில் ஈசா நபி (அலை) அவர்கள் ஏனைய மக்களைப் போன்று மரணிக்கவில்லை என்பதற்கு இவர் ஆதாரம் தரவேண்டும்! அப்படி ஆதாரம் காட்டாத நிலையிலேயே இவர். ஈசா நபியை இறைவன் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். என்ற வசனத்தை எடுத்துக்காட்டி அதற்க்கு ஈசா நபி உடலுடனும், உயிருடனும் உயர்த்திக்கொள்ளப்பட்டார் என்று பொருள் தருகிறார்.

ஆனால், 'பல் ரபவுல்லாஹு இலைஹி' என்ற சொற்றொடருக்கு உயிருடனும், உடலுடனும் உயர்த்திக்கொள்ளப்பட்டார்கள் என்று பொருள் கொள்வதைவிட அபத்தம் வேறில்லை! ஈசா (அலை) எங்கிருந்து எங்கு உயர்த்தப்பட்டார்? அல்லாஹ் அளவிலென்றால் அல்லாஹ் உயரத்தில் உள்ளானா? 'சுவிசேஷகர் மாற்கு' (பைபிள் புதிய ஏற்பாட்டை எழுதியவர்களில் ஒருவர்) கூறி இருப்பது போன்று ஈசா நபி "பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்" என நஜாத் ஆசிரியரும் கூற விழைகிறாரோ என்னவோ ! இப்படியே போனால் பாதிரி அப்துல்லா ஆத்தமைப் போன்று பாதிரி அப்துல் ஹக் போன்று இவரும் பாதிரி அபூ அப்துல்லா, ஆகிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை! ஆனாலும் நம்முடைய இந்தக் கட்டுரையைப் படித்த பின்னர் அவ்வாறு ஆக மாட்டார் என நம்புவோம்.

"பல் ரப அவுல்லாஹு இலைஹி "அன்ற சொற்றோடரிலுள்ள 'ரபா ஆ' என்ற வினைச்சொல் அல்லாஹ்வை எழுவாயாகக் கொண்டு வரும்போது அதற்க்கு, ஆன்மீகமான உயர்த்துதல் என்று மட்டுமே பொருள் தரயியலும். மாறாக உடலுடன் உயர்த்துதல் என்ற பொருளும் தரலாம் என்பதற்கு எந்த எடுத்துக்காட்டையும் யாராலும் தர இயலாது. அத்தகையதொரு அர்த்தம் அந்தச் சொல்லுக்கு உள்ளது எனக்கூறும் நஜாத் ஆசிரியர், அதற்க்கான எடுத்துக்காட்டை திருக்குரானின் ஏனைய ஆயத்துக்கள், ஹதீஸ்கள், இப்பிரச்சனை எழுவதற்கு முன்னால் எழுதப்பட்ட தப்சீர்கள், அகராதிகள் இவற்றிலிருந்து காட்டவேண்டும்.

மனிதன் செயப்படு பொருளாகவும் அல்லாஹ் எழுவாயாகவும் கொண்ட ஒரு வசனத்திற்கு 'ரபா ஆ' என்ற பயனிலை வருமேயானால் அதற்க்கு ஆன்மீக உயர்த்துதல் என்ற ஒரே அர்த்தமே திருக்குரானிலும், ஹதீஸ்களிலும், இலக்கண நூல்களிலும், தப்சீர்களிலும் தரப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக:-

திருக்குர்ஆன் வசனங்கள்:

"நாம் விரும்பியிருந்தால் அவரை (பல் அம்பாவூர் என்பவரை) உயர்த்தியிருப்போம். !" (7:176)

"அல்லாஹ் உங்களிடையேயுள்ள நம்பிக்கையாளர்களை உயர்த்துவான்." (58:11)

"நாம் அவரை (இத்ரீஸ் நபியை) மேலான, உயர்ந்த ஓர் இடத்திற்கு உயர்த்தினோம்." (9:58)

இந்தத் திருமறை வசனங்களில் எல்லாம் உள்ள 'ரபா ஆ' என்ற சொல்லுக்கு ஆன்மீகமான உயர்த்துதல் என்பதே பொருளாக தப்சீர்களில் தரப்பட்டுள்ளது.

நபிமொழிகள்

"ஓர் இறையடியார் பணிவை மேற்கொண்டால் இறைவன் அவரை ஏழாவது வானத்திற்கு உயர்த்திவிடுவான் ! (கன்சுல் உம்மால் பாகம் 7 பக்கம் 68)

"அல்லாஹ் சில சமுதாயங்களை இந்தத் திருக்குர்ஆன் வாயிலாக உயர்த்துகிறான். சிலரை தரம் தாழ்த்தவும் செய்கின்றான். (கன்சுல் உம்மால் பாகம் 1 பக்கம் 29)

இந்த நபிமொழிகளிலும் 'உயர்த்துதல் என்ற சொல் ஆன்மீக உயர்த்துதல் என்ற' பொருளிலேயே கூறப்பட்டுள்ளது.

தப்சீர் நூல்கள்

"அல்லாஹ் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களை தன்னிடத்திற்கு அழைத்து தன்னளவில் உயர்த்தினான்." (தப்சீர் ஸாபி பக்கம் 113)

'ராபியுக்க இலய' என்ற வாக்கிற்கு உமது நற்செயல்களை என்னளவில் உயர்த்துவேன் என்பதே பொருளாகும். மேலும் நான் உமக்கு உயர்ந்த பதவியைத் தந்தருளுவேன் என்பதுமாகும். (தப்சீர் கபீர் அல்லாமா ராஸி பாகம் 2 பக்கம்691)

அகராதிகள்

எதனையாவது அணுகச் செய்வதற்கு 'ரபா ஆ' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. - ஸிஹாஹ் ஜவ்ஹரி

அரசரிடத்து உயர்த்தப்படுதல் என்பது அரசருக்கு நெருக்கமானவன் என்பதே- அக்ரபுல் மவாரித்

ரபாஆ என்பது இழிவுபடுத்துதல் என்பதன் எதிர்ச்சொல் ஆகும். - தாஜுல் உரூஸ்

அர்ராபி- உயர்த்துகின்றவன் என்ற இறைவனின் குணப்பெயருக்கு நம்பிக்கையாளர்களுக்கு மீட்பளிப்பவன். இறைநேசர்களுக்கு தன்னை அடையும் வாய்ப்பினை வழங்குபவன் என்றெல்லாம் பொருள் படும். - லிஸானுள் அரப்

இவற்றிலிருந்தெல்லாம் ரபா ஆ என்பதற்கு ஆன்மீகமாக உயர்த்துதல் என்ற பொருளைத் தவிர வேறு எந்த பொருளும் தரயியலாது என திட்டவட்டமாக புலனாகிறது. இனி "இலைஹி" என்ற சொல்லை கவனிப்போம்.

இறைவனளவில் உயத்துதல் என்பது சடப் பொருளான உடல் இறைவனிடம் செல்வது எனப் பொருள்படாது. ஏனெனில் இறைவன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இல்லை. இது குறித்து திருக்குர்ஆன்.

அல்லாஹ் வானங்களிலும் பூமியிலும் இருக்கின்றான். (6:4)

நீங்கள் எங்கெல்லாம் இருக்கின்றீர்களோ அங்கெல்லாம் அல்லாஹ் இருக்கின்றான். (2:115)

நாம் மனிதனுடன் அவனது உயிர்நாடிக்கருகே இருக்கின்றோம். (50:16)

என்றெல்லாம் கூறுகின்றது. இவற்றிலிருந்து இறைவனளவில் உயர்த்தப்படுதல் என்பதற்கு இறைவனிடத்திற்கு உடல் உயர்த்தப்பட்டது என்று எவ்வாகையிலும் பொருள்கொள்ள இயலாது என்பதயும், அப்படி பொருள் கொண்டால் அதைவிட முட்டாள்தனம் வேறில்லை என்பதையும் உணரலாம்.

ஈசா நபி (அலை) அவர்களை இறைவன் தன்னளவில் உயர்த்திக் கொண்டதாக கூறி இருப்பது அவர்கள் மரணிக்கவில்லை என்பதற்கு எவ்வகையிலும் சான்றாக அமையாததைப் போலவே அவர்கள் கொல்லப்படவோ சிலுவையில் அறைந்து கொல்லப்படவோ இல்லை என்பதும் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக அமையாது. ஒருவர் சிலுவையில் அறையுண்டோ அல்லது வேறுவிதமாகவோ கொல்லப்படவில்லை. என்று கூறப்பட்டால். அவர் பின்னர் இயற்கையாகக் கூட இறக்கவே இல்லை என்பது அதன் பொருளன்று. மாறாக, அகால மரணம் அல்லது ஆபத்தான மரணம் அவருக்கு நேரவில்லை என்பது மட்டுமே அதற்குப் பொருள்.

