அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Feb 11, 2014

கோவை விவாதம்: இமாம் மஹ்தியை (அலை) அவர்களைப் பற்றி பொய்யரின் புலம்பல்


திருக்குர்ஆன் அடிக்குறிப்பு எண் 187 (9வது பதிப்பில்) பி.ஜே இவ்வாறு எழுதியுள்ளார்:

அது போல் பாகிஸ்தானைச் சேர்ந்த காதியான் என்ற ஊரில் பிறந்த மிர்ஸா குலாம் என்பவர் தன்னை நபி என்று வாதிட்டார். அவர் வாழ்ந்த காலத்திலேயே அவர் பொய்யர் என்று நிரூபணமானது.

நம் விளக்கம்:

1. ஒரு மௌலவிக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை. குறைந்த அளவு எதைப் பற்றி எழுதுகிறோமோ அது பற்றிய அடிப்படை அறிவு தேவை. அது பி.ஜே என்ற பொய்யருக்கு இல்லை என்று தெளிவாகிறது. பாகிஸ்தானில் காதியான் என்ற ஊர் இல்லை. அது இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ளது. இதனைக் கூட தெரியாதவர் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் நுபுவத்தைப் பற்றி எப்படி அறிந்திருக்க முடியும்?

2. அவர் வாழ்ந்த காலத்திலேயே பொய்யர் என்று நிரூபணமானது என்று கூறுகிறார். ஒவ்வொரு உண்மை நபியை பற்றியும் பகைவர்களின் புலம்பல்களையே பி.ஜே யும் கூறியுள்ளார்.

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எடுத்துக் கொண்டால், இஸ்ரா – மிஹ்ராஜ் சம்பவத்திலும், உஹத் போரிலும், அவர்களின் மரணத்தின் போதும் பல்லாயிரக்கணக்கானோர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டனர். இந்த அளவுகோலின் படி, இஸ்லாத்தின் எதிரிகள், மறுப்பவர்கள் பார்வையிலும் அவர் பொய்யர் என்று அவர் காலத்திலேயே நிரூபணமானது (நவூதுபில்லாஹ்) என்று பி.ஜே முஸ்லிம் அல்லாதவராக அதாவது ஒரு இந்துவாகவோ, யூதராகவோ, நாத்திகராகவோ பிறந்திருந்தால் எழுதியிருக்கக் கூடும்.

நபி மொழியில் வருகிறது.

மறுமையில் ஒரு நபி அவரைப் பின்பற்றுபர்கள் எவருமின்றி தன்னந்தனியே செல்வார்கள். எவரும் அவர்களின் வாழ் நாளில் பின்பற்றவில்லை என்பதினால் அவர் வாழ்நாளில் நபி இல்லை என நிரூபணமாகிவிடுமா?
பி.ஜே யின் கருத்துப்படி, ஹஸ்ரத் நூஹ் (அலை) அவர்கள் 950 ஆண்டுகள் தம் தூதுச் செய்தியைப் போதித்தும் அவரைத் மனைவியும் மகனும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரைப் பெரும்பாலார் ஏற்றுக் கொள்ளவில்லை. என்பதால் பொய்யர் ஆவாரா?

நபி (ஸல்) அவர்களின் சம காலத்தில் அரபுலகில் வாழ்ந்த யூத கிறிஸ்தவர்களும், சிலை வணங்கிகளும் அன்னாரை நபி என்று ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த அளவுகோலின் படியும் நபி (ஸல்) அவர்கள் பொய்யர் (நவூதுபில்லாஹ்) என்று நடுநிலை தவறியவன் எழுதக் கூடும்.

