அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Nov 10, 2014

ராட்சச பறவை என்பது பி.ஜே யின் கற்பனைக் கதையாகும்.


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 416 இல் ராட்சதப் பறவை என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதியுள்ளார்;

இவ்வசனத்தில் (22:31) இணை கற்பிப்பவனுக்கு உதாரணம் கூறும் போது, பறவைகளால் தூக்கிச் செல்லப்பட்டு வீசி எறியப்பட்டவனைப் போல் என்று கூறப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) காலம் முதல் இன்று வரை எந்தப் பறவையும் மனிதனைத் தூக்கிக் கொண்டு சென்று வேறு இடத்தில் போடுமளவுக்குப் பெரிதாக இருக்கவில்லை.

மனிதனை விட பன்மடங்கு பெரிதாகவும் வலிமைமிக்கதாகவும் ஒரு பறவை இருந்தால்தான் இது சாத்தியமாகும்.

இது போன்ற பறவைகளை நாம் காணாவிட்டாலும் இத்தகைய பறவைகள் இருந்துள்ளன எனபதைப் படிமங்களை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

யானையை விடப் பெரிய அளவிலான பறவையின் எலும்புகள் புதையுண்டு கிடந்ததைக் கண்டு பிடித்துள்ளனர்.

இப்பறவைகளின் மரபணுக்கள் கிடைத்துவிட்டால் அதைக் கொண்டு மீண்டும் அப்பறவைகளை உண்டாக்கவும் முடியும்.

கடந்த காலத்தில் இத்தகைய பறவை இருந்தது என்பதாலும், மரபணு கிடைத்து விட்டால் எதிர்காலத்தில் அவை மறு உற்பத்தி செய்யப்பட வாய்ப்புண்டு என்பதாலும்தான், பறவைகளால் தூக்கிச் செல்லப்பட்ட மனிதன் போல் என்று இறைவன் உதாரணம் காட்டியுள்ளான்.

நம் விளக்கம்:

திருக்குர்ஆன் 22:32 வசனம் வானத்திலிருந்து விழுந்தவனைப் போல் ஆவான். அவனைப் பறவைகள் பறித்துச் செல்கின்றன என்று கூறுகிறது. ஆனால் பி.ஜே பறவைகளால் தூக்கிச் செல்லப்பட்டு வீசி எறியப்பட்டவனைப் போல் என்று தலைகீழாக விளங்கிக் கொண்டு அதன் அடிப்படையில் ஒரு கற்பனை விளக்கத்தைக் கூறி படிப்பவர்களை தவறான கருத்தின் பக்கம் இழுத்துச் செல்கிறார்.

இறந்து கிடக்கின்றவற்றின் உடலைப் பறவைகள் கொத்தித் தின்பதை நீங்கள் டிஸ்கவரி சேனலில் தெளிவாகக் காணலாம். அதுதான் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

வானத்திலிருந்து விழுந்தவனைப் பறவைகள் பறித்துச் செல்கின்றன என்று பறவைகள் என்பது பன்மையில் வந்திருப்பதால் மனிதனை தூக்கிச் செல்லக்கூடிய ஒரு ராட்சதப் பறவை என்பது தவறு என்று தெரிகிறது. தூக்கிச் செல்லும் அப்பறவை அவனை ஏன் வீசி ஏறிய வேண்டும்? நடமாடித்திரியும் மனிதர்களை தூக்கிச் சென்று வானத்திலிருந்து வீசி எறிந்து விளையாடும் செயலைத்தான் அப்பறவை செய்யுமா? பூமியில் கிடக்கும் உணவையும், எலி, முயல் போன்றவைகளையும் பறவைகள் தூக்கிச் சென்று தின்று தீர்க்கின்றன. இதுவே பறவைகள் இயல்பாகும். பி.ஜே யின் கற்பனை ராட்சதப் பறவை வீசி எறிந்து விளையாடும் போலும்.

திருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன், எல்லாம் அறிந்த இறைவனால் அருளப்பட்ட வேதம். அதில் கூறப்படும் கருத்து அன்றும் இன்றும் என்றும் பொருந்தும் வண்ணம் அமைந்திருக்கும் என்பதை அறிவுடையோர் அறிவர். ஒரு மனிதனை ஒரு ராட்சதப் பறவை வானில் தூக்கிச் சென்றது என்று அன்று கூறப்பட்டிருந்தால் அவ்வசனம் ஏளனத்திற்கு ஆளாகியிருக்கும். அவ்வாறு ஆகவில்லை. என்பதிலிருந்து அது அப்படி ஒரு பொருளைத் தராது என்று அறிதல் வேண்டும். இரண்டாவதாக எதிர்காலத்திற்கும் ஏற்புடையதாக – பொருந்துவதாக இருக்கவேண்டும். மனிதர்களை தூக்கிச் செல்லும் ராட்சதப் பறவைகளை மனிதனே உருவாக்குவான் என்பது எவரும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். ஒரு வாதத்திற்காக இந்தக் கற்பனையை நாம் ஏற்பதாக இருந்தால் அவ்வாறு உருவாக்கப்படும் ராட்சதப் பறவையினால் ஏற்படும் விளைவுகளை அவர்கள் சிந்தித்துப் பின்னர் தான் அதனைச் செயல்படுத்துவார்கள். அப்பறவையால் மனித குலத்துக்கும் பிறவற்றுக்கும் தீங்கு விளையும் என்றால் அதனைச் செய்யமாட்டார்கள் என்பதையாவது புரிந்து கொள்ளவேண்டும்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.