மேற்கண்ட திருமறை வசனத்திலுள்ள 'வமகத்தலூஹு வமா சலபூஹூ' என்று இருப்பதை வெட்டிக் கொல்லவுமில்லை, சிலுவையில் அறைந்து கொல்லவுமில்லை என்று திரித்துக் கூறுவதாக நஜாத் ஆசிரியர் குற்றம் சாட்டுகிறார். அதன் பின்னர் அவரே கத்தல் என்பதற்கு வெட்டப்படுவது என்று பொருள் கூறிவிடுகிறார். இதிலிருந்து இவருடைய அரைவேக்காட்டுத் தனத்தை புரிந்துகொள்ளலாம்.

'சலபு' என்பதற்கு சிலுவையில் அறையப்படவில்லை என இவர் கூறும் பொருளே தவறானது. அஸ்ஸல்ப என்பதற்கு 'அல் கித்லத்துள் மக்ருபத்து' அதாவது சிலுவையில் அறைந்து கொல்லுதல் என்ற பொருளே லிஸானுல் அரப், தாஜுல் உரூஸ் ஆகிய அரபி மொழி அகராதிகளில் தரப்பட்டுள்ளது.

திருக்குரானின் பிற இடங்களில் காணப்படும் இச்சொல் நாம் சொல்லும் அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக,

அல்லாஹ்வுடனும், அவனுடைய தூதர்களுடனும் போர் செய்தும் பூமியில் குழப்பம் செய்தும் கொண்டும் இருப்பவர்களுக்குரிய தண்டனை 'அன்யுகத்தலு'- அவர்கள் வெட்டப் படவேண்டும் அல்லது யுஸல்லபு - அவர்கள் சிலுவையில் அறைந்து கொல்லப்படவேண்டும். (5:34)

இந்த ஆயத்திலுள்ள 'யுஸல்லபூ' என்பதற்கு சிலுவையில் வெறுமே ஏற்றி வைப்பது என்று பொருள்கொள்ளயியலாது. மூஸா நபியின் மீது நம்பிக்கைக் கொண்ட ஜால வித்தைக்காரர்களை நோக்கி, 'லா உஸல்லி பன்னகும்' 'நான் உங்களை சிலுவையில் அறைந்து கொல்லுவேன்' என்று பிர்அவ்ன் கூறியதாக வருகிறது 20:72. இங்கும் சிலுவையில் அறைந்து கொல்லுதல் என்று பொருள்படும் வண்ணமே இவ்வசனம் அமையப் பெற்றுள்ளது.

சுருக்கமாக 'சலபூ' என்ற சொல் ஆங்கிலத்தில் Hanged என்ற சொல்லைப் போன்றது. Hanged என்றால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்படுதல் என்று பொருள்படும். அதுபோன்று சலபூ என்பதற்கு சிலுவையிலிடுதல் சிலுவையிலறைந்து கொல்லுதல் என்பதே பொருளாகும். எனவே வமா சலபூஹூ என்பதற்கு சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை என்று பொருள் கொள்வதே மிகச் சரியானது.

'இறைவனளவில் உயர்த்தப்படுதல்' என்பது உடலுடன் உயர்த்தப்படுவது அன்று என்பது உறுதியாகிவிட்ட நிலையில், 'வமா சலபூ' என்பதற்கு நஜாத் ஆசிரியர் கூறுவது போன்று சிலுவையில் அறையப்படவேயில்லை என்று வாதத்திற்கு ஒப்புக்கொண்டாலும் அது கூட ஈசா நபி மரணிக்கவில்லை என்பதற்க்குச் சான்றாகாது. சிலுவையிலிருந்து தப்புகின்ற ஒருவருக்கு மரணமே இல்லையா என்ன?

வெறும் குதர்க்கவாதம் செய்தும், நம்முடைய சான்றுகளை ஊகங்களால் மறுத்தும், தமது மூடநம்பிக்கையை நிலை நிறுத்தி விடலாம் என நஜாத் ஆசிரியர் கனவு காண்கிறார்.

'சாகடிப்பதற்காக சிலுவையில் அறையப்பட்டவனை மூன்று மணி நேரத்தில் இறந்து விட்டதாக எண்ணி எந்தப் புத்திசாலியும் அவனை சிலுவையிலிருந்து இறக்கிவிடமாட்டான்' என ஓரிடத்தில் குறிப்பிடும் இவர், ஈசா நபிக்கு பகரமாக வேறொருவனை அதிகாரிகள் சிலுவையில் அறைந்தனர் என இன்னொரு இடத்தில் கூறுகிறார். இவர் குறிப்பிடும் செயல் மட்டும் புத்திசாலித்தனம் ஆகிவிடுமா?

சிலுவையில் அறையப்பட்ட ஈசா நபி அதில் இறந்து விட்டதாகக் கருதி அதிலிருந்து இறக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் ஈசா நபிக்கு பகரமாக வேறொருவர் சிலுவையில் அறையப்படுவதற்கு வாய்ப்பே இல்லை. காலமெல்லாம் தம்மோடு வாழ்ந்திருந்த ஈசா நபியை யூதர்களுக்குத் தெரியாதா என்ன? ஈசா நபியை சிலுவையில் அறைந்த கொல்ல வேண்டும் என்று வெறியோடு அலைந்த யூதர்கள் அவருக்கு பகரமாக வேறொருவன் அறையப்படுவதைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்று கூறுவதை விட அபத்தம் வேறில்லை.

இப்படியெல்லாம் சிலுவை சம்பவத்தை போஸ்ட்மார்டம் செய்யும் நஜாத ஆசிரியர் ஒரு விஷயத்தை சிந்திக்க தவறிவிட்டார். நபிமார்களில் பலரை அவர்களின் எதிரிகள் கொன்றுவிட முயன்றிருக்கின்றனர். ஆனால் அவர்களில் யாரையுமே இறைவன் தன்னளவில் உயர்த்திக் காப்பாற்றவில்லை. அதுதான் போகட்டும் அவனுடைய நபிமார்களில் ஏன் மக்களில் தலை சிறந்தவர்களும் அவனுடைய அன்பிற்கும், நேசத்திற்கும் ஏனைய எல்லோரையும் விட மிக உயர்ந்தவர்களான அண்ணல் மாநபி (ஸல்) அவர்களின் உயிருக்கு பல முறை அபாயம் நேரிட்டிருக்கிறது.

அத்தகு தருணங்களில் கூட இறைவன் அவர்களைத் தன்னளவில் உயர்த்திக் காப்பாற்றவில்லையே! இவ்வாறிருக்க ஈசா நபியை மட்டும் அவன் எவ்வாறு உயர்த்திக் காப்பாற்றி இருப்பான்? இஸ்ரவேல் மக்களுக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்ட ஈசா நபியை தன்னளவில் உயர்த்த வேண்டிய அவசியமென்ன? அவர்களுக்கு அளித்த பணியை அவர்கள் நிறைவேற்ற அவர்களுக்கு உதவிபுரிவதல்லவா அவனுடைய கடமை!

ஈசா நபி வானத்திற்கு உயர்த்தப்பட்டார்கள் என்பதும் இறைவனளவில் உயர்த்தப்பட்டார்கள் என்பதும் உண்மையில் பரமேறுதல் என்ற கிருஸ்தவ நம்பிக்கையின் மறுபதிப்பேயாகும். இதனை நாம் மட்டும் கூறவில்லை. இஸ்லாமிய நல்லறிஞ்சர்கள் பலரும் இவ்வாறே கூறியிருக்கிறார்கள். "பத்தஹுல் பயான் என்னும் நூலில் இரண்டாம் பாகத்தில் நாற்பத்தி ஒன்பதாம் பக்கத்தில் இவ்வாறு காணப்படுகிறது.

"ஈசா நபி முப்பத்து மூன்றாவது வயதில் உயர்த்தப்பட்டார்கள் என்று கூறப்படுவதில் நம்பக்கூடிய சான்று எதுவுமில்லையென்று ஹாபிலிப்னு கைய்யிம் (ரஹ்) அவர்கள் தமது 'ஸாதுல் மா ஆத்' எனும் நூலில் வரைந்துள்ளார்கள். இது கிறிஸ்தவர்களிடமிருந்து வந்த ஒரு கொள்கை என ஷாமி என்பவர் கூறுவது உண்மையே."

