அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Apr 20, 2014

தவறான அறிவியல் விளக்கம் - பூமியைப் போன்று பிற கோள்களில் உயிரினம் வாழ முடியுமா? முடியாதா?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 175 இல் இதில்தான் வாழ்வீர்கள் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்; 

இதில் தான் வாழ்வீர்கள் என்பது பூமியைத் தவிர வேறு எங்கும் மனிதர்கள் இயற்கையாக வாழ முடியாது என்று அடித்துக் கூறுகிறது... எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இதுவும் இறை வேதம் எனபதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது (பார்க்க திருக்குர்ஆன் 2:36, 7:10, 7:24-25, 30:25) 

நம் விளக்கம்: 

இவ்வசனங்களில் எம்மனிதனும் இப்பூமியை விட்டு வெளியே சென்று வாழ முடியாது என்று கூறப்பட்டுள்ளது. எனவே ஈஸா நபி (அலை) அவர்கள் வானத்திற்கு சென்று அங்கு வாழ்ந்து வருகின்றார் என்ற தவறான கருத்தை ஏற்பதாயின் இந்த வசனம் தவறு என்று கூற வேண்டும். அல்லது ஈஸா நபி அவர்கள் இன்றும் வானத்தில் வாழ்ந்து வருவதாகக் கருதினால் அவர் ஒரு மனிதர் இல்லை என்று கூற வேண்டும். ஏனென்றால் மனிதர்களைக் குறித்தேதான் இங்கேயே வாழ்ந்து, இங்கேயே மரணித்து, இங்கிருந்துதான் எழுப்பபடுவீர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இவ்விரண்டில் எது சரி? 

திருக்குர்ஆன் 7:26 இல், இதே பூமியில் நீங்கள் வாழ்வீர்கள். அதிலேயே மரணமடைவீர்கள். இதிலிருந்தே நீங்கள் வெளியாக்கவும் படுவீர்கள் என்று கூறுகிறது. அப்படி என்றால், வானங்கள் பூமியில் எல்லைகளைத் தாண்டி செல்ல முடியும் என்றால் செல்லுங்கள். ஆனால் அதற்கென ஆதாரம் இன்றிச் செல்ல முடியாது – என்று 55:34 வசனம் கூறுகிறது. இது மனிதன் பூமியையும் தாண்டிச் செல்ல முடியும் என்பதைக் காட்டவில்லையா? 6:126 இல் வானத்தில் ஏறிச்செல்கின்றவனின் உள்ளத்தைப் போல் என்று வருகிறது. இது பூமியைத் தாண்டி மனிதன் செல்ல முடியும் என்பதைக் காட்டவில்லையா? 

பூமியின் மொத்த கனபரிமாணத்தை ஒரு குண்டூசியின் தலையுடன் ஒப்பிடும் போது எவ்வளவு வேறுபாடோ அவ்வளவு வேறுபாடுதான் அண்ட சராசரங்களில் உள்ள அனைத்துக் கோள்களுடன் பூமியை ஒப்பிட்டால் உண்டாகும். அதாவது அண்ட சராசரங்கள் பூமியளவு என்றால் பூமி ஒரு குண்டூசியின் தலையளவுதான் இருக்கும். 

இந்த ஒப்பீட்டை உள்ளத்தில் பதிய வையுங்கள். அப்படி என்றால் பூமியைத் தவிர ஏனைய அண்ட சராசரங்களில் உள்ள அத்தனை கோள்களும் உயிரினங்கள் வாழ தகுதியற்றதும் வீணாக படைக்கப்பட்டதும் ஆகிவிடும். மேலே பி.ஜே காட்டிய வசனத்துக்கு அடுத்த வசனம், மேலும் வானங்களிலும், அவனுக்கே கட்டுப்பட்டவராவார்கள் என்று கூறுகிறது. இந்த வசனம் மனிதர்களைப் போல் வானங்களிலும் உள்ளவர்களைப் பற்றிப் பேசுகிறது. அவர்கள் இறைவனுக்கு கட்டுப்படுவதாகவும் கூறுகிறது. 

