அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Dec 24, 2013

அதிபர் பூட்டோவின் மரணம் பற்றி இமாம் மஹ்தி(அலை) அவர்களின் முன்னறிவிப்பு.


இமாம் மஹ்தி(அலை) அவர்கள் தத்கிரா பக்கம் 113-114

with regards to the death of a certain person, Allah revealed to me through the value of the letters of the alphabet that the date was comprised in the words of the revelation (Arabic) He is a dog and he will die according to the value of the letters in the word dog which amounts to fifty two this means that his age will not exceed fifty two and that he will die within the course of his fifty second year (Izala Auham pp 186-187)

இந்த நூல் இலண்டனின் 1976 ஆம் ஆண்டு அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். ஐ.நா சபையில் தலைவராகவும் தலைமை நீதிபதியாகவும் இருந்த ஸபருல்லாஹ் கான் சாஹிப் ஆவார். இந்த இல்ஹாம் 1891ம் ஆண்டு ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத்(அலை) அவர்களுக்கு வந்தது.

அதாவது, இந்தியா பாகிஸ்தானில் காஷ்மீர் பிரச்சனை ஐ.நா சபையில் எழுந்த போது பூட்டோ, ஐ.நா சபையில் இந்திய நாய்கள் குறைக்கின்றன என்று கூறினார். இதனால் இந்திய நாடு கொந்தளித்தது பத்திரிகைகள் நாயின் படத்தை வரைந்து அதில் பூட்டோ என்று எழுதி அந்த நாய் குறைப்பது போல் கார்ட்டூன்கள் வரைந்தன.

திருவிதாங்கூரில் நூற்றுக்கணக்கான நாய்களின் வயிற்றில் பூட்டோ என்று எழுதி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

இவ்வாறு நாய் என்னும் பெயரால் உலகம் அறிந்த நபர் பூட்டோ ஆவார்.
ஜியா ஆட்சிக்கு வந்து. பூட்டோ மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, விசாரணை நடத்தி பூட்டோ தூக்கிலடப்பட்டார்.

அவர் தூக்கிலிடப்பட்டபோது அவருக்கு வயது 52. நான் மேலே எடுத்துக் காட்டிய இல்ஹாம் பாகிஸ்தானில் பரவியபோது, அஹ்மதிய்யா ஜமாஅத்தின் எதிரி அமைப்புகள். அதிபர் ஜியாவிடம் கெஞ்சிக் கூத்தாடி பூட்டோவின் 52 வது பிறந்த நாளுக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ அவரை தூக்கிலிட கெஞ்சினர். அனால் ஜியா மறுத்துவிட்டார். அந்த இல்ஹாமின் படி தூக்கிலிடப்பட்டார்.

ஹஸ்ரத் இமாம் மஹ்தி(அலை) அவர்களுக்கு 1891ம் ஆண்டில் இந்த இல்ஹாம், பூட்டோ தூக்கிலிடப்பட்ட 1979ஆம் ஆண்டு நிறைவேறியது.
பூட்டோவுக்கு இந்த இழிநிலை ஏன்?

அஹ்மதியா ஜமாஅத்திர்கெதிராக பூட்டோ, அஹ்மதிகள் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் என்ற தீர்மானத்தை, பூட்டோ அதிபராக இருந்தபோது பாகிஸ்தான் சட்ட சபையில் நிறைவேற்றினார்.

அஹ்மதிகளுக்கு எதிராக, போலீஸ், இராணுவம் முன்னிலையில் அஹ்மதி அல்லாத ஆலிம்களின் தூண்டுதலின் பேரில் கொலை, கொள்ளை, தீ வைப்பு போன்ற அராஜகங்கள் நிறைவேறின.

பூட்டோ தூக்கிளிடப்பட்டதில் எங்களுக்கு எந்த மகிழ்ச்சியுமில்லை.

ஆனால், இமாம் மஹ்தி (அலை) அவர்களுக்கு வந்த ஒரு இல்ஹாம் நிறைவேறி, அன்னாரும் அவருடைய ஜமாஅத்தும் உண்மை என்று உலகில் நிரூபிக்கப்பட்டதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான். 

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.