அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jan 7, 2014

ஈஸா நபி (அலை) வானத்திற்குச் சென்றார்கள் என்று நம்புவது இறைதூய்மைக்கு களங்கமாகும்.


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை 10 இல் தூய்மையானவன் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதியுள்ளார்.

ஸுப்ஹான் என்பது கடவுள் தன்மைக்குப் பங்கம் விளைவிக்கும் எல்லாத் தன்மைகளை விட்டும் தூய்மையானவன் என்பதே பொருளாகும்.
நம் விளக்கம்:

1. திருக்குரானில் 3:192 வது வசனத்தில் “அவர்கள் நின்று கொண்டும், ஒரு பக்கமாக சாய்ந்து படுத்துக் கொண்டும் அல்லாஹ்வை (எப்போதும்) நினைத்துக் கொண்டிருப்பார். எங்கள் இறைவா! நீ இதனை வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன், எனவே நீ எங்களை நெருப்பின் தண்டனையிலிருந்து காப்பாற்றுவாயாக!” (எனக் கூறுவர்).

இதில் வானங்களையும் பூமியையும் அல்லாஹ் வீணாகப் படைத்துள்ளான் என்று எண்ணுவது அல்லாஹ்வின் பரிசுத்தத் தன்மைக்கு பங்கம் விளைவிப்பதால் நீ தூயவன் என்று கூறப்பட்டுள்ளது.

2. திருக்குரானில் 5:117 வது வசனத்தின், “ மர்யமின் மகன் ஈஸாவே! நீர் மக்களிடம் அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயையும் இரண்டு கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று கூறினீரா? என அல்லா கேட்ட போது, அவர் நீ தூயவன் எனக் கூறினார்.

இதில் ஈஸா நபியையும் அவருடைய தாயையும் இரண்டு தெய்வங்களாக ஆக்கிக் கொள்வது இறைவனின் தூய்மைக்கு களங்கம் கற்பிப்பதாகும். ஆனால் இறைவனோ இந்தக் கலங்கத்தில் இருந்து தூயவன் ஆவான். என்ற கருத்து கூறப்பட்டுள்ளது.

3. திருக்குரானில் 7:144 வது வசனத்தில், “ அவர் (மூஸா) என் இறைவா! நான் உன்னைப் பார்க்கும் பொருட்டு நீ (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! என்று வேண்டினார். இதற்கு அவன் உம்மால் என்னை ஒருபோதும் காணவியலாது. ஆயினும் மலையின் பக்கம் பார்ப்பீராக! அது தனது இடத்தில் நிலைத்திருந்தால் நீர் என்னைக் காண்பீர் என பதிலளித்தான். பின்னர் அவருடைய இறைவன் மலையின் மீது தானே தோற்றமளித்த போது, அதனைத் தவிடு பொடியாக்கி விட்டான். மேலும் மூஸா மயங்கி விழுந்தார். பின்னர் அவருக்கு மயக்கம் தெளிந்த போது (என் இறைவா!) நீ எல்லாக் குறைகளிளிருந்தும் தூய்மையானவன்...” என்றார்.

இதில் ஒரு நபி இறைவனை தன் புறக்கண்ணால் காண்பது என்பது இறைவனின் தூய்மைக்குக் களங்கம் ஏற்படுத்தக் கூடியதாகும் என்ற கருத்தை இறைவன் கூறுகிறான்.

4. திருக்குரானின் வது 9:31 வசனத்தில், “அவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்கள் சமய அறிஞர்களையும் துறவிகளையும் இவ்வாறே மரியத்தின் மகன் மஸீஹயும் தங்கள் கடவுள்களாக ஆக்கிக் கொண்டனர்..... அவர்கள் வைக்கின்ற இணையை விட்டும் அவன் தூயவன்.”

இதில் அல்லாஹ் அல்லாத சமய அறிஞர்களையும் துறவிகளையும் இவ்வாறே மரியத்தின் மகன் மஸீஹையும் தங்கள் கடவுள்களாக ஆக்குவது இனைவைத்தில் ஆகும். இது இறைவனின் ஸுப்ஹான் என்ற பண்புக்கு மாற்றமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

5. திருக்குரானில் 21:23 வது வசனத்தில், “(வானங்கள், பூமி) ஆகிய அவ்விரண்டிலும் அல்லாஹ்வையன்றி வேறு கடவுளர்கள் இருந்திருப்பின் அவை இரண்டும் பெருங் குழப்பத்திற்கு இரையாகி அழிந்திருக்கும். எனவே அரியணைக்குரிய இறைவனாகிய அல்லாஹ் எல்லாக் குரிபாடுகளிலிருந்தும் அவர்கள் கூற்றிலிருந்தும் தூய்மையானவன்.”