இது போன்ற வசனங்கள் திருக்குரானில் பல உள்ளன. (10:67; 13:16; 17:45; 16:50; 39:69; 30:27; 42:30) 

மனிதன் மட்டும் தான் பூமியில் வாழ்கிறான். பிற கோள்களில் மனிதன் அல்லாத பிறர் யாரும் வாழவில்லை என்றால் அல்லாஹ் பூமி அல்லாத அண்ட சராசரங்களை அனைத்தையும் வீணாகப் படைத்துள்ளானா? 

ஹஸ்ரத் மிர்ஸா தாஹிர் அஹ்மது (ரஹி) நான்காவது கலீபத்துல் மஸீஹ் அவர்களிடம் ஒருவர் வானங்கள் பூமி ஆகியவற்றின் படைப்பும், அவற்றில் உயிரினங்களின் வகையினை அவன் பரப்பியிருப்பதும். அவனுடைய அடையாளங்களைச் சேர்ந்தவையாகும். அவன் விரும்பும் போது அவர்கள் எல்லோரையும் ஒன்று திரட்டுவதற்கு ஆற்றல் பெற்றவனாவான் என்ற (42:30) வசனத்தில் வருகின்ற வானத்தில் உள்ள உயிரினங்கள் எப்படிப்பட்டவை என்று கேட்டதற்கு அவர்கள் இந்த வசனத்தில் இறைவன் வானங்களிலும், பூமியிலும் தப்பாவைப் பரப்பி வைத்திருப்பதாகக் கூறுகிறான். தப்பா என்ற அரபிச் சொல், இடம் விட்டு இடம் பெயரக் கூடிய உயிரினங்களையே குறிக்கம். இந்த அடிப்படையில், மலக்குகளையோ, ஆன்மாக்களையோ, தாப்பா என்ற சொல்லினால் அழைக்க முடியாது. மாறாக, தப்பா என்ற சொல்லின் கீழ் பூச்சி வகைகளும், பறவையினங்களும், நீரில் வாழும் மீன் இனங்களும், கால் நடைகளும், மனிதர்களும் அடங்குவர். எனவே, பூமியைப் போன்றே இடம் விட்டு இடம் நகரக் கூடிய உயிரினங்களைக் கொண்ட பல கோளங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் இருப்பதை இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது. 

அறிவியலால் இன்னும் உறுதி செய்யப்படாத (ஆனால் பின்னர் உறுதி செய்யப்படவிருக்கிற) இந்தக் கருத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் குறிப்பிட்டுள்ளது வியக்கத்தக்க விசயமாகும். 

மேலும் இந்த வசனத்தில் ஒரு மகத்தான முன்னறிவிப்பும் இருக்கிறது. இந்த வசனத்தில் இறைவன், நாம் விரும்பும் போது அவற்றை ஒன்று சேர்ப்போம் என்று கூறியுள்ளான். நாம் விரும்பினால் அவற்றை ஒன்று சேர்ப்போம் என்று கூறவில்லை. விரும்பும்போது என்று கூறியதிலிருந்து வேற்று கிரக மனிதர்களுடன் நமக்கு தொடர்பு ஏற்படக் கூடிய காலகட்டம் நிச்சயமாக வரவிருக்கிறது. என்பதை நாம் அறியலாம். இந்தத் தொடர்பு வானொலி, தொலைகாட்சி போன்ற தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் நிகழலாம். இந்தத் தொடர்பின் மூலம் கோளங்களுக்கிடையே தொடர்பின் ஆலோசனைகள் பரிமாறப்படும். இந்தக் குறிப்பிட்ட வசனம் திருக்குர்ஆனின் அஷ்ஷூரா (ஆலோசனை) என்ற பெயரைக் கொண்ட அதிகாரத்தில் இடம்பெற்றிருப்பதும் கவனிக்கத் தக்கதாகும் என்று பதில் கூறினார்கள். (ஆதாரம்: நபி வழி செப்டம்பர் 2012. கேள்வி – பதில், பக்கம் 24) 