ஈசா நபிக்கு இறைவன், நபி (ஸல்) அவர்கள் உட்பட எல்லோரையும் விட சிறப்பளித்தான் (நவூதுபில்லாஹ்) அவர்களைத் தன்னளவில் உயர்த்திக்கொண்டான் (நவூதுபில்லாஹ்) என்றெல்லாம் கூறி கிறிஸ்தவக் கொள்கைக்கு ஊட்டம் தருகிறார் 'நஜாத்' ஆசிரியர். இதற்குத்தான் இவர் தமது பத்திரிகைக்கு 'நஜாத்' - இரட்சிப்பு எனப்பெயர் வைத்தார் போலும்! இவர், இவர் பின்னால் போகின்றவர்களை 'ஆலிம்களாக்குகிறேன்' என்று சொல்லி கிறிஸ்தவர்களாக்கிவிடுவார் போலிருக்கிறது. இறைவன் காப்பாற்றுவானாக!
Read more »

May 8, 2012

பாகிஸ்தான் தபால் தலையில் அஹ்மதியின் உருவம்

நோபல் பரிசு பெற்ற முதல் அஹ்மதி விஞ்சானி டாக்டர் அப்துஸ் ஸலாம அவர்களைக் கௌரவிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு அவரின் உருவம் பொறித்த தபால் தலையொன்றை அண்மையில் வெளியிட்டுள்ளது. நம்ப இயலாத இந்தச் செய்தியை பாகிஸ்தான் நாளேடு 'டான்' வெளியிட்டுள்ளது.

அணுசக்தி துறையில் பாக். அரசின் உயர்மட்ட ஆலோசகராகப் பணியாற்றிய டாக்டர் அப்துஸ் ஸலாம அவர்கள் அஹ்மதிகளை முஸ்லிமல்லாதவர்கள் என அந்நாடு சட்டமியற்றியதைத் தொடர்ந்து அப்பதவியை துறந்தார்கள். பின்னர் பாகிஸ்தானை விட்டு வெளியேறினார்கள்.
எனினும் உலகின் பல்வேறு உயர்ந்த நாடுகள் அவர்களுக்குக் குடியுரிமை வழங்க முன்வந்தன. ஆனால் அவர்கள் அதனை ஏற்காது தாம் பாகிஸ்தானின் ஒரு பற்றுதல் மிக்க குடிம
கனாக இருக்க விரும்பினார்கள். இன்னும் சில நாடுகள் சிறப்பு விருதுகளை அவர்களுக்கு அளித்து கௌரவித்தன. டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்களோ பின்தங்கிய நாடுகளின் அறிவியல் வளர்ச்சிக்காக அரும்பணி ஆற்றி வந்தார்.
பாகிஸ்தானில் டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் மிக உயர்ந்த பதவியில் இருந்த பொது அவர்களைக் 'காதியானி' எனக் காரணம் காட்டி அவர்களைப் பதவியிலிருந்து இறக்க அந்நாட்டின் முல்லாக் கூட்டம் கூக்குரலிட்டது.
ஆனால் அவர்கள் உலகின் மிக உன்னத விருதான நோபல் பரிசினைப் பெற்றபோது அவர்களை நோபல் பரிசு பெற்ற முதல் முஸ்லிம் என உரிமை பாராட்ட வேண்டிய நிர்பந்தம் பாகிஸ்தான் அரசிற்கு ஏற்பட்டது. இப்போது அது டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்களின் உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட்டு கௌரவித்துள்ளது. பாக். அரசு தனது கடந்த கால பாவத்திற்காக பரிகாரம் செய்கிறதா?
அஹ்மதிகள் உயர்வடைவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க இயலாது என்பதையும் அவர்களை தாழ்த்த எண்ணுகின்றவர்கள் தளர்வடைந்து போவார்கள் என்பதையுமே இது போன்ற நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. எல்லாப் புகழும் இறைவனுக்கே!
Read more »

May 5, 2012

ஆன்லைன் பொய்யனின் அட்டகாசம் - கமர் என்ற சொல்லை அல்லாஹ் முதல் பிறைக்கு பயன்படுத்தியுள்ளானா?

பொய்யன் பி.ஜே யின் கேள்வி:-

கமர் என்ற சொல் மூன்று நாட்களுக்கு பிறகு உள்ள
பிறைக்குத்தான் சொல்லப்படும். இது அன்று முதல் இன்று வரை அனைத்து அரபுகளும் ஒன்று பட்டுக் கூறும் கருத்தாகும். இதற்க்கு மாற்றமாக அரபு மொழி அறிஞ்சர் யாரும் சொன்னதில்லை. மொழி அறியாத மடையன் தான் இதற்க்கு மாற்றமாக சொல்வான் என்று மிர்ஸா குலாம் நூருல் ஹக் இல் எழுதியுள்ளான். ஆனால் கமர் என்ற வார்த்தையை அல்லாஹ் முதல் பிறைக்கும் பயன்படுத்தியுள்ளானே என்று ஏராளமான சான்றுகளுடன் கேள்வி கேட்டோம். அல்லாஹ்வையே விமர்சனம் செய்பவனும் இல்லாததை இட்டுக் கட்டும் மடையனும் எப்படி நபியாக இருக்க முடியும் என்று கேட்ட போதும் அவர்களிடம் பதில் இல்லை.

கோவை விவாதத்தில் இந்தப் பொய்யன் எழுப்பிய எல்லாக் கேள்விகளுக்கும் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் பதில் கூறியது. இமாம் மஹ்தி(அலை) அவர்களின் உண்மை தன்மைக்கு இறைவன் காட்டிய அற்புத அடையாளத்தை (சூரிய சந்திர கிரகணம்) மறுத்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்து விட்ட காரணத்தால்தான் இந்த ஆட்சேபனையை கிளப்பி இருக்கிறான்.

மூன்று இரவுகளுக்கு மேற்பட்ட இரவில் தோன்றும் சந்திரனுக்குத்தான் 'கமர்' என்று அரபியில் கூறப்படும். மூன்று நாள் வரை அதனை 'ஹிலால்' என்பார்களே தவிர 'கமர்' என்று கூறமாட்டார்கள். சிலருடைய கருத்தின்படி ஏழு நாள் வரை 'ஹிலால்' என்றே அழைக்கப்படும். 'லிசானுல் அரப்' எனும் பிரசித்திப் பெற்ற அரபிமொழி அகராதியில் 'கமர்' என்ற சொல்லின், சொல் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 'ஹுவ பஹத ஸலாசி லயாவின் இலா ஆகிரிஷ் ஷஹ்ர்" அதாவது மூன்றாவது இரவுக்கு பின்னுள்ள இரவிலிருந்து மாதத்தின் கடைசியில் தோன்றும் சந்திரனுக்கு கமர் என்று கூறப்படும். (நான்காவது இரவிலிருந்து கடைசி வரையுள்ள சந்திரனே கமர் என்றழைக்கப்படும். முதல் மூன்று இரவில் தோன்றும் சந்திரனை கமர் என அழைக்கமுடியாது).

முதலிரவில் தோன்றும் சந்திரன் 'கமர்' ஆக இல்லாதிருக்கும்போது 'கமர்' என்ற சொல்லின் பெயருக்கான காரணம் அதில் இல்லாதிருக்கும் போது (கமர் என்ற சொல்லின் பொருள் மிகுந்த ஒளிமிக்கது என்பதாகும்.) கமருக்கு முதலிரவில் கிரகணம் ஏற்படும் என்று கூறுவது எங்கனம் சரியாகும்)
அவ்வாறு கூறுவது எப்படிப்பட்டதென்றால், ஒரு இளம் பெண் முதலிரவிலேயே கற்பமாகிவிட்டால் என்று ஒருவர் கூறியதை செவியுற்ற ஒரு மௌலவி, முதலிரவில் கர்ப்பமானால் என்பதன் பொருள் அப்பெண் பிறந்த அதே இரவில் கர்ப்பமானால் என்பதுதான் என்று பிடிவாதமாகக் கூறினால் அது சரியான பொருளாகுமா? எவராவது அந்த மௌலவியிடம், பிறந்த முதலிரவில் அவள் பெண் என்றே அழைக்கப்படமாட்டாளே, மாறாக அவளை 'சபிய்யா' அல்லாது குழந்தை என்றே குறிப்பிடுவார்கள். அவ்வாறிருக்க அவள் கருவுற்றதாகக் கூறுவது எவ்வளவு பேதைமை?" என்று கூறமாட்டாரா என்ன? மேலும் இங்கு முதல் இரவு என்பதன் பொருள் திருமணம் முடிந்தபின் முதன்முறையாக ஒரு பெண் தன் கணவனிடத்தில் செல்லக்கூடிய இரவுதான் என்பதை அறிவுடையோர் நன்கறிவார்கள்.

