அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Apr 1, 2012

அஹ்மதியா கருத்துக்களை ஆமோதிக்கும் ஆலிம்கள்


திருக்குர்ஆன், நபிமொழி ஆகியவற்றின் அடிப்படையில் அமையப்பற்ற அஹ்மதியா ஜமாத்தின் கொள்கைகளை சில அரைகுறை ஆலிம்சாக்கள் தான் மறுக்கின்றார்களேயொழிய கற்றரிந்த மேதைகளான ஆலிம்கள் அவற்றை ஆமோதிக்கவே செய்கின்றனர்.

சவுதி அரேபியாவைச் சார்ந்த "ராபிதத்துள் ஆலமில் இஸ்லாம்" என்ற அமைப்பு வெளியிட்டுள்ள திருக்குர்ஆன் ஆங்கில மொழியாக்கம் மற்றும் விரிவுரையில் அல்லாமா முஹம்மத் அஸத் அவர்கள ஈசா நபி (அலை) அவர்கள் உடலுடன் உயர்த்தப்பட்டார்கள், என்ற கதையை மறுத்து இவ்வாறு கூறியுள்ளார்கள்.

The verb RAFA' AHU -he raised him or elevated him has always, when ever the act of RAFA'A of human being is attributed to God the meaning is honouring or exalting. No where in the Quran is there any warrant for popular belief of man muslim that Gog has taken up Jesus bodily to heaven. PP 177

ரஃபாஅஹு - aவான் அவரை உயர்த்தினான் எனும் வினைச்சொல் மனிதனைப்பற்றி இறைவன் கூறியதாக குறிப்பிடப்படும் இடங்களில் அதன் கருத்து 'கௌரவித்தல்' - பதவி கொடுத்தல் என்பதாகும். இறைவன் ஈசா நபி அவர்களை உடலுடன் வானத்திற்கு உயர்த்தினான் என்ற பெரும்பான்மை முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு எந்த ஆதாரமும் திருக்குரானில் இல்லை. பக்கம் 177


சிலுவை சம்பவம் தொடர்பாக மேற்கண்ட விரிவுரையாளர் கூறுவதைப் பாருங்கள்:-

"There exist among muslims many fanciful legends telling us that at the last moment God substituted for Jesus a person closely resembling him who was subsequently crucified in his who was subsequently crucified in his place. However none of these legends finds the slightest support in the quran or authontic Traditions and the stories produced in this Connection by the classical commentators of the Quran must be summarily rejected".

"ஈசா நபியோடு உருவ ஒப்புமையுள்ள வேறு ஒருவரை இறைவன் அவருடைய இடத்தில் கடைசி நேரத்தில் ஆள்மாறாட்டம் செய்துவிட்டான் என்றும் அந்நபர் ஈசா நபிக்கு பகரமாக சிலுவையில் அறையப்பட்டார் என்ற ஒரு கட்டுக்கதை முஸ்லிம்களிடையே நிலவிவருகிறது ஆனால் இதற்க்கு திருக்குராநிலோ நம்பகமான ஹதீதுகளிலோ ஆதாரமில்லை. எனவே இது தொடர்பாக சில விரிவுரையாளர்களால் உருவாக்கப்பட்ட கதைகள் அனைத்தும் நிராகரிக்கப்படவேண்டும்.

இதைப்போன்று எகிப்து அல்-அசர் பல்கலைகழகத்தின் அதிபராகவும் உலமாக்களின் பேரவைத் தலைவராகவுமிருந்த அறிஞ்சர் அல்லாமா செய்ஹு மஹ்மூத் ஷல்தூத் அவர்களும் ஈசா நபி அவர்கள் ஏனைய நபிமார்களைப் போன்று மரணமடைந்து விட்டார்கள் என்றே தீர்ப்பளித்துள்ளார்கள். இந்தத் தீர்ப்பு 11-5-1942 அர்ரிசாலாவில் வெளியாகி இருந்தது. சென்னை தாருல் இஸ்லாம் ஏட்டில் 1956 ஆம் ஆண்டு ஜனவரி இதழிலும் 'முஸ்லிம் முரசு' ஏட்டின் 1964 டிசம்பர் இதழிலும் இது பற்றிய செய்திகள் இடம்பெற்றிருந்தன.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.