அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jan 30, 2014

ஆதம் நபி வாழ்ந்தது இவ்வுலக சொர்க்கமா? மறுமை சொர்க்கமா?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 12 இல் சொர்க்கம் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

ஆதம் நபி மறுமையில் நல்லோர்க்கு இறைவன் வழங்கவுள்ள சொர்க்கச் சோலையில் தங்க வைக்கப்பட்டு இறைக் கட்டளையை மீறியதால் வெளியேற்றப்பட்டார் என்று பலர் கூறுகின்றன.

நம் விளக்கம்:

திருக்குர்ஆன் 2:36 இல் ஆதமே! நீரும் உம் மனைவியும் இத்தோட்டத்தில் குடியிருங்கள்.... என்று கூறினோம் என்று வருகிறது. இதே கருத்து 7:20 வசனத்திலும் வருகிறது. பூமியிலுள்ள எல்லா குடியிருக்கும் இடங்களும் அதாவது வாழும் இடங்களும்...... இதில் வாழும் இடங்கள் என்று எந்த அடைமொழியும் இன்றியே திருக்குர்ஆனில் வருகிறது. ஆனால் சொர்க்கத்தில் உள்ள குடியிருக்கும் இடத்தை வாழும் இடத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது, தூய, பரிசுத்தமான வாழுமிடம் என்று தூய என்று அடைமொழியுடன் சேர்த்துக் கூறுகிறான். திருக்குர்ஆனில் 9:72; 61:13 ஆகிய வசனங்களில்,

அல்லாஹ் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கு பெண்களுக்கும் சுவர்க்கங்களை வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அவர்கள் அவற்றில் என்றென்றும் வாழ்வர். மேலும் நிரந்தரமான சுவர்க்கங்களில் தூய்மையான இல்லங்களை(யும் வாக்களித்துள்ளான்) (9:72) என்று கூறுகிறான். மேலும்,

நீங்கள் அல்லாஹ்விடத்தும் அவனது தூதரிடத்தும் நம்பிக்கை கொண்டு உங்கள் பொருள்களையும் உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் வழியில் கடுமையாக உழைப்பதே (அந்த வாணிபம் ஆகும்) (நீங்கள் அவ்வாறு செய்தால்) அவன் உங்கள் பாவங்களை மன்னித்து, தோட்டங்களில் நுழையச் செய்வான். அவற்றுக்கிடையே ஆறுகள் ஓடுகின்றன. மேலும் என்றென்றும் நிலைத்திருக்கும் தோட்டங்களிலுள்ள தூய்மையான இன்பமான இருப்பிடங்களில் (அவன் உங்களை வாழச் செய்வான்) (61:13)

எனவே ஆதம் நபி வாழ்ந்த இடம், தூய வாழுமிடம் என்று வராததினால், அவர் வாழ்ந்த இடம் பூமியிலுள்ள ஜன்னத் என்று தெளிவாகிறது. அதாவது மறுமையில் கிடைக்கும் சொர்க்கம் இல்லை.

இரண்டாவதாக, மறுமையில் உள்ள சொர்க்கத்தைப் பற்றி வருமிடங்களில் ஆறுகள் ஓடும் என்ற வருணனை வருகிறது. ஆதம் நபி வாழ்ந்த இடத்தில் ஓடும் ஆறுகளைக் காண முடியவில்லை. அந்த ஆறுகள் எங்கே ஓடி ஒளிந்து கொண்டன? எனவே ஆதம் நபி வாழ்ந்த இடம் மறுமையிலுள்ள சொர்க்கம் இல்லை என்றும், பூமியிலுள்ள ஜன்னத் என்றும் நாம் விளங்கிக் கொள்கிறோம்.

மூன்றவதாக, திருக்குர்ஆனில்  அல்லாஹ் மறுமையில் கிடைக்கும் சொர்க்கத்தைப் பற்றிப் பல பெயர்களில் அழைக்கிறான்.

1) மறுமை வீடு (2:103)
2) அதன் எனும் சொர்க்கம் (9:72)
3) பிர்தவ்ஸ் (18:108)
4) மஹ்வா எனும் சொர்க்கம் (32:20)
5) நயீம் எனும் சொர்க்கம் (5:66)
6) தாருல் குல்து (25:16)
7) ஆலியா (69:23)
8) அல்ஹுஸ்னா (4:96)
9) இறுதி இல்லம் (28:84)
10) தாருல் ஸலாம் (6:178)
11) தாருல் கரார் (40:40)
12) இறையச்சம் உடையவர்களின் இல்லம் (16:31)
13) நிலையான தங்கும் இல்லம் (35:36)
14) சுவனப் பூங்காக்கள் (142:23)
15) பூங்கா (30:16)
16) தூபா (மிக நல்ல) (13:30)
17) இல்லிய்யூன் (83:20)
18) பழ்ல் (கிருபை) (33:40)
19) வலப்புறம் (56:28)
20) மகாமுல் அமீன் (44:52)

இவை மறுமையில் கிடைக்கும் சொர்க்கத்தின் பெயர்கள். இப்பெயர்களில் எதுவும் ஆதம் நபி வாழ்ந்த பூலோக ஜன்னத்திற்குக் கூறப்படவில்லை. எனவே ஆதம் நபி வாழ்ந்தது மறுமையில் கிடைக்கும் சொர்க்கம் இல்லை என்று தெளிவாகிறது.

நான்காவதாக, நான் மறுமை நாளில் சென்று அதைத் திறக்கும்படிக் கோருவேன். அப்போது அதன் காவலர், நீங்கள் யார் என்று கேட்டார். நான் முஹம்மது என்றேன்.அதற்கு அவர் உங்களுக்காகவே நான்  கட்டளையிடப்பட்டுள்ளேன். உங்களுக்கு முன் வேறு யாருக்காகவும் (சொர்க்க வாசலை) நான் திறக்கக் கூடாது (எனப் பணிக்கப்பட்டுள்ளேன்) என்று கூறுவார். (அறிவிப்பாளர் ஹஸ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் நூல்: முஸ்லிம் 333)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் வேறு யாருக்காகவும் சொர்க்க வாசல் திறக்கப்படவில்லை என்றால், ஆதம், ஹவ்வா, இப்லீஸ், சைத்தான் போன்றவர்கள் எப்படி மறுமை சொர்க்கத்தில் நுழைந்திருக்க முடியும்? எனவே அவர்கள் வாழ்ந்தது இம்மையில் உள்ள ஜன்னத் என்று விளங்குகிறது.
ஐந்தாவது, சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் ரய்யான் என்றழைக்கப்படும் வாசலொன்று உள்ளது. அதில் நோன்பாளிகளைத் தவிர வேறெவரும் நுழைய மாட்டார்கள். (அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸஅத் நூல் புகாரி 3257: முஸ்லிம் 212)

இதில் நோன்பு போன்ற நற்செயல்களை அல்லாஹ்வுக்காக செய்தவர்கள் அந்த வாசல் வழியே நுழைவார்கள் என்றால், ஆதமும் ஹவ்வாவும் படைக்கப்பட்டதே அங்கு என்பது எப்படிப் பொருந்தும். அதாவது நற்செயலின் கூலி தான் மறுமை சொர்க்கம் என்றால் ஆதமும் ஹவ்வாவும் அங்கு எப்படிப் படைக்கபப்பட்டிருப்பார்கள்? எந்த வாசல் வழியாக நுழைந்தார்கள்? அது சரி, இப்லீஸும் சைத்தானும் எந்த நற்செயல் செய்ததற்காக எந்த வாசல் வழியாக சொர்க்கத்தில் நுழைந்தார்கள்?

ஆறாவது, சொர்க்கவாசிகள் அல்லாஹ் அழகிய மாளிகைகளை வழங்குகிறான் என்று திருக்குர்ஆனும் நபிமொழியும் கூறுகின்றன.

குர்ஆனில் 66:12 வசனத்தில், பிர்அவ்னின் மனைவி, என் இறைவா! உன்னிடத்திலே ஜன்னத்தில் நீ எனக்காக ஒரு வீட்டைக் கட்டுவாயாக! என்று கேட்கிறார். மறுமை சொர்க்கத்தில் மாளிகைகள் வழங்கப்படும் என்று திருக்குர்ஆனில் 39:21; 34:38; 25:76 ஆகிய வசனங்களில் காண்கிறோம்.

இப்லீஸும் சைத்தானும் இருக்கட்டும்; ஆதம் நபியும் ஹவ்வாவும் எந்த மாளிகையில் இருந்தார்கள்? திருக்குரானில் அவர்களின் மாளிகையைப் பற்றி பேச்சே இல்லையே! ஏன்?

ஏழாவது, மறுமை சொர்க்கத்தில் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட ஹூர் எனும் கன்னியவராவர் (55:72) ஆதம் நபி வாழ்ந்த ஜன்னத்தில் ஹூர் எனும் கன்னியரின் காட்சி பற்றி காட்டப்படவில்லையே ஏன்?

எட்டாவதாக, மறுமையில் கிடைக்கும் சொர்க்கத்தில், அவர்களுக்கு தங்கக் காப்புகள் அணிவிக்கப்படும். ஸுந்தூஸ், இஸ்தப்ரக் என்னும் பச்சைப் பட்டாடைகள் அவர்கள் அணிவார்கள். (திருக்குர்ஆன் 18:30) என்று கூறப்பட்டுள்ளது. ஆனால்,

ஆதம் நபியின் சொர்க்கத்தில், அவ்விருவரும் அம்மரத்தின் கனிகளை சுவைத்தபோது அவர்களின் வெட்கத்தலங்கள் அவர்களுக்குத் தெரிந்தன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையினால் தம்மை மூடிக் கொள்ள முயன்றனர். (திருக்குர்ஆன் 7:22) என்று வருகிறது.

அவர்கள் அந்த பச்சைப் பட்டாடைகளை அணியவில்லை என்பதாலும், மரத்தின் இலைகளே ஆடையாக கிடைத்தன என்பதாலும் இரண்டும் வெவ்வேறு இடங்கள் என்பது தெரியவில்லையா?

ஒன்பதாவது, திருக்குர்ஆனில் ஆதம் நபியைப் பற்றிக் கூறும் இடங்களில் எல்லாம் இப்லீஸும், சைத்தானும் கூறப்படுகிறான்.

நம் கேள்வியாவது, அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு தொழுகையை நிலை நிறுத்தி ரமலானில் நோன்பு நோற்ற மனிதரை சொர்க்கத்தில் புகச்செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகி விட்டது. அவர் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தாலும் சரி, அவர் பிறந்த பூமியில் உட்கார்ந்து கொண்டாலும் சரி என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி). புகாரி 2790: முஸ்லிம் 3829)

இப்லீஸும், சைத்தானும் மேலே சொல்லப்பட்ட நற்செயல்களைச் செய்ததினால்தான் தான் அவர்களை அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்தியுள்ளானா?