ரமளானில் முதல் பிறை பார்பதற்காக ஏற்படுத்தப்பட்ட கமிட்டியை 'ஹிலால் கமிட்டி' என்றே பெயர் வைத்திருப்பதை நாம் கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் 'கமர் கமிட்டி' என்று பெயர் வைத்ததாக நாம் எங்கும் பார்க்க முடியாது.

பொய்யன் திருக்குர்ஆன் வசனங்களை எடுத்துக் காட்டினால் அதற்கான விளக்கத்தை நாம் கொடுப்போம்
Read more »

May 3, 2012

உண்மையான நஜாத் எது?


நஜாத் ஆசிரியர் தாமும் குழம்பி பிறரையும் குழப்புகிறார் 73 பிரிவு பற்றிய நபி மொழியில் "மன்ஹும்" என்றிருப்பதாக அவர் கூறியிருந்ததை தவறென சுட்டிக் காட்டி "மன்ஹிய" என்றே காணப்படுவதை எடுத்துக் காட்டியிருந்தோம். அதற்கு அவர் தமது இதழில் நாம் நமது இலக்கண அறிவைப் பயன்படுத்தி மக்களை வழிகெடுப்பதாக கூறி நம்மை சாடியிருக்கிறார்.

உள்ளதை, உள்ளபடி கூறுவது வழி கெடுப்பதா? அல்லது இல்லாததை இட்டுக் கட்டிக் கூறுவது வழி கெடுப்பதா? ஒன்றுக்கு பொருள் கூறுவதில் தவறு நேரலாம், கருத்து வேறுபாடு வரலாம். ஆனால் மூலச் சொல்லையே மாற்றி எழுதுவது அக்கிரமச் செய்யலல்லவா? இது மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களை வழிகெடுபபதாகாதா?

73 பிரிவுகளில் ஒரு பிரிவு மட்டுமே இரட்சிப்புப் பெரும் என்று குறிப்பிட்ட நபி பெருமானார்(ஸல்) அவர்களிடம் "மன்ஹிய" அது எது ? என்றே கேட்கப்பட்டது. இதனை நஜாத் ஆசிரியர் கூறுவது போன்று, 'அறிவுடைமையாக' அந்தக் கூட்டத்தார் யார்? என்று எடுத்துக் கொண்டாலும் அது ஒரு தனிப்பட்ட கூட்டத்தாரை - ஜமாத்தைக் குறிப்பிடுமேயொழிய முழு முஸ்லிம் சமுதாயத்திலுள்ள தனி நபர்களை ஒரு போதும் குறிக்காது. ஏனெனில் இங்கு எடுத்துக் கொல்லப்பட்ட விஷயம் 73 பிரிவுகளைப் பற்றியது, தனி நபர்களைப் பற்றியதன்று. இந்த சாதாரண விஷயத்தைக் கூட நஜாத் ஆசிரியரால் புரிந்து கொள்ளயியலவில்லை என்றால் அவர் பெரிதும் குழம்பிப் போயிருக்கிறார் என்பதே அதற்குப் பொருள்.

73 பிரிவுகளில் ஒரு பிரிவு நேர்வழி பெரும் என்று கூறப்பட்டிருப்பதால் அந்தப் பிரிவு ஒரு தனி ஜமாஅத் தனி அமைப்பு எனக் கூறுவதே அறிவுடமையாகும். 73 பிரிவுகள் என்று ஆகிவிட்டதற்க்குப் பிறகு அவை யாவற்றிக்கும் தனித்தனிப் பெயர்கள் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாததாகும்.

முஸ்லிம்கள் 72 கூட்டமாகப் பிரிந்துவிட்ட நிலையில் அவர்களுக்கிடையில் பல்வேறு வேறுபாடுகள் பிறந்துவிட்ட நிலையில் அவர்களை நேர்வழியில் அழைக்க அவர்களை ஒன்றுபடுத்த ஓர் அமைப்பு உருவாகின்றது. அத்தகைய அமைப்பு ஏனைய 72 பிரிவுகளிலிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்ட தனக்கென ஒரு பெயரை வைத்துக் கொள்வது அதற்கு முற்றிலும் அவசியமாகிவிடுகிறது. அவ்வாறில்லாமல் அவர்கள் ஒரு தனிப்பிரிவாக, "ஜமாஅத்" தாக எவ்வாறு இயங்க முடியும்? இதனைச் சிந்திக்கின்ற எவராலும் புரிந்து கொள்ள முடியும்!

அத்தகைய அமைப்பு, 'முஸ்லிம்' என்ற பெயரைக் கைவிட்டு வேறொரு பெயரை தங்களுக்கென வைத்துக் கொண்டால்தான் அது தவறாகும். அவ்வாறில்லாமல் தங்களை முஸ்லிம்களென்று கூறிக் கொண்டு தாம் சார்ந்திருக்கும் அமைப்புக்கு ஒரு பெயரினை வைத்துக் கொண்டால் அது தவறாகாது. இது இவர்களுக்குப் புரியும்! ஆனால் பாமர மக்களை ஏமாற்ற இதை விட்டால் இவர்களுக்கு வழியில்லை இதுதான் முஸ்லிம்களை ஆலிம்களாக்குகின்ற வழியா?

இப்படி பெயர் வைக்க அனுமதியிருந்தால் நபி பெருமானார் (ஸல்) அவர்கள் அப்பிரிவின் பெயரையும் செயல்களையும் சுட்டிக்காட்டியிருப்பார்களே என இவர்கள் வாதிக்கின்றார்கள். அப்படி நபிபெருமானார் (ஸல்) அவர்கள் அந்தப் பிரிவின் பெயரைச் சொல்லியிருப்பார்களேயானால் இன்று முஸ்லிம்களிடையே உள்ள அனைத்துப் பிரிவினரும் அந்தப் பெயரை வைத்துக் கொண்டு தாமே ஈடேற்றம்பெரும் பிரிவு என்பதற்கு அதையே ஆதாரமாக் காட்டுவார்கள் அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் ஈடேற்றம் பெரும் பிரிவைப் பற்றிக் கேட்கப்பட்டபோது 'ம அன அலைஹி வ அஸ்ஹாபி' - 'நானும் எனது சஹாபாக்களும் போன்று இருப்பவர்கள்' என்று கோடிட்டுக் காட்டினார்கள்.

நபி (ஸல்) அவர்களும் அவர்களின் சஹாபாக்களும் இருப்பது போன்று இன்றிருக்கும் 'ஜமாஅத்' எது? நபி பெருமானார் (ஸல்) அவர்கள் ஆணையிட்டார்கள் சஹாபாக்கள் அதனை சிரமேற்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் முடிவு செய்தார்கள். சஹாபாக்கள் அதனை எவ்வித மறுப்பும் கூறாது அப்படியே ஏற்றார்கள். இப்படிப்பட்ட தன்மை, ஒரு இமாம் - ஓர் ஆன்மீகத்தளைமையின் கீழ் ஒன்று பட்டு செயல்படுகின்ற தன்மை இன்றைய முஸ்லிம் பிரிவுகளில் எதற்காவது உண்டா? "அஹ்லே சுன்னத்வல் ஜமாஅத்' என்று நீட்டி முழக்கி பெயர்வைத்துக் கொள்வதில் குறைவில்லை ஜமாஅத் என்றால் அதற்கு இமாம் இருக்க வேண்டும் என்பது நபி (ஸல்) அவர்கள் வகுத்த நியதி. இவர்களின் இமாம் யார்? பள்ளிவாசலின் இமாமைக் கூறுவார்கள். அங்கு கூட ஷாபிக்கு வேறு இமாம் ஹனபிக்கு வேறு இமாம்! இவற்றிலிருந்து வேறுபட்ட வஹ்ஹாபிகளுக்கு வேறு இமாம்!! இறைவனின் சந்நிதியில் கூட ஒன்றுபட்டு நிற்க இயலாத இவர்களா நபி(ஸல்) அவர்களைப் போன்று சஹாபாக்கள் போன்றும் இருப்பவர்கள்?

