அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Nov 10, 2014

இவ்வுலகில் இறைவனை காணமுடியும்!


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 21 இல் பி.ஜே இறைவனைக் காண முடியுமா? என்னும் தலைப்பில் இவ்வாறு எழுதியுள்ளார்:

இறைவனை இவ்வுலகில் காண முடியாது என்ற கருத்தை வலியுறுத்தி எழுதியுள்ளார்.

அவனை பார்வைகள் அடைய முடியாது. அவனோ பார்வைகளை அடைகிறான். என்று அல்லாஹ் கூறுகிறான். (திருக்குர்ஆன் 6:103)

நம் விளக்கம்:

இறைவனை இவ்வுலகில் யாரும் புறக்கண்ணால் காண முடியாது அவனோ அகக்கண்ணின் மூலம் பார்வைகளை அடைகிறான். மறுமையில் அல்லாஹ்வை காண முடியும் என்று நபிமொழி மூலம் அறிகிறோம். இம்மையில் குருடராக இருப்பவர் மறுமையிலும் குருடராகவே இருப்பார் (17:73) என்ற திருக்குர்ஆன் வசனம். இம்மையில் யார் தம் அகக்கண் மூலம் அல்லாஹ்வை காணவில்லையோ அவர்கள் மறுமையிலும் காண முடியாது என்பதை விளக்குகிறது.

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 21 இல், திருக்குர்ஆன் 6:104 வசனத்துக்கு அவனைப் பார்வைகள் அடையாது; அவனோ பார்வைகளை அடைகிறான் என்று பொருள் கூறும் பி.ஜே தன் தர்ஜுமாவில்,

அவனைக் கண்கள் பார்க்காது: அவனோ கண்களைப் பார்க்கிறான் என்று தவறான பொருளைக் கூறியுள்ளார். இவ்வாறு தவறான பொருளை பி.ஜே கூறுவதன் காரணம் இவ்வுலகில் இறைவனை அகக்கண்ணாலும் காண முடியாது என்ற தன் கருத்தை தவறான பொருளின் மூலம் நிலை நாட்ட முயன்றுள்ளார்.

ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், புறத்தில் இறைவனைப் பார்க்க முடியாதே தவிர அகத்தில் இறைவனைப் பார்க்க முடியும் என்று கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது அகத்தால் இறைவனை இரண்டு முறை பார்த்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்கள். (முஸ்லிம் 285) இது அகக்கண்ணால் அல்லாஹ்வை பார்க்க முடியும் என்பதை உறுதி செய்கிறது. பி.ஜே கூறுகிறார். இவ்வுலகில் இறைவனைக் காண முடியும் என்ற நம்பிக்கையினால் மனித குலத்துக்கு கேடுதான் ஏற்படும் நன்மை ஏற்படாது என்று எழுதுகிறார். இது தவறான வாதமாகும். நாத்திகர்கள், இறைவன் உண்டு; மறுமை உண்டு என்ற நம்பிக்கையினால் மனித குலத்துக்கு கேடு தான் ஏற்படும். நன்மை ஏற்படாது என்று கூறுவதற்கும் பி.ஜே கூறுவதற்கும் அணுவளவும் வித்தியாசம் இல்லை.

இறைவனை இவ்வுலகில் அகக்கண்ணால் காண முடியும். என்று ஒருவன் நம்பி அவனைக் கண்டறிவதே அறிவுடைமையாகும்.

திருக்குர்ஆன் 17:73 வசனம். இந்த இ(ந்த உலகத்)தில் குருடராக இருப்பவர், மறுமையிலும் குருடராகவே இருப்பார் என்று கூறுகிறது. இந்த வசனம் இவ்வுலகில் இறைவனை காண முடியும் என்றும். அகக்கண்ணால் இவ்வுலகில் இறைவனைக் காணாதவர்கள் மறுமையில் குருடராகவே இருப்பார்கள் என்றும் கூறுகிறது.

பி.ஜே எழுதுகிறார்:

தாம் இறைவனைப் பார்த்ததாக எத்தனையோ ஆன்மீகவாதிகள் மக்களை ஏமாற்றி விடுகின்றனர். இறைவனை எவரும் காண முடியாது என்று மக்கள் நம்பினால் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் பெருமளவிலான மோசடியை ஒழித்து விடமுடியும் இது பி.ஜே யின் வாதம்.

இறைவன் இருப்பதாக கூறி எத்தனையோ ஆன்மீகவாதிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இறைவன் இல்லை என்று மக்கள் நம்பினால் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் பெருமளவிலான மோசடியை ஒழித்து விட முடியும் என்று இறை மறுப்பாளர்கள் கூறுவதற்கும், பி.ஜே யின் வாதத்திற்கும் இடையில் இம்மியளவும் வேறுபாடில்லை.