பிற கோள்களில் மனிதனை விட மேலான, மனிதனைப் போன்றவர்கள் வாழ முடியும் என்பதற்கு வானவர்கள் பூமிக்கு வந்த உண்மை ஆதாரங்கள் எனும் நூலில், இரவில் ஆகாயத்தைப் பார்த்தால் அந்த இருண்ட வெளியில் நாம் காண்பது என்ன? கண்சிமிட்டி மின்னும் நட்சத்திரக் கூட்டங்களையும், சந்திரனையும்தானே. ஒரு தெளிவான ஆகாயத்தில் ஆரோக்கியமான கண்கள் மூலம் தொலை நோக்கி இல்லாமல் 4,500 நட்சத்திரங்களை நாம் காணமுடியும் என்கிறார்கள். ஆனால் உண்மையில் பல லட்சம் நட்சத்திரங்கள் இவ்வுலகைச் சுற்றியுள்ள அண்ட வெளியில் இருக்கின்றன அவைகளைப் பல தொகுதிகளாகப் பிரித்துள்ளனர் வானியல் அறிஞர்கள். 

அண்டங் கடந்த அண்டம் 

1923 - ஆம் ஆண்டில் டாக்டர் எட்வின் ஹப்பில் (Dr. Edwin Hubble) என்ற வானியல் அறிஞர் நாற்பது அங்குலத் தொலை நோக்கியின் மூலம் ஆண்ட்ரோ மெடா(Adromeda) என்ற நட்சத்திரத் தொகுதியை ஆராய்ந்து கொண்டிருந்தார். அப்போது அவைகளுக்கும் அப்பால் வெகு தூரத்தில் இருண்ட ஆகாய வெளியில் மேகம் போன்ற ஒன்றைக் கண்டு அதைச் சக்தி வாய்ந்த காமிரா மூலம் புகைப்படம் எடுத்தார். 

அந்தப் படத்தை பெரியதாக்கிக் கவனமாக ஆராய்ந்தபோது, அது எண்ணற்ற நட்சத்திரங்கள் அடங்கிய ஒரு மாபெரும் அண்டம் என்பது தெரியவந்தது. அது குறைந்தபட்சம் 7,50,000 ஒளியாண்டு தூரத்தில் இருப்பதாக டாக்டர் ஹப்பில் மதிப்பிட்டார். (ஆனால் அது உண்மையில் அதனைவிடம் இரண்டு பங்கு தொலைவில் இருப்பதாகப் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது) 

ஓர் ஒளியாண்டு என்பது ஒரு வினாடிக்கு ஒளி செல்லும் வேகம் 1,86,000 மைல்கல். இதே வேகத்தில் அது தொடர்ந்து சென்றால் ஒரு ஆண்டில் 5,878 பில்லியன் மைல் தூரம் செல்லும். இதைத்தான் ஓர் ஒளியாண்டு தூரம் என்பார்கள். 

டாக்டர் ஹப்பில் தமது தொலைநோக்கியைக் கொண்டு வானத்தின் பிற பகுதிகளை ஆராய்ந்து இதே போன்ற ஆயிரக்கணக்கான அண்டங்களைக் கண்டுபிடித்தார். 

நமது அண்டம் எப்படிச் சூரியனை மையமாகக் கொண்டு கிரகங்கள் சுற்றிலும் அமைந்து வட்ட வடிவமாகச் சுற்றி வருகின்றதோ அதைப் போன்ற அமைப்பு அந்தந்த அண்டங்களிலும் காணப்படுகின்றன. 

அமெரிக்க விஞ்ஞானிகளின் கருத்து 

இவைகளைப் பற்றி ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகளில் முக்கியமானவர் டாக்டர் வில்லி லே (Dr.Willilay) என்ற அமெரிக்கர். இவரது கருத்து நம்முடைய விண்வெளியில் இதுவரை 1800 கோடி கிரகங்கள் நம்மால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவைகளில் நம்மைப் போலவே உயிரினங்கள் தோன்றுவதற்கு வாய்ப்பு உண்டா? 

