அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Nov 14, 2014

கெண்டைக்கால் திறத்தல் என்பதன் விளக்கம்.


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 249 இல் கெண்டைக்கால் திறக்கப்பட்டு என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

இவ்வசனத்தில் (திருக்குர்ஆன் 68:42) கெண்டைக்கால் திறக்கப்பட்டு என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது.

இறைவன் இவ்வுலகில் உள்ள மனிதர்கள் யாருடைய கண்களுக்கும் தென்பட்டதில்லை என்பதை இஸ்லாம் கூறுகிறது. ஆனால் அதற்காக இறைவன் ஒன்றுமில்லாத சூனியம் என்று கூறவில்லை.

மாறாக, மனிதன் திரும்ப உய்ர்ப்பிக்கப்பட்ட பின் மறுமை நாளில் இறைவனைக் காண முடியும் என்றும் கூறுகிறது.

மறுமையில் விசாரணை நடத்துவதற்காக வானவர்கள் புடை சூழ இறைவன் வருவான் என்றும் கூறப்பட்டுள்ளது. (திருக்குர்ஆன் 89:22)

அவ்வாறு வரும்போது தன் காலில் விழுந்து பணியுமாறு மக்களுக்கு உத்தரவு விடுவான். அதுதான் இங்கே கூறப்பட்டுள்ளது.

கெண்டைக்கால் திறக்கப்படும் நாளில் என்றால், இறைவன் தனது கெண்டைக் காலில் விழுந்து மக்களை பணியச் செய்வான் என்று பொருள்.

இவ்வுலகில் இறைவனுக்கு பணிவதை யார் வழக்கமாகக் கொண்டிருந்தார்களோ அவர்கள் பணிவார்கள்: மற்றவர்கள் இறைவன் காலில் விழ முடியாது. இது நபிகள் நாயகம் அளித்த விளக்கம். (புகாரியில் 4919 வது ஹதீஸில் இதைக் காணலாம்)

நம் விளக்கம்:

இறைவன் இவ்வுலகில் உள்ள மனிதர்கள் யாருடைய கண்களுக்கும் தென்படவில்லை. என்பதை இஸ்லாம் கூறுகிறது என்பது தவறாகும். இவ்வுலகில் இறைவனைப் புறக்கண்ணால் காண முடியாது. ஆனால் அகக் கண்ணால்  காண முடியும் என்பது இஸ்லாத்தின் கொள்கையாகும். நபி (ஸல்) அவர்கள் இறைவனை தம் அகக் கண்ணால் இருமுறை கண்டது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கெண்டைக்கால் திறக்கப்படும் நாளில் என்றால், இறைவன் தனது கெண்டைக்காலில் விழுந்து மக்களைப் பணியச் செய்வான் என்று பொருள் என்று பி.ஜே எழுதியுள்ளார். கெண்டைக்கால் திறக்கப்படும் நாள் என்றால் உண்மை வெளிப்படும் நாள் என்றுதான் பொருள்படும்.

உண்மை வெளிப்படுத்தப்படும் நாளில் சிரம்பணிந்து வணங்குவதற்காக அவர்கள் அழைக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் (அதற்கான) ஆற்றல் பெற்றிருக்க மாட்டார்கள் என்றுதான் பொருள். (திருக்குர்ஆன் 68:43)

2) காலில் விழுந்து வணங்குதல் என்பதுதான் சொல் வழக்காகும். கெண்டைக்காலில் விழுந்து வணங்குதல் என்பது சொல் வழக்கன்று.

3) சிரம்பணிந்து வணங்குவதற்கு கெண்டைக்கால் திறந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. கெண்டைக்கால் திறக்காவிட்டாலும் காலில் விழுந்து வணங்கலாம்

4) 68:42 வசனத்திற்கு, M.அப்துல் வஹ்ஹாப் தன் திருக்குர்ஆன் தர்ஜுமாவின் அடிக்குறிப்பு எண் 385 இல் கெண்டைக்கால் வெளியாக்கப்படுவது என்பது அரபு இலக்கிய வழக்காற்றில் எந்தவித திரை மறைவின்றி ஒன்றின் கடுமையான தன்மை வெளியாக்கப்படும் போது என்று பொருள்படும். இது சர்வசாதாரணமாக அரபி மொழியில் வருகிறது. கஷ்பில் அம்ரு அன்ஸாகிஹி கெண்டைக்கால் முற்றிலும் தெரிந்தது – அதாவது ஒன்றின் நிலை சந்தேகத்துக்கு இடமின்றி முழுவதாகத் தெரிந்தது – என்று இமாம் குர்துபீ ஓர் உதாரணம் கொடுக்கிறார்கள்.