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் தோன்றிய பொய் நபிமார்கள் தம் வாழ்நாளிலே வேரோடும், வேரடி மண்ணோரும் அழிந்து போனார்கள். அதற்குப் பின்னர் நம் காலம் வரை தோன்றிய பொய் நபிமார்களுக்கும் முகவரி இல்லை. அவ்வளவு ஏன் எனக்குப் பிறகு 30 பொய் நபிமார்கள் தோன்றுவார் என்று நபி மொழியில் கூறப்பட்ட அனைத்தும் பொய்யர்களைப் பற்றியும் எந்த மௌலவிக்கும் தெரியாது. அவர்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டார்கள். ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களைப் பற்றி பி.ஜே க்கும் முகவரி தெரிந்திருக்கிறது.


இதற்க்கு மாற்றமாக, மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் ஜமாஅத் 120 ஆண்டுகளாக 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் 20 கோடி உறுப்பினர்களைக் கொண்டு ஒரு கலீபாவின் கீழ் தொடர்ந்து வளர்ந்து வருவது அவர் உண்மையாளர் என்பதற்கு அடையாளமாகும். 

Read more »

பொய்யர் பி.ஜே யின் உளறல் – நூல்களை பதுக்கிவைத்தார்களா?


மிர்ஸா குலாம் மதத்தைப் பின்பற்றும் காதியானிகள் எதை இறைச் செய்தி என்று கூறுகின்றார்களோ அதை அனைத்து மக்களும் சென்றடையும் வகையில் பரவலாக அச்சிட்டு வெளியிடத் தயாரா என்று முஸ்லிம்கள் எழுப்பும் கேள்விக்கு இன்று வரை அந்த மதத்தினர் பதில் கூறவில்லை. அதைப் பரப்பவுமில்லை. திருட்டுப் பொருளைப் பதிக்கி வைத்திருப்பதைப் போன்று தான் காதியானி மதத்தவர்கள் மிர்ஸா குழாமின் உளறல்களைப் பதுக்கி வைத்திருக்கிறார்கள் (9 வது பதிப்பு பக்கம் 1264)

நம் பதில்:

1. உலக மகாப் பொய்யர் பி.ஜேயின் இந்த உளறல், இவரது திருக்குர்ஆன் மொழியாக்கத்தில் 9 வது பதிப்பில் உள்ளது. இது மே 2010 இல் வெளியானது.

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் நூல்கள் அனைத்தும், அதன் இணையதளம் www.alislam.org இல் உள்ளது. இது 1995 இல் எமது இணைய தளத்தில் வெளிவந்துவிட்டது. கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வரை திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புகளும் நபிமொழிகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளும் இருந்ததில்லை. எனவே இறை வேதம் திருக்குரானையும், நபி (ஸல்) அவர்களின் கூற்றையும் 1300 வருடங்களாக திருடர்களைப் போல் பதுக்கி வைத்ததாக ஆகுமா? அல்லது அவை பி.ஜே கூறுவது போல் உளறல்கள் ஆகுமா? (நவூதுபில்லாஹ்)

2) அனைத்து மக்களும் சென்றடையும் வகையில் பரவலாக அச்சிட்டு வெளியிடத் தயாரா என்று முஸ்லிம்கள் எழுப்பும் கேள்விக்குப் பதில் இல்லை என்று பி.ஜே எழுதியுள்ளார்.

பொதுவாக தமிழ் நாட்டிலும், குறிப்பாக மேலப்பாளையத்திலும் TNTJ சம்பந்தமாக பல பிரசுரங்களை, பல சுவரொட்டிகளை, 50 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் போர்டுகளின் மூலமும் எங்கள் கருத்துக்களை வெளியிட்டோம். பல பொதுக் கூட்டங்களில் மூலமும் எங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளோம்.

அதற்கு TNTJ யின் நிலைப்பாடு என்னவென்றால், அவற்றைப் படிக்காதீர்கள், அவர்களின் கூட்டங்களுக்கு செல்லாதீர்கள். அது பற்றி எங்களிடம் எந்த கேள்வியும் கேட்காதீர்கள் என்று கண்ணைக் கட்டி, காதை அடைத்து, வாயையும் மூடவைத்துள்ளார்கள் .