பத்தாவது, (சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்த பின்னர்) பொது அறிவிப்பாளர் ஒருவர், (இனி) நீங்கள் ஆரோக்கியத்துடனேயே இருப்பீர்கள். ஒருபோதும் நோய் ஏற்படாது. நீங்கள் என்றென்றும் உயிருடன்தான் இருப்பீர்கள். ஒருபோதும் உங்களுக்கு மரணம் ஏற்படாது, இளமையோடுதான் இருப்பீர்கள். ஒருபோதும் முதுமையடைய மாட்டீர்கள். நீங்கள் இன்பத்தோடுதான் இருப்பீர்கள். ஒருபோதும் துண்பம் அடைய மாட்டீர்கள் என்று அறிவிப்புச் செய்வார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 5457)

ஆனால் ஆதம் நபி வாழ்ந்த ஜன்னத்தில் சைத்தான், இந்த மரத்தினை நெருங்கினால் நீங்கள் வானவர் ஆகி விடுவீர்கள்: நிரந்தர வாழ்வைப் பெறுவீர்கள் என்று ஆதம் நபியிடம் கூறுகிறான். (7:21) இதிலிருந்து இரண்டும் வெவ்வேறு இடங்கள் என்று தெரியவில்லையா? அதாவது, இரண்டும் இரண்டு விதமாக உள்ளன.

பதினொன்றாவது, இனிமையான சொர்க்கச் சோலைகளில் அவர்களுக்கு அறியப்பட்ட உணவும், கனிகளும் உண்டு. அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். (அல்குர்ஆன் 37:42-44)

சொர்க்கத்தில் அவர்கள் எச்சில் துப்பவும் மாட்டார்கள். மலஜலம் கழிக்கவும் மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி 3327: முஸ்லிம் 5450)

ஆனால் ஆதம் நபி வாழ்ந்த ஜன்னத்தில் அவர்கள் அறியாத ஒரு மரம் காணப்படுகிறது. அதனை நெருங்க வேண்டாம் என்ற தடையும் உள்ளது. அதனை உண்டதனால் அவர்களின் மனம் வெளியாகி விட்டது எனத் திருக்குர்ஆன் கூறுகிறது.

இவ்வாறாக இரு வேறு முரண்பட்ட நிலைகளை சொல்லப்படுவதால் ஆதம் நபி மறுமைக்குப் பின் உள்ள சொர்க்கத்தில் வாழவில்லை என்பது உறுதியாகின்றது.

திருக்குர்ஆன் 2:31 இல், அல்லாஹ் தன் கலீபாவை பூமியில் ஏற்படுத்தப் போகிறேன் என்றுதான் கூறியுள்ளான். பூமியில் வாழ்ந்த ஆதம் நபியை சொர்க்கத்திற்கு உயர்த்தியதாகத் திருக்குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ கூறப்படவில்லை. எனவே அவர் வாழ்ந்தது பூமியிலுள்ள ஜன்னத்தே ஆகும்.

இதுபற்றிய மேலும் பல கருத்துக்களை ஹஸ்ரத் மஸீஹ் ஈசப்னு மர்யம்(அலை) அவர்களின் மரணம் எனும் நூலில் பக்கம் 46 இல் ஆதம் (அலை) அவர்கள் வாழ்ந்தது பூவுலக சொர்க்கம் எனும் தலைப்பில் காண்க)

உண்மை இவ்வாறிருக்க, ஆதம் நபி வாழ்ந்தது மறுமைக்குப் பின்னர் கிடைக்கும் சொர்க்கமே என்று பலர் கூறுகின்றனர். இரண்டில் எதை ஏற்றாலும் இஸ்லாத்தின் அடிப்படைக்கோ இந்நிகழ்ச்சியில் இருந்து பெற வேண்டிய பாடத்துக்கோ பாதிப்பும் ஏற்படாது என்று பி.ஜே எழுதுகிறார்.


நம் கேள்வியாவது, திருக்குரானும் நபிமொழியும் கூருவனவற்றுள் ஏதாவது ஒன்றுதான் உண்மையாக இருக்க வேண்டும். மற்றொன்று தவறானதுதான். திருக்குரானும் நபிமொழியும் எதனை உண்மை எனக் கூறுகிறதோ அதனை ஏற்பதே இஸ்லாம் ஆகும். 

Read more »

Jan 28, 2014

உலகளாவிய கிலாபத் 72 பிரிவுகளுக்கும் ஏன் இல்லை?


அபூ அப்தில்லாஹ் 4 வது பக்கத்தில்,

காதியானிகளின் தலைமைப் பீடமும் அது வாரி வழங்கும் செல்வங்களையும் பெற்று சுகபோகம் அனுபவிப்பவர்களும், குர்ஆன் ஹதீஸ் ஆகியவற்றின் அடிப்படையில் எழும் நம் விளக்கங்களை ஏற்று, உணர்ந்து, வருந்தி, திருந்தி, சத்திய வழிக்கு வர வேண்டும் என்பதே நமது நோக்கமும் பேரவாவும், எனினும் வருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை.

என்று எழுதியுள்ளார்.

நம் பதில்:

திருக்குர்ஆன் 24:56 வது வசனம், அல்லாஹ் உங்களுள் நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவர்களை அவர்களின் முன்னோர்களை கலீபாவாக (தலைவராக) ஆக்கியது போன்று இப்பூமியில் கலீபாவாக ஆக்குவதாகவும், அவர்களின் வாக்குறுதி அளித்துள்ளான்.

முஸ்னத் அஹ்மத் பின் ஹம்பல் தொகுதி 4 பக்கம் 273 இல் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் நாடும் வரை (என்) நுபுவ்வத் நிலைத்திருக்கும். பிறகு அல்லாஹ் அதனை எடுத்துக் கொள்வான். பிறகு, நுபுவ்வத் வழியில் கிலாபத் ஏற்படும். அல்லாஹ் நாடும் வரை கிலாபத் நீடிக்கும். பிறகு அல்லாஹ் அதனையும் எடுத்துக் கொள்வான். பிறகு கொண்டுங்கோல் ஆட்சி ஏற்படும். அல்லாஹ் நாடும் வரை அது இருக்கும். பிறகு அல்லாஹ் அதனையும் எடுத்துக் கொள்வான். பின்னர் சர்வாதிகார ஆட்சி ஏற்படும். அல்லாஹ் நாடும் வரை அது இருக்கும். பின்னர் அல்லாஹ் அதையும் எடுத்துக் கொள்வான். பிறகு நுபுவ்வத் வழியில் கிலாபத் ஏற்படும். பிறகு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் அமைதியாகிவிட்டார்கள்.

திருக்குரானில் அல்லாஹ் வழங்கிய வாக்குறுதியின்படியும், நபி (ஸல்) அவர்கள் கூறிய முன்னறிவிப்பின்படியும் இன்றைய முஸ்லிம் உலகில், உலகம் தழுவிய அளவில் நுபுவ்வத் வழியில் அமைந்த கிலாபத் – ஒரு நபி வந்து அவருக்குப் பின்னர் கலீபாக்கள் வருவது அஹமதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தில் மட்டுமே உள்ளது.

ஏனைய 72 பிரிவுகளிலும் உலக அளவிலோ, இந்திய அளவிலோ இயலாவிட்டாலும் தமிழகம் அளவில் ஒரு தலைமையின் கீழ் ஏனைய முஸ்லிம் பிரிவுகள் ஒன்றுபட் முடியுமா? முடிந்தால் செய்து காட்டுங்கள். கனவில் கூட அப்படி ஒரு காட்சியைக் காண முடியாது.

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹமது (அலை) அவர்களை பொய் நபி எனக் கூறும் பெயர் தாங்கி முஸ்லிம் அறிஞர்களிடம் ஒரு வேண்டுகோள்,

நபி மொழி புகாரி ஹதீஸ் எண்  7084 &3606

நீ முஸ்லிம்களின் ஜமாத்தையும் அவர்களது தலைவரையும் இறுகப் பற்றிக் கொள் என்று ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அதற்கு நான் (நபித்தோழர்) ஒரு ஜமாஅத்தோ ஒரு தலைவரோ இல்லையென்றால் என்ன செய்வது? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், அந்தப் பிரிவுகள் அனைத்தையும் விட்டு (விலகி) ஒதுங்கி விடு. ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து அதே நிலையில் மரணம் உன்னை தழுவிக் கொண்டாலும் சரி. (எந்தப் பிரிவினரோடும் சேர்ந்து விடாதே) என்று பதிலளித்தார்.

அபூ அப்தில்லாஹ் என்ன செய்யப் போகிறார்?

திருக்குரானிலிருந்து ஒரு பொய் நபியின் இலக்கணத்தை எடுத்துக் காட்டி, அதற்கு ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹமது (அலை) அவர்கள் பொருந்துவதாகவோ, அல்லது ஒரு உண்மை நபியின் இலக்கணத்தை எடுத்துக் காட்டி, அதற்கு ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் பொருந்தவில்லை என்றோ நிரூபித்துக் காட்டுங்கள்.

இவ்வாறு செய்யாதவரை அன்னாரை பொய் நபி எனக் கூறும் உரிமையோ தகுதியோ எவருக்கும் இல்லை எனவே, அபூ அப்தில்லாஹ் திருக்குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நாம் தந்துள்ள உண்மையான விளக்கத்தை ஏற்று, உண்மை இஸ்லாமாகிய அஹ்மதிய்யா ஜமாத்திற்கு வருவாரா? வருவார் என நம்புகிறோம். (இன் ஷா அல்லாஹ்) 

Read more »

Jan 27, 2014

அகக்கண்ணும் புறக்கண்ணும்



பக்கம் 58 இல் அபூ அப்தில்லாஹ், மிஹ்ராஜில் நபி (ஸல்) அவர்கள், ஈஸா (அலை) அவர்களைக் கண்களால் கண்டது மிர்ஸா குலாமால் ஊர்ஜிதம் செய்யப்படுகிறது. கண்களால் பார்ப்பதென்றால் தூல உடலுடன் தான் நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜுக்குச் சென்றிருக்கவேண்டும். கனவுக் காட்சியைக் கண்களால் கண்டதாக எந்த அறிவீனனும் சொல்லமாட்டான் என்று எழுதியுள்ளார். 

நம் பதில்: 

1) யூஸுப் நபி அவர்கள், பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் நான் கண்டேன். அவை எனக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். என்றும் சிறைக் கைதிகளும் மதுரசம் பிழியக் கண்டேன் என்றும், தலையில் ரொட்டியைச் சுமந்திருக்க அதைப் பறவை சாப்பிடக் கண்டேன் என்றும், எகிப்திய அரசனும் கொளுத்த ஏழு மாடுகளை மெலிந்த ஏழு மாடுகள் தின்பதையும், பசுமையான ஏழு கதிர்களையும் காய்ந்த ஏழு கதிர்களையும் கண்டதாகவும் (12 வது அதிகாரம்) காண்கிறோம், அவர்கள் எக்கண்களால் கண்டனர்? அக்கண்கள் கண்ட காட்சிக்கு தூல உடல் இருந்ததா? 