அல்லாஹ்வின் அருளினால் இந்த உயரிய தன்மை அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்திற்கு மட்டுமே இருக்கிறது. உலகெங்குமுள்ள அந்த ஜமாஅத் மட்டுமே ஒரே தலைமையின் - இமாமின் - கலீபாவின் ஆளுகைக்கு உட்பட்டு செயல்படுகிறது.

முஸ்லிம்கள் 73 பிரிவாக பிளவுபடுகின்றபோது ஏற்படுகின்ற நிலைபற்றியதே இந்த சர்ச்சை, அதற்கு முன்னாலுள்ள முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றியதன்று! பிற்கால முஸ்லிம்களைப் பற்றியதே இந்த முன்னறிவிப்பு, ஆரம்பகால முஸ்லிம்களைப் பற்றியதன்று! இதனைப் புரிந்தும் புரியாததுபோல், "எல்லாக் காலங்களிலும் வெற்றிப் பெரும் கூட்டத்தாரும் இருப்பார்கள் வழிகேடர்களும் இருக்கத்தான் செய்வார்கள்" என்று மேம்போக்காகக் குறிப்பிடுகிறார் நஜாத் ஆசிரியர். அவ்வாறானால் நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸை கூறியிருக்கவேண்டிய அவசியமேயிருக்காதே.

ஆரம்ப காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தில் பிளவுகள் இருக்கவில்லை. பின்னர் பிரிவுகள் ஏற்பட்டிருந்தாலும் அவை அதிகமாக இல்லை. அதிகமான பிரிவுகள் முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்பட்டுவிட்ட இக்காலத்தைப் பற்றியே நபி (ஸல்) அவர்கள் முன்னறிவித்தார்கள். எனவே முற்கால முஸ்லிம்களைப் பற்றிய சர்ச்சைக்கே இங்கு இடமில்லை.

இன்னுமொன்றை இங்கு குறிப்பிடவேண்டும். அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தமது சமுதாயத்தின் எதிர் காலத்தைப் பற்றி மிக விளக்கமாக எடுத்தியம்பியுள்ளார்கள், அதாவது தமது காலத்திற்கு பிறகுள்ள மூன்று நூற்றாண்டுகள் நல்ல கால கட்டங்கள் எனவும் அதன் பிறகு அக்கிரமமும் பலாத்காரமும் பெருகிவிடும் எனவும் பின்னர் "நபித்துவத்" தின் வழியில் "கிலாபத்" ஏற்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளார்கள். (ஆதாரம்: மிஷ்காத்)
அஹ்மதிய்யா ஜமாஅத் வெறுமே 72 பிரிவுகளுக்குப் பிறகு 73 ஆவது பிரிவாக மட்டும் எருபடுத்தப்பட்டதன்று. மாறாக இறைவனின் திட்டத்தின்படி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பல்வேறு முன்னறிவிப்புகளின் படி தோன்றிய இறையியக்கமாகும்.

அஹ்மத் என்பது நபி(ஸல்) அவர்களையும் அஹ்மதியா தரீக்க என்பது நபி (ஸல்) அவர்களின் தரீக்காவையுமே குறிக்க முடியுமென அந்-நஜாத் வாதிடுகிறது. இது போன்ற வாதங்கள் பாமரர்களின் வாதங்களாக இருக்க முடியுமே தவிர படித்தவர்களின் வாதமாக இருக்கயியலாது. விஷயமறிந்தவர்கள் இதுபோன்று வாதித்தால் அவர்கள் விஷயமரியாதவர்களை ஏமாற்ற நினைக்கிறார்கள் என்பதே அதற்குப்பொருள் 'அஹ்மத்' என்பது அண்ணலாரின் குணப்பெயரே தவிர பெற்றோர் இட்டப் பெயரன்று. திருக்குரானில் அவர்களின் பெயர் வரும் கீழ்காணும் இடங்களிலெல்லாம் 'முஹம்மத்' என்றே காணப்படுகிறது.
  1. 'முஹம்மதுர் ரெசூலுல்லாஹ்' (சூரா பாத்திஹா)
  2. 'நுஸ்ஸில அலா முஹம்மத்' (சூரா முஹம்மத்)
  3. மாகான முஹம்மதுன் அபா அஹதின் (சூரா அஹ்ஸாப்)
  4. வமா முஹம்மதுன் இல்லா ரெசூலுன் (சூரா ஆலு இம்ரான்)
அதுவுமில்லாமல், கலிமா, பாங்கு, சலவாத், இன்னும் தொழுகையில் செய்யப்படும் ஓதல்கள் யாவற்றிலும் முஹம்மத் என்ற அவர்களின் இயற்பெயரே இடம்பெற்றுள்ளது. அரசர்களுக்கு அவர்கள் அனுப்பிய கடிதங்களிலும் உடன்படிக்கையிலும் 'முஹம்மத்' என்றே அவர்களின் இயற்பெயர் காணப்பட்டது. இவ்வாறிருக்க அண்ணல் நபி (ஸல்) அவரளின் பெயர் 'அஹ்மத்' என்றும் திருக்குரானிலே 'இஸ்முஹு அஹ்மத்' - 'அவர் பெயர் அஹ்மத்' என்று காணப்படுவது நபி பெருமானாரையே குறிக்கும் என்று இவர்கள் கூறுவது உண்மையிலிருந்து மக்களை திசை திருப்புவதற்கேயாகும்.
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) போன்றவர்களோ அஹ்மது என்று பெயரிட்ட வேறு யாருமோ குர்ஆனில் அஹ்மத் என்று குறிப்பிடுவது என்னையே யாகும் என்று வாதிட்டதில்லை என்கிறது நஜாத்! நஜாத் ஆசிரியரின் பாஷையில் இதனைக் குறிப்பிடுவதென்றால் 'பே தனமான' வாதம் என்றே இதனைக் கூறவேண்டும். திருக்குரானில் காணப்படும், 'இஷ்முஹு அஹ்மத்' என்பது இவர்களை குறிக்காது இருக்கும்போது இவர்கள் ஏன் அவ்வாறு வாதிக்கப்போகிரார்கள்? இவர்கள் அவ்வாறு வாதிக்காததால் 'அஹ்மத்' என்பது நபி (ஸல்) அவர்களை குறிக்கும் என்று கூறுவதென்றால் அதைவிட சிறுபிள்ளைதனமான வாதம் எதுவுமிருக்க இயலாது.

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் அவர்களின் பெயர் குலாம் அஹ்மத். அஹ்மத் அல்ல என்கிறது நஜாத். ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் தகப்பனார் பெயர் மிர்ஸா குலாம் முர்தஸா என்றும் சகோதரரின் பெயர் மிர்ஸா குலாம் காதிர் என்றும் படிக்கின்ற எவருக்கும் மிர்ஸா குலாம் என்பது குடும்ப வழக்கிலுள்ள பெயர் என்பதும் அஹ்மத் என்பதே அவர்களின் பெற்றோர் இட்ட பெயர் என்பதும் புலனாகும்.

73 பிரிவு பற்றிய ஹதீஸிற்கு விளக்கமாக 'மிர்காத் ஷரஹ் மிஷ்காத்தில்' வந்துள்ள 'அஹ்மதியா தரீக்கத்' என்ற சொற்றொடரும் பொதுவாக முஸ்லிம்களையே குறிக்கும் என நஜாத் வாதிடுகிறது. அப்படியானால், இந்த விளக்கவுரையில் குறிப்பிடும் வண்ணம் நாங்களும் அஹ்மதிய்யா தரீக்கவைச் சார்ந்தவர்களே என இவர்கள் தம்மைக் கூறுவார்களா? இந்த விளக்கவுரையில் "வல் பிர்கதுன்னாஜி பதுஹும் அஹ்லு சுன்னத்தில் பைலாயில் முஹம்மதிய்யதி வ தரீகது நகிய்யதுல் அஹ்மதிய்யத்" என வந்துள்ளது இது 73 பிரிவுகளில் இரட்சிப்புப் பெற்ற பிரிவைப் பற்றிக் கூறப்பட்டதாகும். "முகம்மதியா நடைமுறைகளை ஏற்று நடக்கும் 'அஹ்மதிய்யா தரீக்கத்' என்று இங்கு கூறப்பட்டதிலிருந்து இது பொதுப்படையாகக் கூறப்பட்டதன்று, குறிப்பாகக் கூறப்பட்ட ஒன்று, என்பது சிந்திக்கின்ற எவருக்கும் எளிதில் புலனாகும். ஆனால் 'நஜாத்' வேண்டுமென்றே குட்டையை குழப்புகிறது. எடுத்துக் கொண்ட விஷயம் 73 பிரிவு பற்றியதாக இருக்கும்போது 'அஹ்மத்' பற்றியும் 'இப்னுமர்யம்' பற்றியும் கூறி வாசகர்களை திசை திருப்புகிறது. இது உண்மையான நஜாத்தின் - இரட்சிப்பின் வழியாகாது.
Read more »

May 2, 2012

'கப்ல மௌதிஹீ' - ஒரு விளக்கம்

(வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அதற்க்கு அவர்கள் அளித்த பதிலும்)

கேள்வி : கீழ்க்காணும் திருக்குர்ஆன் வசனம் மஸீஹ் (அலை) அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பதற்கு சான்று பகர்கிறது. அதாவது "வ இன் மின் அஹ்லில் கித்தாபி இல்லா ல யுமினன்னா பிஹீ கப்ல மௌதிஹீ (4:160) 'மஸீஹின் மரணத்திற்கு முன் எல்லாரும் அவரிடத்து நம்பிக்கை கொள்வார்கள்'.