மேலப்பாளையும் தவ்ஹீது ஜமாத்தினர் ஈஸா (அலை) அவர்கள் மரணம், நபிக்குப் பிறகு நபி வரமுடியமா? ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் உண்மைத்துவம் இந்த மூன்று தலைப்புகளைப் பற்றி கருத்தரங்கம் ஒன்று நடத்தினார்கள். இதற்கு மேலப்பாளையம் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் சார்பாக 11.05.2002, 12.05.2002 ஆகிய நாட்களில் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் எழுதியா நூல்கள் அனைத்தையும் பஜார் திடலில் மேடையில் வைத்து மேலப்பாளையம் தவ்ஹீது ஜாக்கிற்கும் பிற அமைப்பிற்கும் அழைப்பு விடுத்தோம். ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் நூல்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், விளக்கம் தேவைப்பாட்டால் எங்களிடம் மூல நூல்கள் உள்ளன. நேரில் வந்து சந்தேகங்களைக் கேட்டு விளக்கத்தைப் பெறலாம். முவருவோர் யாரும் உண்டா என்று அழைப்பு விடுத்தோம். தௌஹீது ஜமாத்தினர் யாரும் முன்வரவில்லை. காதியானிகள் நூல்களை திருடர்கள் போல் பதுக்கி வைத்து பிறருக்கு காட்டுவதில்லை என்று கூறுகின்ற இவருக்கும் இவரது கூட்டத்தாருக்கும் இது தெரியாமல் போனதுதான் பெரும் வியப்பு.

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் நபிமொழிகளை அஹ்லே குரான்வாதிகள் உளறல்கள் என்று கூறுகின்றனர். இந்த அஹ்லே குரான் வாதிகளைப் போல் பி.ஜே ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் நூல்களை உளறல்கள் என்கிறார்.


அல்லாஹ்வின் வசனங்களை அக்கால காபிர்கள் கட்டுக் கதைகள் என்று கூறியாதாக திருக்குர்ஆன் கூறுகிறது. (8:32, 16:25, 27:69) இதிலிருந்து இறைச் செய்திகளையும், நபியின் கூற்றுகளையும் உளறல்கள் என்று கூறுவது அதன் உண்மைக்கு ஒரு அடையாளம் என்று தெரிகிறது. 

Read more »

Feb 3, 2014

அல்லாஹ் பெரிய சதிகாரனா? அபூஅப்தில்லாஹ்விற்கு பதில்


இன்னும் (ஈஸாவைக் கொல்ல) அவர்கள் திட்டமிட்டுச் சதி செய்தார்கள், அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான் (3:54) (அபூ அப்தில்லாஹ் நூல் பக்கம் 18)

யூதர்கள் ஈஸா(அலை) அவர்களைப் பிடித்து சிலுவையில் அறைந்து  கொன்றுவிட எண்ணினர். இது யூதர்கள் செய்த சதி, அல்லாஹ்வோ ஈஸா (அலை) அவர்களை யூதர்கள் பிடிக்க விடாது தன்னளவில் உயர்த்திக் காப்பாற்றி விட்டான். யூதர்கள் வேறொரு யூதனைப் பிடித்து சிலுவையில் அறைந்து கொன்று விட்டனர். இவ்வாறு யூதர்களின் சதியை அல்லாஹ் முறியடித்துவிட்டான். எனவே அல்லாஹ் சதிகாரர்களுக்கு எல்லாம் மிகப் பெரிய சதிகாரன். (அபூ அப்தில்லாஹ் எழுதிய நூல் : பக்கம் 18-20)

நம் பதில்:

1. யூதர்கள் ஈஸா (அலை) அவர்களைப் பிடித்து சிலுவையில் அறைந்து கொல்ல எண்ணினர். இதுவே யூதர்கள் செய்ய நினைத்த சதி, அல்லாஹ்வோ திட்டமிடுபவர்களுக்கு எல்லாம் மிகப்பெரிய திட்டமிடுபவன். எனவே யூதர்களின் தீய திட்டத்தை முறியடித்து ஈஸா (அலை) அவர்களை சிலுவையிலிருந்து காப்பாற்றி காணாமல் போன பத்து கோத்திரமாகிய இஸ்ரவேலர்க்ளைத் தேடிச் சென்று அவர்களை நேர்வழிப்படுத்த ஹிஜ்ரத் செய்ய வைத்தான். இறுதியாக இந்தியா வந்து அங்கு காஷ்மீரில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு தப்லீக் செய்து அவர்களுடன் வாழ்ந்து இயற்கை மரணத்தை அடையச் செய்தான். இது அல்லாஹ்வின் திட்டமாகும்.
இவ்வாறு யூதர்களின் சதி தோல்வி கண்டது. அல்லாஹ்வின் திட்டம் முழுமையாக நிறைவேறியது.

2. அபூஅப்தில்லாஹ் திருக்குர்ஆன் 3:54 வசனத்திற்கு தந்திருக்கும் பொருளில் அல்லாஹ்வை மிகப்பெரும் சதிகாரன் ஆக்கி விட்டார். (நவூதுபில்லாஹ்)
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் பிள்ளைகளுக்கு அழகிய பெயர்களை சூட்டுமாறு கூறியுள்ளார்கள். அல்லாஹ்வை அழகிய பயர்களால் அழைக்குமாறு திருக்குர்ஆன் கூறுகிறது. இப்படி இருக்க அப்தில்லாஹ் அல்லாஹ்வுக்கு வழங்கியுள்ள பெயரைப் பார்க்கும் போது அவரே தன் நூலில் பக்கம் 19 இல் அல்லாஹ்வின் மகத்துவத்தையும் கண்ணியத்தையும் உணராத ஈனர்களின் சிந்தையே அல்லாமல் ஈமான் உடையவர்களின் சிந்தை இத்தரம் இழிவுடையதாக இருக்க முடியுமா? அன்று எழுதிய வசனம் அவருக்கே (அபூ அப்தில்லாஹ்வுக்கே) சரியாக பொருந்துவதனை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

இந்த வசனத்தில் ம(க்)கர் எனும் அரபிச் சொல் வந்துள்ளது. இதற்கு சதி, சூழ்ச்சி என்ற பொருளும் திட்டம் என்ற பொருளும் உண்டு. திட்டம் நல்ல திட்டம், தீய திட்டம் என இரு வகைப்படும். யூதர்கள் இறைவனுக்கும் அவனது நபிக்கும் எதிராகச் செயல்பட்டனர். எனவே அதனைச் சதி, சூழ்ச்சி என்று கூறலாம். ஆனால் அல்லாஹ்வோ இஸ்ரவேலர் சமுதாயத்தின் நலனுக்காக ஒரு நபியை அனுப்பியுள்ளான். அதனை சதி என்று கூற, அபூ அப்தில்லாஹ்வுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ் சதி செய்தான் என்று எழுதும் இவர்கள் எந்த அளவுக்கு ஞன சூனியங்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஒரு சொல் அல்லாஹ்வுக்கு வரும்போது அவன் தகுதிக்கேற்ப ஒரு பொருளும், அச்சொல் நபிக்கும் வருபோது அவர்கள் தகுதிக்கேற்ப பொருளும் பிறருக்கு வரும் போது அவர்கள் தகுதிக்கு ஏற்ப பொருளும் கொள்ளவேண்டும் என்ற சாதாரண விஷயம் கூட அபூ அப்தில்லாஹ்வுக்கு தெரியவில்லை!