2) திருக்குர்ஆன் 37:103 இல் என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பதுபோல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய்? என்பதைச் சிந்தித்து கூறு என்று (இப்ராஹீம் நபி இஸ்மாயீல் நபியிடம்) கேட்டார். 
என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிட்டதைச் செய்யுங்கள்.... என்று பதிலளித்தார். 

இறைவன் தன் கட்டளையைக் கனவின் மூலம் ஒரு நபிக்குக் காட்ட அதனை அவர் காண்கிறார். அதன்படி செயல்படுகிறார் என்றால் எந்தக் கண்களால் அவர்கள் கண்டார்கள்? 

அப்படிஎன்றால் அபூ அப்தில்லாஹ்வின் கூற்றின்படி, ஹஸ்ரத் இப்ராஹீம் நபி (அலை), ஹஸ்ரத் யூசுப் நபி (அலை), ஹஸ்ரத் இஸ்மாயீல் நபி (அலை) போன்றோரை அறிவீனன் என்று அபூஅப்தில்லாஹ் கருதுகிறாரா? கண்களால் கண்டேன் என்று சொன்னால் அதற்கு புறக்கண் தான் என்று நம்புவதும் பேசுவதும் அகக்கண் குருடர்களின் அறிவீனமான பேச்சாகும். 
Read more »

ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களை இறைவன் உடலோடு உயர்த்தவில்லை என்று கூறுகிறான்.


அபூ அப்தில்லாஹ் தன் நூலில் திருக்குர்ஆனில் 4:159 வசனத்தைக் குறிப்பிட்டு பல் ரபஅ ஹுல்லாஹு இலைஹி என்பதற்கு அபூ அப்தில்லாஹ் கூறும் விளக்கத்தைப் பாருங்கள்.

1. ஈஸா நபி (அலை) அவர்களின் உடலைத்தான் உயர்த்தியுள்ளான்.

2. அதனால் தான் அல்லாஹ் வல்லமை மிக்கவனும் ஞானம் மிக்கவனுமாக இருக்கின்றான். (4:158) என்று திருக்குர்ஆனில் கூறுகிறான்.

3. உடல் உயர்த்தப்படவில்லை, பதவி உயர்வையே குறிக்கும் என்பது அல்லாஹ்வின் வல்லமையைக் குறைத்து மதிப்பதாகும்.

4. வானத்தளவில் மனிதர்கள் உயர்த்தப்படுவதை அவர்களின் பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளவில்லையா? ஆகாய விமானத்தில், விண்கலங்களில், ராக்கெட்டில் மனிதன் விண்ணில் பறப்பதை தெரிந்துள்ள காதியானிகள், மனிதன் பூத உடலுடன் அல்லாஹ் அளவில் உயர்த்தப்படுவது பகுத்தறிவுக்கு எட்டாது என்று சொல்வது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

5. அல்லாஹ் கையாளாகாதவனாக இந்த காதியானிகள் கருதுகிறார்கள் போலும், குறிப்பாக மனிதனால் சாதித்துக் காட்ட முடிந்ததை அல்லாஹ்வினால் சாதிக்க முடியாது என்று காதியானிகள் விதண்டாவாதம் செய்வது விந்தையாக உள்ளது. (பக்கம் 44)

என்றெல்லாம் எழுதிக் கொண்டு போகிறார்.

நம் பதில்:

மிர்ஸா தாஹிர் அஹ்மது (ரஹி) அவர்கள் எழுதிய ஈஸா நபி (அலை) அவர்களின் மரணம் என்னும் நூலில் ரபஅ என்பதன் பொருள் என்ற தலைப்பில் கூறிய கருத்துக்களுக்கும், எழுப்பிய கேள்விகளுக்கும், திருக்குர்ஆன், ஹதீஸில் இருந்து காட்டிய சான்றுகளுக்கும் அபூ அப்தில்லாஹ் தனது நூலில் பதில் தரவேயில்லை. மாறாக ரபஅ என்ற அரபிச் சொல் திருக்குர்ஆனிலும் ஹதீஸிலும் வேறு பல இடங்களிலும் பதவி உயர்வு குறித்துப் பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது. என்பதை நான் மறுக்கவில்லை என்று மட்டும் கூறி நழுவி இருக்கிறார். திருக்குர்ஆனில் ரபஅ எனும் சொல் மனிதர்களுடன் தொடர்புடையதாக ஏறக்குறைய 9 இடங்களில் (40:16, 2:254, 43:33, 6:84, 56:4, 58:12, 19:58, 12:101) வருகிறது. அந்த எல்லா இடங்களிலும் பதவி உயர்வு எனும் பொருளைத்தான் கொண்டுள்ளது. உடல் உயர்வு பற்றி எங்கும் வரவில்லை.

மிர்ஸா தாஹிர் (ரஹ்) அவர்கள் தமது நூலில் திருக்குர்ஆனின் ஏனைய இடங்களிலும் ஹதீஸ்களிலும் ரபஅ என்ற சொல் ஆன்மீக உயர்வு என்று பொருள்படும் வண்ணமே கையாளப்பட்டு இருக்கிறது. ஆலிம்கள் கூறுவது போன்று வானத்திற்கு உயர்த்துதல் என்ற அர்த்தத்தில் இச்சொல் எங்குமே பயன்படுத்தப்படவில்லை. (ஆதாரம்: ஈஸா நபி (அலை) அவர்களின் மரணம் பக்கம் 34) என்று குறிப்பிட்டுள்ளார்கள். எனவே ரபஆ என்ற சொல்லுக்கு உடலோடு உயர்த்துதல் என்ற பொருள் தரக்கூடிய ஒரேயொரு சான்றையாவது அபூ அப்தில்லாஹ் திருக்குர்ஆன், ஹதீஸ், அரபி மொழி இலக்கியச் சான்றுகளிலிருந்து காட்டாதவரை (தனது நூலில் அபூ அப்தில்லாஹ் இதற்க்கு பதில் தரவில்லை) ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் உடலோடு உயர்த்தப்பட்டார் என்று கூறும் உரிமையோ, தகுதியோ, அவருக்கு இல்லை.

திருக்குர்ஆனில் ஹஸ்ரத் இத்ரீஸ் (அலை) அவர்களைக் குறிப்பிட்டு அவரை மிக மேலான இடத்திற்கு உயர்த்தினோம் (19:58) என்று அல்லாஹ் கூறியுள்ளான். இவ்வசனத்திலும் ஈஸா (அலை) அவர்களுக்குப் பயன்படுத்தப்பட்ட அதே ரபஅ என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அபூ அப்தில்லாஹ் இத்ரீஸ் (அலை) அவர்களுடன் உடலுடன் உயர்த்தப்பட்டுள்ளார்கள் என்று ஒப்புக் கொள்வாரா?

ஹஸ்ரத் இத்ரீஸ் (அலை) அவர்கள் உடலோடு உயர்த்தப்படவில்லை என்றால், அபூ அப்தில்லாஹ் கருத்துப்படி அல்லாஹ்வின் வல்லமையை குறைத்துக் கணிப்பது ஆகாதா? இருவருக்கும் ஒரே சொல் பயன்படுத்தப்பட்டிருக்க ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் மட்டும் உடலோடு உயர்த்தப்பட்டதாக பொருள் கூற முடியுமா? (4:158) வது வசனத்தில் ரபஅ என்பதற்கு ஈஸாவை உடலோடு உயர்த்தி உள்ளான். எனவேதான் அல்லாஹ் வல்லமைமிக்கவனும் ஞானமிக்கவனுமாக இருக்கிறான் என்று அபூ அப்தில்லாஹ் எழுதியுள்ளார்.

திருக்குர்ஆன் வல்லமைமிக்கவன் என்று மட்டும் கூறவில்லை. ஞானமிக்கவன் என்றும் சேர்த்துக் கூறியுள்ளது. இவ்வாறு எங்கெல்லாம் ஆழ்ந்து சிந்திக்கின்ற போது அபூ அப்தில்லாஹ்வின் கருத்து பொருத்தமற்றதாகவே தெரியவரும். திருக்குர்ஆன் 39:43 இல் அல்லாஹ் உயிர்களை மரணத்தின் போதும் தூக்கத்தின் போதும் கைப்பற்றுகிறான் என்று கூறுகிறான். இதில் உயிர்கள்தான் கைப்பற்றப்படுவதாக இறைவன் கூறுகிறான். உடல்கள் அன்று. எனவே எது கைப்பற்றப்படுகிறதோ அதுதான் உயர்த்தப்படும்.

மேலும் ரபஅ என்ற சொல் திருக்குர்ஆனிலும் ஹதீஸிலும் அல்லாஹ் ஒரு மனிதருடன் தொடர்புப்படுத்திக் கூறும் இடங்களில் எல்லாம் ஆன்மீக உயர்வு பதவி உயர்வு என்னும் பொருளில் வந்துள்ளதே தவிர உடலை உயர்த்துதல் என்று எங்கும் வரவில்லை. அப்படி வந்திருந்தால் ஒரே ஒரு சான்றையாவது அபூ அப்தில்லாஹ் காட்டட்டும். எனவே திருக்குர்ஆனுக்கும் ஹதீதுக்கும் மாற்றமாக உடலோடு உயர்த்துதல் என்ற பொருள் கொடுப்பது அல்லாஹ்வுக்கும் ரஸுலுக்கும் செய்கின்ற அவமதிப்பாகும்.

ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் உடலோடு உயர்த்தப்பட்டார் எனபதற்கு அபூ அப்தில்லாஹ் கூறும் மற்றொரு காரணம் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களை சிலுவையில் அறையவுமில்லை; கொல்லவுமில்லை என்றால் அவர்கள் என்ன ஆனார்கள் என்ற வினா எழும்? அப்படியாயின், ரபஅஹுல்லாஹ் இலைஹி(4:158). ஆனால், அல்லாஹ் அவரை தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்று குறிப்பிடுவது ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களின் உடலைப் பற்றியதாகத்தான் அல்லாமல் நிச்சயமாக அவரது ஆன்மாவைப் பற்றியதாகவோ ஆன்மீகப் பதவியைப் பற்றியதாகவோ இருக்க முடியாது என்று அபூ அப்தில்லாஹ் எழுதியுள்ளார். (பக்கம் 15,16)

ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களைச் சிலுவையில் அறையவும் இல்லை; கொல்லவுமில்லை என்று அல்லாஹ் கூறுவதனால் அவர் இறக்கவே இல்லை என்று அபூ அப்தில்லாஹ் கருதுகிறார் போலும். அதனால்தான் இப்படிப்பட்ட ஒரு முடிவுக்கு வந்து விட்டார் என்று தெரிகிறது. உலகில் எல்லா மனிதர்களுக்கும் இறப்பு என்பது சிலுவையில் அறையப்படுவதன் மூலமோ அல்லது கொல்லப்படுவதன் மூலமோ மட்டும் ஏற்படுவது என்றால் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் இந்த இரண்டு  வழிகளில் இறக்காததினால், அவர் மரணமடையவில்லை என்று கருதலாம். அப்படியில்லாமல் இறப்பது என்பது இயற்கையாகவும் வேறு வழிகளிலும் வருகிறது. எனவே ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் கொல்லப்பட்டோ சிலுவையில் அறையப்பட்டோ இறக்கவில்லையே தவிர பிற வழிகளில் அதாவது இயற்கையாகவோ அல்லது வேறு வழிகளிலோ மரணித்திருக்கலாம் அல்லாவா?