இறைவனை அகக்கண்ணால் காண முடியும் என்பது உண்மையா? பொய்யா? என்பதைக் காண வேண்டும். உண்மை என்றால் நன்மைதான் விளையும். பொய் என்றால் கேடுதான் விளையும் என்று நம்புவதே அறிவுடையோரின் செயலாகும்.

கனவும் இறைச் செய்தியும்.

1) நபி (ஸல்) அவர்களுக்கு துவக்கத்தில் இறைச் செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போலத் தெளிவாக இருக்கும். (புகாரி ஹதீஸ் எண் 3)

ஹஸ்ரத் இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் தன் மகனை அறுப்பது போல் கண்ட கனவும் ஓர் இறைச் செய்தியே. அதனால்தான் இஸ்மாயீல் (அலை) அவர்கள் தந்தையே! அல்லாஹ் உங்களுக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள் என்று கூறி தந்தை கண்ட கனவி இறை கட்டளை என்று கூறுகிறார்.

புறக்கண்ணை விட அகக்கண்ணுக்கு ஆற்றல் மிகமிக அதிகம் என்பதினாலும் இறைவன் தன் கட்டளைகளையும், வஹியையும், இறைக் காட்சியையும் அகக்கண்ணால் இரு முறை கண்டதைத் திருக்குர்ஆன் கூறுகிறது. (53:12,14) ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இதனையே (முஸ்லிம்285) கூறியுள்ளார்கள்.

எனவே இம்மையில் இறைவனை அகக் கண்ணால் காண முடியும் என்று திருக்குரானும் நபிமொழியும் கூறுகிறது. இவ்வாறு கூறுபவர்கள் வறுபட்ட கருத்தைக் கூறுகின்றனர் என்பது தெளிவு.

மேலும் மூஸா நபி, என் இறைவா! நான் உன்னைப் பார்க்கும் பொருட்டு நீ (உன்னை) எனக்குக் காட்டுவாயாக என்று வேண்டினார் இதற்கு அவன் உம்மால் என்னை ஒரு போதும் காணவியலாது.(7:144) என்று கூறுகிறான். அதாவது புறக்கண்ணால் தன்னைக் காணவியலாது என்றே இறைவன் கூறுகிறான். அதனை நிரூபிக்க மலையைத் தவிடுபொடியாக்கிக் காட்டுகிறான். அவ்வளவு ஏன்? நம் புறக்கண்ணால் சூரியனின் ஒளியைக் காணும் போது கண் கூசுகிறது. எனவே, ஒளிமயமான இறைவனைப் புறக்கண்ணால் காண முடியாது. அகக்கண்ணால் காண முடியும் என்பதையே அந்த உள்ளம் தான் கண்டதைக் குறித்துப் பொய்யுரைக்கவில்லை. அவர் பார்த்தது குறித்து நீங்கள் அவருடன் வாக்குவாதம் செய்கிறீர்களா? நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார் (53:12-14) இந்த வசனங்கள் கூறுகின்றன.

உள்ளம் கண்டது என்றும், மறு முறையும் அவனைக் கண்டார் என்றும், இறைவனை நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜில் தன் அகக் கண்ணால் இருமுறை கண்டது கூறப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அவருடன் வாக்குவாதம் செய்தது மிஹ்ராஜ் சம்பவத்தைத்தானே தவிர, ஜிப்ரீல் (அலை) அவர்களைச் சந்தித்தது பற்றி அன்று, இச்சம்பவங்கள் மிஹ்ராஜ் சம்பவங்கள் என்பதை நபிமொழியுடன் ஒப்பு நோக்கிப் பார்த்தால் தெளிவாகும். திருக்குர்ஆன் முதல் வசனம் இறங்கும் போதே நபி (ஸல்) அவர்கள், ஜிப்ரீல் (அலை) அவர்களை ஹிரா குகையில் கண்டுவிட்டார்கள். அதன் பின்னர் பல முறை அவர்களைக் கண்டு விட்டார்கள். எனவே மிஹ்ராஜின் போது நபி (ஸல்) அவர்கள் தன் மனக்கண்ணால் கண்டது இறைக்காட்சியைத் தவிர ஜிப்ரீல் (அலை) அவர்களை அல்ல.

மேலும் மிஹ்ராஜ் பயணத்தின் இறுதியில் அல்லாஹ்வின் பெயர் கூறி இறங்குங்கள் என்று ஜிப்ரீல் கூற ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் புனித பள்ளியின் விழித்து எழுந்தார்கள். (புகாரி 7517) என்று நபிமொழியில் காணப்படுகிறது.

புனிதப்பள்ளியில் விழித்து எழுந்தார்கள் என்பதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் தூங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதும். அல்லாஹ்வின் பெயர் கூறி இறங்குங்கள் என்பது தூக்கத்தின் போது அல்லாஹ்வைக் கண்டது ரூஹ் என்பதும் மிஹ்ராஜின் இருமுறை அல்லாஹ்வை கண்டது ரூஹ் ஆகிய ஆத்மா புறக்கண் இல்லை என்றும் தெளிவாகிறது.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.