இவர்களின் அறபி மொழியறிவு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். "சதிகாரர்களுகெல்லாம் சதிகாரன் என்று அல்லாஹ் தன்னையே குறிப்பிடுகின்றான். (பக்கம் 20) திருக்குரானில் அல்லாஹ் தன்னைக்குறித்து பெரிய சதிகாரன் என்று கூருகின்றானாம். ஆல இம்ரான் அதிகாரத்தின் 55 ஆம் வசனத்திற்கு இவர் கொடுத்துள்ள பொருள் இது. இந்த ஆயத்தின் அர்த்தத்தையே அனர்த்தமாக்கியிருக்கிறார்.

'வ மகரு வமகரல்லாஹு வல்லாஹு ஹைருல் மாஹிரீன்'

என்பதன் பொருள், " அவர்கள் (சதித்) திட்டம் போடுகிறார்கள். அல்லாஹ்வும் (அதனை முறியடிக்க) திட்டம் போடுகிறான். ஆனால் திட்டமிடுபவர்களில் மிகச் சிறந்தவன் அல்லாஹ்வே ஆகும் "என்பதே!

இது போன்ற ஆயத்துகளுக்கு பொருள் தருவதில் பல திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்கள் கூட தவறே செய்திருக்கின்றனர். அல்-பக்கரா அதிகாரத்தின் 15,16 திருவசனங்களில் காணப்படும் "இன்னமா நஹ்னு முஸ்தஹ்சிவூன், அல்லாஹு யஸ்தஹ்சிவூபிஹீம்" என்றிருப்பதற்கு, 'நாங்கள் பரிகாசம் பண்ணுகிறோம் அல்லாஹ்வும் அவர்களை பரிகாசம் பண்ணுகிறான் என்று மொழி பெயர்த்துள்ளனர். அதாவது நயவஞ்சகர்கள், நம்பிக்கையாளர்களை பரிகாசம் பண்ணுகிறார்களாம் அதற்காக அல்லாஹ் அந்த நயவஞ்சகர்களை பரிகாசம் செய்கிறானாம். எப்படி இருக்கிறது கதை! யாரேனும் பரிகாசம் செய்தால் அவர்களைத் திருப்பி பரிகாசம் செய்வதற்கு அல்லாஹ் என்ன சிறுபிள்ளையா? (நவூதுபில்லாஹ்) ஒரு செயலுக்குரிய தண்டனையாக அந்த செயலையே குறிப்பிடுவது அரபி மொழி வழக்காகும். 2:195, 42:41 ஆகிய ஆயத்துகளில் இவ்வாறே வந்துள்ளது. அதனால் மேற்கண்ட திருவசனத்திலுள்ள, "அல்லாஹு யஸ்தஹ்சிவூ பிஹிம்" என்பதற்கு அல்லாஹ் அவர்களின் பரிகாசத்திற்கு தண்டனை வழங்குவான் என்றே பொருள் தரவேண்டும்.

இப்படி அறபி மொழியின் மொழி வழக்குகளை அறியாத இந்த ஆலிம்சாக்கள் சில ஆயத்துகளுக்குத் தவறான அர்த்தம் செய்துவிடுவதுண்டு. அதன் காரணமாக விபரீதமான கருத்துக்கள் உருவானால் அதை சமாளிக்க தங்களின் கற்பனை வளத்தைப் பயன் படுத்தி கதைகளைப் புனைந்து விடுவர்.

இப்படி புனையப்பட்ட கதையே "ஈசா நபியின் வானுலகப் பயணம்." 

மேலும் இன்னொரு கோணத்தில் அவ்வசனத்திற்கு யூதர்கள் சதி செய்தனர். அல்லாஹ் அந்த சதிக்குரிய தண்டனையைக் கொடுத்தான் என்று எழுதியிருந்தால் கூட அதனை ஒப்புக் கொள்ளலாம். அவ்வாறு கூறாமல் அபூ அப்தில்லாஹ் அவர்கள் அல்லாஹ்வை மிகப்பெரிய சதிகாரனாக்கியதிளிருந்து அபூ அப்தில்லாஹ்வுக்கு அரபி மொழி வழக்கோ, மொழி அறிவோ இல்லை என்பது புலனாகிறது. 
Read more »