அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jan 27, 2014

அகக்கண்ணும் புறக்கண்ணும்



பக்கம் 58 இல் அபூ அப்தில்லாஹ், மிஹ்ராஜில் நபி (ஸல்) அவர்கள், ஈஸா (அலை) அவர்களைக் கண்களால் கண்டது மிர்ஸா குலாமால் ஊர்ஜிதம் செய்யப்படுகிறது. கண்களால் பார்ப்பதென்றால் தூல உடலுடன் தான் நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜுக்குச் சென்றிருக்கவேண்டும். கனவுக் காட்சியைக் கண்களால் கண்டதாக எந்த அறிவீனனும் சொல்லமாட்டான் என்று எழுதியுள்ளார். 

நம் பதில்: 

1) யூஸுப் நபி அவர்கள், பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் நான் கண்டேன். அவை எனக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். என்றும் சிறைக் கைதிகளும் மதுரசம் பிழியக் கண்டேன் என்றும், தலையில் ரொட்டியைச் சுமந்திருக்க அதைப் பறவை சாப்பிடக் கண்டேன் என்றும், எகிப்திய அரசனும் கொளுத்த ஏழு மாடுகளை மெலிந்த ஏழு மாடுகள் தின்பதையும், பசுமையான ஏழு கதிர்களையும் காய்ந்த ஏழு கதிர்களையும் கண்டதாகவும் (12 வது அதிகாரம்) காண்கிறோம், அவர்கள் எக்கண்களால் கண்டனர்? அக்கண்கள் கண்ட காட்சிக்கு தூல உடல் இருந்ததா? 

2) திருக்குர்ஆன் 37:103 இல் என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பதுபோல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய்? என்பதைச் சிந்தித்து கூறு என்று (இப்ராஹீம் நபி இஸ்மாயீல் நபியிடம்) கேட்டார். 
என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிட்டதைச் செய்யுங்கள்.... என்று பதிலளித்தார். 

இறைவன் தன் கட்டளையைக் கனவின் மூலம் ஒரு நபிக்குக் காட்ட அதனை அவர் காண்கிறார். அதன்படி செயல்படுகிறார் என்றால் எந்தக் கண்களால் அவர்கள் கண்டார்கள்? 

அப்படிஎன்றால் அபூ அப்தில்லாஹ்வின் கூற்றின்படி, ஹஸ்ரத் இப்ராஹீம் நபி (அலை), ஹஸ்ரத் யூசுப் நபி (அலை), ஹஸ்ரத் இஸ்மாயீல் நபி (அலை) போன்றோரை அறிவீனன் என்று அபூஅப்தில்லாஹ் கருதுகிறாரா? கண்களால் கண்டேன் என்று சொன்னால் அதற்கு புறக்கண் தான் என்று நம்புவதும் பேசுவதும் அகக்கண் குருடர்களின் அறிவீனமான பேச்சாகும். 

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.