அப்படியென்றால் அல்லாஹ் ஏன் அவ்வாறு சிலுவையில் அறையப்பட்டோ கொல்லப்பட்டோ இறக்கவில்லை (வமா கத்தலூஹு வமா சலபூஹு) என்று கூறினான். திருக்குர்ஆனில் வசனங்களை விளங்குவதற்கு சில அடிப்படை கருத்துக்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது திருக்குர்ஆன் தன் காலத்திற்கு முன்னர் உலகில் நிலவி வந்த தவறான கருத்துகளில் அல்லாஹ், நபிமார்கள் போன்றவர்களோடு சம்பந்தப்பட்ட அவசியமான கருத்துகளை மறுத்துரைக்கிறது. எடுத்துக்காட்டாக திருக்குர்ஆன் 5:73-76இல் நிச்சயமாக மர்யமின் மகன் மஸீஹ் அல்லாஹ்தான் என்று கூறுபவர்கள் திட்டமாக நிராகரிப்பவர்களாவர்..... அல்லாஹ் மூவருள்  ஒருவன் என்று கூறியவர்கள் நிராகரித்துவிட்டனர்.....

மர்யமின் மகன் மஸீஹ் ஒரு தூதரேயன்றி வேறில்லை. அவருடைய தாயார் நேர்மையான பெண்ணாக இருந்தார்.

இந்த வசனங்கள் இறைவனைப் பற்றியும் ஒரு நபியைப் பற்றியும் நபியின் தாயாரைப் பற்றியும் யூத, கிறிஸ்தவ மக்கள் கொண்டிருந்த தவறான கருத்துகளை எடுத்துக்காட்டி அதனை மறுக்கக்கூடிய வசனங்களாகும். அதாவது ஹஸ்ரத் மர்யம் (அலை) அவர்கள் ஆண் தொடர்பின்றி ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களைப் பெற்றதால் மக்கள் அவர்களை (நவூதுபில்லாஹ்) விபச்சாரி என்றும், ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களை (நவூத்பில்லாஹ்) விபச்சார புத்திரன் என்றும் கடுமையான அவதூறு கூறினார். எனவே அல்லாஹ் மக்களின் அவதூறை மறுக்கும் விதமாகத்தான் ஹஸ்ரத் ஈஸா(அலை) மற்றும் அவரது தாயாரைப் பற்றி மேற்சொன்ன வசனத்தில் குறிப்பிடுகிறான்.

அதேபோன்று ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களை சிலுவையில் அறைந்ததாகவும் மற்றும் பிற வகையில் கொன்று விட்டதாகவும் யூதர்கள் நம்பியிருந்ததால் அவர்களுடைய அந்த தவறான நம்பிக்கையை மறுக்கும் விதமாக ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் சிலுவையில் அறையப்பட்டதனாலோ பிற வகையிலோ கொல்லப்படவில்லை என்று அல்லாஹ் வசனம் 4:158 இல் குறிப்பிடுகின்றான். சிலுவையில் அறைந்து கொல்லுதலை தவ்ராத் வேதம் சபிக்கப்பட்டமரணமாகக் கூறுவதனால் ஈஸா நபி (அலை) அவர்கள் அப்படிப்பட்ட சபிக்கப்பட்ட மரணத்திற்கு ஆளாகவில்லை என்றும், அன்னாரது ருஹ் இறைவனளவில் உயர்த்தப்படும் அளவுக்கு புனிதமானது என்றும் காட்டுவதற்குத்தான். ரபஅ என்று அல்லாஹ் கூறுகிறான்.

அவ்வாறு அவர் கொல்லப்படவில்லை என்று கூறுவதனால் அவர் இறக்கவே இல்லை. உயிரோடு இருக்கிறார் என்று கருதுவது தவறாகும். எப்படியென்றால் ஹஸ்ரத் மர்யம் (அலை) அவர்கள் ஒரு நேர்மையான பெண்ணாக இருந்தார் என்று திருக்குர்ஆன் கூறியிருப்பதனால், மற்ற நபிமார்களின் தாய்மார்கள் அவ்வாறு நேர்மையான பெண்களாக இருக்கவில்லை என்று கருதலாமா? இந்த இடத்தில் நான் முன்பு கூறியபடி யூதர்கள் ஹஸ்ரத் மர்யம் (அலை) அவர்களை விபச்சாரி (நவூதுபில்லாஹ்) என்று கூறியதனால் அதை மறுக்கும் விதத்தில் திருக்குர்ஆன் அவரை ஒரு நேர்மையான பெண் என்று கூறுகிறது. இவ்விடத்தில் யூதர்களின் குற்றச்சாட்டை மறுக்கும் விதத்தில் அவருடைய நேர்மையை எடுத்துக் காட்டப்படுகிறதே தவிர அதனால் மற்ற நபிமார்களின் தாய்மார்கள் நேர்மையான பெண்கள் இல்லை என்று குறைத்து மதிப்பிடுவதாக பொருளாகாது. அதுபோன்று ஒரு அவதூறு பிற நபிமார்களின் தாய்மார்கள் மீது சுமத்தப்படவில்லை என்பதாலும், ஹஸ்ரத் மர்யம் (அலை) அவர்கள் மீது சுமத்தப்பட்டிருப்பதாலும் அவ்வாறு கூறப்பட்டிருக்கிறது என்ற உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறே யூதர்கள் ஈஸா (அலை) அவர்களுடைய மரணம் பற்றி தவறாகக் கூறிய கருத்துகளை மறுக்கும் விதத்தில் தான் சிலுவையில் அறையப்பட்டோ கொல்லப்பட்டோ அவர் இறக்கவில்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறதே தவிர அவர் இறக்கவில்லை என்ற பொருளில் அல்ல.

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் உட்பட எந்த நபியும் சிலுவையில் அறையப்படவில்லை; கொல்லப்படவில்லை என்பதனால் அவர்கள் இறக்கவில்லை என்றோ உடலோடு உயர்த்தப்பட்டார்கள் என்றோ சொல்ல முடியாது. ஏன் ஹஸ்ரத் இத்ரீஸ் (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்படவில்லை; கொல்லப்படவில்லை. அப்படியிருக்க அவரை மிக மேலான இடத்திற்கு உயர்த்தினோம் என்று இறைவன் கூறியதனால் அவர் உடலோடு உயர்த்தப்பட்டு உயிரோடு இருக்கிறார் என்று அபூ அப்தில்லாஹ் ஒப்புக் கொள்வாரா?

எல்லாவற்றிற்கும் மேலாக ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடம் மக்கத்துக் காபிர்கள் சில செயல்களைச் செய்து காட்டுமாறு கேட்டார்கள். அவற்றுள் ஒன்று நீர் இந்த உடலோடு வானத்திற்கு ஏறிச் செல்ல வேண்டும். திரும்பி வரும்போது நாங்கள் வாசிக்கத்தக்க ஒரு நூலைக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டதற்கு அல்லாஹ் தன் தூதரிடம் பதில் கூறுமாறு கூறிய வசனங்கள் சிந்தனைக்குரியவையாகும்

என் இறைவன் தூயவன்; நான் ஒரு மனித ரேஸுலேயன்றி வேறில்லை.(17:94)

திருக்குர்ஆன் இந்த வசனத்திலிருந்து உடலோடு ஒரு மனித ரெஸுல் வானத்திற்கு ஏறிச் செல்வது அல்லாஹ்வின் தூய்மைக்கு மாறானதும், ஒரு மனித ரெஸுல் அவ்வாறு வானத்திற்கு ஏறிச் செல்லமுடியாது என்பதும் தெளிவாக விளங்குகிறது. இந்த வசனத்திற்கு மாற்றமாக ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் உடலோடு உயர்த்தப்பட்டார் என்று நம்புவது அல்லாஹ்வின் பரிசுத்த தன்மைக்கு களங்கம் கற்பிப்பதாகும். ஏனெனில் ஹஸ்ரத் ஈஸா நபி (அலை) அவர்கள் வானத்திற்கு உடலுடன் சென்று விட்டார் என நம்பினால் இந்த வசனத்தின்படி அவர் மனிதனோ, ரஸுலோ இல்லை. மாறாக கிருஸ்தவர்கள் நம்புவது போல் அவர் கடவுளோ, கடவுளின் குமாரரோ ஆவார் என நம்புவதாகிவிடும். மாறாக, வசனம் 17:94 இல் தர்கா என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. உடலோடு வானத்திற்கு ஏறிச் செல்வதற்கு பயன்படுத்தப்படும் தர்கா என்ற சொல் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களைக் குறித்து திருக்குரானில் பயன்படுத்தப்படவில்லை. எனவே ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களுடன் பயன்படுத்தப்பட்ட ரபஅ என்ற சொல் உடலோடு உயர்த்தப்படுதல் எனும் பொருளை தராது. எனவே அவர் உடலோடு உயர்த்தப்படவில்லை என்று விளங்கிக் கொள்ளலாம்.

அபூ அப்தில்லாஹ் ஈஸா நபி (அலை) அவர்கள் உடலோடு உயர்த்தப்படவில்லை என்று நாம் கூறுவது அல்லாஹ்வின் வல்லமையை மறுப்பது எனவும் அல்லாஹ்வை கையாளாகாதவன் என்று கருதுவதாகவும் தம் நூலில் எழுதியுள்ளார்.

அல்லாஹ், எல்லாம் வல்லவன் என்ற பண்பின் மீதும் அவனுடைய பிற பண்புகள் எல்லாவற்றின் மீதும், அஹ்மதி முஸ்லிம்களாகிய நாங்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டுள்ளோம் என்பதை அல்லாஹ்வின் படைப்பினங்கள் எத்தனை உண்டோ அத்தனை முறை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகிறேன்.