எனவே இந்த வசனத்தில் பொருளிலிருந்து வேதத்தையுடையவர்கள் எல்லோரும் நம்பிக்கை கொள்ளும் வரையில் மஸீஹ் உயிரோடு இருக்க வேண்டியது அவசியம் எனத் தெரிகிறது.

பதில் : கேள்வி கேட்டவர் தவறான கருத்துக் கொண்டுள்ளார். அதாவது வேதத்தையுடையவர்களில் எல்லாப் பிரிவினர்களும் மஸீஹின் மரணத்திற்கு முன் அவரிடம் கட்டாயம் நம்பிக்கை கொண்டாக வேண்டும் என்பதுதான் இந்த வசனத்தின் பொருள் என்று அவர் எண்ணிக்கொண்டார்.

ஏனெனில் அந்த வசனத்தின் பொருள் கேள்வி கேட்டவர் புரிந்து கொண்டதுதான் என்று நாம் கற்பனையாக ஏற்றுக் கொண்டாலும் அவர் உயர்த்தப்பட்ட காலத்திலிருந்து இறங்கும் காலம் வரையில், உலகில் இறந்து விட்ட வேததையுடையவர்களும், தற்போது இருப்பவர்களும்,இனிமேல் வருபவர்களும் எல்லோரும் அவர் மீது நம்பிக்கை கொள்பவர்களாக கட்டாயம் இருப்பார்கள் என்றாகிவிடும்.

ஆனால் இவ்வாறு எண்ணுவது பொருத்தமற்றது. வேதத்தையுடைய எண்ணற்ற மக்கள் மஸீஹின் நுபுவத்தை மறுத்த நிலையில் இது நாள் வரை நரகத்தை அடைந்துள்ளார்கள் என்பதை எல்லோரும் நன்கறிவர். இனிமேலும் அவர்களில் எத்தனை பேர் அவரை மறுப்பதன் காரணமாக அந்த நெருப்பில் நுழைவார்கள் என்பதை அல்லாஹ்வே அறிவான்.

இறந்துபோன வேதத்தையுடையவர்கள் எல்லோரும் அவர் இறங்கும் காலத்தில் அவரிடம் நம்பிக்கை கொள்வார்கள் என்பதுதான் அல்லாஹ்வின் நாட்டமாக இருந்திருப்பின், அவன் அவர்கள் எல்லோரையும் அவர் இறங்கும் காலம் வரையிலும் உயிரோடு வைத்திருப்பான். அனால் வர்கள் இறந்து போனபின் அவர்கள் இனி எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும்?

சிலர் மிகவும் செயற்கையான முறையில் ஒரு பதில் கூறுவார்கள். அதாவது மஸீஹ் உயர்த்தப்பட்ட காலத்திலிருந்து அவர் மீண்டும் இறங்கும் காலம் வரை மறுக்கும் நிலையில் இறந்து போன வேதத்தையுடைய மக்களை அவர் இறங்கும் பொது ஒரு வேளை இறைவன் மீண்டும் உயிர்பெறச் செய்யலாமே என்பார்கள்.

இதற்க்கு பதில் என்னவென்றால் இறைவனால் இயலாதது எதுவும் இல்லைதான்! ஆனால் இங்கே பிரச்சனை என்னவென்றால் இந்த எண்ணங்களுக்கான எந்த அறிகுறியாவது திருக்குரானிலோ ஸஹீஹான ஹதீஸ்களிலோ உள்ளதா? உண்டு என்றால் அவற்றை ஏன் இவர்கள் எடுத்து வைப்பதில்லை?

சிலர் சிறிது வெட்கத்துடன் தாழ்ந்த குரலில் இதற்க்கு ஒரு விளக்கமளிப்பார். அதாவது வேதக்காரர்கள் என்றால் மஸீஹின் இரண்டாவது வருகையின் போது உலகில் வாழக்கூடிய மக்களாவார்கள். அவர்களெல்லாரும் அவரைக் கண்டதும் நம்பிக்கை கொள்வார்கள். மேலும் அவர் இறப்பதற்கு முன் அவர்கள் எல்லாரும் அவர் மீது நம்பிக்கை கொண்டவர்களின் அணியில் இணைந்து கொள்வார்கள் என்பர்.

ஆனால் இந்த எண்ணமும் எந்த அளவு தவறு என்றால், முதலாவதாக் மேலே குறிப்பிட்ட அந்த வசனம் மிகத் தெளிவாக பொதுவான மக்களைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதிலிருந்து வேதக்காரர்கள் என்ற சொல் ஈஸா நபியின் காலத்திலோ அவருக்குப் பின்னரோ உள்ள வேதக்காரர்களையும் குறிக்கும் எனத் தெரிகிறது. அந்த வசனத்தைக் ஒரு குறிப்பிட்ட ஒரு காலவறையோடு தொடர்புபடுத்தக் கூடிய எந்த ஒரு சொல்லும் அந்த வசனத்தில் இல்லை. தவிர எடுத்து வைக்கப்பட்ட அந்தப் பொருளும் தவறாகும்.

ஏனெனில் மஸீஹை மறுப்போர் வேதக்காரராயினும் வேதக்காரர்களல்லாதவராயினும் அவரின் மூச்சினால், குப்ரின் நிலையிலேயே இறந்துபோவார்கள் என ஆதாரப்பூர்வமான ஹதீஸுகள் உரத்த குரலில் கூறுகின்றன, (மஸீஹின் மூச்சால் இறப்பது என்பதன் உண்மையான பொருளை நாம் விளக்கி வந்துள்ளோம். இதன் பொருள்,சான்றுகளின் அடிப்படையில் இறப்பதாகும். ஏதேனும் நஞ்சு நிறைந்த நச்சுப் பொருள் அவரது வாயிலிருந்து வெளிவந்து காற்றில் கலந்து பலவீனமான காபிர்களைக் கொல்லும் என்றோ ஆயினும் அதனால் தஜ்ஜாலைக் கொல்ல முடியாது என்றோ எண்ணுவது தவறாகும்).

திரும்ப திரும்ப அந்த ஹதீஸுகளை நாம் எடுத்து எழுதத் தேவையில்லை. இந்த நூலிலோ அதற்குரிய இடத்தில் காணலாம். இது தவிர தாஜ்ஜாலும் வேதக்காரர்களைச சேர்ந்தவனாவான் என்பது முஸ்லிம்களின் ஒருமித்தக் கருத்தாகும். அவன் அவர் மீது நம்பிக்கைக்கொள்ளமாட்டான் என்றும் அவர்கள் நம்புகின்றனர். இந்த எண்ணத்தைப் பின்பற்றுவோர் இந்த ஹதீசுகளைப் படித்து எந்த அளவு வெட்கப்படுவார்கள் என்று என்னால் இப்போது யூகிக்கவே முடியவில்லை.

இன்னொன்றும் நம்பப்படுகிறது. முஸ்லிம் ஹதீஸில் உள்ளது. அதாவது மஸீ ஹிற்குப் பின் தீயவர்கள் எஞ்சியிருப்பர். அவர் மேல் கியாமத் (பேரழிவு) நிகழும் என்பதே அது. எந்தக் காபிரும் எஞ்சியிருக்கமாட்டான் என்றால் அது (கியாமத்) எங்கிருந்து வரப்போகிறது?