கியாமத் நாளைச் சந்திக்கும் வரை மனிதர்கள் அதைப் பற்றிய அறிவை செவி வழிச் செய்தியாகவோ, எழுத்தின் வாயிலாகவோ ஓரளவுதான் தெரிந்திருப்பார்கள். ஆனால் அதை நேரெதிரே பார்க்கும் போதுதான் அதன் பயங்கரத் தன்மையை உணர்வார்கள் என்று எழுதுகிறார்.

5) தமிழ் தர்ஜுமாக்களில், மௌதூதி, தப்ஸீருல் ஹமீது ஆகியோரும், ஆங்கில மொழியாக்கங்களில் யூசுப் அலி, இப்னு கஸீர், M.H ஸாகிர், வஹீதுத்தீன் கான், மௌலவி முகம்மதலி ஆகியோரும் கெண்டைக்கால் என்பதற்கு அல்லாஹ்வின் கெண்டைக்கால் என்று எழுதவில்லை. மறுமையின் கடுமையான நிகழ்வுகள் வெளிப்படுதல், மறுமையில் உண்மைகள் வெளிப்படுதல் என்றுதான் விளக்கம் தந்துள்ளனர். பாகவியோ திரை அகற்றப்பட்டு விடும் நாள் என்று எழுதியுள்ளார். மௌலவி முகம்மதலி தன் கருத்துக்கு பைழாவி, ஜம்ஹஷ்ரி ஆகிய திருக்குர்ஆன் விரிவுரைகளை மேற்கோள் காட்டுகிறார்.

திருக்குர்ஆன் 89:23 வசனத்தில், வானவர்கள் அணியணியாக நிற்கும் நிலையில் உமது இறைவன் வருகை தருவான் என்று வருகிறது. விசாரணைக்காக வருவான் என்று பி.ஜே கூறியிருப்பது தவறாகும். அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் நிராகரிப்பவர்களிடம் வருகின்றனர் என்றால். அவர்கள் தண்டனையைக் கொண்டு வருகின்றனர் என்று பொருள் என திருக்குர்ஆன் விளக்குகிறது. (இது குறித்து 59:3; 2:211 - ஆகியவற்றில் காண்க) அதுவே இப்போதும் ஏற்படும். இறைவனுடைய வருகையும், வானவர்களின் வருகையும் நிராகரிப்பவர்களுக்கு அழிவு ஏற்படப் போகிறது என்பதைத் தெரிவிக்கிறது. வரலாறுகளில் வானவர்களைக் கண்டனர்: வானவர்கள் அவர்களை எதிர்த்துப் போர் செய்து கல்மாரி பொழிந்தனர். அந்த வானவர்களைக் கண்டதால் ஏற்பட்ட உறுதிப்பாட்டினால், பின்னர் அவர்கள் முஸ்லிம்களைச் சந்தித்த போது, பத்ருப் போரில் உங்கள் அருகில் இவ்வகையான போர்க் கருவிகள் அணிந்த குதிரைபடை வீரர்கள் போர் செய்து கொண்டிருந்தனர் என்றார்கள். இதற்கு நபித்தோழரும், ஆம்: நானும் கண்டேன் எனக் கூறி அதனை உண்மைப்படுத்தினர். பத்ருப் போரின்போது நிராகரித்தவர்களும் நம்பிக்கை கொண்டவர்களும் வானவர்களைக் காணும் அளவிற்கு அந்த ஆன்மீகக் காட்சி பொதுவாகவும், தெளிவாகவும் நிகழ்ந்தது என்று இதிலிருந்து புலனாகிறது. (அடிக்குறிப்பு எண் 5, அஹ்மதிய்யா முஸ்லிம்ஜமாஅத் திருக்குர்ஆன் தமிழ் மொழியாக்கம், பக்கம் 1358)

பி.ஜே யின் தவறான விளக்கம்: 89:23 வசனத்துக்கு புகாரி 4919 நபிமொழியை பி.ஜே தவறாக எடுத்துக் காட்டியுள்ளார். ஆனால் புகாரி இமாம் அவர்கள் இந்த நபிமொழிக்கு 68:42 வசனத்தைத் தான் எடுத்துக் காட்டியுள்ளார்கள். இதற்கு ஒன்றின் நிலை சந்தேகத்திற்கிடமின்றி முழுவதுமாக தெரிகிறது என்ற இமாம் குர்துபி தரும் விளக்கமே சரியாகும்.

ஹதீஸ் எண் 4910 ன் படி, இறைவனுக்கு மூமின்கள் சஜ்தா செய்வார்கள் என்றும், மற்றவர்களால் சஜ்தா செய்ய முடியாது என்றுதான் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.