அல்லாஹ்வுக்கு எல்லாம் வல்லவன் என்ற ஒரு பண்பு இருப்பது போல் அவர் பரிசுத்தமானவன் என்ற பண்பும் உள்ளது. எனவே ஒன்றை தவறாகப் புரிந்து கொண்டு இன்னொன்றை மறுப்பது ஒரு வகை குப்ர் ஆகும். அதாவது ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உடலோடு உயர்த்துவதற்கு சர்வ வல்லமையுள்ள இறைவனால் முடியுமென்றாலும் அவ்வாறு செய்வது அல்லாஹ்வுடைய பரிசுத்தத் தன்மைக்கு மாற்றம் என்று (17:94) இறைவன் கூறியுள்ளான்.

எப்படியென்றால் ஹஸ்ரத் யூசுப் (அலை) அவர்களை அவருடைய எஜமானி என்னருகே வா என்று தவறான செயலுக்கு அழைத்த போது அவர் பயந்து ஓடுகிறார். அந்தப் பெண் அவரை விரட்டுகிறார் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இச்சம்பவத்தை வைத்துக் கொண்டு யூசுப் (அலை) அவர்கள் ஆண்மை இல்லாதவர் என்று கருத முடியுமா? அந்த இடத்தில் இறை அச்சமும் பாவத்தைப் பற்றிய அருவருப்பும் அவருடைய நேர்மையும் அச்செயலில் ஈடுபடாதவாறு அவரை தடுத்தது. ஒரு நபி அத்தகைய செயலைச் செய்யமாட்டார். எனவே ஒருவரால் செய்ய முடியும் என்பது வேறு. செய்யமாட்டார் என்பது வேறு என்பதை அபூ அப்தில்லாஹ் போன்றோர் புரிந்து கொள்ளவேண்டும். ஒருவரை உடலோடு உயர்த்த அல்லாஹ்வால் முடியும். ஆனால் அவனுடைய பரிசுத்தத் தன்மைக்கு மாற்றம், களங்கம்  என்பதால் இறைவன் அவ்வாறு செய்யமாட்டான்; செய்யவில்லை.

இவ்வாறு அஹ்மதி முஸ்லிம்களாகிய நாங்கள் நம்புவதால் அல்லாஹ்வின் வல்லமையை நாங்கள் மறுத்ததாகி விடும் என்று கூறுவதாக இருந்தால் அபூ அப்தில்லாஹ் அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்கிறோம்.

1. ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களையும் அவரது தாயாரையும் இரு கடவுள்களாகப் படைக்க அல்லாஹ்வுக்கு வல்லமை உண்டா? இல்லையா?

2. இறைவன் தனக்கென சந்ததிகளை உருவாக்க  வல்லமை உண்டா? இல்லையா?

3. அல்லாஹ் மலக்குகளை பெண் மக்களாக படைக்க வல்லமை உண்டா? இல்லையா?

இதற்கு அபூ அப்தில்லாஹ் என்ன பதில் கூறுவார்?

இவை போன்ற இடங்களில் திருக்குர்ஆன் கூறுவது போல் அவ்வாறு செய்வது அல்லாஹ்வின் பரிசுத்தத் தன்மைக்கும் தவ்ஹீதுக்கும் மாற்றம் என்பதால் இறைவன் செய்யவில்லை என்று விளங்குகிறது. அல்லாஹ்வால் எதையும் செய்ய முடியும் என்பது வேறு; செய்யமாட்டான் என்பது வேறு. இரண்டையும் குழப்பக் கூடாது. ஒன்று, அல்லாஹ்வுடைய வல்லமை. மற்றொன்று அல்லாஹ்வுடைய பரிசுத்தத் தன்மை.

மேலும் ஹஸ்ரத் மிர்ஸா தாஹிர் அஹ்மது (ரஹ்) அவர்கள் தம் நூலில் (இரண்டாம் பதிப்பில்) பக்கம் 27 இல் கேட்டுள்ள வினாக்களுக்கு அபூ அப்தில்லாஹ் அவர்கள் பதில் தரவில்லை. எனவே அவ்வினாக்களை சுருக்கமாக இங்கே மீண்டும் எழுப்புகிறோம்.

“ஓர் அடியான் இறைவனுக்காக தாழ்மைக் குணத்தை மேற்கொண்டால் இறைவன் அவரை 7 ஆம் வானத்திற்கு உயர்த்திவிடுவான்.” (கன்ஸுல் உம்மால்)

இந்த நபிமொழியில் வரும் ரபஅ என்னும் சொல்லைக் காரணம் காட்டி தழ்மைக்குணம் உள்ளவனை இறைவன் உடலோடு வானத்திற்கு உயர்த்துவான் என்று பொருள் கூறுவாரா? அவ்வாறு யாரும் கூற மாட்டார்கள். இப்படி பொருள் கூறுவது என்றால் ஹஸ்ரத் ஈஸா நபி (அலை) அவர்கள் மட்டும் என்ன? எல்லா நபிமார்களும், வலிமார்களும், தழ்மைக்குணம் கொண்ட அத்தனை நல்லடியார்களும் உடலோடு வானிற்கு உயர்த்தப்பட்டு அங்கு வாசம் செய்வதாக நம்ப வேண்டும்.

ஐவேளைத் தொழுகையை கடைபிடிக்கிறவர்கள் தொழுகையின் போது ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டு சஜ்தாக்களுக்கிடையில் வர்பஹ்னி (இறைவா) என்னை உயர்த்துவாயாக என்று பிரார்த்தனை செய்கிறார்கள். உடலுடன் வானிற்கு உயர்த்துவது இதற்குப் பொருள் என்றால் வாழ்நாள் எல்லாம் தொழுது வந்த ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சஹாபா பெருமக்களும் இவ்வாறு செய்து வந்த பிராத்தனையை இறைவன் ஏற்றுக் கொள்ளவில்லை என்றல்லவா கூற வேண்டி வரும்? ஏனென்றால் இவ்வாறு பிராத்தனை செய்த எவரும் உடலுடன் வானிற்கு உயர்த்தப்படவில்லையே. எனவே இந்தப் பிராத்தனையின் பொருள் என்னுடைய நிலையை உயர்த்துவாயாக என்பதே தவிர வேறொன்றும் இல்லை.

இந்த வினாக்களுக்கு அபூ அப்தில்லாஹ் எங்கும் பதில் தரவில்லை. ஒருவேளை ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களுக்கு வந்தது போன்ற ஒரு சூழ்நிலை வேறு யாருக்கும் வரவில்லை. வந்திருந்தால் அவர்களும் இறைவன் அளவில் உடலோடு உயர்த்தப்பட்டிருக்கலாம் என்று எண்ணி பதில் தரவில்லையோ அல்லது பதில் தர முடியாத நிலையோ? அல்லாஹ் அறிவான்.

அப்படி ஒரு காரணமும் அவர் காட்ட முடியாது. ஏனென்றால் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கோ அவர்களின் தலைக்கு 100 ஒட்டகம் விலை வைக்கப்பட்ட நேரத்திலும் அல்லாஹ் அவர்களை உடலோடு உயர்த்தி தன்னளவிலோ, ஏழாவது வானத்திலோ, குறைந்தபட்சம் மதீனாவிலோ கொண்டு வைக்கவில்லையே! அல்லாஹ் கையாளாகாதவன் (நவூதுபில்லாஹ்) என்று அபூ அப்தில்லாஹ் கூறுவாரா? அல்லது அல்லாஹ் பாரபட்சமாக ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களுக்கு ஒருவிதமாகவும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு ஒருவிதமாகவும் செய்துவிட்டான் என்று அபூ அப்தில்லாஹ் கூறுவாரா?

அல்லாஹ்வின் நடைமுரையில் ஒருபோதும் மாற்றமில்லை (குர்ஆன் 33:63) மேலும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் சூரா பாத்திகாவில் செய்த “ இறைவா நீ அருள் புரிந்தவர்களின் வழியில் (நீ எங்களை) நடத்துவாயாக” என்ற துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களை ஹிஜ்ரத் செய்த வேளையில் எதிரிகளிடமிருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான் என்றால் அதுதான் அல்லாஹ்வின் வல்லமையாகும்; நடைமுறையுமாகும். அதாவது தவ்ர் குகையில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களும், ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களும் ஒளிந்திருந்த போது அல்லாஹ் அவர்களை காப்பாற்றி மதீனா கொண்டு சேர்த்தான். அவர்கள் குகையில் இருக்கும் போது, எதிரிகள் பலர் குகைக்கு வெளியே நின்று கொண்டிருக்க ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! நாம் இருவர் தானே இருக்கிறோம். எதிரிகள் பலர் இருக்கின்றனரே! என்று கேட்க அதற்கு ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் அபூபக்கரே! அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான். என்று பதில் கூறினார்கள்.

அந்தக் குகையில் அல்லாஹ் அவர்களுடன் இருந்தான். அல்லாஹ் அவர்களை உடலுடன் தன்னளவில் உயர்த்திக் கொள்ள வில்லை. மாறாக அவன் அந்த மாநபி (ஸல்) அவர்களுடன் அல்லாஹ்வும் இருந்தான். இதுவே அல்லாஹ்வின் நடைமுறையாகும்.

இவ்வாறுதான் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களும் காப்பாற்றப்பட்டார்கள் என்று நாங்கள் ஈமான் கொண்டுள்ளோம். இதிலிருந்து திருக்குர்ஆன் நபி மொழிகளின் அடிப்படையில் அல்லாஹ்வின் வல்லமையை சரியாக மதிப்பிட்டு யார் நம்பிக்கை கொள்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்.  

Read more »

Jan 16, 2014

வழி கெட்ட கொள்கை (இறுதி நபி ) இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாக மாறிய அவலம்.


இறுதி நபிக் கொள்கை இன்று அல்ல, பழங்காலந்தொட்டே மக்களிடம் ஒரு நோயாக இருந்து வந்திருக்கிறது. இறைவன் இதனை வழிகேடு என்றும் எச்சரித்திருக்கின்றான். அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:

"இதற்க்கு முன்னர் யூசுப் தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். ஆனால் அவர் உங்களிடம் கொண்டு வந்தது குறித்து நீங்கள் சந்தேகத்தில் இருந்தீர்கள். அவர் மரணமடைந்தபோது, அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒருபோதும் அனுப்பமாட்டான் என்று நீங்கள் கூறினீர்கள். இவ்வாறே அல்லாஹ் வரம்புமீறுபவர்களையும், (இறை அடையாளங்களில்) சந்தேகம் கொள்பவர்களையும் வழிகேடர்கள் என்று தீர்மானித்து விடுகின்றான்". ( 40:35 )

"(வழி கேடர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் வசனங்கள் தொடர்பாக (அல்லாஹ்விடமிருந்து) தங்களிடம் வந்த எந்தச் சான்றுமின்றி வாக்குவாதம் செய்கின்றனர். இது அல்லாஹ்விடமும் நம்பிக்கை கொண்டவர்களிடமும் மிக வெறுக்கத்தக்கதாகும். இவ்வாறே ஆணவமும், அகங்காரமும் கொண்ட ஒவ்வொரு உள்ளத்திலும் அல்லாஹ் முத்திரைடுகின்றான்". (40:36 )

யூசுப் நபியின் காலத்திலும், அல்லாஹ் அவருக்குப் பிறகு எந்த ரசூலையும் அனுப்பமாட்டான் என்றே கூறி வந்தனர். இதை அல்லாஹ் திருக்குரானில் பதிவு செய்திருப்பதன் காரணம் இதே மாதிரி பிற்காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தில் கூறப்போகின்றார்கள். அவ்வாறு கூறி வழி கெட்டு விடாதீர்கள் என்று எச்சரிப்பதர்க்காகத்தானே தவிர வெறும் சென்ற கால கதையாக சொல்வதற்கு மட்டுமல். இதனை வசனத்தின் பிற்பகுதியும் உறுதிப்படுத்துகிறது.

