அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Oct 23, 2011

ஒப்புதல் வாக்குமூலம்

"நபிவழியில் செயல்படுகிறோம் என்று பிரகடனப்படுத்திக் கொண்ட பிரிவுகள், ஒன்று இரண்டாகி, இரண்டு மூன்றாகி, மூன்று நான்காகி, நான்கு ஐந்தாகி பல்கிப் பெருகிவருகிறது. பிரிவினை வாதத்தில் மத்ஹபு வாதிகளை இந்த இயக்க கழக வாதிகள் மிஞ்சிவிட்டார்கள். இது ஒன்றே இவர்கள் குர்ஆன், ஹதீஸ் வழியில் இல்லை, வழி கேட்டில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதற்குப் போதிய ஆதாரமாகும். வழி கேட்டில் செல்லும் கூட்டத்தில் உள்ளவர்கள் எத்தனை லட்சமென்ன? எத்தனை கோடியாக இருந்தாலும் அல்லாஹ்வின் பார்வையில் எந்த மதிப்புமில்லை. சிப்பிகள் உடைக்கப்பட்டு, பிரித்து வெத்து சிப்பிகள் ஒரு பெரும் அம்பாரமாகவும் முத்துச் சிப்பிகள் ஒன்றிரண்டும் வைக்கப்பட்டிருக்கிற நிலையில் வெத்து சிப்பிகலான அந்த பெரிய அம்பாரத்திற்கு மதிப்பிருப்பதாக நீங்கள் கருதினால் இவர்களுக்கு மதிப்பிருப்பதாக நீங்கள் கணக்கிடலாம்."

(செப்டம்பர் 1999, அந்நஜாத் இதழில் அதன் ஆசிரியரின் கூற்று)

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.