இதில் வானங்கள் பூமி ஆகியவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருக்கின்றனர். என்று கூறும் குறைகளிலிருந்து அல்லாஹ் தூயவன் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலே கூறப்பட்டுள்ள வசனங்களிலிருந்து நாம் விளங்குவது, அல்லாஹ்வுக்குப் பங்கம் விளைவிக்கும் – களங்கம் கற்பிக்கும் – ஒரு செயல் கூறப்பட்டால், அல்லா (அதனையே) ஸுப்ஹான் என்று கூறுவதன் மூலம் மறுப்பதைக் காணலாம். அதாவது அல்லாஹ் ஸுப்ஹான் என்று ஒரு வசனத்தில் கூறப்பட்டிருந்தால் அதற்கு மேலே அல்லாஹ்வுக்கு மாற்றமான, அல்லாஹ்வின் கண்ணியத்திற்கு பங்கம் உண்டாக்கும், களங்கமோ, கரையோ உண்டாக்கும் ஒரு செயல் கூறப்பட்டிருக்கிறது என்று விளங்குகிறோம். இந்த அளவுகோலின் அடிப்படையில் நாம் குரான் 17:94 ஆம் வசனத்தைக் காண்போம். 17:94 ஆம் வசனத்தில், மக்கத்து மக்கள் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடம், நீர் வானத்திற்கு ஏறிச் செல்ல வேண்டும். நாங்கள் படிக்கத்தக்க ஒரு நூலை எங்களுக்குக் கொண்டு வராத வரை நீர் வானத்திற்கு ஏறிச் சென்றதையும் நாங்கள் நம்பமாட்டோம் என்று கூறுகின்றனர். அதற்கு அல்லாஹ் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடம், என் இறைவன் தூயவன். நான் ஒரு மனிதனாகிய தூதரேயன்றி வேறு அல்லன் என்று பதில் கூறுமாறு கூறுகின்றான்.

இதில் இறைவன் தூயவன் என்ற சொல் ஒரு நபி உடலுடன் வாநிற்குச் சென்று மீண்டும் வருவது என்பது அல்லாஹ்வின் ஸுப்ஹான் என்ற பண்புக்கு மாற்றமானது என்றும், ஒரு மனிதத் தூதரால் அவ்வாறு உடலுடன் வானுக்கு ஏறிச் சென்று மீண்டும் திரும்பி வர முடியாது என்ற கருத்தும் கூறப்பட்டுள்ளது.

பி.ஜே போன்ற மௌலவிகள், ஈஸா நபி தன் உடலுடன் வானுக்குச் சென்றுள்ளார். அவரே மீண்டும் வருவார் என்று நம்புவது, அல்லாஹ்வின் ஸுப்ஹான் என்ற இறை பண்புக்கு பங்கமும் களங்கமும் கற்பிக்கும் நம்பிக்கையாகும் என்றும் அப்படி நம்புவது ஈஸா நபியை ஒரு மனிதத் தூதர் இல்லை என்று மறுக்கும் செயலாகும் என்பதி நெஞ்சில் நிறுத்த வேண்டும். இல்லை என்றால் அவர்கள் தானும் வழ்கேட்டு, மக்கள் சமுதாயத்தையும் வழிகெடுத்து பாவத்திற்கு ஆளாக நேரும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அது மட்டும் இல்லை. ஈஸா நபி (அலை) அவர்கள் உடலுடன் உயர்த்தப்பட்டுள்ளார். அவரே மீண்டும் வருவார் என்று நம்பினால், ஸுப்ஹான் தரும் கருத்தின் அடிப்படையில் கீழே வருபவற்றையும் நம்ப வேண்டியது வரும்.

1. அல்லாஹ் வானங்களையும் பூமியையும் வீணாகப் படைத்துள்ளான் என்று நம்புவதாக பொருள். (3:192)

2. ஈஸா நபியையும் அவருடைய தாயையும் இரு தெய்வங்களாக நம்புகிறார் என்று பொருள் (5:117)

3. மூஸா நபி (அலை) அவர்கள் அல்லாஹ்வை தம் புறக்கண்ணால் கண்டார் என்று நம்புவதாக பொருள். (7:144)

4. சமய அறிஞர்களையும் துறவிகளையும் ஈஸா நபி (அலை) அவர்களையும் ரப்புகளாக ஏற்றுக் கொள்கின்றனர் என்று பொருள். (9:31)

5. வானம், பூமி ஆகியவற்றுள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள் இருப்பதாக நம்புகிறார் என்று அர்த்தம். (21:23)

6. அல்லாஹ் தனக்கென ஒரு மகனை உருவாக்கிக் கொண்டான் என்று நம்புகிறார் என்று பொருள். (21:27)

7. அல்லாஹ்வைத் தவிர பிறருக்கு படைத்தல், உணவு கொடுத்தல் மரணத்தைக் கொடுத்தல், உயிர் கொடுத்தல் ஆகிய ஆற்றல்கள் இருக்கின்றன என்று நம்புகிறார் என்று பொருள். (30:41)

அல்லாஹ் உங்களையும் என்னையும் ஈஸா (நபி) உடலுடன் வானுக்கு உயர்த்தபப்ட்டுள்ளார் என்று நம்பி ஸுப்ஹான் என்ற பண்புக்கு களங்கள் கற்பிப்பதிலிருந்தும் மேலே காட்டியுள்ள ஷிர்க்கான நம்பிக்கையிலிருந்தும் காத்தருள்வானாக! ஆமீன்.



0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.