"இவ்வாறே அல்லாஹ் வரம்புமீறுபவர்களையும், (இறை அடையாளங்களில்) சந்தேகம் கொள்பவர்களையும் வழிகேடர்கள் என்று தீர்மானித்து விடுகின்றான்". ( 40:35 )

அல்லாஹ் தன் தூதை எங்கு வைக்க வேண்டுமென்பதை அவர் நன்கு அறிகின்றான் என இறைவன் கூறுகிறான் (6:125) அதாவது எங்கு, எப்பொழுது, எவரை தூதராக ஆக்க வேண்டுமென்பதை இறைவன்தான் அறிகிறான். அவ்வாறிருக்கையில் இவர் இறுதியானவர் என்று அல்லாஹ்வோ, ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களோ கூறாத நிலையில் இன்னும் அப்படிக் கூறுபவர்களை வழி கேடர்கள் என்றே அல்லாஹ் மேற்கண்ட (40:35) வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.

சென்ற கால நபியின் சமுதாயத்தினர் சொன்ன இறுதி நபிக் கொள்கை தவறு, வழி கேடு என்பதை இறைவன் வெறும் கதையாகக் கூறவில்லை; படிப்பினைக்காகக் கூறுகின்றான். இல்லைஎன்றால் யூசுப் நபியின் சமுதாயத்தினர் கொண்டிருந்த தவறான இறுதி நபிக் கொள்கையை நமக்கு எடுத்துரைப்பதில் என்ன பயன் இருக்கிறது? அது மட்டுமல்ல அந்த எச்சரிக்கை நிகழ்காலத்திற்க்கும் பொருந்துகிறது என்பதை அடுத்தவசனம் தெளிவுபடுத்துகிறது.

"(வழி கேடர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் வசனங்கள் தொடர்பாக (அல்லாஹ்விடமிருந்து) தங்களிடம் வந்த எந்தச் சான்றுமின்றி வாக்குவாதம் செய்கின்றனர். இது அல்லாஹ்விடமும் நம்பிக்கை கொண்டவர்களிடமும் மிக வெறுக்கத்தக்கதாகும். இவ்வாறே ஆணவமும், அகங்காரமும் கொண்ட ஒவ்வொரு உள்ளத்திலும் அல்லாஹ் முத்திரைடுகின்றான்". (40:36 )

இறுதி நபிக் கொள்கை கொண்ட வழிகேடர்கள் எவ்வித இறைசான்றுமின்ற்றியே வாதம் செய்கின்றனர். இவர்கள் அகங்காரம் கொண்டவர்கள் என்று அல்லாஹ் எச்சரித்துள்ளான். இத்தகைய வழிகேட்டிலிருந்து அல்லாஹ் முஸ்லிம்களை காப்பாற்றுவானாக.
Read more »

Jan 15, 2014

நபிமார்களுள் சிலரை ஏற்று சிலரை மறுப்பதே இறைத்தூதர்களிடையே பாகுபாடு காட்டுதலாகும்.


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 37 இல் இறைத் தூதர்களிடையே பாகுபாடு காட்டுதல் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

இவர்தான் பணியைச் சிறப்பாகச் செய்தார். அவர் சிறப்பாகச் செய்யவில்லை. என்றெல்லாம் கூறினால் அது பாகுபாடு காட்டும் குற்றமாக அமையும் என்று எழுதியுள்ளார். அதாவது

இந்த நபி தன் பணியைச் சிறப்பாகச் செய்தார். அந்த நபி தன் பணியைச் சிறப்பாகச் செய்யவில்லை என்று கூறுவது தான் இறைத் தூதர்களிடையே பாகு பாடு காட்டுதல் என்று ஒரு கருத்தைக் கூறியுள்ளார்.

மூஸா நபியின் இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருதிருந்தால் இதைவிடச் சிறப்பாகச் செய்திருப்பார்கள் என்று கூறினால் அது பாகுபாடு காட்டியதுடன் இறைவனின் தேர்வைக் குறை கூறிய குற்றமாகவும் அமையும் என்றும் இன்னொரு கருத்தையும் தருகிறார்.

எல்லாத் தூதர்களுமே தமக்கு வழங்கப்பட்ட பணியில் எள் முனையளவும் குறையில்லாமல், விலை போகாமல் மனிதர்களுக்கு அஞ்சாமல் மறுமையை விட இவ்வுலகைப் பெரிதாக நினைக்காமல் சிறந்து விளங்கினார்கள் என்று நம்புவதுதான் பாகுபாடு காட்டக் கூடாது என்பதுதான் கருத்து என்றும் எழுதியுள்ளார்.
(பார்க்க திருக்குர்ஆன் 2:136, 2:285, 3:84)

நம் விளக்கம்:

பி.ஜே காட்டியுள்ள திருக்குர்ஆன் வசனங்களுடன் 4:140 வசனத்தையும் நாம் ஆய்வுக்காகப் பார்க்க வேண்டும். பி.ஜே எழுதியுள்ள கருத்துக்களை தொகுத்துப் பார்த்தால், அந்த நபி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்தார், இந்த நபி தன் பணியை சிறப்பாகச் செய்யவில்லை என்றும், மூஸா நபியின் இடத்தில் நபி (ஸல்) அவர்கள் இருதிர்ந்தால் அவரை விட இவர் தம் பணியைச் சிறப்பாகச் செய்திருப்பார் என்றும் நினைக்கக் கூடாது என்றும், எல்லாரும் தத்தமது பணியில் சிறந்து விளங்கினார்கள் என்றும் எண்ண வேண்டும் என்று எழுதியுள்ளார்.

அதாவது நபித்துவ பணியில் பாகுபாடு காட்டக் கூடாது என்பதே அதன் பொருள் என்று கருதுகிறார். இது சரியா என்பதனை அவர் காட்டியுள்ள திருக்குர்ஆன் வசனங்களிலிருந்து காண்போம்.

2:137-138 வசனத்தைக் காண்க இவ்விரு வசனங்களிலும்

1) அல்லாஹ்வையும், எங்களுக்கு வழங்கப்பட்டதையும்

2) இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப் அவரது வழி தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும்,

3) ஏனைய நபிமார்களுக்கு வழங்கப்பட்டதையும்,
4) ஈமான் கொள்ள வேண்டும்.

5) நீங்கள் ஈமான் கொண்டது போல் அவர்களும் ஈமான் கொண்டால் நேர்வழி பெறுவர்.

6) இதைப் புறக்கணித்தால் எதிரிகளே என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது, 1. அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளுதல், 2. அவன் அனுப்பிய நபிமார்கள் எல்லாரிடமும் ஈமான் கொள்ளுதல், 3. அவர்களுக்கு அருளப்பட்டதன் மீது ஈமான் கொண்டால் நேர்வழி எனக் கூறப்பட்டுள்ளது.

2:185 வசனத்தில் 1. அல்லாஹ்வை ஈமான் கொள்ளுதல், 2. மலக்குகள் மீது ஈமான் கொள்ளுதல், 3. வேதங்கள் மீது ஈமான் கொள்ளுதல், 4. அவனுடைய தூதர்கள் மீது ஈமான் கொள்ளுதல், 5.அவனுடைய தூதர்களுக்கிடையில் பாகுபாடு காட்டாதிருத்தல்.

3:84 வசனமும் 2:136 வசனமும் ஒன்றுதான் இம்மூன்று வசனங்களும்

1. அல்லாஹ்வின் மீதும், 2. அவனது மலக்குகள் மீதும், 3.அவனுடைய எல்லா நபிமார்கள் மீதும், 4. அவர்களுக்கு வழங்கப்பட்டவை மீதும் ஈமான் கொள்ள வேண்டும் என்றும் நபிமார்களுக்கிடையில் ஈமான் கொள்வதில் பாகுபாடுக் காட்டக் கூடாது என்றும் கூறுகிறது. அதாவது நபிமார்கள் சிலரை ஈமான் கொள்வதும் நபிமார்கள் சிலரை ஈமான் கொள்ளாதிருப்பதும் அவர்களுக்கிடையில் பாகுபாடு காட்டுவதாகும் என்று கூறுகிறது.

இக்கருத்தை 4:150 வது வசனம் தெளிவாகக் கூறுகிறது.

1. அல்லாஹ்வையும் அவனது தூதரையும் மொத்தமாக மறுத்தல்.

2. சிலரை ஏற்றுக் மற்றும் சில தூதர்களை மறுத்தல்.

3. அல்லாஹ் அனுப்பிய நபிமார்கள் இவர்கள்தான். அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட ரஸுல்மார்களை ரஸுல்மார்கள் இல்லை என்று கூறுவது அல்லாஹ்வுக்கும் ரஸுலுக்கும் இடையில் பாகுபாடு காட்டுதல்.

IFT 1. திருக்குர்ஆன் விளக்கவுரை 2. அப்துல் வஹ்ஹாபின் தர்ஜுமா 3. சவூதி அரசின் வெளியீடு 4. அன்வாருல் குர்ஆன் 5. தப்ஸீர் இப்னு கஸீர் 6. ஜான் டிரஸ்ட் 7. தப்சீர் ஹமீத் 8. சிராஜுதீன் நூரியின் தர்ஜுமா 9. தாவூத் ஷா விரிவுரை 10. அப்துல் ஹமீது பாக்கவி.

4:150 அவர்கள் வசனத்திற்கு நபிமார்களுள் சிலரை ஏற்று சிலரை மறுப்பது என்றே பொருள் தந்துள்ளனர்.

நபிமார்கள் வரலாறு.

ஆதம் நபி முதல் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் வரை வந்த நபிமார்களின் வரலாற்றை பாகுபாடு என்ற கண்ணோட்டத்தில் நாம் ஆய்வு செய்தால்.

1) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நபி ஒருவர் அனுப்பப்பட்ட போதெல்லாம் ஒரு சிலர் ஈமான் கொண்டனர். பெரும்பாலார் மறுத்தனர். அந்தந்த நபியை ஈமான் கொள்வதில்தான் பாகுபாடு காணப்பட்டுள்ளதே தவிர பி.ஜே கூறுவது போல் அந்த நபியை விட இந்த நபி தம் பணியைச் சிறப்பாகச் செய்தார் என்றோ இவராக இருந்தால் அவரை விட தம் பணியைச் சிறப்பாகச் செய்திருப்பார் என்றோ பாகுபாடு காட்டப்பட்டதாக திருக்குர்ஆன் நபிமொழிகளிலிருந்து நமக்குச் தெரியவில்லை.

2) யூதர்களிடையே ஈஸா நபி வந்த போதும் சிலர் ஈமான் கொண்டனர்: பலர் மறுத்தனர். பி.ஜே பாகுபாடு பற்றிக் கூறியிப்பது போல் அவர்கள் கூறியதாகத் தெரியவில்லை.

3) ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மூஸா நபியையும் ஈஸா நபியையும் ஈமான் கொண்டோருள் சிலர் நபி (ஸல்) அவர்கள் மீதும் ஈமான் கொண்டனர். ஆனால் பலர் மறுத்தனர். நபித் தோழர்கள்யாரும் முன்னர் வந்த நபிமார்களின் பணியைப் பற்றி பி.ஜே எழுதியிருப்பது போல் (ஓரிருவரைத் தவிர வேறு எவரும்) பேசியிருப்பதாக தெரியவில்லை. எனவே நபிமார்களுக்கு இடையே பாகுபாடு எனபது நபிமார்களுள் சிலரை ஏற்பதையும் சிலரை மறுப்பதையும் தான் குறிக்கும்.

திருக்குர்ஆன் இவ்வாறு கூறுவதிலிருந்து, எதிர்காலத்தில் முஸ்லிம் உம்மத்தில் திருக்குர்ஆனையும் நபிவழியையும் பின்பற்றி உம்மத்தி நபி வருவார் எனபதையும் அன்னாரை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும், அன்னாரை மறுப்பது, நபிமார்களிடையே வேறுபாடு காட்டுவதாகும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.


ஒரு நபியை மறுப்பது என்பது அதற்கு முன்னர் வந்த அனைத்து தூதர்களையும் மறுப்பதாகும். இன்றைய முஸ்லிம் உலகு தங்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு தூதரை மறுக்கிறார்கள் என்றால், அவர்கள் ஆதம் நபி முதல் நபி (ஸல்) அவர்கள வரை எல்லாத் தூதர்களையும் மறுக்கிறார்கள் என்றுதான் பொருள். அதாவது இவர்கள் பிற நபிமார்கள் காலத்தில் இருந்தாலோ, பிற நபிமார்கள் இவர்கள் காலத்தில் இருந்தாலோ அந்தந்த நபிமார்களை இவர்கள் மறுத்துவிடுவார்கள். அல்லாஹ் நம்மை அந்த குப்ரிலிருந்து காத்தருள்வானாக. 

Read more »

Jan 13, 2014

ஆயிரம் லஹ்னத்


பி.ஜே யின் கேள்வி:

ஒருவரை சபித்துக் கட்டுரை எழுதிய இவர். இவர் மீது ஆயிரம் சாபம் உண்டாகட்டும் என்று எழுதி விட்டு 1 சாபம், 2 சாபம், 3 சாபம், 4 சாபம் என்று ஆயிரம் தடவை பல பக்கங்களில் நூருல் ஹக் பக்கம் 158 இல் எழுதியுள்ளாரே இவர் மன நோயாளியா? நபியா? என்று கேட்ட போதும் எந்தப் பதிலும் இல்லை.

நம் விளக்கம்:

அவ்வாறு சபிக்கப்பட்ட ஒருவர் யார்? பி.ஜே முஸ்லிமாக இருந்து முர்ததத்தாக மாறி மறுபடியும் முஸ்லிமாக மாறினார். ஆனால் இவர் மவ்லவியாக இருந்து பின்னர் பாதிரி இமாதுத்தீனாக மாறியவர். திருக்குரானையும், ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் கேலியும், கிண்டலும் செய்தவர். திருக்குரானில் எந்த கருத்துச் செறிவும் இல்லை. வெறும் பகட்டும் செயற்கைத் தன்மையுமே உள்ளன. திருக்குர்ஆன் காட்டுமிராண்டித்தனமான கருத்துக்களைக் கொண்டுள்ளது. எந்த ஒரு நீதிமானும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டான் என்றும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேவலமாக ஏசிப் பேசியவர்.

இவரிடம் திருக்குர்ஆனைப் பற்றியும் நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் தரக்குறைவாகப் பேசுவதை நிருத்த்கா வேண்டும் என்று கூறியும் அதற்கு செவி கொடாததினால் 1000 லஹ்னத் ஹஸ்ரத் இமாம் மஹ்தி(அலை) அவர்கள் செய்தார்கள். அதில் தான் செய்கின்ற ஒவ்வொரு லஹ்னத்துக்கும் முழு சமுதாயமும் ஆமீன் சொல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து செய்துள்ளார்கள். இது அவர்கள் இஸ்லாத்தின் மீதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் திருக்குர்ஆன் மீதும் கொண்டிருந்த அளப்பரிய நேசத்தைக் காட்டுகிறது.

இப்படி இஸ்லாத்தின் எதிரிகள் மீது இமாம் மஹ்தி(அலை) அவர்கள் 1000 லஹ்னத் செய்கிறார்கள் என்றால், அதனை கோவை விதாததில் பி.ஜே கேலியும், கிண்டலும், நையாண்டியும் செய்வதை வீடியோ கேசட்டைப் பார்ப்பவர்கள் உணரலாம். இதிலிருந்து இவரின் சுய ரூபத்தை அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாத்தின் மீது தாக்குதல் நடத்திய ஒரு பாதிரியின் மீது இவர்களும் ஆயிரமோ, பத்தாயிரமோ, லட்சமோ லஹ்னத் உண்டாகட்டும் என்று கூறியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு 1 சாபம், 2 சாபம், 3 சாபம் என்று பல பக்கங்களில் எழுதியிருப்பதுதான் இவர்களின் ஆட்சேபனையாம். பி.ஜே ஒரு ஒரு மனநோயாளியா, ஒரு முஸ்லிமா? என்ற சந்தேகம் எங்களுக்கு வருகிறது.

தான் நபி என்று ஏற்றுக் கொண்ட ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தை நடை முறையை உணரத் தவறியதால்தான் மற்றொரு நபியின் அதே செய்கையை தரங்கெட்ட முறையில் விமர்சனம் செய்துள்ளார்.

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தொழுகைக்குப் பின் 33 முறை சுபுஹானல்லாஹ். 33 முறை அல்ஹம்துலில்லாஹ், 34 முறை அல்லாஹு அக்பர் என்று 1,2,3,4,....,33 முறை திக்ர் செய்ய கற்றுத் தந்துள்ளார்கள். இந்த இடத்தில் எனக்கு வரும் சந்தேகம் என்னவென்றால் இந்த பி.ஜே தொழுகையில் இந்தத் திக்ரை தன் வாழ்நாளில் செய்ததில்லையோ! என்பதுதான்.

தன் வாழ்நாளில் குறைந்த பட்சம் 5 முறை தொழுபவன், 5 வேலைகள் இந்தத் திக்ரை செய்து வந்திருந்தால் இப்படிப்பட்ட ஒரு மறுப்பை எழுதியிருக்கவோ, கேலி, கிண்டல், நையாண்டி செய்யவோ மாட்டார். குறைந்த பட்சம் இவர் இந்தத் திக்ரை செய்யவில்லை என்று தெரிகிறது. இவர் யூதராகவோ, கிறித்தவனாகவோ இந்துவாகவோ பிறந்து இஸ்லாத்தின் எதிரியாக மாறியிருந்தால் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்து இந்தக் கேள்வியை கேட்டிருப்பார். எந்த ஒரு நபியும், நபியைப் பின்பற்றியவர்களும் யாரையும் கேலி கிண்டல் செய்ததாக வரலாற்றில் பார்க்கமுடியாது. மாறாக நபிமார்களின் எதிரிகளே இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளதை திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.

ஒரு மௌலவிக்கு இது தெரியாதா என்றால், அஹ்மதிய்யா முஸ்லிம் ஜாமத்தின் மீது கொண்ட வெறுப்பினால், ஒரு உண்மையை மறைப்பதற்கும் அதனை ஒரு பொய் எனக் காட்டுவதற்கும் துநித்துவிட்டார். இதிலிருந்து இவருடைய இன்னொரு முகத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். இதுதான் ஒரு உண்மை நபியின் பகைவர்களின் முகமாகும்.

33 சுபுஹானல்லாஹ், 33 அல்ஹம்துலில்லாஹ், 34 அல்லாஹு அக்பர் என்று கூறினால் போதாதா? வேலை கெட்டு உட்கார்ந்து, சுப்ஹானல்லாஹ் 1, சுப்ஹானல்லாஹ் 2, சுப்ஹானல்லாஹ் 3 என்று கூறும் இவர் ஒரு மனநோயாளியா? நபியா? (நவூதுபில்லாஹ்) என்று இந்த பி.ஜே கேட்டிருப்பார். இது போன்ற குற்றச்சாட்டை வேறு யாரும் செய்திருக்கலாம். ஆனால் இந்த பி.ஜே செய்திருக்க கூடாது. ஏனென்றால், இவர்கள் நடத்தும் மாநாட்டுக்கு தொலைக்கட்சியில் விளம்பரம் செய்கின்ற போது இன்னும் 100 நாட்கள் உள்ளன. இன்னும் 99 நாட்கள் உள்ளன.... இப்படியே ஒவ்வொருநாளும் விளம்பரம் செய்து கடைசியில் 1 நாளே உள்ளது என்று மாநாட்டுக்கு விளம்பரம் செய்யும் இவர்களை மன நோயாளி என்பதா? விளம்பர நோயாளி என்பதா?

எனவே, 1000 லஹ்னத்தை ஆயிரம் தடவை செய்வதுதான் நபி வழி என்றும் இந்த வகையில் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் உண்மையான நபியாக தன்னை நிரூபித்துள்ளார் என்பதும் இதன் மூலம் நிரூபணம் ஆகிறது. இவ்வாறு நபியின் நடைமுறையை கோவையில் கூறினோம் ஆனால்


எந்தப் பதிலும் இல்லை என்பது முழுப் பொய்யாகும். பொய்யனின் மீது லஹ்னத் உண்டாகட்டும். 

