அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jun 28, 2014

நோன்பு பற்றி தவறான விளக்கம். (நாஸிக், மன்சூக் திருக்குரானில் இல்லை)


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 47 இல் நோன்பை விட்டு விடுவதற்குப் பரிகாரம் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்: 

ஆரம்பத்தில் நோன்பு கடமையாக்கப்பட்ட போது நோன்பு நோற்கச் சக்தி உடையோர் நோன்பு நோற்கலாம்: அல்லது ஒரு நோன்புக்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவு அளிக்கலாம் என்ற சலுகை இருந்தது அதுதான் இவ்வசனத்தில் (திருக்குர்ஆன் 2:184) கூறப்பட்டுள்ளது. 

ரமலான் மாதத்தை அடைபவர் நோன்பு நோற்க வேண்டும் என்ற கட்டளை வந்த பின், சக்தி பெற்றவர் நோன்புதான் நோற்க வேண்டும் என்ற புதுச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்தச் சட்டம் அடுத்த வசனத்தில் (2:185) கூறப்பட்டுள்ளது. (நூல்: புகாரி 4507) 

நம் விளக்கம்.

இவர் எடுத்துக் காட்டும் திருமறை வசனத்திற்கு இவர் கொடுத்துள்ள பொருளே தவறானது. இவரின் அரபி மொழி அறிவு இவ்வளவுதான் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார். அல்லதீன யுத்தீகூனஹு என்பதன் பொருள் “நோன்பிற்கான சக்தியற்றவர் மீது” என்பதாகும். யுத்தீகூன என்ற வினை பாபெ இஃப்ஆல் ஆகும். இதன் ஒரு விசேஷம் அது ‘ஸலப்’ உடைய பொருள் தருகின்றதென்பதாகும். இந்தச் சட்டத்தின் படி இவர் குறிப்பிடும் வ அல்லதீன யுத்தீகூனஹு பித்யது தஆமிமிஸ்கீன் என்ற வசனத்திற்கு நோன்பிருக்க சக்தியற்றவர் ஒருவருக்கு பித்யாவாக உணவளிக்க வேண்டும் என்பதாகும். பி.ஜே ஏற்கனவே இது பற்றி கூறும்போது ‘யுதீகூன’ என்ற சொல் திருக்குர்ஆனில் இவர் குறிப்பிடும் அர்த்தத்திலேயே ஏனைய இடங்களில் (!) காணப்படுவதாக (!!) எழுதியிருந்தார் அந்த இடங்களை கூறினால் நன்றாக இருக்கும்! 

1) திருக்குர்ஆன் 2:186 வது வசனத்தின் சட்டம் 2:185 வசனத்தின் சட்டத்தை மாற்றிவிட்டது என்றால், இவ்வளவு முக்கியமான நோன்பு பற்றிய சட்ட மாற்றம் பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார் என்று பி.ஜே ஆதாரம் காட்ட முடியுமா?

2) 4505 வது ஹதீது 4507 வது ஹதீஸை மாற்றுகிறதா? 

4505 வது ஹதீது: 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (2:184) வது இறை வசனத்தை ஓதி இது சட்டம் மாற்றப்பட்ட வசனம் அன்று: நோன்பு நோற்க இயலாத தள்ளாத முதியவரையும், தள்ளாத வயதுடைய பெண்ணையும் இது குறிக்கும். அவர்கள் ஒவ்வொரு நாளுக்கு பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கட்டும் என்று சொன்னார்கள். 

இது பற்றிய அடிக்குறிப்பில், 

நோன்பு நோற்கச் சக்தியில்லாமல் சிரமப்படுகிறவர்கள் ஒரு நோன்பிற்கு ஓர் ஏழை வீதம் உணவளித்திட வேண்டும். இது நோன்பே நோற்க இயலாத அளவிற்குத் தள்ளாத வயதில் உள்ள முதியோருக்குரிய சட்டமாகும். இச்சட்டம் இன்னும் நீடிக்கிறது. மாற்றப்படவில்லை. இது, அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) முதலானோரின் கருத்தாகும். (புகாரி : 5 அடிக்குறிப்பு 43). இமாம் புகாரி (ரஹ்) அவர்களின் கருத்தும் இதுவே ஆகும். 

அடுத்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் இச்சட்டம் நீடிக்கிறது: மாற்றப்படவில்லை என்றே கூறுகின்றார்கள் (தப்ஸீர் இப்னு கஸீர், பதஹுல் பாரி) 

இதன் மூலம் 2:186 வது வசனத்தின் சட்டம் 2:185 வது வசனத்தின் சட்டத்தை மாற்றவில்லை என்பது நிரூபணமாகிறது.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.