இப்போது இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது. மேற்குறிப்பிட்ட வசனத்தில் அந்தப் பொருள் சரியில்லை என்றால் எந்தப் பொருள்தான் சரியானது? அந்த இடத்திலேயே அதனுடன் தொடர்புடைய எல்லா வசனங்களையும் கவனித்தால் அந்த வசனத்தின் சரியான பொருள் தெரியவரும். அந்தப் பொருள்தான் சரியானது என ஒப்புக் கொள்வதில் தயக்கம் ஏற்படாது.

எனவே முதலில் அந்த வசனங்கள் எல்லாவற்றையும் கீழே குறிப்பிடுகிறேன். அதன்பின் அந்த வசனங்களின் அடிப்படியில் நிரூபணமாகும் பொருளையும் குறிப்பிடுகிறேன். அந்த வசனங்களாவன:-

'வ கவ்லிஹீம் இன்னா கத்தல்னல் மஸீஹ.... யக்கூனு அலைஹிம் ஷஹீதா' (4:158-160) பொருள்: இறைவனின் கருணையையும் நம்பிக்கையையும் யூதர்கள் இழந்துவிட்டதற்க்குக் காரணம்,அவர்கள் செய்த அவர்களின் தீய செயல்களாகும். அவற்றுள் ஓன்று என்னவென்றால்,அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதரென்றும் மஸீஹ் என்றும் வாதித்த ஈசப்னு மர்யத்தை நாங்கள் கொன்றுவிட்டோம். (நாங்கள் ஈஸா ரெசூளுல்லாஹ்வை கொன்று விட்டோம் என்று யூதர்கள் கூறினார்களென்றால், அவர்கள் ஹஸ்ரத் மஸீஹை ரேசூல் என்று நம்பினார்கள் என்று பொருளன்று.

ஏனெனில் அவர்கள் அவரை உண்மையான ரெஸூல் என்று நம்பியிருந்தால் சிலுவையில் அறைய முற்பட்டிருக்க மாட்டார்கள். எனவே "இதோ இந்த ரெஸூலை நாங்கள் சிலுவையில் அறைந்து கொன்றோம் என்ற அவர்களின் கூற்று, கேலி செய்யும் முறையிலாகும். சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டவன் சாபத்திற்குரியவன் என்ற தவ்ராத்தின் கூற்றுதான் இந்த கேலி கிண்டலுக்கு அடிப்படைக் காரணம்)

யூதர்களின் இந்தக் கூற்றின் நோக்கம் என்னவென்றால் ஈசப்னு மரியம் உண்மையான ரெஸூலாக இருந்திருந்தால் அவரைத் தூக்கிலிட நாங்கள் ஒருநாளும் ஆற்றல் பெற்றிருக்க மாட்டோம். ஏனெனில் சிலுவைக் தண்டனை பெற்றவன் சாபத்திற்குரியவன் ஆவான் என தவ்ராத் உரத்த குரலில் கூறுகிறது என்று காட்டுவதேயாகும்.

திருக்குர்ஆன் இந்த வசனங்களுக்குப் பின் கூறுவதாவது, உண்மையில் யூதர்கள் மசீஹிப்னு மர்யமைக் கொல்லவில்லை. தூக்குத் தண்டனை வழங்கவுமில்லை. மாறாக இந்த எண்ணம் அவர்களின் உள்ளங்களில் யூகமாகவே உள்ளது. உறுதியானதன்று. மேலும் அவர்களின் மடமையையும் தன் வல்லமையையும் அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக அல்லாஹ்வே அவர்களைச் சந்தேகத்தில் ஆக்கினான்.

அதன்பின் கூறினான்; மஸீஹிற்கு சிலுவை தண்டனை கிடைத்திருக்கலாமோ என்ற ஐயத்தில் இருக்கும் மக்களிடம் அதக்கான எந்தத் திட்டவட்டமான சான்றும் இல்லை. ஒரு யூகத்தையே அவர்கள் பின்பற்றுகின்றனர். மேலும் மஸீஹிற்கு சிலுவை தண்டனை வழங்கப்பட்டது என்பதற்கு உறுதியான அறிவு அவர்களிடமில்லை என்பதை அவர்களே நன்கறிவார்கள். மாறாக உண்மையான (உறுதியான) செய்தி என்னவென்றால் அவர் இறந்து விட்டார் என்பதேயாகும். அதாவது அவர் தமது முதிய வயதில் இயற்கையாக மரணமடைந்தார்.

மேலும் இறைவன் அவரை நல்லடியார்களாகிய மக்களைப் போல் தன்பால் எடுத்துக் கொண்டான், மேலும் இறைவன் மிகைத்தவனாவான்,அவனுக்காக ஆகி விடுகின்றவர்களுக்கு அவன் கண்ணியத்தை வழங்குகின்றான். மேலும் அவன் 'ஹக்கீம்' (நுண்ணறிவுள்ளவன்) ஆவான் அவன் மீது நம்பிக்கை வைத்திருப்போருக்கு தன் நுண்ணறிவால் பயனடையச் செய்கிறான்.

தொடர்ந்து இறைவன் கூறுவதாவது, வேதக்காரர்களில் ஒவ்வொருவரும் மஸீஹ இயற்கையாக இறந்தார் என்ற உண்மையை நம்புவதற்கு முன்(வேதக்காரர்களின் எண்ணங்களைப் பற்றி) நாம் மேலே குறிப்பிட்ட விதமாக நம்பிக்கைகொண்டவராகவே இருப்பார்.

அதாவது மஸீஹ் உண்மையில் சிலுவையில் அறையப்பட்டு மறைந்தார் என்ற விஷயத்தில் எந்த வேதக்காரர்களுக்கும் உள்ளத்தளவில் உருதிகிடையாது. என்று நாம் ஏற்கனவே விளக்கி வந்துள்ளோம். கிறிஸ்தவர்களாயினும் சரி, யூதர்களாயினும் சரி, யூகம் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார் என்று எண்ணுகின்றனர்.

எமது இந்தக் கூற்று உண்மையானது. எவரும் இதனை மறுக்க முடியாது. எனினும் அவரின் மரணம் பற்றி அவர் எப்போது இறந்தார் என்பது அவர்களுக்குத் தெரியாது. எனவே அது குறித்து நாம் தெரிவிக்கிறோம். அவர் இறந்துவிட்டார் அவருடைய ஆன்மா கண்ணியத்துடன் நம் பக்கம் உயர்த்தப்பட்டது என இறைவன் கூறுகின்றான்.

இங்கே ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். வேதக்காரர்களின் எண்ணங்கள் தொடர்பாக நாம் வெளிப்படுத்திய விஷயத்தில் நம்பிக்கை வைத்திராத எவரும் அவர்களிடையே இல்லை என்ற இறைவனின் கூற்று அற்புதமான ஒரு கூற்றாகும். இது யூதர்களைப் பார்த்து "நீங்கள் உண்மையாளர்கள் என்றால் மரணத்தை நாடுங்கள்" ((2:95) என்ற வசனத்தைப் போன்ற ஒன்றாகும் இது. எனவே இந்தக் கூற்றின் மூலம், "நாங்கள் உண்மையிலேயே மஸீஹிற்குத் சிலுவை தண்டனை வழங்கினோம்" என்று யூதர்கள் கூறுவதிலிருந்து, அவர் சாபத்திற்குரியவராவார். உண்மையான நபியில்லை (நவூதுபில்லாஹ்) என்ற முடிவுக்கு வருவதே அவர்களின் நோக்கம்.

அவ்வாறே மஸீஹ் உண்மையிலேயே சிலுவைதண்டனையால் இறந்தார் என்று கிருஸ்தவர்கள் கூறுவதன் நோக்கம் , மஸீஹ் கிறிஸ்தவர்களின் பாவங்களுக்கு பரிகாரமாக ஆகிவிட்டார் என்ற முடிவுக்கு வருவதாகும்.

யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுடைய இவ்விரு எண்ணங்களும் தவறாகும். இவ்விரு பிரிவினருள் எவருக்கும் இவ் எண்ணங்களில் திடமான உறுதியில்லை. மாறாக மஸீஹ் உறுதியாகவே சிலுவை தண்டனைக்கு ஆளாகவில்லை என்பதில் மட்டுந்தான் அவர்களுக்குத் திடமான உறுதியுள்ளது.

யூதர்களும் கிறிஸ்தவர்களும் மவுனம் கொள்வதிலிருந்தும் அவர்களிடம் சந்தேகத்தைத் தவிர ஏதும் இல்லை என்பதை நேர்மையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையே இந்தக் கூற்றினால் அல்லாஹ் விளக்க விரும்புகிறான்.