Read more »

Jan 10, 2014

மர்யமும் நானே ஈஸாவும் நானே


பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

மர்யமும் நானே! ஈஸாவும் நானே என்று கிஷ்தி நூஹ் என்ற நூலில் பக்கம் 68 இல் கூறியுள்ளாரே இவர் மன நோயாளியா, நபியா என்று நேருக்கு நேர் கேட்ட போதும் பதில் சொல்ல முடியவில்லை.

நம் பதில்.

1. நபிமார்களை அவர்களின் பகைவர்கள் கிறுக்கன், பைத்தியம், மனநோயாளி என்று அழைத்ததாகவும், அந்நபிமார்கள் பைத்தியம் இல்லை என்றும் அல்லாஹ் கூறுவதாக திருக்குர்ஆன் கூறுகிறது ( 15:7, 26:28, 37:37, 44:15, 51:40, 51:53, 52:30, 54:10, 68:3, 68:52, 81:23)

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றி வந்த உம்மத்தி நபியாகிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களை பி.ஜே மன நோயாளி என்று கூறுவதால், ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் உண்மையாளர் என்றும் பி.ஜே ஒரு நபியின் எதிரி என்றும் உறுதியாகிறது.

2) ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களுக்கு வந்த வஹியில், இன்னீ முஹீனுன் மன் அராத இஹான(த்)தக. (தத்கிரா). உம்மை இழிவுபடுத்த நாடுவோரை நான் இழிவுபடுத்துவேன் என்று என்று அல்லாஹ் கூறினான்.

பி.ஜே கடந்த பல ஆண்டுகளாக வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களை பல்வேறு இழிவான சொற்களைக் கொண்டு பேசியும் எழுதியும் வருகிறார். மேற்சொன்ன முன்னறிவிப்பின் அடிப்படையில் பி.ஜே யைக் குறித்து அவரது பழைய நண்பரும் இன்றைய எதிரியுமான ஜவாஹிருல்லாஹ் கூறிய கூற்றைப் பாருங்கள்.

நரேந்திர மோடியை விட கருணாநிதி மோசமானவர் என்று தவ்ஹீது ஜமாத்தைச் சேர்ந்த ஜைனுல் ஆப்தீன் பேசி வருகிறார். அவர் ஒரு மன நோயாளி என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. (த மு மு க மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லாஹ் ஆதாரம்: தினகரன் 1.5.2006 பக்கம் 2)

அவரது முன்னால் நண்பரான அபூ அப்தில்லாஹ் கூறியிருப்பதைப் பாருங்கள்:

பி.ஜே ஒரு கொள்ளைக்காரன்: பச்சைப் பொய்யன்: பித்தலாட்டக்காரன்: தில்லுமுல்லு செய்பவன்: பி.ஜே ஒரு பரம அயோக்கியன்: அவதூறுகளை அள்ளி வீசுபவன்: நாஸ்திகன்: ஏமாற்றி வயிறு வளர்ப்பவன்: அமானித மோசக்காரன்: கேடுகெட்டவன்: அபூஜஹிலைவிட கொடியவன்: தஜ்ஜால் என்று எழுதியுள்ளார். (ஆதாரம் அந்நஜாத், ஜூன், ஆகஸ்ட், டிசம்பர் 2005 இதழ்கள்)

இந்த முன்னறிவிப்பு பி.ஜே யின் விசயத்தில், அவரது ஆரம்ப கால நண்பர்களின் கூற்று மூலமும் நிறைவேறிவிட்டது என்பதைக் கண்டீர்கள். இந்த முன்னறிவிப்பு இதைவிட அதிகமாக நிறைவேறுவதை உலகம் கண்டு கொள்ளும் இன்ஷா அல்லாஹ்.

3) ஒவ்வொரு நபியின் காலத்திலும் அவர்களின் எதிரிகள் நபிமார்கள் கூறுகின்ற ஆழிய ஞானமும், நுட்பமும் கொண்ட கருத்துக்களை உணராத அரை வேக்காடுகள் அவரைப் பைத்தியம் என்பது நடைமுறையாகும்.

4) அல்லாஹ் எல்லா வகையிலும் தெளிந்த ஞானம் உடையவர்களை தான் நபிமார்களாக ரெஸுல்மார்களாகத் தேர்ந்தெடுக்கிறான். அவர்கள் காலத்தில் அவர்களைத் தவிர ஏனையவர்கள் குறிப்பாக எதிரிகள் 1% முதல் 90% வரை பைத்தியமாகத்தான் இருப்பார்கள். இதற்க்கு பி.ஜே விதி விலக்கில்லை.

5) பொதுவாக பைத்தியங்கள் மற்றவர்களை பைத்தியம் என்று எண்ணுவது வழக்கமாகும்.

பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

மர்யமும் நானே! ஈஸாவும் நானே என்று கூறியுள்ளார்.

நம் விளக்கம்:

மர்யம் என்பது பெண்ணின் பெயர் – மிர்ஸா குலாம் அஹ்மது எப்படி மர்யமாக முடியும் என்பதுதான் பி.ஜே யின் பார்வை. இவருக்கு திருக்குர்ஆன் ஞானமோ, நபிமொழி ஞானமோ, மொழியறிவோ, பகுத்தறிவோ இல்லை என இவரது கேள்வியிலிருந்து தெரிகிறது.

திருக்குர்ஆன் 66:13 வசனத்தில்

இம்ரானின் மகள் மர்யமையும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஓர் எடுத்துக் காட்டாக இறைவன் விளக்குகிறான். அவள் தன் கற்பைக் காத்துக் கொண்டாள். எனவே நாம் அவரிடம் (ஆண்பால் ஒருமை) எமது ரூஹை (வஹியை) ஊதினோம். அவர் தன் இறைவனின் வசனங்களையும், அவனுடைய வேதங்களையும் உண்மைப்படுத்தி விளக்கினார்.

அதாவது ஒரு உண்மையான நம்பிக்கை கொண்டவரை மர்யம் என்று அழைக்கலாம். எப்படி யூசுப் நபி மலக்கு (12:32) என்று அழைக்கப்பட்டதால் மலக்காக இருப்பதில்லையோ அது போல மலக்கின் பண்பைக் கொண்டவரை மலக்கு என்றும் மர்யம் (அலை) அவர்களின் பண்பைக் கொண்ட நல்ல விசுவாசியை மர்யம் என்றும் அழைக்கலாம். இக்ரிமா (ரலி) அவர்களை நாபித் தோழர்கள் இப்னு பிர்அவ்ன் என்று அழைத்தனர். காரணம் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூஜஹிலை தன் காலத்து பிர்அவ்ன் என்று கூறினார்கள். எனவே இக்ரிமா (ரலி) அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பிறகு அவரை இப்னு பிர்அவ்ன் என்று அழைத்தனர். இக்ரிமா (ரலி) பிர்அவ்னின் மகன் என்றோ, இக்ரிமாவின் தந்தை பிர்அவ்ன் என்றோ பி.ஜே கருதினால் அதை விட அறிவின்மை வேறு எதுவும் இருக்க முடியாது. இப்னு மர்யம் என்று ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹமது (அலை) அவர்கள் தன்னை மர்யம் என்றும் ஈஸா என்றும் கூறியிருப்பதை கொஞ்சம் விளக்கமாகக் கூற வேண்டும் என்றால், ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் மர்யம் எனும் பண்பிலிருந்து ஈஸா என்ற பண்புக்கு மாறினார்கள். அதாவது மர்யம் எனும் பண்பு ஈஸா அனும பண்பை ஈன்றெடுத்தது.

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு – குறள்: 757

அன்பு எனும் தாய் பெற்றடுத்த அருள் எனும் குழந்தை, செல்வம் எனும் வளர்ப்புத் தாயால் வளரும். இவ்வாறே மர்யம் எனும் பண்பு ஈஸா எனும் பண்பைப் பெற்றடுத்தது.

எல்லாக் குழந்தைகளையும் அது பிறக்கின்ற போது சைத்தான் தீண்டுகிறான். அதனால் அக்குழந்தைகள் அழுகின்றான். ஆனால் அவன் மர்யத்தையும், அவர் பெற்றடுத்த ஈஸாவையும் தீண்டவில்லை என்பது நபிமொழியாகும் (புகாரி தப்ஸீர் சூரா ஆலி இம்ரான்)

பிறக்கும் அனைத்து நபிமார்களையும் சைத்தான் தீண்டி இருக்கிறான் என்று நம்ப முடியுமா? ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களையும் சைத்தான் தீண்டினான் (நவூதுபில்லாஹ்) என்று பி.ஜே நம்பத் தயாரா? அவர் நம்பினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. இதன் பொருள் என்ன?

மர்யம் (அலை) அவர்களின் பண்பையும் ஈஸா நபியின் பண்பையும் கொண்டவர்களை சைத்தான் தீண்டவில்லை ஏனையவர்களை சைத்தான் தீண்டுகிறான் என்று பொருள் கொள்வதே சரியாகும். (ஸம்ஹஷ்ரி தப்ஸீர் கஷ்ப்)

நஜ்ரைன் கிறிஸ்தவர்கள் ஈஸா நபியை அல்லாஹ்வின் மகன் (இப்னுல்லாஹ்) என்று கூறிவாதிட்ட போது, நபி (ஸல்) அவர்கள் ஈஸா அல்லாஹ்வுக்குப் பிறந்த மகன் என்றால் அல்லாஹ்வின் பண்பாகிய மரணமற்ற நித்திய வாழ்வு அவர் மகனாகிய ஈஸாவுக்கு இருக்கவேண்டும். ஆனால் அவர் இறந்து விட்டார் என்று கூறி மறுக்கிறார்கள். (ஆதாரம்: அஸ்பாபுன் நுஸுல் பேரூத் பதிப்பு பக்கம் 68) அதாவது தந்தையின் பண்பு பிள்ளைக்கு இருக்கவேண்டும்.

இப்னு சபீல் என்பதற்கு பாதையின் மகன் என்பது சொற்பொருள். வாழ்க்கையின் பயணம் செய்பவர்களை அல்ல, பயணமே தன் வாழ்க்கையாக கொண்டவர்களைத்தான் இப்னு சபீல் என்ற சொல் குறிக்கும். ஆனால் இப்னு சபீல் என்றால் பாதையில் கிடக்கும் குழந்தை என்று பி.ஜே கூறுகிறார் போலும்.

மேலே கூறிய கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால். மர்யம் என்பது ஒரு நல்ல விசுவாசி என்ற பண்பையும் இப்னு மர்யம் என்பது முதன்மையான விசுவாசியாகிய ஈஸா நபியின் பண்பையும் குறிக்கும்.


நல்ல விசுவாசியாகிய மர்யமும் நானே! முதன்மையான விசுவாசியாகிய ஈஸாவும் நானே! என்பது முற்றிலும் சரி என்பது. அல்லாஹ் நாடினாலேயன்றி பி.ஜே போன்றோர் இதனைப் புரிந்து கொள்ள முடியாது. 

Read more »