உயிரினம் வாழ்வதற்கு தேவையான சூரிய ஒளி. இந்த ஒளியானது நமக்கு அளவு மீறியும் கிடைக்கக் கூடாது. அளவுக்குக் குறையவும் கூடாது. அதற்கு ஏற்ற அளவான தூரத்தில் நமது சூரியனும், பூமியும் அமைந்துள்ளன. ஆனால் இதே போன்ற அமைப்பு எல்லாக் கிரகங்களிலும் காணப்படுமா என்ற கேள்வி எழுகிறதல்லவா? 

1800 கோடிகளில் நூற்றில் ஒரு கிரகத்தில் இத்தகைய சூரிய ஒளி பரவும் வாய்ப்பு இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் பதினெட்டு கோடி கிரகங்கள் தேறுகின்றன

இவற்றில் நூற்றில் ஒரு கிரகம்தான் உயிர்வாழ்வதற்கு தகுதியுடையது என்று வைத்துக் கொண்டாலும் 18 இலட்சம் கிரகங்கள் தேறுகின்றன. 

இவற்றில் நூற்றில் ஒன்றுதான் நமது பூமியில் உள்ளதைப் போன்ற உயிரினங்கள் தோன்றுவதற்கு வாய்ப்புள்ளவை என்றாலும், 18 ஆயிரம் கிரகங்கள் இருக்கின்றன. 

இவற்றிலும் நூற்றுக்கு ஒன்றில்தான் மனிதனைப் போன்ற அறிவுள்ள உயிரினங்கள் தோன்ற முடியும் என்று வைத்துக் கொண்டாலும். 180 கிரகங்கள் இருக்கின்றன. இவைகளில் நிச்சயம் உயிரினம் வாழ வாய்ப்புகள் உண்டு என்கிறார் விஞ்ஞானி டாக்டர் வில்லி – லே (ஆதாரம்: முத்தாரம் 28.1.2013 பக்கம் 1)

இவை எதை எடுத்துக்காட்டுகிறது என்றால், மனிதர் அல்லாத மனிதனைக் காட்டிலும் முன்னேறிய, மனிதனைப் போன்ற ஒரு இனம் வேறு கிரகங்களில் வாழ்கிறது என்பதுதான். எனவே இதில்தான் வாழ்வீர்கள் என்றால் மனிதன் வானத்தில் எல்லையைக் கடந்து பிற கோள்களுக்குச் செல்ல முடியும் என்று பொருள்படாதா? 

திருக்குர்ஆன் 55:34 இல், 

ஜின்கள், மனிதர் கூட்டத்தினரே! வானங்கள் பூமி ஆகியவற்றின் எல்லைகளை விட்டும் வெளியேறிச் செல்ல உங்களுக்கு வலிமை இருந்தால் செல்லுங்கள். ஆனால் சான்று வலிமையினாலன்றி உங்களால் செல்ல முடியாது என்று கூறுகிறது. சான்று வலிமையிருந்தால் செல்ல முடியும் என்றால் பூமியின் சூழ்நிலையை உள்ளடக்கிய ஆடைகளை அணிந்து கொண்டு அதற்குரிய ராக்கெட் போன்ற விண்கலங்களில் செல்ல முடியும். அப்போது அவன் பூமியின் சூழலில் தான் வாழ்கிறான். மரணித்தாலும் பூமியின் சூழலில்தான் மரணிக்கின்றான். அதாவது மிகச் சிறிய ஒரு குட்டி பூமியை தன்னுடன் கொண்டு செல்கிறான். இதன்படி மனிதன் பூமியில்தான் வாழ்கிறான். பூமியின் சூழ்நிலையை உள்ளடக்கிய ஒன்றில் மரணிக்கின்றான் என்று திருக்குர்ஆன் வசனம் கூறுவது சரிதான். எனவே பி.ஜே யின் கருத்து தவறாகிறது.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.