மேலும் யூதர்களும் கிறித்தவர்களும் இந்த வசனத்தைக் கேட்டும் மவுனமாக இருந்தனர்;மறுப்பதற்காக களத்தில் இறங்கவில்லை என்றால் அதற்க்குக் காரணம், நாம் இதற்க்கு எதிரில் நம் உள்ளத்தில் இல்லாத ஒரு வாதத்தை விடுத்தால் நாம் பொய்யர் என்பதைத் தெளிவுபடுத்தக் கூடிய ஏதேனும் அடையாளம் இறைவனிடமிருந்து வெளியாகிவிடும் என்றும் அவர்கள் நன்கு அறிந்ததேயாகும். எனவே அவர்கள் மூச்சு விடவில்லை;மவுனமாக இருந்தனர்.

நாம் மவுனம் சாதிப்பதால் நாம் அதனை ஒப்புக் கொண்டுவிட்டோம் என்பது நிரூபணமாகி விடும் என்பதை அவர்கள் நன்கறிந்திருந்தனர். மேலும் அதனால் ஒருபக்கம் அந்த மறுபபோரின் கொள்கையின் வேர் அறுந்துவிடும். அதே சமயத்தில் இன்னொருபக்கம் மஸீஹ் இறைவைனின் உண்மையான தூதரும் நல்லடியாரும் இல்லை; இறைவன் பால் கண்ணியத்துடன் உயர்த்தப்படக் கூடியர்வர்களை சேர்ந்தவரில்லை என்ற தங்களின் கொள்கை பொய்யாகிவிடும் என்பதையும் யூதர்கள் அறிந்திருந்தாலும் முஹம்மது ரெசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் உண்மையின் ஒளியின் வாள் அவர்களின் கண்களை கூசச் செய்து விட்டது.

திருக்குரானில் அவர்களைப் பார்த்து நீங்கள் உண்மையாளர்கள் என்றால்,மரணத்தை நாடுங்கள் என்று கூறியும் அச்சத்தால் எவரும் மரணத்தை நாடாததைப் போன்று அச்சத்தால் நடுங்கிய அவர்களால் மறுக்க முடியவில்லை. அதாவது மஸீஹ் சிலுவைத் தண்டனைக்கு ஆளானார் என்று நாங்கள் உறுதி கொண்டிருக்கிறோம். எங்களை ஏன் உறுதி கொள்ளாதவர்களுடன் சேர்க்கின்றீர்கள்? என அவர்கள் வாதிக்கவில்லை. எனவே நபி(ஸல்) அவரளின் காலத்தில் அவர்கள் மவுனம் சாதித்ததே நிரந்தரமான முறையில் அவர்களுக்கு எதிரான சான்றாக அமைந்துவிட்டது.

அவர்கள் உருவாக்கிக் கொண்ட கற்பனையான கருத்தின் தாக்கத்திற்கு அவர்களின் வழித் தோன்றல்களும் ஆளாகிவிட்டனர். ஏனென்றால் முன்சென்றோர் பின் வருபவர்களுக்குச் சாட்சிகளாக இருக்கின்றார்கள். அவர்களின் சாட்சியத்தை வருங்கால வழித்தோன்றல்கள் என்றுக் கொள்ளவேண்டியதிருக்கிறது.

மஸீஹ் சிலுவைத் தண்டனைக்கு ஆளாகவில்லை. மாறாக இயற்கையாக இறந்தார் என்ற பிரச்சனையை இறைவன் எழுப்பினான் என்றால் இந்த வாதத்தின் குறிக்கோள் இதுதான் என்பதைத் தற்போது வாசகர்களால் புரிந்து கொள்ள முடியும். அதாவது மஸீஹ் சிலுவை தண்டனையால் வெவ்வேறான இரு பிரிவினர்கள்- அதாவது யூதர்களும், கிறிஸ்தவர்களும் தத்தமது குறிக்கோளுக்குச் சாதகமாக வெவ்வேறான இரு முடிவுகளை எடுத்துக் கொண்டார்கள்.

அவர் சிலுவைதண்டனைக்கு ஆளானவர் தவ்ராத்தின்படி சிலுவைத் தண்டனைக்கு ஆளானார் சாபத்திற்குறியவர்; இறை நெருக்கத்தை இழந்தவர். ரபாஆ வின் கண்ணின்யம் இழந்துவிட்டார்;மேலும் நுபுவத்தின் அந்தஸ்து என்பது இந்த இழிநிலைக்கு அப்பாற்பட்டது என்று யூதர்கள் கூறினர்.

கிறித்தவர்களோ யூதர்களின் இந்த அவதூறுக்கு, மஸீஹ் சிலுவைத் தண்டனைக்கு ஆளானது அவருக்குத் தீயதன்று மாறாக பாவிகளைச் சாபத்திலிருந்து காப்பாற்றவே இந்த சாபத்தைத் தமக்காக மேற்கொண்டாரென்ற பதிலைத் தாமாகவே உருவாக்கிக் கொண்டனர்.

எனவே இறைவன் அவ்விரு பிரிவினரின் மேற்குறிப்பிட்ட கூற்றுகளையும் அழித்துவிடத் தீர்மானித்தான். மேலும் அவ்விரு பிரிவினருக்கும் மஸீஹின் சிலுவைதண்டனைக்கு ஆளாதல் குறித்து உறுதியில்லை என்றும் உறுதியிருந்தால் முன்வரவேண்டும் என்று வெளிப்படுத்தினான். ஆனால் அவர்கள் ஓடிவிட்டனர். எவரும் மூச்சு விடவில்லை. இது நபிகள் நாயகம் மற்றும் திருக்குரானின் ஓர் அற்புதமாகும். இது தற்கால அறிவற்ற மவுலவிகளின் பார்வைகளிலிருந்து மறைந்துள்ள ஒன்றாகும்.

எவன் கையில் ஏன் உயிர் உள்ளதோ அவன் மேல் ஆணையாக நான் கூறுகிறேன்; இப்பொழுது இந்த நேரத்திலே மேற் குறிப்பிட்ட உண்மை ஆன்மீகக் காட்சியின் மூலம் எனக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது எழுதியதெல்லாம் அந்த உண்மையான கற்பிப்போனின் போதனையால்தான் எழுதினேன். இதற்காக எல்லாப் புகழும் இறைவனுக்கே!

பகுத்தறிவு அடிப்படையில் பார்த்தாலும் இக்கூற்றின் உண்மைக்கு ஒவ்வொரு நேர்மையான உள்ளமும் சான்று பகரும். ஏனெனில் இறைவனின் கூற்று வீண் விஷயங்களைவிட்டும் தூயதாக இருத்தல் வேண்டும். இந்தச் சர்ச்சையின் இடையில் மிகப்பெரும் இந்த நோக்கங்கள் இல்லைஎன்றால் இந்தக் கூற்றுகள் அத்தனையும் எந்த உண்மையும் இல்லாத வெறும் வீணானது என்பதை அறிவுடைய ஒவ்வொருவராலும் உணர முடியும். ஏனெனில் அந்நிலையில் ஒரு நபிக்குத் சிலுவைதண்டனை கிடைத்ததா அல்லது இயற்கையான மரணத்தால் இறந்தாரா என்ற இந்த பிரச்சனை, பயனற்ற ஒரு சர்ச்சையாகும். இதனால் எந்தப் பயனும் விளையாது!

எனவே எந்த யூதருக்கும் எந்தக் கிறித்தவருக்கும் மஸீஹின் சிலுவைத் தண்டனை குறித்து உறுதியான நம்பிக்கை இல்லை என அல்லாஹ் மிகவும் விளக்கமாக வலுவான ஆற்றலுடன் கூறுவதில் என்னதான் பெரிய நோக்கமிருக்கிறது? என்பதையும் எந்தனை நிரூபிப்பதற்காக யூதர்கள்,கிறிஸ்தவர்கள் ஆகிய இரு பிரிவினரையும் பதில் சொல்ல முடியாமல் மவுனமாக்கியதன் பின்னால் இருந்த மாபெரும் குறிக்கோள் என்ன?என்பதையும் நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

அந்த நோக்கத்தைத் தான் மவுலவிகளின் பார்வையில் காபிராகவும் மார்க்கத்தை விட்டு வெளியேறியவனாகவும் இருக்க இவ்வடியானுக்கு அவன் தன் சிறப்பான ஆன்மீகக் காட்சியின் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றான். (இஸாலேயே அவ்ஹாம், பக்கம் : 288 - 294)
Read more »